Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழர்களுக்கு யார் பொறுப்பு? நிலாந்தன் 09 பெப்ரவரி 2014 ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்க நெருங்க நாடு உளவியல் ரீதியாக இரண்டாகப் பிளவுண்டு செல்கிறது. சிங்கள மற்றும் தமிழ் பொதுசன உளவியல்கள் ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டன. எனவே, ஜெனிவா உளவியலைக் கருதிக் கூறுமிடத்து நாடு இரண்டாகப் பிளவுண்டிருக்கிறது எனலாம். ஒரு புறம் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித பயப்பிராந்தி (fear psychosis) தோற்றுவிக்கப்படுகிறது. ரத்தம் சிந்திப் பெறப்பட்ட ஒரு மகத்தான வெற்றியைத் தட்டிப் பறிக்க முற்படும் வெளிச்சக்திகளையிட்டு உண்டான ஒரு பயப் பிராந்தி அது. தென்னிலங்கையில் வெற்றிநாயகர்களாக வலம் வரும் படைத்தரப்பை, அனைத்துல அரங்கில் குற்றவாளிகளாகக் கூண்டில் நிறுத்த முற்படும் வெளிச்ச…

  2. இலங்கை கடன் மறுசீரமைப்பு: இந்தியா ஆர்வம் காட்டும்போது சீனா பின்தங்க காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 பிப்ரவரி 2023, 11:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க தயாராகவுள்ள பின்னணியில், அதற்கு ஆதரவு வழங்க சீனா முன்வந்துள்ள போதிலும், சீனாவின் ஆதரவு போதுமானதாக இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இதனைக் குறிப்பிட்டுள்ள…

  3. ------------------------------------ விமர்சனத்துக்கும் குறைபிடிக்கிறதுக்கும் இடையில ஒரு நூல் இடைவெளிதான் இருக்கு. இதை தமிழர்களாகிய நாங்கள் சரியா விளங்கிக்கொள்ளாத வில்லங்கமான கால கட்டத்தில் வாழ்கிறோம். புலிகளின் காலகட்டத்தில் மற்ற இயக்கங்கள் முன்வைத்த விமர்சனங்களை ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் பார்க்க தவறியது போலவே இப்போது பிற அரசியல், ஆயுத இயக்கங்கள் முன்வைக்கும் சில கருத்தியல் பார்வைகளை சரியான கண்ணோட்டத்தில் பார்க்கமறுக்கும் பிழையான காரியங்களை நாம் செய்வதாக உணர்கிறோம். ஒவ்வொரு இயக்கங்களுக்கும் ஒரு கொள்கை உள்ளது.அது தமிழர்நலன் சார்ந்ததா? இல்லை அவர்களின் சுயலாப அரசியல் பார்வையா? என்பதற்கு அப்பால் "நாம் எல்லோரும் தமிழர்கள்" என்பதை மறந்துவிடுகிறோம். ஆளும் அரசோடு சேர்ந்த…

  4. இலங்கைத் தேர்தல் - இனி என்ன? - தினமணி நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை. [Friday 2015-08-28 12:00] அமெரிக்கா, ஈழத்தமிழர் பிரச்சனையில் கொடூரங்களை விசாரிக்க சர்வதேச சுதந்திரமான விசாரணை என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி, இலங்கையிலே உள்ளக விசாரணை நடத்தலாம் என்று நேற்றைக்கு அறிவித்துள்ளது பேடித்தனமானது. இலங்கையில் இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் முடிவடைந்து மைத்ரி சிரிசேனா அதிபராகவும், ரணில் விக்கிரமசிங்கே நான்காவது முறையாக பிரதமராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி 93இடங்களில் வெற்றிபெற்றது. அவர் போட்டியிட்ட கொழும்பு மாவட்டத்தில் இதுவரை யாரும் பெறாத அளவுக்கு 5,00,566 (preference vote) விருப்ப வ…

    • 2 replies
    • 756 views
  5. மனோவின் முடிவு என்ன? கொழும்பில் களமிறங்குமா கூட்டமைப்பு? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 டிசெம்பர் 25 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில், வடக்கு - கிழக்கில் மாத்திரம் போட்டியிடாமல், கொழும்புத் தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கின்றது. இந்தக் கோரிக்கை, ஒன்றும் புதிதானது இல்லை. கடந்த பொதுத் தேர்தலிலும், அதற்கு முன்னருங்கூட எழுந்த கோரிக்கைதான். ஆனால், இம்முறை கூட்டமைப்பும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஆரம்பக் கட்டப் பேச்சுகளை நடத்துமளவுக்குச் சென்றிருக்கின்றன. இதனை, மனோ கணேசன் ஊடகங்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். கொழும்புத் தேர்தல் மாவட்டத்தில், வடக்கு - கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழ் …

  6. இலங்­கையில் சீனாவின் இரா­ணுவப் பிர­சன்னம் ஏதும் இல்லை என்று இந்­தி­யா­விடம் மீண்டும் தலையில் அடித்துச் சத்­தியம் செய்ய வேண்­டிய நிலை இலங்­கைக்கு உரு­வா­கி­யி­ருக்­கி­றது. சீன ஜனா­தி­பதி ஜி ஜின் பிங்கின் கொழும்பு பய­ணத்­துக்கு முன்­ன­தாக, கொழும்புத் துறை­மு­கத்தில் சீனக் கடற்­ப­டையின் நீர் மூழ்கிக் கப்­ப­லொன்று தரித்து நின்ற விவ­காரம் தான், இந்த நிலை­மைக்கு முக்­கி­ய­மான காரணம். சீன நீர்­மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்த விப­ரத்தை இலங்கை அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­தாமல் மறைத்துக் கொண்­டதால் தான் இந்தச் சிக்கல் இந்­த­ள­வுக்குப் பூதா­கர வடி­வெ­டுத்­தது. கடந்­த­வாரம், இந்­தியக் கடற்­படைத் தள­பதி அட்­மிரல் ஆர்.கே. டோவனின் அழைப்பின் பேரில் இலங்கைக் கடற்­படைத் …

  7. ஒருவரை ஒரு அறையில் கட்டிவைத்து தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை விடாமல் தொடர்ந்து இரண்டு நாள் பார்க்கவைத்தால், அவர் OSD என்று அழைக்கப்படும் Obsessive-compulsive disorder என்கிற மனநோய்க்கு ஆளாகி விடுவார் போல தெரிகிறது. உள்ளங்கையிலிருந்து உள்ளாடைகள் வரை கிருமிகள் மனிதர்களை வேட்டையாடிக்கொண்டிருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை விளம்பரங்கள் விடாமல் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. இது தொடர்பாக கார்ப்பரேட் சித்தனின் அனுபவங்களை அறிந்து கொள்ள அவரை அணுகினேன். காலையில் எழுந்து பல்துலக்க போனால் விளம்பரத்திலிருந்து வெள்ளைக்கோட்டு அணிந்து குறுந்தாடி வைத்த செட் அப் மருத்துவர் “உங்கள் பல்லிடுக்கில் பதுங்கி இருக்கும் கிருமிகளை உங்கள் பற்பசை கொல்லுமா? எங்கள் பற்பசை உபயோகித்தால் பனிரெண்டு …

    • 1 reply
    • 756 views
  8. கலைஞர்கள், சிவில் சமூக பிரமுகர்கள் இவர்களடங்கிய பிரஜைகள் சக்தி என்னும் குழு 'பொறியிலிருந்து விடுபடுவோம்' என்கின்ற தொனிப்பொருளில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவானதொரு அரசியல் கூட்டத்தினை கடந்த வாரம் ஹயிட் பூங்காவில் நடத்தியிருந்தது. பூங்காவிற்கு உள்ளும் அதன் வெளியே நடைபாதையிலும் ஒரே கூட்டம். 'இது சேர்த்த கூட்டமில்ல. தானா சேர்ந்த கூட்டம்' என ரஜனி பாணியில் கூற வேண்டும்போலிருந்தது. பொறுமையுடன் பல மணி நேரம் நின்றுகொண்டே சகல உரைகளையும் யாவரும் உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அவ்வப்போது கரகோஷம் இடவும் மறக்கவில்லை. அரசியல் மாற்றத்திற்கு தென்பகுதி தயாராகி வருவது போலத் தோன்றியது. இக்கூட்டத்தில் ரணில் மைத்திரி எனப் பல அரசியல் தலைவர்கள் பேசினாலும், குறிப்பாக காமி…

  9. கிழக்கின் அரசியலைப் புரிந்து கொள்ளல் Editorial / 2019 ஜூலை 25 வியாழக்கிழமை, பி.ப. 05:41 -இலட்சுமணன் தமிழர் பிரச்சினையை, சிங்கள தேசத்துக்கு விளக்க முனைவது, பயனற்ற செயலென்று, அமரர் டி. சிவராம், 2004ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஒரு கட்டுரையை வரைந்திருந்தார். இப்போதைய வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியல் நிலைமையைப் பார்த்தால், தமிழ் அரசியல்வாதிகளுக்குக்கூட தமிழர்களுடைய நிலைமையைப் புரிய வைக்க முயல்வது, பயனற்ற செயல் என்று தான் எண்ணத் தேன்றுகிறது. ‘தேர்தல் திருவிழா’ என்பது எம்மிடையே உள்ள அனைத்துக் கீழ்த்தரமான குணங்களையும் பிரிவினைகளையும் வெளிக்கொணர்வதற்கான களமாக அமைந்துவிடுகிறது. இந்த நச்சுச் சூழலிலிருந்து நாம் விடுபட வேண்டும். தனி நபர்களை மற…

  10. தொல்பொருள் என்ற ரீதியில் மக்களின் காணி மட்டக்களப்பில் கபளீகரம்? (வ.சக்திவேல்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் என்ற ரீதியிலும், வனப் பாதுகாப்பு என்ற ரீதியிலும் மக்களின் பூர்வீகக் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர். ஜி.பி.ஆர். தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலே இருந்து கொண்டு மட்டக்களப்பு மக்களின் பூர்வீக இடங்களை அடையாளமிடும் அதிகாரிகள்; மாவட்டத்திலுள்ள கிராமசேவையாளர் முதல் அரசாங்க அதிபர் வரையிலான எந்தவித அதிகாரிகளுக்கும் தெரியாமல் கொழும்பிலிருந்து வந்து தொல்பொருட் களுக்குரிய இடம் எனவும், வன இலாகாவுக்குரிய இடம் எனவும் அடையாளப்படுத்தி விட்டுச் செல்வதாகவும் அவ்வாறு அவர்களால் அடையாளப்படுத்தப்படும் …

  11. ஈரான்: ஐ.அமெரிக்காவின் இராஜதந்திரத் தோல்வி - ஜனகன் முத்துக்குமார் ஈரானுக்கு எதிரான ஐக்கிய அமெரிக்க இராணுவ அச்சுறுத்தல்கள், படையெடுப்பு மிரட்டல் என்பவற்றை மேற்கொண்டதன் பின்னணியில் உள்ள சூழ்நிலையில், ஈரானில் போர், புரட்சி அல்லது ஆட்சி மாற்றம் தொடர்பில் ஐ.அமெரிக்க ஊடகங்கள், மீண்டுமொருமுறை ஊகங்களை வெளிப்படுத்தியுள்ளன. எவ்வாறாயினும், துல்லியமானதொரு பகுப்பாய்வு முறையில் இதைச் சிந்திக்கமுற்படின், ஈரானின் எதிர்காலத்தை மதிப்பிடுவதில் போர், புரட்சி, அல்லது ஆட்சி மாற்றம் ஆகியவை ஒரு போதும் இப்போதைக்கு சாத்தியமில்லாத நிலைமையிலேயே உள்ளன. குறித்த ஐ.அமெரிக்க - ஈரான் முறுகல் நிலை என்பது, வரலாற்றில் பலதடவைகள் நடைபெற்று இருந்தா…

  12. சண்டைக்காரனை நம்பத்தொடங்கும் தமிழர்கள் சாட்­சிக்­காரன் காலில் விழு­வதை விட சண்­டைக்­காரன் காலில் விழு­வது மேல் என்­றொரு பழ­மொழி. இந்தப் பழ­மொ­ழியைத் தான் இப்­போது தமி­ழர்கள் நாடு­கி­றார்­களோ என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தேசியக் கட்­சி­களின் ஆதிக்கம் வடக்கில் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருப்­பது மற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் மீள் எழுச்­சியை மையப்­ப­டுத்தி வெளி­வரும் கருத்­துக்­களில் இருந்தே, இந்த விவ­கா­ரத்தைப் பார்க்க வேண்­டி­யுள்­ளது. முதலில் மஹிந்த ராஜபக் ஷவின் மீள்­வ­ரு­கையை சாத­க­மா­ன­தாக தமிழர் தரப்­பிலும் சிலர் நோக்கத் தொடங்­கி­யுள்­ளதைப் பற்றிப் பார்க்­கலாம். உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு…

  13. ஆண்டுகள் பல கடந்தாலும் தமிழீழ வரலாறாறு என்றுமே அழியாது.. போரின் போது காயமடைந்த நிலையில் தமிழீழ விடுதலை புலிகளிடம் சரணடைந்த சிங்கள இராணுவன் ஒருவனை பார்வையிட தென்னிலங்கையில் இருந்து புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் அந்த இராணுவத்தினரின் குடும்பத்தினை மரியாதையுடன் வரவேற்கும் ஒரு போராளி. விடுதலைப்புலிகள் எத்தனை உயர்வானர்கள் என்பதற்கும், போரில் சரணடைந்த எதிரிகளையும், கைது செய்யபட்ட சிங்கள படையினரையும் எந்த அளவுக்கு கண்ணியத்துடனும், யுத்த தர்மத்துடன் நடத்தினர் என்பத்துக்கு பல சாட்சிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த படம். புலிகளின் பாரிய வெற்றித் தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் ஓயாத அலைகள் ஒன்று தாக்குதலில் புலிகள் சுமார் 600 சிங்கள இராணுவத்தினரை பிணமாக மீட்டனர்.…

    • 2 replies
    • 755 views
  14. அலரி மாளிகையில் இருந்து அலறியடித்து ஓடிவிட்டார் மகிந்த ராஜபக்ஷே! அவர் 'பிஸ்கட்’ போட்டு வளர்த்த இராணுவமும் காப்பாற்றவில்லை; ஊர் ஊராகப் போய் பிராயச்சித்தம் தேடிய கடவுளும் காப்பாற்றவில்லை. 'திருப்பதி வந்தால் திருப்பம் நேரும்’ என்பார்கள். திருப்பதி வந்து போனவருக்கு நேர்ந்த திருப்பமோ, திடுக்கிட வைத்தது. ராஜபக்ஷேவின் வலது கையைப் பார்த்தால் தெரியும்... கலர் கலராகக் கயிறுகள் கட்டியிருப்பார். யார் மந்திரித்து கயிறு கொடுத்தாலும் கட்டிக்கொள்வார், யார் ஜோசியம் சொன்னாலும் கேட்டுக்கொள்வார். உடல் நலிவுற்ற நேரத்தில் 24 மணி நேரமும் குடும்ப மருத்துவரை தனது பார்வையிலேயே வைத்துக் கொள்வதைப் போல, ஆஸ்தான ஜோதிடர் தேசபந்து சுமணதாச அபேகுணவர்த்தனவை எப்போதும் தன் பக்கத்திலேயே வைத்திருந்தார். 'இல…

  15. Published By: DIGITAL DESK 2 24 FEB, 2025 | 09:56 AM டி.பி.எஸ்.ஜெயராஜ் போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான ' கணேமுல்ல சஞ்சீவ ' என்று அறியப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன கடந்தவாரம் புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் 5ஆம் இலக்க மாஜிஸ்திரேட் நீதிமாறத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைச் சந்தேகநபர் புத்தளம் பாலவி பகுதியில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய முஹமட் அஸ்மான் ஷெரீப்தீன் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கொலைச் சந்தேகநபர் மகரகமவைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியூமங்க கந்தனாராச்சி என்று அறிவித்தார். கணேமுல்ல சஞ்சீவவின் வாழ்க்கை மீது ஊடகங்கள் குவித்திருக்கும் தீவிர கவனம் அவரின் கொ…

  16. கொறோனா அமளிக்குள் மிருசுவில் படுகொலையாளிக்கு விடுதலை. ஆசிரியர் தலையங்கம் 43 0 சிறீலங்காவின் எந்தச் சட்டமும் எந்தத் தீர்ப்பும் தமிழருக்கு நீதியை வழங்காதென்பதின் ஆகப்பிந்திய எடுத்துக்காட்டாக மிருசுவில் படுகொலையாளனான சுனில் ரத்நாயக்காவின் விடுதலை சுட்டிநிற்கின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்டதொரு முன்னேற்றகரமான நீதி நடவடிக்கையாகக் கொள்ளப்பட்ட மிருசுவிலில் 20.12.2000ஆம் ஆண்டு குழந்தை மற்றும் பராயமடையாத சிறுவர்கள் உட்பட எட்டுப்பேரைக் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த படையினர்கள் இனங்கானப்பட்டு 2015 விசாரணைக்கெடுக்கப்பட்டு போதிய ஆதாரங்கள் இல்லையென்று நான்குபேரை விடுதலை செய்த சிறீலங்காவின் நீதித்துறை சுனில் ரத்னாயக்கா என்ற படுகொலையாளனுக்கு சாவொறுப்ப…

    • 0 replies
    • 755 views
  17. கொமன்வெல்த் மாநாட்டை ‘நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ அரங்கில்‘ நடத்தும் இலங்கை அரசின் திட்டம் அவ்வளவு இலகுவாக கைகூடும் போலத் தெரியவில்லை. காரணம் இன்றுவரைக்கும், இந்த மாநாட்டை கொழும்பில் தான் நடத்துவது என்ற உறுதியான அறிவிப்பு ஏதும் உரியதரப்பில் இருந்து வெளியாகவில்லை. 2011 பேர்த்தில் விடுக்கப்பட்ட அறிவிப்புக்குப் பின்னர் - வரும் நவம்பர் 15 தொடக்கம் 18 வரை கொமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்ட போதிலும், கொமன்வெல்த் உறுப்பு நாடுகளின் நிலைப்பாடு இன்னமும் சந்தேகத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. பேர்த் மாநாட்டின் முடிவில், அடுத்த மாநாடு இலங்கையில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் தொடக்கம், கனடா இதனை எதிர்த்தே வந்தது. மனித உர…

  18. தடத்திற்கு தடை தரலாமா? – முனைவர் ஆ. குழந்தை 39 Views இங்கிலாந்தில் உள்ள தீவிரவாதச் சட்டம்(2000) பிரிவு 2(1, 2)இன் கீழ் விடுதலைப்புலிகள் இயக்கத்தை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து, தடை செய்திருக்கிறது. இந்த தடையை நீக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக திருமிகு மாயா இலெசுடர், திருமிகு மால்கம் பிர்டிலிங், திருமிகு சேக்கப் ரொபினோலிட்சு ஆகிய சட்டத்தரணிகள் வாதாடினர்(1,2பத்திகள்). அதன் விளைவாக நடுவர் மன்றம் தந்த தீர்ப்பு அறிக்கையில் மூன்று பகுதிகள் உள்ளதாக நான் பார்க்கின்றேன். அந்த மூன்று பகுதிகளை விளக்கிவிட்டு, நமது கடமைகளை ஆராய்…

  19. அமெரிக்க நலனும் இந்தியாவின் சர்வதேச இரட்டைக் கொள்கையும் புலிகளை அழித்த பின்னர் தீர்வு என்ற கதை இப்போது பலஸ்தீனர்களுக்கு வன்னி போர் பற்றிய 2010 நிபுணர் குழு அறிக்கையும் காசா படுகொலைகளும் ஐ.நாவுக்குத் தெரியவில்லையா? விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனாவில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையும் அன்று மார்தட்டியிருந்தனர். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு எனவும் நியாயம் கற்பித்திருந்தனர். இதனை உள்வாங்கியே புலிகளை அழிக்க 2002 பெப்ரவரியில் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் திட்டம் …

  20. ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா அனைத்துலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களுக்கான நிதி வழங்கலைத் தடுப்பதற்காக 5வது ஆணைக்குழு எனக் கூறப்படும் ஐ.நா சபையின் வரவு செலவுத் திட்டக் குழுவைப் பயன்படுத்தியுள்ளன. ஐ.நா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான உயர் அதிகாரிக்கான நிதியை நிறுத்துவதற்…

  21. இறுக்கமடைகின்றது ஜெனீவா போர் அரங்கு வெளிவந்தது கடுகளவாக இருப்பினும் வராதது கடலளவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இலங்கையின் கொலைக்களத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, 'தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்' என்கிற தலைப்பிட்டு நான்கு புதிய விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளது. சர்வதேசமெங்கும் காண்பிக்கப்படும் இந்த ஆவணப்படம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென அமெரிக்கா கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு சனல் 4 இன் விவரணப் படம் மேலும் வலுச் சேர்த்துள்ளது. கடந்த வருடம் வெளிவந்த முதலாம் பாகத்தைவிட, இரண்டாவது பாகமானது, இலங்கை அரசின் அதிகார மையத்தை நோக்கி பல வினாக்களை முன்வை…

    • 2 replies
    • 754 views
  22. யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி கே. சஞ்சயன் / 2019 ஜனவரி 18 வெள்ளிக்கிழமை, மு.ப. 04:33 இந்த ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தான், கொழும்பு அரசியல் களத்தில், சூடான விவாதப்பொருளாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்கப் போகிறவர்கள் யார், யாருக்கும் யாருக்கும் நேரடிப் போட்டி? என்பதை மய்யப்படுத்தியே இப்போது, அதிக செய்திகள் வெளிவருகின்றன. இப்போதைய அரசியல் களத்தில், மூன்று பிரதான தரப்புகள் இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன ஆகியவையே அவை. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ ஆகியோரில் ஒருவர் போட்டியில் இறங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்த ஜனாதிபதி வ…

  23. ஐந்து கண்கள்: மானுட யாப்பின் மீறல் சேரன் 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எஸ்.ஏ. - 18 வகையைச் சேர்ந்த ஏவுகணைகளையும் வேறு போர்க்கலங்களையும் வாங்க முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஈழத் தமிழ் இளைஞர்கள் மூன்று பேரை நியூயோர்க்கில் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்பிஐ கைதுசெய்தது. ஆயுத விற்பனையாளர்களிடம்தான் போர்க்கலங்களை வாங்குகிறோம் என அவர்கள் எண்ணியிருந்தார்கள். ஆனால் எஃப்பிஐ உளவாளிகள்தான் ஆயுத விற்பனையாளர்கள் போலத் தொழிற்பட்டு அந்த இளைஞர்களைச் சிக்கவைத்துவிட்டார்கள். பிற்பாடு, வேறு இரு ஈழத் தமிழ் இளைஞர்களும் ‘பயங்கரவாதம்’ பரவ உதவிசெய்தார்கள் எனக் கூறியும் கனடிய அரசால் கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். எல்லா இளைஞர்களும் கனடியக் குடி…

  24. இலங்கையில் இந்துத்துவா எனும் ஒரு புதுஅபாயம் : வி.இ.குகநாதன் 10/24/2016 இனியொரு... இலங்கையில் தமிழர்களிடையே இந்த மாதத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்வாக சிவசேனா என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டதன் மூலம் இந்துத்துவா எனும் கருத்தியலிற்கான கதவு திறக்கப்பட்டிருப்பதனைக் கூறலாம். இந்த இந்துத்துவா கருத்தியல் வெற்றி பெறுமாயின், அதுதமிழர்களின் நீண்டகால உரிமைப் போராட்டடத்தில் ஏற்படுத்தப்படப்போகும் இன்னொரு பிளவாகவும் பின்னடைவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே தமிழரின் ஒற்றுமையினைக் குலைக்கும் சில நிகழ்வுகளை நாம் ஏற்கனவே சந்தித்துள்ளோம்.அவையாவன விடுதலை இயக்கங்களிடையே தலமைத்துவப்போட்டியாலும், இந்திய உளவு அமைப்பின் சதிவேலைகளாலும் ஏற்பட்டபிளவு. எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.