Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரபாகரன் தப்பிச்செல்ல வழிவிட்டதா இந்திய அமைதிப்படை?- கேணல் ஹரிகரன் பதில் APR 16, 2015 | 1:10by புதினப்பணிமனைin செய்திகள் தனக்குத் தெரிந்தவரையில், இந்திய அமைதிப்படையினரால், ஒரே ஒருமுறை மாத்திரமே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை நெருங்க முடிந்ததாகவும், ஆனால் அவர் அதற்கு முன்னரே தப்பிவிட்டதாகவும், இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவத்தின் முன்னாள் தளபதியும், தற்போதைய இந்திய வெளிவிவகார இணை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங், நேற்று முன்தினம் ராய்பூரில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றியது குறித்து கருத்து வெளியிட்ட போதே, கேணல் ஹரிகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்திய அமைதிப்படையை…

  2. இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோ…

  3. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அறிக்கையினால், ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கை அவமதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிற்கு கடிதமொன்றின் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கான ரோம அரசியலமைப்பிற்கு இலங்கையர் என்ற ரீதியில் கையொப்பம் இடவில்லை என்றாலும், இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான அறிக்கையொன்றை தயாரித்திருப்பதன் மூலம் நாட்டிலு…

    • 0 replies
    • 1.3k views
  4. செல்வம் அடைக்கலநாதனின் கட்சி இரண்டாக உடைந்தது தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து இருவர் விலகியுள்ளனர். குறித்த கட்சியின் உறுப்பினர்களான ஸ்ரீ காந்தா, ஜனார்தனன் ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் அவர்கள் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. செல்வம் அடைக்கலநாதன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/132283

    • 5 replies
    • 1.3k views
  5. ஈகைப் பேரொளி முருகதாஸ் அவர்களின் 4 ஆண்டு நினைவு நாளில் பிரித்தானியா Harrow நகரில் ஆரம்பமாகிய நீதி கேட்டு ஐநாவை நோக்கிச் செல்லும் "தமிழ் வான்" இரண்டு நாட்களை கடந்து இன்று அதிகாலை 1:30 மணிக்கு பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைந்திருன்கின்றது. கடந்த இரண்டு நாட்களாக Harrow , London நகரங்களில் " தமிழ் வான்" நடமாடும் கண்காட்சி ஊடாக ஈழத்தமிழர்களின் மீது சிங்கள இனவெறி அரசு முன்னெடுக்கும் இனவழிப்பை பிரித்தானியா மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியில் ஆரம்பித்திருந்தது. சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது 65 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கும் இனவழிப்பை எடுத்துரைக்கும் முகமாக கண்காட்சி வைக்கப்பட்டு , காணொளி ஊடாக தமிழ் இன அழிப்பு ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டது . …

  6. “அழகிய கம்பீரமாக எழுந்து நிற்கும் நல்லூர் ஆலயம் போல் அனைவராலும் பேசப் படக்கூடிய புதியதொரு யாழ்ப்பாணம் நகரம் கட்டியெழுப்பப்படும்” இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர கட்டடத்திற்கு இன்று (07) அடிக்கல் நாட்டிய போது இதனைத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் மாநகர மண்டபத்திற்கு நாம் இன்று அடிக்கல் நாட்டியுள்ளோம். இது யாழ்ப்பாணத்திற்கு அழகிய மண்டபமாக இருக்கப் போகிறது. நல்லூர் ஆலயம் எந்தளவு அழகியதொரு கம்பீரமாக எழுந்து நிற்கின்றதோ அதேபோல் எல்லோராலும் பேசப்படக்கூடிய அழகான புதியதொரு யாழ்ப்பாணம் நகரத்தை கட்டியெழுப்பப்பும் மாபெரும் திட்டம்…

    • 13 replies
    • 1.3k views
  7. இன்று காலை ரம்பாவெல – மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த சிரேஷ்ட அறிவிப்பாளர் நூரானியா ஹசன் உயிரிழந்ததோடு மேலும் அறுவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதன் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று இரவு யாழ். நோக்கி பயணமாகியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயணித்த வாகனம் இன்று காலை 4.30 மணியளவில் மிஹிந்தலை – ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதியுள்ளது. இவ்விபத்தில் வானில் சென்ற இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த …

  8. இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி? [ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:29 GMT ] [ தி.வண்ணமதி ] அனைத்துலக சண்டியர்களில் ஒன்றான இஸ்ரேலுடன் சிறிலங்கா தனது சாணக்கியம் நிறைந்த நட்பினை பேணிவருகிறது, அதன் மூலம் தனக்கு ஒரு பலம் அதிகரித்திருப்பதாகவே சிறிலங்கா எண்ணுகிறது. எனினும் இந்த நட்பு வல்லாதிக்கத்தை எதிர்த்துநிற்கும் மூன்றாம் உலகநாடுகளுடனான சிறிலங்காவின் உறவில் பாதிப்பினை உருவாக்குமா என்ற சந்தேகமும் உள்ளது. இது தொடர்பாக 'கிரீன் லெப்ட்' [greenleft] என்ற ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி ஆய்வினை ’புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்திருப்பவர் தி.வண்ணமதி. அதன் முழுவடிவம் வருமாறு, ”தக…

  9. Monday, 07 March 2011 14:36 தேசியத் தலைவரை இல்லையென்பது வரலாற்றின் உச்சத் துரோகம் - தமிழ்நாடு முன்னணித் தலைவர் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழ் மக்களுடைய சொத்து. அவர் முன்னெடுத்த போராட்டம் ஒட்டு மொத்த தமிழினத்திற்குமான போராட்டம். அப் போராட்டத்தைக் களங்கப்படுத்துவதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் தலைவரொருவர் தெரிவித்தார். ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. தேசியத் தலைவர் இறந்து விட்டார் என்பதற்காகவே கே.பி.யை துரோகி என தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் தமிழ்நாடு மூத்த தலைவர்கள் கே.பி. கைதாவதற்கு முன்னரேயே அறிவித்தார்கள். அதுபோல இப்போது கனடாப் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவிள்ள நேரு குண…

  10. இலங்கை நிலவரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்று விசேட கூட்டம் : இலங்கை நிரவம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் நடைபெறவுள்ள இலங்கை விவகாரம் குறித்த சந்திப்பினைத் தொடர்ந்து 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்களும் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளனர். இலங்கையில் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது. நாட்டில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பாவி பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனி…

  11. இந்திய இலங்கை விமானப் படைகள் கூட்டுப் பயிற்சி சென்னை தாம்பரம் விமான தளத்தில் நடக்க இருப்பதால், இலங்கையை சேர்ந்த விமானப் படையினர் சென்னை வந்தனர். தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் உடனடியாக தன்னுடைய கண்டன அறிக்கையை வெளியிட்டார். பின்பு வைகோ, ராமதாஸ், கருணாநிதி போன்ற தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் பேரணியாக சென்றனர். தடையை மீறி ஊர்வலம் சென்றதாக மதிமுகவினர் 100 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான தளத்தை முற்றுகை இட முயன்ற …

  12. “நான் இன்னும் ஓய்வுபெறவில்லை” – மீண்டும் வருவேன் என்று சூசகமாக மிரட்டுகிறார் மகிந்த APR 23, 2015by கார்வண்ணன்in செய்திகள் தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்கவுக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”என் மீதும் எங்கள் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. அவர்கள் பெரியளவிலான குற்றச்சாட்டுகளைக் சுமத்துகின்றனர். இது ஒரு சூனிய வேட்டை போல இருக்கிறது. நானோ எனது குடும்பத்தினரோ சட்டரோதமாக பணம் சம்பாதிக்கவில்லை. முதலில், நான் சுவாசிலாந்தில், நிதியை வைத்துள்ளதாக கூறினர். பின்னர் ட…

    • 0 replies
    • 1.3k views
  13. அக்டோபர் மாதம் 8ம் தேதி. சிதம்பரம் தொகுதியில், இளைஞர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு முகாம், மாணவர்களுக்குக் கட்டணமில்லா நடமாடும் கணினிப் பயிற்சியகம் ஆகிய வற்றின் தொடக்க விழா. மேடையில் தம்பிகளின் வழக்கமான நெரிசலில் மூச்சுத் திணறிக்கொண்டிருந்தேன். கூட்டத்தின் இரைச்சலில் என் கைபேசி ஒலித்தது, சரியாகக் கேட்கவில்லை. அதைத் தொடர்ந்து அந்தத் தகவல் அவசரமாக என்னிடம் வந்து சேர்ந்தது. தமிழக முதல்வர் கலைஞர் பேச விரும்புகிறார் என்று சொன்னார்கள். என்னவோ ஏதோ என்கிற பதற்றம் என்னைத் தொற்றிக்கொண்டது. அவரோடு பலமுறை நான் தொலைபேசியில் பேசியிருக்கிறேன் என்றபோதிலும் அப்போதிருந்த சூழ்நிலையில் என் படபடப்புக்கு ஒரு காரணம் இருந்தது. ஆகஸ்ட் 17 அன்று எனது பிறந்த நாளில் வாழ்த்து பெற கலைஞரைச் சந்தித…

  14. யாழ்ப்பாண நிலைமைகள் குறித்து அறிவதற்கான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இந்தியாவுக்கான பின்லாந்து தூதுவர் அஸ்கோ நும்மெய்னென்னை சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சரத் பொன்சேகா கூறியதாவது: சம்பூரிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கி விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் கள நிலைமைகள் குறித்தும் பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுதந்திரமாக சென்று வரலாம். வடபகுதிக்கான அத்தியாவசிய பொருட்கள் வான் மற்றும் கடல்வழியாக த…

    • 2 replies
    • 1.3k views
  15. அண்ணன் ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நீங்கள் நீண்ட நெடுங்காலமாக சொர்க்கத்துக்கு கடிதம் எழுதி, பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள

    • 2 replies
    • 1.3k views
  16. https://www.youtube.com/watch?v=8piXgc2fws0&t=20

  17. இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர் ; பேஸ்புக் பதிவில் வெளியிட்ட தகவல் இராமாயண வரலாற்றில் புகழ் பெற்ற இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அந்த தேரர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவென்றை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச மக்களின் உதவி இல்லாமல் அங்கே செல்ல முடியாது. இருள் படர்ந்த அதைப் பார்த்தவுடன் மிகுந்த …

    • 10 replies
    • 1.3k views
  18. யாழ்ப்பாணத்து சுகாதார சேவையில் வசூல் ராஜாக்கள்! பாணன் இக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் 'பொங்கு தமிழ் இணையத்திற்காக – பாணன்' என்பதைக் குறிப்பிட்டே வெளியிடும்படி வேண்டப்படுகிறார்கள் கலை கலாசார கட்டுக்கோப்பான யாழ்ப்பாணத்தில் அது கைநழுவத் தொடங்கிவிட்டது என்பது பழைய கதை. 1995 ம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்தை மீட்டாயிற்று என்று சொல்லி ஆக்கிரமித்தபோது அங்கு விரல் விட்டு எண்ணத் தகுந்தவர்களே ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்தனர். ஆனால் 1996 இல் மீள இடம்பெயர நேர்ந்தபோது யாழ்ப்பாணத்தவர் மீண்டும் யாழ் மண்ணிற்கே செல்ல முற்பட்டனர். பின்னர் பாதை திறப்பு அது இது என்று நடந்தபோது யாழ்ப்பாணம் கொஞ்சம் நிமிர தொடங்கியது. வசதி வாய்ப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெருக தொடங்க…

    • 5 replies
    • 1.3k views
  19. முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சர்; ரவூப் ஹக்கீம் விடாப்பிடி முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கடந்த அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா காங்கிரஸ் முதலமைச்சரைக் கொண்டதான கிழக்கு மாகாண சபைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கும் அமைச்சர் ப…

    • 22 replies
    • 1.3k views
  20. யுத்தத்தின் முடிவின் பின்னரான புதுடில்லியுடனான சமன்பாட்டில் தொடர்ந்து சீனா காட்டை விளையாட விரும்பும் இலங்கைக்கு நோபாளத்திலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. நேபாளத்துக்குள்ள இந்தியாவுடனான பிரச்சினையை சீனாவை ஈடுபடுத்தாமல் நேபாளம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என சீன அரசுத் தலைமை கூறியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா கூறியுள்ளார் நேபாளம் தொடர்பில் இந்தியாவினதும் சீனாவினதும் பாதுகாப்பு தொடர்பான பயங்களை தீர்ப்பதற்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை உதவும் என்ற பிரசண்டாவின் கருத்துக்கு பதில் கூறுவதாகவே சீனாவின் அறிவுபூர்வமான இந்தக் கருத்துக் கூறப்பட்டது. இந்தியாவினதும் சீனாவினதும் தலையீட்டின் காரணமாகவே நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கான தீர்வு குழப்பப்படுவதாக ஒரு கருத்த…

    • 4 replies
    • 1.3k views
  21. தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு அங்கு இன்னும் சில நாட்களில் பாதுகாப்பு வலயங்களை நிறுவப் போவதாக இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்னும் ஐந்து நாட்களில் என்ன நடக்கப் போகிறது என அறிந்து கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப்புலிகளின் இடங்களை நோக்கி நெருங்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் படையினர் பொதுமக்களை தவிர்த்து தமது எறிகணை தாக்குதல்களை நடத்துவதில் அதிக சிரமங்களையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்வதாக கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தவேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழீழ விட…

  22. விஜேவீர கொலைக்கும், பிரபாகரன் குடும்பம் கொலைக்கும் உள்ள வித்தியாசம் - விளக்குகிறார் நிமல்கா பெர்னான்டோ [ திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2012, 07:18 GMT ] [ புதினப் பணிமனை ] ஐநா மனித உரிமை பேரவை தீர்மானம் முடிந்த கையோடு நிமல்கா பெர்னாண்டோ சென்னை வந்திருந்தார். அநேகமாக அவரால் இலங்கைக்கு நுழைய முடியாத சூழல் நிலவுவதாக நினைக்கிறேன். ஜூனியர் விகடன் இதழுக்காக அவரை சந்தித்து பேசியதன் முழு வடிவ உரையாடல் இது.... "இலங்கையை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கைக்குள் நுழைந்தால் காலை உடைப்பேன்" என்று இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வாவினால் எச்சரிக்கப்பட்டவர் மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ. ஐநா பேரவையில் உரையற்றி, அமெரி…

    • 1 reply
    • 1.3k views
  23. சனிக்கிழமை , செப்டம்பர் 25, 2010 யாழ். மாவட்டத்தில் விவாகரத்துக்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது என நீதிமன்றப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துப் பெறுபவர்களில் அரச ஊழியர்களே அதிகளவானவர்களாக இருக்கின்றார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றார்கள். இந்த ஆண்டில் இதுவரை விவாகரத்துக்கோரி 46 பேர் யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 123 ஆக இருந்தது. 30 வயதுக்குட்பட்ட இளம் தம்பதியினரே விவாகரத்துக் கோருவதில் முன்னணியில் திகழ்கின்றனர் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. புரிந்துணர்வின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்மை, பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான …

  24. யாழ் குடாநாட்டில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் மகிழ்வைக் கொண்டாடுமாறு படைத்ததரப்பினரால் அனைத்துத்தரப்பினரும் நிர்ப்பந்திக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மராட்சியின் சாவகச்சேரி முதல் கைதடி வரையும் அதேபோன்று கொடிகாமம் வரையான பகுதிகளிலும் வீதிகளில் தேசியக் கொடியினைப் பறக்க விடுமாறும் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறும் மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிய வருகின்றது. இதேபோன்று குடாநாட்டின் வர்த்தகர்கள் பட்டாசுகளை கட்டாயமாகக் கொழுத்தி மகிழச்சி தெரிவிக்க வேண்டும் எனவும் வியபார ஸ்தலங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறும் படையினர் நிர்ப்பந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அவ்வா

    • 1 reply
    • 1.3k views
  25. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற முப்படைகளின் திறமைகளை மதிப்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஆகவேதான் யுத்த நிறுத்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டது. இதிலிருந்து விலகியமை மிகவும் கடினமானது. யுத்தத்திற்கு அர்த்தம் ஒன்றைக் கொடுப்பதற்கே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து வடக்கைக் கைப்பற்றும் எமது பாதையிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. இது பயங்கரவாதிகளின் இறுதி யுத்தம் என மகிந்த ராஜபக்ச மேலும் அங்கு தெரிவித்துள்ளார். tamilwin.com

    • 4 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.