ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜக்சவின் உத்திரவின் பேரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவித்தமைக்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறிலங்கா அரசு அறிவித்திருக்கின்றது. http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2IUOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB32022m4BZ4e
-
- 2 replies
- 884 views
-
-
தற்போது சூடான விவாதத்தை உண்டுபண்ணியுள்ள சனல் 04 தொலைக்காட்சி சேவையின் ‘பாதுகாப்பு வலயம், சிறிலங்காவின் கொலை வலயங்கள்’ என்கின்ற காணொலிகளின் இயக்குனரான கலும் மக்ரே [Callum Macrae] தற்போது சிறிலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சி மாநாடு தொடர்பான செய்தியைச் சேகரிப்பதற்காக சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான கலும் மக்ரே Ceylon Today ஊடகத்திற்கு தனது நேர்காணலை வழங்கியுள்ளார். தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்ததாகவும், அன்பான மக்கள் வாழும் ஒரு அழகான நாடாக சிறிலங்கா உள்ளதாக தான் முதலில் அறிந்ததாகவும் அதுவே சிறிலங்காவுக்கு வருவதற்கு தன்னைத் தூண்டியதாகவும் கலும் மக்ரே தனது நேர்…
-
- 1 reply
- 660 views
-
-
மஹிந்தவும் கோட்டாபயவும் ரணிலின் படத்திற்கு காலை, மாலை மலர்தூவி வணங்க வேண்டும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படத்தை வைத்து காலையும் மாலையும் மலர்தூவி வணங்க வேண்டும் என ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க அன்று ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திடாதிருந்தமை அதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றுக்கு அழைத்துச் செல்ல முடியும் என அந்த பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் அதில் கைச்சாத்திட ரணில் விக்ரமசிங்க அன்று மறுப்பு தெரிவித்ததாகவும் கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர…
-
- 0 replies
- 524 views
-
-
வன்முறைக் குழுக்களின் வளர்ச்சிக்கு காரணம் யார்? யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 13 பேரைக் கைது செய்துள்ளனர் என்று பொலிஸார் கூறுகின்றனர். கொக்குவிலில் பொலிஸார் இருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புபட்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இவர்கள். இந்தக் கூட்டத்தின் தலைவர் எனக் கூறப்படும் நிசா விக்டர் எனப்படும் சத்தியவேல் நாதனும் கைது செய்யப்பட்டவர்களில் அடக்கம். இதுபோக வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் வேறு சிலரும்கூடக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கொக்…
-
- 1 reply
- 430 views
-
-
2008 ம் ஆண்டு நான் இரண்டு வாக்குறுதிகளை அளித்தேன் ஒன்று இந்த யுத்தத்தினை அடுத்த இராணுவ தளபதிக்கு விடமாட்டென் என்றேன் அடுத்ததாக புலிகளின் தலைவர் பிரபாகரனை 2009 மாவீரர் நாள் உரையினை நடத்த விடமாட்டேன் என கூறினேன். இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றினேன். பயங்கரவாதத்தினை பூண்டோடு அளித்தேன். இவ்வாறு கூறினார் சரத்பொன்சேகா. இன்று காத்தான்குடியில் நடந்தெ தேர்தல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சரத்பொன்சேகா இவ்வாறு கூறினார். இந்த யுத்தத்தில் கிழக்கு வாழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பதனை நான் அ|றிவேன். ஆனால் இனிமேல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது காரணம் போர் ஓய்ந்துவிட்டது. ஆனால் மஹிந்த அரசு இப்போதும் போர் நடைபெறுவது போன்ற தோற்றப்பாட்டினை காட்டுகின்றத…
-
- 8 replies
- 1.5k views
-
-
ராஜபக்ச பிரபல்யம் வீழ்ச்சியை எதிர்கொள்கிறது, ஆனால் இது தற்காலிகமானதே’- நாமல் ராஜபக்ச January 11, 2022 ராஜபக்ச பிரபல்யம் வீழ்ச்சி: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால் ராஜபக்ச ஆட்சியின் புகழ் வீழ்ச்சி அடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச, இது இது தற்காலிகமானதே என்றும் கூறியுள்ளார். தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் கருத்து தெரிவித்த அவர், இது தற்காலிகமானது என்றும் இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். “இரசாயன உரப் பாவனையைத் தடை செய்வதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானம் ஒரு வலுவான ம…
-
- 0 replies
- 293 views
-
-
சனாதிபதி தேர்தல் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு அரிய சந்தர்ப்பம். எங்களுடைய எதிர்கால நிலைப்பாட்டை தீர்வை முழுமையாக மாற்றி அமைக்க கூடிய சந்தர்ப்பம். இதனை நாம் இழக்ககூடாது. தமிழ்மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கள் மாலை வவுனியா வெளிவட்ட வீதியில் நடைபெற்ற சனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது குறிப்பிட்டார். நாம் சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்த விடயம் அறிவிக்கப்பட்ட பின்னர் மலையகத்திலும் தென்னிலங்கையில் வாழுகின்ற தமிழர் மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் (?)காணப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற எங்களுடைய…
-
- 13 replies
- 1.5k views
-
-
நந்திக்கடல் - 2012 ஆவணி - நிலாந்தன்: மிஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே, முள்ள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் எல்லாவற்றையுமே இழந்தும், கைவிட்டும் புறப்பட்ட மக்களின் வாகனங்கள் அனைத்தும் இரும்புக்காக கொண்டு செல்லப்படுகின்றன. ஏற்கனவே தெற்கின் வியாபாரிகளால் சிறுகச் சிறுக அபகரிக்கப்பட்டு இப்போ மொத்தமாக அள்ளிச் செல்லப்படுகிறது. கிளிநொச்சியில் இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் 10 மில்லியனுக்கு ஏலம். இறுதியுத்தத்தின் போது கைவிடப்பட்டு எவராலும் உரிமை கோரப்படாது காணப்பட்ட பாவனைக்கு உட்படுத்தப்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் பத்து மில்லியனுக்கு ஏலத்தில் விற்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 200…
-
- 2 replies
- 600 views
-
-
பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரினார் ஜனாதிபதி பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் தாரிக் அஹமட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மிக முன்னேற்றகரமாக உள்ளன என ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார். அதனை மேலும் வலுப்படுத்துவதற்கு, நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன…
-
- 16 replies
- 893 views
-
-
சிவாஜிலிங்கம் மாலைதீவு சென்று திரும்பினார்;புலம் பெயர் நாடுகளின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பு மாலைதீவில் இடம்பெற்ற புலம் பெயர் நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் எதிர்வரும் ஜானாதிபதித் தேர்தல் குறித்தும் தமது நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மாலைதீவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் இன்று காலை நாடு திரும்பியுள்ளதுடன், தற்போது மலையகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் போது தமது நிலைப்பாட்டிற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள பிரதிநிதிகள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் , இது குறித்து விரைவில் சாதகமான அறிக்கை விடுவதாகவும் அவர்…
-
- 3 replies
- 1k views
-
-
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சக்தி அமைச்சு தீர்மானம் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை நாளை (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். LIOC நிறுவனத்திடம் இருந்து நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1264456
-
- 10 replies
- 552 views
- 1 follower
-
-
பீரிஸின் இந்திய விஜயத்தில் நடந்தது என்ன? அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இந்திய விஜயம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக வெளிவிவாகர அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 பெப்ரவரி 06 – 08 வரை இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அமைச்சர் தனது முதலாவது விஜயத்தை புது தில்லிக்கு மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்…
-
- 0 replies
- 272 views
-
-
காணாமல் போனோர் தொடர்பினில் நேரடி சர்வதேச விசாரணைகளே தேவையன்றி மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள இழுத்தடிப்பு விசாரணைக்குழுக்களல்ல என தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் கூட்டமைப்பு பெண் அங்கத்தவரும் காணாமல் போனோருக்காக குரல் எழுப்பி வருபவருமான அனந்தி சசிதரன். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டினில் மேலும் அவர் தெரிவிக்கையினில் காணாமல் போனோர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க மஹிந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள இழுத்தடிப்பு விசாரணைக்குழு தனது பணிகளை மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இத்தகைய அமைப்புக்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்றது.இவை வெறும் கண்துடைப்புக்களே …
-
- 0 replies
- 397 views
-
-
யாழில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண்ணை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண்ணொருவரே ஹெரோயினுடன் சிக்கினார். பிறருக்கு சந்தேகம் ஏற்படாத விதத்தில் தனது 3 மாத கைக்குழந்தையுடன் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று, யாழ் மாவட்ட செயலகத்திற்கு அண்மையான பிரதேசத்தில் வைத்து அவர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இதன் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாவாகும். …
-
- 9 replies
- 777 views
-
-
மருதங்கேணி கிராமிய வங்கியில் பெரும் நிதிமோசடி வைப்பிலிட்ட பணத்தை வழங்குமாறு மக்கள் கோரிக்கை மருதங்கேணி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியில் மக்களால் வைப்பிலிடப்பட்ட கோடிக்கணக்கான நிதி மோசடி செய்யப்பட்டு வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை எமக்கு மீளப் பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பில் அந்த மக்கள் தெரிவித்ததாவது; மருதங்கேணி கிராமிய வங்கியில் வைப்பிலிட்ட எமது பணத்துக்கு என்ன நடந்தது என வங்கி முகாமையாளர் எமக்குக் கூறவேண்டும். ஆயிரக்கணக்கான நாம் கோடிக்கணக்கில் இந்த வங்கியில் பணத்தினை…
-
- 1 reply
- 283 views
-
-
இலங்கையின் சிரேஸ்ட ராஜதந்திரிகளில் ஒருவரும் அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸின் கொன்சோல் அதிகாரியுமான பந்துல ஜயசேகர இன்னமும் வளர்ச்சியடையவில்லை என செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரே குற்றம் சுமத்தியுள்ளார். பந்துல ஜயசேகரவிற்கும் கலம் மக்ரேவிற்கும் இடையில் டுவிட்டர் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரே, தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக பந்துல ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். மக்ரே, புலிகளின் தத்துவாசிரியா அமரர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடெல் பாலசிங்கத்திற்காக செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்த சூன்ய வலயம் என்ற ஆவணப்படத்தை இயக்கிய மக்ரே புலிகளின் பிரச்சாரப் பொறுப்பாள…
-
- 2 replies
- 485 views
-
-
தமிழில் தடுமாறிய பைசர் முஸ்தபா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் பிறந்தநாள் கடந்த 3ஆம் திகதி. அன்றைய தினமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடும் நடைபெற்றது. அன்றைய தினம் இரவு, மேல்மாகாண முதலமைச்சரின் வீட்டுக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார். அங்கு அமைச்சர் பைசர் முஸ்தபாவும் இருந்துள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, இன்றைய (சு.கவின் மாநாட்டில்) தமிழ் அரசியல்வாதி ஒருவர் பேசியதன் சாராம்சத்தைக் கேட்டுள்ளார். அதற்குப் பதில் கூறுவதற்கு பைசர் முஸ்தபா தடுமாறியுள்ளார். இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, ‘நீங்கள் பேசாமல் சிங்களவராக மாறிவிடுங்கள்’ என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். http://newuthayan.com/s…
-
- 0 replies
- 286 views
-
-
ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்த.... #GoHomeGota ஹாஷ்டாக், அதனை தகர்க்க... #WeAreWithGota ஐ பகிரும் ஆதரவாளர்கள் ! #GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கையில் டுவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்ததுள்ளது. இதனை அடுத்து #WeAreWithGota என்ற எதிர் டுவிட்டர் ஹாஷ்டாக்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் பகிர்ந்துவருகின்றனர். நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பல அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் முக்கிய ஆதரவாளர்கள் இதனை பயன்படுத்தி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எவ்வாறாயினும் #GoHomeGota2022 மற்றும் #GoHomeGota என்ற ஹாஷ்டாக்கள் தொடர்ந்தும் இலங்கையில…
-
- 0 replies
- 308 views
-
-
வன்னி யுத்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்ந்தும் இலங்கை படையினரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் அண்மையில் வவுனியா செட்டிக்குளம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, அதிக அளவிலான பெண்கள், தனிமையான இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு மாற்றுடைகளே தரப்பட்டுள்ளன. இந்தநிலையில் அவர்களை தென்னிலங்கையின் காலி பூஸா முகாமிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் திருமணம் முடித்தவர்களும் இதே மாதிரியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்…
-
- 1 reply
- 526 views
-
-
இலங்கையில் இருந்து... மீண்டும், இந்தியா நோக்கி... அகதிகள்! இலங்கையில் இருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தமிகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள மணல் திட்டில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் இவ்வாறு வந்து இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஒரு ஆணும் 2 பெண்களும் 3 குழந்தைகளுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கரைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1272895
-
- 2 replies
- 274 views
-
-
ரங்கல கடற்படை அதிகாரிகளினால் இந்திய மீன்பிடிக் கப்பலொன்று தடுத்துவைப்பு கப்பலின் கப்டன் உள்ளிட்ட அதன் பணியாளர்கள் விளக்கமறியலில்‐ ரங்கல கடற்படை அதிகாரிகளினால் இந்திய மீன்பிடிக் கப்பலொன்று தடுத்துவைத்துள்ளமை காரணமாக இலங்கை ‐ இந்திய நல்லெண்ணம் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெனரல் சரத் பொன்சேக்காவின் மருமகன் தனுத்த திலகரத்ன கப்பலொன்றின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்தே இந்தக் கப்பல் முற்றுகையிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த இந்தியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இலங்கை ‐ இந்திய அரசாங்கங்களுக்கிடை…
-
- 0 replies
- 509 views
-
-
இன்றைய தேவை... ஜனாதிபதி பதவி விலகுவதல்ல, நிதியமைச்சரை நீக்குவதே – விமல்! இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேரலை விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதே தமது நோக்கம் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1273838
-
- 1 reply
- 217 views
-
-
கிளிநொச்சி முறிகண்டி அக்கராயன் வீதியில் அமைதிபுரம் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த வாரம் குறித்த காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக பொது மக்களால் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்த பின்னர் மேலதிக விசாரணைகளையும் மேற்கெண்டுவந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டாம் திகதி குறித்த சடலம் கேகாலை இக்கிரியகல இலக்கம் 111, பாடசாலை வீதியை சேர்ந்த டி.டபிள்யு.ஜி.ரஞ்சித் பண்டார மாரப்பன (வயது 31) எனும் ஒப்பந்தக்காரருடையது என அவரது மாமனார் அபேய சாந்தகுமார அடையாளம் காட்டியுள்…
-
- 0 replies
- 224 views
-
-
கடற்படை தளபதி டிரவிஸ் சின்னய்யா விரைவில் ஓய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடற்படை தளபதி டிரவிஸ் சின்னய்யா விரைவில் ஒய்வு பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடற் படைத் தளபதி வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னய்யா நேற்றைய தினம் 26ம் திகதி தனது 55ம் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். 55 வயதுடன் ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டியது வழமையான நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பினால் பதவிக் காலத்தை நீடிக்க முடியும், எனினும் ஜனாதிபதி ஒரு மாத காலத்திற்கு மட்டுமே டிரவிஸ் சின்னய்யாவின் பதவிக் காலத்தை நீடித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி இலங்கையின் கடற்படைத் தளபதியாக டிரவிஸ் சின்னய்யா நியமிக்கப்பட்டி…
-
- 3 replies
- 343 views
-
-
ஒரே ஆண்டில் 13 ஆயிரம் பேர் இலங்கையில் புற்றுநோயால் மரணம்! – சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல். [Monday, 2014-02-17 07:37:33] இலங்கையில் புற்றுநோய்கள் காரணமாக 14 ஆயிரம் பேர் 2013 ஆம் ஆண்டில் மாத்திரம் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் புற்றுநோய்களால் உயிரிழந்தவர்களில் 2500 பேர் வாய்ப்புற்று நோய் காரணமாக மரணமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது அதேநேரம், புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த வருடம் 25,842 பேர் இந்நாட்டிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பதிவு செய்துள்ளனர் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: ஒருவர் ஒரு வெற்றிலைக் கூறை மெல…
-
- 1 reply
- 358 views
-