Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (எம்.எப்.எம்.பஸீர்) யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை விவகாரத்தில்குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, கொலையுண்டோர் குடும்பத்தார் சார்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி அளித்த மன்னிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறும் அதனை ரத்து செய்யுமாறும்கோரியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி கேசவன் சயந்தன்இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினைஇலத்திரனியல் கோவைப்படுத்தல் முறைமையூடாக இன்றுதாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் ஜனாதிபதி சட்டத்…

    • 6 replies
    • 659 views
  2. 19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் பகிரப்பட உள்ளது? 11 நவம்பர் 2012 19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அpகாரம் பகிரப்பட உள்ளதாக தெரிவிக்;கப்படுகிறது. மாகாணசபை முறைமையை ரத்து செய்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் உத்தேச சட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட உள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொண்ட இந்த வரைவுத் திட்டத்தின் குறைநிறைகள் பற்றி கருத்து வெளியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சந்தர்ப்பம் இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட…

    • 6 replies
    • 902 views
  3. இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈழத்தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப்பேசவந்த இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிதாக புதுச்சேரி போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர்.போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போதே சீமான் சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் நடந்த ஈழதமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினார். புதுச்சேரி போலீசார் சீமா…

  4. மானமிகு திருமாவளவன் அவர்களுக்கு, இந்த அடைமொழியுடன் உங்களை யாரும் இதுவரை அழைத்தார்களா என்று எமக்கு தெரியவில்லை. ஆனால் அப்படி அழைப்பதில் தவறில்லை என்ற நம்பிக்கையுடன் மடலைத் தொடர்கிறோம். கடந்த பத்தாண்டுகளாய் உங்களை இந்தத் தமிழகம் கூர்மையாகக் கவனித்து வந்திருக்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட இனத்துச் சிறுத்தையாய் நீங்கள் வெளியே வந்தபொழுது இந்தத் தமிழகம் உங்களை ஆரத் தழுவி வரவேற்றது. பெருமையுடன் உங்கள் அடையாளங்களை அரங்கேற்றியதும், அங்கீகரித்ததும் இந்தத் தமிழினம் தான். அதற்குக் காரணம் நீங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் அல்லது அந்த இனத்துக்காய் குரல் கொடுப்பவர் என்பது மட்டுமல்ல.அதையெல்லாம் தாண்டி எங்கெல்லாம் மனிதம் துன்புகிறதோ அங்கெல்லாம் உங்கள் ஆதரவுக் கரங்கள் நீண்ட காரணத…

  5. சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா உறுதி கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிவில் பாதுகாப்பு திணைக்கள குழுவில் 50 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்ட கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், நிகழ்வின் பின்னர் கதிர்காமத்தில் வைத்து மேற…

    • 6 replies
    • 761 views
  6. (பழுலுல்லாஹ் பர்ஹான்) அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் ஏதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் மக்கள் அவர்களுடைய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோ,பர்தாவோ அணிந்தால் ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என திணைக்களத்தின் பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி ஓசானிக் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் எதிர்வரும் 2014 ஆண்டு ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்பட…

  7. நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க இப்போது கிடைத்திருக்கும் ஆதரவு தனக்கு அன்றைக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார் அவ்வாறு கிடைத்திருந்தால் அதை அன்றே நீக்கியிருப்பேன். நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காகவே எனது ஒற்றை கண்ணை இழந்தேன். அத்துடன் இன்றைக்கு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முன்வந்துள்ளது. அன்று அவ்வாறு யாரும் ஒத்துழைக்கவில்லை. அவ்வாறு ஒரு இணக்கமான சூழல் வாய்த்திருந்தால் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்திருப்பேன். நான் நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவில்லை. எனக்குப் பின்னர் நிறைவேற்று அதிகாரத்தால் ஆபத்து நேரும் என்று அறிந்திருந்தேன். நான் அன்று அவ்வாறு நினைத்தது இன்று நடந்துகொண்டிருக்கிற…

  8. [Thursday, 2011-07-07 11:03:53] எதிர்வரும் யூலை 09 ஆம் நாள் தென் சூடான் குடியரசு என்ற ஒரு புதிய நாடு பிறக்கவுள்ளது. இலடச்சக்கணக்கான தென் சூடானிய மக்கள் அதன் பிறப்பைக் கொண்டாட இருக்கிறார்கள். தென் சூடானின் தலைநகரம் யுபா (Juba) விழாக் கோலம் பூண்டுள்ளது. தென் சூடான் அடக்குமுறைக்கு எதிராகப் பல ஆண்டுகள் போராடி வந்துள்ளது. ஆபிரிக்காவின் எண்ணெய் வளமிக்க நாடான சூடானுக்கு 1956 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. 1989 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து ஒமர் அல் பக்ஷீர் ஆட்சியைப் பிடித்தார். இஸ்லாமிய சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு தென்பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இனக் கலவரம் வெடித்தது. வடக்கில் அரபு முஸ்லிம்களும், தெற்கில் பழ…

    • 6 replies
    • 842 views
  9. இலங்கைக்குப் பெருமை சேர்த்த `புசாந்தன்`. மலேசியாவில் இடம்பெற்ற Asian Classic Powerlifting Championship 2023 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த புசாந்தன் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1363534

    • 6 replies
    • 548 views
  10. நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே மேற்கொண்ட தாக்குதலில் சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கயாமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவே இவ்வாறு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை நடைபெற்ற ஆளும் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி சம்பவத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறப்பினர் குணதிலக்க ராஜபக்ச கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதலை தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச முயற்சித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/governin…

  11. முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இலங்கை செல்கிறார்..அதை தடுக்கும் பொருட்டு இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்கியும், தமிழர்கள் நாம் அவர் அங்கு செல்வதை விரும்பவில்லை என்பதையும் விளக்கியும் அமெரிக்க உலகத் தமிழ் அமைப்பு அப்துல் கலாம் அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. அதே போல் இணைய மனுவும் ( online petition) உருவாக்கி இருக்கிறது. அதில் அனைவரும் கையெழுத்திடுமாறு நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதில் சொடுக்கி உங்கள் கையெழுத்துக்களை பதிவு செய்யுங்கள் https://www.change.org/petitions/dr-kalam-cautioned-on-srilanka-visit http://www.eeladhesa...ndex.php?option

    • 6 replies
    • 1.4k views
  12. வடக்கு முதல்வரை நீக்குவது தொடர்பில் நான் நடுநிலைவாதி வடமாகாண அமைச்சர்களை மாற்றுதல் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரை நீக்குதல் ஆகிய விடயங்கள் தற்போது அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு விடயங்களிலும் நான் தலையீட்டை மேற்கொள்ளாமல் நடுநிலையாகச் செயற்படுவேன் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீக்குமாறு கட்சியிடம் கோரியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அவுஸ்திரேலியாவில் வைத்துக் கூறியுள்ளமை மற்றும் வடமாகாண அமைச்சர்களை மாற்றுமாறு உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளமை தொடர்பில் அவைத்தலைவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …

    • 6 replies
    • 891 views
  13. கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களுக்கு 13.4 பில்லியன் டொலர் (1900 பில்லியன் ரூபா) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை சீனா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உள்ளூர் மூலங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அடுத்த ஆண்…

    • 6 replies
    • 873 views
  14. சரத் பொன்சேகாவின் கூற்றுக்கு சிறீலங்கா மன்னிப்புக் கோரியதாக இந்தியா தெரிவிப்பு புதன், 10 டிசம்பர் 2008, 01:19 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன்] சரத்பொன்சேகாவின் கூற்றுக்கு இந்தியாவிடம் இலங்கை மன்னிப்புக் கோரியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவிக்கையில்: சிறீலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை 'கோமாளிகள்' என்று தெரிவித்த கருத்துக்கு சிறீலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது. சரத்பொன்சேகாவின் கருத்துத் தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இலங்கை பாதுகாப்பு அமைச்சரிடம் தமது கடுமையான விசனத்தைத் தெரிவிக்கப்பட்டது. இதற்காக இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் மன்னிப்பு…

  15. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு தீயை…

  16. இனவாதிகளாக இருந்தவர்கள் எனக்கு ஆலோசனை வழங்குவது விசித்திரமானது; பொன்சேகாவுக்கு கஜேந்திரகுமார் பதிலடி August 28, 2020 “இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, நான் தெரிவிக்கும் கருத்துக்களில் கவனமாய் இருத்தல் அவசியம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நான் அவருக்கு கூற விரும்புவது நான் எனது கருத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடனும், அளந்துமே தெரிவித்து வருகிறேன். எனக்கு அவரது அறிவுரை ஆச்சரியத்தை தருவதோடு விநோதமாயும் உள்ளது.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றும்போது தெரிவித…

  17. புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி பெண், கண்டி நகர வீதியில் நேற்று மாலை பயணித்துகொண்டிருந்தபோது நகரவாசிகள், இப்பெண்ணின் கழுத்தின் பின்புற பகுதியில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பதை கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் இப்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இலங்கைக்கான இவரது சுற்றுலா விசா காலாவதியாகியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/58439-2013-02-07-06-41-05.html

  18. தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தலைவர் ஒருவரே நாட்டுக்கு அவசியம் என்று மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அனுராதபுரவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிரணியின் பொது வேட்ப்பாளர் மைத்திரிபாலசிறிசேன ரணில் விக்ரமசிங்கவை ஐயா என அழைக்கிறார். இவ்வாறு ஐயா என அழைக்கும் சிறிசேனவால், எவ்வாறு நாட்டை கொண்டு செல்ல முடியுமென இதன் போது கேள்வி எழுப்பினார். சமஷ்ட்டி தீர்வை ஏற்படுத்த முயன்ற சந்திரிக்கா, நாட்டை பிரிக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ரணில் விக்ரமசிங்க, சுயநிர்ணய உரிமையை வலியுறத்தும் ராஜித்த ஆகியோருடன் இணைந்து சிங்கள பௌத்த வாக்குகளை உடைப்பதற்காகவே சிறிசேன களத்தில் இறங்கி இருப்பதாகவும்…

  19. கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் மீட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை: மகிந்த [செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2007, 08:35 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் மீட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடர்து வாசிக்க... http://www.puthinam.com/full.php?22YSoa203...d4eJWEcb0aFQMde கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் மீட்கும் கனவில் இருந்த பலரை தெற்கின் அரசியல் காலாவதி ஆக்கிவிட்டது. அந்த வரிசையில் இவரும், அந்த நாள் வெகுதொலைவில் இல்லைப் போல்த்தான் இருக்கிறது.

    • 6 replies
    • 3.2k views
  20. விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்! ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்க…

  21. யுத்தம் முடிவடைந்த பிறகு பின் தேர்தல் நடைபெற்றபோது நாங்கள் பல கட்சிகளாகப் பிரிந்து இருக்க முடியாது என்ற காரணத்தால் எல்லாக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று (06-11-2016) தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி முதன்மைப்பணிமனைத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன் அவர்கள் மேலும் தெரிவித்தாதவது, இந்த நாட்டில் உள்ள ஆட்சிமுறை மாற்றப்பட வேண்டும் என்பதை முதலில் முன்வைத்தது தமிழரசுக் கட்சி. அந்தக் காலத்தில் பல தமிழ்த் தலைவர்கள் கூட அதை எதிர்த்தார்கள். 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் மு…

  22. முஸ்லிம் பெண்களின் நிஜாப் ஆடையை தடை செய்யுமாறு பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையான நிஜாப் ஆடையை தடை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. அண்மைய சம்பவங்களின் மூலம் முஸ்லிம் பெண்கள் தலையுடன் அணியும் இந்த நிஜாப்பினால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அண்மையில் முஸ்லிம் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் இந்த ஆடையை அணிந்து குற்றச் செயலில் ஈடுபட்டமை அம்பலமாகியிருந்தது. மத ரீதியான விடயம் என்பதனால் பலர் இது குறித்து கேள்வி எழுப்புவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட்ட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருக்கு அறிவிக்க உள்ள…

  23. மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகம்: சந்தேகநபர்கள் அடையாளங் காணப்படவில்லை திருகோணமலை மூதூர் பெருவெளி கிராமத்தில் மூன்று சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று அடையாளங் காணப்படவில்லை. மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இதன்போது பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் நீதிமன்றமத்தில் ஆஜராகியதை அடுத்து அடையாள அணிவகுப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட சிறுமிகளால் சந்தேகநபர்களை அடையாளம் காணா முடியாது போயுள்ளது. இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விள…

  24. கண்ணிவெடியில் ஐந்து பொதுமக்கள் பலி. பதின்னான்கு பேர் காயம். - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 07 துரநெ 2006 15:07 மட்டக்களப்பு பொலனறுவை எல்லையில் விடுதiலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான வடமுனையில் ஸ்ரீலங்கா ஆழஊடுருவித்தாக்கும் படையினர் புதைத்துவைத்த கண்ணிவெடியில் சிக்கி ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இன்று காலை 10மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களுள் 07 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிரானில் இருந்து வடமுனை நோக்கி உழவியந்திரத்தில் பயணித்த பொதுமக்களே அமுக்கக்கண்ணிவெடியில் அகப்பட்டவர்கள் ஆவர். இத்தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளின் எல்லைப…

  25. சிங்களவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வேடர்கள் ஆணையிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்று தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற யோசனையை முன்வைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய, எதிர்காலத்தில் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்கள், சிங்களவர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஆணையை பிறப்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென்பதை புரிந்துகொள்ள வேண்டுமென ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் ஹெல உறுமய தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்…

    • 6 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.