துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
ஈழக் கவிஞர் செழியன் விடைபெற்றார்! ஈழத்தின் எழுத்தாளர், கவிஞர் செழியன், விடைபெற்றார். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்த கவிஞர் செழியன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கும் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கும் வளம் சேர்த்த படைப்பாளியாக இவர் கருதப்படுகின்றார். ‘ஒரு போராளியின் நாட் குறிப்பு‘, (அனுபவக் கட்டுரைகள்) , ‘வானத்தைப் பிளந்த கதை‘, ‘குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள் (கவிதைத்தொகுப்பு), ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை‘ (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். தமிழ் விடுதலைப்போராட்ட அமைப்புகளிடையே வெடித்த முரண்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
ஏ.இ. மனோகரன் காலமானார் சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் சென்னையிலுள்ள திருவான்மையூர், கந்தன்சாவடியில் இன்றிரவு 7.20 மணியளவில் இயற்கையெய்தினார். இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும். http://www.tamilmirror.lk/செய்திகள்/ஏ-…
-
- 28 replies
- 3k views
-
-
யாழ்கள உறவான அர்ஜுனின் தந்தையார் நவரட்ணம் அவர்கள் காலமாகி விட்டார். அன்னாரை இழந்து பிரிவால் வாடும் அர்ஜுனுக்கும் அவர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் .
-
- 45 replies
- 4.7k views
- 1 follower
-
-
ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார்! ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார். ஈழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த ரீ. பத்மநாதன் இலங்கை வானொலி மெல்லிசைப் படால்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர். 1964ஆம் ஆண்டில் திருகோணமலை இசைக்கழகம் என்ற இசைக்குழுவை நிறுவிய இவர் ஈழக் கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் தயாரித்து நடித்த நிர்மலா திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில்லையூர் செல்வராசான் எழுதிய “கண்மணி ஆடவா ..“ என்ற பாடல் (https://www.youtube.com/watch?v=9MmnlgjcI-0) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாராட்டைப் பெற்றது. இதேவேளை தென்றலும் புயலும் என்ற…
-
- 0 replies
- 650 views
-
-
மறைந்தார் முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன்! சென்னை : திராவிட சிந்தனைகளில் ஊறியவரும் சுயமரியாதைத் தமிழறிஞரும், மூத்த அரசியல்வாதிகளின் நண்பருமான மா.நன்னன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் என்னும் கிராமத்தில் பிறந்த மா.நன்னன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்துள்ளார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர…
-
- 3 replies
- 481 views
-
-
நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கண்ணீருடன் விடை பெற்றார் இராசநாயகம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரச அதிபரும் மகாதேவா சைவ சிறாா் (குருகுலம்) இல்லத்தின் தலைவருமான அமரர் திருநாவுகரசு இராசநாயகத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.நூற்றுக்கணக்கான குழந்தைகள் கதறி அழ கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள சிறுவா் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அஞ்சலி உரைகள் இடம்பெற்று பூநகரி மட்டுவில்நாடு பொது மயானத்தில் இறுதி நிகழ்வு இடம்பெற்றது. அதிகாரிகள் அரசியல் தரப்புக்கள் பொது மக்கள் என ஏராளமானவா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி…
-
- 3 replies
- 970 views
-
-
அஞ்சலி: மேலாண்மை பொன்னுச்சாமி ஜெயமோகன் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை நான் 1992ல் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரையின் இல்லத்தில் சந்தித்தேன். அன்று திருவண்ணாமலையில் நடந்துகொண்டிருந்த கலையிலக்கிய இரவு இடதுசாரிகளின் திருவிழா. அதில் என்னுடைய ’திசைகளின் நடுவே’ என்னும் தொகுதி வெளியிடப்பட்டது. அவ்விழாவை ஒட்டி நிகழ்ந்த கருத்தரங்கில் பேசுவதற்காக மேலாண்மை பொன்னுச்சாமி வந்திருந்தார். மிக எளிமையான தோற்றம். மேலாண்மறைநாடு என்னும் சிற்றூரில் மளிகைக்கடை வைத்திருந்தார். மளிகைக்கடைக்காரருக்குரிய அனைத்துமே அவரிடம் அமைந்திருந்தன. அனைவரிடமும் பாந்தமான சிரிப்பு. நட்புத்தோரணை. எதையும் உடனே விலைவிசாரித்துக்கொள்ளும் இயல்பு. எல்லாவற்றையும் லௌகீகமாக மட்டுமே பார்க்கும் பார்வை.…
-
- 3 replies
- 821 views
-
-
கடற்புலிகள் உருவாக்கத்தின்போது போராளிகளுக்கான நீச்சல் பயிற்சி ஆசானாக இருந்த வடமராட்சி இன்பர்சிட்டி பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் மாமா அவர்கள் இன்று விபத்தொன்றில் சாவடைந்துள்ளார். தமிழீழ தேசியத்தலைவரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தவரும்,1992 இல். கடற்புலிகள் உருவாக்கத்தின்போது போராளிகளுக்கான நீச்சல் பயிற்சி ஆசானாகவும், படகோட்டி பயிற்றுவிப்பாளராகவும் மற்றும் பல நீரடி நீச்சல் வீரர்களை உருவாக்கியவரும் போராளிகளால் அன்பாக மாமா என அழைக்கப்பட்டு வந்தவரும் ஆவார். குறிப்பாக இவருடைய மகன் கடற்புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவராகவும் அதேவேளை இவருடைய உடன்பிறந்த சகோதரி லண்டனில் தாயகத்து தேசியச் செயற்பாடுகளுக்குள் முன்னின்று உழைத்துவரும் திருமதி இரத்தினேஸ்வரி அம்மா என்பதும் குறிப்…
-
- 3 replies
- 546 views
-
-
தமிழ் சிறி அவர்களுடைய மச்சாள் (மனைவியின் அக்கா) இறைவனடி சேர்ந்தார். அவர் இறப்பையிட்டு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். உற்றார் உறவினர்களின் துயரத்தில் நாங்களும் பங்குகொண்டு,.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
-
- 27 replies
- 1.8k views
-
-
முதற்தர சத்திரசிகிற்சை நிபுணர் ம. கணேசரட்ணம் அவர்களுக்கு அஞ்சலி நேற்று காலை சுகவீனம் காரணமாக காலமான முதல் தர சத்திர சிகிச்சை நிபுணர் கணேசரட்ணம் அவர்களுக்கு அஞ்சலி அமரர் தமிழ் தேசிய தளத்தில் அர்ப்பணிப்பு நிறைந்த சேவையாற்றியவர். ஆகாய கடல் வெளி சமரின் போது (ஆனையிறவு மீதான முதல் முற்றுகை சமர்) காயமடைந்த போராளிகளிற்கு தேவையான அறுவை சிகிச்சைகளை இரவு பகல் என்று பாராது தூக்கமின்றி செய்தவர், பொது மக்களை இலக்கு வைத்து மேற்கொண்ட நவாலி தேவாயலத்தின் மீதான இலங்கை அரசின் கொடூர தாக்குதலில் காயப்பட்ட பலரை காப்பாற்ற பல நாட்கள் தொடர்ந்து பணியாற்றியவர், சமாதான படை என்று சொல்லி அனுப்பட்ட இந்திய இராணுவம் தமிழ் மக்களை கொன்றழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில்…
-
- 13 replies
- 649 views
-
-
யாழ்கள உறவான, பாஞ்ச் அண்ணாவின் மாமியார்... இலங்கையில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும், பாஞ்ச் அண்ணாவிற்கும், அவர் மனைவிக்கும், குடும்பத்தினருக்கும்.... எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரி ன் ஆத்ம சாந்திக்காக, இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
-
- 43 replies
- 4.7k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 621 views
-
-
இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார் இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான செல்வி. சற்சொரூபவதி நாதன் தனது 81வது வயதில் நீர்கொழும்பில் காலமானார். Image captionசற்சொரூபவதி நாதன் காலமானார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்தி வாசிப்பாளராக, தயாரிப்பாளராக, நிகழ்ச்சி கட்டுப்பாட்டாளராக 40 வருடங்களுக்கும் அதிகமாக பணியாற்றிய இவர் பிபிசி தமிழோசையில் இலங்கை மடல் நிகழ்ச்சியிலும் பங்களிப்பு செய்து வந்திருந்தார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டிலை பிறப்பிடமாகக் கொண்ட சற்சொரூபவதி, யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும், சென்னை பல்கலைக்கழகத்திலும் கல்வி …
-
- 4 replies
- 577 views
-
-
அரங்க ஆளுமை ”பிரான்சிஸ் ஜெனம் ” காலமானார் ஈழத்து நாடக வரலாற்றில் தனக்கென முத்திரை பதித்துக் கொண்ட அ .பிரான்சிஸ் ஜெனம் [ வயது 75] நேற்று கொழும்பில் காலமானார். யாழ்ப்பாணம் சில்லாலையைப் ,பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் , கொண்ட இவர் தனது இறுதிக்கு காலங்களில் கொழும்பில் வசித்து வந்தார். நாடக அரங்கக் கல்லூரியின் உருவாக்கத்தில் ஆரம்ப கர்த்தாக்களுள் ஒருவராக குழந்தை ம .சண்முகலிங்கத்துடன் செயற்பட்ட இவர் தொடர்ந்து திருமறைக் கலாமன்றத்துடன் இணைந்து செயற்பட்டதுடன் நாடக நடிகனாகவும் , ,நெறியாளராகவும் அரங்கப் பயிற்சியாளனாகவும் இயங்கினார் . ”நாராய் நாராய் ” என்ற வெளிநாடுகளுக்கான அரங்கப் பயணத்தின் போது பலராலும் பாராட்டும் பெற்றவர் .பொற…
-
- 0 replies
- 723 views
-
-
நடிகர், வினு சக்கரவர்த்தி காலமானார்! உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 1945 ஆம் ஆண்டு உசிலம்பட்டியில் பிறந்தவர் வினுசக்கரவர்த்தி. தம…
-
- 1 reply
- 553 views
-
-
முதன் முதலாக.... தமிழ் எழுத்தை கணனிக்கு, கொண்டு வந்தவர் மறைவு! இந்திய மொழிகளில் முதன் முதலாக தமிழே கணனிப் பயன்பாட்டுக்கு வந்தது. அந்த எழுத்துருவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அதற்குப் பின்புலமாக இருந்தவர் முன்னாள் ரொரன்ரோ பல்கலைக்கழக பேராசிரியரான கணிதமேதை சி.விஜயகுமார் அவர்கள் ஆகும். இவர் நேற்று ரொரன்ரோவில் காலமானார். 1980களின் இறுதியில் இந்திய இராணுவத்துதோடு புலிகள் உக்கிரபோரில் ஈடுபட்டிருந்தவேளை புலம்பெயர் நாடுகளில்; விடுதலைப் புலிகளின் செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல தமது கிளைகள் ஊடாக புலிகள் செய்தி ஏடுகளை நடத்தி வந்தனர். போர் செய்திகளை உடனுக்குடன் வெளியிட முன்னைய அச்சமைப்பு வேகம் போதாமல் இருந்த காரணத்தால் புலிகள் புதிய முயற்சி…
-
- 9 replies
- 523 views
-
-
தாயகத்தின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று காலை இவர் இறந்து விட்டதாக வதந்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன. ஆனாலும் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இவர் இறந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தி…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் ‘ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனர் மரணம் ஈழத்து மண்ணில், மிகச்சிறந்த ஓர் ‘ஒளிப்பதிவுத் தொழில் நுட்ப வல்லுனராக’ வரலாறு படைப்பார் என நான் எதிர்பார்த்த தம்பி ‘சஞ்சீவ்’ இன்று காலை, வாகன விபத்தில் தன் இன்னுயிரை நீத்தார் என்ற அதிர்ச்சிச் செய்தி, என்னைப் பெரும்சோகத்தில் ஆழ்த்திவிட்டது. மூன்றுமாதங்களுக்கு முன், எண்ணற்ற கனவுகளுடன் என்னைச் சந்தித்த சஞ்சீவ் தன் ‘Drone Camera’ மூலம் ‘ஒரு பறவையின் பார்வையில்’ யாழ்மண்ணின் அழகைப் படம்பிடித்து அனுப்பிய திறமை பார்த்து வியந்துபோனேன். பிறப்பவர் எல்லோருமே, என்றோ ஓர் நாள் இறப்பது உறுதி. ஆனால்… 21 வயதில் இறப்பு…! பெற்றோருக்கு மட்டுமல்ல அவரை நேசித்த அனைவருக்குமே இது ஓர்-ப…
-
- 1 reply
- 429 views
-
-
நிழலியின் தாய்மாமனார் காலமாகி விட்டார். நிழலியின் தாய்மாமனார் காலமானதையிட்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம். உற்றார் உறவினர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றோம்.
-
- 36 replies
- 2.7k views
- 1 follower
-
-
மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
- 9 replies
- 2.1k views
-
-
எமது போராட்டத்தின் முதல் பெண் வித்து, 2ம் லெப் மாலதி அவர்களின்..... தந்தையான பேதுரு அவர்கள் சுகயீனம் காரணமாக இவ்வுலகை விட்டு விடைபெற்றார்..!! ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்...!!!
-
- 12 replies
- 979 views
-
-
பிரபல இலங்கை ஒலிபரப்பாளர் பொன்மணி குலசிங்கம் காலமானார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் முன்னாள் இயக்குனர் பொன்மணி குலசிங்கம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ணில் காலமானார். பொன்மணி குலசிங்கம் நான்கு பிள்ளைகளின் தாயான அவருக்கு வயது 88. இசைப் பட்டதாரியான இவர், தனது பதினான்காவது வயதிலிருந்து இசைத் திறமையைக் காட்டும் வானொலிப் பாடகியாக விளங்கினார். 1956 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் சேர்ந்து கொண்ட இவர், படிப்படியாக உயர்ந்து இசைக் கட்டுப்பாட்டாளர், மேலதிக இயக்குனர், இயக்குனர் என்ற நிலையை எட்டியுள்ளார். பல முன்னணி அறிவிப்பாளர்கள் மற்றும் வானொலி தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்த பெருமை இவர…
-
- 1 reply
- 807 views
-
-
எம் யாழ்கள உறவான ஜஸ்ரினின் தந்தையார் 'ஜோசப்' அவர்கள் இன்றிரவு (வியாழக்கிழமை) வவுனியாவில் காலமாகி விட்டார் என்ற துயரச் செய்தியை சற்று முன்னர் ஜஸ்ரின் வவுனியாவில் இருந்து அறியத் தந்தார். அன்னாரின் இறுதிக்கு கிரியைகள் பற்றிய பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரை இழந்து பிரிவால் வாடும் ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்
-
- 48 replies
- 3.9k views
- 1 follower
-
-
தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பணியாற்றிய தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார். வார்ஸா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர் இவர். தமிழியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட பேராசிரியர் து.மூர்த்தி மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் ஆகிய அரசியல் கருத்தாக்கங்களிலும் ஆழமான பற்று கொண்டவர். ’தமிழியல் புதிய தடங்கள்’ என்ற இவரது நூல் தமிழியல் ஆய்வில் முக்கியமான புத்தகம். 1989 : அரசியல் சமுதாய நிகழ்வுகள், தனிமையில் தவிக்கும் குழந்தைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். ‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’ என்ற இவரது குறுநூல் பெரியார் மீது முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசிய நோக்கிலான விமர்சன…
-
- 0 replies
- 429 views
-
-
இந்தியப் படையினர், யாழ் வைத்தியசாலையில் 21,22 .10.1987 அன்று, வைத்தியர்கள், தாதிமார் உட்பட 21 அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த நாள். இந்தியப் படையினரால், படு கொலை செய்யப் பட்ட.... நோயாளிகள், வைத்தியர்கள், தாதியருக்கு... நினைவு வணக்கங்கள்.
-
- 7 replies
- 542 views
-