Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவின் முதல் நகர்வு முடிவுற்றது… அடுத்து வருவது என்ன..? ஒருவாறாக ஐ.நா. சபை மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரும் முடிவடைந்து விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் மௌனவிரதம் மேற்கொண்டன. நல்லிணக்க ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுங்கள் என்பதாக அப் பிரேரணை அமைந்திருந்தது. அதேவேளை, பெரும் படை பரிவாரங்களோடு ஜெனீவாவில் களமிறங்கிய ஆட்சியாளர்கள், நாடு திரும்பும்போது நிச்சயம் செங்கம்பள வரவேற்பு இருக்காது என நம்பலாம். இப் பிரேரணையானது இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கான அமெரிக்க நிகழ்ச்சி நிரலின் முதலாம் பாகம் மட்டுமே. இனி ஆரம்பமாகப் போகும் இரண்டாம் ப…

    • 0 replies
    • 752 views
  2. மட்டக்களப்பில் வாவியூடாக கடும் சிரமங்களுக்கு மத்தியில் பயணிக்கும் பிரதேச வாசிகள் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர்,குருமன்வெளி வாவியூடான இயந்திரப்படகில் பயணிக்கும் பிரதேச வாசிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் பயணங்களை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் எழுவான்கரை மற்றும் படுவான்கரை மக்கள் இந்த மண்டூர் குருமன்வெளி வாவியூடாக இயந்திரப்படகின் மூலம் தங்களின் பயணங்களை சிரமங்கள் இல்லாமல் இலகுவாக மேற்கொண்டு வருவது வழக்கம். ஆனால் அண்மைக்காலங்களாக இந்த இயந்திரப்படகினூடாக பயணிக்கும் பிரதேச வாசிகள் மற்றும் வாகன சாரதிகள்,பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள் பல சிரமங்கள் மத்தியில்…

    • 1 reply
    • 385 views
  3. தமிழ் தலைவர்கள் அநுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களே அமைச்சர்களாக முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டமானது தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் தலைமையில் நேற்று சனிக்கிழமை (26) இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் , அனுரகுமார திஸாநாயக்க ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர். ரணிலோ, சஜித்தோ, நாமலோ கிராமத்தில் பட…

  4. அமைச்சர் மேர்வின் பாணியில் யாழில் இமெல்டா அட்டகாசம்! நீதிமன்றம் அழைப்பாணை யாழ். கொட்டடி மாட்டு இறச்சிக்கடை உரிமையாளரினால் யாழ். அரச அதிபருக்கு எதிராக யாழ். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த காளை மாட்டினைத் தடுத்தி நிறுத்தியமைக்கான தகுந்த காரணம் சமர்ப்பிக்குமாறு கோரியே யாழ்.அரச அதிபருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. எந்தக் காரணமும் இன்றி ஒருவரின் தொழிலைத் தடுத்து நிறுத்தியமை, இந்த உரிமையாளரின் மன உளச்சலுக்கு ஆளாக்கியமை தொடர்பாக அரச அதிபர் மீது வழக்குத் தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐரோப்பிய இன காளை மாட்டினை இறைச்சிக்காக வெட்டுவதை தட…

  5. வடக்கு முதல்வரை நீக்குமாறு கூறும் கருத்துக்களை ஏற்க முடியாது: செல்வம் எம்.பி. காட்டம் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்குமாறு சிலர் தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதியே தவிர தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் அல்ல என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு முதலமைச்சரை நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தை மறுதலித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …

    • 20 replies
    • 1.2k views
  6. உலகில் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் இலங்கை 94 ஆவது இடம்! 2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட அண்மைய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது. அதன் குடிமக்கள் சிங்கப்பூர் கடவுச்சீட்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம். பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டது. குறித்த நாடுகளின் கடவுச்சீட்டினை கொண்ட மக்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெறலாம். அமெரிக்கா 8 ஆவது இடத்தைப் பிடித்தது, அதன் குடிமக்களுக்கு 186 நாடுகளுக்கு விசா இல்லாது பயணிக்கலாம். தரவரிசையில் இலங்கையின் …

  7. வடமுனைக் கடலில் பாரிய புத்தர் சிலை! நாகதீப விகாரை பிக்குவின் ஏற்பாடு [ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2015, 05:00.10 AM GMT ] வடமுனைக் கடலில் பாரிய புத்தர் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கு யாழ்ப்பாணம் நாகதீப விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமதிஸ்ஸ தேரர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். உத்தேச புத்தர் சிலை நாகதீப விகாரையை அண்மித்த கடற்பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. சுமார் 110 அடி உயரத்தில் உட்கார்ந்த நிலையில் இருக்கும் புத்தரின் வடிவம் இங்கு சிலையாக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் வடக்கு கடலின் பல கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த புத்தர் சிலை கண்ணுக்குத் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவின் கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு இதுபோன்ற சி…

  8. தமிழ் மக்களுக்கு சேவையாற்றவில்லை, அவர்களை நடு வீதியில்தான் வீட்டிருக்கின்றீர்கள் - ஆளுநரின் கருத்திற்கு ரவிகரன் பதிலடி அரசதலைவர் மைத்திரிபால சிறீசேன முல்லைத்தீவிற்கு சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தமிழ்மக்களுக்கு எதிரான செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன. அவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசதலைவரும், ஆளுநரும் தமிழ் மக்களை நடு வீதியிலேயே விட்டிருக்கின்றனர் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அண்மையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற திருக்குறள் பெருவிழாவில் கலந்துகொண்ட வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், அரசதலைவரை தாம் மூன்று தடவைகள் முல்லைத்தீவிற்குஅழைத்து வந்ததாகவும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவையாற்றுவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்திருந…

  9. Started by NMa,

  10. ஜெனிவா கூட்டத் தொடர் அடுத்தமுறையும் வரும்; அரசை எச்சரிக்கிறார் சுரேஷ் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் இலங்கை அரசு தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. அடுத்த தடவையும் ஜெனிவா மாநாடு உள்ளது என்பதைக் கருத்தில்கொண்டு அது செயற்படவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் முன்மொழிந்துள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமுடியாது என்ற தொனியில் அரசு கருத்து வெளியிடுகின்றது. அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினூடாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். வேறு எந்தவித உபாயங்களும் கையாளப்பட மாட்டா என்றும் அது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தீர…

  11. [ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 01:45.41 PM GMT ] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தமிழ் அரசியல் கைதிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன், அவர்களை புனர்வாழ்வுக்கு ஈடுபடுத்துமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் 39 தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtzBRYSWnv5G.html

  12. மன்னார், முகமாலை, மணலாற்றுக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 774 views
  13. சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை வழக்கறிஞர் ஒருவர் ஊடாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள , பயங்கரவாத புலன் விசாரணைக்காக ஒப்படைத்ததாக சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனந்த தேசப்பரிய அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று சிவக்குமார் அவர்கள் " பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் தம்மை தேடி வந்த போது தாம் இல்லாததால், தான் வரும் வரை தமது குடும்பத்தில் இருவரை அழைத்துச் சென்று கல்கிஸ்ஸை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் , தன்னை விசாரணைக்கு வரும்படி அவர்கள் அழைத்திருப்பதாகவும்" கூறினார். சுனந்த தேசப்பிரிய அவர்கள் ,இன்று பிற்பகல் ,தான் வழக்கறிஞர் சுதர்சன குணவர்தன அவர்களோடு சென…

  14. வரும் ஜுன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரிலும், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் மூத்த அரச அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கே அவர் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அடுத்த கூட்டத்தொடரில் பதிலளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கடந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆனாலும் சி…

    • 0 replies
    • 527 views
  15. அமைச்சர் பதவி வழக்குமாறு சனத் ஜயசூரிய உட்பட நான்கு எம்.பிகள் கோரிக்கை தமக்கு அமைச்சர் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சனத் ஜயசூரிய உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கோரியுள்ளனர். மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சனத் ஜயசூரிய, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான நிஷாந்த முத்துஹெட்டிகம, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர, மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷமன் வசந்த பெரேரா ஆகியோர் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். அமைச்சர் பதவிக்காக தாம் நீண்டகாலமாக காத்திருப்பதாகவும் தமது செயற்பாடுகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் பெற்ற வாக…

    • 0 replies
    • 476 views
  16. ரவிராஜ் படுகொலை வழக்கு விசாரணை ஜனவரி 4ம் திகதி திகதி நடைபெறவுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிரோசா பெர்னாண்டோ இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். ரவிராஜ் கொலையுடன் ஏழு சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகத் தவறியிருந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராகவும் திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை க…

  17. மைத்திரி – மகிந்த தரப்பு சந்திப்பு இணக்கமின்றி நிறைவு September 29, 2019 எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்குமிடையில் நேற்றையதிம் இடம்பெற்ற சந்திப்பு இணக்கமின்றி நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் சுதந்திரக்கட்சியும் இணைவு குறித்து பேசப்பட்டது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சுதந்திரக் கட்சயா­னது பாரம்பரியம் வாய்ந்ததாகும். ஆகவே அக்கட்சியின் தனித்துவங்களை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் ஜனாதிபதித் தேர்தலில் கை அல்லது வெற்றிலைச…

  18. சிறீலங்காவின் கெளரவ விஞ்ஞானி சேர் ஆர்தர் சி கிளார்க் தனது 90வது வயதில் சிறீலங்காவில் காலமானார். இவர் விஞ்ஞான நாவல்கள் மூலம் பிரபல்யம் அடைந்தவராவார்..! சமீப காலத்தில் சிறீலங்காவில் பல பிரபல்யங்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இப்போ ஆர்தர் சி கிளார்க்கும் சேர்ந்து கொண்டுள்ளார். Goodbye Sir Arthur The three laws adopted by Sir Arthur C. Clark in his life were (1)When a distinguished but elderly scientist states that something is possible, he is almost certainly right. When he states that something is impossible, he is very probably wrong." (2) "The only way of discovering the limits of the possible is to venture a little way past t…

    • 9 replies
    • 4.2k views
  19. கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்! சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் ‘பீஸ் ஆர்க்’ (Peace Ark) என்ற மருத்துவக் கப்பல் நேற்றைய தினம் சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். ‘பீஸ் ஆர்க்’ என்பது 178 மீட்டர் நீளமுள்ள மருத்துவ வசதிக் கப்பல், கேப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, குறித்த கப்பல், இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் ஏற்பாடு செய்யும். அவை ‘பீஸ் ஆர்க்’ மற்றும் இலங்கை கடற்படை மருத்துவ திணைக்களத்தின் மரு…

  20. சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுக்களுக்குத் திரும்பவேண்டும் என்று தென் ஆபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 624 views
  21. இலங்கை விமானப்படை ரஸ்யாவிடமிருந்து தாக்குதல் விமானம் கொள்வனவு செய்ய உள்ளது: 18 டிசம்பர் 2015 இலங்கை விமானப்படை ரஸ்யாவிடமிருந்து தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு அதி சக்தி வாய்ந்த சுகோய் தாக்குதல் விமானங்களைப் பெற்றுத்தர ரஸ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு தாக்குதல் விமானம் வழங்கவிருந்த போதிலும் இந்திய எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் தற்போது சுமார் 12 தாக்குதல் விமானங்கள் பயன்படுத்தப்படாமையினால் பராமரிப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும், இவற்றை பழுது பார்த்ததன் பின்னரே மீளவும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. …

  22. இலங்கையில் இரண்டு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்! இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மற்றும் இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடுகள் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1414590

  23. பாலமோட்டையூடான படைநகர்வு முறியடிப்பு [ த.இன்பன் ] - [ மார்ச் 29, 2008 - 05:58 PM - GMT ] வவுனியா மாவட்டம் பாலைமோட்டையூடாக சனிக்கிழமை மாலை 4.15 மணியளவில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நிமிட நேரம் நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து இழப்புக்களுடன் சிறிலங்கா படையினர் அவர்களது பழைய நிலைகளிற்கு விரட்டியடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகளின் வவுனியா கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும் இழப்பு விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...9&Itemid=67

  24. வடக்கில் உள்ள ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்வதாக வடக்கு மாகாண வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார். அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று (07) இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபராக இருந்தமையை நினைவுகூர்ந்து அன்றைய நாட்களில் அம்மையாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சமூகப் பணிகள் எமது மக்களுக்கு மிக அவசியமானவை போ…

      • Like
    • 2 replies
    • 478 views
  25. ரூபவாஹினி கூட்டுத்தானபத்திற்கு மேர்வின் சில்வா நடத்திய ரவுடித்தனம் போல சிறிலங்காவின் மற்றொரு அமைச்சரான துமிந்த திசநாயக்கவும் பெற்றோலியக் கூட்டுத்தானத்திற்குள் புகுந்து தனது திருவிளையாடலைக் காட்டியுள்ளார். அவரின் திருவிளையாடலுக்கான காரணம் அவரின் தொலைபேசி கட்டணத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்தாமையே. Mervin the second, Duminda Disanayaka assaults Petroleum Corporation workers (Lanka-e-News, 2008 April 03, 6.20 PM) The Deputy Minister of Petroleum Resources Development Duminda Disanayaka rushed into the head office of the Petroleum Corporation this morning (03), scolded the Deputy Financial Manager and took away her office telephone. The Deputy Mini…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.