Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா வடக்கு மாதா தேவாலயத்தினுள் புகுந்த இராணுவத்தினர் திருச் சொரூபங்களை வெளியே வீசி அட்டகாசம் வவுனியா வடக்குப் பகுதியிலுள்ள மாதா தேவாலயத்தினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த திருச் சொரூபங்களை வெளியே வீசி அதனை அசிங்கப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இப்பகுதியிலுள்ள இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்த படையினரே இவ்வடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. தேவாலயத்தினுள் புகுந்து அங்கிருந்த மாதாவின் திருச் சொரூபத்தினை அகற்றி வெளியே கொண்டு சென்று வைத்து அதன் மீது கழிவு நீர் போன்றவற்றை ஊற்றி படையினர் அசிங்கப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்றிரவு இந்த அடாவடி நடவடிக்கை இடம்பெற்றுள்ள நிலைமையில் அந்தப்…

    • 0 replies
    • 565 views
  2. மகேஸ்வரன் கொலைச் சந்தேகநபர் அடையாளம் காட்டப்படவில்லை [26 - January - 2008] [Font Size - A - A - A] ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி.மகேஸ்வரனின் படுகொலை தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர் அடையாளம் காட்டப்படவில்லை. கொழும்பு மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேமரட்ன முன்னிலையில் நேற்றுக் காலை இந்த அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. இந்தப் படுகொலையைச் செய்ததாகக் கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜோன் கொலின் வலன்ரைன் (வசந்தன்) என்பவர் நேற்றுக் காலை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டார். இந்தப் படுகொலை இடம்பெற்ற கொட்டாஞ்சேனை ஷ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் க…

  3. "புலிகளை ஏக பிரதிநிதியாக ஏற்காததால் துரோகி ஆக்கபட்டேன்" TULF செயலாளர் வீ.ஆனந்தசங்கரி விடுதலை புலிகள் தான் ஏக பிரதிநிதிகள் என கூறி இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நான் தான், அதனை சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து தலைவர் ஆகியுள்ளார் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி இந்தியாவில் இருக்கும் போதே என்னுடன் தொடர்பு கொண்டு ஆயுத வழியில் சென்ற நான் ஜனநாயக வழிக்கு திரும்ப போகின்றேன் எனக்கு நீங்கள் தான் வழிகாட்ட வேண்டும் என கோரி இருந்தார். அவ்வேளை …

  4. முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசை திருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சி நிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்கக் கோரியவர்கள் இவர்கள்தான். இன்னொருபுறம் தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகளே மதுபானச்சாலை அனுமதி பத்திரங்களைப் பெற்று விற்றுச் சம்பாத்தியம் செய்கிறார்கள். இந்தப் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இ…

  5. இலங்கையை நம்ப சர்வதேச சமூகம் தயாரில்லை - ஜமமு இங்கே எவர் என்ன சப்தம் போட்டாலும், என்ன ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினாலும், உலகம் இவற்றை பொருட்டாக கணக்கில் எடுக்கவில்லை என்பதுடன், சர்வதேச சமூகம் அரசாங்கத்தை நம்ப தயாராக இல்லை என்பது நாளுக்கு நாள் நிரூபிக்கப்பட்டு வருகிறது. உலகம் வெறும் வாக்குறுதிகளால் அல்ல, நடவடிக்கைகளாலேயே இலங்கை அரசாங்கத்தை உலகம் எடை போடுகிறது. எனவே சிலரை பலநாள் ஏமாற்றலாம். பலரை சிலநாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்ற கசப்பான பாடத்தை அரசாங்கம் கற்றுக்கொண்டு வருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கட்சியின் நிலைப்பாடு குறித்து …

    • 0 replies
    • 850 views
  6. வடக்கில் தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வடக்கு மாகாணத்தில் தாய், தந்தையரை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக புலமைப் பரிசில் திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தை ஆகிய இருவரையும் இழந்த பிள்ளைகளுடைய கல்வி மேம்பாட்டுக்காக புலமைப் பரிசில் திட்டமொன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 5 மாவட்டங்களிலும் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு மாவட்ட மட்டத்தில் அந்த திட்டம் செய…

  7. சிறிலங்காவில் ஜனநாயகம் இறந்து விட்டதாக நாட்டில் பரந்த அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  8. இன்று மலை 5 மணிக்கு தமிழகத்தில் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் PUCL ஏற்பாடு செய்யும் கருத்தரங்கு நடக்கிறது. அதில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏ.சுமந்திரன் உரையற்றுகின்றார் . இதில்நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் பேராசிரியர் சரஸ்வதி அம்மா அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் தென்னிலங்கை தொலைக்காட்சியொன்றிற்கு கருத்து தெரிவித்திருந்த சுமங்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.அத்துடன் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்திலான கருத்துக்களையும் தெரிவித்து வ…

    • 5 replies
    • 2.4k views
  9. இலங்கையில் அதிகளவில் வட்ஸ் அப் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. ஹேக்கர்கள் சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தின் (verification code) மூலம் வட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்து உள்நுழைந்து தொலைபேசி தொடர்பு விபரங்களை பெற்றுக் கொள்கின்றனர். அண்மையில் இவ்வாறான சம்பவங்களுக்கு பலர் முகம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எதிர்பாராமல் வட்ஸ் அப் ஊடாக ஒரு தெரிந்த நபர்களிடம் இருந்து சரிபார்ப்பு குறியீட்டு இலக்கம் (verification code) அனுப்பப்படுகிறது. ஹேக்கர்கள் வட்ஸ் அப் ஊடாக தொடர்பு கொண்டு நண்பர்களாகவோ அல்லது அறிமுகமானவர்களாகவோ தம்மை காட்டுடிக்கொண்டு சரிபார்ப்பு குறியீட்டு இலக்கத்தை கோருகின்றார்கள். அந்த இலக்கத்தை கோரும் நபருக்கு ஒரு முறை அனுப்பியதும் வட்ஸ் அப் கணக்கு ஹ…

  10. நாட்டிலுள்ள சிறைகளில் 12 சிங்கள அரசியல் கைதிகள் உள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டிலுள்ள சிறைகளில் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்லது அரசியல் கைதிகளாக 12 சிங்களக் கைதிகள் மாத்திரம் உள்ளனர். மகஸின் சிறையில் யூட் சுரேஷ் , அஜித் , பந்துல, கஜதீர, ரஞ்சித் பெரேரா ஆகியோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதுபோல் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் ரிரோன் பெர்னாண்டோ , லக்ஷ்மன் குரேயும் வெலிக்கடை பெண்கள் பிரிவில் திருமதி கஜதீர சகலருமாக சிறையிலுள்ளனர். கண்டி போகம்பரையில் விக்கிரம சிங்கவும் யாழ்ப்பாணத்தில் இந்திக சஞ்சீவவும் அநுராதபுரம் சிறையில் கொப்பேகடுவவும் வவுனியாவில…

  11. வவுனியா தோணிக்கல் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் துப்பாக்கி முனையில் குடும்பம் ஒன்றை மிரட்டி கப்பம் கேட்டபோது அவர்களிடம் இருந்த துப்பாக்கியைக் குடும்ப அங்கத்தவர்கள் பறித்தெடுத்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  12. இன அழிப்பின் சூத்திரதாரிகள் யார்? ஆக்கம்: பண்டாரவன்னியன் தமிழனை தமிழ் இனத்தை அழிப்பதற்கு அல்லது அந்த இனத்தை அடக்கி ஒடுக்குவதற்கு வெளியிலிருந்து யாரும் எதுவும் செய்யத் தேவையில்லை. இந்தக் கைங்கரியத்தை தமிழர்கள் தாங்களே செய்து கொள்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளல்லர் என்ற குரல் முன்பு வடக்கில் கேட்டது. பின்னர் கொழும்பிலிருந்தது. தொடர்ந்து கிழக்கிலும் பரவியது. இப்போது உலக நாடுகளிலும் ஆட்சியாளர்களினாலும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்பொழுது இலங்கையின் இனப்பிரச்சினை இலங்கைக்குள் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில் இது உலகப் பிரச்சினையாக மாறிவிட்டது. 2005இல் 22 தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது …

  13. பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் வாக்கை செலுத்திய 106 வயது முதியவர் ! ShanaNovember 14, 2024 106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் இன்று (14) பாராளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார். யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து, தமது 22 வயதில் திருகோணமலைக்கு வந்து தொடர்ந்து அங்கே வாழ்ந்து வருவதாகவும், இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார். https://www.battinews.com/2024/11/106.html

  14. இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த பிரச்னையில் இந்தியா இராஜதந்திர நடவடிக்கையைக் கையாண்டு வருகிறது என இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கின்றார். கூடங்குளம் அணுமின் நிலையம் திறப்பு, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம், திருச்சியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அதில் பங்குகொண்டு நிகழ்த்திய உரையின்போதே சிதம்பரம் இதனைத் தெரிவித்தார். கூட்டத்தில் ப. சிதம்பரம் மேலும் பேசியது: "இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்க…

    • 3 replies
    • 607 views
  15. யாழ் சர்வதேச வர்த்தக சந்தை ஜனவரியில்! [ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 03:46.42 AM GMT ] இலங்கையின் வடபகுதியில் இடம்பெறுகின்ற மிகப்பிரசித்தமான வர்த்தக சந்தையான யாழ் சர்வதேச வர்த்தகக் சந்தை (JITF 2016) எதிர்வரும் ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு தகுந்த சர்வதேச சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கிலும் தென்பகுதி முதலீட்டாளர்களை வடபகுதிக்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்கிலும் இவ் வர்த்தக சந்தையானது ஒவ்வொரு வருடமும் இடம்பெற்று வருகின்றது. அவ்வகையில் கடந்த வருடம் 2015ம் ஆண்டில் நடைபெற்ற யாழ்.சர்வதேச வர்த்தக சந்தையானது சுமார் 60,000 க்கும் மேற்பட்ட பார்…

  16. தெற்கிலும் வியாபிக்கும் தாக்குதல் அச்சுறுத்தல் [02 - March - 2008] -விதுரன்- தெற்கைப் பாதுகாத்தவாறு வடக்கில் பாரிய யுத்தமென்ற அரசின் கொள்கையில் பெரும்பின்னடைவு ஏற்படுவது போல் தெரிகிறது. வடக்கில் இடம்பெறும் படை நகர்வில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத அதேநேரம் கொழும்பு உட்பட தெற்கில் இடம்பெறும் பல்வேறு தாக்குதல்களும் தெற்கை உலுக்கி வருகிறது. கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றி வடக்கையும் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டால் நாட்டைப் பாதுகாத்துவிடலாமென்று நினைத்த அரசுக்கு, தெற்கைப் பாதுகாக்க முடியாத நிலையேற்பட்டுள்ளதால் நாட்டை எப்படிப் பாதுகாப்பதென்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடக்கில் தற்போது இடம்பெறும் பெரும் போர் தொடர்பான செய்திகள் இன்று தெ…

    • 1 reply
    • 1.2k views
  17. 9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட வீதியை காணவில்லை..! சித்தாா்த்தன் எம்.பிக்காவது தொியுமா..? தமிழ்தேசிய கூட்டமைப்பினால் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கம்பரெலிய திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுவ தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில் யாழ்.உடுவில் பகுதியில் வீதியே போடாமல் வீதி போடப்பட்டதாக பெயா் பலகை நாட்டப்பட்டமை தொடா்பாக மக்கள் கடும் விசனமடைந்துள்ளனா். குறித்த வீதி புனரமைப்பிற்கு ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த பெயர்ப்பலகை காணப்படும் நிலையில் புனரமைக்கப்பட்ட வீதி எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ள மக்கள் வீதியைக் காணவில்லை என கேலியும் செய்துவருகின்றனர். கம்பரலிய வீதிகள் அமைக்கப்பட்ட பின் ஜனாதிபத…

  18. சட்டவிரோத மீன்பிடி: 8 இந்திய மீனவர்கள் கைது! யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய இரு படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கசந்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 537 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 67 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2024…

  19. இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் வரை எமது நோக்கம் நிறைவேறாது - சுஷ்மா சுவராஜ் 7:46 PM Share உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் வரை தமது இலங்கை விஜயத்தின் நோக்கம் நிறைவேறாது என இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய சர்வகட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். …

    • 0 replies
    • 419 views
  20. மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்! adminDecember 15, 2024 காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15.12.24) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், “எமது பிறதொரு நிறுவமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகைப்பட்டினத்துக்கு இடையிலான படகுசேவையில் முதலீ…

  21. வீரகேசரி இணையம் - இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இன நெருக்கடிக்கு இராணுவ தீர்வு என்பது சாத்தியம் ஆகாது என இந்திய பிரதமர் கலாநிதி மன் மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்ட காலமாக தொடரும் இனப்பிரச்சினை பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல கோடி ரூபா பெறுமதியான பொதுமக்களின் சொத்துகளையும் நாசம் செய்து விட்டது. பலர் தங்களது இருப்பிடங்களையும் இழந்து நிர்கதி நிலைக்கு உள்ளாகி உள்ளனர்.. மோசமான மனித் உரிமை மீறல்களும் இலங்கையில் இடம்பெற்று வருகிறது இது குறித்து இந்திய அரசின் பதில் தான் என்ன என்று ம.திமு.க செயலாளர் வைகோ அவர்கள் இந்திய பிரதமருக்கு எழுதிய கடித்திற்கு பதில் அளிக்கையிலேயே மன்மோகன் சிங் மேற்படி தெரிவித்துள்ளார்.

    • 0 replies
    • 1.3k views
  22. ஜனாதிபதியை விட மகிந்தவுக்கு ஏன் கூடுதல் பாதுகாப்பு? - மைத்திரி கேள்வி [Monday 2015-12-14 09:00] ஒரு நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் இருக்க முடியாது. நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலை யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதிகளவான வாகனங்களையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பயன்படுத்தி வருகின்றார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் விசனம் வெளியிட்டுள்ளார். ஒரு நாட்டில் இரண்டு ஜனாதிபதிகள் இருக்க முடியாது. நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற நிலை யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அதிகளவான வாகனங்களையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பயன்படுத்தி வருகின்றார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் விசனம் வெளியிட்டுள்ளார். ஜன…

  23. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஒட்டகம் சின்னம் தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முஸ்லிம்கள் தேசிய கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் இம்முறை தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. https://www.madawalaenews.com/2019/10/blog-post_76.html

    • 15 replies
    • 1.8k views
  24. இலங்கையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென அமெரிக்க நீதி திணைக்களம் கோரியுள்ளது. விடுதலைப் புலிகளுக்காக பொருட்களை வாங்க முயன்றமையால் ரமணன் மயில்வாகனம் என்ற சந்தேக நபர் பாரிய குற்றத்தினை மேற்கொண்டுள்ளார் என அமெரிக்க வழக்குரைஞர் ஒருவரால் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணிசமான, நீண்ட சிறைத் தண்டனை விதிக்கப்படாவிடின் சட்டத்துக்கான மதிப்பை கெடுப்பதாகிவிடும். எனவே ஒருவர் பயங்கரவாத இயக்கத்துக்கு பொருள் ரீதியான உதவி வழங்கினாலும் கடும் தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாமெனத்…

  25. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை நியமிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்திருக்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒக்டோபர் மாதத்துக்கான முதலாவது கூட்டம் கடந்த 10 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே பேராசிரியர் எஸ். சிறீசற்குணராஜாவை யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தராக நியமிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பேராசிரியர்களான எஸ். சிறிசற்குணராஜா, கே. மிகுந்தன் ஆகியோரின் பெயர்களை யாழ். பல்கலைக்கழக பிரதித் துணைவேந்தர் பதவிக்காக முன்மொழிந்து, அவர்களின் பெயர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக…

    • 0 replies
    • 303 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.