ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
31 குண்டு துழைக்காத வாகனங்கள் இறக்குமதி: பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதா? செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சிறீலங்கா அரசாங்கம் 31 குண்டு துழைக்காத வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இந்த வாகனங்கள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பைக் கருதிற்கொண்டு வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆயுததாரியும் முதலமைச்சருமான பிள்ளையானுக்கு குண்டு துழைக்காத வாகனம் வழங்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன கிழக்கு மாகாணசபையின் ம…
-
- 2 replies
- 1.2k views
-
-
இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது: மகிந்த திகதி: 30.05.2010 // தமிழீழம் இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது ஆயுதரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒப் இந்தியா செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போரின் போது இந்தியா, எவ்வாறு ஆதரவளித்தது எனக்கேட்ட கேள்விக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். ஆம், யுத்தத்தின் போது தார்மீக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது என்ற பதிலின் மூலம் ஜனாதிபதி இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ( எனினும் இந்தியா, இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிக்கவில்லை என்றே தொடர்ந்தும் கூறிவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை! குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் கருத்துக்களை வெளியிடுவதாக குற்றச்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் பிரதேசத்தில் வைத்து ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavann…
-
- 11 replies
- 1.2k views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2008, 08:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 31 படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் மற்றும் படைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: பாலமோட்டையில் இருந்து மும்முனைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளைத் தொடங்கினர். இதில் படையினர் இர…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் வட மாகாணத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துவரும் நிலையில்,யாழ்ப்பாணத்தில் இராஜதந்திரப் பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதென்ற இந்தியாவின் தீர்மானமானது தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். யாழ்.குடாநாட்டில் 5 பிரதான வீதிகளை அகலமாக்கும் பணியில் சீன ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.அத்துடன், மின்சார விநியோக நடவடிக்கைகளிலும் சீன ஒப்பந்தக்காரர்கள்ஈடுபட்டிருக்கின்றனர். யாழ்ப்பாணம்காங்கேசன்துறை வீதி,யாழ்ப்பாணம்பலாலி வீதி,யாழ்ப்பாணம்மானிப்பாய் வீதி,யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி,யாழ்ப்பாணம்ஊர்காவற்றுறை வீதி ஆகிய பிரதான வீதிகளே சீனர்களால் திருத்தப்படுவதாக அண்மைய செய்தியொன்று தெரிவிக்கிறத…
-
- 13 replies
- 1.2k views
-
-
செய்திக்குறிப்பு : தமிழீழ தேசிய அட்டை நாதம் ஊடகசேவை - தகவல்துறை அமைச்சகம் 22 சனவரி 2011 புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம், தாங்கள் ஒரு இறைமையுள்ள தேசிய இனம் என குறியீட்டுரீதியாக அடையாளப்படுத்தும், தமிழீழத் தேசிய அட்டையை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கி வருகின்றது. தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள் முதல் இந்த அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு வருகின்றது. அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் முதல்கட்டமாக தேசிய அட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றது. ஏனைய நாடுகளில் விரைவாக விரிவுபடுத்தப்பட இருக்கின்றது. அமெரிக்காவில், தமிழீழ தேசிய அட்டை உத்தியோகபூர்வமாக கை…
-
- 1 reply
- 1.2k views
-
-
போரில் தாம் ஒருபோதும் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பு மறுத்துள்ள நிலையில், கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்ட ஒருவரை நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவரின் சாட்சியத்தை ஏபி செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் போரின் போது, வெடிக்காத கிளஸ்டர் குண்டினால் காயமடைந்த ஒருவரைத் தான் கண்டதாக அந்த மருத்துவப் பணியாளர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். http://www.puthinapp...?20120427106086
-
- 2 replies
- 1.2k views
-
-
சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், வடக்கு மக்களுக்கு உதவி! சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பெரும்பாலான ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கத் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=166158
-
- 14 replies
- 1.2k views
-
-
Published By: Vishnu 18 Mar, 2025 | 03:53 AM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) புத்தளம் - கற்பிட்டி நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவுப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக, குறிப்பாக …
-
-
- 17 replies
- 1.2k views
-
-
யாழ். குடாநாட்டின் யுத்தத்தினால் இடம்பெற்ற அழிவுகளைப் பார்வையிடுவதற்காக அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. பலாலி இராணுவதினரினால் அமெரிக்க இராணுவ உயர்நிலை அதிகாரிகள் யாழின் கோட்டைப்பகுதி, யாழ்.நூலகப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு யுத்தத்தின் அழவுகள் தொடர்பான விளக்கங்களையும் அளித்துள்ளனர். அமெரிக்க இராணுவ உயரதிகாரி கப்டன் டானி ஜேம்ஸ் தலைமையில் ஜந்து உயரதிகாரிகள் யாழில் பலபாகங்களைப் பார்வையிட்டுள்ளனர் என பலாலி இராணுவ தலைமையகம் தெரிவித்தது. http://www.seithy.com/breifNews.php?newsID=52221&category=TamilNews&language=tamil
-
- 5 replies
- 1.2k views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தரும்படி, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வடக்கு,கிழக்கு மக்களால் ஜனநாயக முறைப்படி பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் தாம் இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட சிறிலங்கா அரசினால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும், சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குற…
-
- 8 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ரீ.எம்.வீ.பீ உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். இலங்கை நேரம் இன்று மாலை 6.30 அளவில் களுவாஞ்சிக்குடி டிப்போவுக்கு அருகாமையில் ரீ.எம்.வீ.பீயினரால் நடத்தப்படும் மதுபானச் சாலைக்கு முன்பாக ஏனைய உறுப்பினர்களுடன் கூடி நின்ற வேளை பிரவேசித்த இனம்தெரியாதோர் இவரைச் சுட்டுக் கொன்றதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக் கொல்லப்பட்டவர் ராஜன் என அழைக்கப்படும் சாதுரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயம் அடைந்த ஏனைய 3 உறுப்பினர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 1.2k views
-
-
''ஈழப் போரில் மாண்ட போராளிகளின் காலடி மண்ணெடுத்து திலகமாக இட்டுக் கொண்டு''.. கருணாநிதி சென்னை: ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், அமைச்சரவையிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்தோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில் வாசித்த அறிக்கை: ஈழத் தமிழர்ப் பிரச்சனையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக செல்வா காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும்- தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும்- தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவு…
-
- 5 replies
- 1.2k views
-
-
வவுணதீவு பொலீசார் படுகொலை: அதிரவைக்கும் விசாரணைத் தகவல்கள்! மட்டக்களப்பு வவுணதீவு பொலீசார் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியபடி உள்ளது. குறிப்பாக பொலீசார் கொலை செய்யப்பட்ட விதம் தொடர்பாக சில திடுக்கிடும் தகவல்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் மூலம் வெளியாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அதாவது படுகொலை செய்யப்பட்ட தினேஸ் என்ற தமிழ் பொலீஸ் உத்தியோகத்தரை கொலையாளிகள் சுட்டுப்படுகொலை செய்ததன் பின்னரே கைகளை பின்னால் கட்டி குப்புரப் படுக்கப் போட்டு தலையில் சுட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலையாளிகள் இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளை இராணுவம் கைகளை பின்னால் கட்டி தலையில் சுட்டுக்கொன்றதைப் போன்றே குறித்த பொலீசார் படுகொலை…
-
- 3 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்ற கால எல்லை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், விரைவில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா படைத்தரப்பின் பேச்சாளர் உதய நாணயக்கர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.2k views
-
-
திருமலை நகரை அண்மித்த பிரதேசங்கள் - சைனாபேயில் மக்கள் பதட்டத்தில் - கடற்படையினர் விபரம் திரட்டல்:- 12 ஜனவரி 2011 திருகோணமலையின் நகரை அண்மித்த நோத் குறொஸ் வீதி, காபர் றோட், பெரியகடைப் பக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று திடிரெனச் சென்ற கடற்படையினர் மக்கள் குடியிருப்பு பகுதிகளை படம் பிடித்ததுடன் வீடுகளின் உரிமையாளர்களின் விபரம், காணி உறுதிகள், குடியிருப்போரின் விபரங்கள் என்பவற்றை பெற்றுச் சென்றதாக பிரதேசத்தில் இருந்து ஜீரீஎன்னிற்கு தகவல் கிடைத்துள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் சில வீட்டு உரிமையாளர்களிடம் குறித்த பிரதேசத்தில் இருந்து வேறு இடம் செல்வதற்கு தயாராக இருக்குமாறு சில கடற்படைச் சிப்பாய்கள் அறிவுறுத்தியதாக ஜீரீஎன்னிற்குத் தெரிய வருகிறது. எனினும் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் மூன்று லட்சம் பேரின் நிலைமை மிகவும் துயரமானதாக உள்ளது எனவும் அவர்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்ணிவெடிகள் அகற்றப்படல், வீடுகள் மீண்டும் மீளமைக்கப்படுதல்,, சீர்குலைந்துள்ள உட்கட்டமைப்பைச் சீர்படுத்துதல் போன்ற பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தாலும் இடம்பெயர்ந்தோரை தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் காலக்கெடுவை அரசு தள்ளிப்போடுவதற்குரிய காரணம் புரியவில்லை எனவும் ஆயர் கூறியுள்ளார். இந்த இடம்பெயர்ந்த மக்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் அரசு அமைத்துள்ள ஆறு முகாம்களில் வாழ்வதாகவும், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இவர்க…
-
- 14 replies
- 1.2k views
-
-
கொள்ளுப்பிட்டி படப்பிடிப்பில் கேட்ட குண்டுச் சத்தங்களால் பெரும் பதற்றம் [03 - August - 2007] - டிட்டோ குகன் - கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற திரைப்படப்பிடிப்பில் குண்டுச் சத்தங்கள் கேட்கவே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதாக மக்கள் மத்தியில் பெரும் பீதியேற்பட்டது. இந்தப் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு காட்சி படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பம்பலப்பிட்டி சந்தியைக் கடந்து சற்றுத் தூரத்தில் கொள்ளுப்பிட்டி பகுதியில் காலி வீதியில் இப்படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதன்போது அங்கு இராணுவ சீருடை அணிந்தவர்களும் வாகனங்களும் நின்று கொண்டிருந்தன. படப்பிடிப்பின்போது அப்பகுதியில் பாரிய வெடிச்சத்தங்கள…
-
- 1 reply
- 1.2k views
-
-
பஸ்ஸில் பணம் கொடுக்காமல் ஓசி பயணம் செய்த இளைஞனிடம் பணத்தை நடத்துநர் கேட்டபோது ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் வேப்பொத்துவ என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் சமன் கொடித்துவக்கு (29 வயது) என்ற இளம் பஸ் நடத்துநரே கொலை செய்யப்பட்டவராவார். மாத்தறையில் இருந்து வலஸ்முல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ்ஸில் ஏறிய இந்த நபர் ரிக்கெட் பெறாது இடைவழியில் இறங்க முயன்றார். அதன்போது நடத்துநர் அவரிடம் ஏன் ரிக்கற் எடுக்கவில்லை என்று பணத்தைக் கேட்டபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு ஏனைய பயணிகளால் விலக்குப் பிடித்து சமாதானப்படுத்தப்பட்டனர். நடத்துநர் மாலை வேலை முடிந்து வீடு செல்லும்போது வேப்பொத்துவ என்ற இடத்தில் அவரை மறித்த சந்தேக …
-
- 0 replies
- 1.2k views
-
-
எவருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழ்த் தேசியக்கூட்டமைபுக்கே வாக்களித்து நமது தமிழ் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும்: இன்று நம்மிடம் மிஞ்சி இருப்பது தன்மானம் ஒன்றுதான் என முழங்கிய ஆனந்த சங்கரி ... [Monday, 2011-07-18 08:24:10] தமிழ் மக்கள் அளிக்கும் தீர்ப்பை அறிவதற்குக் கூட அமைச்சர்களும் சிங்களக் கட்சியினரும் இங்கு இருக்கார் நிலைமையை விளக்குகிறார் ஆனந்தசங்கரி. அன்றும் இன்றும் என்றுமே சோதனைகளும் வேதனைகளும் ஏற்பட்ட போதெல்லாம் தமிழ் மக்களுடன், தமிழ் மண்ணில், நிலைத்து நின்றவர்கள் என்றும் இருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான். இன்று தற்காலிக கூடங்களை அமைத்துக் கொண்டு இங்கே தங்கி இருக்கும் அமைச்சர்களும், சிங்களக் கட்சியினரும் தேர்தல் முடிவுகளைக் கேட்கக் கூட…
-
- 8 replies
- 1.2k views
-
-
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதும் ,தாக்கி விரட்டுவதும் - இந்திய இலங்கை கூட்டுப் போர் பயிற்சி என்று உங்களுக்குத் தெரியுமா..?! ஈழதேசம் பார்வையில்..! பத்து வருடங்களாக கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை கொன்று அழிப்பது மற்றும் தாக்கி விரட்டி அடிப்பது என்பது தற்செயலான விசயம் அல்ல, கடந்த பத்து வருடங்களாக, பா.ஜ.க., ஆட்சியில் அமர்ந்த பொழுதுதான் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தாக்குவது என்று தொடங்கி மெல்ல மெல்ல கொல்வதற்கும் அவர்களின் மீன் பிடி கருவிகள் மற்றும் படகுகள் போன்றவற்றை சேதப்படுத்துவது, பிடித்த மீன்களை மீண்டும் கடலில் கொட்டுவது, எஞ்சிய மீன்களை கொள்ளை அடித்துக்கொண்டு போவது என்று தொடங்கினார்கள். இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தாய்லாந்து சென்றிருக்கிறார். அங்கு அவர் தனது 58ஆவது பிறந்தநாளை நேற்றுமுன்தினம் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் கொண்டாடினார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ரணில் விக்கிரமசிங்க தனது துணைவியார் மைத்ரேயி மற்றும் கட்சியின் மூத்த பிரமுகரும் தனது நெருங்கிய நண்பருமா கிய மாலிக் சமரவிக்கிரம ஆகியோருடன் பாங்கொக் சென்றிருக்கிறார்கள்
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ். மாநகர முதல்வரின் மற்றொரு மோசடி அம்பலம்; பதவி இழந்த உறுப்பினருக்குச் சம்பளம் செல்கிறது பிரசுரித்தவர்: Sukkran May 22, 2011Add a comment யாழ். மாநகரசபையில் இடம்பெற்ற மற்றொரு மோசடி அம்பலமாகி உள்ளது.கடந்த 5 மாதங்களாகச் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு சட்டத்துக்குப் புறம்பாக மாதாந்த அலவன்ஸ் தொடர்ச்சியாக அனுப்பி வைக்கப்பட்டு வருவதைக் கணக்காய்வுத்திணைக்களம் கண்டறிந்துள்ளது. மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின் பணிப்புரையின் பேரிலேயே, கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கொமர்ஷல் வங்கிக் கிளைக் கணக்கு இலக்கம் ஒன்றுக்குப் பணம் அனுப்பப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபையின் ஆளும்கட்சி உறுப்பினர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தேசிய கீதம் தமிழில் இனி வரும் நாட்களில் இசைக்கப்படுமா? என்று கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடக அமைச்சரும், அரசின் பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெலவிடம் கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன. ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விகளும் அமைச்சரால் சொல்லப்பட்ட பதில்களும் வருமாறு " கேள்வி:- இனி வரும் காலங்களில் தேசிய கீதத்தை தமிழில் இசைக்கமுடியுமா? பதில்:- அரசமைப்பில் எப்படி உள்ளதோ அப்படியே அமுல்படுத்தப்படும். அதை விடுத்து தேசிய கீதத்தை பாடிக்கொண்டு நடனம் ஆட முடியாது. கேள்வி:- சிங்களத்தில் மாத்திரமே தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறி உள்ளாரே? பதில்:- அது சரி. அவரால் சிங்களத்தில் மட்டுமே இசைக்க முடியும். அதனால் அவர் அவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
1 அதே நிலவு. அதே சூரியன். அதே கடற்கரை. அதே மணல்மேடுகள். அதே நட்சத்திரங்கள். ஆனால் இப்போதங்கே... அதே காற்றில்லை. அதே நாட்களில்லை. அதே இரவுகள் இல்லை. அங்கிருந்த அதே மனிதர்களில்லை. அந்த மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்களோ எச்சங்களோ எதுவும் இல்லை. அவர்களை நினைவுகூரக்கூடிய எந்தச் சுவடும் அங்கில்லை. இப்போதங்கே நடந்து கொண்டிருப்பது Opration Wipe. எல்லாவற்றையும் அழித்தல். எந்தச் சுவடும் மிஞ்சிவிடாமல் அழிக்கும் நடவடிக்கை. போர்க் காலத்தில் நடந்த குற்றங்களை ஆதாரப்படுத்தக்கூடிய எந்தச் சுவடும் அங்கே மிஞ்சிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையின் விளைவான நடவடிக்கை. இந்த நடவடிக்கைக்காக ஏராளம் துருப்புகள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. 2009 மே மாதத்தில் இந்தப் பகுதியில…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-