ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143568 topics in this forum
-
12.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு
-
- 0 replies
- 1.6k views
-
-
நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதியமைச்சராக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எங்கோ ஓர் இடத்தில் சர்ச்சை நிலவி வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் 30இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்துள்ள ஹசன் அலி '' முஸ்லிம் மக்களுக்கு எதிரான இன விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அனைத்து இ…
-
- 0 replies
- 1.6k views
-
-
நம்ம கடிதம் புகழ் சங்கதியார், தான் இந்த வருசத்தில வரைந்த மடல்களில்ல ஒன்னுமே உருப்படியாகல என நினைத்தாரோ என்னவோ..வருசம் முடியமுன்னம் ஒன்டை கிறுக்கித்தள்ளீட்டார் இராணுவ சாவடிகளுக்கு அருகே கட்சி அலுவலகங்கள்; அதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பு! - நிலைமையை விளக்கி ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம் யாழ்ப்பாணத்தில் இராணுவச் சோதனை சாவடிகளிற்கு அருகில் அரசியல் கட்சியொன்றின் அலுவலகங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் இவற்றைத் தீர்ப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று கூட்டமைப்பின் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சி.சிவ மோகன் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஓர் உண்மையைக் கூறியமைக்கு அவரைப் பாரா ட்ட முடியும். முடியாததை முடியாது என்றும் நடை பெறாததை நடக்காதென்றும் கூறுவதுதான் பண்புடமை. அந்த வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு இனிமேல் சாத்தியமாகாது என்ற உண் மையை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியதன் மூலம் இது காறும் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக் களை ஏமாற்றி வந்துள்ளது என்ற உண்மையை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள் ளார். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கூறியதுபோல் இனப்பிரச்சினைக்கா…
-
- 11 replies
- 1.6k views
-
-
சிறீலங்காவுக்கு பிரித்தானியா காலக்கெடு Monday, June 20, 2011, 11:22 உலகம் சிறீலங்காவில் காணப்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இந்த வருடத்தின் முடிவுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவலக அமைச்சர் அலிஸ்ரர் பேட் இந்த காலக்கெடுவை விதித்துள்ளார். சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக சுயாதீன விசாரணைகள் அவசியம் என தெரிவித்துள்ள பேட், இது தொடர்பில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை தாம் இந்த வருட …
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
யாழில் மார்ச் மாதத்தில் 50 பேர் காணாமல் போயுள்ளனர் 12 சடலங்கள் மீட்பு:- யாழ்ப்பாண மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதத்தில் 50 பேர் வரை காணாமல் போயுள்ளதாக காவற்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களின் 12 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். திட்டமிட்ட குழுவொன்றினால் இந்த ஆட்கடத்தல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அரசாங்கமும், காவற்துறையினரும் கூறுகின்றனர். சுமார் 6 லட்சத்து, 70 ஆயிரம் மக்கள் வாழும் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 13 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு ப…
-
- 6 replies
- 1.6k views
- 1 follower
-
-
கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள் இலங்கை அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், இலங்கையின் சில ஊடகங்களுக்கு அவ்வப்போது செவ்விகளை வழங்கி வருகிறார் அண்மையில் அவர் வழங்கிய செவ்வியில் வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் இந்திய உள்துறை அமைச்சர் பா சிதம்பரத்துடன் தொடர்புக்கொண்டு போர் நிறுத்தம் ஒன்று குறித்து பேச்சு நடத்தியதாக குமரன் பத்மநாதன் தெரிவித்திருந்தார் அப்போது போர் நிறுத்தத்திற்காக சிதம்பரம் பல நிபந்தனைகளை விதித்திருந்தார் என்றும் இந்த குறித்த விடயம், தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…
-
- 4 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாண சபை தேர்தலில் முன்னோடியாக செயற்பட்டு வந்தமையினாலேயே அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை செய்யப்பட்டார் என்று பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாராளுமன்றம் சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. வழமையான தின பணிகள் முடிவடைந்ததும் மேற்படி பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரதமர் மேலும் தெரிவித்ததாவது : தமிழ் நாட்டிலுள்ள தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் ஒரு பயங்கரவாதி. அவரது செயற்பாடுகளை தடுக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை…
-
- 4 replies
- 1.6k views
-
-
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயகணேஸ் பகீரதியை இன்று காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது 2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கடந்த 2 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பகீரதி கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இவருடைய 8 வயது குழந்தை தொடர்பாக ஆழமான கவனத்தை கருத்தில் கொண்டு நீதிவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதிபதி அருணி ஆட்டிகல பிணையில் செல்வதற்கான அனுமதியை அளித்தார். பிரதிவாதி தரப்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராஜா ஆஜராகியிருந்தார். http://virakesari.lk/articles/2015/03/13/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%80%E0%AE%B…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்துவதாக ஜெயலலிதா கூறும் கருத்துகளை நாம் பொருட்படுத்தப் போவதில்லையென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெவித்துள்ளார்.தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா ஜெயராம் கூறும் கருத்துகளை இலங்கை அரசாங்கம் பொருட்படுத்தாது. அது அவரது தனிப்பட்ட கருத்தாகவே இலங்கை அரசாங்கம் பார்க்கிறது. இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தைகளை மேற்கொள்கிறது. தமிழ் நாடு என்ற மாநிலத்தில் இருந்து வெளியாகும் கருத்துகள் இலங்கை அரசாங்கத்திற்கோ எமது நாட்டு ஜனாதிபதிக்கோ எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெவித்தார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்: இலங்கை அரசாங்கம் என்ற வகையில் நாம் இந்திய மத்திய…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
யாழில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள் யாழ் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது. அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா 50 ஆயிரம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், வழக்கை வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். மேலும் நட்சத்திர விடுதிகள் மூன்றின் உரிமையாளர்கள் தம்மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால் அவர்களில் இருவருக்கு முறையே 21 ஆயிரம் ரூபா மற்றும் 15 ஆயிரம் ரூபா தண்டம் வ…
-
- 5 replies
- 1.6k views
-
-
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராண்ட்பாஸ் ஸ்வர்ன ஜயந்தி மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதும், அண்மித்த வீடுகள் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு... http://tamilworldtoday.com/?p=27293
-
- 29 replies
- 1.6k views
-
-
மும்பையின் தாக்குதலுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் அலட்சியம்தான் காரணம் என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 'மும்பை தாக்குதல் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல் அளித்தும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சிறீலங்கா அரசுத் தலைவர் ராஜபக்சவுடன் கைகோர்த்துக்கொண்டு அவருக்கு படைத்துறை உதவிகளை வழங்குவதிலேயே கவனம் செலுத்தினார் எனவும் வைகோ கூறினார். சிறீலங்கா படையினர் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிறீலங்கா வழியாக இந்தியாவின் தெற்கு பகுதியில் நுழைந்து தாக்கும் ஆபத்து உள்ளதாகவும் கூறிய வைகோ, இந்திய அரசு இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். http://www.tami…
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இறுதிப்போரின் போது இந்திய, சீன, இலங்கை நலன்களுக்கு ஏற்ப செயற்பட்டமையினால் அங்கு பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியாமல் போனது. இந்த வேலையினை சரிவரச்செய்ய முடியாத நம்பியாரை இப்போ பர்மாவிற்கு பான் கி மூன் நியமித்துள்ளார். ஈழத்தமிழர்க்கு துரோகம் விளைவித்தது போலவே பர்மாவிலும் சிறுபான்மையினர்க்கும் சூகியின் ஆதரவாளர்களுக்கும் எதிராக நம்பியார் செயற்படுகின்றார் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சூழலில் பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நம்பியாரை அகற்றுமாரு பிரிட்டன் கோரியுள்ளது. இவர் ஏற்கனவே இலங்கைவிடயத்தில் சரியாக செயற்படவில்லை என்வும் பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது. மேலதிக தகவல்கள்.. http://www.eelanatham.info…
-
- 8 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தேவநாயகம் மண்டபம் இனந்தெரியாத நபர்களால் இன்று மாலை தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சத்தங்களையடுத்தே மண்டபம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு மட்டு நகரிலுள்ள தேவநாயகம் மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவிருந்த நிலையிலேயே இன்றுமாலை 4.00 மணியளவில் இனந்தெரியாதவர்களால் குறிப்பிட்ட மண்டபம் தீவைத்து எரிக்கப்பட்டதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று பிற்கல் 4.00 மணியளவில் குறிப்பிட்ட மண்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
மன்னாரில் வெவ்வேறு பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இச்சமர்களில் சிறிலங்காப் படைத்தரப்பினர் 19 பேர் கொல்லப்பட்டனர். 7 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
டெனீஸ்வரனை பதவி நீக்கியமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை வடக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் பதவி நீக்கியிருந்தார். இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இரு தரப்பு சமர்பணங்களுக்கும் முடிவடைந்த பின்னர், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம…
-
- 20 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்தார்கள்: பாரதிராஜா! October 15, 2018 நடிகர் பாக்கியராஜூம் கலந்து கொண்டார்!! கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள இயக்குநர் இமயம் பாரதிராஜா மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்காக தமிழகத்தை சேர்ந…
-
- 23 replies
- 1.6k views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்ற்றும் நோக்கில் கடந்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்;பட்ட பெயரிடப்படாத நடவடிக்கை தொடர்கிறது. புலிகளுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியவாறு அவர்கள் வசமுள்ள பகுதிகளைக் கைப்பறுவதே படைகளது நோக்கம். 1996இல் ஆரம்பிக்கப்பட்ட ஜயசிக்குறு நடவடிக்கை போன்றே தற்போது இடம் பெற்று வரும் படை நடவடிக்கையும் உள்ளது. ஜயசிக்குறு படை நடவடிக்கையின் நோக்கம் வேறு தற்போது நடைபெற்றுவரும் படை நடவடிக்கையின் நோக்கம் வேறு. ஜயசிக்குறு நடவடிக்கை ஏ-9 வீதியை மையப்படுத்தி வவுனியாவுக்கும் யாழ். குடா நாட்டுக்குமிடையயேயான தரை வழிப்பாதையை திறப்பதையே நோக்கமாகக் கொண்டு முன்டெடுக்கப்படது. இதன் மூலம் ஏ-9 வீதியைக் கைப்பற்றி வன்னியை இரண்டாகப் பிளவுபடுத்தி, வன்னிக்குள் …
-
- 0 replies
- 1.6k views
-
-
இன்று காலை கோப்பாய் இராஜவீதி பொலிஸ் நிலையத்திற்கு சற்றுத் தொலைவில் உள்ள ஒரு வீதியில் பனையில் கயிறு போட்டுத் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண் மற்றும் ஆணொருவரின் சடலமும் ஜோடியாக தொங்கிய நிலையில் காணப்படுகின்றது. மேலும் http://www.youtube.com/user/jaffnatv#p/u/0/xfyMx2rZv9c கோப்பாய் தெற்கு வெள்ளவாய்க்கால் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வளைந்த பனை மரமொன்றில் ஆணொருவரினதும் பெண்ணொருவரினதும் சடலங்கள் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்ட நிலையிலேயே கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உரும்பிராய் தெற்கு யோகபுரத்தைச் சேர்ந்த டிப்பர்ரக வாகன சாரதியான (வயது 43) என்பவரினதும் அதேயிடத்தைச் சேர்ந்த (வயது 24) என்பவரினதும் சடலங்களே தூக்கில் த…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடுகளில் வசித்து வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து, கொழும்பில் உள்ள பொருளாதார கேந்திர நிலையங்கள் மீது புலிகள் தாக்கல் நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் வசித்து வரும் விடுதலைப்புலிகள் பெருமளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு சென்ற வண்ணம் உள்ளதாகவும் புலனாய்வு துறையினர் கூறியுள்ளனர். இவர்களில் அதிகமானோர் சிங்கபூர், மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தே சென்றுள்ளதாகவும் இவ்வாறு இலங்கை சென்றுள்ள இவர்கள் புலிகளின் ஆலோசனை கிடைக்கும் வரை கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கியு…
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னை: இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" நடத்தப்படவுள்ளது. இந்தப் இந்தப் பயணத்தின் போது "காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்'' என்று 1 லட்சம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்து இயக்கமும் நடக்கிறது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அரசைக் கண்டித்தும், சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: இளந்தமிழர் இயக்கம்: தமிழினத்தின் உரிமைகளை மீட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
கனடாவில் குழுக்களை உருவாக்கி மோதலில் ஈடுபட்டுவந்தவர் நாடு கடத்தப்பட்டார் திகதி: 22.06.2010 // தமிழீழம் கனடாவில் குழுக்களை உருவாக்கி மோதலில் ஈடுபட்டுவந்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக நசனல் போஸ்ட் (National Post) பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஏ.கே.கண்ணன் என்ற குழுவின் தலைவராகச் செயற்பட்டுவந்த ஜோதிரவி சிற்றம்பலம் என்பவரே கடந்த 10ஆம் நாள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த தகவலை இன்றுதான் கனடிய காவல்துறையினர் வெளியிட்டுள்ளதாகவும் இந்தப் பத்திரிகை கூறுகின்றது. வி.வி.ரி என்ற மற்றொரு குழுவும் ஏ.கே.கண்ணன் குழுவும் 300 வரையான இளைஞர்களைத் திரட்டி மோதலில் ஈடுபட்டதில் இதுவரை மூவர் பலியாகி இருப்பதுடன், இந்தக் குழுக்கள் உசிஸ் (Uzis), எம்-1…
-
- 0 replies
- 1.6k views
-
-
இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் எமது இன்றைய நிலையினை உங்களின் கவனத்துக்கு எடுத்து வரவே இம் மடலை வரைகின்றோம். தமிழக தோ்தல் தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை: எமது பேரன்புக்கும் பாசத்துக்;குமுரிய தமிழக மக்களே! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும் எமது வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம். இது தமிழகத்தில் தேர்தல் காலம். தமிழகத்தை, தமிழக மக்களை யார் ஆளுகை செய்வது என்பதனை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நேரம். இந் நேரத்தில் உங்கள் தொப்புள்கொடி உறவுகளாக…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
(நா.தனுஜா) குற்றச்செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் வேலைக்கு அமர்த்துதல் ஆகிய விடயங்களில் சிறுவர்களின் வயதெல்லையை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு யுனிசெப் அமைப்பு பாராட்டுத்தெரிவித்திருக்கிறது. சிறுவர் மற்றம் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய 14 வயதிற்குக் குறைந்தவர்கள் சிறுவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இளம் குற்றவாளிகள், நன்னடத்தைப் பாடசாலை தொடர்பான கட்டளைச்சட்டத்திற்கு அமைய 16 - 22 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளனர். அதன்படி 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக அவர்கள் நீதிமன்றத்த…
-
- 8 replies
- 1.6k views
-