கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3082 topics in this forum
-
வசந்திக்கு மனசெல்லாம் ஒரே படபடப்பு. இந்த இரவுக்குள்ள, இருட்டுக்குள்ள என்ன நடக்கப் போகுதோ என்ற ஏக்கமும் பீதியும் அவளிடம் குடி கொண்டிருந்ததே படபடப்புக்கு காரணமாயிருந்தது. "வசந்தி.. ரெடியா இரும்மா.. துணிவோட இரு.. அப்பதான் இந்த உலகத்தில பெண்கள் நாங்கள் நினைச்சதைச் சாதிக்கலாம்." சக தோழியின் வார்தைகள் தெம்பாய் காதில் இறங்கினும் படபடப்புத் தீரவே இல்லை. அதற்குள்.. அவனிடமிருந்து சிக்னல் வந்தது. இஞ்ச வாங்கோ என்று வாயசைக்காது கைகளால் சைகை செய்து வசந்தியை அழைத்தான். ஆரம்பத்தில் தயங்கியவளாய் பின் துணிவை வரவழைத்துக் கொண்டு அவனை நோக்கி நகர்ந்து சென்றாள். அவளின் தயக்கத்தை உணர்ந்தவனாய், என்ன பயப்பிடுறீங்கள் போல... முதல் அனுபவம் எல்லோ.. ஆரம்பத்தில கொஞ்சம் படபடப்பும…
-
- 52 replies
- 17.5k views
-
-
இது என் வாழ்வில் நான் எழுதும் இரண்டாவது கதை என்று சொல்லப்படக் கூடிய ஒரு பதிவு. முதலாவது சரிநிகரில் 21 வயதில் வெளியானதன் பின் மீண்டும் இரண்டாவதை 37 ஆவது வயதில் எழுத முயல்கின்றேன். கதை எழுதுவதற்குரிய எழுத்து ஆற்றல் இல்லை என்பதே கதை எழுதாமல் விட்டதன் காரணம். இது சர்வநிச்சயமாக இலக்கிய தரமாக இருக்கவே இருக்காது. ஒரு மர்ம நாவல் எழுதும் மனதையே என்றும் கொண்டிருந்தேன் என்பதும் நான் கதை எழுதாமல் விட்டதற்கான முக்கிய காரணம். இதுவும் ஒரு மர்ம கதை அல்லது நாவல் தான். ஆனால் எல்லாமே கற்பனை என்று சொன்னால் எவரும் நம்பப்போவதில்லை.... ------------------------------------------------------------------------------------------------------------- தோற்ற(ம்) விம்பங்கள்: …
-
- 35 replies
- 3.1k views
-
-
எலிப்பொறி - சிறுகதை வாஸந்தி - ஓவியங்கள்: ஸ்யாம் ஷீலுவுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. கடகடவென்று சிரிக்க வேண்டும்போல் இருந்தது. இந்த அடுக்குமாடி வளாகத்தில் வசிக்கும் மேடம்கள் சரியான தொடைநடுங்கிகள் என அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. உண்மையில் அவர்களை முதன்முதலில் பார்த்தபோது, அவளுக்குப் பிரமிப்பாக இருந்தது. அவர்களது குட்டை முடியும் கால்சராயும் அங்ரேஜி மொழியும்... அவர்கள் ஏதோ வேற்றுக் கிரகக்காரர்கள் எனத் தோன்றும். அவர்கள் வீட்டு ஆண்கள் வெளியில் கிளம்புவதற்கு முன்னர், இவர்கள் தங்கள் வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள். ‘நா கிளம்புறதுக்குள்ள வேலையை முடிச்சுடணும்’ எனக் கண்டிப்புடன் சொல்வார்கள். அவர்கள் சொல்வதை மீறுவது தெய்வக் குற்றம்போல்…
-
- 1 reply
- 2.7k views
-
-
குறையொன்றுமில்லை! பாலகிருஷ்ணன் குட்டி போட்ட பூனை போல இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். ஆயிற்று கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஓட்டமாய் ஓடிவிட்டது. ரிடையர்டு ஆன பிறகு பென்ஷன் பணம் அருகில் உள்ள வங்கிக் கணக்கில் சேர்வதற்கான என்னென்ன வேலைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து முடித்தாகிவிட்டது. இனி ஒரு வேலையும் கிடையாது. காலையில் எழுந்தவுடன் காப்பி சாப்பிட வேண்டியது, தினசரிகளைப் படிக்க வேண்டியது, குளிக்க வேண்டியது. சில ஸ்தோத்திரங்களையும் சொல்ல வேண்டியது. பிறகு சாப்பிட வேண்டியது. மீண்டும் சாப்பிட வேண்டியது. தூங்க வேண்டியது. மாலையில் நடைப்பயிற்சி, பிறகு வீடு, சாப்பாடு, தூக்கம்....மூன்…
-
- 2 replies
- 686 views
-
-
-
டேய் தம்பி எப்படியிருக்கிறாய் என்று என்னுடைய முதுகை தட்டினார் ஒருத்தர். திரும்பி பார்த்தேன். எங்கன்ட கந்தர் அண்ணே எப்படி சுகம். கனகாலம் கடைப்பக்கம் காணவில்லை, எங்கே போனயிர்ந்தனீங்கள்?நான் ஊருக்கு போய்விட்டு வந்தனான் உனக்கு சொல்லி போட்டு போகலாம் என்றுதான் இருந்தனான் ஆனால் டிரவல்ஸ்காரன் மலிவாக ஒரு டிக்கட் போட்டுத்தாரன் உடனே வெளிக்கிடுங்கோ என்றான் அதுதான் உனக்கு சொல்லாமல் வெளிகிட்டனான் கோபிக்காதையடா.... எப்படி யாழ்ப்பாணம் இருக்கு என்றதுதான் தாமதம் ,மனுசன் சிட்னியிலிருந்து வெளிக்கிட்டு திரும்பி சிட்னிக்கு வந்த கதை முழுவதும் ஒன்றும்விடாமல் சொன்னார்.அண்ணே நே ரம் போகுது பிறகு கதைப்போம் என்று இடைக்கிடை நான் சொன்னாலும் மனுசன் என்னை விடவில்லை,முழுக்கதையும் சொல்லி முடித்துவிட்டா…
-
- 13 replies
- 2.7k views
-
-
மம்மி..... கதைப்புத்தகத்தில் கலந்திருந்த சுஜாதா நிமிர்ந்தாள் மம்மி நான் ஜெயிச்சுட்டேன் மம்மி கையில் கப்போடு கட்டிப்பிடித்த பாலாவை வாரியணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். கண்கள் கலங்கின. என் செல்லக்குட்டி நீ எப்போதும் ஜெயிக்கணும்டா. படிப்பிலும் எந்த போட்டியாகினும் நீ வெற்றி பெறணும் என் செல்லத்தங்கம் என வாரியணைத்தாள். நான் பெரிய சம்பியனாகினால் என்ன மம்மி தருவீங்க என கண்கள் அகல விரித்து பாலா தாயை அன்போடு கேட்டான். எதுவானாலும் தருவேன்டா எனதன்பு செல்லமே என சுஜாதா வாஞ்சையுடன் கட்டியணைத்து முத்தமழை பொழிந்தாள் என்ன மம்மியோடு கொஞ்சல் என கேட்டுக்கொண்டே வந்த ரமேஷை கண்டதும் செல்லப்பைய்யன் பாலா தனது வெற்றியை தந்தயோடும் தாயோடும் சேர்த்து களித்தான். இருவரும் அவனை மாறி…
-
- 18 replies
- 2.9k views
-
-
மனிதனும்... மனிதமும்! பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது ஊர் கடற்கரையை ஒட்டிய இடம். எனது வீட்டிற்கும் கடலுக்கும் துல்லியமாக 3 கி.மீ. எனக்கு எந்தவித நோய், தொந்தி, தொப்பை எதுவும் கிடையாது. பெற்ற பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து விட்டு ஓய்வூதியத்தில் நிம்மதியான வாழ்க்கை. நான் தினம் காலை 4.45 க்கு எழுந்து முகச்சவரம் செய்து, பல் துலக்கி, கழிப்பறை இயற்கை உபாதை வேலையை முடித்து விட்டு சரியாய் 5.20 மணிக்கு பொல பொலவென்று விடியும் பொழுதில் என் தெரு திருப்பத்தில் இருக்கும் சாலையில் கிழக்குப் பக்கம் த…
-
- 0 replies
- 584 views
-
-
நின்று கொல்லும் தெய்வம் வந்து விட்டது ஆழ்வாப்பிள்ளை ஆனைவிழுந்தான் சந்தியில் இருந்தது அந்த மயானம். மயானத்தை ஒட்டி இருந்த வீதி எப்பொழுதும் அமைதியாகவே இருக்கும். அந்த வழியாக தனியாகப் போகும் போது ஒரு வித அச்சம் இருக்கும். ஆனாலும் நண்பர்களோடு வல்லிபுரக் கோவிலுக்குப் போகும் பொழுது அந்த மயானத்துக்குள் ஒரு தடவை போய் வலம் வந்து விட்டே போவோம். வாய்க்கரிசி போடும் பொழுது வீசப் படும் அரிசியோடு கலந்திருக்கும் ஐந்து, பத்து சத நாணயக் குற்றிகளோடு, சில சமயங்களில் ஐம்பது சத நாணயங்களும் யார் கண்களிலும் படாமல் எங்களுக்காக ஒளித்துக் காத்திருக்கும். வல்லிபுரக் கோவில் கேணியில் குளித்த பின்னர் மரத்தடிகளில் ஆச்சிகள் சுட்டுக் கொண்டிருக்கும் சூடான தோசைகளை புசிக்கவும், துரைசிங்கத்தின் தமை…
-
- 53 replies
- 5.5k views
-
-
-
- 13 replies
- 2.1k views
-
-
பருப்பு கோமகன் குரங்கு அப்பம் பிரித்த கதையாக சமாதானம் பேசவந்தோம் என்று அந்நியப்படைகள் ஈழ மண்ணில் மூலை முடுக்கெல்லாம் பரவியிருந்த காலத்தில் எல்லரோரையும் போல பருப்பின் வாழ்கையிலும் இரண்டு பெரிய சூறாவளிகள் அடித்து பருப்பின் வாழ்கையையே புரட்டிப்போட்டன. கோண்டாவிலிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெடியளுக்கு கதிரவேலர் ஓர் கடவுளாகவே இருந்தார். அந்த நேரத்தில் அமைதிப்படைகள் நடத்தும் சுற்றிவளைப்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகும் பெடியளை, கதிரவேலர் தனது ஆங்கில அறிவாலும், பிரைஜைகள் குழுவின் தலைவர் என்ற முறையிலும் அமைதிப்படை முகாம்களுக்கு சென்று கைதான பெடியளை மீட்டு வருவதுண்டு. இந்த தொடர்பால் அமைதிப்படைக்கும் கதிரவேலருக்கும் ஓர் சிநேகபூர்வமான தொடர்புகள் இருந்தது. கதிரவேல…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]அண்டைக்கு, லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் தொடங்கிற நாள்! விடியக் காலமை எட்டு மணிக்கே, தம்பையர் பள்ளிக் கூட வாசல்ல பிரம்போட நின்று கொண்டிருந்தார்! அவற்றை வீடும், பள்ளிக்கூடத்திற்குப் பின்னால தான் இருந்தது! நாங்கெல்லாம், லீவில போனப் பிறகு, அந்த ஊரிலுள்ள ஆட்டிக்குட்டியளெல்லாம், படிக்க வெளிக்கிட்டுதுகள் போல. பள்ளிக்கூடம், முழுவதும், ஒரே ஆட்டுப் புழுக்கையும், மூத்திர மணமுமாக் கிடந்தது. வயது போன ஆக்களும் வந்து படிச்சிருக்கினம் போல கிடக்கு! கரும்பலகையில இருந்த படங்கள் சிலது, கோரியாவடி வெளிச்ச வீட்டில கீறிக்கிடந்த படங்கள் மாதிரிக் கிடந்தது! வாத்தியாரும், அந்த நாளையில நல்லாப் படிச்சவரா இருந்திருக்க வேண்டும்! அவற்றை வீட்டுச் சுவரெல்லாம், கொழும்பு விவேகானந்த சபையில குட…
-
- 15 replies
- 1.2k views
-
-
யாக்கை சிறுகதை: பாஸ்கர் சக்தி ஓவியங்கள்: ஸ்யாம் குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை. 'ஆபீஸ் வாசல்ல பாத்தியா குமார்... ஒருத்தன் ரௌடி மாதிரி நிக்கிறான். முதுகுல ஏதோ பொருளைச் சொருகிவெச்சிருக்கான்’ என்றால்கூட சிரித்தபடியே, 'ஆமாமா... நானும் பாத்தேன். யாரைப் போட வந்திருக்கான்னு தெரியலியே’ என்பான். அந்த அளவுக்கு கேனத்தனமான ஹ்யூமர்சென்ஸ். அன்றும் உற்சாகமாகத்தான் இருந்தான். ஒரு வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியர். சக உதவி ஆசிரியர்களில் பலருக்கு இருக்கும் டென்ஷனை, இவன் முகத்தில் பார்க்கவே முடியாது. அன்று இன்னும் ரொம்ப உற்சாகமாக இருந்தான். காரணம், காலையில் ஆபீஸ…
-
- 1 reply
- 2.2k views
-
-
1911-யில் தஞ்சை ஜில்லாவில் நடந்த மர்மம்! | 21 அக்டோபர் 1911 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தஞ்சை ஜில்லாவில் நடந்த மிகப்பெரிய மர்ம சம்பவம் தான் தனபகாயம் மரணம்!. வைத்தியநாத பிள்ளையின் மருமகளான தனபகாயம் எப்படி படுகொலை செய்யப்பட்டார், கொலையாளி எப்படி சிக்கினார் தெரியுமா? தொடரும்..
-
- 1 reply
- 769 views
-
-
என்னை நினைத்தால் எனக்கே வெறுப்பாய் இருக்கிறது நானா இப்படி நடந்து கொண்டேன்...அன்று ஞாயிற்றுக்கிழமை நேரம் கழித்து எழும்பி என்ன இண்டைக்கு மத்தியானம் சாப்பிடலாம் என யோசித்து கேபாப் கடையில கேபாப் வாங்கி சாப்பிடலாம் என தீர்மானித்தேன்[ஒரு கிழமையாய் கேபாப் சாப்பிட ஆசையாய் இருந்தது]...நான் இருக்கும் பகுதியில் துருக்கிகாரர்கள் தான் அதிகம்...மதிய நேரம் வந்ததும் சாப்பாடு வாங்குவதற்கு முதல் கொஞ்ச நேரம் நடப்போம் எனத் தீர்மானித்து நடக்கத் தொடங்கினேன்...நடந்து கொண்டு இருக்கையில் இரு பெண்கள் ஒரு குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து எனக்கு நேரெதிரே வந்து கொண்டு இருந்தவர்கள் அநேகமாக ரூமேனியர்களாய் இருப்பார்கள் என்னைக் கண்டதும் ஓடி வந்து ஒரு கை சங்கிலியைக் காட்டி அதை வாங்கிக் கொள்ளுமாறு கேட்டார்…
-
- 23 replies
- 2.9k views
-
-
-
ஆசை ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான். பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஆளுமை லலிதா மிகவும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது பன்னாட்டு வங்கியின் அலுவலகம். நீண்டு கிடந்த அந்த அறை முழுவதும் வாடிக்கையாளர் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆண்களும் பெண்களுமாக அலுவலக ஊழியர்களும் பணி மும்முரத்தில் தம்மை மறந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். மதியநேரம் வருவதற்குள்ளாகவே பரபரப்பு மெல்ல அடங்கி மாலை நேரம் நெருங்கிய போது அலுவலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தது. அவ்வலுவல் அறையில் தனக்குண்டான இருக்கையில் அமர்ந்து பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த இளங்கோ அலுவலகம் வெறுமையாவதை உணர்ந்து, நேரத்தை அறிந்து கொள்ள இடது கையின் மணிக்கட்டினைப் பார்க்க அந்த இடம் வெறுமையாக இருந்தது. கைக்கடிகாரம் என்னவாயிற்று? அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. நேற்றிரவு…
-
- 19 replies
- 4.5k views
-
-
அகதி-கோமகன் எனது கதை : பாரிஸ் பெருநகரின் வடகிழக்குப் புறத்தில், ஏறத்தாழ அறுபது மைல்கள் தொலைவில், பிரான்ஸின் சர்வதேச விமான நிலையத்தின் அருகே செவ்ரன் என்ற வ்போ (beau sevran) செவ்ரன் நகர் அமைந்து இருந்தது. இந்த நகரில் வசிப்பவர்களை ‘செவ்ரனைஸ்’ (Sevranais) என்று சொல்வது வழக்கம். போ செவ்ரனை சரியாகத் தமிழ்ப்படுத்தினால் அழகிய செவ்ரன் என்று வரும். ஆனால் இந்த நகரில் அநேகர் குடியேற்றவாசிகளாகவே இருந்ததினால் அழகிற்கும் சுத்த பத்தங்களுக்கும் இந்த நகர் எட்டியே நின்றது. இன்றும்கூட செவ்ரன் தொடருந்து நிலையத்தின் முன்னால் குடியேற்ற வாசிகளினால் விற்கப்படுகின்ற சோளம்பொத்திகளும் இறைச்சியில் வாட்டி விற்கின்ற சான்விச்சுகளும் பிரபலம். அதில் இருந்து வெளியாகும் தீய்ந்த புகையினால் சு…
-
- 13 replies
- 2.6k views
-
-
Thursday August 2, 2007 கௌசல்யா மட்டுவில் ஞானக்குமாரன் அவள் ...! இவளைப் போல பெண் மணிகளை ஊர் உலகிலே கண்டிருப்பீர்களா ? இவளைப் பற்றி பேசும் போதெல்லாம் இப்படியே எனக்கு எண்ணத் தோன்றும். எனது முதல்ப் பார்வையிலே எந்த விதமான அலைகளையும் என் கவனக் குளத்திலே அவள் ஏற்ப்படுத்தவில்லை ஆனால் பின்னொரு நாளிலே இந்தக் குளத்திலேயே சுனாமியை வரவளைத்தவள். ஆனாலும் இவள் வித்தியாசமானவள். யாராவது அவளுக்காக பரிந்து பேசினால்க் கூட அதைப்பற்றி எள்ளளவும் அக்கறையும் பட மாட்டாள.; அதே போல சினம் வந்து அவள் மீது யாராயினும் சுடு சொல் கொண்டு திட்டினாலும் கூட எக் குறையும் படமாட்டாள். என்னடா இவள் பாலுக்கும் கள்ளுக்கும் பாகுபாடு தெரியாமல் எல்லோரையும் நம்ப…
-
- 4 replies
- 1.6k views
-
-
யாழ் போதனா வைத்தியசாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற அந்தக் காலை வேளை.. சாரண இயக்கத்தின் பணியின் நிமித்தம்.. நானும் அங்கு. அங்கே இருந்த ஒரு வாங்கில்.. அந்த அம்மா. கவலை தோய்ந்த முகம். முடி கலைந்து முகத்தில் படர்ந்திருக்கிறது. அழகான அந்த நெற்றில் இருந்த குங்குமப் பொட்டுக் கலைந்து வியர்வையில் கலந்து வழிந்து நெற்றியில் குங்குமக் கோடுகள். பார்க்க கவலையாக இருந்தது. என்ன தான் பிரச்சனை என்று கேட்பமே.. ஏதேனும் உதவி தேவைப்படுமோ என்று நினைத்து அணுகினேன் அந்த அம்மாவை. ஏம்மா.. இப்படி தனிய யோசிச்சிட்டு இருக்கிறீங்க. என்ன முகம் எல்லாம் வாடிப் போய் சோகமா இருக்கு. என்ன பிரச்சனை.. ஏதேனும் உதவி தேவையாம்மா.. என்று பேச்சுக் கொடுத்தது தான் தாமதம். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்…
-
- 7 replies
- 1.5k views
-
-
“படிச்ச மனோ வந்து நிற்கின்றான் ,இரவு மாக்கூசுக்கு வா” கதைத்த வேறொன்றும் நினைவில்லை படிச்ச மனோ என்ற சொல்லை தவிர. எட்டாம் வகுப்பில் இருந்து A/L வரை என்னோட படிச்சவன் இந்த படித்த மனோ. எவருக்கும் அடங்காத ஆனால் மிக ஆழுமையுள்ள ஒரு பிறப்பு.முதலாம் பிள்ளை என்பது O/L வரை அவனுக்கான இடம்.அதை இன்று உலகம் பூராக இருக்கும் யாழ் இந்து டாக்குத்தர்களோ,எஞ்சினியர்களோ எத்தனையோ பகீரத பிராயத்தனம் பண்ணியும் அந்த அவனுக்கான இடத்தை மாற்ற முடியவில்லை. ஒரு போல் பொயின்ற் பென், ஒரு கொப்பி, வாராத தலைமயிர், காக்கிகாற்சட்டை, பட்டன் பூட்டத சேட் இதுதான் அவனின் அடையாளம். இரண்டு மனோக்கள் எங்கள் செற்றில் இருந்ததால் நல்லா படிக்கும் இவன் படித்த மனோ .மற்றது மொக்கு மனோ .படிப்பிற்கும் இவனுக்கும் வெகுதூரம்,வீட்ட…
-
- 20 replies
- 3.4k views
-
-
கெளுத்தி மீனும் கெப்பர்த் தவளையும் காலை நேரச் சந்தடியில் மூழ்கியிருந்தது, புல்லுக் குளம்! சுற்று வட்டாரத்துப் பூச்சிபுழுக்களும் புல்பூண்டுகளும் புதுநாளின் வரவையொட்டிச் சில்லிட்டுச் சிலிர்த்திருந்தன. பறவைகளும் விலங்குகளும் பசிக்குணவு தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. கரையோரமாக நீரில் மிதந்தபடி, தினவெடுத்த தோள்களுடன் தண்டால் எடுப்பதுபோலப் பாவனை செய்துகொண்டிருந்த தவளையை, கெளுத்தி மீனொன்று எதேச்சையாகக் கண்டது. “பெரியவர் தேகாப்பியாசம் செய்கிறார் போலும்.” பேச்சுக் கொடுத்தது, கெளுத்தி. “நானென்ன மாமரத்திலிருந்து மாங்காயா பிடுங்குகிறேன்? பார்த்தாலே தெரியவில்லை?” செருக்குடன் உரத்த குரலில் உறுமியது, தவளை. “தெரியுது தெரியுது …….. பெரியவரின் புஜபல …
-
- 4 replies
- 962 views
-
-
கெட்ட குடி! இன்று காலையில் எழுந்ததிலிருந்து எத்தனை தடவைதான் பாக்கியம் சாமியறைக்குட் சென்று தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை வணங்கிவிட்டாள். இதற்குமுன் எத்தனையோ தடவைகள் நடந்துபோன சம்பவங்கள் எல்லாம் அவள் மனதில் அலையலையாக வந்து திரும்பிக்கொனண்டிருந்தன.படலையருகில் நின்று நோட்டமிட்டுக்கொண்டிருந்த பாக்கியம் சலித்துப் போனவளாய் மீண்டும் சாமியறைக்குட் செல்கின்றாள். "அப்பனே பிள்ளையாரே! இந்தத் தடவையெண்டாலும் எந்தத் தடங்கலுமில்லாமல் இந்த வரன் அமைஞ்சி என் மகள் கீதாவோட வாக்ழ்கைக்கு ஒரு வழி பிறக்க நீதானப்பா துணை செய்ய வேணும்" என்றிவ்வாறாக பிரார்த்தித்துக்கொண்டாள் பாக்கியம். மீண்டும் படலையண்டைச் செல்கின்றாள். வீதியில் சென்று தன் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பார்வையைச்செலுத்துகின்றாள்.ஏம…
-
- 2 replies
- 878 views
-
-
ஈழமும் புலமும்(புலம்பெயர் வாழ்வும்) | ஈழத்தில் வாழ்ந்த கோ(கா)லம் பகுதி 01: http://karumpu.com/archives/217 பகுதி 02: http://karumpu.com/archives/212 பகுதி 03: http://karumpu.com/archives/206 பகுதி 04: http://karumpu.com/archives/199 பகுதி 05: http://karumpu.com/archives/194 பகுதி 06: http://karumpu.com/archives/178 பகுதி 07: http://karumpu.com/archives/173 பகுதி 08: http://karumpu.com/archives/170 பகுதி 09: http://karumpu.com/archives/166 பகுதி 10: http://karumpu.com/archives/161 பகுதி 11: http://karumpu.com/archives/154 பகுதி 12: http://karumpu.com/archives/149 பகுதி 13: http://karumpu.com/archives/307 பகுதி 14: http://karumpu.com/archives/…
-
- 0 replies
- 755 views
-