Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. வியாபாரத்தில் தர்மம் பார்க்கலாமா? http://www.muthukamalam.com/images/2021/vegetablesaleswomen.jpg தெருவொன்றில், ஒரு பெண் கீரை விற்றுக் கொண்டு சென்றாள் . வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிட்டு, "ஒரு கட்டு கீரை என்ன விலை...?" என்று கேட்டாள். "ஐந்து ரூபாய்" என்றாள் கீரைக்காரி. “ஐந்து ரூபாயா...? மூன்று ரூபாய்தான் தருவேன்... மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டுப் போ" என்றாள் அந்தப் பெண்மணி. "இல்லம்மா... அந்த விலைக்கு வராதும்மா" என்றாள் கீரைக்காரப் பெண். “அதெல்லாம் முடியாது. மூன்று ரூபாய்தான்...” பேரம் பேசினாள் அந்தத் தாய். பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தப் பெண் கூடையை எடுத்துக் கொண்டு சிறித…

  2. தமிழில் எத்தனையோ வரலாற்றுப் புதினங்கள் இருந்தாலும் 67 ஆண்டுகளாகத் தன்னுடைய இடத்தை விட்டு அகலாமல் இருப்பது கல்கியின் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனைப் படித்தவர்கள் மது குடித்த வண்டுகளைப் போல அதன் தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதாக வெளிவந்துவிட முடியாது. நாவல் தொடர்பான விஷயங்களைத் தேடவைக்கும், படிக்கவைக்கும் சக்தி அந்த நாவலுக்கு இருக்கிறது. அப்படியொரு தேடுதல் பயணத்தை மேற்கொண்டு, வித்தியாசமான அனுபவங்களோடு திரும்பியிருக்கிறார்கள் நான்கு தோழிகள். ஆசிரியர் ஜெயபிரியா ஆதிமுருகன், பட்டயக் கணக்கர் நித்யா சீதாராமன், யோகக்கலை நிபுணர் பத்மா கணபதி, மனிதவள அதிகாரி தீபா நவீன் ஆகியோர் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான தோழிகள். ஜெயபிரியா திருவண்ணாமலையிலும் மற்றவர்கள் சென்னையிலும் வசி…

    • 1 reply
    • 742 views
  3. அ.முத்துலிங்கம் விருது சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்குப் போயிருந்தேன். பலவிதமான பரிசுகளும், விருதுகளும் வழங்கினார்கள். எல்லாமே மகிழ்ச்சியான விசயம்தான்.ஒருவரைப் பாராட்டுவது எப்போதுமே வரவேற்கப் படவேண்டிய நிகழ்ச்சிதான். ஒருவருக்கு அவருடைய அதீத வணிக வளர்ச்சியைப் பாராட்டி விருது வழங்கினார்கள். சென்ற வருடம் அவருடைய லாபம் 3 மில்லியன் டொலர் மட்டுமே. நடப்புவருடம் அவருடைய லாபம் 10 மில்லியன் டொலர். ஒரு வருடத்திலே லாபத்தை மூன்று மடங் காகப் பெருக்கியிருக்கிறார். அசுர சாதனை. நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்தான். இப்படியான வணிக மேதைகளைப் பார்க்கும்போது மெலிண்டாவையும், பில் கேட்சையும் நினைத்துக் கொள்வேன். உலகத்திலேயே அதிகசெல்வம் சே…

    • 1 reply
    • 1k views
  4. Started by கிருபன்,

    விருந்தா – ஜி. விஜயபத்மா கைலாசத்திற்கு போகும் வழியெல்லாம் விஷ்ணுவுக்கு குழப்பமாகவே இருந்தது .. “என்றுமில்லாமல் எதற்க்காக பார்வதி தன்னை அழைக்கவேண்டும். :” என்ற சிந்தனையினூடே ,,எதுவோ தவறாக நடக்கப்போகிறது என்ற கலக்கம் அவருள் தோன்றியது . கைலாசத்தில் பார்வதி ஒரு இடத்தில் உட்காராமல் இங்கும் அங்கும் நடந்தவாறே இருந்தாள் .. அவள் நிலைகொள்ளாமல் தவிக்கிறாள் என்பதை அவள் நிலை உணர்த்தியது . விஷ்ணுவைப் பார்த்ததும் கண்களில் கலக்கத்துடன் பார்த்தாள் . எனக்காக இதை செய்வியா என்ற கேள்வியும், கெஞ்சலும் அவள் முகத்தில் விரவி இருந்தது . அன்பு தங்கையின் முகத்தைப் பார்த்ததுமே அவள் எதை யாசிக்கிறாள் என்பது விஷ்ணுவுக்கு புரிந்தது .அவர் மிக தயக்கத்துடன் பார்வதியை ஏறிட்டார் . அவர் பேச துவங்…

  5. Started by நவீனன்,

    விருந்து! குத்து விளக்கு வடிவில் சீரியல் செட், மஞ்சள், பச்சை வண்ணத்தை சிதறிக் கொண்டிருக்க, அதன் பக்கத்தில் வணக்கம் சொல்லும் வளையல் அணிந்த பெண் கைகள் இரண்டு அழகாய் ஜொலித்துக் கொண்டு இருந்தன. இரண்டு புறமும் அழகாய், அடர்த்தியான வாழை மரங்கள் கட்டப்பட்டு இருக்க, அதன் உச்சியில் தென்னை குருத்து கட்டப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் நடப்பட்ட பந்தக்காலின் உச்சியில், மஞ்சள் துணியில் நவதானிய மூட்டை புஷ்டியாக காட்சி தந்தது. வாசல் முழுக்க தென்னை தடுக்கு வேயப்பட்டு இருக்க, அந்த விசாலமான இடத்தில், 'இன்ஸ்டென்ட்' நட்பு கிடைத்த சின்ன குழந்தைகள் ஓடிப்பிடித்தும், ஒளிந்தும் விளையாடிக் கொண்டு இருந்தன. வாச…

    • 1 reply
    • 1.1k views
  6. விரும்பிக் கேட்டவள் எழுதியவர் : எஸ்.ராமகிருஷ்ணன் ஓவியம் : எஸ்.இளையராஜா ''அப்பா உன் பாட்டு டி.வி-யில போடுறான், அம்மா உன்னைக் கூப்பிடுறா...'' என்று நித்யா வந்து கூப்பிட்டாள். அவள் சொல்வதற்கு முன்பாகவே அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கியிருந்தேன். 'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்’ என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் ஒரு இளைஞன் பாடிக்கொண்டு இருந்தான். ஸ்ரீனிவாஸோடு பொருந்தவில்லை என்றபோதும், அந்த இளைஞன் பாடலை அனுபவித்துப் பாடுகிறான் என்பது புரிந்தது. ஒவ்வொரு முறை அந்தப் பாடலைக் கேட்கும்போதும் மனம் கனத்துவிடுகிறது. பல நேரங்களில் என்னை மீறி நான் அழுதுவிடுவதும் உண்டு. 'சினிமா பாட்டைக் கேட்டு யாராவ…

  7. விற்பனைக்கு அல்ல... டவுன் பஸ் அந்த நகைக்கடைக்கு ஐம்பது அடி முன்பே பயணிகளை இறக்கி விட்டது. லக்ஷ்மி தனது கையில் சுருட்டி வைத்துக் கொண்டிருந்த மஞ்சள் பையைக் கைகளில் இறுக்கி வைத்தபடி கீழே இறங்கினாள். அது தீபாவளி சீசன் என்பதால் கூட்ட நெரிசலில் ஜேப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அவள் கையில் சுருட்டி வைத்திருக்கும் மஞ்சள் பை அவளுடைய முழு வாழ்வின் கனவு. அதனை அத்தனை எளிதில் பறிகொடுக்க அவள் தயாராக இல்லை. அந்த நகைக் கடையை இதே வீதியில் கடந்து செல்லும்போது பலமுறை கவனித்திருக்கிறாள். அவள் சமையல் வேலைக்குச் செல்லும் இரண்டு மூன்று வீடுகளில் அந்த வீட்டு மனிதர்கள் அந்தக் கடையின் மகாத்மியத்தைப் பற்றிக் கூறும்போது செவி …

    • 1 reply
    • 1.1k views
  8. விமல் போத்தலை ஓப்பின் பண்ணச் சொன்னதும் சற்றுக் குனிந்து முன்னாலிருந்த 'ரெமி மார்ட்டின்' போத்தலை எடுத்துத் திறந்து இரண்டு கிளாஸிலும் பாதியளவுக்குக் கொஞ்சங் குறைவாக விஸ்கியை ஊற்றினான். "மச்சான் உனக்கு ஏற்ற மாதிரி கோக் மிக்ஸ் பண்ணடா" என விமலிடம் சொன்னவன்... தனது கிளாஸிற்குள் நாலைந்து ஐஸ்கட்டிகளை மட்டும் எடுத்துப் போட்டுக்கொண்டான். அப்படிக் குடிப்பதுதான் அவனது வழக்கமாயிருந்தது. தனது கிளாஸிற்குள் கோக்கைக் கலந்தபடியே... "அஞ்சலிக்கும் உனக்கும் என்ன மச்சான் நடந்தது...?" என அவனைப் பார்க்காமலேயே கொஞ்சம் தாழ்ந்த குரலில் பேச்சை ஆரம்பித்தான் விமல். அவன் அவ்வாறு கேட்டதும், வழக்கமான 'சியர்ஸ்' எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் தனது கிளாஸை எடுத்து வாயில் வைத்து உறிஞ்சியபடியே வ…

  9. [08] அஞ்சலி எங்கே உட்கார்ந்திருக்கின்றாள் என்று ஒரு பார்வையை விட்டபடி... அந்த கொஃபி சொப்பிற்குள் நுழைந்த இருவரும் அஞ்சலியும் றிஷானாவும் இருக்கும் இடத்தை நெருங்கவும்... அவனும் விமலும் வருவதைப் பார்த்த அவர்கள் இருவரும் எழுந்து ஹாய் என்று புன்னகையுடன் வரவேற்றார்கள். விமலுக்கு வாய் சும்மா கிடக்காமல்.... மச்சான் நீ 'வாத்தி' எண்டுறதை இவையள் இன்னும் மறக்கேலப் போல கிடக்கு... என அவனுக்கு மட்டும் கேட்கக்கூடியமாதிரி கிசுகிசுத்தான். இது எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாத அவன்... "ஹாய்... ஹலோ..! இவன் என்னுடைய பெஸ்ட் பிறண்ட் விமல்" என்று விமலை அறிமுகப்படுத்தியவன் புன்னகைத்தபடி உட்கார... விமலும் ஒரு "ஹாய்... ஹலோ " சொல்லிவிட்டு அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்…

    • 48 replies
    • 10.7k views
  10. [13] 'துவாரகா'...... இவனது நல்லதொரு சிநேகிதி. அவன் கொழும்பு வந்த காலத்திலிருந்துதான்... அவனுக்கும் விமலுக்கும் துவாரகா அறிமுகமாகியிருந்தாள். அவளது துடுக்குத்தனமான பேச்சும் , சில வேளைகளில் 'ஆம்பிளைப் பெடியள்' போல அவள் செய்யும் குறும்புகளும்.... துவாரகாவை ஒரு "பெண் சிநேகிதி" என்று வேறுபடுத்தி நினைக்காத அளவுக்கு அவர்களுக்குள் ஒரு எண்ணத்தினை ஏற்படுத்தியிருந்தது. "அடியே... நீ ஆம்பிளைப் பிள்ளையாய் பிறந்திருக்க வேண்டியனி.!!! தப்பித் தவறி... பெட்டையாய்ப் பிறந்திட்டாய்" என்று சொல்லுவான். கொஞ்சம் குண்டாக இருப்பாள். அதனாலோ என்னவோ நல்லா சாப்பிடுவாள். அவளது தாய் தந்தை இருவருமே வாய்பேச இயலாதவர்கள். ஒரே ஒரு அண்ணா. அவர் அப்பொழுது ஒரு பிரபலமான தனியார் தமிழ் வானொலியில் …

    • 46 replies
    • 9.1k views
  11. [17] போனை வைத்துவிட்டு உட்கார்ந்தவனின் நெஞ்சம்.... இப்பொழுது மிகவும் கலங்க ஆரம்பித்தது. அவளுக்கு வீஸா கிடைத்ததை அறிந்ததும்... இன்னும் சில நாட்களில் அஞ்சலி தன்னை விட்டு தூரமாக பிரிந்து செல்லப் போகின்றாள் என்பதனை அவனால் தாங்கிக்கொள்ள இயலாமல் எண்ணங்கள் அல்லாடியது. "போக வேண்டாம் என்று சொல்லுவமோ..." என்றுகூட ஒருகணம் யோசித்துவிட்டு, "இல்லையில்லை... அவள் படிக்கட்டும்....! என்ர சின்னத்தனமான ஆசைக்காக அவளின்ர படிப்பைக் குழப்பக் கூடாது" என முடிவெடுத்தவனால்... அவளின் பிரிவினைத் தாங்கும் மனநிலைக்கு இலகுவில் வர முடியாமல்.... தவித்தான். அவனிற்கு அப்போது தேவைப்பட்டது 'தனிமை' ஒன்றுதான். சற்று நேரத்துக்கு எங்கேயாவதுபோய் தனிமையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டும்ப…

    • 56 replies
    • 11.9k views
  12. [21] அஞ்சலி லண்டனுக்குப் போய் இரண்டு நாட்களுக்குமேல் ஆகியிருந்தது. அவளிடம் இருந்து போன் வருமென்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான். அந்த இரண்டு நாட்களை கடத்துவதற்கே அவன் பெரும்பாடுபட்டான். எங்கு பார்த்தாலும்... எதைப் பார்த்தாலும் அஞ்சலியின் ஞாபகம் வந்து, இவன் நெஞ்சை அடைத்தது. உண்மையிலேயே அஞ்சலியின் பிரிவு அவனை மிகவும் பாதித்திருந்தது. தன் பிஸ்னெஸிலும் கவனம் செலுத்தாமல் எதையோ பறிகொடுத்தவன் போலவே எப்பொழுதும் ஒரு சோகத்துடன் இருந்தவனைப் பார்த்து விமல் பெரிதும் கவலைப்பட்டான். 'இவனை இப்பிடியே விடக்கூடாது' என முடிவெடுத்தவன்... "நீ இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறாய்? நானும் கொஞ்ச நாளா உன்னை பாக்கிறன். வேலையையும் ஒழுங்காப் பாக்கிறேல. ஒரு மா…

    • 9 replies
    • 2.9k views
  13. [01] நல்ல நித்திரையில் இருந்தவனுக்கு லைற் வெளிச்சம் கண்ணில அடிக்க... "என்னடி இந்த நேரத்தில.... வந்து படு! குளிருதடி.... ஏசியைக் கொஞ்சம் குறையன்! என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய்?" என்று அரைக்கண்ணால பார்த்து.... நித்திரை முறியாமல் சொல்லிக்கொண்டிருந்தவனுக்கு, அவள் சாறிகட்டி வெளிக்கிட்டுக்கொண்டிருந்தது தெரியவேயில்லை! வழமையாக அவள் ஆறரைக்குத்தான் எழும்புவாள். எழும்பவிடாமல் இன்னும் அரை மணித்தியாலம் மினக்கெடுத்திப்போட்டுத்தான் விடுதலை குடுக்கிறவன் இவன். இன்றைக்கு அவள் முன்னதாகவே எழும்ப ஒரு காரணம் இருந்தது. அவளின் நண்பி ஒருத்தியின் திருமணம் அன்றைக்கு. நல்ல நேரம் காலை 8.09 மணிக்கு என்று கலியாணா கார்ட்டிலயே அடிச்சிருந்தவையள் என்று அவளுக்கு நல்ல ஞாபகம்!.எந்த சாறியை உடுக்கோணும் …

    • 73 replies
    • 15.3k views
  14. மச்சான்! நீ வெளிநாடு போறதுக்காக நாட்டைவிட்டுப் போனாப்பிறகு... கொஞ்ச நாளில் உன்ர தொடர்பு எதுவுமே கிடைக்காமல் போயிட்டுது. பிறகு நானும் மலேசியா வந்திட்டன். அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு உனக்குத் தெரியாதுதானே..?!சொல்லுறன்" என்றவன் ஆவலுடன் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த விமலிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தெளிவாக விபரிக்கத் தொடங்கினான். அவன் சொல்லச் சொல்ல... நடந்த நிகழ்வுகள் அனைத்தும் விமலின் மனக்கண் முன்னால் காட்சிகளாக விரியத் தொடங்கின. 2007 செப்டெம்பர் 08 அவன் மலேசியாவிற்கு வந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. கட்டிலில் சாய்ந்திருந்தவனின் விரல்கள் அவனது செல்போனின் பட்டன்களை அழுத்திக்கொண்டிருந்தன. 'அஞ்சலி' என்ற அவனது செல்லத் தேவதையின் 20வத…

  15. அப்பொழுது அஞ்சலி லண்டனிலுள்ள அவளது ஒன்றுவிட்ட அக்காவின் வீட்டில் தங்கியிருந்தாள். Kingston College இல் தனது கல்வியினைத் தொடர்ந்து கொண்டிருந்தவளுக்கு அப்பகுதியிலிருந்த KFC இல் பகுதி நேர வேலை. அந்த KFC வேலைக்கு அவள் சென்றிருந்த ஆரம்பத்தில் ஒரு சம்பவம் நடந்திருந்தது. அஞ்சலியிடமிருந்து அழைப்பு வர அதை எடுத்தவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. மறுமுனையில் அஞ்சலி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். இவனுக்கோ என்ன ஏதென்று ஒன்றுமே புரியவில்லை. "அஞ்சு என்னாச்சுமா? ஏன் அழுகிறாய்?" எனக் கலக்கத்தோடு கேட்டான். ஆனால் அவளோ அழுகையை நிறுத்தியபாடில்லை. "அஞ்சு...!" எனக் கொஞ்சம் அழுத்தமாக அழைத்தவன்... "என்ன நடந்தது அஞ்சு..?" என அழுத்தத்தைக் குறைத்து.... கொஞ்சம் வாஞ்சையுடன் கேட்க, "சொறிட…

    • 25 replies
    • 3.1k views
  16. விலக்கம் : உமாஜி ஆலமரம், வேப்பமரம், வில்வமரம் இன்னும் என்னென்னவோ பெருவிருட்சங்களால் நிறைந்த சோலைக்குள் உள்ளடங்கியிருந்தது ஐயன் கோவில். பனி விலகாத காலை. எதிரே சற்றுத்தள்ளி பனை வடலிகள். ஒருமுறை நுங்கு குடிக்கவேணும் என்று சொன்னபோது கணேசண்ணை சைக்கிளில் எங்களை இங்கேதான் அழைத்து வந்தார். வசதியாக நிழலுக்குள் உட்கார்ந்துகொள்ள வெள்ளையண்ணை மரத்தில் ஏறிக் குலை குலையாக இறக்கி, வெட்டிக் கொடுத்தார்கள். இனி அடுத்த சீசன் வரைக்கும் நுங்கு ஆசையே இல்லாத அளவுக்கு நானும் தம்பியும் குடித்தோம். வருடத்தின் முதல் திருவிழா. பூசைக்கு புது நெல்லு உடைத்து பொங்கலும், இன்னும் நிறைய பலகாரங்களும், பழங்களுமாகப் படையல் வைத்திருந்தார்கள். அங்கேயிருந்த சனத்துக்கு மட்டுமில்லாம, கிராமத்துக்கே …

  17. விலங்குடைப்போம் சங்கவி மெலிதாக திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். ஓ... கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நிலம், மரங்கள், வீட்டுக் கூரைகள்... என்று எல்லாவற்றையும் வெண்பஞ்சு போன்ற வெள்ளைப் பனி போர்த்தியிருந்தது. ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் மெலிதான ஓசை, ஆலும் அரசுமாய் குடை விரித்திருக்க, அலரிகளால் எல்லை போட்டு அழகாய் அமைந்திருக்கும் ஆத்தியடிப் பிள்ளையார் கோவில்... என்று எமது மண்ணுக்குரிய வாசனைகளும், அழகுகளும் ஒரு புறமும், கடந்த சில வருடங்களாக இராணுவமும், ஷெல்களும், கிபீர்களும் அக்கிரமங்களும், தமிழர்கள் மீது பொழியப்படும் அநியாங்களும்… என்று போரின் கோலங்கள் இன்னொரு புறமுமாய் பழக்கப்பட்டு விட்ட சங்கவிக்கு ஜேர்மனியின் மார்கழி மாதப் பனியும் அழகாகத்தான் தெரிந்தது. அந்த …

  18. விளக்கு விற்பவன் கதை – யுகன் எனக்கு கோவில்கள் அதன் பிரமாண்டங்கள் எப்போதுமே ஆச்சரியம் தருவனவாகவே இருந்திருக்கின்றன. நான் தீவிர ஆன்மீகவாதியோ முழுமையான கடவுள் மறுப்பாளனோ அல்லன். மனிதர்களிடையே காணப்படும் வர்க்க பேதத்தையும் ஏற்றத்தாழ்வுகளையம் கண்டும் கருஞ்சிலையாய் இருக்கும் கடவுளரில் எனக்கு உடன்பாடில்லைத்தான், இருந்தும் எனக்கு கோவில்கள் பிடிக்கும் என்னுள்ளே கரையில் இட்ட மீனாக துடிக்கும் அமைதியின்மையை வலை போட்டுப் பிடித்துக்கொண்டவை கோவில்கள். கோவில்கள் எனக்கு அமைதியைத்தரும் இடம் மட்டுமல்லாமல் ஆச்சர்யம் தருவனவாக இருப்பது அங்கு காணப்படும் சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்களும்தான். சிற்பங்கள் ஓவியங்கள் என்றதும் இந்தியக் கோவில்கள் தான் என்னை ஆக்கிரமித்துக்கொள…

  19. விளையும் பயிர்... லா சப்பலிலிருந்து கடைக்கு வருவதற்காக Bus க்காக காத்திருந்தேன். நான் எடுக்கவேண்டிய Bus வந்து பயணிகள் ஏறக்கூடியவாறு வந்து திரும்பியது அம்மா பாருங்கள் முன் சில்லுகள் திரும்ப மட்டுமே பின் சில்லுகள் தான் Bus யை தள்ளும் என்று ஒரு சிறு குரல் கேட்டது ஆச்சரியத்துடன் திரும்பிப்பார்த்தேன். சொன்னவருக்கு ஆகக்கூடியது 6 வயதிருக்கலாம். அவரது தாயார் இவருடன் இன்னும் ஒரு ஆண்பிள்ளை மற்றும் தள்ளுவண்டியில் ஒரு பெண்பிள்ளை அவர்களுக்கு முறையே நாலு மற்றும் 2 வயதிருக்கலாம். எனக்கே பல வண்டிகளை ஓட்டியும் பல காலம்வரை தெரியாத இந்த விடயத்தை இந்த வயதில் புரிய ஆரம்பித்திருக்கும் அவனை வாழ்த்தவேண்டும் என்று நினைத்தேன். அவனது இ…

  20. ஒரு கூதிர்கால செம்மஞ்சள் நிற மாலைப் பொழுதில், வளர்பிறை நிலவு தன்னை அலங்கரித்து பவனி வரக் காத்திருக்கும் இளவரசி போல் முகில் சூழ ஒய்யாரமாக அமர்ந்திருக்க, வேந்தனைக் கண்டு விழிமிரளும் வேலையாட்போல் கதிரவன் நிலவைக் கண்டு தன ஒளிக்கற்றைகளை சுருட்டிக் கொள்ள, மலைமுகடுகளிருந்து வெளிவரும் ஊதக் காற்று செடி கொடிகளை தழுவிக் கொண்டிருந்தது. தழுவியதால் உண்டான இன்பத்தில் இலைகளும் தளிர்களும் சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தன. விடுமுறை நாளின் மதிய உறக்கத்திற்குப் பின் சோம்பலுடன் எழுந்து புல்தரையில் வெண்முத்துக்களை பரப்பியது போல் இருந்த சிமென்ட் தரையில் நடந்து கொண்டிருந்தேன். கனாக்களில் எஞ்சியதை நெஞ்சம் அசை போடா, விஞ்ஞானம் பெற்றெடுத்த அலைபேசியில் சேமிக்கப்பட்ட இன்னிசை காதில் தவழ்ந்து கொண்…

    • 5 replies
    • 943 views
  21. விழியோரத்துக் கண்ணீர்ப் பூக்கள் - 01 மார்கழிப் பனிக்குளிரின் சில்லிட்ட இளங்காலைத் தென்றல் உடலைத் தழுவிய போதும், ஜெயந்தாவின் மனதைப் போலவே அவளின் உடலும் உஷ்ணமாகவே இருந்தது. தனது வீட்டிலிருந்து வெளியேறிய ஜெயந்தா பஸ் நிற்கும் இடத்தை நோக்கி விறு விறுவென நடக்கத் தொடங்கினாள். உடல் தன்போக்கில் நடைபோட, இதயத்தில் மின்னல் வெட்டியது! இடி இடித்தது! புயலும் மழையுமாக இரைச்சலிட்டன. காலைத் தாமரை மலர் போல எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும் ஜெயந்தாவின் முகம் மாலைத் தாமரையாய் வெம்பி வாடி இருந்தது. இவள் கண்களிலும், இதழ்களிலும் எப்போதும் விளையாடும் குறும்புச் சிரிப்பு சென்ற இடம் தெரியவில்லை. அந்த வாட்டத்திலும் அவள் பேரழகு கண்ணைப் பறித்தது. சுற்றுப் புறத்தை மறந்து உதட்டை அர…

  22. வணக்கம் உறவுகளே! "விழுதல் என்பது" என்னும் தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் தொடர் கதை நாளை பல இணையத் தளங்களில் ஒரே நாளில் ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு பகுதியும் வாரம் ஒருமுறை பிரசுரிக்கப்படும். திரு ஏலைய்யா முருகதாசனின் அவர்களின் கூட்டு முயற்சியில் இத்தொடர் ஆரம்பமாகிறது. நாளை பகுதி ஒன்று இங்கு பிரசுரிக்கப்படும். யாழ் இணையமும் இதற்கு ஒத்துழைப்புத் தந்துள்ளது. அதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒளி,ஒலிப் பேழையை என்னால் இங்கு போடா முடியவில்லை. யாராவது விடயம் தெரிந்தவர்கள் உதவ முன்வந்தால் அதனை மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.

  23. ராஜபுதனத்தில் ஆழ்வார் என்று ஒரு சமஸ்தானம் இருந்தது. ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் அந்த சமஸ்தான மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார். விவேகானந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர் விவேகானந்தரை தனது அரண்மனையிலேயே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார். அந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும் பலவிதமான மூட நம்பிக்கைகளால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். இந்து மதத்தில் வழக்கமாக உள்ள கடவுள்களின் திருவுருவ வழிபாடு என்பது ஓர் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்பது மன்னரின் அழுத்தமான எண்ணம். ஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்து மதத் த…

    • 2 replies
    • 700 views
  24. வீடற்றவன்... - வ.ந.கிரிதரன் - சனிக்கிழமை இரவு. நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. ரொரோண்டோ மாநகரின் உள்நகர்ப் பகுதியின் பொழுது போக்குப் பிரதேசமான ரிச்மண்ட் டங்கன் பிரதேசம் இன்னும் பரபரப்பாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கிளப்புகள். ஆட்டமும் பாட்டமுமாக யுவன்கள் யுவதிகளால் நிறைந்திருந்தது. 'ஹாட் டாக்' நடைபாதை வியாபாரிகள் பம்பரமாகச் சுழன்று தமது வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். டாக்ஸிச் சாரதிகள் பிரயாணிகளை ஏற்றுவதும், காத்திருப்பதுமாகவிருந்தார்கள். சிலர் நேரத்துடனேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பலர் புதிதாக டாக்சிகளில் கார்களில் வந்து வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். தெரு மூலைகளில் இத்தனைக் களேபரத்திற்குமிடையில் …

  25. எப்பவும் போல நான் அதே அவசரத்துடன் நடந்து கொண்டிருந்தேன் .என்னைப்போல் பலர் அப்படி.எங்கோ என்னத்துக்கோ என்று தெரியாமால் முட்டி மோதி கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் நிலக்கீழ் சுரங்க நிலைய பாதையின் ஒரு மூலையில் எந்த வித சலனமுற்று தூங்கி கொண்டிருந்தான் ஒருவன்.பலர் இப்படி அங்கும் இங்கும் தெருவோர பாதைகளில் தூங்குவது ஒரு காலத்தில் சூரியன் மறையாத ராஜ்யம் வைத்திருந்தவர்களின் தலை நகரத்திலும் இப்ப சகஜம் என்றாலும்.எனக்கு அவன் ஒருவிதத்தில் பரிச்சயமானவன். இதே பாதையில் இதே அவசரத்துடன் இதே பட படப்புடன் கடந்த பத்து வருடங்களாக யாருடையதோ பண மூட்டையை நிமிர்த்தி வைக்க சென்று வருகின்றேன் .அவர்கள் தூக்கி எறியும் அற்ப சொற்ப பணத்துக்காக.இப்படி சென்று திரும்பு வழியில் தான் அவன் என் கண்ணில் தென்ப…

    • 1 reply
    • 868 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.