பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
இனிய வணக்கங்கள், உயர்குடி மக்களாக வாழ்வது என்பது ஓர் கலை. இது எல்லோராலும் முடியாது. கொழும்பில் வாழும் தமிழர்களை முன்னோடிகளாக வைத்து புலத்தில் உள்ளவர்களும் உயர்குடி மக்களாக வாழ ஒரு சில ஐடியாக்கள்: மற்றவனுக்கு எந்தப்பாசை தெரியாதோ அந்தப்பாசையில் நீங்கள் உரையாடவேண்டும். அதிலும்... பலர் முன்னிலையில் நீங்கள் இதைச்செய்வது விஷேசம். குழந்தைகளை தனியார் பள்ளிகளிற்கு அனுப்பவேண்டும். அரசாங்கத்தின் இலவச சேவைகளை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகள் வேற்றினத்தவர்களுடன் பழகினாலோ, காதலித்தாலோ அல்லது கலியாணம் செய்தாலோ தப்பில்லை, ஆனால்.. அது தமிழராக இல்லாதவாறு பார்த்துகொள்ளவேண்டும். பணம் அதிகம் உங்களிடம் இருந்தாலும்.. ஏனைய பணக்காரர்களுடன் பழகும்போது உங்க…
-
- 29 replies
- 4.4k views
-
-
அண்மையில் நண்பர் ஒருவர் கலைஞர் கருணாநிதி எழுதிய திரை படப் பாடல் என்று சொல்லி ஒரு பாடலை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். கலைஞர் ஐயா முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழனின் இன்றைய நிலையை கவிதையாக வடித்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் என்ன சாதாரண ஆளா? இரு பெண்டாட்டிகள் உடனிருக்க இரு குளிரூட்டிகள் அருகிருக்க நாலு மணி நேர உண்ணா விரதத்தால் போரை நிறுத்திய பெருந்தகை. அவரது மறக்க முடியுமா திரைப் படப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது: காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம் ஈழத்தமிழனுக்கும் இன்று மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை! கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி …
-
- 2 replies
- 1.3k views
-
-
சர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும். விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் 'தான் ஒரு முட்டாள்' என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு 'அறிஞனாக' வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்…
-
- 8 replies
- 2.8k views
-
-
உடனடி தேவை - மாற்றங்கள் ... என்னில்... உங்களில்... நம்மில்... இருந்து GTN ற்காக நடராஜன்: முல்லைத்தீவு - பரந்து விரிந்த உலகின் கவனம் நிலைகுத்தி நிற்கும் பிரதேசம்: வடக்கே காங்கேசன்துறை முதல் கிழக்கே பொத்துவில் வரை விரிந்து பரந்த தமிழீழ தனியரசுக்கான போரை முடிவுறுத்துவதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் புளகாங்கித அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. கள நிலமைகள் குறித்து பக்கச்சார்பற்ற அறிக்கைகள் கிடைக்காதமை ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் வழிசமைத்து விடுகின்றன. தோற்கடிக்க முடியாத போராட்ட சக்தியாக தமிழ்த் தேசிய ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட புலிகள் எல்லாவற்றையும் இழந்து விட்டு போர்க்களத்தில் நின்ற இராவணனை ஒத்த நிலையில் இர…
-
- 0 replies
- 927 views
-
-
லோசன் எழுதிய பதிவுகளில் மிகவும் பிடித்த பதிவுகளில் இதுவும் ஒன்று. நேற்றைய நாள், காலை முதலே பரபரப்புத் தொற்றிய ஒருநாள்! பலவிதமான பரபரப்புச் செய்திகள்,வதந்திகள்,வாழ்த்து க்கள் என்று குறைவில்லாமல் முழுநாளுமே ஒருவித முக்கியமான நாளாகவே காணப்பட்டது. அதிகாலையிலேயே (ஞாயிறு என்றால் எனக்கு காலை 9மணியும் அதிகாலைதான்) வந்த வெளிநாட்டு அழைப்பொன்று 'அணைக்கட்டும் 5000உம் சரியாம்' என்று செய்தி சொல்லிப்போனது. பிறகு வந்த தகவல்கள் (முன்வீடு,பக்கத்துவீடு,பேப்ப
-
- 1 reply
- 1.6k views
-
-
வறிய நாடுகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மருந்து நிறுவனங்களின் மனிதப் பரிசோதனைகள், ஆயுத பேரம் மற்றும் பரிசோதனை, தொடரும் வளங்களின் சுரண்டல் இப்படி எங்கு திரும்பினாலும் நெஞ்சை அழுத்தும் விடயங்கள் நிகழ்ந்தேறிய வண்ணமே உள்ளன. Biocon என்ற பங்களுர் மருந்து நிறுவனத்தின் அதிபர் Kiran Mazumdar Shaw என்ற இந்தியப் பெண்மணி இன்று இந்தியாவின் முதன்நிலை பணக்காரப் பெண்மணி. இவரது நிறுவனம் நீரிழிவு மற்றும் புற்றுநோய் சம்பதமான மருந்துகளின் நவீன ஆராய்ச்சிகள் தொடர்பில் பல சேவைகளை வழங்கி வருகின்றன. இந்தியாவில் இருக்கும் விஞ்ஞானிகளின் திறமையும் ஊதியக் குறைவும் தனது கம்பனியின் வளர்ச்சியின் ரகசியங்களில் முக்கியமானவை என்கிறார் கலாநிதி Shaw. தற்போது மிகப்பெரிய ஒரு வைத்தியசாலையின் கட்டட நிர்மாணத…
-
- 9 replies
- 2.8k views
-
-
நெசமாத்தான் சொல்றியா? You faget! இதை நீங்களும் பல இடங்களில பல இளமாக்களிட்ட இருந்து கேட்டிருப்பீங்கள். சில பேருக்கு மட்டும் அதின்ர உண்மையான அர்த்தம் விளங்கியிருக்கும். ஆனால், மற்றவை ஏதோ சின்னப்பிள்ளையள் கெட்ட வார்த்தையில திட்டுதுகள் எண்டு நினைச்சிருப்பீங்கள். இன்னும் சில பேர் அதை கண்டுகொள்ளாமலே விட்டிருப்பீங்கள். சிலபேர் மனசுக்குள்ள திட்டினாலும், சின்னப்பிள்ளையள் விளையாட்டுத்தனமாச் சொல்லிட்டுதுகள் எண்டு நினைப்பீங்கள். என்ன அர்த்தம் எண்டு சொல்லாமலே கனக்க கதைக்கிறன் என்ன? faget மற்றும் cocho போன்ற வார்த்தைகள், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஒரு ஆணைக் குறிக்கும் சொற்களாகும். இந்த சமூகமானது சொற்களால் வன்முறை செய்யக் கற்றுக் கொண்டுள்ள சமூகமாகும். நம்மில்…
-
- 6 replies
- 3.2k views
-
-
நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... தோழமையோடு இருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் மேல், சிந்திக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது சமீபத்திய ஆய்வு. மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை; காதலிப்பதுமில்லை; பாசம் செலுத்துவதுமில்லை; தோழமையோடு பழகுவதுமில்லை என பொட்டில் அடிப்பதுபோல் சொல்கிறது. 1. மேம்பட்ட விலங்கு என்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்வது, அபத்தம் என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள். 2. ஒருபோதும் நாமாக சிந்திப்பதில்லை. ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தூண்ட…
-
- 4 replies
- 3.6k views
-
-
மார்புகளைப் பற்றிப் பேசுமுன், சில முடிவுகளுக்கு வருவோம். இயற்கை பரிணாமத் தேர்வின் விளைவுதான் இன்றைய மனிதன். பெண் மார்புகள் கூட. பரிணாமத்துக்கு தாவணி, பிரா, பர்தா, காவித்தீவிரவாதிகள், பத்வா, வெங்காயம் பற்றியெல்லாம் கவலையில்லை. அதன் அக்கறை தக்கவைத்தல் மட்டுமே: ஒரு இனம் தன்னை அழியாமல் காத்துக் கொள்ள சூழல் விடுக்கும் சவால்களை சமாளிப்பதற்கான திறனும், மாற்றங்களுக்கு எற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மையும் வேண்டும். ஒரு இனத்தின் இது போன்ற குணாம்சங்களைத் தொடர்ந்து தேர்ந்து வம்சாவளியாகக் கடத்தி விடும் பொறுப்பு பரிணாமத்தினுடையது. இவ்வாறு நான் இப்போது கணினியோடு உரையாடுவதற்கு, அதில் துழாவி தினசரி இரை தேடுவதெனப் பலவற்றுக்கும் பரிணாமமே பொறுப்பு. இந்த நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் நம்…
-
- 54 replies
- 31.2k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், இண்டைக்கு யூரியூப் இணையத்தில மிகவும் பயனுள்ள காணொளிகள் பார்த்தன். இந்த காணொளிகளில அமெரிக்கா Carnegie Mellon University (CMU) Pittsburgh, Pennsylvania வை சேர்ந்த கணணியில் பேராசிரியர் ஒருவர் வாழ்வில் பற்றி அருமையாக உரை நிகழ்த்தி இருக்கிறார். இவர் 1960ம் ஆண்டு பிறந்தவர். இப்போது புற்றுநோயுக்கு உள்ளாகி இருக்கிறார். மருத்துவர்கள் இவரிண்ட நாட்கள எண்ணத்துவங்கி இருக்கிறீனம். இந்த சுமார் 1.30 மணித்தியாலம் நீளமான காணொளிகள் இரண்டையும் முடியுமானால் பொறுமையுடன் முழுவதுமாக பாருங்கோ. எங்கட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளவை. ஏற்கனவே இதைப்பார்க் காதவர்களுக்காக இங்கு இணைக்கின்றேன். இந்த காணொளிகள் - பேராசிரியரின் இந்த இறுதி உரை - உலகப்புகழ் பெற்று உள்ள…
-
- 1 reply
- 2.1k views
-
-
"பெண்விடுதலை", "பெண்ணியம்", "பெண்சுதந்திரம்" என்று குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிப் பலகாலம் ஆகிவிட்டது. பெண்கள் மீதான வன்முறை என்பது பல்வேறு தளங்களில் இன்னமும் நிகழ்ந்து கொண்டுதானிக்கின்றது. அரசியல் பொருளாதார சமூகத் தளங்களில் அன்றாடம் இது வெளிப்படுவதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். உடல்சார்ந்து நிகழ்கிற வன்முறை ஒருபுறம். உளம்சார்ந்து நிகழ்கிற வன்முறை ஒருபுறம். இவற்றுக்கும் அப்பால் கருத்தியல் தளத்தில் நிகழ்கிற வன்முறை என்று ஒன்றிருக்கிறது. இது கருத்துக்களை உருவாக்கும் சமூக ஊடகங்கள் ஊடாக நிகழ்கின்றது. கலை, இலக்கியம், ஊடகம் என்று இது பரந்து இருக்கிறது. எல்லாத் தளங்களிலும் ஏதோ ஒருவகையில் பெண்களின் உரிமைகள் (பெண்க…
-
- 31 replies
- 11.1k views
-
-
எனக்கு ஒரு சந்தேகம் ............... சந்தேக கோடு,,,,,,,,, அது சந்தோஷக்கேடு....தமிழ் கருத்தில் ஒரு சந்தேகம் அதாவது .................என்று ." காட்டமான ".அறிக்கை விட்டு இருந்தார் . காட்டமான தமிழ் சொல் தானா? அதன் கருத்து ...கடுமையான ...கார சாரமான .. ..என்று வருமா? தயவு செய்து யாராவது விளக்கம் ...தாங்கோவன் நன்றியுடன் நிலாமதி
-
- 2 replies
- 3k views
-
-
சில பெண்களுக்கு முலைகள் நெஞ்சிலிருந்து நேரே முளைத்தனவாயும் சிலருக்கு மேல் நெஞ்சிலிருந்து வடிந்தனவாயும் சிலருக்கு மேல் விலாவிலிருந்து முன்னோக்கிப் படர்ந்து வருவன போலவும் இருக்கும். உண்மையில் உலகின் கோடிக்கணக்கான மனிதருக்குத் தனித்தனி முகங்கள் என்பது போல பெண்களுக்குத் தனித்தனி முலைகளாக இருக்க வேண்டும். ஒருவர் முகம்போல் உலகில் ஏழுபேர்கள் இருப்பார்கள் எனும் தேற்றத்தை ஒத்துக்கொண்டால், உலகின் மக்கட்தொகையின் பாதியை ஏழாக வகுத்துக்கொள்ளலாம், முலைகளின் தினுசுகளுக்கு.ஈர்க்கு இடைபுகாத, காற்று இடைபுகாத முலைகள் உண்டு. கொங்கைகளில் சந்தன, குங்குமக் குழம்பு பூசியதாகத் தமிழ் இலக்கியம் பேசியதுண்டு. "வெறிக் குங்குமக் கொங்கை மீதே இளம்பிறை வெள்ளை நிலா எறிக்கும்' என்பது ஓர் எடுத்துக்காட்டு. நுங…
-
- 7 replies
- 6k views
-
-
விஜய் ரீவியின் நீ யா நானா நிகழ்சி பார்த்த பாதிப்பிலே இந்த திரியினை தொடங்குகின்றேன் குடும்பத்தில் உங்கள் பெற்றோர் உங்களுக்கும் உங்களின் சகோதர சகோதரிகளிடமும் பாரபட்சமாக இருந்தார்களா? இருகின்ரார்களா?அப்படி இருப்பின் எப்படி இருகின்றார்கள்? அறிவுரையினை பாசத்தின் எதிர்பாக பார்கின்றீர்களா?அந்த அறிவுரைகளை கேட்காத போது நடக்கும் பிரச்சினைக்கு பின்னர் பெற்றோரின் மனதை புரிந்து கொண்டீர்களா? குழந்தைகள் இருக்கும் கள உறவுகள் உங்களின் குழந்தைகளிடம் நீங்கள் பாரபட்சமாக நடத்துகின்றீர்களா?உங்களின் பாசத்தை எப்படி குழந்தைகளிடம் பங்கிடுகின்றீர்கள்? கொஞ்சம் சீரியஸாக விவாதிப்போம்!!!!!
-
- 5 replies
- 4k views
-
-
மனைவிகளின் பிரசவத்திற்கு கணவர்களின் பிரசன்னம்-ஸ்ரீ லங்கா சுகாதார அமைச்சர். இதனால் ஏற்படக்கூடிய நல்விளைவுகளைக் கருத்திற்கொண்டே இம்முடிவை எடுத்ததாக அவர் கூறுகிறார். Source:The Island யாழ் கள கருத்துப்பதிவாளன்களே கருத்துப்பதிவாளனிகளே உங்கள் முடிவு என்ன?
-
- 15 replies
- 5.5k views
-
-
யுத்தத்தின் மறுபக்கம் இலங்கையின் இனப்பிரச்சனையும் யுத்தமும் தீவிரமடைந்திருந்த காலத்தில் அதாவது யாழ்நகருக்கான யுத்தம்,முல்லைத்தீவு அழித்தொழிப்பு,வன்னிக்கான ஆக்கிரமிப்பு யுத்தம் போன்றவை நடந்துகொண்டுகொண்டிருக்கும் போது சில கதைகள் எம்மிடையே உலவின.சில வாய்வழி வதந்திகளாக அன்றி தினக்குரல்,வீரகேசரி முதலிய தேசிய அளவில் வெளியாகும் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. யுத்தத்தில் இறந்ததாகக் கருதி மரணச் சடங்கும் நடத்தப்பட்ட இராணுவ வீரர்கள் பலர் திரும்பி வந்த கதைதான் அது. ஒரு சண்டையின் போதோ அல்லது முகாம் தாக்குதலுக்குள்ளாகும்போதோ எதிர்கொள்ளும் இராணுவப்படைப்பிரிவு சிதைந்துபோவது வழமை.அந்தப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் கடுமையான காயமுற்றோ அல்லது தப்பியோடியோ இருக்கும் பட்சத்தில் அவர்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
வியஜ கூழகங்கைச் சக்கரவர்த்தி யாழ்பாணத்தில் அரசு புரிந்து வந்த காலத்தில் அவருக்கு மந்திரியாய் இருந்தவர் புவனேகவாகு என்பவர் இவர் தமிழ்புலமை நிரம்பியவர் இவரால் கட்டபட்ட சுப்ரமணியர் ஆலயம் நல்லூரில் இன்றும் இருக்கின்றது இவர் ஆயிரத்தி நானூற்றி வருடங்களுக்கு முந்தியே வாழ்ந்தவர். இவர் யாழ்பாணத்தில் நிறைய தரும பாடசாலைகள் அமைத்தார் அதன் ழூலம் தமிழை காலவிருத்தி செய்தார்... நன்றி குமுதம் பக்தி
-
- 2 replies
- 2.3k views
-
-
இந்துத்துவ பயங்கரவாதம் இந்துத்துவ பயங்கரவாதத்தை பாருங்கள்.... சிங்கள பெளத்த பயங்கரவாதம் இலங்கையில் எப்படி அட்டூழியம் பண்ணுதோ............ அதப்போல இந்தியாவில இந்துத்துவ வெறியும் அதின்ர பயங்கரவாதமும் எப்படி இருக்கிறதெண்டு பாருங்கோ..................... என்ன கொடுமை.......................... இதுபோல சாதிய ரீதியாவும் மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கும்.................... மதப்பயங்கரவாதத்துக்கும் ஒவ்வொருநாளும் ஆளாகிக்கொண்டிருக்கினம் இந்தியாவில................................... கட்டுரைய படிக்க இங்க போங்கோ........ http://www.nyu.edu/classes/keefer/joe/reuben2.html இந்துத்துவ பயங்கரவாதத்த பற்றி வேற தெரிஞ்சிருந்தா இங்க யாராவது அதப்பற்றி எழுதுங்…
-
- 26 replies
- 7.7k views
-
-
இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம். இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு சபேசன். கனடா இலங்கையில் வடக்கு தெற்கு எங்கும் அரசினாலும் புலிகளாலும் காட்டுத்தர்பார் நடாத்தப்படுகின்றது. புலிகளால் நடத்தப்படும் கொலைகளையும் காணாமல் போதல்களையும் பெரிதாக கூறும் அரசும, அதே போன்று அரசும் அரசு சார்பு குழுக்களும் செய்யும் கொலைகளையும் காணாமற்போதல்களையும் புலிகளும் பெரிதாக்கும் பிரச்சாரங்களும் ஒன்றை மட்டும் தெளிவாக புரியவைக்கின்றன. அதாவது எத்தனை மனித உரிமை அமைப்புகள் கண்டித்தாலும் நாங்கள் இவற்றை (கொலைகளையும், காணாமல் போதல்களையும்) நிறுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்போம் என்பதையே. இரண்டு பகுதிகளும் ஒன்றை ஒன்று விட்டுக…
-
- 0 replies
- 3k views
-
-
பாரதி பஜனையில் மயங்கும் மக்கள் 1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால், ஒரு வாரம் முன்பு வரை அம்மாவின் அராஜக ஆட்சியைக் கடும் சொற்களால் வசை பாடி விட்டு, அதே அம்மாவினை அன்புச் சகோதரியாய்க் காண முடிந்த வைகோவின் செயலுக்கும் தமிழ் சமுதாயம் மீது பழிபோட்டு விடலாம். எமெர்ஜென்சியில் தனது மகனைப் பின்னி எடுத்த இந்திராவிடமே நிலையான ஆட்சிக்கு லட்சியக் கூட்டு சேர்ந்த கருணாநிதியும் தமிழ் சமுதாயம் மீதே பழி போடலாம். பதினேழு தொழிலாளர்களைத் தாமிரபரணியில் அடித்துச் சாகடித்த செயல் நிகழ்ந்த இ…
-
- 1 reply
- 4.5k views
-
-
-
ஸ்டாலின் ஆட்சியின் தவறுகள் குறித்து நமக்கு பல்வேறு விமர்சனங்கள் இருப்பதையும், அதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதையும் குறிப்பிடுகின்ற அதே வேளையில். இது குறித்து பல்வேறு இடங்களில், பின்னூட்டங்ளில், பதிவுகளில் எழுதியுள்ளோம் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். ஏனேனில் ஏதோ ஸ்டாலின் குறித்து இதுதான் முதல் முறையாக நாம் பேசுவதாக இவர்கள் சொல்லும் அபாயம் உள்ளது. ஸ்டாலின் மீதான எமது விமர்சனங்கள் ஏகாதிபத்தியவாதிகளோ அல்லது பிற்போக்குவாதிகளோ குறிப்பிடும் அம்சங்களில் அல்ல எனபதனை தெளிவாக குறிப்பிட்டு விடுகிறேன். இந்த விசயத்தையும் பல இடங்களில் குறிப்பிட்டும் உள்ளேன். இன்னும் சொன்னால் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள் ஜல்லியடிக்க துவங்கும் முன்பே கூட கம்யுனிஸ்டு கட்சியின் விமர்…
-
- 10 replies
- 3.3k views
-
-
Paul ன்ர கதையை எப்பிடிச் சொல்றது? Sexual abuse ஆ ? ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்று நானும் நினச்சதில்ல உங்களில் சிலரைப் போல. ஆனால் Paul ன் கதையை வாசிச்ச பிறகு என்னால அதை உங்களுக்குச் சொல்லாமலிருக்க முடியேல்ல. இதையெல்லாம் ஏன் எழுதுவான்? என்ன லாபம் என்று கேக்க வேண்டாம். இதைத்தான் இதை வாசிக்கிறது மூலம் உங்களால யாராவது ஒருவர் abuse பண்ணுப்படாமல் போகலாம் அல்லது ஏற்கனவே பாதிக்கப்ட்ட ஒருவருடன் மனம் விட்டுப் பேச இந்தப் பதிவு உங்களுக்கு உதவலாம். அவனைப் பார்த்தால் வெகு சாதாரணமாத்தானிருப்பான். ஆனால் அவனுக்குள் பல போராட்டங்கள், பல விடை தேடிச் சலித்துப்போன கேள்விகள், குழப்பங்கள் என்று கிட்டத்தட்ட தன்னையே வெறுத்து துன்புறுத்திப் பார்க்கும் ஒரு மனநிலை.தன்னைத்தானே பச்ச…
-
- 25 replies
- 13.1k views
-
-
ஒரு வலைக்குறிப்பிலிருந்து: தேவதாசியை ஒழித்ததால் எய்ட்ஸ் அதிகரித்தது! 'தா தா தைதை.. தத்தை தை...தை... தித்தித்தை' என சொர்ணமால்யா தேவதாசியாக பெரியார் படத்தில் ஆடி இருப்பார். தேவதாசி முறை என்பது அபத்தம் என்கிறார்கள். இதை கொஞ்சம் அறிவுக் கண் கொண்டு பார்த்தால் அதில் மறை(த)ந்துள்ள உண்மைகள் விளங்கும். நான்முகன் வேதமும், நாரணன் பாதமும் அனைவருக்கும் பொது என்று பார்ப்பனர்கள் சொன்னால் எதோ பொல்லாததைச் சொல்வதாக பார்ப்பன நிந்தனை செய்கிறார்கள். அறிவிலிகளின் பேச்சு ஆதி காலம் தொட்டே இருக்கிறது. நாம் இந்த தேவதாசி முறையைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம் நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப் பட்ட முறையே தேவதாசி என்பது. தேவதாசி என்பது ஒரு குலம். அதில் உள்ள பெண்கள் இறைவனுக்கும் …
-
- 15 replies
- 6.5k views
-
-
தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கத்தின் கட்டுரை தொகுப்பில் இருந்து ஜோன் போல் சாத்தார் கூறிய கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.. "எழுத்து கலையானது அரசியல் விழிப்புணர்வை தூண்டி,மனித விடுதலைக்கு வழிசமைத்து கொடுகிறது.சமுகப் பிரக்ஞையுடன் எழுதுபவன்,சமூக விடுதலைக்காக எழுதுபவன் தனது இருப்பிற்கும் மற்றவர்களது வாழ்விற்கும் அர்த்தத்தை கொடுகிறான் என்கிறார் சாத்தார். மனித இருப்பு நிலைக்கு அப்பால்,அழகுணர்விற்காக,கலை உணர்விற்காக, நித்திய விழுமியங்களைத் தேடி எழுதுவதில் அர்த்தமில்லை.அது சமூகத்தின் ஓடுக்குமுறையாளர்களை,அதிகார வர்க்கத்தினரை திருப்திபடுத்தும் படைப்புகளாகும்.அந்த எழுத்துகள் சமூகத்தின் ஓடுக்குமுறையை நியாயபடுத்துவதிற்காக அ…
-
- 4 replies
- 2.6k views
-