ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
பிள்ளையான் மீதான வழக்கை கைவிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பாக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மீது இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையை கைவிட சட்டமா அதிபர் திணைக்களம் முடிவுசெய்துள்ளது. அதன்படி பிள்ளையான் மீதான வழக்கு விசாரணையை கைவிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட பிள்ளையானுக்கு கடந்த நவம்பர் மாதம் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். தம…
-
- 0 replies
- 668 views
-
-
உண்ணாவிரதம் கைவிடப்பட்டாலும் ஹர்த்தாலை முழுமையாக கடைப்பிடியுங்கள் - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார். அத்தோடு "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்" எனவும் இ.அனுசன் மேலும் தெரிவித்துள்ளார். இன்று (11.01.2021) யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இ.அனுசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.... யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட…
-
- 0 replies
- 345 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது…
-
- 9 replies
- 1.3k views
-
-
யாழ்பல்கலைகழகம் ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரியது இல்லை – சரத்வீரசேகர Digital News Team யாழ்பல்கலைகழகம் என்பது ஒரு சமூகத்திற்கு மாத்திரம் உரிய பகுதியோ சொத்தோ இல்லை என அமைச்சர் சரத்வீரசேகர டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். யாழ்பல்கலைகழகம் சட்டத்தை பின்பற்றும் அனைவருக்கும் உரியது என அவர் தெரிவித்துள்ளார் . அப்பாவி பொதுமக்களை நினைகூறுகின்றோம் என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூறுவதற்கு எவருக்கும் அனுமதிவழங்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk✂️
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு - கிழக்கு தழுவிய முழு கதவடைப்புக்கு தமிழ்த் தேசியத் தரப்பு கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், வடக்கு - கிழக்கு சிவில் சமூகத்தினர் மற்றும் மதத் தலைவர்கள் கூட்டாக குறித்த அழைப்பை விடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கான கலந்துரையாடல் கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. இ…
-
- 8 replies
- 1.2k views
-
-
அரசியலை முன்னிறுத்தி தான் செயற்பட தயாரில்லை எனவும் அவ்வாறு செய்வதை எதிர்கட்சிகள் விளங்க எடுத்துக்கொள்ளாமல் செயற்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறினார். தனக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதாகவும் தேவை என்றால் அந்த இரண்டாவது பக்கத்தையும் காட்டத்தயார் என அவர் மேலும் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் கிராமத்துடனான கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாவது கட்டம், அம்பாறை உஹன பகுதியில் இன்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த நல்லாட்சி காலத்தில் எதிர்கட்சியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கள்களை நாம் கண்கூடாக பார்த்தோ…
-
- 18 replies
- 2.3k views
- 1 follower
-
-
ஹரீன்பெர்ணான்டோவிற்கு ஏதாவது தீங்குநேர்ந்தால் ஜனாதிபதியும் அரசாங்கமுமே அதற்கு பொறுப்பேற்கவேண்டும்- சஜித் Digital News Team ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அம்பாறையில் ஆற்றிய உரைக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் விதத்தில் கோத்தபாய ராஜபக்ச ஆற்றிய உரை குறித்தே எதிர்கட்சி தலைவர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் உரை பாரதூரமானது ஜனநாயக நாட்டில் நிகழக்கூடாதது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார். எனது தந்தை உட்பட ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்த பிரபாகரனின் இறப்பு குறி…
-
- 0 replies
- 398 views
-
-
யாழ்.சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி திறப்பு யாழ்.சிறைச்சாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட விருந்தினர் விடுதி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்புல் தெனியவினால் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள உத்தியோகத்தர்கள் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரும்போது பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த விடுதியானது நேற்று (சனிக்கிழமை) இரவு, சம்பிரதாயபூர்வமாக, சிறைச்சாலைகள் ஆணையாளரால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. ‘யாழ்.லகூன்’ என்ன பெயரிடப்பட்டுள்ள குறித்த விருந்தினர் விடுதி, ஏனைய சிறைச்சாலைகளிலுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போது குறித்த விடுதியினை பயன்படுத்த முடியும் எனவும் …
-
- 8 replies
- 790 views
-
-
ஒரே நாடு என்பது OK ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள். - மனோ கணேசன் January 10, 2021 வடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? யாழ்ப்பாண மாணவர்கள், ஊழியர்கள், உறவுகள் நினைவு கூற பல்கலைக்கழ பூமியின் உள்ளேயே நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபியை உடைத்து அழித்ததன் மூலம், உயிர் வாழும் மற்றும் உயிர் இழந்த தமிழ் இலங்கையர்களை இந்த அரசு அவமானப்படுத்தி உள்ளது. யுத்தத்தை நாம் மறக்க வேண்டும். அதுபற்றி விவாதம் இல்லை. இரண்டு பேச்சு இல்லை. ஏனெனில் இந்த யுத்தம் இன்னொரு நாட்டுடன் நடைபெறவில்லை. அது உள்நாட்டு பிரச்சினையாகும். அதை மறந்து முன்னாலே செல்வோம். பிரச்சனை இல்லை. …
-
- 0 replies
- 743 views
-
-
யாழ்.பல்கலைக்கழக இலட்சினையைமாற்ற முற்படுவதை தடுத்து நிறுத்துக-துணைவேந்தரிடம் கோரிக்கை 26 Views யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்கள், அண்மையில் தயாரித்த ரி-சேர்ட் இல் பல்கலைக்கழகத்தின் நந்திச் சின்னம் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான ந.பொன்ராசா மின்னஞ்சல் மூலம் மேற்படி கோரிக்கை கடிதத்தை துணைவேந்தருக்கு அனுப்பிவைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்…
-
- 21 replies
- 2.9k views
-
-
(ஆர்.யசி) தென்னாபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மாடுகளுக்கு பரவும் வைரஸ் வகையொன்று இலங்கையிலும் பரவிக்கொண்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அதிகளவிலான கறவை மாடுகள் இந்த வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கடந்த சில வாரங்களாக மாடுகள் மற்றும் ஆடுகள் இவ்வாறான நோய் தாக்கத்திற்கு உள்ளாகிக்கொண்டுள்ள காரணத்தினால் இது குறித்து கால்நடை வளங்கள் மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் சரத் ஹெட்டியாராச்சியிடம் வினவியபோது அவர் கூறுகையில், ஆபிரிக்க நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் பரவும் ஒரு வகையான வைரஸ் தற்போது இலங்கையில் பரவிக்கொண்டுள்ளத…
-
- 0 replies
- 444 views
-
-
திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க படிமம் ...? சிங்கள மொழி ஊடகங்கள் தகவல். Madawala News January 10, 2021 திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்க படிமம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ள சிங்கள இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன பல சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட நிலப்பரப்பில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது எனவும், அண்மையில் நடத்திய புதிய ஆய்வில் இந்த வி…
-
- 3 replies
- 1k views
-
-
ஜே.வி.பி கிளர்ச்சிக்கு ஒரு நீதி , தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு நீதியற்ற அடக்குமுறையா -பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் Digital News Team கனகராசா சரவணன்) இலங்கை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி ஒன்றுக்குப் பல தடவை இந்த நாட்டு முப்படைகளுடன் போரிட்டு முப்படைகளின் வீரர்கள் பலரை, முப்படைகளின் குடும்பங்களைக் கொன்றொழித்து, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்த, இலங்கை அரசை சில காலம் நடுங்க வைத்த , இலங்கை அரசால் பயங்கரவாதிகள் என்று முத்திரையிடப்பட்ட ஜே.வி.பி யினருக்கு ஒரு நீதி தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு நீதியற்ற அடக்குமுறையா என பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) என்று கேள்வி எழுப்ப…
-
- 0 replies
- 338 views
-
-
எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும் - பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் January 10, 20216:38 am எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல அமைதி சமாதானத்தின் நினைவுச் சின்னங்களேயாகும். அந்த நினைவுத் தூபி இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதற்கு யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் எடுத்த முடிவு, காலத்திற்கு தேவையான முடிவாகும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பாராட்டு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இர…
-
- 4 replies
- 508 views
-
-
பகிரங்மாக மன்னிப்புக் கோருகிறோம்! யாழ் பல்கலை ஊழியர் சங்கம் அறிவிப்பு எமது பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(08) இரவு இடம்பெற்ற, “இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்தகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயமாகும் என பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். குறித்த ஊடக அறிக்கையில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்கு விடுக்கப்பட்ட பணிப்புரை வெளிப்படையான முறையில் பரவலான கலந்தாலோசனை மூலம் அணுகப்பட்டிருக்க வேண்டுமென நாம் கருதுகின்றோம். இந்தப் பணிப்புரை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு துணைவேந்தரால் பணிக்கப்பட்டவர்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ள உணர்வலைகளை நாம் ஆழமா…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழ் மக்களின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி நேற்று இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார் உரிய அனுமதி பெறப்படாமல் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட காரணத்தினாலேயே குறித்த தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ள கருத்தை சுட்டிக் காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட காலத் திட்டமிடல் இன்றி குறுகிய காலச் சிந்தனையுடன் மேற்கொள்ளுகின்ற தீர்மானங்கள் எந்தளவு அவமானத்தையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்து…
-
- 22 replies
- 1.5k views
- 1 follower
-
-
4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 47ஆவது நினைவு அஞ்சலி நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. யாழ். முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏ…
-
- 2 replies
- 645 views
-
-
வடக்கில் வியூகம் வகுக்கும் கருணா! முதல் அறிவிப்பை வெளியிட்டார் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையத் தயாராக உள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஸ்தாபகரும், பிரதமரின் நேரடி ஒருங்கிணைப்பாளருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, நாங்கள் பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்து பல வெற்றிகளை கண்டுள்ளோம். இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் எமது கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம். இம்முறை வடக்கில், முதன் முறையாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எமது கட்சி போட்டியிட…
-
- 22 replies
- 2.5k views
-
-
அரசின் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது- தர்மலிங்கம் சித்தார்த்தன்! January 9, 2021 அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இலங்கையில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டது தொடர்பில் தனது கண்டனங்களை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் . அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி மக்களை நினைவுகூர அமைக்கப்பட்டது. இதை இரவோடிரவாக அரச இயந்திரம் இடித்தழித்துள்ளது. இது மிக மோசமான நடவடிக்கை. தமிழ் மக்களின் ஆன்மாவை உலுக்கும் இந்த நடவடிக்கைக்கு எமது கடுமையான கண்டனங்களை தெ…
-
- 0 replies
- 333 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநகாரிக செயல் என்றும், இதற்கு தனது பலத்த கண்டனத்தை வெளியிடுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெ ரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்ச் சகோதரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நினைவுகூரும் வகையில், இந்த நினைவுத்தூபி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் இத்தனை வருடங்களாக இருந்து வந்த இந்த நினைவுத்தூபியை இப்போது அவசர அவசரமாகத் தகர்த்து, அதனை முழுமையாக அழிக்க வேண்டுமென்ற தீய நோக்கம் ஏன் ஏற்பட்டது? இ…
-
- 1 reply
- 751 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி வடகிழக்கின் பல்வேறு பகுதிகளில் பிரார்த்தனை வாரம் ஆரம்பம் 21 Views தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பிரார்த்தனை வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து குறித்த பிரார்த்தனை வாரத்தினை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் நிகழ்வானது இன்று மாலை மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் அருள்மிகு ஸ்ரீஆலையடிப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்ப…
-
- 1 reply
- 480 views
-
-
தமிழ், முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதத்தை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது - மங்கள (நா.தனுஜா) தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருக்கிறார். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத்தூபி அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நேற்று இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டது. அதனைக் கண்டித்து யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினாலும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால் கண்டனப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. …
-
- 1 reply
- 582 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் யாழ்ப்பாணம் பல்கலை கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இரவோடு இரவாக இடிக்கப்பட்டது உலக தமிழர்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார் https://thamilkural.net/newskural/news/112173/
-
- 2 replies
- 600 views
-
-
(ஆர்.ராம்) நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அதிகாரப்பகிர்வு விடயத்தில் இருப்பதை தக்கவைத்து பாதுகாப்பதாக அனைத்து தமிழ் தரப்பினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ்ப் பிரதிநிதிகளிடத்தில் வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ்த்தரப்பிடையே அரசியல் மற்றும் கொள்கையளவில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், அதிகாரப்பகிர்வு விடயத்தில் மட்டுமாவது முதலில் இருப்பதை தக்கவைப்பதற்காக அனைவரும் பேதங்களை ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அறியமுடிகின்றது. விசேடமாக, மாகாண சபைகள் முறைமை நீடிக்க வேண்டும் என்பதிலும், தேர்தல் நடத்தப்பட வேண்டு…
-
- 11 replies
- 988 views
-
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதுடன் படகு இயந்திரத்தையும் செயலிழக்கச் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த அப்புலிங்கம் போதன் (வயது-49) என்ற மீனவர் தனியே தன்னுடைய படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்றும் அவ்வேளை படகில் வந்த இந்திய மீனவர்கள் போதன் மீது சரமாரிய தாக்குதல் நடத்தியதுடன், அவருடைய படகு இயந்திரத்தின் இணைப்புக்களைத் துண்டித்து அதனைத் தூக்கிச் செல்ல முயன்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர், தனியே வந்ததால் விட்டுச் செல்கிறோம், வேறு நபர்களும் வந்திருந்தால் கொலை செய்த…
-
- 25 replies
- 2.6k views
-