ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
[size=4]விமான நிலையத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.[/size] [size=4]புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளின் மூலம் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகத்தை அடையாளம் காணும் விசேட பாதுகாப்பு பொறிமுறைமையொன்று அமைக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் வர்த்தகர்கள் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாட்டின் மூலம் இலகுவில் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]http://www.seith…
-
- 5 replies
- 885 views
-
-
சுவிஸ் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் வன்னிப்பெரு நிலப்பரப்பின் அவலம் தொடர்பில் "ஐக்கிய நாடுகள் சபை மெளனம் காப்பது ஏன்?" என்ற கேள்வியுடன் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.4k views
-
-
புலிகளின் 120 கோடி ரூபா சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல்! [Wednesday, 2014-05-14 09:12:24] போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், 120 கோடி ரூபா பெறுமதியான விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால், இந்த சொத்துக்களை மீட்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தை பிரதேசத்தில் சொசுகு தொடர்மாடி வீடுகள், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணிகள், ஆடைத்தொழிற்சாலைகள், இரண்டு அச்சகங்கள், கப்பல், ட்ரோலர் படகுகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் எப்போது கைப்பற்றப்பட்டன என்பது பற்றிய விபரங்கள் வெளியி…
-
- 5 replies
- 778 views
-
-
புலிகள் வெளிநாட்டு தூதர்களை குறிவைத்து தாக்கவில்லை என்கிறார் அமெரிக்க தூதரும், இணைத்தலைமை நாடுகளின் தலைவருமான Robert Blake... ( பிளேக் எண்டது ஒரு நோய் எண்டாங்கள் உண்மைதானோ..)) எண்டாலும் புலிகள் தீவிரவாதத்தை கைவிட வேணும் எண்டுறார்...! http://www.zeenews.com/znnew/articles.asp?...926&sid=SAS
-
- 5 replies
- 2.1k views
-
-
போர்க்குற்றவாழி மகிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்துள்ளார். தனக்கு வெளினாடுகளால் ஏற்பட்டுவரும் நெருக்கடிகள் பற்றி பேரினவாத பீடாதிபதிகளிடம் ஆலோசித்துள்ளார். . அதன் பின்னர் கண்டி தலதா மாளிகையில் பூஜை நிகழ்வுகளில் கலந்துக் கொண்ட மஹிந்தர; எந்த ஒரு வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்துக்கும் அடிப்பணிந்துவிட வேண்டாம் என, பீடாதிபதிகள் போர்க்குற்றவாழி மஹிந்தருக்கு ஆலோசனை கூறியுள்ளனர். My link
-
- 5 replies
- 973 views
-
-
விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளனர் – விமல் குற்றச்சாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி பத்து இலட்சம் கையொப்பங்களை திரட்டும் நோக்கில் நேற்று (சனிக்கிழமை) கடவத்தையில் ஆரம்பமான நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் உரையாற்றிய அவர், கடந்த மூன்றரை ஆண்டு காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியமை பற்றிய விபரங்கள் புலனாய்வுத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இயங்கச் செய்வதற்கு ஆர்வம் அல்லது…
-
- 5 replies
- 1k views
-
-
பசுவதை கூடாது என்று பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஈழத் தமிழன் வதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? என்று நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியிடம் அண்ணா தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரான கவிஞர் புலமைப்பித்தன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தினத்தந்தி நாளிதழிலில் வெளியான செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: உங்களை (சங்கராச்சாரியாரை) கைது செய்த போது தமிழகத்தில் யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன்? பசுவதை கூடாது என்று கூறும் நீங்கள்இ ஈழத்தில் தமிழன் வதை செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்? இதன் காரணமாகத்தான் உங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு குண்டூசியைக் கூட அசைக்க ய…
-
- 5 replies
- 2.1k views
-
-
நாடு திரும்பாமல் நீதிமன்ற உத்தரவை மீறினார் கோட்டாபய! முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கபூரிலிருந்து நாடு திரும்பாமல் நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறியுள்ளார். கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு கடந்த 24ஆம் திகதி முதல் ஜுன் 2ஆம் திகதி வரை கொழும்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் அவருக்கு எதிரான விசாரணை நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதன்போது கோட்டாபயவின் சட்டத்தரணி இவ்விடயம் குறித்து தெரிவித்துள்ளதாவது, “சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்ற கோட்டபாய இன்னும் நாடு திரும்பவில்லை. அவருக்கு மேலும் சில மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளமையினால், வெளிநாட்டு பயண அனுமதியை…
-
- 5 replies
- 958 views
-
-
இராணுவ விசாரணை நீதிமன்றினால் வாக்குமூலங்கள் பதிவு ஆரம்பம் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறுpத்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் குறிப்புரைகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை நீதிமன்றமானது அவ்வறிக்கையில் குறித்துரைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்பான தனிநபர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. அக்கறையுடையவர்களை இவ்விசாணை நீதிமன்றுக்கு வந்து சாட்சியமளிக்கும்படி கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தலைமயகத்தின் தற்போதைய தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த டி சில்வாவின் தலைமையில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணை மன்றம் கோரியுள்ளளது. அதேசமயம்…
-
- 5 replies
- 696 views
-
-
தேசியத் தலைவர் இம் முறை நிகழ்த்திய மாவீரர் தின உரையில் இந்தியாவை நோக்கி நட்புக் கரத்தை நீட்டியிருக்கிறார். இதைப் பற்றி பலர் பலவாறு எழுதி வருகிறார்கள். சிங்களத்தினதும், ஒட்டுக் குழுக்களினதும் ஊடகங்கள் எப்போதும் போன்று “விடுதலைப் புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள், அதனாற்தான் இந்தியாவின் தயவை வேண்டி நிற்கின்றார்கள்” என்று எழுதி வருகின்றன. தேசியத் தலைவர் இந்தியாவை நோக்கி பல முறை நட்புக் கரத்தை நீட்டியிருக்கின்றார். ஆனால் இந்திய அதிகார பீடம் தேசியத் தலைவரின் அழைப்பை ஒவ்வொரு முறையும் தவறாகவே அர்த்தப்படுத்தி இருக்கின்றது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இந்தியப் படையினர் கனரக பீரங்கிகள், டாங்கிகள், வானூர்த்திகள் சகிதம் தமிழீழ மண் மீது 10 ஒக்டோபர் 1987 அன்று போரைத் தொடுத்…
-
- 5 replies
- 1.8k views
-
-
சமாதானத்தை நோக்கி நல்லாட்சி அரசு-சம்பந்தன் நல்லாட்சி அரசாங்கம் சட்டம் ஒழுங்கு, சுதந்திரம் அனைத்தையும் நிலைநிறுத்தி நாட்டை சமாதானத்தை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றது என இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். அத்துடன் நல்லிணக்கம்,ஜனநாயகம்,சுதந்திரத்தை வலுப்படுத்தல் மற்றும் தேசிய சமாதானத்தை நோக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னோக்கி செல்லும் எனவும் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்பொழுது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் நாட்டை ஓர் தெளிவான பார…
-
- 5 replies
- 518 views
-
-
நெடுந்தீவில் வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் ஒரு சாதாரண விடையம். என்ன கொலையா நடந்து விட்டது. இதனைப் ஏன் வீனாக பெரிது படுத்துகின்றீர்கள் என்று அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த ஊடகவியலாளர்களிடம் கேள்வியேழுப்பியுள்ளார். நெடுந்தீவில் உள்ளவர்களில் 90 வீதமும் ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவாளர்கள் ஆனால் மேற்படித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி கட்சிக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் எவர் ஏறுக்குமாறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். யாழ்.வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. மேற்படிச் சந்திப்பில் அமை…
-
- 5 replies
- 593 views
-
-
30 வருடங்களாக நிலவிய பயங்கரவாதம் இன்றில்லை : மட்டக்களப்பில் ஜனாதிபதி by வீரகேசரி இணையம் "கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை. எனினும் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும்" என்று ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று மாலை ஜனாதிபதி மட்டக்களப்பு சென்றிருந்தார். மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சுமார் 12 நிமிடங்கள் தமிழிலும் சிங்களத்திலும் இவர் உரையாற்றினார். மக்கள் பிரச்சினை குறித்து மட்டுமன்றி, அரசியல் தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடாமல் ஜனாதிபதி பொதுவாகவே உரையாற்றினார். குறிப்பாக யுத்தத்தினால் குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்களையும், யு…
-
- 5 replies
- 658 views
-
-
பகுப்பாய்வு அறிக்கையில் உறுதியாம். 11 ஆண்டுகளின்பின் தூசுத்தட்டப்படும் மிருசுவில் மனிதப்புதைகுழி வழக்கு. இன்று மீண்டும் விசாரணைக்கு. [Wednesday, 2011-07-27 21:32:05] யாழ், மிருசுவில் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது.புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் தொடர்பான அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சாட்சியத்துக்காக அழைக்கப்பட்டிருந்தது. புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆடைகள் அந்த படுகொலை செய்யப்பட்டிருந்தோர் அணிந்திருந்தவை தான் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி பகுப்பாய்வாளர் டி.எச்.எல். ஜயமான நீதிமன்றத்தில் தெரிவித்தார். கதிரேஸ் ஞானவி…
-
- 5 replies
- 556 views
-
-
அமெரிகா சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு பராக் ஒபாமாவின் ஏற்பாட்டில் இரவு விருந்துபசாரம்! [sunday, 2011-09-18 20:44:47] இலங்கையின் வெளிவிவகார துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகள் பொது சபையின் 66 வது அமர்வில் பங்கேற்பதற்காக இன்று நியூயார்க்கிற்கு சென்றடைந்துள்ளார். அவர் நேற்று மாலை கொழும்பில் இருந்து நியூயார்க் பயணமானதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், உள்ளிட்ட தூதுக்குழுவினர் எதிர்வரும் பொது சபை அமர்வில் பங்கேற்கவுள்ளனர். இதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 22 ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை அமர்பில் உரைநிகழ்த்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவர் ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பான் கீ மூனையு…
-
- 5 replies
- 1.3k views
-
-
அமெரிக்க செனட்டின் கறுப்பின பிரதிநிதி டானி டேவிஸ்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- விடுதலைப் புலிகளின் சிந்தனையை தான் சரியாக புரிந்து கொள்வதுடன் அதற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்க செனட்டின் கறுப்பின பிரதிநிதி டானி டேவிஸ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இலங்கையில் இன மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க காங்கிரஸின் குழுவினர் சிறிசேன அரசாங்கத்தின் கீழான தற்போதைய நிலை குறித்து கூடி ஆராய்ந்துள்ளனர். இவர்களுக்கு இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து சர்வதேச நெருக்கடி குழு,மனித உரிமை கண்காணிப்பகம், பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு போன்ற அமைப்புகள் விளக்கவுரை வழங்கியுள்ளன.. இங்கு உரையாற்றிய அமெரிக்க செனட் பிரதிநிதி பில்ஜோன்சன் இலங்;கையில் உண்மையான முன்னேற்…
-
- 5 replies
- 1.2k views
-
-
வெள்ளி 23-11-2007 22:26 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 19,887 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2007ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈர்ந்த மாவீரர்களின் எண்ணிக்கை 19,887 என தெரிவித்துள்ளது. மாவீரர்களின் தொகை 19,887 வீரச்சாவடைந்த ஆண் மாவீரர்கள் 15,691 வீரச்சாவடைந்த பெண் மாவீரர்கள் 4,196 மொத்தக் கரும்புலிகள் 343 தரைக் கரும்புலிகள் 102 தரைக் கரும்புலிகள் ஆண் 81 தரைக் கரும்புலிகள் பெண் 21 கடற் கரும்புலிகள் 241 கடற் கரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் கைது சிறீலங்காப் படையினரால் பிரஞ்சு ஊடகவியலாளர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கமப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றைப் படம் பிடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 5 replies
- 1.7k views
-
-
வட மாகாணம் தொடர்ச்சியாக கல்வியில் வீழ்ச்சியடைவதற்கு மாகாண சபையின் வினைத்திறனற்ற செயற்பாடே காரணம்- தவராசா (தி.சோபிதன்) வடக்கு மாகாணம் கல்வியில் தொடர்ச்சியாக வீழ்ச்சியான நிலையில் காணப்படுவதற்கு மாகாண சபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடே காரணம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது வெளியாகியுள்ள சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது வடக்கு மாகாணசபையின் வினைத்திறன் அற்ற செயற்பாடு. இதனை நான் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது கல்வி கொள்கையில் மாற்ற…
-
- 5 replies
- 830 views
-
-
எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஹலால் சான்றிதழ் நாட்டில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமானால் மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என பொதுபல சேனா எச்சரித்துள்ளது. அடிப்படைவாத சக்திகளில் இருந்து பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் பொதுபல சேனாவின் மாநாடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாலபேயில் இடம்பெற்றபோதே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், ஹலால் சான்றிதழ் என்பது எமது நாட்டுக்குத் தேவையில்லாததொன்று. அதனை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து முற்றாக அகற்றிவிட வேண்டும். இல்லையேல் மக்களை ஒன்று சேர்த்து இந்த அமைப்பினூடாக …
-
- 5 replies
- 1.7k views
-
-
முதலமைச்சருக்காகவே நான் பதவி விலகினேன் விவசாய அமைச்சரைக் காப்பாற்றுவதற்கே மாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் பதவி விலகவேண்டும் என்று வடக்கு முதலமைச்சர் கூறி வருகின்றார் எனக் கருத்துக்கள் பரவின. இதனால் முதலமைச்சருக் குப் பங்கம் ஏற்படக்கூடாது என்ற அடிப் படையிலேயே நான் பதவியில் இருந்து விலகினேன். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முதலமைச்சர் நியமித்த குழுவை அவர் நம்பினார். ஆனால் விசாரணைக் குழு எனது விடயத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அது பக்கச்சார்பாக இயங்கியுள்ளது என்பது புலப்படுகின்றது. வடக்க…
-
- 5 replies
- 424 views
-
-
யாழில்... பல்வேறு நீர்வழங்கல் திட்டங்கள், பிரதமரினால் ஆரம்பித்துவைப்பு! ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, அலரிமாளிகையில் வைத்து இன்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளின் 6 கிராம சேவகர்கள் பிரிவுகளில் வசிக்கும் 5000 க்கும் அதிகமான பாவனையாளர்கள் சுத்தமான குடிநீரினை பெறவுள்ளனர். அத்துடன் தாளையடி…
-
- 5 replies
- 467 views
-
-
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க பொதுநலவாயத்தின் மேற்பார்வையில் உள்நாட்டின் விசாரணைக்குழு இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய பொதுநலவாயத்தின் மேற்பார்வையில் உள்நாட்டின் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். அத்துடன், சித்திரவதைகளுக்கு எதிராக அமைக்கப்படும் உள்நாட்டு விசாரணைக் குழுவுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு உதவிகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுநலவாய நாடுகளின் அமர்வுக்காக கொழும்புக்கு புறப்பட முன்னர் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சித்திரவதைகளுக்கு எதிரான இலங்கையின் விசாரணைக்குழு அந்த நாட்டின் மனித உரிமை ஆணைக்குழுவின…
-
- 5 replies
- 703 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி பதவி யேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக் ஷே பங்கேற்பதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதா உட்பட, பல தலைவர்கள், பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். இந்த எதிர்ப்புக்கு இடையில், இந்தியா வருவதற்கு முன், நல்லெண்ண நடவடிக்கையாக, இலங்கை சிறையில் இருந்த, தமிழக மீனவர்களை, ராஜபக் ஷே விடுதலை செய்தார். பேச்சுவார்த்தை:அதன் தொடர்ச்சியாக, மோடி பதவியேற்ற அடுத்த நாளே, இரு நாட்டு தலைவர்களும் டில்லியில் சந்தித்தனர். இருதரப்பு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கையில் வாழும் தமிழர்களுக்க…
-
- 5 replies
- 1.5k views
-
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. http://www.tamil.srilankamirror.com/news/2666-2014-10-17-07-01-00
-
- 5 replies
- 632 views
-