வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
390 topics in this forum
-
நன்றி: விகடன் தமிழ்மகன், டி.அருள் எழிலன் படங்கள்: கே.ராஜசேகரன் ஜெயகாந்தன் அகவை 80-ஐ எட்டும் வேளையில், 'ஜெயகாந்தன் கதைகள்’ விகடன் பிரசுர வெளியீடாக வருகிறது. ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பாக வரவிருக்கும் இந்த நூலைத் தொகுத்திருப்பவர்கள் இங்கிலாந்தில் வசிக்கும் டாக்டர் என்.ராம், வனிதா ராம் தம்பதி. ஓய்வாக இருக்கிறார் ஜெயகாந்தன். முதுமை உருவாக்கிய கனிவுக் கண்களால்... 'அப்படி என்ன கேட்டுவிடப்போகிறீர்கள்?’ என்கிறது வலது கண். 'இன்னும் சொல்ல என்ன இருக்கிறது?’ என்கிறது இடது கண். அறைக்குள் நுழையும் பேத்தி ஷைலுவைக் கொஞ்சும்போது, குழந்தை ஆகிறார். ''அய்யா... உடல் நிலை எப்படி இருக்கிறது?'' ''ம்ம்ம்... வயதுக்கு ஏற்ப உடல் நிலை…
-
- 3 replies
- 2.9k views
-
-
அது 80 களின் நடுப்பகுதி. சிறுபராயம். காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிசேகம். ஏராளமான தவில், நாதஸ்வர கலைஞர்கள் வரிசையாக இருந்து கச்சேரி செய்து கொண்டிருந்தார்கள். நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவர் மட்டும் மனதில் சட்டென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நெடிய மெல்லிய தோற்றம். புன்னகை தவழும் வதனம். தலையிலே குடுமி. காதிலே கடுக்கன். நாதஸ்வரம் முழுவதும் தங்கப்பதக்கங்கள். முதன் முதலாக அவரை அங்கேதான் பார்க்கக் கிடைத்தது. இன்றும் அதே தோற்றம். முதுமை அவரை அணைத்துக் கொண்டாலும், அவருக்கேயான அடையாளங்கள் எதுவும் அகன்றதாகத் தெரியவில்லை. கம்பீரமாகவே நின்று தனக்கான கௌரவத்தை ஏற்றுக் கொண்டார். ஆம், அவர்தான் ஈழத்தின் சாவகச்சேரி மண் பெற்றெடுத்த ஒப்பற்ற நாதஸ்வரக் கலைஞன் திருவாளர் மு…
-
- 3 replies
- 4.5k views
-
-
அகேனம் (ஃ) விருதைப் பெறும் குறமகளுக்கு எமது வாழ்த்துக்கள். ஆறுமுகநாவலர் முதல் மனுஸ்ய புத்திரன் வரை எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் -எல்லா எழுத்தாளர்களையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் – குறமகள் 2008 - 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் மேற்கண்டவாறு ரொரண்ரோவில் நடைபெற்ற 27வது பெண்கள் சந்திப்பில் குறமகள் தெரிவித்திருந்தார். மனுஸ்யபுத்திரன் குஸ்பு விவாகரத்தில் பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறியதற்கு மேலும் இச் சந்திப்பில் கண்டனம் தெரிவித்திருந்தார். கைலாசபதி போன்ற விமர்சக மேதைகள் புகழ்ந்த ஆறுமுக நாவலரையே குறமகள் விமர்சித்துள்ளார். “கிறிஸ்தவ அம்மையார்கள் வீடு வீடாகச் சென்று பெண்களோடு உறவாடுவதைக் கண்ட ஆறுமுகநா…
-
- 3 replies
- 1.6k views
-
-
சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப்பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு. எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூரு…
-
- 3 replies
- 9.2k views
-
-
நேயர்கள் அபிமானம் வென்ற மூத்த அறிவிப்பாளர் சரா இம்மானுவேல் இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். தமிழ் ஒலிபரப்பாளர்கள் எஸ். பி. மயில்வாகனம் (வர்த்தக சேவையின் முதல் தமிழ் அறிவிப்பாளர்) வீ. சுந்தரலிங்கம் (சுந்தா சுந்தரலிங்கம்) ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் வீ. ஏ. கபூர் எஸ். புண்ணியமூர்த்தி எஸ். கே. பரராஜசிங்கம் சற்சொரூபவதி நாதன் கே. எஸ். ராஜா பி. எச். அப்துல் ஹமீட் விமல் சொக்கநாதன் சரா இம்மானுவேல் சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம் ராஜேஸ்வரி சண்முகம் பி. விக்னேஸ்வரன் ஜோர்ஜ் சந்திரசேகரன் எஸ். நடராஜசிவம் எஸ். எழில்வ…
-
- 3 replies
- 2.3k views
-
-
நேர்காணல் "பெண்மொழி இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை" - ஔவை சந்திப்பு: கருணாகரன் ஔவை நவீனத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமானவர். 1980களில் ஈழத்தில் எழுந்த பெண்கவிஞர்களின் எழுச்சியோடு எழுத வந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ‘பெண்’ பற்றிய மரபார்ந்த சிந்தனையை உடைத்துப் புதிய நோக்கில் சிந்திக்கும் வழியைத் திறந்துகொண்டு வந்த ‘சொல்லாத சேதிகள்’ அணியில் முக்கியமானவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகின்றபோதும் ‘எல்லை கடத்தல்’ என்ற ஒரு கவிதை நூல் மட்டுமே இதுவரையில் வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து எழுத்திலும் களச் செயற்பாடுகளிலும் இயங்கி வருகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்று, பின்னர் ஆசிரியர் பணி, கல்விச் ச…
-
- 3 replies
- 2.2k views
-
-
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=F-ONVu7RytU#at=73
-
- 3 replies
- 1.1k views
-
-
சூரியனோடு பேசுதல் இன்று காலை கனடாவி வாழும் கவிஞன் திருமாவளவனுடன் முகநூலுல் அளவளாவியபோது நேற்று உங்கள் கவிதை தொகுப்பு சூரியனோடு பேசுதல் கேட்டு செல்லத்துரை வந்தான். மீண்டும் அந்த தொகுப்பை வசித்தேன் என்றார். 29 வருடங்களுக்குப்பிறகு எனது முதல் தொகுப்பு இப்பவும் வாசிக்கப்படுகிறது என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நமக்கென்றொரு புல்வெளி எனது முதலாவது கவிதைத் தொகுப்பு. அது 1986ல் நான் கோவையில் தலைமறைவாய் இருந்தபோது என் பாதுகாப்புக் கருதி அவசரம் அவசரமாக அட்டைப் படமாக என் போட்டோவுடன்வெளியிடப் பட்ட தொகுப்பு. அதனை தோழர் ஜமுனா ராஜேந்திரனும் நண்பர்களும் வெளியிட்டார்கள். அது என் சுயபாதுகாப்புக்கான சரியான திட்டமிடலாக அமைந்தது. அது உமாமகேஸ்வரனோடு முரண்பாடுகள் முற்றி இரு…
-
- 2 replies
- 1k views
-
-
* நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் இலங்கை வானொலி பேட்டி. * ( 1978 ) * சிம்ம குரலோன் சிவாஜி அவர்களின் தமிழ் உச்சரிப்பும், அப்துல் ஹமீது அவர்களின் தமிழ் உச்சரிப்பும்,என்ன அருமை *
-
- 2 replies
- 785 views
-
-
சுவிற்சர்லாந்தில் நடிகமணிக்கு ஒரு பெருவிழா! … அருந்தவராஜா .க காலம் அழைத்துச் சென்ற கலைஞர்களில் நடிகமணி வி.வி வைரமுத்து ஒருவரானாலும் காலகாலமாக மக்கள் மனங்களில் வாழ்ந்து நிறைந்திருக்கிறார். இலங்கையின் இசை நாடக வரலாற்றில் தனி ஆளுமை மிக்கவராகவும் பல்துறை கலை ஆற்றல் உள்ளவராகவும் விளங்கிய நடிகமணியவர்கள் அரிச்சந்திர மயானகாண்டம் நாடகத்தை 3000 தடவைகளுக்கு மேலாகவும் பக்த நந்தனார் நாடகத்தை1000 தடவைகளுக்கு மேற்படவும் நடித்துப் பெருமை சேர்த்தார். இவற்றை விட மேலும் பல நாடகங்கள் பற்பல முறை மேடையேற்றங்கள் கண்டுள்ளன. இலங்கையில் ஒரு அரங்க நடிகனுக்கு இரசிகப்பட்டாளம் அதிகம் உருவாகியிருப்பதும் நாடக அரங்குக்கு பின்னரான கதைக் களங்கள் உருவாகியும் பின்னர் அவை …
-
- 2 replies
- 818 views
-
-
முறிகண்டி பிள்ளையார் சிறிய ஆலயம் என்றாலும் - உன் மகத்துவம் பெரியது விநாயகனே வேற்று மதத்தவுறும் பயபக்தியுடன் வழிபட்ட சிறப்பான ஆலயம் அன்று அந்நிய ஆக்கிரமிப்பிலும் தலை நிமிர்ந்த பெருமைக்குரிய சந்நிதி பிரயாணம் செய்பவர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்த செல்ல கடவுள் காலம் காலமாக நீ சேர்த்த பணத்துக்கு இன்று வன்னித் திருப்பதியாக தங்க கோவிலுக்குள் குடி இருக்கலாம் - ஆனால் நீ பக்தரோடு பக்தராக இருந்தாய் இவ்வளவு பெருமை உள்ள உனக்கு இன்று சோதனைக் காலமா? அந்நிய சிறைக்குள் சிக்கி தவிக்கின்றாய் ஆக்கிரமிப்பாளர்களின் அழுங்குப் பிடி உன் கழுத்துக்குமா வேழ முகத்தானே பிள்ளையாரப்பா, நாங்கள் எங்களை காப்பாற்ற சொல்லவில்லை நீ உன்னையே காப்பாற்றி கொள் உன்ன…
-
- 2 replies
- 2.8k views
-
-
என் சிலேட்டுப் பருவத்தில் ஓர் உறவினரைப் போலவே சினிமா வழியாக எனக்குப் பரிச்சயமானார் சிவாஜி கணேசன். தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து மைல்கல் தொலைவில் நன்னிலம் என்கிற ஊரைத் தொட்டுக்கொண்டு இருந்தது மணவாளம்பேட்டை. அங்கு இருந்த லட்சுமி டாக்கீஸில்தான் நான் முதன்முதலாக சிவாஜியை பாபுவாகப் பார்த்தேன். “டேய்… இன்னிக்கு உன்னை சினிமா கொட்டாய்க்கு அழைச்சுட்டுப் போறேன்’’ என்று காலையிலேயே அப்பா சொல்லிவிட்டார். மனசு குதி யாட்டம் போட ஆரம்பித்துவிட்டது. புத்தகங்களுக்கு லீவு கொடுத்து விட்டு, அப்பாவின் டைனமோ (லைட்) வைத்த சைக்கிளை எண்ணெயெல் லாம் போட்டு நறுவிசாகத் துடைத்து வைத்தேன். சைக்கிளில் லைட் இல்லாமல், அதிலும் டபுள்ஸ் போனால் போலீஸ் பிடிக்கிற சமயம…
-
- 2 replies
- 1.6k views
-
-
கண்ணதாசன் பிறந்த நாள் : ஜூன் 24 பதினைந்து ஆண்டுகள். இரண்டாயிரம் பாடல்கள். கோலிவுட்டின் சளைக்காத பாடலாசிரியர் நா.முத்துகுமார். கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்களை எழுதிவரும் கவிஞராகவும் தொடர் முத்திரையை பதித்து வருகிறார். தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலுக்காக தேசிய விருது பெற்றிருக்கும் இவர், இயக்குநர்கள் விரும்பும் எல்லா வகைப்பாடல்களையும் எழுதிக் குவிக்கிறார். என்றாலும் கண்ணதாசனைப் போலத் தத்துவப் பாடல்களில் தனி அடையாளம் பெற வேண்டும் என்பது இவரது முனைப்பு. கண்ணதாசனைப் பற்றிக் கேட்டதும் ஒரு நொடிகூட யோசிக்காமல் பேச ஆரம்பித்துவிட்டார்... கண்ணதாசன் பற்றி எந்த வயதில் அறிந்துகொண்டீர்கள்? பத்து வயதே நிரம்பிய பள்ளி நாட்களில் கண்ணதாசன் தெரிந்துவிட்டார். கவிதை மாத…
-
- 2 replies
- 4.7k views
-
-
கனடிய தமிழ் பாடகியும் தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகியுள்ளவருமான ஐஸ்வர்யா சந்துருவுடனான ஒரு சந்திப்பு.
-
- 2 replies
- 1.1k views
-
-
"இவர்களிடம் பேனைகளும் அவர்களிடம் துப்பாக்கிகளும் இருந்தன." - லெ.முருகபூபதி நேர்காணல் – கோமகன் ஈழத்து ,புகலிட இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தாயகத்தில் உள்ள எக்ஸ்பிறஸ் நியூஸ் பேர்ப்பர்ஸ் சிலோன் பிறைவேற் லிமிட்டெட் (Express News Papers (Cey) (Pvt) Limited) நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது. லெ.முருகபூபதி சமூக, கலை இலக்கிய செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், அதனது கொழும்புக் கிளையின் செயலாளராகவும்…
-
- 2 replies
- 1.4k views
-
-
போன வருடம் போக முடியாமல் போன உயிர்ப்பூ நாடக அரங்கப்பட்டறையின் நாடக நிகழ்வுக்கு இம்முறை போயே ஆகவேண்டும் என்று போய்ச்சேர்ந்தேன். சுமதிரூபனின் இயக்கத்தில் மேடையேறப் போகும் நாடகங்கள் என்பதால் ஒருவித எதிர்பார்ப்புடனே முன்னிருக்கையொன்றில் அமர்ந்திருந்தேன். வழமையான தமிழ் நிகழ்வில் நடைபெறும் விளக்கேற்றுதல் போன்ற கலாச்சார நிகழ்வுகளெதுவும் இன்றி சிறிய அறிவுப்புடன் முதல் நாடகம் ஆரம்பமானது கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது (விரைவா வீட்ட போகலாம் எல்லோ). அணங்கு அடையாளம் 1 தோற்ற மயக்கம் அடையாளம் 2 என நான்கு நாடகங்கள் இடம்பெற்றன. நான்கு நாடகங்களையும் சுமதி ரூபன் இயக்கியுள்ளார். ஒளி சத்தியசீலன். ஒலியமைப்பு ரூபன் இளையதம்பி. மேடை உதவி ஈஸ்வரி. நிகழ்ச்சி நிரலில் இருந்த அதே வசனங்களை அப்படியே அற…
-
- 2 replies
- 2.4k views
-
-
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து சில நினைவுக் குறிப்புகள் :- எஸ் எம் வரதராஜன் " ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம் பலவன் ஞானகுரு வாணியை முன்னாடு.." என்று தாயகம் முதல் புலம்பெயர் தேசம் எங்கும் மேடைகளில் கம்பீரமாக ஆரம்பித்த அந்தக் குரல் இன்று ஓய்ந்துவிட்டது! நான் மட்டுமல்ல எனது வயதைச் சேர்ந்தவர்கள் பாடசாலை நாட்களில் வில்லிசையை இரசிக்கக் காரணமானவர் சின்னமணி. எண்கள் பாடசாலை நாட்களில் கோவில் திருவிழாக்களின் பொழுது நாதஸ்வரக் கச்சேரி தொடங்கிச் சிலநிமிடங்களில் உறங்கும் நாம் மேளச் சமா விறுவிறு ப்பாயிருந்தால் எழும்புவது வழக்கம். அல்லது சின்னமணி வந்தால் தான் உஷா ருடன் எழும்பியிருப்போம். எனது காலத்தில் நாம் ஒ…
-
- 2 replies
- 1.1k views
-
-
கிராமங்களுடாகவும் மண்பட்டினங்களுடாகவும் கடற்கரை ஓரக் கிராமங்களுடாகவும் அவர் மண்ணையும்,மனிதர்களையும்,மரம் செடி கொடிகளையும்,சூரியனையும், நிலவையும்,கடலையும் தரிசித்தவாறு பயணப்பட்டுக் கொண்டிருப்பவர். புகைப்படங்கள் மூலம் வரலாற்றை எழுதுதல்,மனித வாழ்வை பேசுதல்,ஒளிப்படம் மூலம் கதை சொல்லுதல்,ஆவணப் பிரதி எழுதல் போன்ற விடயங்களிலும் அவர் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறார். இவருடைய கவித்துவம் நிறைந்ததும் கலைத்துவம் மிக்கதான பல ஒளிப்படங்களை எரிமலை மூலமும் வாசகர்கள் அறிந்திருக்கிறார்கள். அமரதாஸ் அவர்களை நாம் எரிமலை சஞ்சிகைக்காக நேர்காண விரும்பினோம். அதற்குத் தூண்டுதலாக அவரது இயல்பினை அவாவுதல் எனும் கவிதைத் தொகுதி அமைந்தது. மு.பொ அவர்களும் அவர் பற்றி என்னுடன் சிலாகித்திருந்தார். தவபாலன் …
-
- 2 replies
- 2.9k views
-
-
VIZHITHIRU Avalper Thamizarasi director Mera Kathiravan's outstanding new move going to be released soon.. மீரா கதிரவனுடைய விழித்திரு பாடல் வெளியீடு 22.06.2015 ஞாயிறு காலை 10 மணிக்கு தேவி திரை அரங்கில் இடம் பெற்றது. அந்த விழாவில் பார்வையாளராக நானும் கலந்துகொண்டது மகிழ்ச்சியான அனுபவம், ஒரு நாளில் சென்னையில் இடம்பெறும் கதை. சென்னை இரவுப் பின்னணியில் இடம்பெறும் சம்பவங்கள் தூக்கலாக இருக்கும் என்பதை உணர் முடிந்தது.. ஏற்கனவே படம் பார்த்தவர்கள் ஊமை விழிகளைப்போல திருப்புமுனைப் படமாக அமையும் என வியந்து பாராட்டினார்கள். நான் இந்த படத்தில் கவிஞர் ஜெயபாலனாக நடித்திருக்கிறேன். இனி அரங்குகள் தோறும் வெற்றி மாலை சூடப்போகிற தோழன் இயக்குனர் மீரா கதிரவனை வாழ்த்திப் பாராட்டுவதில் முந்த…
-
- 2 replies
- 830 views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா யூரியூப்பில் இசை சம்பந்தமான பழைய நிகழ்ச்சியொன்ரைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் எதேச்சையாக ஏற்பட்டபோது மனதுள் ஒரு கேள்வி எழுந்தது. அதே நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன்னர் நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்தபோது இதே மனக்குடைச்சல் அன்றும் எனக்கு ஏற்பட்டிருந்தது.. பாடகர் ஒருவரால் நடத்தப்பட்டிருந்த அதில் பங்கு கொண்டிருந்தவர் ஒரு தமிழ் இசையமைப்பாளர். அந்தப் பாடகர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அந்த இசையமைப்பாளரிடம் மிகவும் பௌயமாக, கூனிக் குறுகி உரையாடிக்கொண்டிருந்தார். அது பரவாயில்லை. சினிமா உலகில் இப்படியான மரியாதையை எல்லோருமே எதிர்பார்க்கிறார்கள் போலும். இங்கே அதுவல்ல…
-
- 2 replies
- 830 views
-
-
அது சிட்னியில் கொஞ்சம் குளிரான காலநிலை. கோடைகாலம் முடிந்து அடுத்த பருவத்துக்குள் சிட்னி காலடி எடுத்துவைக்கும் காலம் ஆரம்பமாகிவிட்டதற்கான அறிகுறியாக லேசான காலநிலை மாற்றங்கள். வெளியில் போவதற்கு மனம் இடம்தரவில்லை. எனவே வீட்டில் ஓய்வாக கிடைத்த இடைவெளியில் நடிகர் மோகனுக்காக இசைஞானி இசையமைத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களைக் கேட்கவேண்டும் போன்றதொரு உணர்வு. சீடிகளை எடுக்கும் போதே கவரில் இருந்த மோகன் , இசைஞானி, எஸ்.பி.பாலு ஆகியோரின் இளமைப் படங்களும் , அந்தப்பாட்டுக்களை இவர்களின் கூட்டணியில்தான் உருவாக்க வேண்டும் என்று ஒற்றைகாலில் நின்று, இசைஞானி, காலத்தால் அழியாத மெலடிகளை உருவாக்க உந்துதலைக் கொடுத்த தயாரிப…
-
- 2 replies
- 2.2k views
-
-
ஈழத்து கலைஞன் ,அந்த கால கட்டத்திலேயே பொப்பிசையை ஈழத்தில் உருவாக்கிய ”ஈழத்து மெல்லிசை மன்னர் ” எம்.பி.பரமேஸ் அவர்களை ஒட்டுமொத்த திரையுலகம் மறந்த பொழுதும் தேடி கண்டடைந்து அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கொடுத்து மகிழ்வதில் ”கலகம்” தன்னம்பிக்கையும் பெருமிதமும் கொள்கிறது.. எம்.பி.பரமேஸ் சார்பாக தமிழர்களின் விடிவெள்ளி தமிழ் தேச தந்தை பாவலேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும்,தமிழ் தேச களத்தில் வீறு கொண்டு நிற்பவருமான அக்கா ,வழக்குறைஞர். அங்கயற்கண்ணி அவர்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.. திராவிட விடுதலை கழகம் பொறுப்பாளரும் தமிழீழ தலைவர் பிரபாகரனோடு மிக நெருக்கமாக நின்றவறுமாகிய அய்யா கொளத்தூர் மணி அவர்களின் கரங்களால் அக்கா அங்கயர்கண்ணி பெற்று கொள்கிறார்... வாழ்த்துவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
அதுவொரு அழகிய வானொலி காலம் 1 – 6 அருள்செல்வன். தொடர்புக்கு: arulselvanrk@gmail.com செவியில் விழுந்து இதயம் நுழைந்த இலங்கையின் குரல்கள்! இலங்கை வானொலியின் லைப்ரரி | கோப்புப் படம் எழுபதுகளில் தன் பால்யத்தைக் கழித்தவர்களின் வாழ்க்கையில் இலங்கை வானொலியின் நினைவில் மூழ்கிக் குளித்து எழாமல் கடந்து போக முடியாது. தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழக ரசிக மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான் .குறிப்பாக என்னைப்போன்று தென்தமிழ்நாட்டில் இருந்தவர்களுக்குத் துல்லியமாகக் கேட்டது இலங்கை வானொலி மட்டும்…
-
- 2 replies
- 1.4k views
-
-
கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி "தமிழவேள்" பட்டம் : [Tuesday, 2011-10-18 11:47:06] கனடியத் தமிழ் மகளிர்; மாமன்றம் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் தமிழ்ப் பணிகளைப் பாராட்டி கடந்த 02.10.2011 ஞாயிற்றுக்கிழமை தமிழவேள் பட்டம் சூட்டிச் சிறப்புச் செய்யப்பட்டுள்ளது. பட்டத்தை விழாவுக்கு முதன்மைவிருந்தினராக வருகைதந்திருந்த கனடா நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய யோன் மைக்கே அவர்கள் வழங்குவதைப் படத்தில் காணலாம். அருகில் நிற்பவர் மன்றத்தலைவியும் எழுத்தாளருமாகிய திருமதி சரஸ்வதி அரிக்கிருஷ்ணன் அவர்கள். கனாவினில் கண்டேன் கவிநாயகர் கந்தவனம் கனடாவின் நாடாளுமன்ற அரங்கினில் சென்ற காட்சி நுணாவினில் பிறந்தேன் நும்நாடு வந்தேன் எனப்பல எண்ணியே ஏற…
-
- 2 replies
- 1.1k views
-
-
இதில் மெய் மறக்க வைக்கும் இளம் நாதஸ்வர கலைஞர்களின் இனிமையான பாடல்களும் உள்ளன. 70/80 களில் பார்த்த திருவிழாவுக்கு அழைத்து செல்கிறது.
-
- 2 replies
- 1.4k views
-