கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
கலந்துரையாடல் - சுரேஷ்குமார இந்திரஜித் என் பெரியப்பா தா. ச. மயில்வாகனன் தீவிர சைவர். ‘நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க’ என்று தொடங்கும் பாடலை ராகத்தோடு அடிக்கடி பாடிக்கொண்டிருப்பார். “ராமன் வழிபட்ட தெய்வம் அவன்” என்பார். “சிவன் தப்பு செய்துவிட்டு முழிக்கும்போது பெருமாள்தானே அவரைக் காப்பாற்றினார்” என்பார் பெரியம்மா. பெரியப்பா என்றால் என் தாயாரின் உடன்பிறந்த அக்காவின் கணவர். தாயாரின் குடும்பம் சைவ சமய இலக்கியங்களில் பரிச்சயம் உடைய சிவவழிபாட்டுக் குடும்பம். வைணவக் கடவுள் படங்கள் எதையும் நான் அவர்கள் வீடுகளில் பார்த்ததில் லை. தந்தையின் குடும்பம் நாத்திகக் குடும்பம். சாமி படங்களே கிடையாது. பழந்தமிழ் இலக்கியங்களிலும், ஓரளவு நவீன இலக்கியங்களிலும் பரிச்சயம் உட…
-
- 4 replies
- 792 views
-
-
கலியாண ஆசை எனக்கு கலியாண ஆசை வந்துவிட்டது. என்ன செய்வது? யாரிடம் போய் இதைச் சொல்வது? எப்படி பெண் தேடுவது என்று யோசிச்சுக் கொண்டிருந்த பொழுதுகளில், ஒருமுறை ஈஸ்ட்ஹாம் தமிழ் கடையில் சாமான் வாங்க சென்றிருந்த சமயம் ஒரு பெரியவர் கேட்டார். தம்பி நீர் உந்த பெற்றேல் ஷட் ல் வேலை செய்யிற ரூபன் தானே எண்டார். ஓம் ஓம் என்றேன். ஆளே சுத்தமா மாறிப் போயிட்டிர் சக்கை பிளாக்காய் கணக்குக்கு உடம்பை வளர்த்து விட்டிருக்கு என்று சொன்னவர் இப்படிப்போனா எங்கே எப்ப கலியாணம் நடக்கிறது என்றபடியே நகர்ந்தார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அந்தப் பெரியவர் மீது கோபம் கோபமாய் வந்தது. Punching bag ல் என் ஆத்திரம் தீருமட்டும அடிக்கனும் போல இருந்தது. சும்மா சொல…
-
- 37 replies
- 4.8k views
-
-
கலைஞன் பொ.கருணாகரமூர்த்தி ( ஜெர்மனி ) அந்தக்கோடையின் ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் ஜன்னல்களை முழுவதுமாகத் திறந்துவைத்துப்புதிய காற்றை உள்ளே வரவிட்டு எதேச்சையாக வெளியே பார்த்தேன். முதலாம் மேடையில் சற்றுஅருகருகே இருக்கும் இரண்டு தூண்களை இணைத்து கணைப்படுக்கை ( Hammock – கன்வேஸ் தூளி) ஒன்றைக்கட்டிவிட்டு அதனுள் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான். பத்துமணிச்சூரியன் புகார்களினூடுவெளிப்பட்டு நேராகவே அவன்மீது காலியபோதும் அதைப்பொருட்படுத்தாது ஒரு காலைத்தூளிக்குவெளியே தொங்கவிட்டபடி தூங்கினான். பின் எப்போதுதான் எழுந்து போனானோ தெரியாது. பகல்முழுவதும் அவன் தூளி காலியாக இருந்தது. மாலையில் அந்திக்கருக்கலில் ஒன்பது மணிக்குமேல் நிலையத்தின் Gold-regen மரங்களோடு தொடரும்வடக்குப்…
-
- 0 replies
- 726 views
-
-
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று, கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு! தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி! சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்! உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும். சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி! பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே! தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து, ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
கலைமாமணி சிறுகதை: பாவண்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ஒரு வகுத்தல் கணக்குக்காக 13-வது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால், தெருமுனையில் ஒலித்த தமுக்குச் சத்தம் என் காதில் விழவில்லை. ஆனால், என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளி எழுந்து வெளியே பாய்ந்து ஓடினான். `எழு பதிமூணு தொண்ணுத்தொண்ணு, எட்டு பதிமூணு...' என மனசுக்குள் முணுமுணுத்தபடியே அவன் பக்கமாகத் திரும்புவதற்குள், அவன் ஒரு குட்டிமுயலின் வேகத்தில் வேலிப்படலைத் தாண்டியிருந்தான். எதுவுமே புரியாமல் நோட்டை அப்படியே கவிழ்த்துவைத்துவிட்டு “இருடா ராமு, நானும் வரேன்டா...” என்றபடி அவனுக்குப் பின்னால் ஓடத் தொடங்கினேன்…
-
- 0 replies
- 2.1k views
-
-
கல் சிலம்பம் - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... என்.ஸ்ரீராம், ஓவியங்கள்: அனில் கே.எஸ். செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு, கூடிவருவது போல கேட்டது. மேற்கில் இருந்து கெண்டைக்கால் அளவு நீரோடு வரும் உப்பாறு, தெற்கில் இருந்து இடுப்பு அளவு நீரோடு வரும் அமராவதியுடன் கலக்கும் கூடுதுறை இது. இவர் கைத்தடியை ஈரமண்ணில் ஊன்றிவிட்டு, ஆற்று நீரில் கால் வைத்தார். நீர் குளிர்ந்துகிடந்தது. சிப்பிலி மீன்கள் கலைந்து ஓடின. நீரை அள்ளி முகத்தில் அடித்தார். உள் ஒடுங்கிய கண்களில் கட்டியிருந்த பீழையைத் தேய்த்துக் கழுவினார். நீண்ட வெள்ளைத்தா…
-
- 3 replies
- 3k views
-
-
கல்பனா ஒரு காவியம் ......... அந்த சிற்றூரின் அமைதியை கிழித்து கொண்டு இழவு வீட்டின் பறையொலி ....கேட்டது. அந்த ஊரின் இளைப்பாறிய வைத்தியரின் வளர்ப்பு மகள் இறந்து விடாள். அவள் தான் கல்பனா . கல்பனா , மிகவும் அழகான் சிறு பெண் .நான் என் இள ம வயதில் கண்ட போது வைத்தியரின் வேலைகார சிறுவன் ,இவளின் பாடசாலை ப்பை , தண்ணீர் போத்தல் என்பவற்றை தூக்கி கொண்டு , வெயிலுக்கு மறைப்பாக கையில் குடை பிடித்த படி அழைத்து செல்வதை பார்த்திருக்கிறேன். அவள் ராணி மாதிரி வருவாள். வைத்தியர் செல்வராஜா , மனைவி கமலாவுடன் அந்த ஊருக்கு மாறலாகி வந்தபோது சிறுமி கல் பனா மூன்று வயதிருக்கும் .கால போக்கில் அந்த வைத்தியர் ஊர் மக்களுடன் உறவாடி ஒரு அங்கத்தவர் ஆகினார் .பேச்சு வாக்கில் அவருக்கு குழந்…
-
- 6 replies
- 1.9k views
-
-
கல்யாண(ம்) வை! போவமே? -இ.ஜெயராஜ்- உலகை மகிழ்விக்கும் சொற்களுள் கல்யாணம் என்பதும் ஒன்று. உறவு நிறைவு குதூகலம் கொண்டாட்டம் இப்படி சந்தோஷம் தரும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய பெருமை கல்யாணம் என்னும் சொல்லுக்கு உண்டு. ஓர் ஆணையும் பெண்ணையும் முழுமையுறச் செய்யும் இனிய வைபவம் அது! ஒழுக்கயீனமாய் உரைக்கப்படும் உறவை ஒழுக்கமாய் ஆக்கும் அற்புத கிரியை அது! ஊருக்கஞ்சி ஒதுங்கும் உறவை ஊர் கூட்டி அறிவிக்கும் ஒப்பற்ற நிகழ்வு அது! சந்ததி விருத்திக்காய் ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் இயற்கை அமைத்த ஏக்க எழுச்சியை சாந்தி செய்யும் சடங்கு அது! அறவாழ்வுக்காய் அமைக்கும் அடிப்படை அது! ஆணுக்கும் பெண்ணுக்குமாய் அமைக்கப்படும் அசையாத உறவுப்பாலம் அது! அன்பு விர…
-
- 13 replies
- 2.2k views
-
-
பேருந்துக்காக காத்திருந்த அழகான சிங்கள பெண்களின் வாசனைதிரவியம் அவனுக்கு கஸ்தூரியின் ஞாபகத்தை தான் கொடுத்தது. ம்ம்ம். கஸ்தூரியின் வருகையை எப்பவுமே காட்டி கொடுப்பது அவளின் வாசனை தான். அவளுக்கென்றே ஒரு வாசனை. அதை எங்கே நுகர்ந்தாலும் அவளின் ஞாபகம் தனக்குள்ளே வருவதை அவனால் தவிர்க்க முடிவதில்லை. கஸ்தூரி என்றே பெயரே அவளின் வாசனைக்காக தான் வைத்தார்களோ அவளின் பெற்றோர்கள். அவனின் காற்சட்டைபையினுள் இருந்த பணவுறையை எடுத்து அவளின் புகைப்படத்தை ஒருமுறை பார்த்து கொண்டான். அன்று அவளின் பிறந்தநாளன்று, அவனிடம் அவளின் புகைப்பட தொகுப்பை கொடுத்து எந்த படம் வேணும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன போது.. அவளின் அழகான படங்கள் இருக்க, அவன் எடுத்து கொ…
-
- 12 replies
- 1.9k views
-
-
மகளும் மருமகனும் இப்பதான் கிளம்பி வீட்டை போறாங்க. ரண்டுபேரையும் அனுப்பிட்டு மரத்தடியில கிடந்த சாய்மனைல வந்து உக்காந்தன். என்ட மகளோட நான் பழகிற வாய்ப்பு எனக்கு கிடைச்சதில்லை. அது எனக்கு ஒரு கவலையாகப்பட்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டினதுக்காக நான் சந்தோசப்படுறன். அதுக்காக 'இந்தவாய்ப்பை எனக்கு தந்தது கடவுள் தான், கடவுளுக்கு நன்றி' என்று சொல்ல மாட்டன். எனக்கு கடவுளை எனக்கு பிடிக்கிறதில்லை. அப்படி நன்றி சொல்லுறது என்றால் ஆமிக்காரங்களுக்கு சின்ன நன்றி சொல்லலாம். மகள்ட இடத்தில ஆமிபிரச்சினையாம். ஆமி உள்ள வந்தால் இளமாக்களுக்கு பிரச்சினை என்று இடம் பெயர்ந்ததால தான் எனக்கு இந்த குறுங்கால சந்தோசம் என்றாலும் கிடைச்சுது. மகளும் மருமகனும் மகள்ட குட்டி மகனும் இங்க இருந்த 6.…
-
- 16 replies
- 3.6k views
-
-
களம் - ஜெயமோகன் அதிகாலைமுதலே அரங்கேற்றக் களத்தில் அஸ்தினாபுரத்துக் குடிமக்கள் ரதங்களிலும் , குதிரைகளிலும் ,மூடுவண்டிகளிலும் வந்து குவிய ஆரம்பித்த ஒலி அரண்மனையை சூழ்ந்து கொண்டது.அரண்மனையில் இருநாட்களுக்கு முன்னரே பரபரப்பு பெருகி ,அதன் உச்சத்தில் ஒவ்வொருவரும் பிறரை மறந்து தங்கள் வேகங்களில் விரையவே முழுமுற்றான ஓர் ஒழுங்கின்மை எங்கும் நிறைந்திருந்தது . தன் தனிப்பட்ட பயிற்சிக்களத்தில் துரியோதனன் இடைவிடாத ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டிருக்க, அர்ச்சுனன் துரோணருடன் விற்பயிற்சியில் தன்னை இழந்திருந்தான். குருகுலத்து இளவரசர்கள் அனைவருமே பதற்றத்துடன் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் பீமன் மட்டும் மடைப்பள்ளியில் சமையலுக்காக தென்னாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த விற்பன்னர்களிடமிருந…
-
- 1 reply
- 962 views
-
-
களவாணி மழை சிறுகதை: தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு முன்நெத்திச் சுருக்கங்களில் வழிந்தோடும் வியர்வையைக் கூடத் துடைக்காமல் வேகு வேகென்று வந்து நின்றவனைப் பார்த்து, “ந்தா... சோத்தண்ணி குடிக்கிறியா?” என்ற பாண்டியம்மாளின் குரலைச் சட்டை செய்யாமல் தொழுவத்துக்குள் நுழைந்தான் பெரியாம்பிளை. மாடு, கன்னுகளுக்குத் தண்ணி ரொப்பும் சிமென்டுத் தொட்டி கால்வாசிக்குத்தான் இருந்தது. “சவக் கழுதை, சப்பணங்கொட்டி ஒக்காந்துகிட்டுக் கிடக்கா, தண்ணி ரொப்பாம” என்று முனகிக்கொண்டே தண்ணியை அள்ளி எடுத்து முகம், கை, காலில் சோமாறிக்கொண்டான். மூக்கு விடைக்கத் திரும்பிய நெற மாசச் சிங்கி, அவனது அருகாமையை உணர்ந்தாற்போல் அசைந்துகொடுத்தது…
-
- 0 replies
- 1.1k views
-
-
கள்ள வீசா – ஒரு கனவு May 10, 2022 — அகரன் — பாரிசுக்கு வந்து ஒன்பது வருடமும் 25 நாட்களும் கடந்தபோது எனக்கு அகதி அடைக்கலம் கிடைத்தது. அன்று வெள்ளிக்கிழமை. ஊரில் தூக்கத்தின்போதுநாளொரு கனவு வருவது உண்டு. எப்போது நாடுகளிள் எல்லைகளை கடக்கும் இலட்சியத்தில் இறங்கினேனோ அன்றில் இருந்து எனக்கு கனவு வந்ததாக நினைவில்லை. விதிவிலக்காக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலைகனவு ஒன்று எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. கனவிற்கும் விசாகிடைத்ததற்கும் சாமி சம்மந்தம் இருக்குமோவென்று யோசித்தேன். ஒரு சாமியுமில்லை. சம்மந்தமுமில்லை. கனவு கண்டெழும்பி அதன் நினைவுகளோடு காலை பத்துமணிக்கு வேலைக்குச் சென்றேன். கனவைப்பற்றி ஏன் சொல்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அதுவல்ல நான் சொல்ல…
-
- 3 replies
- 1.4k views
-
-
கொஞ்சம் இறுக்கி போடடா ..உரக்க கத்தினான் என்னை சைக்கிளில் வைத்து உழக்கியவன் .இயலுமட்டும் எதிர் காற்றுக்கு போராடி என்னடா இவன் போடுற டபிள் பெடல் அவ்வளவு காணதே என்று சலித்து இயலாப்பாட்டில் கூவிய குரல் அது..எங்கோ யோசித்து கொண்டிருந்தபடியால் என் உதைப்பின் வேகம் குறைந்திருக்க வேண்டும்.இந்த கணத்தை விட்டு ஏதோ ஒரு காலத்தில் யோசிப்பதில் ஒரு சுகம்.அது மட்டுமே எங்களுக்கு இப்ப வாழும் வாழ்க்கையில் இருக்கு .என்ன நான் சுகம் காண நினைத்தால் அவன் வேதனை அனுபவிக்க இருக்கு அவ்வளவு தான். டே உழக்கடா ஊண்டி என மீண்டும் சத்தம் போட்டான், ,அவனிலும் பிழையில்லை ஒரு பத்து நிமிசம் பிந்தி போனாலும் அந்த எருமை தலையன் ஒரு மணித்தியால காசை வெட்டி போடுவான் .அதுவும் நாலு கில்டன் இலங்கை காசுக்கு பத்தினொ…
-
- 14 replies
- 1.9k views
-
-
மாதவி தன் போட் காரை அந்த பசன் டிசைனிங் நிறுவனத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு தனது வகுப்பை நோக்கிப் போனாள்...அது ஒரு தனியார் நிறுவனம் அதில் படிப்பது என்றாலே அதிக காசு செலவாகும். மாதவி அந் நிறுவனத்தில் சுமார் ஆறு மாதமாக நவீன ரக ஆடை வடிவமைப்பு,மேக்கப் போடுதல்,தலை முடியை எப்படி எல்லாம் ஸ்டைலாக்கலாம் போன்றவற்றை படித்து வருகிறாள். இவள் இப்படி எல்லாம் வந்து படிக்கிறதாலே அவளை வசதியான வீட்டு செல்லப் பிள்ளை என நினைக்க வேண்டாம்.அவளுக்கு வேலையும் இல்லை, காதலனும் இல்லை,இப்ப காதலிக்கிற வயசும் இல்லை அவளுக்கு நாற்பது வயது[நாற்பது வயதில் காதலிப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.] கல்யாணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர்.கணவன் ஒரு வியாபாரி,வியாபாரத்திற்காக ஊர்,ஊராக சுற…
-
- 109 replies
- 27.3k views
-
-
அவன் அரை மயக்கத்தில் கட்டிலில் கட்டுண்டு கிடந்தான். அவனக்கு முன்னால் அவள் கையில் குழவிக்கல்லோடு நின்றாள். ................................... அவளுக்கு காதலிக்கும் உரிமை இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். அவளுக்கு அவளுடைய கணவனை தேர்ந்தெடுக்கும் பக்குவம் இல்லை என்றும் அவர்கள் சொன்னார்கள். அவர்களே அவளுக்கான காளையை தேடினார்கள். கட்டியும் வைத்தார்கள். அவளும் அவனும் முதன் முறையாக எத்தனை மணிக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களே சொன்னார்கள். இதுவரை அறிமுகம் இல்லாது அவனுடன் வாழ்ந்து, இதுவரை அறிமுகம் இல்லாத அவனுடைய சொந்தங்களையும் அனுசரித்து, பிள்ளைகள் பெற்று, வரவு செலவுக்குள் வாழ்க்கையை நடத்தி, சண்டை சச்சரவுகளை சமாளித்து, குழந்தைகளை படிக்க வைத்து, வாழ்க்கையில்…
-
- 20 replies
- 10.2k views
-
-
"டேய் தம்பி ... உன்ர பிறண்ட்ஸ் யாரோ வந்திருக்குறாங்கள். போய்ப் பார்! " என வீட்டுக் கேற் பக்கமாக கையைக் காட்டினார் அம்மா. ராணிக் காமிக்ஸ் மாயாவிக் கதைகளுக்குள் ஆழமாய்ப்போய்.... தங்கக் கடற்கரை ஓரத்தில் உலாவந்து கொண்டிருந்த எனக்கு, அது காதில விழவே இல்லை. ஆனால், பாழாய்ப்போன என்ட பாசக்கார நண்பர்களின் சைக்கிள் பெல்லடிச் சத்தம்..... பாலாலியில இருந்து அடிக்குற ஆட்லறி வெடிக்கிற சத்தத்தைவிட அதிகமாக இருந்ததால்..... கேற்றடிக்குப் போய், என்னடா.... ?! என்ன விசயம்?! என , கேட்டுக்கொண்டே... கேற்றைத் திறந்தேன். ரவியும், கார்த்தியும் வந்திருந்தார்கள். என் பள்ளி நண்பர்கள். நான் வர பிந்தினதால அவங்களுக்கு கொஞ்சம் கடுப்பு என்பது அவர்களது முகத்திலயே விளங்கிச்சு . "ஏன்டா...! பள…
-
- 64 replies
- 6.5k views
-
-
இது எனது கதை இல்லை படித்ததை பகிரும் அரிப்பால் உருவானது .இனி ........................................... இஞ்சாரப்பா கவனிச்சியே ஒரு சிவப்பு பெட்டைக் கோழியொண்டு இஞ்சனேக்க எப்பவும் உலாவுது.அது ஆரிண்ட கோழியப்பா.தெரியுமே உனக்கு. ஓமப்பா நானும் ஒவ்வொருநாளும் பாக்கிறன் எங்கட வளவுக்கதான் எங்கட கோழிகளோட திரியுது.இங்கதான் மரத்தில இரவிலயும் படுக்குதுபோல.ஆரும் இடம் பெயர்ந்து போனவையின்ரயோ தெரியேல்ல.எதுக்கு இந்தக் கிழமையும் பாப்பம். ஏனப்பா பிடிச்சுக்கொண்டுப்போய் அம்மா வீட்டை கொண்டு போய் விடுவமே.கொஞ்சம் வளந்தாப்போல கொண்டுவரலாம்....சரியே. என்னப்பா நீ்.....நான் மனசில வேற கணக்குப்போட்டு வச்சிருக்கிறன்.துணிபோட்டுப் பிடிச்சுச் சட்டிக்க வைக்கவெண்டு.........நீ என்னடா…
-
- 4 replies
- 1.9k views
-
-
கள்ளந்திரி சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் “ச்சே... ப்ச்ச்ச்... ச்சே...” மிகுந்த கோபமும் ஆற்றாமையும் அழுகையும் கலந்து இப்படிச் சொல்லிக்கொண்டே இருந்தார் மூர்த்தி அண்ணன். நமக்கு நேரடியாக பேரிடியே விழுந்தாலும் பிரச்னை இல்லைபோலும். பிறரிடம் சென்று, `உன் அப்பா இறந்துவிட்டார்’ எனச் சொல்லிய பிறகு அவர்களை எதிர்கொள்வதுதான், அந்தக் கணத்தில் வாழ்வின் இதுவரையிலான உச்சபட்ச சவால் எனத் தோன்றியது எனக்கு. அணைத்துவைத்திருந்த கைபேசியை எடுத்தவர், அதை உயிர்ப்பிக்கும்போதே அழைப்பு வந்தது. எதிர்முனையில் அவரின் அம்மா. அழுகைச் சத்தம் ஸ்பீக்கரில் போடாமலே வெளியில் கேட்டது. ஒன்றும் பேசாமல், போனை கட் செய்தவர், நான் கண…
-
- 1 reply
- 1.3k views
-
-
கள்ளி இளங்கோ-டிசே ஏதோ ஒரு வாசனை என்னைப் பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அந்த வாசனையை முதலில் எங்கே நுகர்ந்தேன் என்பது சரியாக நினைவினில் இல்லை. அநேகமாய் நிரம்பி வழியும் மாலைநேரத்து சப்வேயில்தான் அந்த நறுமணம் எனக்குள் நுழைந்திருக்க வேண்டும். பிதுங்கித் ததும்பும் மனிதக் கூட்டத்திடையே, காலையோ கையையோ கூட சற்றும் நகர்த்த முடியாத பொழுதொன்றில் இப்படியான வாசத்தை நினைவில் கொண்டிருத்தல் என்பதே சற்று அதிகப்படியானதுதான். ஆனால் நான் விடும் மூச்சே மற்றவரின் காதுக்குள் நுழைந்துவிடும் அபாயமுள்ள நெரிசலில் எனக்கு இந்த வாசத்தை பின் தொடர்வது சற்று ஆசுவாசமாயிருந்தது. மேலும் இந்த நறுமணம் யாரோ ஒரு பெண்ணிலிருந்துதான் வருகின்றது என எண்ணிக்கொள்வது இன்னும் குதூகலத்தைத் தருவதாயிருந்தது. மனித உ…
-
- 0 replies
- 1k views
-
-
எழுதியவர் உமா வரதராஜன் இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்ட ஒப்பனை கூடிய கல்யாணப் பெண்ணாக நடுவே கோயில். சூழ நின்ற விருட்சங்களுடன் நிலாக்காலத்தில் இனி என்றைக்குமே பேசாது என்பது போல நின்றது அது, கோயிலை வளைத்துக் கடை வீதி, கரிமண் கிளறிக் கிளறி நடைபோடும் ஜனங்கள். ஒவ்வொரு கடையிலும் தேனடையை மொய்க்கும் ஈக்களாகிக் குழுமி நிற்கும் ஜனங்கள். எறும்புகளாகி முட்டியும், மோதியும் விலகிப் போகும் ஜனங்கள். ஜனங்கள். ஜனங்கள். எதிர்வெயிலை வாங்கி தம் முகம் நோக்கித் துப்பியெறிகின்றன அலுமினியப் பாத்திரங்கள். மெல்லிய கைகளைப் பற்றி வளையல் அணிவிப்பதில் காலத்தைக் கரைக்கிறார்கள் காப்புக்கடைப் பையன்கள். இந்த உச்சக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு விட்டனர் கச்சான் கொட்டை விற்பவர்களும், கடலை வண்டிக்க…
-
- 7 replies
- 1.7k views
- 1 follower
-
-
கழட்டின பேண்ட்டை மாட்டிட்டு வாங்க! - சூர்யபுத்திரன் அவள் பார்த்தால் சிரித்தால் அசந்தால் எல்லாமே அழகுதான்! காலை நேரத்து வெயிலின் வெப்பம் கொஞ்சங்கூட உள்ளே நுழையாமல் குளிரூட்டப்பட்ட அந்த அறையே சொர்க்கம் போல இருந்தது சுந்தருக்கு. மங்கலான ஒளியில் மெத்தையில் அரைகுறை ஆடையில் சோம்பல் முறிப்பதுபோல் அவள் கைகளை உயரத் தூக்கி நெளிய... அவளை விழுங்குவது போல் பார்த்த அவன் சப்த நாடியிலும் இன்ப ஊற்று! இருக்காதா பின்னே? மெத்தையில் ஒரு மோகினி... மெழுகு பொம்மை போல... அவனுக்காகவே கொண்டு வரப்பட்ட குட்டியாம். கூட்டிக் கொடுப்பவள் சொன்ன கூடுதல் தகவல் இது. அந்தக் குட்டியின் கிளுகிளுப்பில் சொக்கி, உருகி அவன் தன் ‘பேன்ட்டை’க் கழற்றி முட்டிவரை கீழே இறக்க... கைப்பேசி அபாயகரமாய் அலறியத…
-
- 1 reply
- 2.6k views
-
-
"-------" கள் தினம். காலையில் எழுந்ததில் இருந்து எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மனைவி போட்டுத்தந்த தேத்தண்ணி தேவாமிருதமாக இருந்தது. அதைக் குடித்துப் போட்டு இன்னுமொரு குட்டிப் தூக்கம் போட்டேன். "பொறுப்பில்லாமல்" நித்திரை கொள்வதாக மனைவி சொல்லவில்லை. இரண்டாம் தரம் அடித்த "அலாரம்" மணிக்கூட்டு கூட சங்கீதமாக ஒலித்தது. வழக்கம் போலில்லாமல் நிதானமாய்க் குளித்து, நிதானமாய்ச் சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டாண்ட் போனேன். பஸ் ஸ்டாண்டில், சும்மா புன்னகைத்தாலும் பதிலுக்கு முறைக்கும் அந்தச் சீனன், இன்று வலியக் "காலை வணக்கங்கள்" என்றான். வெள்ளைக்காரங்களுக்கு மட்டும் காலை வணக்கம் சொல்லும் நாதனும் (தன பெயர் நேத்தன் என்றுதான் அடம் பிடிப்பார்) இன்று "என்ன சுகமே, நல்ல weather என்ன?" என்று…
-
- 3 replies
- 1.7k views
- 1 follower
-
-
கவனம் வங்கியில் ரொம்பவே கூட்டம்... நெரிசல் குறையட்டும் என்று ஓரமாக நின்ற மைதிலியை நெருங்கினார் ஒரு டிப் டாப் ஆசாமி. ‘‘என் மூக்குக் கண்ணாடியை கார்ல விட்டுட்டு வந்துட்டேன்... கொஞ்சம் இந்த சலானை பூர்த்தி செய்து தர முடியுமா?’’ என பணிவாகக் கேட்டார். ‘‘சாரி சார்! நான் பேங்க்ல பணம் கட்ட வந்திருக்கேன். இப்ப உங்களுக்காக செலான் எழுதிக்கிட்டிருந்தா என் கவனம் சிதறும். அதைப் பயன்படுத்தி யாராவது பணத்தை அடிச்சிடலாம். மன்னிச்சிடுங்க... என்னால முடியாது!’’ - உறுதியான குரலில் மறுத்தாள். மறுநாள்... இன்டர்வியூ ஹால்... தன்னுடைய முறை வந்தவுடன் உள்ளே நுழைந்த மைதிலி, வங்கியில் சந்தித்த அதே டிப் டாப் ஆசாமி இன்டர்வியூ குழுவில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். நிச்சயம் தனக்கு வேலை …
-
- 0 replies
- 1.6k views
-
-
கவரேஜ் பிள்ளையார் கோவிலும் காதல் நினைவுகளும்! வணக்கம் உறவுகளே! என் தமிழ் மொழியையும் என் தாய் மண்ணையும் வணங்கி ஈழவயலில் என் முதல் பதிவை ஆரம்பிக்கின்றேன். நானும் ஒரு பொடிப்புள்ள என்பதால் பொடிப்புள்ளைகளின் சங்கதிகள் சிலதை சொல்லுறன் கேளுங்க. வன்னியில் காதலர்கள் போவதற்கு கடற்கரைகளோ இல்லை,பூங்காக்களோ,தியேட்டர்களோ இல்லை கடற்கரைகள் இருந்தது ஆனால் அங்கே காதலர்கள் போவது கிடையாது. இதற்கான காரணம் நீங்கள் அறிவீங்கள் தானே.இதனால் பெரும்பாலும் காதலர்கள் சந்திக்கும் இடங்களாக ஊரில் உள்ள குச்சு ஒழுங்கைகள் ஆள் நடமாட்டம் இல்லாத பாதைகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பாலும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொடிப் பிள்ளைகள் தான் அதிகமாக இந்த குச் ஒழுங்க…
-
- 3 replies
- 1.3k views
-