ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143644 topics in this forum
-
"கொழும்பில் தங்கியிருக்கும் அல்லது வசிக்கும் தமிழர்களிடம் அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களையும் அவற்றில் உள்ள பணத்தின் தொகையையும் தெரிவிக்கும்படி வற்புறுத்தும் ஒழுங்குவிதியை பொலிஸார் பலவந்தமாகத் திணிப்பது பெரும் சட்ட மீறலும் அடிப்படை உரிமை மீறலுமாகும்.'' இவ்வாறு நேற்று உயர்நீதிமன்றத்தில் தமிழர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தலைநகரிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழர்கள் வகைதொகையின்றி கைது செய்யப்படுவதை ஆட்சேபித்து இ.தொ.கா. தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மனுதாரர் தரப்பின் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இத்தகவலை நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தினார். மேற்படி வங்கிக் கணக்கு இலக்கங்கள், அவற்றில் உள்ள பணத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை முன்னர் ஸிம்பாப்வேயிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஸிம்பாப்வே ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 1997 ஆம் ஆண்டு ஸிம்பாப்வே பாதுகாப்பு நிறுவனம், இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. 1997 ஆம்ஆண்டு லிபிய கப்பலில் ஸிம்பாப்வே இலங்கைக்கு அனுப்பிவைத்த 32 ஆயிரத்து 400 மோட்டர்கள், நடுக்கடலில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை முகாபேயின் ஸிம்பாப்வே அரசாங்கம் இன்னமும் ஆபிரிக்க நாடுகளுக்கு சட்டவிரோத ஆயுதங்களை விற்பனை செய்து வருவதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 1.2k views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 6, 2010 அண்மையில் மலையகப்பகுதியில் ஒரு போத்தல் சாராயத்தினை பொலிசாருக்கு இலஞ்சமாக கொடுத்து தன் உறவினரை பொலிசாரிடம் இருந்து மீட்டு வந்துள்ளார் மலையக தமிழர். கொலன்கண்ட முடுக்கெல என்ற பிரதேசத்தை சேர்ந்த ஜேசு அன்ரூ என்ற 28 வயது இளைஞரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். இவர் திருமணம் முடித்தவர் மனைவி பிரவச நிலையில் உள்ளார். திரு யேசு என்பவரை பொலிசார் ஆடைகளை முற்றாக களைந்து விட்டு பொல்லுகளால் தாக்கியுள்ளனர். குனியவிட்டு பின்பக்கத்தில் தாக்கியுள்ளனர். பின்னர் மிழகாய் தூளை அவரது ஆண் உறுப்பில் விசிறியுள்ளனர். பின்னர் பொலிஸ் நிலைய சிறையில் தடுத்து வைத்துள்ளனர். இவையெல்லாம் ஒரு சாதாரண விடயத்திற்கே அதாவது இந்த இளைஞர் தொடர்பாக இவருடன்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன்கிழமை, செப்டம்பர் 15, 2010 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் 11.20 மணியளவில் லண்டன் பயணமானதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யுல் 503 என்ற விமானத்தில் பயணமாகியுள்ளார் eelanatham.net
-
- 2 replies
- 1.2k views
-
-
கலிபோர்னியாவிலுள்ள இலங்கைத் தூதர் ஜெஃப் குணவர்த்தனவும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று அண்மையில் ஊடகங்களில் வெளியானது. அப்புகைப்படத்துக்கான செய்தியாக, ஜெஃப் குணவர்த்தன ஒபாமைச் சந்தித்து உரையாடியதாகவும், அச்சந்திப்பின்போது அமெரிக்கா-இலங்கை இடையேயான உறவுகளை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் பற்றிப் பேசப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்செய்கையானது ஜெஃப் குணவர்த்தனவின் கடமை உணர்ச்சியைக் காட்டுவதாக வேறு எழுதப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இப்புகைப்படத்தின் பின்னாலுள்ள உண்மை வெளிவந்துள்ளது. ஒக்ரோபர் 22 ஆம் திகதியன்று, தனது குடியரசுக் கட்சிக்காக நிதி சேகரிப்பதற்காக ஒபாமா கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்குச் சென்றுள்ளார். அங்கு 1000…
-
- 1 reply
- 1.2k views
-
-
போர்க் காலத்தில் இலங்கையின் கல்வியில் முதற்தரமாக இருந்த யாழ்ப்பாண மாவட்டம், தற்போது கல்வியை விட போதைப் பொருள் பாவனையில் முதற்தர மாவட்டமாகப் பதிவாகியுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார். அச்சுவேலி– தம்பாலை இளைஞர் கழகத்தின் அபிவிருத்தி சார் கூட்டம் நேற்று முன்தினம் நிலையத் தலைவர் இ.தனுசன் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது: இன்றைய சூழலில் பிள்ளைகளுக்கு பெற்றோர்தான் நூறுவீத பாதுகாப்பு, பிள்ளைகளைக் கண்காணிக்கத் தவறுவீர்களாக இருந்தால்…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
. Published on May 12, 2015-9:28 am · No Comments மேற்குலக நாடுகளில் உள்ள நீதிமன்றங்கள் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்களை குற்றவாளியாக கண்டு தண்டனை வழங்கும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்து வந்தாலும் விடுதலைப்புலிகளின் நிதி சேகரிப்பும், மீண்டும் ஒரு யுத்தம் என்ற போக்கும் தணிந்ததாக தெரியவில்லை. 2009ஆம் ஆண்டு மேமாதத்துடன் இலங்கையின் வடகிழக்கில் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முற்றாக அழிக்கப்பட்ட போதிலும் சிறிது காலம் மௌனமாக இருந்த மேற்குலக நாடுகளில் உள்ள புலிகள் தற்போது யுத்தத்திற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இலங்கையில் சிங்கள தேசம், தமிழர் தேசம் என்ற இரு தேசங்கள் என்ற கோரிக்கையுடன் அரசியல் நடத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடாக தமது எண்ணத்…
-
- 9 replies
- 1.2k views
-
-
யாழில் சரணடைந்த இளைஞர்களை படுகொலை செய்யத் திட்டம் திகதி: 14.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] யாழ் குடாநாட்டில் சிறிலங்கா மற்றும் அதன் துணை இராணுவக் குழுக்களின் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் மையத்தில் சரணடைந்துள்ள இளைஞர்களை படுகொலை செய்வதற்கு யாழ்குடாவிற்கான சிறிலங்கா இராணுவத் தளபதி தட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சரணடைந்த இளைஞர்கள் தாம் விரும்பினால், அவர்களின் வீடுகளுக்கு திரும்பலாம் என யாழ்ப்பாணத்திற்கான சிறிலங்காவின் கட்டளைத் தளபதி ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளதையடுத்தே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சரணடைந்திருந்து பின்னர் வீடு திரும்பிய சிலர் ஒரு சில தினங்களிலேயே படுகொலை செய்யப்பட்ட நிலையில், படையினரால் ஆபத்தென்று கூறி சரணடைந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தம்புள்ளை புனித பூமியில் ஒருபோதும் பள்ளிவாசல் இருக்கவில்லை: ஹெல உறுமய ரங்கிரி தம்புள்ளை புனித பூமி பிரதேசத்திற்குள் உள்ள பள்ளிவாசல், ஒரு பள்ளிவாசல் அல்ல எனவும் அங்கு பள்ளிவாசல் அமைப்பதற்கு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கூறியுள்ளது. 1962 ஆம் ஆண்டு அப்பகுதியிலிருந்த வர்த்தகர் ஒருவருக்கு கடையொன்றை நிர்மாணிப்பதற்காக காணி வழங்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமய தலைவர் வண. ஒமல்பே சோபித தேரர் கூறினார். 'ஆனால் அவர் அங்கு வீடொன்றை அமைத்தார். சில வருடங்களின் பின்னர், சமய நடவடிக்கைகளுக்காக பிரிதொரு அறையை அமைத்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1982 ஆம் ஆண்டு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தவேளை, அவர் 300 ஏக்கர…
-
- 11 replies
- 1.2k views
-
-
இலங்கையின் நிர்வாகத்தில் தலையிட விசேட குழு? ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013 01:36 இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கீழ் இயங்கும் விஷேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையின் அடிப்படையிலேயே மேற்படி குழுவை நியமிப்பதற்கான யோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி குழுவை இலங்கையில் வைத்தே செயற்படுத்துவதே மேற்குலக நாடுகளின் யோசனையாக உள்ளது என்றும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளி…
-
- 7 replies
- 1.2k views
-
-
குடும்பிமலைக் களிம்பு -சேனாதி- ஒப்பீட்டளவில் விடுதலைப் புலிகளின் செறிவான கட்டமைப்புக்கள் இல்லாத கிழக்கிலே தன் படைகளைப் பரவலாக விரித்து வைத்திருக்கிறது சிறிலங்கா. அதைப் பாரிய படையச் சாதனையாக் காட்டும் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்யும் அதே நேரம், வடக்கையும் கைப்பற்றுவோம் என்று தன் நப்பாசையை வெளியிட்டிருக்கிறார் மகிந்தர். அரச படையினரினதும் விடுதலைப் புலிகளினதும் கொள்கை மற்றும் மூலோபாயங்கள் சார்ந்து அடிக்கடி கைமாறும் இடங்கள் கிழக்கில் பல உள்ளன. அவ்வாறான சம்பவம் ஒன்று இம்முறை மட்டும் ஊதிப்; பெருப்பிக்கப்படுவதன் பின்னணியும் அதைத் தொடர்ந்து கொழும்பு செய்யவிருக்கின்ற நகர்வுகளும் ஆய்வுக்குரியவை. சமர்க்கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது பெரும்பாலான …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா தமிழர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது: பத்மநாதன் தமிழ்நெற் இணையத்தளத்துக்கு கொடுத்த செவ்வி தமிழ்நெற் இணையத்தளத்துக்கு கொடுத்த செவ்வி விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் பாதுகாப்பாக உயிருடன் உள்ளதாகவும், மற்றும் பல மூத்த உறுப்பினர்களும், தலைவர்களும் தங்கள் உயிர்களை கொடுத்தது அல்லது கொல்லப்பட்டார்கள் என்பது மிகவும் துரதிஷ்டவசமானதென்றும் தமிழ்நெற் இணையத்தளத்துக்கு, திங்கட்கிழமை அன்று விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தொடர்பு பொறுப்பாளர், செ. பத்மநாதன் கூறியுள்ளார். மேலும், சிறிலங்கா அரசு இராணுவ வெற்றியை அறிவித்திருந்தாலும், அது ஒரு கூனலான வெற்றியென்பதை சிறிலங்கா அரசு உணரவில்லை. தமிழரின் நம்பிக்கையை சிறிலங்கா அரசு முற்றாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
[size=4]13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்பட்டால் நாட்டில் மீண்டும் மோதல்கள் ஏற்படும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் ரத்துச் செய்யப்படுவதை நான் கடுமையாக எதிர்ப்பேன் என்று அவர் கூறினார். இந்த அரசமைப்புத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, மாகாணசபைகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக கடும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன் மூலம் அந்த மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பது முக்கியமானது …
-
- 4 replies
- 1.2k views
-
-
Posted on : 2007-11-03 ஐ.நா.அதிகாரிகளின் கருத்துகளும் அவற்றைப் புறமொதுக்கும் அரசும் "இலங்கையில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகின்றது. அதனால் விரைந்து செயற்படுங்கள். உடனடியாக நடவடிக்கை ஏதும் எடுங்கள்.'' இப்படி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவையும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலையும் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார் சட்டவிரோத மற்றும் கண்மூடித்தனமான படுகொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல் ஸ்டன். உலகில் மனித உரிமைகள் பேணப்படும் நிலைமை குறித்து ஆராயும் ஐ.நா. பொதுச்சபைக் கமிட்டியின் முன் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கோரியிருக்கின்றார். இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை அவதானிப்பதற்கான ஐ.நா.கண்காணிப்பு அமைப்பு ஒன்று அங்கு நேரடியாகப் பிரசன்னம…
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : 2007-12-24 அரசின் முழு நோக்கமும் மூலோபாயமும் சமாதானத்தை அடைவதற்கு இராணுவத் தந்திரோபாயங் கள் நாடப்படுவது குறித்து, இலங்கைக் கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை தெரிவித்திருக்கிறது. நாளைய நத்தார் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஆயர்கள் தமது கவலையை வெளிப்படுத்தி யுள்ளனர். மனித மாண்புகளும் சம உரிமைகளும் நிச்சயமாக்கப் படாத வரையில் சமய, இன, மொழி ரீதியில் பாரபட்சங்கள் காட் டப்படுகின்ற வரை நாட்டில் ஒற்றுமை, சாந்தி, சமாதானம் போன்றவற்றை எட்டவே முடியாது. சமாதானத்தை அடைவதற்கு, இப்போது நடைபெறும் ஆக்ரோஷமான சண்டைக்குரிய காரணங்கள் முதலில் களை யப்படவேண்டும். ஆனால் கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த நாட்டு அரசியல் தலைவர்கள் அதற்காக எடுத்த முயற்சிகள் அரசியல்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர் தாயகத்தில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் எல்லோரினதும் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி போட்டியிடும் இரு மாவட்டங்களில் திருகோணமலையும் ஒன்று. இந்நிலையில் தமிழ்மக்களிடத்தில் – குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர், ஆய்வாளரிடத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது திருகோணமலை தேர்தல் மாவட்டம். காரணம், அங்கு தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமற் போகப்போகிறது என்ற ஒரு வாதம். கடந்தமுறை மூவாயிரத்துச் சொச்ச வாக்குகளால் ஓர் ஆசனத்தை அதிகமாகப் பெற்றுக்கொண்டது தமிழர் தரப்பு. இந்தமுறை என்னதான் ‘ஒற்றுமை’ப் பூச்சாண்டி காட்டிப் போட்டியிட்டாலும் ஓர் ஆச…
-
- 10 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....e2fe5614f42ba98
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாணத்தின் ஐந்து துறைகளுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஐந்து துறைகளுக்கான தலைவர்களும் பணிப்பாளர்சபை உறுப்பினர்களும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.எம்.பி.அசங்க அபயவர்தன தலைமையில் நேற்று மாலை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்திலேயே இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம், கிழக்கு மாகாண போக்கு வரத்து அதிகார சபையினுடைய தலைவராக ஜீ.கரீதரன், கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவராக எம்.எஸ்.உதுமான் லெவ்வை, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக எம்.எஸ்.சுபை…
-
- 5 replies
- 1.2k views
-
-
வடக்கில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணி குறித்து ஆராயும் போது சர்வதேச நிறுவனங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவி இருக்கலாமென்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித ஆணையானர் நவநீதன் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பு இணையத்தளமான தமிழ் நெட் வெளியிட்டிருந்த தகவல்களும் பெரும்பாலும் ஒன்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படைகளை சிறிலங்கா அரசாங்கம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் அமெரிக்கா வலியுறுத்தியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் புதிய நிரந்தரக் கடற்படைத் தளம் ஒன்றை நிறுவியுள்ளது. ‘எஸ்.எல்.என்.எஸ் புவனேக‘ என்ற பெயரில் கிளிநொச்சி மாவட்டம், முழங்காவில் பிரதேசத்தில் உள்ள நாச்சிக்குடாவில் இந்த நிரந்தர கடற்படைத்தளம் திறக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க நேற்று முன்தினம் இந்தக் கடற்படைத்தளத்தை அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில், உருவாக்கப்பட்ட நாச்சிக்குடா கடற்படைப் பிரிவு கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறிலங்கா பாதுகாப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிங்கள ஊடகத்தில் வந்த செய்தி தினக்குரல் பத்திரிகையில் இருந்து ஆனந்தசங்கரியா இப்படி? தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி புதிய கதை ஒன்றைச் சொல்லுகிறார். இம்முறை அவர் கூறும் கதை யாதெனில், வடக்கும், கிழக்கும் வேறாகப் பிரிக்கப்படக் கூடாது என்பதாகும். அவருடைய இந்தக் கூற்று பல வருடங்களுக்குப் பின்னர் வீ.ஆனந்த சங்கரியும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் சமமான கருத்தை உடையவர்களாக இருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் காட்டுவதாகவே எந்த ஒருவருக்கும் தென்பட இடமுண்டு. வீ.ஆனந்தசங்கரி நீண்ட காலமாக தமிழ் மக்களின் குடியியல் உரிமைகளுக்காகத் தோன்றிப் பேசி வந்த ஒரு அரசியல் வாதியாகும். புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் குடியுரிமைகளை குரூரமான…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசையும் புலிகளையும் மீண்டும் பேச்சுக்குச் செல்ல வற்புறுத்துகிறது நோர்வே! அந்நாட்டுப் பிரதமர் டில்லியில் வற்புறுத்து இலங்கையின் இன நெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமேயில்லை என வலியுறுத்தியிருக்கும் நோர்வேப் பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சுகளை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவிற்கான தனது விஜயத்தின் போது நோர்வே பிரதமர் புதுடில்லியில் வைத்துச் செய்தியாளரிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை நெருக்கடிக்கு இராணுவ வழிமுறையூடாகத் தீர்வு சாத்தியமென நோர்வே கருதவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில வருட மோதல்களுக்குப் பின்னர் இருதரப்பும் மீண்டும் பேச்சு மேசையில் சந்திக்கவேண்ட…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஆட்கடத்தல் காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் மஹஷோன் பலகாய (பிசாசுப்படை) எனும் அமைப்பு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் வியாழனன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த அச்சுறுத்தல் கடிதங்கள் தனிப்பட்ட முறையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது எனச் சபாநாயகரிடம் முறையிட்டுள்ளனர். எனினும் இக்கடிதத்தை சபையில் வாசிக்க அரச தரப்பினர் அனுமதியளிக்க மறுத்ததுடன் சபாநாயகரும் அனுமதியளிக்க மறுத்து விட்டார். வாய்மொழி விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் சபாநாயகர் தினப்பணிகளை ஆரம்பிக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் கடந்த இரு தசாப்தகாலமாக நடைபெற்றுவந்த உள்நாட்டுப்போரில் வெற்றிகொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு இப்போது சமாதானத்தை வெல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தியிருக்கிறார் நோர்வே சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான முன்னாள் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம். இலங்கை அமைதி முயற்சிகள் குறித்துச் செய்யப்பட்ட மீளாய்வு அறிக்கை நேற்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது. நோராட் அமைப்பு இந்த அறிக்கை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மைக்கல்ஸன் கல்வி நிறுவகத்தின் தலைவர் குன்னர் சேர்போ மற்றும் ஆபிரிக்கக் கற்கைகளுக்கான லண்டன் பாடசாலையின் தலைவர் ஜோன் தன் குட்ஹேன்ட் ஆகியோரால் நீண்ட ஆராய்வுகளுக்குப் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
1-அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம் 2-அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு. 3-சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது. 4-எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு ப…
-
- 2 replies
- 1.2k views
-