Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. வெந்த புண்ணில்... பிராங்போட் விமான நிலையத்தில், இலங்கையிலிருந்து புறப்பட்ட விமானம் தரை இறங்கிவிட்டதற்கான அறிவிப்பு மின்திரையில் எழுத்தில் ஒடீக்கொண்டிருந்தது. அதனைப் பார்த்த ஜெகன் 'எல்லாப் பரிசோதனையும் முடிந்து பயணிகள் வெளியேற ஒன்றரை மணித்தியாலங்களாவது செல்லும்' என்ற கணிப்பில், குட்டி போட்ட பூனைமாதிரி அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தான். இதனை அவதானித்த, விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவன் ஜெகனின் அடையாள அட்டையை வேண்டி, பரிசோதித்து, அதனைக் குறிப்பெடுத்த போது, ஜெகனுக்குப் பயம் ஏற்பட்டதுடன். அவனது இதயம் மேலும் படபடக்கத் தொடங்கியது. இந்நிலையில், சிறிது நேரம் செல்ல, பயணிகள் வெளியேறியபோது, தான் அழைத்துச் செல்ல வந்த ஆள் அதற்குள் வருகிறாரா என்று அவதானித்துக…

    • 11 replies
    • 1.5k views
  2. Started by jkpadalai,

    ரயிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான். அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்று…

  3. [01] அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்! பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை. அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்சம்…

  4. நான் கண்ணாடிக்காரன்! "இப்போது நான் கரும்பலகையில் எழுதும் சொற்களுக்கு எதிர்க்கருத்து சொல் எழுதுங்கோ பார்க்கலாம்.. ஒரு பிழைக்கு ஒரு அடி பரிசு" என்று அறிவிப்பு செய்துகொண்டே விறுவிறுவென எழுத ஆரம்பித்தார் ஜீவன் சேர். எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஜீவன் சேரை எங்களில் சிலருக்கு பிடிக்கும், பலருக்கு அவர் பெயரை சொன்னாலே வியர்த்து விடும். அழகாக புது பஷனில் ஜீன்ஸ் அணிந்திருப்பார். அவர் பேசும்போது முகத்திலே துறுதுறுவென மீசை நர்த்தனமாடும். இரத்தம் பாய்ந்து சிவப்பேறிய அவரது கண்கள் அவர் ஒரு பெரிய கோபக்காரர் என்பதை பறைசாற்றும். ஏதாவது தப்பு செய்தால் முதலில் அடிப்பார் பிறகு விலாவரியாக சிறப்பு விசாரணையை தொடங்குவார். அவர் வருகிறார் என்றாலே ஒரு பயலும் இருக்கிற இடத்தினை விட்டு அசைய மாட்ட…

  5. " ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்" பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவள் இராணுவ போலீஸ்காரியின் அழைப்பைக்கேட்டு திரும்பினாள். “மிஸ்டர் குமார ஓயாவ பலன்ட அவிள்ள இன்னவா” ( திரு குமார உன்னை பார்க்க வந்தி…

    • 6 replies
    • 2.9k views
  6. தாயும் நீயே தந்தை நீயே .......... லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பலரோடு லதாங்க்கினி யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின் பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி கொடுத்த பின் எரியூட்ட பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து ஒரு விடுதிக் நிர்வாகி மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் த…

  7. [01] அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்! பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை. அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்ச…

  8. ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம் அன்புள்ள அக்கா, **** அக்காவை அறிஞ்சிருப்பியள். அவாவும் ஒரு எழுத்தாளர். மகளீர் அமைப்பு வெளியிட்ட வெளியீடுகள் ஈழநாதம் புலிகளின் குரலில எல்லாம் அவாடை எழுத்துகள் வந்திருக்கு. தடுப்பிலயிருந்து இப்ப விடுதலையாகி வந்திருக்கிறா. குடும்பம் சரியான கஸ்ரம். பாவம் மேலும் 2தங்கச்சியவை இருக்குதுகள். இவாக்கு 37வயதாகீட்டுது. வெளிநாட்டு மாப்பிளைமார் ஆருக்கேன் கலியாணம் பேசி அவவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும். ஏதாவது ஒரு வழி செய்யுங்கோக்கா. அன்புடன் **** இதென்னடா அநியாயம் விழுந்தது….? நானென்ன கலியாணப் புறோக்கரெண்டு நினைச்சிட்டாங்களோ ? மனிசில சின்னக் கோவமும் வந்தது. இந்த நாலுவரிக்கடிதத்தை எழுதினவனும் ஒர…

    • 80 replies
    • 9.3k views
  9. என் கொல்லைபுறத்து காதலிகள்: முதல் கொழும்பு! முதல் ரயில்! முதல் பெண்! தேதி : ஆகஸ்ட் 15, 1977 நேரம் : இரவு 9.00 மணி இடம் : நுகேகொட பக்கத்துவீட்டு செனவிரத்ன உள்ளே நுழைகிறார். வந்த வேகத்தில் அவசரமும் படபடப்பும். கால்கள் நடுங்குகின்றன. சிங்களத்தில் சொல்லும்போதே வாய் குழறுகிறது சந்திரா … மோடயங்கள் ஒவ்வொரு தமிழர் வீடாய் வந்துகொண்டு இருக்கிறாங்கள். எல்லா இடமும் அடியும், கொள்ளையும். நீங்க உடனடியாக இந்த இடத்தை விட்டு போய் விடுங்கள் எங்க போவம் செனவி? இங்க தானே பத்து வருஷமா இருக்கிறோம், இப்ப போகச்சொன்னா? போலீசில் போய் ஒரு என்ட்ரி போடுவோமே? ஓஐசியை எனக்கு தெரியும் நோ யூஸ், நினைத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. செய்வது எல்லாமே அரசாங்கத்து ஆட்கள…

    • 4 replies
    • 1.3k views
  10. ஒரு பசுவின் கண்ணீர் கதை ”என் சோக கதையை கேளு மனிதகுலமே” என்று ஒரு பசு என் கனவில் நேற்று வந்து கண்ணீர் விட்டது. ”என்ன பசு?, என்ன பிரச்சனை உனக்கு?” இது நான். ”என்ன பிரச்சனையா?, பிரச்சனையே நீங்க தானே!” “என்னது..நானா?, நான் என்ன செஞ்சேன்” ”நீங்கன்னா...மனிதர்களை சொன்னேன்” ”என்னது மனிதர்களா?, நாங்களாம் எவ்வளவு நல்லவங்க, எப்படி உங்க குலத்தை கோமாதா எங்கள் குல மாதான்னு கும்பிடுறோம், மாட்டுப்பொங்கல்ன்னு ஒரு விழாவே உங்களை வச்சு கொண்டாடுறோம், நீ என்னடான்னா ரொம்ப தான் சலிச்சுகிறியே..இவ்வளவும் செய்யிற எங்களை போயி பிரச்சனைன்னு சொல்லுறியே” “அடா, அடா..உங்க மக்கள் செய்யிற செயலை நீ தான் மெச்சிக்கணும்., எப்படி எல்லாம் எங்களை கொடுமை படுத்த முட…

    • 7 replies
    • 2.3k views
  11. Sunday, November 20, 2011 என் கொல்லைப்புறத்து காதலிகள் : நல்லூர் முருகன்! “டேய் கீர்த்தி .. அந்த பொண்ணு தாண்டா .. உடன திரும்பாதடா .. பொறு” “யாரடா? அந்த தேர் முட்டி மூலையில நிக்குதே அதா?” “அவளே தாண்டா, கொல்றாடா!” “டேய் அது கஜன்ட ஆளுடா” “அண்ணியை பற்றி பிழையா சொல்லாத, அவ இல்லடா, பக்கத்தில, பச்சை சாரி” “யாரு, கனகாம்பர பூ ஜடை போட்டதா”<a href="http://lh4.ggpht.com/-YmxaeNF98eo/TshHrnc5YHI/AAAAAAAAAik/NFeGz35pehQ/s1600-h/Picture%252520022%25255B6%25255D.jpg"> “அவளே தாண்டா, என்னா பொண்ணுடா!” “கண்ணாடி போட்டிருக்காளே மச்சான்” “அது தான் இன்னும் கொல்லுதடா!” “என்கிட்ட சொல்லீட்ட இல்ல? இப்ப பாரு” முருகன் கிழக்கு வாசலால் வெளியே…

    • 3 replies
    • 1.7k views
  12. சுதந்திரா என்ற பெயரை எங்கேயும் வாசிச்ச ஞாபகம் உங்களுக்கு வரலாம். அந்த சுதந்திரா என்ற பெயரில் எழுத்தில் நான்தான் உலாவியிருக்கிறேன். இப்போது சுதந்திரா என்ற பெயரில் எழுவதும் இல்லை. 2001 ஒரு முகமறியா வீரனின் ஞாபகமாக எழுதிய இக்கதை ஒரு பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த நிகழ்வை நினைவு கொள்ளு முகமாக இணைக்கிறேன். சுதந்திரா என்ற பெயரை முதலில் தாயகத்தில் வெளியாகிய ஈழநாதம் பத்திரிகையில் எழுதிய காலங்களில் பாவித்த புனைபெயர். 2002 தாயகப்பயண அனுபவப்பதிவினை எழுதிய லெப்.கேணல் அருணாண்ணைக்கு அனுப்பியிருந்தேன். அருணாண்ணா வாசிக்க அனுப்பிய கட்டுரை ஆனால் பத்திரிகையில் வெளிவரப்போவதாக ஈழநாதத்தில் விளம்பரம் வந்த போது கிடைத்த மகிழ்ச்சி இன்றைக்கும் மறக்க முடியாத ஞாபகம். அப்போது …

  13. விளக்கு விற்பவன் கதை – யுகன் எனக்கு கோவில்கள் அதன் பிரமாண்டங்கள் எப்போதுமே ஆச்சரியம் தருவனவாகவே இருந்திருக்கின்றன. நான் தீவிர ஆன்மீகவாதியோ முழுமையான கடவுள் மறுப்பாளனோ அல்லன். மனிதர்களிடையே காணப்படும் வர்க்க பேதத்தையும் ஏற்றத்தாழ்வுகளையம் கண்டும் கருஞ்சிலையாய் இருக்கும் கடவுளரில் எனக்கு உடன்பாடில்லைத்தான், இருந்தும் எனக்கு கோவில்கள் பிடிக்கும் என்னுள்ளே கரையில் இட்ட மீனாக துடிக்கும் அமைதியின்மையை வலை போட்டுப் பிடித்துக்கொண்டவை கோவில்கள். கோவில்கள் எனக்கு அமைதியைத்தரும் இடம் மட்டுமல்லாமல் ஆச்சர்யம் தருவனவாக இருப்பது அங்கு காணப்படும் சிற்பங்கள் மற்றும் சுவரோவியங்களும்தான். சிற்பங்கள் ஓவியங்கள் என்றதும் இந்தியக் கோவில்கள் தான் என்னை ஆக்கிரமித்துக்கொள…

  14. "டேய் தம்பி ... உன்ர பிறண்ட்ஸ் யாரோ வந்திருக்குறாங்கள். போய்ப் பார்! " என வீட்டுக் கேற் பக்கமாக கையைக் காட்டினார் அம்மா. ராணிக் காமிக்ஸ் மாயாவிக் கதைகளுக்குள் ஆழமாய்ப்போய்.... தங்கக் கடற்கரை ஓரத்தில் உலாவந்து கொண்டிருந்த எனக்கு, அது காதில விழவே இல்லை. ஆனால், பாழாய்ப்போன என்ட பாசக்கார நண்பர்களின் சைக்கிள் பெல்லடிச் சத்தம்..... பாலாலியில இருந்து அடிக்குற ஆட்லறி வெடிக்கிற சத்தத்தைவிட அதிகமாக இருந்ததால்..... கேற்றடிக்குப் போய், என்னடா.... ?! என்ன விசயம்?! என , கேட்டுக்கொண்டே... கேற்றைத் திறந்தேன். ரவியும், கார்த்தியும் வந்திருந்தார்கள். என் பள்ளி நண்பர்கள். நான் வர பிந்தினதால அவங்களுக்கு கொஞ்சம் கடுப்பு என்பது அவர்களது முகத்திலயே விளங்கிச்சு . "ஏன்டா...! பள…

  15. முன்னொரு பொங்கல் நாளில் யோ.கர்ணன் இன்றைய பொங்கலைப் போலவே மூன்று வருடங்களின் முன்னரும் ஒரு பொங்கல் நாள் வந்தது. அன்று நாங்கள் யாரும் பொங்கி, சூரியனிற்குப் படைக்கவில்லை. அன்று விடிந்ததன் பின், அது ஒரு பொங்கல் நாளென்றே நினைக்க முடியவில்லை. அது பற்றிய சிந்தனையெதுவுமிருந்திருக்கவில்லை. ஏனெனில், அன்றுதான் நான் அகதியானேன். ஒரு அகதிக்குரிய முழுமையான அர்த்தங்களையுணர்ந்து அகதியானேன். மரணமும், கண்ணீரும், காயமும் நிறைந்த பெரிய நாடோடி வாழ்வின் முதல் அடியை அன்றுதான் எடுத்து வைத்தேன். இதுவரையான யுத்த இயல்புகளிற்கு மாறாகவே இறுதியுத்தமிருந்ததினால், யுத்தத்தின் வழமையான அறிகுறிகளெதுவுமின்றியே மன்னாரில் ஆரம்பித்த யுத்தம் ஒவ்வொரு ஊருக்குள்ளும் சத்தமின்றி மெதுமெதுவாக நுழைந்து கொண்…

  16. அமைதிப் பேய்கள்.... ஆறுமுகத்தார் வலுவேகமாகச் சந்தையால வந்துகொண்டிருந்தார்.ஆளுக்கு மூச்சிரைத்துக்கொண்டிருந்தது.சைக்கிளின்ர வலதுகால்ப் பெடல்க் கட்டையின்ர மிதியிலை இருந்த இறப்பர்க் கட்டையிலை ஒண்டு எங்கையோ கழண்டு விழுந்துபோய்விட ஒரு கட்டையும் நடுவில இருந்த அச்சுக் கம்பியிலும்தான் இவ்வளவு நாளும் நிண்டுகொண்டிருந்தது மிதி...போன மாசம் மற்ற இறப்பக் கட்டையும் கழண்டுபோய்விட இப்ப உழண்டியாய் இருந்த நடுக்கம்பி மட்டும்தான் மிதியிலை மிச்சமாக இருந்தது...போள்சும் தேஞ்சு கிறிஸும் இல்லாமல்க் காஞ்சுபோய்க் கிடந்த அந்தச் சைக்கிளை மிதி இருக்கும்போது ஓடுறதெண்டாலே சந்தைக்குப்போகிற அரை வழியிலேயே சாப்பிட்டது செமிச்சுப்போய் திரும்பப் பசிக்கும்...இப்ப மிதி கழண்டு விழுந்துபோய்விட கப்பிபோல வழுக்…

  17. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஞ்ஞானச் சொற்பொழிவில் பார்த்த வீடியோ காட்சி இது: ஒரு ஆபிரிக்கச் சிறுமி-பத்துப் பன்னிரண்டு வயதிருக்கலாம். சில கட்டில்கள் மட்டுமே கொண்ட ஒரு பின் தங்கிய மருத்துவ நிலையத்தில் சோர்ந்து கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளை எட்டத்திலிருந்து படம் பிடிக்கும் வீடியோவை நோக்கி தண்ணீர் எனச் சைகையில் கேட்கிறாள். தண்ணீர் வழங்கப் படுகிறது. ஆனால் ஒரு முறடு வாயில் வைத்ததுமே வேதனையில் முகம் கோண தண்ணீர் குவளையைத் தட்டி விடுகிறாள். தாதி மாரின் கரங்களை மெதுவாகக் கடிக்கவும் முயல்கிறாள். தாகமும் தண்ணீரின் வேதனைக்குப் பயப்படும் தவிப்பும் அவள் கண்களில் தெரிகின்றன. இவள் பாதிக்கப் பட்டிருக்கும் நோய் நிலைமைக்குப் பெயர் "நீர் வெறுப்பு நோய்" (hydrophobia) இந்த நிலைமைக்குக் கார…

  18. பாரதியார் உட்கார்ந்த நாற்காலி! (ஆனந்த விகடன் - 13.9.1964) "இதுதான் பாரதியார் குடியிருந்த வீதி!'' என்றார் புதுவை நண்பர். ''இந்த வீதிக்குப் பெயர்..?'' ''ஈசுவரன் கோயில் தெரு!'' கிழக்கு மேற்காகச் செல்லும் அந்த வீதி, கடற் கரையில் போய் முடிகிறது. ''பத்துப் பன்னிரண்டு வருஷ காலம் இந்தத் தெருவில்தான் குடியிருந்தார். அதோ தெரிகிறது பாருங்கள், இடது சாரியில் இருபதாம் நம்பர் வீடு... அதுதான் பாரதியார் குடியிருந்த வீடு!'' கவியரசர் வாழ்ந்த அந்த மாடி வீட்டையே சற்று நேரம் இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். பூட்டப்பட்ட கதவுகளுடன் பாழ்பட்டு நின்ற …

  19. அக்காவுக்கும் பொதுமன்னிப்புக் கிடைக்கும். 19வது வருடத்தை இவ்வருடத்தோடு நிறைக்கிறது காலம். மகனுக்கு இப்போ 18வயது ஆரம்பமாகப் போகிறது. அவன் எப்படியிருப்பான் என்னென்ன கனவுகளுடன் பறந்துதிரிவான் என்றதெல்லாம் அறிய வேணும் போலும் அவனைப் பார்க்க வேணும்போலையும் இருக்கும். எல்லா அம்மாக்களைப் போலவும் அவளது குழந்தையைப் பற்றி ஆயிரமாயிரம் ஆசைகள். ஆனால் எல்லா ஆசைகளும் உள்மனசுக்குள் சுனாமியலையாய் அடிக்க கண்ணீரால் நனையும் அவளது கனவுகளை யாராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தனை வருடங்களிலும் எத்தனையோ பேர் உள்ளே வந்தார்கள் போனார்கள். அவளும் தனக்கும் ஒருநாள் விடியுமென்றுதான் காத்திருந்தாள். தீர்ப்பு ஆயள்தண்டனையென்றாகிய பின்னர் எல்லாக் கனவுகளும் ஒரேயடியாய் சாம்பலாகிப்போச்சு. இருளுக்…

    • 8 replies
    • 2k views
  20. யோ.கர்ணன் சிறுகதை: ஆதிரையும் நாற்பது ஆமிக்காரரும் பல வருடங்கள் நீடித்த ஈழப் போர் சூழலிலிருந்துதான் இன்றைய புலம் பெயர் வாழ்வதென்பது தீவிரமாகக் கவனிக்கப்பட்டது. 50களில் தலைகாட்டிய ஈழத்தமிழர் பிரச்சனை 80களில் உலகக் கவனத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆங்காங்கே உதவிகளும் ஆதரவுகளும் கிடைக்கப்பெற்றும் அரசியல் சூழ்ச்சியினால் ஆயுத உதவியினால் 2009இல் இறுதி நிலையை எட்டியது. போர் முடிந்துவிட்டதா அல்லது தமிழீழம் எனும் கனவு தகர்ந்துவிட்டதா எனும் கேள்வியே பேரோசையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இலங்கையுடன் கைக்கோர்த்து பல விசயங்களைச் சாதித்துக்கொள்வதற்காகச் சீனாவைப் போல பல அமைப்புகளும் நாடுகளும் இணைந்து தமிழ் இனத்தை அழிப்பதில் கூட்டுச் சேர்ந்து மிகப்பெரிய அதிகார சக…

  21. அடுத்த பிறவியில் பூனையாய் பிறப்போம்! மூன்று வாரங்களுக்கு முந்திய ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு. இலக்கமற்ற பிரைவேட் நம்பர் ஒன்றின் மூலம் என் கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகின்றது. “கொட்டி (புலி)” என்று ஆரம்பித்து ஏதேதோ சிங்களத்தில் வசவு வார்த்தைகளாக வந்து விழுகின்றது. நான் நிதானிப்பதற்குள் அந்தத் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது. இது நடந்து அடுத்த ஞாயிறு காலை உடற்பயிற்சி நிலையத்துக்குக் காலை செல்லும் போது அதுவரை அணைத்திருந்த கைத் தொலைபேசியை விழிக்க வைக்கிறேன். முந்திய சனி இரவு 11.09 இற்கு என் கைத் தொலைபேசியில் ஒரு மெஜேச் பதிவாகியிருக்கிறது, அதுவும் சிங்களத்தில். நேரே சிங்களம் தெரிந்த நண்பர் வீட்டுக்கு என் …

    • 7 replies
    • 1.3k views
  22. மூன்று நகரங்களின் கதை – க.கலாமோகன் அப்பா இறந்துவிட்டார் யாழ்ப்பாணத்தில். காலையில்தான் தந்தி வந்தது. பாஸ் எடுத்து கொழும்பில் வந்து நிற்கும் உறவினர்களுடன் நான் உடனடியாகப் பேச வேண்டும் என்பதை தெரிவிக்கும் சிறு குறிப்பு: Contact Immediately. தந்தி கிடைக்குமுன் எழுதத் தொடங்கிய சிறுகதையின் பக்கங்கள் சில மேசையின் மீது அலங்கோலமாகக் கிடக்கின்றன. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு கீழேயிறங்கி சிகரெட் விற்பனை நிலையமொன்றில் நுழைந்து சில ரெலிகாட்களை (பொதுத் தொலைபேசி நிலையத்திலிருந்து பேசுவதற்காக உபயோகிக்கப்படும் கார்ட்கள்) வாங்கிய பின், தொலைபேசிக் கூடமொன்றிற்குள் போய் கொழும்பிற்கு அடிக்கின்றேன். “சாப்பிடப் போய்விட்டார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து எடுங்கள். அவ…

    • 18 replies
    • 2.5k views
  23. ஏப்ரல் 1994 இல் இந்தியா டுடேயில் வெளிவந்த ஈழத்து சிறந்த எழுத்தாளர் 'உமா வரதராஜன்' அவர்களால் எழுதப்பட்ட பலரால் வாசிக்கப்பட்டு வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறுகதை. கதையின் பின்புலம் பிரேமதாசா காலத்தை போன்று தோற்றினும் இன்றைய காலத்தையும் வென்ற சிறு கதை ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அரசனின் வருகை உமா வரதராஜன் மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை …

  24. தாழ்ப்பாள்களின் அவசியம் அ.முத்துலிங்கம் அம்மாவுக்குக் கனடாவில் நம்ப முடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்குப் பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்குப் பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்குப் பூட்டு இருந்தது. பெட்டகத்துக்குப் பூட்டு. வாசல் கதவுக்குப் பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாகப் பூட்டு மயம். ஆனால் கனடாவில் குளிர்சாதனப் பெட்டிக்குக்கூடப் பூட்டு இல்லாதது மன்னிக்க முடியாத குற்றமாக அம்மாவுக்குப் பட்டது. எல்லாக் குளிர்சாதனப் பெட்டிகளும் பூட்டோடு வரும் என்றுதான் அவர் நினைத்தார். கொழும்பில் இருந்தபோது அவர் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே வர…

  25. Started by கோமகன்,

    ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள். இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்…

    • 13 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.