Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களின் பணத்திலிருந்து கோடிகோடியாக வருடாவருடம், சர்வதேச பிரச்சார அமைப்புகளுக்கு வழங்கி தன்னை பற்றி சர்வதேச அளவில் உருவாகியுள்ள களங்கத்தை துடைக்கும. முயற்சியில் ஈடுபடுகின்றார், அதன் மூலமாக தான் யுத்த குற்றங்களுக்கா விசாரணை செய்யப்படுகிறேன் என்பதை மக்கள் மறக்கச்செய்கின்றார். எனினும் ஊழல், சட்டவிரோதம் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் துர்நாற்றம் அவரிலிருந்து அகலுவதில்லை,அது அவரின் ஆன்மாவில் ஆழமாக பதிந்துள்ளது,அவரது ஒவ்வொரு அசைவிலும் புலப்படுகின்றது. தனது பதவிக்காலம் ப+ர்த்தியாவதற்க்கு இன்னமும் இரண்டுவருடங்கள் இருக்கையில் தேர்தலை நடாத்தும்அவரது முடிவும் அவ்வாறனதே, வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற தனது ஆதரவை காப்பாற்றும் இறுதிமுயற்ச…

  2. இலங்கையில் கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முதல்நாள் இந்தியாவை ஆளும் பாஜக வின் வெளிவிவகாரக் கொள்கைப் பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஜய் ஜோலி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்களில் எவரையும் பாஜக கட்சி ஆதரிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டதாக சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். கடந்த நவம்பர் மாதம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டு, மகிந்த ராஜபக்ச நேபாளத்தில் நடந்த சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அந்த மாநாட்டில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக் கூறியிருந்தார். இதுபோன்ற…

  3. மாயக்கல்லி மலை: விடாப்பிடி முகம்மது தம்பி மரைக்கார் / நீண்ட மௌனத்தின் பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது, மாயக்கல்லி மலை விவகாரம். இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று, புத்தர் சிலையொன்றை அடாத்தாக வைத்ததிலிருந்து தொடங்கிய சர்ச்சை, இப்போது இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை முன்னிறுத்தி, அங்கு விகாரை ஒன்றை அமைப்பதற்காக, ஓர் ஏக்கர் காணி வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர் டி.டி.அநுர தர்மதாஸ உறுதியளித்து கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளத…

  4. லண்டனில் அண்ணாமலை – நிலாந்தன் பிரித்தானியத் தமிழர் பேரவை, பாரதிய ஜனதாவின் தமிழக அமைப்பாளர் அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்திருக்கிறது “உறவுப் பாலம்” என்று அழைக்கப்படும் அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற அண்ணாமலை அங்கு முக்கிய சந்திப்புகளில் கலந்து கொண்டார். ஈழத் தமிழர்களை குறிப்பாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களை கவரும் விதத்தில் உரை நிகழ்த்தியுமிருக்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு அவர் தரக்கூடிய தீர்வு 13ஆவது திருத்தத்தைக் கடக்கவில்லை. அண்ணாமலையை பிரித்தானியாவுக்கு அழைத்தமையை ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு காரணங்களை அவர்கள் முன்வைக்கின்றார்கள். ஒன்று, பாரதிய ஜனதாவின் இந்துத்துவ…

  5. 17 JUL, 2023 | 04:55 PM வட இலங்கையில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண அரசு ஏறத்தாள 350 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது. பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், ஐரோப்பியர் கால ஆவணங்கள் இவ்வரசு பற்றியும், அதன் நான்கு பக்க அரண்கொண்ட அரசமாளிகை, அதிலிருந்த பெரிய ஆலயம், அரச அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் இருப்பிடங்கள், பூங்காவனம், புனித ஜமுனா ஏரி, நீதி மன்றம், நாற்றிசைக் கோவில்கள், காவலரண்கள், கோட்டைகள் முதலியன பற்றியும் கூறுகின்றன. அவ்வரலாற்றை மீள் நினைவுபடுத்துவதாகவே இன்றும் நல்லூரின் சிறிய வட்டாரத்திற்குள் எஞ்சியிருக்கும் ஜமுனா ஏரி, மந்திரிமனை, சங்கிலியன் அரண்மனை, சங்கிலியன் தோரணவாசல் முதலான மரபுரிமைக் கட்டிடங்களும், நினைவுச…

  6. தென்னிலங்கை அரசுக்கு தேன்னிலவு அமெரிக்காவுடனா, அல்லது இந்தியாவுடன்தானா ? சில வாரங்களாகச் சேது சமுத்திரத்திட்டம் பற்றி, பலர் பேசுவதையும், எழுதுவதையும் வாசகர் எல்லோரும் அறிந்ததே. பல ஊடகங்களும், ஆய்வு அமைப்புக்களும்;, சேது சமுத்திர திட்டத்தின் வரலாறு பற்றியும்@ பௌதீக, சூழல், காலநிலை மாற்றங்கள் பற்றியும்;@ மற்றும் பொருளாதார, அரசியல் தாக்கங்கள் பற்றியும் பலவித, ஆய்வுகளையும,; கட்டுரைகளையும் எழுதியுள்ளன, நடாத்தியுள்ளன. அதுமட்டுமல்ல. அறிஞர்கள் என்று சொல்லப்படுவர்கள் பலரும், கருத்தரங்குகளை நடாத்தியும், 'சுஎஸ்" (ளுரநண) கால்வாய் போன்ற கடல் இணைப்புத் திட்டங்களோடு இதை ஒப்பிட்டும், எதிர் காலத்தில் தமிழ்த் தேசம் அனுபவிக்கப்போகும் அனுகூலங்கள் பற்றியும் எதிர்கூறல்களையும் செய்…

    • 2 replies
    • 1.4k views
  7. தமிழ்த் தேசிய விடுதலை அரசியலே தமிழ் மக்களுக்கு விடிவைத் தரும் . புதுக்காலனிய ஆதிக்கம் பொருளாதாரச் சுரண்டலையே இலக்காகக் கொண்டிருக்கிறது. அதன் விரிந்த செயல்பாடுகளை இந்த சிறிய தொகுப்புகளுக்குள் காண்பது இயலாது. சுரண்டலைப் பற்றிய அடிப்படைகளை கோடிட்டு மட்டுமே காட்ட இயலும். இன்று பொருளாதார அரங்கில் காணப்படும் இந்த கொடூரச் சுரண்டல் முறை சோசலிச முகாமின் வீழ்ச்சியால் மக்களுக்கு ஏற்பட்ட துயரம் என்று சொல்லலாம். இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்காகவும், இந்திய முதலாளிகளின் தேவைக்காகவும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமான நிலங்களை 'வளர்ச்சி' என்ற பெயரில் பறித்து வருகின்றது. கெயில், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், துறைமுகங்கள், விமான நிலையங்கள் விரிவாக்கம், மின்பாத…

  8. பரபரப்பாக்கும் ‘மறுத்தான்’ ஆட்டங்கள் கே. சஞ்சயன் / 2018 நவம்பர் 23 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:35 கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்ட அரசியல் குழப்பங்கள், நாடாளுமன்றத்துக்கு உள்ளே தான், பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, நாடாளுமன்றத்தையும் கலைத்து விட்டால், எல்லாத் தடைகளும் நீங்கி விடும், புதிதாகத் தேர்தலை நடத்தி, ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று போடப்பட்ட திட்டம், இப்போது முட்டுச்சந்தியில் வந்து நிற்கிறது. மஹிந்த - மைத்திரி தரப்புக்கு, அங்குமிங்குமாக எங்கு திரும்பினாலும், ஒரு முட்டுக்கட்டை வந்து விடுகிறது. நாடாளுமன்றத்துக்கு…

  9. தை பிறக்கும் வழி பிறக்குமா ? நிலாந்தன். adminJanuary 7, 2024 அண்மையில் கோண்டாவில் உப்புமடச் சந்தியில், ஒரு சமகால கருத்தரங்கு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அக் கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது. அதற்குத் தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சொன்னார்… தனக்கு தெரிந்த பலர் ஒரு வேளை உணவை, குறிப்பாக காலை உணவைத் தவிர்ப்பதாக. காலை உணவைக் கட்டாயம் எடுக்க வேண்டும், இரவு உணவைத் தவிர்க்கலாம் என்று தான் ஆலோசனை கூறியபோது, அவர்கள் சொன்னார்களாம், காலை சாப்பிடாவிட்டால் அன்றைய அலுவல்களில் மூழ்கும்போது பசி தெரியாது. ஆனால் இரவு சாப்பிடாவிட்டால் பசி தெரியும்; நித்திரை வராது என்று. இதுதான் பெரும்பாலான கீழ் மத்தியதர வர்க்க குடும்பங்களின் நிலைமை. ஆண்டு இறுதியில் இத…

  10. சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபட்டுப்பாதை புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது. சீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 29 ஒப்பந்தத்தில் இத்தாலி மற்றும் சீன தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் இத்தாலியின் இந்த முடிவானது அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளை கவலையுற செய்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் முதல் வளர்ந்த மேற்கத்திய நாடு இத்தாலி. இந்த சூழலில் புதிய பட்டுப்பாதை திட்டம், அது பிறந்த கதை ஆகியவற்றை குறித்து விரிவாக காண்போம். பட்டுப்பா…

  11. எனது தொடரின் நான்காவது பகுதியை, எனது தொடரின் முன்னைய பகுதிகளை வாசித்த நண்பர் ஒருவர் முன் வைத்த விமர்சனத்தையும் அதற்கான பதிலையும் தந்து தொடர விரும்புகிறேன். ஏனேனில் நீண்டு செல்லவுள்ள தொடர முழவதும் கீழ்க்கண்டவாறான விமர்சனத்தை பலர் முன்வைக்க விரும்புவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் யாவரும் இனிவரும் காலத்தில் மரபுவழியான சிந்தனை முறைகளில் இருந்து வெளியே வந்து கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அணுக வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. நண்பரின் விமர்சனம்: அன்பின் குருபரன் தங்களின் மௌனம் கலைகிறது தொடரை இரசித்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். சுவாரஸ்யமான தகவல்கள் பலவற்றை எதிர்ப்பார்க்கிறோம். ஆனால், ஊடகவி…

  12. சிறிலங்கா அரசைப் புரிந்துகொள்வது எவ்வாறு? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழர் மத்தியில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரிடம் ஆட்சிமாற்றம் தொடர்பாக ஒருவகையான பரவச நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது. மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இருந்து வந்த கொடுங்கோலாட்சி காரணமாக ஆட்சிமாற்றம் அவர்களுக்கு இப் பரவசத்தினை ஏற்படுத்தியிருக்கக்கூடும். புதிய ஆட்சியாளர்களான மைத்திரி - ரணில் கூட்டு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களிடம் இருப்பதையும் உணர முடிகிறது. இதேவேளை சிறிலங்காவில் ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசு (State) மாறவில்லை என்பதனையும், சிறிலங்கா அரசு மாற்றத்துக்குள்ளாகாதவரை எந்த ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தாலும் அவர்…

    • 7 replies
    • 704 views
  13. எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 06:58 இவ்வருட உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி, முஸ்லிம்களின் பெயரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பௌத்த தீவிரவாதக் குழுக்கள், பயங்கரமான முஸ்லிம் விரோத பிரசாரமொன்றை ஆரம்பித்து, முன்னெடுத்துச் சென்றனர். சில பகுதிகளில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அக்குழுக்கள் பெரும்பாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களாக இருந்தமையால், அப்பிரசாரத்தில் ஓர் அரசியல் நோக்கமும் தென்பட்டது. எதிர்வரும் தேர்தல்களின் போது, முஸ்லிம்கள் தம்மை ஆதரிக்க மாட்டார்கள்…

    • 0 replies
    • 519 views
  14. தமிழ் மக்களின் தேர்தல் பேரம் தோற்றது யாரால்? புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பிலான உத்தியோகபூர்வமான அறிவித்தலை, இன்னும் சில தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடும். அதற்கு முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பொன்றை இரா. சம்பந்தன் தலைமையிலான குழு நடத்தவுள்ளது. இந்தக் குழுவில் பொது இணக்கப்பாட்டில் கையெழுத்திட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும் பங்கெடுப்பார்கள் என்று தெரிகிறது. பொது இணக்கப்பாட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளையும், நாட்டைப் பிரிப்பதற்கான சூத்திரமாகத் தென் இலங்கையில் பிரசாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறித்த கோ…

  15. ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ -இலட்சுமணன் ஸ்ரீ லங்காவின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், தத்தமது தரப்புகளின் தேர்தல் வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கான கொள்கைப் பிரகடனங்களைத் தேர்தல் விஞ்ஞாபனங்களாக, ஏட்டிக்குப் போட்டியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீ இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான மாற்றுத் தீர்வு முன்மொழிவொன்றை, புதிய ஜனநாயக முன்னணி, கடந்த வார இறுதியில் வெளியிட்டிருந்தது. இதில், ‘பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள், ஒற்றையாட்சி முறையில் மாகாணங்களுக்கான உச்ச வரம்பிலான அதிகாரப்பகிர்வு, காணி, அபிவிருத்தி, நிதி, தொழில்வாய்ப்பு’ போன்ற பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இத்த…

  16. 3 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை விரிவாக்கப் பணிகள் தமிழ் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் இலங்கையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் இங்கிருந்து சென்ற தமிழ் மக்கள் பலரும் அக்காலத்தில் அங்கே ஒரு விகாரை இருந்ததாக தெரிவிக்கின்றனர். உண்மையில் அப்படி ஒரு விகாரை இருந்ததா? அங்குள்ள பிக்குவும், ராணுவமும், நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரும் இந்த விவகாரம் குறித்து கூறுவது என்ன? இந்த விகாரை சர்ச்சையாவது ஏன்? "தற்போதுள்ள விகாரையை தமிழ் மக்களின் காணிகளிலேயே நிர்மாணித்துள்ளனர். இது தவறான விடயம் என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வ…

  17. [size=4][size=5]ரிஷாத் பதியுதீன் தண்டிக்கப்பட்டால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?[/size][/size] கடந்த 18ஆம் திகதி மன்னாரில் இடம்பெற்ற முஸ்லிம் மீனவர்களின் ஆர்ப்பாட்டமும் அதனைத் தொடர்ந்து மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற குழப்ப நிலையும் இப்போது பாரிய பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அந்நிகழ்வுகளை அடுத்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பெரும் சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். புதிய நிலைமையானது சம்பந்தப்பட்ட மீனவர்களின் பிரச்சினையை மூடி மறைத்துவிடுமா அல்லது திசை திருப்பிவிடுமா என்றும் எண்ணத் தோன்றுகிறது. [size=2] [size=4]அமைச்சர் பதியுதீன் - மன்னார்; நீதிவானை தொலைபேசி மூலம் மிரட்டியதாகக் கூறி இலங்கை சட்ட…

  18. மத்திய கிழக்கு | தோற்றுப்போனது யார்? சிவதாசன் ஈரானின் ஏவுகணைகளோடு மத்திய கிழக்கில் குண்டுச் சத்தம் நின்று விட்டது போல் ஒரு நிசப்தம்; அதைவிட வெள்ளை மாளிகையில் துரும்பரின் வீட்டிலும் நிசப்தம். யார் வென்றார்கள் எனச் சொல்ல முடியாவிட்டாலும் யார் வாலைச் சுருட்டியிருக்கிறார்கள் – கொஞ்ச நாளைக்காயினும் – என்று தெரிகிறது. இன்று காலை வெள்ளை மாளிகையில் ஊடக சந்திப்பு நடந்தது. வானொலியில் துரும்பர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது. ஜனாதிபதியைத் திடீரென்று மாற்றிவிட்டீர்களா என்ற சந்தேகம். அத்தனை பவ்வியம். அந்தாள் ஜனாதிபதியாக வந்ததிலிருந்து இன்று தான் எழுதிக் கொடுத்ததை, அதே தொனியில், இடைக்கிடையே தனது வழக்கமான சேட்டைகளை விடாமல், அப்படி…

    • 0 replies
    • 825 views
  19. விக்கி – மகிந்த – வாங்ஜி மு. திருநாவுக்கரசு கடந்த சில தினங்களுக்குள் இலங்கை அரசியலில் மூவர் வெளியிட்ட கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்தவாரம் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் திரு . விக்கினேஸ்வரன் சென்னைக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு அவர் தெரிவித்திருந்த கருத்துக்களும், அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துக்களும் இவை. இரண்டுக்கும் மத்தியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட சீன வெளிவிவகார அமைச்சர் வாங்ஜி தெரிவித்துள்ள கருத்துக்களும் இலங்கையின் எதிர்கால அரசியல் போக்கை தெளிவுற எடுத்துக்காட்ட வல்லவைகளாய்க் காணப்படுகின்றன. “”இலங்கையில் எந்த அளவுக்கு தமிழ் மக்கள்…

  20. இஸ்ரேல்-உண்மைகளும், பிரச்சாரங்களும்-1 தமிழ்மணத்தில், இஸ்ரேலுக்கு எதிராக வந்த/வந்து கொண்டிருக்கும் சில பதிவுகளில், எழுதப்படும் கருத்துக்கள் யூதர்கள் பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான நாட்டை ஆக்கிரமித்துள்ளானர் ஐரோப்பாவில் இருந்து வந்தேரிய யூதர்கள், பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டனர் இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான செயல்களே, அரபு-இஸ்ரேலியர்களின் பிரச்சனைகளுக்கு மூல காரணம் யூதர்களில் பலர், பாலஸ்தீனர் ஆதரவாக அவர்கள் விடுதலைக்காக குரல் கொடுப்பது ஏன்? (இது இஸ்ரேல் ஆதரவாக வந்த கேள்வி என்றே வைத்துக் கொள்ளலாம்) யூதர்கள் என்றுமே, Two state solution ஐ ஏற்றுக் கொண்டதில்லை. ஹோலோகாஸ்ட் சம்பவத்தை யூதர்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்டுள்ளனர். பாலஸ்தீன …

    • 0 replies
    • 1.2k views
  21. போரும் சமாதானமும்-பா.உதயன் யுத்த அழிவுகளினால் போரும் மனித அவலங்களும் மரணங்களுமாக உலகம் இன்று அமைதி இழந்து ஒரு இருள் சூள்தபடி சுழல்கிறது. ஆக்கிரமிப்பும், அதிகாரமும், சுயநலன்களுமாக நாடுகளுடன் நாடுகளும் மனிதனுக்கு மனிதன் எதிரியாகவும் இருக்கிறான். மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை நாடுகள் அடிமைப் படுத்தி சுய நலன் கருதி சுரண்டாமல் மனிதன் வாழ கற்றுக் கொள்வானா. தங்கள் தங்கள் தேசிய நலன்களோடும் அதன் நலன் சார்ந்த அணிகளோடும் பயணிக்கும் நாடுகளின் பூகோள அரசியல் ( Geo political strategy ) காய் நகர்தல்களினாலும் விஸ்தரிப்புகளினாலும் மாற்றங்களினாலும் இன்று உலகம் மனிதம் மனிதாபிமானம் அனைத்தையும் மறந்து யுத்தமும் அழிவுகளுமாக பயணித்து வருகிறது. உலக சமாதானம் என்பது இன்று எட்ட முடியாமல் இருப்ப…

  22. இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும் 8 ஆகஸ்ட் 2020 அ. நிக்ஸன், மூத்த ஊடகவியலாளர் பிபிசி தமிழுக்காக Getty Images மஹிந்த ராஜபக்ஷ - கோட்டாபய ராஜபக்ஷ (இந்தக் கட்டுரையில் இருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்து. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்) மாற்றம் என்று கூறியும் நிலைமாறுகால நீதிகிடைக்குமெனவும் மார்தட்டிக் கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் ஆதரவோடு 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசாங்கம் நினைத்ததைச் சாதிக்கவில்லை. பதவிக்கு வந்த மூ…

    • 1 reply
    • 897 views
  23. மகிந்த - அலோக் ஜோசி சந்திப்பின் பின்னணியில் மீண்டும் 'றோ' பற்றிய சர்ச்சைகள் யதீந்திரா இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளுக்கான அமைப்பின் (Research and Analysis Wing (RAW or R&AW)) இயக்குனர் அலோக் ஜோசி (Alok Joshi) சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தார். இதனை இந்து பத்திரிகை உறுதிப்படுத்தியிருந்தது. மகிந்த ராஜபக்ச, ஆலய வழிப்பாட்டுக்காக இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு, இந்தியாவிற்கு சென்றிருந்த வேளையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கடந்த வருடமும் மகிந்த ராஜபக்ச இதுபோன்றதொரு ஆலயதரிசன விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட பலரையும் அவரால் சந்திக்க முடிந்திருந்தது. ஆனால் …

    • 2 replies
    • 801 views
  24. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தோற்றது யார்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தேர்தல், ஜனநாயகத்தின் பிரதான அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இதுவரை தேர்தல் எதுவும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றதா என்ற வினாவுக்குச் சாதகமான பதிலை யாரும் தரக் காணோம். ஜனநாயக நோக்கிலே தேர்தல்கள் மெச்சப்படுகின்றன. ஆனால், தேர்தல்கள் ஜனநாயகமாக நடக்கின்றனவா? அவை ஜனநாயகத்தைப் பெற்றுத் தருகின்றனவா? என்பன ஜயத்துக்குரியவை. இருந்தும் தேர்தல்கள் திருவிழாக்கள் போல ஒரு புனிதத்தைப் பெற்றுவிட்டன. அதன் முக்கியம், அதன் உள்ளடக்கத்திலின்றி அதன் தோற்றப் பொலிவிலேயே உள்ளது. இல்லாவிடின் சினிமா நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஊர்ச் சண்டியர்களும் தேர்தலில் வென்று பிரமுகராக முடியுமா? இவை தேர்தல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.