ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
கிழக்கு மாகாணசபைக்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 27ம் திகதி முதல் அடுத்த மாதம் 3ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது . வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ டி சுமனசிறி தெரிவித்தார் . எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை . கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. வேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பாக தேர்வு அத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் சுமணசிறி மேலும் தெரிவித்துள்ளார். ஆதாரம் வீரகேசரி
-
- 0 replies
- 697 views
-
-
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் துதரகம் ஏற்பாடு செய்த இராப்போசன விருந்தில் பங்கேற்ற பசில் ராஜபக்ச, இரா.சம்பந்தன், ரங்கராஜன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து கலந்துரையாடியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த இராப்போசன விருந்தில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரி.கே.ரங்கராஜன், ஒரு கதை சொல்லப் போவதாக தொடங்கினார். “எனது மகனுக்கு 12 வயதாக இருக்கும் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒளிப்படத்தை அவர் தனது நூலகத்தில் வைத்திருந்தான். எதற்காக இந்தப் படத்தை வைத்திருக்கிறாய் என்று கேட்டபோது அதற்கு அவர்தான் தமிழ் மக்களின் தலைவ…
-
- 10 replies
- 1.2k views
-
-
உலங்கு வானூர்தியில் மன்னாரை வந்தடைந்தார் இராயப்பு ஜோசப் ஆண்டகை மன்னார் மாறைமவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் இன்று பிற்பகல் மன்னாரை வந்தடைந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று நாடு திரும்பியுள்ளார். இன்று காலை பண்டாரநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த ஆயர். அங்கிருந்து உலங்கு வானூர்தி மூலம் ஏ32 வீதியில் அமைந்துள்ள மன்னார் தள்ளாடி விமானதளத்தை வந்தடைந்தார். ஆயருடன் ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன் மற்றும் அருட்தந்தை எமில் எழில்ராஜ் ஆகியோரும் சிங்கபூரில் இருந்து வருகை தந்திருந்தனர். …
-
- 12 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார். கனேடிய(Canada) வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார். தமிழ் மக்களின் நெருக்கடிகள் இந்தச் சந்திப்பு கனடாவின் - ஒட்டோவாவில்(Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெர…
-
-
- 18 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் ஒருமைப்பாடும் - ஈழத்தமிழர் தாகமும் சாதாரணமாக உலகம் என்று நாம்கூறிக்கொண்டாலும் இந்த உலக இயக்கம் மேற்கத்தய நாடுகள் என நாம் அழைக்கும் ஒரு சில நாடுகளாலேயே தங்கியிருக்கின்றது அதாவது இவையே எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன அல்லது இயக்குகின்றன நாம் இதை ஏற்றுக்கொள்ளலாம் ஏற்காமல் மல்லுக்கட்டி உடைந்து போகலாம் உண்மை இதுதான் அதன்படி இந்த நாடுகள் சில குறிக்கோளைக்கொண்டவை அது இவர்களின் சுயநலம் சார்ந்ததாகும் அதன்படிதான் தீர்மானங்கள் எடுக்கப்படும் நடைமுறைப்படுத்தப்படும் இதில் முகம் பார்க்கப்படமாட்டாது எதிரி நண்பன் துரோகி..........எதுவுமே பார்க்கப்படமாட்டாது இவை தேவைக்கேற்றபடி மாற்றங்காணும்??? இதற்கு இறுதி …
-
- 11 replies
- 2.4k views
-
-
இந்தியாவிடம் வாங்கக் கூடாது, தடை விதித்தார் மைத்திரி! இந்தியாவில் இருந்து, தொடருந்து இயந்திரங்கள் மற்றும் பேருந்து இயந்திரங்கள் போன்றவற்றை இந்தியாவிடம் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார். தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகள் மற்றும் பேருந்து இயந்திரங்கள், மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தி வைத்துள்ளார். எனினும், இந்தியாவிடம் இருந்து தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையில…
-
- 1 reply
- 527 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் சமாதான முன்னெடுப்புக்களையே விரும்பி நிற்கிறது என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 719 views
-
-
அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பகிரங்கமாக ஆதரவு வெளியிட்டுள்ளமை பாதுகாப்புச் செயலாளர் கேர்ணல் கோதாபய ராஜபக்ஷவை ஆத்திரமடையச் செய்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். போதைப் பொருள் வர்த்தகம், கப்பம் பெறுதல் ஆகியவற்றை மேற்கொண்டுவந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் சகாக்கள் பலர், பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின் பேரில் வெள்ளைவேனில் கடத்தப்பட்டிருந்த போதிலும், அவர்கள் ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து விடுவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், அமைச்சர் மேர்வின் சில்வை சிக்க வைப்பதற்காக களனி பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மேர்வின் சில்வாவிற்கெதிராக செயற்படுமாறு கேர்ணல் கோதாபய…
-
- 1 reply
- 838 views
-
-
முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கடடவகக-வயழநதரன-ஆதரவ/175-239979
-
- 39 replies
- 4.4k views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு சமூக வலைதளங்களில் களங்கம்; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு Published By: Vishnu 01 Jan, 2025 | 01:47 AM (எம்.வை.எம்.சியாம்) தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிலாந்தி கோட்டஹச்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுவதாகத்தெரிவித்து அது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (31) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் ஒருவரினால் இந்த போலியான பிரசாரம் முன்…
-
- 2 replies
- 279 views
-
-
போரின் திசைகளை மாற்றப்போகும் தாக்குதல்கள் வீரகேசரி வாரவெளியீடு 3/30/2008 10:42:13 AM - விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்பு தளபதி கேணல் சூசை தொடர்பாக கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் கடுமையான வதந்தி தென்னிலங்கையில் பரவியிருந்தது. முல்லைத்தீவு கடற்பகுதியில் நடைபெற்ற விபத்தில் சூசை காயமடைந்ததை தொடர்ந்தே இந்த வதந்தி பரவியது. எனினும் பின்னர் அது வழமை போலவே விரைவில் மழுங்கிப்போய்விட்டது. ஆனால் அன்று பரீட்சித்து பார்க்கப்பட்ட உத்திகள் தற் போது கடற்படையினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் நடைபெற்ற அந்த விபத்தின் போது கடற்புலிகள் நவீன கலங்களைத் தகர்ப் பதற்கான நவீன ஆயுதங்களையும், அதற்கான உத்திகளையுமே பரீட்சித்து பார்த்துக்…
-
- 5 replies
- 2.7k views
-
-
இலங்கைத் தமிழர்களின் புகலிடம் கோரும் நாட்டம் இன்னமும் குறைவடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் முடிவுறுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் சட்டவிரோத வழிகளில் வெளிநாடுகளில் புகலிடம் கோரும் முனைப்புக்களில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களின் வாழ்க்கையில் சுபீட்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் பிரச்சாரம் செய்த போதிலும், உண்மையில் தமிழ் மக்கள் நிலைமைகள் குறித்து திருப்தி அடையவில்லை. இலங்கைக் கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், தமிழர்கள் மேற்குலக நாடுகளில் புகலிடம் கோரும் நாட்டத்தை கைவிடவில்லை. இதேவேளை, தமி…
-
- 1 reply
- 773 views
-
-
12,181 குடும்பங்கள் மீள்குடியமரவில்லை! யாழ். மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு [ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2015, 01:38.44 AM GMT ] யாழ். குடாநாட்டில் 10 ஆயிரத்து 716 தமிழ்க் குடும்பங்களும், ஆயிரத்து 465 முஸ்லிம் குடும்பங்களும் உள்ளடங்கலாக 12 ஆயிரத்து 181 குடும்பங்கள் இன்னமும் மீள் குடியமர்த்தப்படாதுள்ளன என்று மாவட்டச் செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியமர்த்தப்பட வேண்டிய 10 ஆயிரத்து 716 தமிழ்க் குடும்பங்களில் ஆயிரத்து 318 குடும்பங்கள் குடாநாட்டில் உள்ள முகாம்களில் வாழ்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, குடாநாட்டில் உள்ள 190 ஆயிரத்து 150 குடும்பங்களில் தற்போது 617 ஆயிரத்து 722 குடும்பங்களே வசிக்கின்றன. அத்துடன…
-
- 0 replies
- 445 views
-
-
அரசமைப்பின் 16ம் திருத்தம் மூலம் தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி ஆகி விட்ட விஷயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி விமல் வீரவன்ச. அவருடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் டக்லஸ், தொண்டமான், அதாவுல்லா போன்றோர் இவருக்கு எழுத படிக்க கற்றுக்கொடுத்து, அரசியலமைப்பையாவது வாசிக்க பழக்க வேண்டும். தமிழ் மொழி முழு இலங்கையின் இன்னொரு ஆட்சி மொழி என்பதையும், தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி என்பதையும் இந்த தமிழில் பேசும் மூன்று கோட்டா ஆதரவு கூட்டு குடித்தன அரசியல்வாதிகளும் அறிவார்கள் என நம்புகிறேன். எங்களுக்கும் இது தெரியாதே என என் நம்பிக்கையில் மண்ணை போட்டு விடாதீர்களப்பா என இவர்களை வேண்டுகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரு…
-
- 0 replies
- 534 views
-
-
பரணகம ஆணைக்குழு கலைக்கப்படுகிறது? – காணாமற்போனோர் விவகாரத்துக்கு புதிய அமைச்சு DEC 26, 2015 காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு வரும் பெப்ரவரி மாதத்துடன் கலைக்கப்பட்டு, இந்த விவகாரங்களைக் கையாள்வதற்கான புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பரணகம ஆணைக்குழுவின் பதவிக்காலம் வரும் 2016 பெப்ரவரி 15ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளது. இந்தநிலையில், இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று, ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். “காணாமல்போனோரை கண்டறியும் அதிபர் ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்கும்படி இன்னும் கோரிக்கை விடுக்கவில்லை. …
-
- 2 replies
- 375 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் வத்தளையில் உள்ள வீட்டுக்கு நேற்று அதிகாலை சென்ற அடையாளம் தெரியாத குழு ஒன்று அங்கிருந்தவரை கடுமையாக மிரட்டிவிட்டு, அங்கு கடும் தேடுதலை நடத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 838 views
-
-
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை தவறாக வழி நடத்தியத்தில் அமெரிக்கா சம்பந்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இதில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் பெரும் பங்களிப்பை செய்ததது எனவும் பொன்சேக்கா அமெரிக்கா சென்ற போது, மேலும் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அதேவேளை சரத் பொன்சேக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட பலர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவ வீடமைப்பு திட்டங்களை ஆரம்பித்து வைத்து, இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சரத் பொன்சேக்காவை பார்த்து அமெரிக்க தூதரகம் புன்னகைத்தது. இதன் பாதூரமான விடயம் …
-
- 2 replies
- 1.6k views
-
-
கடந்த ஆண்டில் துஷ்பிரயோகம் தொடர்பில் 321 முறைப்பாடுகள்! 2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 321 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கூற்றுப்படி, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலப்பகுதியில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர்கள் தொடர்பான 8,746 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகளில் அதிகபட்சமாக 2,746 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சிறுவர…
-
- 0 replies
- 213 views
-
-
வன்னிக் களமுனை மாறுமா? இறுகிப் போயுள்ள வன்னிக் களமுனையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படப் போவதான அறிகுறிகள் தென்படுகின்றன. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் தளபதிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் ஆற்றிவரும் உரைகள் அதனைக் கோடி காட்டுகின்றன. தாங்கள் களமுனையில் என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி பொதுவாக விடுதலைப் புலிகள் கதைப்பது குறைவு. ஆனால், அண்மைக் காலங்களாக பொறி பறக்கும் மேடைப் பேச்சுக்கள், செவ்விகள் என அடிக்கடி வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் போர் தொடர்பான, அடுத்த கட்ட நகர்வு தொடர்பான பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. யுத்தத்தில் சோர்வடைந்துள்ள சிங்களப் படையினரின் உளவுரணை மேலும் குலைத்து விடவோ அன்றி தமிழ் மக்களின் மனங்களில் தோன்றியுள்ள சலிப்பு நிலையைப் போக்கடி…
-
- 5 replies
- 2.3k views
-
-
தெஹிவளை, கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருல் ரஹ்மான் பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து நேற்று ஆப்பாட்டம் ஒன்று இடமபெற்றுள்ளது. இந்த ஆப்பாட்டத்தில் பெரும்பாலான பௌத்த பிக்குகளும் சிங்களவர்களும் கலந்து கொண்டனர்.ஜாமியுஷ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா, பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா என முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றன. கடந்த சில வாரங்களாக குறித்த கட்டடம் புனரமைப்பு வேலைகளுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, இந்த பள்ளிவாயலின் இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முறைப்பாடு ஒன்று கல்விஹார பிக்குகளால் தெஹிவளை – கல்கிசை மேயரிடம் முன்வைக்கப்…
-
- 11 replies
- 1.3k views
-
-
பொங்கலுக்கு பின்னரே மாற்றம்; தொண்டா, டக்ளஸூக்கு அமைச்சுப் பதவிகள் பொங்கலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடும் என்று, தகவல்கள் கசிந்துள்ளன. அதன்போது, தற்போதிருக்கின்ற அமைச்சர்கள் பலரின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என்று அறியமுடிகின்றது. அதற்கு அப்பால், நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்துகொண்டு, 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கும் இரண்டு அமைச்சுகள் கிடைக்கவிருக்கின்றன என்றும், அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கால்நடைகள் அபி…
-
- 0 replies
- 415 views
-
-
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் லண்டனில் இரண்டு மணித்தியாலங்கள் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதாக கூறப்படுகிறது. லண்டன் ஈலிங் பிரதேசத்தில் உள்ள டிரான் அலசின் உறவினர் ஒருவரின் வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டேபுள்ளேயின் மரணத்தின் பின்னர் கட்சிக்குள் சிக்கல் நிலைமை ஏற்பட்டு வருவதாகவும் முக்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையக நடவடிக்கைகளில் அமைச்சர் டலஸ் அழகபெரும தலையீடுகளை மேற்கொள்வதாகவும் இந்த பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் மைத்திரிபால தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ள சிலரின் தேவை கருதி தமது சகோதரர்கள் மீதும் வீணான போக்கு கடைபிடிக்கப…
-
- 0 replies
- 1k views
-
-
12 FEB, 2025 | 05:19 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனாதிபதி சட்ட ஆட்சியைப் பலப்படுத்தப் போவதாக தனது கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டார். ஆனால், சட்டவிரோதமாக சட்ட ஆட்சிக்கு எதிராக, தனியார் காணியில் ஆக்கிரமிப்பு ரீதியாகக் கட்டப்பட்ட தையிட்டி விகாரையைப் பாதுகாப்பதில் பௌத்த சாசன அமைச்சரும் பொலிஸாரும் படையினரும் அக்கறையாக உள்ளனர் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். சட்ட ஆட்சி தையிட்டி விகாரை விடயத்தில் செல்லுபடியாகாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு ஒரு சட்டம், ஏனைய மதத்தவர்களுக்கு ஒரு சட்டம் என்ற பாரபட்சங்கள் புதிய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும…
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
பிலியந்தல பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பு காரணமாக 68 பேர் காயமடைந்துள்ளனர் இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 9 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்; குண்டுவெடிப்பு பகுதியை வீடியோவில் பார்க்க...................... http://isoorya.blogspot.com/2008/04/9_25.html
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ் - முஸ்லிம் கூட்டு அரசியல் தீர்வுகள் சாத்தியமா? அரசாங்கம், புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதேவேளை, தமிழர்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பிரதான கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த விடயத்தில் கூட்டாகச் செயற்படுவதற்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. இந்த முயற்சிகள் எந்தளவு நடைமுறை சாத்தியமானவை என்பதை சற்று ஆராய்வது பொருத்தமாகும். புதிய அரசியலமைப்பொன்றை முன்வைப்பதற்கான அரசாங்கத்தின் இந்த முயற்சியோடு, கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டு,…
-
- 14 replies
- 1.1k views
-