வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
391 topics in this forum
-
தமிழ்த்திரைப்பட இசையுலகில் இசையமைப்பாளர் யாரென அறியப்படாத காலத்தில் பாடல்களை அமைத்தவர் இசை அறிஞர் பாபநாசம் சிவன்.கர்னாடக கீர்த்தனைகள் அப்படியே ஒலித்த காலத்தில் அந்த முறையிலேயே தனது பாடலகளையும் அமைத்துக் கொடுத்தவர்சிவன். பின்னர் இசையமைப்பாளர்களுடன் இணைந்த போதும் பாடல்களுக்கான் சுரங்களை எழுதிக் கொடுத்துவிடுவார். பாடலுக்கு வாத்தியம் சேர்ப்பது இசையமைப்பாளர்களின் வேலையாக இருந்தது.தமிழ் செவ்வியல் இசைப் [ கர்னாடக இசைப்] பாடலான ” எப்ப வருவாரோ ..” என்ற பாடல் மெட்டில் ” சர்ப்ப கோண போதன் …” என்ற பாடலை தியாகராஜபாகவதர் பாடினார்.பாபநாசம் சிவனின் inspiration தமிழ் செவ்வியல் இசையே . செவ்வியல் இசை மரபு கொண்ட தமிழ் சூழலில் ஹிந்தி திரைப்பட இசை போன்ற மெல்லிசை உருவாவது இலகுவான காரியமாக இருக…
-
- 0 replies
- 6.7k views
-
-
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர். 'பத்து வயதானதொரு பாலகன் உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை சிறுகூடல் பட்டிதனில் தந்த மலையரசித் தாயே'- என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவரது வயது பத்து. அவர் கவிஞர் கண்ணதாசன். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றவரிடம், 'ஏதாவது இதழ்களில் எழுதி இருக்கிறீர்களா' என கேட்க, 'ஆமாம்' என்றார் கவிஞர். 'என்ன பெயரில் எழுதுகிறீர்கள்' என சட்டென கேட்க, கொஞ்சமும் தயக்கமின்றி, '…
-
- 7 replies
- 6.2k views
-
-
ஈழத்து நடிகர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் அரிச்சந்திரன் நாடகம் ஈழத்து நடிகர் நடிகமணி வி.வி.வைரமுத்து மண்ணில் 11.02.1924 விண்ணில் 08.07.1989 வி. வி. வைரமுத்து (பெப்ரவரி 11, 1924 - சூலை 8, 1989) இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த 'மயான காண்டம்' எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலப்பா, ஆச்சிக்குட்டி தம்பதியினருக்கு மகனாக வைரமுத்து பிறந்தார். காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1932 இல் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூர…
-
- 5 replies
- 6.2k views
-
-
இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டுபெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர்.மற்றவர் கா.சிவத்தம்பி.தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள்அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள். மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருதமொழி இந்தியா முழுவதும் பரவியிருந்தமொழி எனவும் இலக்கண,இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கியமொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள்கிரேக்க,உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது,சிறப்பினை உடையது எனத் தக்க சான்றுகளுடன் …
-
- 9 replies
- 6k views
-
-
“தமிழ்ப் பாரம்பரியம் பேசுபவர்கள் கடைசியில் சாதியெனும் கழனிப்பானையில் கையை விடுவதைத்தான் நாம் பார்க்கமுடிகிறது” - பிரளயன் நேர்காணல் & எழுத்து: ம. நவீன் சந்திரசேகர் என்ற இயற்பெயரைக் கொண்டவர், பிரளயனாக அறியப்பட்டது வானம்பாடி இயக்கத்தின் தொடர்பறாத நீட்சியினால்தான். மை ஸ்கீல் அறவாரியமும் வல்லினமும் இணைந்து மலேசியாவில் முதன் முதலாக ஏற்பாடு செய்திருந்த வீதி நாடக முயற்சிக்குப் பயிற்சி வழங்கவே தமிழகத்திலிருந்து குறுகியகால வருகையளித்திருந்தார் பிரளயன். அந்தக் குறுகியகால நட்பில் அவரது தத்துவக்கூர்மையையும் வரலாற்று அறிவையும் ஆய்வுத்தெளிவையும் அறிய முடிந்தது. பத்தாண்டு காலம் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர், பத்திரிகையாளர், திரை இணைஇயக்குநர் வரை எங்கெங்கோ அலைந்திருந்தா…
-
- 1 reply
- 6k views
-
-
எழுத்தாளர் பாலகுமாரன் நேர்காணல் - வித்தகன் நான் கவிதை எழுத ஆரம்பிச்சபோது என் வயது இருபது. கதை எழுத ஆரம்பிச்சபோது இருபத்தெட்டு. கவிதையிலிருந்து சிறுகதைக்கு மாறும்போது அது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை ஒரு சவாலாக நினைத்துத்தான் உழைத்தேன். இதோ நாற்பது ஆண்டுகள்ல 260 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இந்த ராட்சச வேகத்துக்குக் காரணம் நான் ஒரு ஒர்கஹாலிக். வேலை வெறியன். நல்லா ஒர்க் பண்றது ஒரு போதையான விஷயம். இடையறாது ஒர்க் பண்றதும் அப்படித்தான். அல்பமான விஷயங்களில் என்னால ஈடுபடவே முடியாது. உதாரணமா, எந்தப் பயனும் இல்லாம என்னால அரட்டை அடிக்கவே முடியாது. அதனால எனக்கு நண்பர்களும் கிடையாது.’ கர்ஜிக்கும் குரலில் கணீரென்று பேசிய பாலகுமாரன், ஆழத்துக்கான நேர்காணலின் ம…
-
- 14 replies
- 5.9k views
-
-
தாயகத்தில் தயாரிக்கப்பட்ட 'அம்மா நலமா', 'ஆணிவேர்', 'குருதிச்சின்னங்கள்', இலண்டனில் தயாரிக்கப்பட்ட 'கனவுகள் நியமானால்', கனடாவில் தயாரிக்கப்பட்ட 'தமிழச்சி' ஜேர்மனியில் வாழ் ஈழத்தமிழரால் தயாரிக்கப்பட்ட 'மல்லிகை வாசம்' ஆகிய திரைப்படங்கள் கடந்த 7,8 வருடங்களில் சிட்னியில் திரையிடப்பட்ட எம்மவர்களின் திரைப்படங்களாகும். நான் மேலே குறிப்பிட்ட எல்லாப்படங்களையும் திரையில் பார்த்தேன். நாங்கள் ஆதரிக்காது விட்டால் யார்தான் ஆதரிப்பார்கள் என்ற நோக்கத்துக்காக எம்மவர்களின் படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பேன். பொதுவாக எம்மவர்களின் படங்கள் தரமற்றவை என்ற அபிப்பிராயம் எங்களுக்குள் இருக்கிறது. அனுபவம் இல்லாதவர்களினால் இப்படங்கள் உருவாகப்படுவதும் காரணமாக இருக்கலாம். லெனின் அவர்கள் இயக்க…
-
- 28 replies
- 5.8k views
-
-
எனது மகளின் நகைச்சுவை நாடகம். எனது மகளின் நாடகக்குழு எங்கள் நகரத்தின் நகரசபை மண்டபத்தில் எதிர்காலத்தில் எங்கள் கனவுகள் என்கிற நகைச்சுவை நாடகம் ஒன்றினை அரங்கேற்றிருந்தார்கள்.நாடகம் 40நிமிடங்கள் அந்த நாடகத்தின் ஒரு பகுதி
-
- 45 replies
- 5.6k views
- 1 follower
-
-
30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை -உமா (ஜேர்மனி )- 1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது. இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி, 1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது. இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற…
-
- 50 replies
- 5.6k views
-
-
ஷோபாசக்தி பதில்கள் ஈஸ், துபாய் கேள்வி : உங்களுக்கும் சாருவுக்கும் என்ன பிரச்சனை? பதில் : ஏன் வந்து தீர்த்து வைக்கப்போகிறீர்களா? வேலையைப் பாருங்க பாஸ். கேள்வி : நீங்கள் ஒரு அகதியாக ஆனதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்த அடையாளத்தை விரும்புகிறீர்களா? பதில் : இது கேள்வி! இந்தக் கேள்விக்கு ஏற்கனவே சில பத்திரிகைகளில் பதிலளித்துள்ளேன் எனினும் சற்று விரிவாக இப்போது சொல்லிவிடுகிறேன். 1983ல் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியான வன்முறைகளைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் அகதிகளாக மேற்கிற்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். அப்போது நான் அவ்வாறு அகதிகளாகப் போகிறவர்களைப் பழித்துக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். "நாங்கள் தமிழீழத்திற்காக இரத்தம் ச…
-
- 19 replies
- 5.4k views
-
-
வணக்கம் அனைவருக்கும்... ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வரும் ஒரு இளம் இசைக் கலைஞன் தான் "நிரு". இவர் பாரிசில் பல இறுவட்டுக்களை வெளியிட்டிருக்கிறார். ஈழத்து கவிஞர்கள் எழுதிய பாடல் வரிகளை இந்தியத் தமிழ்ப் பாடகர்களையும், ஈழத்துப் பாடகர்களையும் கொண்டு பாடவைத்து இவர் வெளியிட்ட இறுவட்டுக்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. அந்தவகையில் தென்னிந்திய திரையுலகில் கலாபக் காதலன் என்கிற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். நமது கலைஞர்கள் நம்மவராலேயே புறக்கணிக்கப்படுகிற மிகக் கவலையான நிகழ்வுகளை நாம் அன்றாடம் எதிர்கொள்கிறோம். எம்மவரின் திறமைக்குரிய மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்பது கவலையான விடயம். எம்மவரே எம்மைக் கண்டுகொள்ளாத நிலையில் இன்னெ…
-
- 20 replies
- 5.4k views
-
-
இப்போ நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கன் சுப்பர்போல் அரைநேர விழாவில் மாடோனாவின் இசைநிகழ்ச்சியில் மாயாவும் கொஞ்ச நேரம் வந்துபாடிவிட்டு போனார்.
-
- 30 replies
- 5.3k views
-
-
மேற்குறித்த நாடகத்தனமான தலைப்பு உங்களைப் பிழையாகவழி நடத்த அனுமதிக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் இலங்கைத் தமிழ் நாடகஉலகின் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர். ”குழந்தை”என்ற பெயரில் அறியப்படும் குழந்தை சண்முகலிங்கம்அவர்கள் பலருக்கு 83 வயதாகும் ஒரு முதியவர். நாடகம் பற்றிய புரிதல்கள் அற்ற வேறு பலருக்கு அவர்ஆரவாரமற்ற தன்னடக்கம் நிரம்பிய ஒருவர். உண்மையிலும் குழந்தை சண்முகலிங்கம் என்ற பெயர்இலங்கைத் தமிழ் நாடக உலகுடன் ஒன்றி விட்ட பெயர். இலங்கைத் தமிழ் நாடக உலகின் கடந்த தசாப்தங்களைஅவரின் பெயரை விட்டு விட்டுப் பேசமுடியாது. புகழ்ச்சியையோ விளம்பரத்தையோ விரும்பாத அவர் இந்தநேர்காணலை ஏற்றுக்கொண்டிருந்தார். எப்படி நீங்கள் “குழந்தை” என்னும் வித்தியாசமானதொரு …
-
- 0 replies
- 5.1k views
-
-
கே.பி.எஸ். பிறந்த நாள்: 11.10.1908 தமிழிசை என்ற மாயக் கயிற்றால் தமிழகத்தைக் கட்டிப்போட்டவர் கே.பி.எஸ். இந்திய அளவில் நடிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தை முதன்முதலில் பெற்ற நடிகை; இந்தியாவிலேயே முதன்முதலாக சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை கே.பி.சுந்தராம்பாள்தான்; காந்தியடிகளே நேரில் வந்து தேசச் சேவைக்குப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஒரே நடிகை கே.பி.எஸ்தான்; தமிழ்நாட்டில் அதிக அளவு இசைத்தட்டு விற்றதும் கே.பி.எஸ். பாடிய பாடல்களுக்குத்தான். இப்படி எத்தனையோ சாதனைகளைச் செய்தவர் கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள். நாடக உலகில் ஆண்களுக்கு இணையாகப் பாடி, நடித்துப் பலரை மேடையை விட்டே விரட்டியவர் அவர். “15 வயதுக்குள்ளாகவே சுந்தராம்பாள் ‘அயன் ஸ்திரிபார்…
-
- 6 replies
- 4.9k views
-
-
நாமும் பார்க்காவிடில் யார் பார்ப்பார்கள்? புலம் பெயர் தமிழர்களின் பரதநாட்டியம்,வயலின்,மிருதங்க
-
- 22 replies
- 4.9k views
-
-
சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள் 20:13 ♔ம.தி.சுதா♔ 28 comments அரிய பல கண்டு பிடிப்புக்களைச் செய்த மனிதன் தான் அழியாமல் தப்பும் கருவியையும் கண்டு பிடித்து விடுவான் என்ற பயத்தில் தான் கடவுள் அவனுக்கு நாக்கைப் படைத்துள்ளார். அதற்கு எலும்பில்லை என்ற காரணத்தால் தான் மனிதன் தன்பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேசுகிறான். ஈழத்திற்கு அரிய பொக்கிசங்களாக பல கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் இப்போது எம்மோடு உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் இலை மறை காய்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் கலைஞர்கள் என்ற வரையறைக்குள் நாம் வைத்திருக்கும் அவர்களை எந்தளவு நாம் அங்கீகரித்துள்ளோம் என்பதை எம்மாலேயே கூற முடிவதில்லை. ஈழத்தின் தலைச…
-
- 23 replies
- 4.8k views
-
-
திரு. அப்துல் ஹமீது இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் என்று சொல்லும் போது, திரு. அப்துல் ஹமீது அவர்களின் பெயர் ஞாபகத்திற்கு வராதவர்கள் மிகவும் சொற்பம் என்று கூறலாம். தனது காந்தக் குரலினால் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றிப் பிற பல தமிழர்கள் வாழும் நாடுகளிலும் எண்ணிலா ரசிகர்களைக் கவர்ந்தவர் திரு அப்துல் ஹமீது. வானொலி மட்டுமல்ல, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதுடன், பல்வேறு தமிழ் மேடை நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகப் பல நாடுகளுக்கும் சென்று ஈடில்லாப் புகழ் ஈட்டிக்கொண்டிருப்பவர். கடந்த வருடம் லண்டனில் இவரது ஒலிபரப்புத் துறையின் பொன்விழா நடைபெற்றது. நிலாச்சாரல் வாசகர்களுக்காகத் திரு. அப்துல் ஹமீது வழங்கிய சிறப்புப் பேட்…
-
- 12 replies
- 4.8k views
-
-
கண்ணதாசன் பிறந்த நாள் : ஜூன் 24 பதினைந்து ஆண்டுகள். இரண்டாயிரம் பாடல்கள். கோலிவுட்டின் சளைக்காத பாடலாசிரியர் நா.முத்துகுமார். கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்களை எழுதிவரும் கவிஞராகவும் தொடர் முத்திரையை பதித்து வருகிறார். தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக தேசிய விருது பெற்றிருக்கும் இவர், இயக்குநர்கள் விரும்பும் எல்லா வகைப்பாடல்களையும் எழுதிக் குவிக்கிறார். என்றாலும் கண்ணதாசனைப் போலத் தத்துவப் பாடல்களில் தனி அடையாளம் பெற வேண்டும் என்பது இவரது முனைப்பு. கண்ணதாசனைப் பற்றிக் கேட்டதும் ஒரு நொடிகூட யோசிக்காமல் பேச ஆரம்பித்துவிட்டார்... கண்ணதாசன் பற்றி எந்த வயதில் அறிந்துகொண்டீர்கள்? பத்து வயதே நிரம்பிய பள்ளி நாட்களில் கண்ணதாசன் தெரிந்துவிட்டார். கவிதை மாத…
-
- 2 replies
- 4.8k views
-
-
http://www.youtube.com/watch?v=xTLwfbDzvRQ&feature=related
-
- 20 replies
- 4.7k views
-
-
என் மதிப்புக்குரிய மாண்பு மிகு கவிஞர்களே .....வணக்கம் சில பாடல்களை இசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் ,அந்தப்பாடல்களுக்குரிய வரிகளை எழுதி தரும் கவியாளர்க்கும் ஏற்படும் உறவு நிலையின் யதார்த்தம் சில வேளைகளில் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது .இங்கே நான் குறிப்பிடும் கவிகள் யாரும் யாழ் களத்தில் இல்லாதவர்கள் ..........கவிகளாகிய உங்களிடம் இருந்து நான் சில யதார்த்தமான உண்மைகளை .எதிர்காலத்தில் ஓர் புரிந்துணர்வுடன் பல ஆக்கங்களை இணைந்து வழங்க வேண்டுமெனில் ஓர் தெளிவு நிச்சயம் தேவை . தற்சமயம் நான் மாவீரரின் வணக்க பாடல்களின் இசை முயற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறேன் .அந்த வகையில் இங்குள்ள சில கவிகள் எனக்கு பாடல்களை வரிகளாக தந்துள்ளனர் ..........…
-
- 33 replies
- 4.7k views
-
-
என் பார்வையில் கண்ணதாசன் மகாதேவஐயர் ஜெயராமசர்மான், B.A ( Hons ) Tamil Dip.in Ed, Dip.in Soc Dip.in Com M.Phil Edu SLEAS , மெல்பேண் .. அவுஸ்திரேலியா ( முன்னாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் ) - காலத்தை வென்றவன்.காவியம் ஆனவன். வேதனை தீர்ப்பவன். வெற்றித்திருமகன் எனப் பலவித முகங்களில் கண்ணதாசனை நான் பார்க்கின்றேன்.சிறுகூடல் பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து சிந்தனைகளின் ஊற்றாக புறப்பட்டவர்தான் கவி அரசர்.முத்தையா- கண்ணதாசன் ஆனதே ஒரு முக்கிய சம்பவம்தான். "முத்தைத்தரு" என்று அருணகியாரைப் பாடவைத்து - அவரது வாழ்க்கையையே மாற்றியது ஆண்டவனது அனுக்கிரகம். முத்தையா என்று தந்தை வைத்தபெயரும்அவரைச் சமூகத்தில் ஒரு முத்தாகவே மிளிரச்செய்தது.கண்ணதாசன் என்னும் பெயரும் அவருக்கு…
-
- 6 replies
- 4.6k views
-
-
அது 80 களின் நடுப்பகுதி. சிறுபராயம். காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிசேகம். ஏராளமான தவில், நாதஸ்வர கலைஞர்கள் வரிசையாக இருந்து கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள். நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவர் மட்டும் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நெடிய மெல்லிய தோற்றம். புன்னகை தவழும் வதனம். தலையிலே குடுமி. காதிலே கடுக்கன். நாதஸ்வரம் முழுவதும் தங்கப்பதக்கங்கள். முதன் முதலாக அவரை அங்கேதான் பார்க்கக் கிடைத்தது. இன்றும் அதே தோற்றம். முதுமை அவரை அணைத்துக் கொண்டாலும், அவருக்கேயான அடையாளங்கள் எதுவும் அகன்றதாகத் தெரியவில்லை. கம்பீரமாகவே நின்று தனக்கான கௌரவத்தை ஏற்றுக் கொண்டார். ஆம், அவர்தான் ஈழத்தின் சாவகச்சேரி மண் பெற்றெடுத்த ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞன் திருவாளர் மு…
-
- 3 replies
- 4.5k views
-
-
“நட்டுவன் பிள்ளைக்கு நொட்டிக் காட்டத் தேவையில்லை” ”தற்காலத்தில் தேர்களை உருவாக்குவோர் சிற்பங்களுக்கு இருக்கவேண்டிய அளவுப் பிரமாணங்களையோ, தராதரத்தையோ கருத்திற்கொள்வதில்லை. இவர்கள் பொருளீட்டுவதை மாத்திமே பிரதான நோக்கமாகக் கொண்டு- தாமாகவே ஆலயங்களைத் தேடிச் செல்கின்றனர். இது மிகுந்த வேதனையளிக்கிறது” நாதஸ்வர சிற்ப வித்தகர் சின்னத்தம்பி அமரசிங்கம் அவர்களுடனான நேர்காணல். -எஸ்.மல்லிகா- “ஆலய வழிபாடுகளில், இசை விழாக்களில், மங்கல வைபவங்களில் நாதமழை பொழியும் நாதஸ்வரக் கலைஞர்களின் புனிதமான கரங்களில் என்னால் உருவாக்கப்பட்ட கருவிகள் இருந்து அவக்களுக்கு வாழ்வளிக்கின்றமை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, ஆத்மதிருப்தியைத் தருகிறது” இப்படி கூறுகிறார் சிற்பத்துறை மேதாவியும் நாதஸ…
-
- 0 replies
- 4.4k views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா "மதனோற்சவம் ரதியோடுதான்" - 1978 இல் வெளியான சதுரங்கம் என்ற ரஜினியின் படப்பாடலிது. இந்தப் பாடலைக் கேட்டு எத்தனையோ வருடங்களாகின்றன. ஆனால் பாலுவின் குரல் அப்படியேதான் இருக்கின்றது. பாடலின் முதலாவது சரணத்தில் மீனாடும் கண்ணிலிருந்து நானாடவோ.. தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ.. என்று பாலு இரண்டு தடவை பாடுகிறார். இரண்டு தடவையும் வித்தியாசமாகப் பாடுகிறார். அதற்குள் இரண்டாவது தடவை நீராடவோ என்று பாடும்போது அதை நீ...ரா..டவோ என்று சில்மிஷம் வேறு வைக்கிறார். அது மட்டுமல்ல.. பாலு உச்சஸ்தாயியில் பாடி முடிக்கவும் வாணி அம்மா , .. புரியாத பெண்மையிது . பூப்போன்ற மென்மையிது.. பொன்னந்தி …
-
- 7 replies
- 4.4k views
-
-
"சொல் செயல் எண்ணத்தை வயப்படுத்தினேன் ஆழமாக முழுமையாக அறியாமை வேரறுத்தேன் தண்ணென்றானேன்; அமைதி அறிந்தேன்" -உத்ரா (பௌத்த பிக்குணி) பௌத்த பிக்குணியான உத்ராவின் கூற்றுப்படி சொல், செயல், எண்ணம் என அனைத்தையும் வயப்படுத்துதல், அறியாமையை வேரறுத்தல் அமைதியும் குளிர்ச்சியும் பெறுதல் சாத்தியம் தானா? அது சாத்தியமாகும் இடம் எதுவாக இருந்திருக்கிறது? என்ற கேள்விகளோடு பார்க்கையில் குறிப்பாக பெண் தன்னை உணராதவளாக உணர்த்த முடியாதவளாக தோற்றுப்போகும் தருணங்களை பாட்டிமார் கதை கூறும்போது அறியலாம். இப்படியிருக்க பெண் அரசியல் புரிதலோடு சமூகப் பார்வையோடு இருப்பதே அருகியதாக இருக்கிறது. பெண்கள் காலையில் தினசரிகளைப் படித்துவிட முடிகிறதா? ஊரடங்கும் சாமத்தில் சமூகத்தைப் பார…
-
- 7 replies
- 4.4k views
-