Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. Started by sathiri,

    அன்பு அம்மா. வீட்டு அழைப்பு மணிச் சத்தத்தை கேட்டு வாசல் கதைவை திறந்த திறந்த நிவேதா வாசலில் நின்றிருந்த இருவரை பார்ததும் நீங்கள் யார் என்ன வேணும் என்றாள். இருவரில் ஒருவன் சிரித்தபடி நாங்கள் அன்பு அம்மாவை பாக்கவேணும் அவாவை எனக்குத்தெரியும் அவாவோடை கொஞ்சம் கதைக்கவேணும்.அதுதான் வந்தனாங்கள் என்றான். இருவரையும் மேலும் கீழுமாக பார்த்த நிவேதா இவங்கள் எதுக்கு இங்கை வந்திருக்கிறாங்கள் என்று மனதில் நினைத்தபடியே சரி வாங்கோ என்றவள் அவர்களை இருக்கச: சொல்லிவிட்டு அம்மா உங்களை ஆரோ தேடி வந்திருக்கினம் வந்து பாருங்கோ என்று தாயாரை அழைத்து விட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள். வரவேற்பறைக்கு வந்த அம்மா கண்ணாடியை சரிசெய்தபடி வந்தவர்களை பார்த்தவர் தம்பியயை யார் என்றதும…

  2. சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது... "எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?". சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத விசயங்கள்தான் வந்து விழும். சிலவேளை முக்கிய புலனாய்வுத் தகவல்களும் இருக்கும். பொன்னம்மாக் கிழவி கொஞ்சம் அழுத்தக்காரி; விசயத்தைத் துழாவினால் கௌவரவக் குறைவு என்று ஒரு அழுத்தமான கொள்கை ஒன்றை வைத்திருக்கிறா. விசயம் தன்பாட்டில் வந்து விழும் என்று நன்றாகத் தெரியும். எனவே 'நீ சொல்லப்போறது முக்கியம் இல்லை' என்றது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு குட்டப் பெட்டியைத் திறந்து வெத்திலை, பாக்கைத் தயார் பண்ணினா. காதுகள் மட்டும் அடுத்த தகவலுக்காகக் காத்திருந்தன. "எனக்குக் கொஞ்சம் கிறுதி'யாக இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வெத்தில…

  3. சுகுமாரனின் முகத்தில் அன்று மகிழ்ச்சி பரவியிருந்தது! அன்றைக்குத் தான் தனது முதலாவது சம்பளத்தை, அப்பா எப்போதும் செய்வது போலவே, அம்மாவின் கையில் கொடுத்திருந்தான். அம்மாவும் அப்படியே பணத்தை வாங்கி வைத்து விடவில்லை. அதைக் கொண்டு போய்ச் சாமிப் படத் தட்டில் வைத்து, அதில் இருநூறு ரூபாவை எடுத்து, அவனிடம் திருப்பிக் கொடுத்தா. அதை உடனடியாக வாங்கிக்கொள்ளாமல், சிறிது நேரம் சிந்தித்தான். அப்போது தான், வீரகேசரிப் பேப்பரில் இருந்து, தலையைத் தூக்கிப் பார்த்த அப்பா, அவனுக்கு இன்னுமொரு நூறைக் கொடுத்துவிடன் என்று கூறினார். அவனது கண்கள், பனித்தன. இவ்வளவுக்கும் அவனது மாதச் சம்பளம் அப்போது, எண்ணூறு ரூபாய்கள் மட்டுமே. அதில் நூறு ரூபாவைத் தனது, தங்கையிடம் கொடுத்தவன், அடுத்த நாளைக்கான கொழும…

  4. [size=6]வடகாற்று - கருணாகரன்[/size] பனி அதிகமாக கொட்டிக் கொண்டிருந்த இலையுதிர்கால நாளொன்றின் முன்னிரவில், பாரிஸ் நகரத்தின்Rue De Ponthieu , 08. Champs Elysées பகுதியில் இருக்கும் Beauchamps விடுதியில், எதிர்பாராத விதமாக ஒரு போர்த்துக்கல் நாட்டுக்காரரைச் சந்தித்தான் தேவன். அந்தச் சந்திப்பை இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பழுப்பு வெள்ளையருக்கும் ஒரு ஆசியக் கறுப்பனுக்குமிடையிலான சந்திப்பு. ஒரு அகதிக்கும் ஒரு விருந்தாளிக்குமிடையிலான சந்திப்பு அது. எதிர்பாராத சந்திப்பு. அவன் வேiலையை முடித்து தங்குமிடத்துக்கு புறப்பட ஆயத்தமாகியபோது வரவேற்புப் பகுதியில் யாரோ ஒருவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். முதலில் அவன் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை. ஒரு கணம்தான். மின்…

  5. கல்யாண(ம்) வை! போவமே? -இ.ஜெயராஜ்- உலகை மகிழ்விக்கும் சொற்களுள் கல்யாணம் என்பதும் ஒன்று. உறவு நிறைவு குதூகலம் கொண்டாட்டம் இப்படி சந்தோஷம் தரும் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய பெருமை கல்யாணம் என்னும் சொல்லுக்கு உண்டு. ஓர் ஆணையும் பெண்ணையும் முழுமையுறச் செய்யும் இனிய வைபவம் அது! ஒழுக்கயீனமாய் உரைக்கப்படும் உறவை ஒழுக்கமாய் ஆக்கும் அற்புத கிரியை அது! ஊருக்கஞ்சி ஒதுங்கும் உறவை ஊர் கூட்டி அறிவிக்கும் ஒப்பற்ற நிகழ்வு அது! சந்ததி விருத்திக்காய் ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் இயற்கை அமைத்த ஏக்க எழுச்சியை சாந்தி செய்யும் சடங்கு அது! அறவாழ்வுக்காய் அமைக்கும் அடிப்படை அது! ஆணுக்கும் பெண்ணுக்குமாய் அமைக்கப்படும் அசையாத உறவுப்பாலம் அது! அன்பு விர…

    • 13 replies
    • 2.3k views
  6. எங்கே அந்த சொர்க்கம்? வற்றாத கடல், வாகான பாலம், வாசல் திண்ணை, வளைந்து கொடுக்கும் அப்பா, வாஞ்சையே வடிவான அம்மா, எளிய வாழ்க்கை, எதிர் வீட்டு மனிதர், அமைதியான தெரு, ஆலய மதில்கள், அறிவு புகட்டும் கலைக்கூடங்கள,; அலை உரசும் கடற்கரை, படகுச் சவாரி காலையில் கலகலக்கும் ஊர்ச்சந்தை, சோழகத்தில் சுழன்றாடும் பனைமரங்கள், பூமணத்தைச் சுமந்து வரும் தென்றல், விடலைகள் துள்ளி விளையாடும் கடற்கரை, குமரிகளின் கும்மாளச் சிரிப்பொலி, என்றென்றும் மனதை விட்டகலா மண்ணின் மணம் இவையனைத்தும் இன்று போரின் வடு சுமந்து, புன்னகையின் பொலிவிழந்து, வீதிகளில் வெறுமை படர்ந்து, நீர் வற்றிப்போன குளங்களை விட்டு பறவைகள் விலகிச் செல்வது போல எங்கள் ஊரின் எழில் குலைந்த பின் எச்சங்களாக மிச்சமிருக்கும் ஒரு சிலர். இன்னும் …

    • 5 replies
    • 1.1k views
  7. [size=6]புத்தனாவது சுலபம்-எஸ்.ராமகிருஷ்ணன்[/size] அருண் இரவிலும் வீட்டிற்கு வரவில்லை. பின்னிரவில் பாத்ரூம் போவதற்காக எழுந்து வந்தபோது கூட வெளியே பார்த்தேன் அவனது பைக்கைக் காணவில்லை. எங்கே போயிருப்பான். மனைவியிடம் கேட்கலாமா என்று யோசித்தேன். நிச்சயம் அவளிடமும் சொல்லிக் கொண்டு போயிருக்க மாட்டான். கேட்டால் அவளாகவே அருண் எங்கே போயிருக்கக் கூடும் என்று ஒரு காரணத்தைச் சொல்வாள். அது உண்மையில்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும், பிறகு எதற்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். பலநாட்கள் அருண் பின்னிரவில் தான் வீடு திரும்பிவருகிறான். இப்போது அவனுக்கு இருபத்திநாலு வயதாகிறது. இன்ஜினியரிங் படிப்பை கடைசிவருசத்தில் படிக்காமல் விட்டுவிட்டான். இனிமேல் …

  8. Started by கோமகன்,

    வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும். அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்ற…

  9. ஒரு தனித்துவமான பண்பாட்டின் நல்ல அடையாளம் அதன் தனித்துவமான இசை. தனித்துவமான பண்பாடு இல்லாமல் இனமோ, தேசியமோ இருக்க முடியாது. தனித்துவம் மிக்க தூய்மையான இசையை தருபவன் அந்த இனத்தின், தேசியத்தின் பெரும் சொத்து. இளையராஜா எங்களின் சொத்து ஒரு நாள் என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். „உங்களுக்கு இளையராஜாவை நேரில் சந்தித்து பேச விருப்பமா?'. உடனடியாகவே என்னுடய பதில் 'இல்லை' என்பதாகவே இருந்தது. அந்த மனிதன் தன்னுடைய இசை மூலம் எங்களுடன் தினமும் பேசிக் கொண்டிருக்கிறான். அவனுடைய புல்லாங்குழல் எங்களுடன் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் துள்ளிக் குதிக்கும் போது அவன் இசை எங்களோடு சேர்ந்து துள்ளுகிறது. சோர்ந்து வாடி இருக்கும் போது அவன் இசை தலை கோதிச் செல்கிறது. என…

  10. தெரிந்த விடயம், நாம் எல்லோரும் நாளாந்தம் அனுபவிக்கும் ஒரு விடயமென்றாலும் அதை சுவைபட எழுதுவது என்பது எல்லோராலும் இயலுவதில்லை...அப்படி சுவைபட எழுதக்கூடியவராக இருந்தும் அத்தி பூத்தாற்போல் எப்பவாவது எழுதும் நண்பர் சாய் பிரசாத்தின் பதிவொன்று... __________________________________________________________________ பூவரச மரமும் சில பின்னிரவுகளும்.... யாழ்ப்பாணத்தின் புழுதி மண்டிய கிரவல் வீதிகளில் கழிந்தது என் பால்யம். கிரவல் வீதியும், அது சார்ந்த ஊரும் தேவதைக்கனவுகளின் மிச்சம்போல் இன்னும் நினைவிலிருக்கிறது. மருதங்குள வெளிகளில் நீந்தியும் ,கிட்டிப்புல்லு அடித்தும், விடிய விடிய கண்விழித்தும் கோஸ்டிபார்த்த நண்பர்கள் நினைவுகளில் மட்டும் எஞ்சியிருக்கிறார்கள…

  11. மரணதண்டனை தீர்ப்பு ? சொல்லமறந்த கதைகள் – 17 முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் நெருக்கடிகள் உக்கிரமடைந்தபின்பு ஏராளமான கொலைச்சம்பவங்கள் நடந்துவிட்டன. அரசியல் தலைவர்கள், இயக்க, மற்றும் தொழிற்சங்கத்தலைவர்கள், மதகுருமார், அரச அதிபர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள், கல்விமான்கள், பத்திரிகையாளர்கள், சாதாரண அப்பாவிப்பொதுமக்கள்…. என்று அந்தப்பட்டியல் நீளும். இது ஒரு புறமிருக்க பாதாள உலகக்கோஷ்டிகளின் படுகொலைகளும் தொடர்ந்தன. ஆனால் இந்தப்படுகொலைகள் தொடர்பான நீதிவிசாரணைகள் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. தொடர்ச்சியான நீதிமன்ற விசாரணைகள், அவசரகால சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் விசாரிக்கப்பட்டபோதிலும் பத்திரிகைகளில் பத…

    • 2 replies
    • 1.1k views
  12. ”படிக்கத் தூண்டாத” பெருங் கதை – யுத்தம் சிறு கிழவியொருத்தியின் பத்தோ என்னவோ மகன்களில் இளையவன், தனது 39-ஆவது வயதில், அகாலமாய் இறந்து போனான். யுத்தமல்ல, அது ஒரு அகால மரணம். இறக்கும் போது, மனைவி மற்றும் நாலோ ஐந்தோ பிள்ளைகள் கூட இருந்தன. லெளகீக வாழ்வின் இன்பங்களனைத்தையும் அனுபவித்தே போனது அவனது உடல். விட்டுச் சென்ற 28 வயதேயான ஒரு இள மனைவியின் உணர்ச்சிகள் சாகடிக்கபடும் நெடுந்தூரத் தனிமையும், மறுமணம் என்பதே சிந்திக்கப்படா குழந்தைகளின் எண்ணிக்கையும் சமூகமும் தவிர – காலம் மூடிவிடக் கூடியது அந்த மரணம். ஆனால் அந்த இள மனைவியின் துயரத்தை இளமையை அரித்துக் கொண்டு காலம் போன போக்கின் பின்னும், மேலும் ஒன்பது பிள்ளைகளை உடையவரான அந்தக் கிழவி, பல காலமாக குங்குமமும் சரிகைச் சேலையும் கட்ட…

  13. அன்றைக்குச் சந்திரனுக்கு மகளின் பள்ளிக்கூடத்திலிருந்து, ஒரு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அவனது மகளின்,பள்ளிக்கூட அதிபர் தான் ஏன் மகள் ஒரு கிழமையாப் பள்ளிக்கூடம் வரவில்லை என விசாரித்தார். அவள், வயசுக்கு வந்து விட்டதால், மூன்று நாட்கள் பாடசாலைக்குப் போகாமல் தாய்க்காரி நிப்பாட்டியிருந்தா. வாற திங்கட்கிழமை, கட்டாயம் மகளைப் பள்ளிக்கூடம் அனுப்புகின்றேன் என்று அதிபருக்குச் சொல்லி வைத்தான். பிள்ளையின்ர சாமத்திய வீட்டைப் பெருசாச் செய்து போட வேணும், எண்டு மாமி சொன்னது கேட்டது. சரி, உங்கட விருப்பப் படி,செய்யுங்கோ! ஆனால்,ஆகப்பெரிய ஆரவாரமெல்லாம், செய்யக் கூடாது. இப்பவே சொல்லிப் போட்டன். முதல்ல, அவளைப் பள்ளிகூடத்துக்கு, அனுப்பி விடுங்கோ. பிரின்சிப்பல், ஏன் வரேல்லை எண்டு அடிச…

  14. அந்தக் கம்பீரம் மிக்க ஆண் சிங்கம் இப்படி மலை உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. காதல் கணவனின் திடீர் இழப்பு பெண் சிங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது சில மாதங்களாகவே ஆண் சிங்கம் ஏதோ குழப்பத்தில் இருப்பதை பெண் சிங்கம் கவனிக்கத்தான் செய்தது. முன்பு போல் கனிவு இல்லை, சுகமான அணைப்பு இல்லை. எல்லாம் இயந்திரத் தனமாக இருந்தது. திடீர் திடீரென்று கடும் யோசனையில் சிங்கம் ஆழ்ந்திருக்கும். திடீர் திடீரென்று நாட் கணக்கில் காணாமலும் போய் விடும். முன்பு எல்லாம் இப்படி இல்லை. அங்கே வாழ்;ந்த சிங்கக் கூட்டத்திற்கே இந்த இரண்டு சிங்கங்களும்தான் காதலிற்கு முன்னுதாரணங்கள். மற்றைய சிங்கங்களிடம் இல்லாத ஒரு பிரத்தியேக வாசனை ஒன்றும் அந…

    • 20 replies
    • 5.6k views
  15. எனக்கு நினைவிருக்கிறது அந்த முற்றத்தில் நிற்கும் மரம். பள்ளிக் கூட நாட்களிலும் சரி விடுமுறை நாட்களிலும் சரி நாங்கள் அதிகமாக விளையாடி மகிழ்வது அதன் நிழலில்தான். அப்பொழுதெல்லாம் எனக்கு அந்த மரத்தின் மேல் ஒரு கோபம் இருந்தது. அம்மாவிற்கு கோபம் வரும் பொழுதெல்லாம் என்னை அடிப்பதற்கு கையில் எதாவது குச்சி கிடைக்காதா என்று தேடும்பொழுது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைப்பது அந்த முற்றத்து வேம்பு மரக் குச்சிதான். குச்சி கையில் கிடைத்து விட்டால் அவ்வளவுதான் முட்டிக்கு கீழ் வீங்கிவிடும். இதற்காகவே நான் என்ன செய்தேன் தெரியுமா? கைக்கெட்டும் கிளைகளை எல்லாம் அம்மாவிற்கு தெரியாம வெட்டி விட்டேன். அதற்கும் குச்சி சிதற சிதற வாங்கி இருக்கிறேன். என்னதான் இருந்தாலும் அந்த மரம் எங்களுக்கு …

  16. Started by SUNDHAL,

    தங்கமாளின் தாயும் தந்தையும் 'தங்கம்' என்று பெயர் வைத்ததே அவள் உடல் முழுவதும் தங்க நகைகளால் அலங்கரித்து பார்க்க வேண்டும் என்ற ஆசையால் தான். தங்கம் என்ற பெயர் பெற்றதின் நேரப்பலன் அவள் காதில் இன்றுவரை ஒரு பொட்டுத்தங்கம் அணியும் புண்ணியம் கிடைக்கவில்லை, ஆனால் குணம் தங்கம். வாலிபத்தில் மஞ்சள்கயிறு கட்டியவன் கட்டிய கடமைக்கு வயிற்றில் குழந்தையைக் கொடுத்து விட்டு போய்ச் சேர்ந்து விட்டான். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு இருந்தவனும் படிப்பை பாதியில் விட்டுவிட்டு எங்கோ ஓடிப்போனான். கூலி வேலை செய்தால் தான் அவளுக்குச்சாப்பாடு அல்லது அரைப்பட்னி தான். கடவுளே கதி என்று காலத்தை ஓட்டி வந்தால். காணாமல் போன மகன் ஒருநாள் திடீர் என்று வந்து நின்றான்...! வந்தவன் தனியாக வரவி…

  17. மீண்டும் அப்பாவாகிறேன்.... [size=5]தாய் தகப்பனுடன் இருக்க முடியாத காரணங்களினாலும், தாய் தகப்பன் இருந்தும் சில சமூகப்பழக்க வழக்க நடைமுறைகளை சரிவரச் செய்யத் தெரியாத ஒரு வகை உளவியல் வருத்தங்களைக் கொண்ட பிள்ளைகளை பராமரிக்கின்ற இடம் தான் நான் வேலை செய்யும் இடம். மெசின்களுடன் வேலை செய்வதை விட இந்த மனிதர்களுடன் வேலை செய்வதென்பது மிகவும் கஸ்ரமான ஒன்று. அதிலும் குழந்தைகளுடன் அதுவும் கொஞ்சம் மனம் சரியில்லா உளவியல் குறைபாடுள்ள பிள்ளைகள் என்றால். அதை அனுபவிச்சவர்களுக்குத் தான் தெரியும். ஒரு நாள் வேலையில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது என்னுடைய பொறுப்பதிகாரி வந்து உடனே வா உன்னுடன் கதைக்க வேண்டும் என்று என்னை கூட்டிக் கொண்டு தனது அலுவலகத்துக்குள் …

    • 28 replies
    • 3.1k views
  18. சுரேஸ் கமல்காசனை போல் அழகு என்று சொல்லமுடியாது ஆனாலும் ரஜனியைவிட அழகானாவன்.ஒரு பக்கவாட்டில் பார்த்தால் ரஜனியின் சாயல் தெரியும் இதனால் நாங்களும் இதை சொல்லி அவனை உசுப்பேத்தி விடுவம்.அவனுக்கும் மனதில் ரஜனி என்ற நினைப்பு இருந்தது.யாழ்பல்கலைக்கழகத்தில் கணித துறையில் முதலாம் ஆண்டில் பயின்று கொண்டிருந்தான்.ஆங்கில பாடத்திற்க்கு யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஆங்கில டியுசன் வாத்தியிடம் சென்று கொண்டிருந்தான் .உயர்தரம் எடுத்தவுடன் ஆங்கிலம் பேச,எழுத டியுசனுக்கு போறதுதான் அந்த காலத்து வழமை.நானும் அவனுடன் போய் வந்து கொண்டிருந்தேன் .அவன் பல்கலைகழகத்திற்க்கு அருகாண்மையில் அறையில் வாடகைக்கு தங்கியிருந்தான்.படிப்பதற்க்கு அதிக நேரத்தை செலவிடலாம் என்பதால் இந்த முடிவை எடுத்திருந்தான். படிப்பதுடன் வ…

    • 34 replies
    • 3.4k views
  19. குயில் கூவும் நகரம்... _தர்மினி_ அ[size=4]ந்த வயோதிபப் பெண் சில மாதங்களின் முன் இலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தார். பிள்ளைகள் எல்லோரும் அகதிகளாக வந்த பின் அவர் தனித்திருக்க முடியாமல் இலண்டனுக்கு வந்து வாழ்பவர்.இப்போது நாட்டில் சண்டையில்லை. போக்குவரத்துப் பாதை பிரச்சனையில்லை.பலரும் விடுமுறைக் காலங்களைக் கழித்துவிட்டு வருகிறார்கள்.ஊரையும் வீட்டையும் சகோதரிகளையும் பார்த்துவிட்டு வருவது போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு அந்த மனிசி பல ஆண்டுகளிற்குப் பிறகு வந்திறங்கினார் யாழ்ப்பாணம்.[/size] [size=4]‘லண்டனிலை பூட்டின சூட்கேஸை யாழ்ப்பாணத்தில அக்கா வீட்டில போய்த்தான் திறந்தனான்’ என அதை ஒரு ஆச்சரியமாக நினைத்தார்.முன்னரெல்லாம் கொண்டு போற பொருட்களைக் கொட்டிக்…

  20. [size=4]படுத்தவுடன், பத்து நிமிடத்தில் நித்திரைக்குப்போய் விடும், பழக்கமுள்ளவன் தான், சந்திரன். இப்போதெல்லாம், வெட்ட, வெட்டத் தழைக்கும், சூரபத்மனின் தலை தான் அவன் நினைவுக்கு வருகின்றது. வேறொன்றுமில்லை, இந்தக் கடனட்டை தான், அவனைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. ஏதாவது, செய்யாவிட்டால், அது பூதாகரமாகி, அவனையும் விழுங்கி விடக் கூடும், என்ற பயம் அவனை ஆட்கொண்டதில்,நித்திரை அவனிடமிருந்து நிரந்தரமாகத் தள்ளி நின்றது.[/size] [size=4]மனுசி கொஞ்சம் சந்தோசமாக இருந்த நேரம் பார்த்து,[/size] [size=4]என்னப்பா, நீர் ஒரு சீட்டுப் போட்டனீர் எல்லே! இப்ப அது முடியிற நேரம் வந்திருக்கும் தானே. அதை எடுத்து, இந்தக் கடனட்டையைக், கட்டி விடுவமே!.[/size] [size=4]கொட்டக் கூடிய கனிவு அவ்வளவையும், …

  21. எனக்குப் பிடித்த மிகநல்ல மொழிபெயர்ப்பு உருவகக் கதை ஒன்று...எங்கள் துப்பாக்கி முனைகளின் கீழ் நசுக்கப்படும் வாழ்க்கையை உருவகித்து இந்தக் கதையை வாசித்துமுடிக்கையில் எண்ணிப்பாருங்கள்..மீதி நான் கூறாமலே உங்களுக்கு புரியும்... _____________________________________________________________________________________ ஏதோவொரு நாளில்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் [size=5]தமிழில்: விமலாதித்த மாமல்லன்[/size] [size=5]மழையற்ற வெம்மையுடன் திங்கள் விடிந்தது. அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும் பட்டம் பெறாத பல் டாக்டருமான அரேலியோ எஸ்கவார், அன்று காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்துவிட்டிருந்தார். வார்ப்பில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றைக் கண்ணாடி …

  22. [size=3] [size=5]ஹெர்டா முல்லருக்கு 2009-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நொபல் பரிசு வழங்கப்பட்டது முற்றிலும் ‘அசாதாரணமான’ ஒரு நிகழ்வு தான். கடந்த நூறு ஆண்டுகளில் நொபல் பரிசு பெறும் 12-ஆவது பெண் அவர் என்பது ஒரு காரணம். அது மட்டுமல்லாமல் சர்வாதிகார அரசுக்கு எதிராக இயங்கிய எழுத்தாளர்களில் சோல்ஷெனீட்ஸனுக்கு (Solzhenitsyn) அடுத்து இந்த விருதை பெறும் எழுத்தாளர் அவர். முல்லர் ரோமனீயாவின் கம்யூனிச சர்வாதிகாரி நிகொலாய் சௌஷெஸ்குவின் (Nicolae Ceausescu) ஆட்சியில் தனிப்பட்ட முறையில் மிகுந்த துன்பங்களை அனுபவித்து, தொடர்ச்சியான அவமானத்துக்கு ஆளாகி, ஒரு கட்டத்தில் தன் உயிருக்குப் பயந்து தன் சொந்த நாட்டை விட்டு வெளியேறினார். அவரது எழுத்துக்களில் இந்த அலைக்கழிப்பை, அதன் வலியை தொடர்ந்து பத…

  23. [size=4]அட...போய்க் குளியனடா...............[/size] [size=4]வழக்கமான, சனிக்கிழமைச் சத்தத்தில் , அந்தச் சிட்னியின் புறநகர்த் தெரு ஒரு முறை, புரண்டு படுத்தது![/size] [size=4]அந்தத் தெருவுக்குப் புதிதாக வந்திருந்த அம்மா தான், தனது பேரனைக் கோவிலுக்கு அழைத்துப் போவதற்காக, குளிக்க வைக்க முயற்சிக்கிறாள்![/size] [size=4]இந்தத் தெரு, அந்த அம்மா வர முந்திக் கொஞ்சம் அமைதியாகத் தான் இருந்தது! அந்தத் தெரு மட்டுமல்ல, சந்திரனின் குடும்பத்திலும், அமைதி சூழ்ந்திருந்தது![/size] [size=4]தொண்ணூறுகளில், அகதியாக வந்தாலும், இரவு நேர வேலை ஒன்றில், சேர்ந்து, தனது மனைவியையும், இங்கு அழைத்து மூன்று குழந்தைகளுடனும், சந்தோசமாகத் தான் போய்க் கொண்டிருந்தது, வாழ்க்கை![/size] [size=4]பிள்ளைக…

    • 21 replies
    • 2.1k views
  24. 1984 -85 ம் ஆண்டின் இறுதிக் காலங்கள், இழக்கப்போகும் பெறுமதிமிக்க காலங்களைப் பற்றிய எதுவித அறிகுறிகளுமில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. ஊருக்குள் பிரச்சனைகள் மெதுவாய் தொடங்கியிருந்த காலம். 19 - 20 வயதுக்கான எவ்வித முதிர்ச்சியும் இன்றி, எவ்வித கனவுகளும் இன்றி, பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தேன். சிங்கள நண்பர்கள் பலர் ஊரைவிட்டு மெது மெதுவாய் இடம் பெயர, இஸ்லாமிய நட்புகளும் பிரச்சனைகளின் காரணமாக தொலைந்து கொண்டிருந்தன. இருப்பினும் துணிந்தவர்கள் சிலரின் நட்புகள் மங்கலான மாலைப் பொழுதுகளில் தொடரத்தான் செய்தன. ஒன்றாய் பழகிய மூவின நட்புகளும் தனித்தனியே தொடர்பில்லாது தம்வழியே சென்றுவிட்டாலும், நட்பு என்னும் சொல் மட்டும் தனது தன்மை…

  25. [size=3]ஒரு மிகச்சிறந்த சிறுகதை எழுதுவது எப்படி என்பதற்கு இக்கதை மிகச்சிறந்த உதாரணம்.[/size] எஸ்தர் - வண்ண நிலவன் [size=3] [size=5]முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் போகிற இட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.