வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
391 topics in this forum
-
-
(படம்: ஏ.பி) ஏழு சுயசரிதைகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பல கவிதைத் தொகுப்புகள் என கடந்த 50 ஆண்டு காலமாக தனது எழுத்துகள் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் மாயா ஏஞ்சலோ. மண்ணை விட்டுச் சென்ற அந்த மாய மனுஷி மனிதத்துக்காக விட்டுச் சென்றவை அனைத்தும் உன்னதப் படைப்புகள். இவ்வேளையில் அவரை நினைவுகூரும் வகையில், அவர் உதிர்த்தவற்றில் நம்மைச் செதுக்கக் கூடிய 10 பொன்மொழிகளின் தொகுப்பு இங்கே: 1. "மக்கள் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மறந்துவிடுவர்; நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்துவிடுவர்; ஆனால், அவர்களுக்கு நீங்கள் எத்தகைய உணர்வை அளித்தீர்கள் என்பதை என்றும் மறக்கமாட்டார்கள். வாழ்வில் நான் இதைத்தான் கற்றுக்கொண்டேன்." 2. "வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது;…
-
- 0 replies
- 867 views
-
-
நேற்று அளவெட்டிஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இசை தொகுப்பு வெளியீடும் இசை நிகழ்ச்சியும் சில புகைப்படங்கள் 2நன்றி முகனூல்
-
- 1 reply
- 864 views
-
-
குவர்னிகா ஓவியம் பாப்லோ பிக்காஸோ 1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி, ஒரு திங்கள் கிழமையின் பிற்பகல் பொழுது, ஸ்பெயினின் வட எல்லைக்கருகில் உள்ள குவர்னிகா என்னும் சிறிய நகரம் உழைத்துக் களைத்துப் போயிருந்தது. ஏனெனில் அன்று அந்த நகரத்தின் சந்தை கூடும் தினம். கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு ஒரே இடத்தில் கூடுவார்கள். அதனால் காலையிலிருந்து ஜனநெரிசலும், வியாபாரக் கூச்சலுமாக இருந்த நகரம் சற்றே ஆசுவாசம் கண்டிருந்தது. சற்றும் எதிர்பார்த்திராத அந்த வேளையில், சரியாக 4:30 மணிக்கு, மேகங்களுக்கு இடையில் மேகமாக இருந்து திடீரென உருவம் பெற்றதைப் போல ஜெர்மனியப் போர் விமானங்கள் வெளிப்பட்டன. அவற்றின் இரைச்சலை என்னெவென்று பிரித்தறிவதற்குள் அவை சரமாரியாகக் குண்டுகளை…
-
- 0 replies
- 862 views
-
-
சூரியோதயத்தின் அழகான விடிவைப்போல் தமிழரின் வாழ்வும் ஓர் நாள் அழகாய் விடியும். இந்த உதயத்தின் போது வெளியான நிறங்களாக எம் தேசியக்கொடி வானில் பறக்கும்.
-
- 0 replies
- 862 views
-
-
- ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான பெண் படைப்பாளிகளிலோருவர் அருண் விஜயராணி. அவர் இன்று மறைந்துள்ளதாக எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் முகநூலில் அறிவித்திருந்தார். அவரது மறைவையொட்டி எழுத்தாளர் முருகபூபதி எழுதிய இந்தக்கட்டுரை வெளியாகின்றது. - கன்னிகளின் குரலாக தனது எழுத்தூழியத்தை தொடர்ந்த அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் இலங்கை வானொலி ‘ விசாலாட்சிப்பாட்டி ‘ இலக்கியத்துறையில் ஆற்றிய பங்களிப்பு ” வணக்கம்…. பாருங்கோ…. என்னத்தைச் சொன்னாலும் பாருங்கோ, உங்கடை விசாலாட்சிப்பாட்டியின்ர கதையைப்போல ஒருத்தரும் சொல்லேலாது. இந்தக்குடுகுடு வயதிலையும் அந்தப்பாட்டி கதைக்கிற கதையளைக் கேட்டால் பாருங்கோ…. வயதுப்பிள்ளைகளுக்கும் ஒரு நப்பாசை தோன்றுது. என்ன இருந்தாலும் திங்கட்…
-
- 0 replies
- 860 views
-
-
என் கவிதைகளை…. அம்மாவுக்கு காட்டுவதில்லை…!!! ஈழத்தின் கிளிநொச்சி – இரத்தினபுரத்தில் பிறந்தவர், கவிஞர், கட்டுரையாளர், பத்தி எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், ஊடகவியளாளர் என பன்முகங்கள் கொண்டவர் தீபச்செல்வன். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப்போர், இனப்படுகொலைக்குப் பிறகு பௌத்த சிங்கள இனவெறி இராணுவம் அரங்கேறிய பல்வேறு நிகழ்வுகளைத் தம் உயிரையும் பொருட்படுத்தாது உலகறியச் செய்தவர். 2009 இல் யாழ் பல்கலையில் மாணவர் ஒன்றிய பொதுச்செயலாளராய் இருந்தபோதும் சரி, எழுத்துலகில் எழுத நுழைந்தபோதும் சரி தமக்குள் சமரசமில்லாமல் களபோராளிக்கு நிகராக தீவிரமாய் இயங்கியவர் – இயங்கி வருபவர். அந்தவகையில் இவரின் ‘பதுக்குக்குழியில் பிறந்த குழந்தை’ கவிதைத் தொகுப்பு அனைவரிடமும் ஒரு பெரிய அதிர்…
-
- 1 reply
- 860 views
-
-
இலங்கைக்கு உள்ளும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்த்தேசியக் கருத்தாக்கம் பெண்ணியத்தை சிறைப்பிடித்து வைத்திருப்பதாக கூறுகிறார் ஈழத்தின் பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம். இந்தியாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவில் கொல்லப்பட்ட பெண் தொடர்பான பிபிசியின் ஆவணப்படம் இந்திய அரசால் தடுக்கப்பட்ட சர்ச்சை தொடரும் பின்னணியில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஈழத்தமிழ்ப்பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார பிரச்சனைகள் குறித்து பிபிசி தமிழோசையிடம் விரிவாக பேசிய பெண்ணிய செயற்பாட்டாளர் நிர்மலா ராஜசிங்கம் இந்த கருத்தை முன்வைத்தார். தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்த மற்றும் எடுத்துவரும் அரசியல் கட்சிகளானாலும் சரி, ஆயுதக்குழுக்களானாலும் சரி, பெண்ணை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே கடந்தகாலத…
-
- 4 replies
- 859 views
-
-
அந்த ஆவண படத்தை பார்த்து முடித்த போது மனம் இரண்டு விஷயங்களில் கனத்து போயிருந்தது. மனம் முதலில் கனத்து போனதற்கு காரணம் ஆவண படம் ஏற்படுத்திய தாக்கம். இரண்டாவது காரணம் அரங்கில் பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகள். ஆவண படம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றியது இப்போது இருப்பவர்கள் இலக்கியத்தில் சினிமாத்தனத்தை காட்டும் நிலையில் சினிமாவில் இலக்கியத்தனத்தை காட்டிய மாபெரும் கவிஞர். எனது முதல்வர் நாற்காலியை தாங்கிப்படிக்கும் மற்ற மூன்று கால்கள் எது என்பது எனக்கு தெரியாது ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்காக எழுதிய பாடல்கள்தான் என்று எம்ஜிஆரால் பராட்டப்பெற்றவர். பாட்டாளி மக்களின் வேர்வையையும்,விவசாயகூலிகளின் வேதனையையும்,கிராமத்து ம…
-
- 0 replies
- 856 views
-
-
சுவிஸ் வாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்டிடுக்கும் இப் புதிய பாடல் Youtube இணையத்தளத்தில் பிரபலியம் அடைந்து வருகிறது.
-
- 1 reply
- 855 views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]ஒரு இலங்கைத்தமிழனது பார்வையில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர், தலைவனுக்குத்தலைவன், இதய தெய்வம் என்ற நிலையில் என்றும் மிகப்பெரிய கௌரவத்துடனும், நன்றியுடனும் பார்க்கப்படும் ஒருவர்.[/size] [size=4]எந்தவொரு கலைஞனுக்கும் அடிமைப்பட்டுவிடாத இலங்கைத்தமிழன், எம்.ஜி.ஆர் என்ற நாமத்திற்கு மட்டும் கொண்டாட்டம் எடுத்தகாலங்கள் ஆச்சரியமானது.[/size] [size=4]அதுபோல உலகத்தலைவர் எவருக்கும் சிலைவைத்து வழிபடாத சமுகம், எம்.ஜி.ஆர் என்ற அந்த தலைவனுக்குமட்டும் சிலையெழுப்பி தலைகுனிந்து இன்றும் வணக்கம் சொல்லிக்கொண்டிருக்கின்றது. ஏனெனின் இலங்கைத்தமிழனின் இன உணர்வுக்கும், விடியல் என்ற பயணத்திற்குமான “ஆணிவேர்” எம்.ஜி.ஆர் என்ற அந்த அன்பு மனிதனே என்பதி…
-
- 0 replies
- 852 views
-
-
‘ஜானி’ படப்பிடிப்பில் ரஜினியுடன் மகேந்திரன். “இன்றைய நமது சினிமா, காட்சிகளையும், ஒலியையும் உயிரோட்டமாகக் கொண்ட ஒரு மீடியா என்பதே சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது என்று கருதுகிறேன். வசனமே இல்லாமல்கூட ஒரு படத்தை ரசனைக்கு உரியதாகப் படைக்க முடியும். ஆனால், அத்தகைய முயற்சியில் ஈடுபடும் ஒரு கலைஞனுக்குக் கற்பனைத் திறன் அதிகமாகத் தேவைப்படுகிறது” - மகேந்திரன். தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படைப்பாளிகளில் மகேந்திரன் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்கள் எப்போதாவது ஒருமுறை வருவதுண்டு. அவற்றில் 1970-கள் வரை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை: ஏழை படும் பாடு (1950), அவன் அமரன் (1958), பாதை தெரியுது பார் (1960), கலைக்கோவில் (1964), உன்னைப் போல் ஒருவன…
-
- 0 replies
- 852 views
-
-
-
ஓவியர் ஜீவாவுடன் நேர்காணல் படித்தது சட்டம் பிடித்தது தூரிகை சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருதை இந்த ஆண்டு திரிசக்தி பதிப்பக வெளியீடான திரைச்சீலை என்னும் நூல் பெற்றுள்ளது.இந்நூலைக்கோவையைச் சேர்ந்த ஓவியர் ஜீவா எழுதியுள்ளார்.1982இல் அறந்தை நாராயணன் எழுதிய தமிழ்ச் சினிமாவின் கதை என்னும் நூலுக்குப் பின்பு இவ்விருது பெறும் தமிழ் நூல் இதுவே.கோவையின் போக்குவரத்து நெரிசல் மிக்க டவுன்ஹால் சாலையின் அஞ்சு முக்கு வீதியில் உள்ள அவரது வீடும் ஸ்டூடியோவுமான இடுக்கமான இடத்தில் செம்மலர் சார்பாக அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னோம். நாகர்கோவில் மாவட்டம் பூதப்பாண்டி இவரது பூர்வீக பூமி.ஆம்.அதே பூதப்பாண்டிதான்.தோழர் ஜீவா பிறந்த மண்ணில் அவருடைய உறவுக்காரப் பைய…
-
- 0 replies
- 849 views
-
-
ஒன்பது வருடங்களாக தொடர்ந்து 'ஊரோடு உறவாடி' சாதனை செய்த புலம்பெயர் தமிழர்! இன்றைய நவீன தொடர்பூடக உலகில் ஒரு வானொலி நிகழ்ச்சியை தொடர்ந்து ஒரு வருடம் நடாத்துவது என்பது பெரியதொரு சாதனையாகவே பார்க்கப்பட்டு வருகின்றது. ஆனால் IBC-தமிழ் வானொலியில் இரண்டு மணி நேரம் கொண்ட ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து 8 வருடங்களாக இடம்பெற்று வருவதென்பது மிகப் பெரியதொரு சாதனையாகவே பார்க்கப்பட்டாகவேண்டும். அதுவும் ஒரே அறிவிப்பாளரே இந்த நிகழ்ச்சியை இந்த 8 வருடங்களும் வெற்றிகரமாக நடாத்துவதென்பது தற்கால வானொலிக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை ஒன்றும் இலகுவான காரியம் கிடையாது. IBC-தமிழ் வானொலியில் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறும் இந்த நிகழ்ச்சியின் பெய…
-
- 0 replies
- 848 views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா யூரியூப்பில் இசை சம்பந்தமான பழைய நிகழ்ச்சியொன்ரைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் எதேச்சையாக ஏற்பட்டபோது மனதுள் ஒரு கேள்வி எழுந்தது. அதே நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன்னர் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்தபோது இதே மனக்குடைச்சல் அன்றும் எனக்கு ஏற்பட்டிருந்தது.. பாடகர் ஒருவரால் நடத்தப்பட்டிருந்த அதில் பங்கு கொண்டிருந்தவர் ஒரு தமிழ் இசையமைப்பாளர். அந்தப் பாடகர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அந்த இசையமைப்பாளரிடம் மிகவும் பௌயமாக, கூனிக் குறுகி உரையாடிக்கொண்டிருந்தார். அது பரவாயில்லை. சினிமா உலகில் இப்படியான மரியாதையை எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள் போலும். இங்கே அதுவல்ல…
-
- 2 replies
- 839 views
-
-
VIZHITHIRU Avalper Thamizarasi director Mera Kathiravan's outstanding new move going to be released soon.. மீரா கதிரவனுடைய விழித்திரு பாடல் வெளியீடு 22.06.2015 ஞாயிறு காலை 10 மணிக்கு தேவி திரை அரங்கில் இடம் பெற்றது. அந்த விழாவில் பார்வையாளராக நானும் கலந்துகொண்டது மகிழ்ச்சியான அனுபவம், ஒரு நாளில் சென்னையில் இடம்பெறும் கதை. சென்னை இரவுப் பின்னணியில் இடம்பெறும் சம்பவங்கள் தூக்கலாக இருக்கும் என்பதை உணர் முடிந்தது.. ஏற்கனவே படம் பார்த்தவர்கள் ஊமை விழிகளைப்போல திருப்புமுனைப் படமாக அமையும் என வியந்து பாராட்டினார்கள். நான் இந்த படத்தில் கவிஞர் ஜெயபாலனாக நடித்திருக்கிறேன். இனி அரங்குகள் தோறும் வெற்றி மாலை சூடப்போகிற தோழன் இயக்குனர் மீரா கதிரவனை வாழ்த்திப் பாராட்டுவதில் முந்த…
-
- 2 replies
- 837 views
-
-
சுவிற்சர்லாந்தில் நடிகமணிக்கு ஒரு பெருவிழா! … அருந்தவராஜா .க காலம் அழைத்துச் சென்ற கலைஞர்களில் நடிகமணி வி.வி வைரமுத்து ஒருவரானாலும் காலகாலமாக மக்கள் மனங்களில் வாழ்ந்து நிறைந்திருக்கிறார். இலங்கையின் இசை நாடக வரலாற்றில் தனி ஆளுமை மிக்கவராகவும் பல்துறை கலை ஆற்றல் உள்ளவராகவும் விளங்கிய நடிகமணியவர்கள் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தை 3000 தடவைகளுக்கு மேலாகவும் பக்த நந்தனார் நாடகத்தை1000 தடவைகளுக்கு மேற்படவும் நடித்துப் பெருமை சேர்த்தார். இவற்றை விட மேலும் பல நாடகங்கள் பற்பல முறை மேடையேற்றங்கள் கண்டுள்ளன. இலங்கையில் ஒரு அரங்க நடிகனுக்கு இரசிகப்பட்டாளம் அதிகம் உருவாகியிருப்பதும் நாடக அரங்குக்கு பின்னரான கதைக் களங்கள் உருவாகியும் பின்னர் அவை …
-
- 2 replies
- 834 views
-
-
யாழ் உடுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட கனடிய தமிழன் லெனின் சிவம் ஹாலிவுட்டில் The Protector’. என்ற ஆங்கில திரில்லர் திரைபடத்தை இயக்கியிருக்கிறார் அவர் ஏற்கனவே மூன்று தமிழ் திரைபடங்களை இயக்கியுள்ளார் அவருடைய தந்தையார் கம்னியூஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தமையால் அவருக்கு லெனின் என்ற பெயரை அவருக்கு சூட்டியதாக கூறுகிறார் அத்துடன் அவரது தந்தையார் இலங்கை சினிமா ஒன்றில் கதாநாயகனாக நடித்தவர் என்று கூறப்படுகிறது ஆனால் எந்த திரைபட கதாநாயகன் என்று தெரியவில்லை இவரது சொந்த உடுப்பிட்டி கிராமத்…
-
- 0 replies
- 833 views
-
-
போர் எதிர்ப்புப் போராளி ஓவியர் மருது உலகில் தோன்றிய முதல் கலை ஓவியக் கலை என்பது ஆய்வறிஞர்களின் முடிவு. அதற்குச் சான்றாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட பாறை ஓவியங்களை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். காலம், ஓவியக் கலையை வெவ்வேறு சிகரங்களுக்கு உயர்த்தி விட்டிருக்கிறது. கலை நுட்பங்கள், வடிவங்கள், புதிய பரிசோதனைகள் என்ற நீண்ட பயணம் அக்கலையை ஈர்க்கத்தக்கதாக உருமாற்றி உள்ளது. மாற்றங்களை உள்வாங்கி அவற்றைத் தன் மயமாக்கிக் கொண்டவர்களே காலத்தை வென்ற கலைஞர்களாகத் திகழ்கின்றனர். மரபான ஓவியத்தோடு மட்டும் தேங்கி நின்று விட்டவரல்ல ஓவியர் மருது அவர்கள். கோட்டோவியம், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட நுண்கலை (Abstract Art) கணினி வரைகலை (Computer Graphics) எனப் …
-
- 0 replies
- 830 views
-
-
உலகின் மிகமுக்கியமான திரைப்படவிழாக்களில் ஒன்றான ‘ஷங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் (Shanghai International Film Festival) விருதுக்கு போட்டியிடும் படங்களில் ஒன்றாக A GUN & A RING என்கின்ற ஈழத்தமிழரின் திரைப்படமும் தெரிவிவாகியிருந்தது. ஈழத்தமிழர் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் லெனின் எம்.சிவம் இயக்கத்தில் TTN ‘படலைக்குப்படலை’ புகழ் மன்மதன் என்கின்ற பாஸ்கர் மற்றும் பலரின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ‘ஷங்காய் திரைப்பட விழா’வில் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்றுத் திரும்பியிருந்த பாஸ்கர் அவர்களை, எமது ஊடக இல்லத்திற்கு அழைத்து நேர்காணல் செய்திருந்தோம். அவர் எம்முடன் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். ஊடக இல்லம்:- எமது ஊடக இல்லத்தின் சார்பாக உங்களை வரவேற்பதில் ம…
-
- 1 reply
- 823 views
-
-
- க.ஆ.கோகிலவாணி இதுவரை இலக்கியத்துறையில் நிகழ்த்தப்படாத சாதனையொன்று இலங்கையின் கிழக்கிலங்கையில் கடந்த சனிக்கிழமை(30) நிகழ்த்தப்பட்டது. தன்னை ஓர் எழுத்தாளன் என இந்த உலகமே அறிந்துகொள்ள வேண்டும் என்ற உத்வேகத்துடன் 12 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக எழுதி சானையை நிலைநாட்டியுள்ளார் எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜ். வித்தியாசமான சிந்தனையோட்டம்கொண்ட இக் கலைஞன், “கரன்சி இல்லாத உலகம்“ என்ற தொடரினை எழுதி, இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். நிமிடத்துக்கு 10 சொற்கள், மணித்தியாலத்துக்கு 6 பக்கங்கள் என தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் இவர் எழுதியுள்ளார். மொத்தமாக 77 பக்கங்களையும் 7,582 சொற்களையும் கொண்ட இவரது 'கரன்சி இல்லாத உலகம்' தொடரானது இன்று இலக்கியத்துறையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது…
-
- 0 replies
- 817 views
-
-
சின்ன அறை. சுவரில் பெருமாள், சமயபுரம் மாரியம்மன், ராமர், சீதை என்று ஏகப்பட்ட கடவுளர் படங்கள். சின்ன கட்டில். அதையட்டி மேஜை. சுற்றிலும் புத்தகங்கள். தமிழின் மகத்தான படைப்பாளி அசோகமித்திரனின் உலகம் இப்போது இவ்வளவுதான். ''சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, 'இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், 'நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...'' - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார். ''இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?'' ''ரொம்பச் சோர்வாக இருக…
-
- 4 replies
- 816 views
-
-
வர்ணகுலசிங்கம் மாஸ்ரர் பற்றிய நினைவு கொள்ளல் கலாநிதி. சி. ஜெயசங்கர் - வர்ணகுலசிங்கம் மாஸ்ரர்என்றபெயர் மிக இளவயதிலிருந்தேஎனக்குப் பரிச்சயமானது. எனது சகோதரிகள் இருவர் இசைக் கலைஞர்களாகவும், எனதுதந்தையார் இசைஆர்வலராகவும் இருந்தமை இந்தவாய்ப்பைத் தந்திருக்கின்றது. ந. சண்முகரத்தினம் மாஸ்ரர், திலகநாயகம் போல் மாஸ்ரர், பொன் புஸ்பரத்தினம் அவர்கள், ச. சண்முகராகவன் அவர்கள் எனதலை சிறந்த இசைக் கலைஞர்கள் வகுப்பெடுப்பதும்;, இசைச் கச்சேரிகளுக்கென பயிற்சிகள் நடப்பதும் எனது வீட்டுச் சூழல். மிருதங்கவித்துவான் இ. பாக்கியநாதன் அவர்களிடம் எனதுசகோதரன் மிருதங்கம் பழகியமை, சர்வேசரசர்மா அவர்களது வீட்டில் வருடாவருடம் நிகழும் நவராத்திரி இசைக் கச்சேரிகள், இசைக் கலைஞர்களின் கலந்துரையாடல்கள் என இ…
-
- 0 replies
- 816 views
-
-
இயல் விருது வாங்க கனடா வந்திருந்த எஸ்.பொ விடம் ஒரு இடைமறிப்பு.-கற்சுறா கற்சுறா: 2011 ஜனவரிமாதம் நடந்த கொழும்பு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டினை எதிர்த்து முதற் கொள்ளி வைத்தவர் நீங்கள். கலை இலக்கிய ரீதியாக இலங்கைத் தமிழினத்தை அடிமைப் படுத்தும் ராஜபக்சேவின் திட்டம் தான் உலக எழுத்தாளர் மாநாடு என்றும் சிங்கள மொழி மேலாண்மையை தமிழர்களை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ளச் செய்வதுதான் மாநாட்டின் ஒட்டுமொத்த நோக்கம் என்றும் சொல்லி அறிக்கை விட்டு மாநாட்டைப் புறக்கணித்தவர் நீங்கள். தற்போது மாநாடு முடிந்து இவ்வளவுகாலத்தின் பின் மாநாடு நடத்திவிட்டு தற்போது ஐந்து லட்சம் நட்டம் என்கிறார்கள். இவ்வளவு நட்டப்பட்டு ஏன் மாநாடு நடாத்துவான் என்று கிண்டலடிக்கிறீர்கள். மாநாடு நடத்தியவர்கள் அரசிடம்…
-
- 0 replies
- 814 views
-