ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தி வரும் போரை நிறுத்தக் கோரி செங்கல்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகள் இன்று காலை 2-2-2009 தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தனர். செங்கல்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த அகதிகள் மேற்கொண்ட உண்ணா போராட்ட்தின் போதுஇ 'நீங்கள் விடுதலைப் புலிகளா?' என்று கேள்விகளைக் கேட்டபடி அகதிகள் பலரை அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து அங்கிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கலைஞர் கருணநிதி அரசின் காவல்தறையினர் மேற்கொள்ளும் இது போன்ற காட்டுமிராண்டித்தன செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும். அரசுக்கும் அதன் மேலதிகாரிகளுக்கும்இ…
-
- 4 replies
- 2k views
-
-
அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டனர் தமிழர்.?! வடக்கு, கிழக்கில் தமிழர்கள் 'உரிமைகள் வேண்டும்' என்ற கோஷத்துடன் கடந்த காலங்களிலும், தற்காலத்திலும் அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டார்கள்.? ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம், ஒரு நாள் ஹர்த்தால் போராட்டமும்தான் அவர்களின் தற்போதைய அறவழிப் போராட்டங்களா?" - இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல. "தமிழர்கள் அறவழியில் போராடியோ அல்லது மீண்டும் ஆயுதம் தூக்கிப் போராடியோ அரசை ஒரு போதும் மிரட்ட முடியாது. அரசு நடு நிலையுடன் செயற்படுகின்றது. இதைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கூறி வைக்க விரும்புகின்றோம்" எனவும் அவர் குறிப்பிட்டார். 'வட…
-
- 4 replies
- 802 views
-
-
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 48 மில்லியன் ரூபா நிதியுதவி (நா.தனுஜா) கொழும்புத்துறைமுகத்திற்கு அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலையடுத்து கடற்சூழல் பெருமளவிற்கு மாசடைந்திருப்பதுடன் அதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர்செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் 200,000 யூரோ நிதியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இலங்கை ரூபாவில் சுமார் 48 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய இந்த நிதியுதவியின் மூலம் கப்பல் தீப்பரவலால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை புத்தளம், மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1…
-
- 4 replies
- 446 views
-
-
தலைவர் பிரபாகரனைத் தவறாகப் பேசிய பொலிஸ் அதிகாரிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றித் தவறாகப் பேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் அவர்களை அமைதிப்படுத்திச் சாந்தப்படுத்தும் நிலை ஏற்பட்டது. சம்பவம் வடமராட்சி கொற்றாவத்தை என்ற இடத்தில்நிகழ்ந்தது. பொலிஸாரின் நடமாடும் சேவையிலேயேஇந்தச் சம்பவமும் இடம்பெற்றது. வடமராட்சி கொற்றாவத்தைப் பகுதியில் பொலிஸாரின் நடமாடும் சேவை இரண்டு தினங்கள் இடம்பெற்றது. அதன் முதல் நாளான நேற்று முன்தினம் ஆரம்ப விழா இடம்பெற்றது. நிகழ்வில் காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்ட…
-
- 4 replies
- 899 views
-
-
- உங்கள் கணிப்புகளிற்கும் ஆய்வுகளுக்கும் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் . . . இன்று உலகததில் எங்களைப் பற்றி என்ன . . . . . . கதைக்கிறார்கள் ? இன்று தமிழ் உலகததில் . . . sri lanka election news . . . -
-
- 4 replies
- 873 views
-
-
பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களைக் கொன்றழித்து இன்னும் இலட்சக்கணக்கான மக்களை அதகதிகளாக்கிய இந்த அரசாங்கத்திற்கு மானமுள்ள தமிழ் மக்கள் எவரும் முண்டு கொடுக்க மாட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமாகிய இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ஈழத் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையினை ஏற்றுக் கொண்டு அவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்க மறுத்தால் அதன் விளைவுகள் பாரதூரமாக அமையும் என்று எச்சரித்த சம்பந்தன் சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமையினை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்றும் இந்…
-
- 4 replies
- 737 views
-
-
ஞாயிற்றுக்கிழமை வெறியாட்டத்தின் பின்னர் தர்கா நகரின் எல்லா திசைகளிலிருந்தும் கருகிய வாசனையே வந்துகொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் வாழும் பகுதியின் எல்லையில் விசேட அதிரடிப்படையினரின் நடமாட்டத்தை காணமுடிகின்றது.அங்கிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் சிங்கள கிராமங்கள் இருக்கின்றன. வீதிமுனைகளிலும்,வீட்டுவாயில்களிலும் மக்கள் கூட்டமாகநின்று தங்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்,அதிகாலையில் தங்கள் கிராமத்திற்கு வரும் இனந்தெரியாதவர்களை அச்சத்துடன் பார்க்கிறார்கள், தர்கா நகரில் வாழ்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாததால் தர்க்கா நகரில் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போயுள்ளது. நள்ளிரவு நிகழ்ந்த பாரிய …
-
- 4 replies
- 836 views
-
-
டாஸ்மாக் இல்லாத ஊர்! ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இந்த ஊரில் கோயில் இல்லை. இருப்பினும் சுமார் 800 பேர் குடியிருக்கிறார்கள். “கோயில் மட்டுமில்லை. சாராயக் கடையும் இங்கே இல்லை. அதனாலேதான் நாங்க நிம்மதியா வாழமுடியுது” என்கிறார் கிராமவாசி ஒருவர். நிஜமாகவே ஆச்சரியம்தான்! இங்கே ‘டாஸ்மாக்’ மதுக்கடை இல்லவேயில்லை. இங்கே மட்டுமல்ல. இந்த ஊர் அமைந்திருக்கும் கோட்டைப்பூண்டி ஊராட்சி மன்றத்தில் எங்குமே இல்லை. யாருக்காவது குடிப்பழக்கம் இருந்தால்தானே ‘டாஸ்மாக்’ கல்லா கட்டும்? அட. இதென்ன கலாட்டா? ‘டாஸ்மாக்’ இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு ஊரா? உங்களுக்குத் தோன்றும் அதே ஆச்சரியம்தான் நமக்கும். சமத்துவபுரம் என்பது பெரியாரின் கனவு. ஒரு ஊரில் வாழ…
-
- 4 replies
- 1.5k views
-
-
கொழும்பில் வரும் ஓகஸ்ட் 18 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந்தக் கருத்தரங்கில் இந்திய இராணுவம் சார்பில் மேஜர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகளும், பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஒப்புதல் கடிதம் இரு தரப்பில் இருந்தும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009இல் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு, 2011ஆம் ஆண்டு முதல் இராணுவ உயர் மட்டக் கருத்தரங்குகளை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இம்மாநாடுகளில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சர்வதேச நாடுகளின் இராணுவம் மற்றும் பொலிஸ் போன்றவை கையாளும் உத்திகள் உள்ளிட்ட பல விவரங்கள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அந…
-
- 4 replies
- 709 views
-
-
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 40 பேர் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுள்ளதாக புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில் இருவர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 1 A 2 B மற்றும் 3 C ஆகிய பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். வன்னியுத்தத்தின் பின்னர், 351 முன்னாள் உறுப்பினர்கள் வவுனியாவில் உள்ள விசேட பாடசாலை ஒன்றில் தமது உயர்தர வகுப்புக் கல்வியைத் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தவிர மேலும் 10 மாணவர்கள் இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வந்தனர். உயர்தரப் பரீட்சைக்கு…
-
- 4 replies
- 612 views
-
-
முகமாலையில் புலிகள் ஈட்டிய வெற்றியை இறுதி வெற்றி அல்ல ் வடபோர்முனையில் சிறீலங்கா அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பு படையெடுப்பு முறியடிக்கப்பட்டமைக்காக, தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈழநாதம்| நாளேட்டிற்கு கருத்துரைத்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன், வடபோர்முனையில் ஈட்டப்பட்ட வெற்றியை இறுதி வெற்றியாகக் கருதி தமிழ் மக்கள் இறுமாந்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றுமொரு படையெடுப்பிற்கான தயார்படுத்தல்களில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து தமிழ் மக்களும் அணிதிரள்வதன் மூலமே, ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொண்டு வெற்றியீட்ட முடியும் என்றும…
-
- 4 replies
- 1.8k views
-
-
விஸ்தீரணம் பெறும் பலாலி விமான நிலையம் வடக்கு மாகாணத்தின் பிரதான விமான நிலையமான பலாலி விமானநிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு, இலங்கை - இந்திய பிரதானிகளிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (22) இடம்பெற்ற இருநாட்டு உயர்மட்டச் சந்திப்புத் தொடர்பில், தமிழ்மிரருக்குக் கூறுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் முப்படையைச் சேர்ந்தோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் தடை? சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை விரைவில் தடைகளைக் கொண்டு வரலாம் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச ரீதியில் சிறிலங்கா அரசாங்கத்துக்கான ஆதரவு பெருமளவு சரிவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இவ்வூடகம், எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசாங்கம் மீது தடைகளை விதிக்கக் கோரும் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இவ்விகாரம் தொடர்பில் இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'இத்தகைய தடைகளை முறியடிக்கின்ற வகையில் சிறிலங்கா அ…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
வெள்ளி 25-05-2007 16:10 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க ஐ.தே.க முழு ஆதரவு விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க ஐக்கிய தேசியக் கட்சி முழுயான ஒத்துழைப்பைத் தரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் பாதுகாப்பு தொடர்பில் நடத்தப்பட்ட ஒத்திவைப்பு பிரேணையில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் யுத்த முன்னெடுப்புகளை உடைதெறியவேண்டும். அத்துடன் புலிகளின் வான்படையை இல்லதொழிக்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எழுக்க வேண்டும் pathivu
-
- 4 replies
- 1.3k views
-
-
Official Department of State Response to Urge the release of former commander of the Sri Lankan Army and Presidential candidate General (Ret.) Sarath Fonseka Protection of Human Rights and Transparent, Democratic Processes in Sri Lanka By Michael H. Posner The United States has been following the case of General Sarath Fonseka closely since he was first detained in February 2010, shortly after the presidential election. Fonseka was convicted in November 2011 on incitement of violence charges, arising out of allegations he purportedly made to the press in 2009 that Defense Secretary Rajapaksa had ordered surrendering cadres of the Liberation Tigers of Tamil Eela…
-
- 4 replies
- 903 views
-
-
தமிழக எம்.பிக்களை தரக்குறைவாக விமர்சித்த இலங்கை தூதர் காரியவாசம்- மன்னிப்பு கேட்டார்! டெல்லி: தமிழக எம்.பிக்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது. அவர்களை விசாரிக்க வேண்டும் என்று திமிராகப் பேசிய இலங்கை தூதர் பிரசாத் காரியவாசத்தை இன்று மத்திய வெளியுறவுத்துறை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து தனது பேச்சுக்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் பல ஆயிரம் பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களை லண்டனின் சேனல் 4 நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று இன்னொரு வீடியோ ஆவணப்படத்தை அது வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் ப…
-
- 4 replies
- 1.2k views
-
-
தனது சகோதரரான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, விகடகவியாக்கியுள்ளதாக (Joker) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் ஜெனீவா யோசனைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தன் பின்னர், இலங்கை – இந்தியா இடையில் ஏற்பட்டுள்ள விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைந்து இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்தியா செல்ல அனுமதிக்குமாறு அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் அனுமதி கோரியுள்ளார். எனினும், இதற்கு அனுமதிவழங்க ஜனாதிபதி மறுத்துவிட்டதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவா வாக்கெடுப்பிற்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா, இலங்கைக்கு எதிராக எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்களிக்காது எனவும், அவ்வாற…
-
- 4 replies
- 1.5k views
-
-
அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமையட்டும் : ஜனாதிபதி மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமாக வாழ்த்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய்; நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில் மலர்ந்துள்ள இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், ‘சுபீட்சத்தின் ஆண்டாக’ ஆக…
-
- 4 replies
- 1k views
-
-
பிரபாகரன் திரும்பி வருவார்! இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கருத்தை சமீபத்தில் கூறியிருந்தீர்கள், எந்த அடிப்படையில் அப்படி கூறுகிறீர்கள்? எனக்கு வந்த சில நம்பகமான தகவல்களின்படி. 2009, மே 17ம் திகதிக்கு 2 தினங்கள் முன்பே அவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். அவர் உண்மையிலேயே மரணமடைந்திருந்தால், அவரது உடலை கொழும்பில் வைத்து, சர்வதேச ஊடகத்துக்கு ராஜபக்ச …
-
- 4 replies
- 1.2k views
-
-
வலம்புரி ஆசிரியா் தலையங்கத்திற்கு யாழ். கட்டளைத் தளபதி பதில் பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டி யது பெற்றோரின் கடமையாகும். அந்தப் பிள்ளைகள் தவறான வழியில் செல்வார்களேயானால் அதற்கான பொறுப்பில் இருந்து பெற்றோர் ஒருபோதும் விடுபட முடியாது. பிள்ளைகள் அவ்வாறு தவறான வழியில் சென்று சமூகவிரோதச் செயல்களில் ஈடு படும்போது சட்டத்தையும் ஒழுங்கையும் பாது காக்கும் அதிகாரிகள்,ஏனையோரது நலனைக் கருத்தில் கொண்டு சட்டத்தை செயற்படுத்தும் போது அக்குற்றத்தை அரசாங்கத்தின் அல் லது பாதுகாப்புத் தரப்பினர் மீது சுமத்துவது கடப்பாடல்ல என யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்க தெரிவித்தார். ‘யாழ்.கட்ளைத் தளபதிக்கு ஓர் அவசர மடல்’ என்ற தலைப்பில் நேற்றும் நேற்று முன்தினமும் வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
யாரும் காணாமல் போகவில்லை என்றால் உறவுகளைத் தேடி வீதிகளில் அலையும் பெண்களுக்கு விசரா பிடித்துள்ளது? - சம்பந்தன் [saturday, 2013-01-26 10:27:45] இலங்கையில் காணாமல் போனவர்களென்று எவரும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். அப்படியானால் தமது உறவுகளைக் காணாது தெருவழியில் அலைந்து திரியும் பெண்களுக்கு விசரா பிடித்துள்ளது?. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். கைதானவர்கள், சரணடைந்தவர்கள் பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இந்தநிலையில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியொருவர் இவ்வாறு கருத்துக் கூறுவதை என்னவென்று சொல்வது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணாமல் ப…
-
- 4 replies
- 575 views
-
-
யாழில் 13 மாடி இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு : சீனாவுடன் ஒப்பந்தம் யாழ்ப்பாணத்தில் 13 மாடி கட்டட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிலையின் கட்டளை 23 இன் கீழ் 2 இல் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது பதிலில் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் 13 மாடியைக் கொண்ட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்…
-
- 4 replies
- 542 views
-
-
இலங்கையில் பிரபல கார் தொழிற்சாலை : அடிக்கல் நாட்டப்பட்டது குளியாப்பிட்டியவில் அமையப்பெறவுள்ள வொக்ஸ்வாகன் மோட்டார் கார் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று நடைபெற்றது. குளியாப்பிட்டிய லபுயாய பிரதேசத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் குறித்த மோட்டார் வாகன தொழிற்சாலை அமையப்பெறவுள்ளது. அடிக்கல் நாட்டு நிகழ்வில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உட்பட பலர் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/article/15029
-
- 4 replies
- 773 views
-
-
சரத் ஆதரவாளர்கள் மீது தூப்பாக்கிப் பிரயோகம்; ஒரு பெண் பலி : தங்கல்லையில் சம்பவம் வீரகேசரி இணையம் 1/12/2010 3:50:45 PM - தங்கல்லை, உபுன்கம தலுன்ன பகுதியில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் பயணம் செய்த பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏழு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. திஸ்ஸமஹராமவில் நடைபெறவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தீவிரமாகத் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பிரிவினர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் நால…
-
- 4 replies
- 887 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இந்திய பிரதமமந்திரி மன்மோகன் சிங் இணக்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்தபோதே இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்காக கடிதத்தை அனுப்பவேண்டும் என மன்மோகன் சிங் கேட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 4 replies
- 1.1k views
-