அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9272 topics in this forum
-
அடுத்தமாதமும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விடயத்தில் அமெரிக்கா பிரேரணையொன்றை கொண்டுவரவிருக்கிறது. அது இலங்கைக்கு சாதகமானதாக அமையும் என்று கூறுவதற்கில்லை. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை. தமக்கு ஆபத்து இல்லை என்ற உத்தரவாதம் அரசாங்கத்திற்கு எங்கிருந்து கிடைத்ததோ தெரியாது. வரவிருக்கும் பிரேரணையை தோல்வியுறக் செய்யவேண்டும் என்று அரசாங்கம் கருதுவதும் அதற்காக சில நாடுகளின் உதவியை நாடுவதும் உண்மைதான். ஆனால் பிரேரணை வராமல் இருப்பதற்காக அல்லது வந்தால் அதற்கு எதிராக பல நாடுகளின் உதவியை பெறுவதற்காக உள்நாட்டில் தாமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் பிரேரணையை த…
-
- 2 replies
- 829 views
-
-
எது சரியான மாற்று அணி? ? நிலாந்தன்… February 23, 2020 விக்னேஸ்வரன் கட்சி தொடங்கிய போதே அவர் இரு முனை எதிர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு முனை கூட்டமைப்பு. மறுமுனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி.அவர் அண்மையில் தனது தலைமையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியதை தொடர்ந்து அந்த எதிர்ப்பு மேலும் தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை விடவும் மக்கள் முன்னணியின் எதிர்ப்பே விக்னேஸ்வரனைக் கூடுதலாக நிதானமிழக்க செய்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது. மக்கள் முன்னணி அவர் மீதான எதிர்ப்பை இரண்டு தளங்களில் நிகழ்த்துகிறது. ஒரு தளத்தில் அவர்கள் விக்னேஸ்வரனின் கோட்பாட்டுத் தெளிவைக் கேள்விக்குள்ளாக்குக்கிறார்கள். இன்னொரு…
-
- 2 replies
- 789 views
-
-
‘கேரள டயரீஸூம்’ தொடரும் சர்ச்சைகளும் ம. அருளினியன் எழுதிய, ‘கேரள டயரீஸ்’ என்கிற நூல், கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் வெளியிடப்பட்டது. கடந்த சனிக்கிழமை காலை வரையில், குறித்த நூலின் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், குறித்த நூல் வெளியீட்டுக்காக, கல்லூரி மண்டபத்தை வழங்க முடியாது என்று, நிகழ்வுக்கு முதல் நாள், அக- புற அழுத்தங்களினால், பாடசாலை நிர்வாகம் அவசர அவசரமாக அறிவித்தது. இதனால், பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட நூல் வெளியீட்டு விழா, கிட்டத்தட்ட மூடிய அறைக்குள் நடத்தப்ப…
-
- 2 replies
- 844 views
-
-
2019 குண்டு வெடிப்புக்களை கோட்டா திட்டமிட்டு இருக்கலாமா? எம்.எஸ்.எம். ஐயூப் பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனின் முள்ளாள் அந்தரங்கச் செயலாளரான அன்ஸீர் அசாத் மௌலானாவுடன் நடத்திய நேர்காணலொன்றை மையமாக வைத்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்து கடந்த வாரம் வெளியிட்ட விவரணத் திரைப்படம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆண்டு ஜனவரி மாதம் தாம் பிள்ளையானின் ஆலோசனையின் படி அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேக்கும் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில பல இடங்களில் தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்து 269 பேரை படுகொலை செய்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ச…
-
- 2 replies
- 467 views
-
-
இலங்கையில் தொடரப்போகும் அமெரிக்கா, இந்தியா, சீனா பலப்பரீட்சை ; கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி பகுதி - 1 இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த வர்களுள் ஒருவரும் எழுத்தாளருமான கேர்ணல் ஆர்.ஹரிகரனை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தபோது, இலங்கை தீவில் காணப்படுகின்ற வல்லாதிக்க நாடுகளுக்கிடையிலான போட்டிகள், பூகோள அரசியல் நிலைமைகள், இந்திய அமைதிப்படையின் செயற்பாடுகள்,இலங்கை தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின் முழு…
-
- 2 replies
- 1k views
-
-
எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது. படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்களை பொறுப்புக்கூறச் செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு இழப்பீடு வழங்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் (ITJP) இன்றைய தினம் (மார்ச் 2) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “இறந்த சடலங…
-
-
- 2 replies
- 430 views
-
-
முக்கியமானதொரு காலகட்டத்தில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால், சுதந்திரமாகச் செயற்பட்டு தமது முடிவைத் தீர்மானிக்கும் சூழல் உள்ளதா? அது நியாயமாகச் செயற்படத்தக்க நிலையில் உள்ளதா? என்பன இப்போதுள்ள முக்கியமான கேள்விகளாக உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமே வரவேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டை, அரசாங்கம் கொண்டிருக்கின்ற நிலையில் தான் இந்த கேள்வி எழுந்துள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தெரிவுக்குழுவில் உறுப்பினர்களை நியமிக்க இதுவரை எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை. இந்தநிலையில், தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிக்க நாடாளுமன்றத் தெரி…
-
- 2 replies
- 964 views
-
-
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக கடந்த 1989 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை நஸ்டஈடு வழங்கப்படவில்லையென்று சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், தமது காணிகளில் மகிந்த அரசாங்கம் தனது படைகளைக் கொண்டு விவசாயம் செய்கின்றது என்றும் மேற்படி காணி உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஸ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல தரப்பினருக்கும் பல தடவைகள் கடிதங்கள் அனுப்பிய போதிலும் இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லையென்றும் மேற்படி மக்கள் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கில் கடந்த 1989 ஆம் ஆண்டு பல காணிகள் விமான நிலைய விஸ்தரிப்புக்காக சிறிலங்கா அ…
-
- 2 replies
- 645 views
-
-
விக்னேஸ்வரனின் செவ்வியும் ஊடகங்களும் கே. சஞ்சயன் / முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி ஒன்று, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. கூட்டமைப்புத் தலைமைக்கும், அவருக்கும் இடையிலான பனிப்போர், தீவிரம் பெற்ற பின்னர், அவர், விரிவாகப் பல விடயங்களைப் பேசிய ஒரு செவ்வியாக இது இருந்தது. அந்தச் செவ்வி வெளியானதுமே, அதைத் தமிழ் மொழியாக்கம் செய்து, முதலமைச்சரின் செயலகம், பெரும்பாலான தமிழ் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது.தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டிருந்தன. அதுதான் பல்வேறு ஊடகங்களைச் சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் வெளியான செவ்வியின் மூலத்திலிருந்து, தமிழ் மொழியாக்கத்த…
-
- 2 replies
- 956 views
-
-
இந்தியா தனக்குத்தானே வெட்டிய குழி! மத்தல விமான நிலையத்தின் மீது சில உரிமைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கை விமானப்படையின் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டிருக்கிறது. அவசர தேவைகளின் போதும், தேசிய பாதுகாப்பு பயன்பாடுகளுக்காகவும், மத்தல விமான நிலையத்தின் ஓடுபாதையைப் பயன்படுத்துவதற்கு தமக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்பது விமானப்படை விடுத்துள்ள முதலாவது கோரிக்கை. தேவைப்பட்டால் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கென, விமான நிலையத்தில், ஒரு பகுதி நிலத்தை தமக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்பது விமானப்படை முன்வைத்துள்ள இரண்டாவது கோரிக்கை. தேசிய பாதுகாப்பு நலன்களைக்…
-
- 2 replies
- 693 views
-
-
தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பது யார்? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் ஒற்றுமையின் அவசியம் பற்றி பேசியிருந்தார். இந்தக் கால காலகட்டத்தில் மாற்று அணிகள் உருவாக்கப்படக் கூடாது. நாங்கள் எவரையும் கூட்டமைப்பிலிருந்து வெளியில் போகச் சொல்லவில்லை. அனைவரையும் கூட்டமைப்போடு இணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று தனது பேச்சில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். எதிர்வரும் மே மாதம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்தான் சுமந்திரனுக்கு திடிரென்று ஒற்றுமையின் ஞாபகம் வந்திருக்கின்றது. கூட்டமைப்பின் கடந்த ஜந்துவருட கால முயற்சிகள் அனைத்தும் படுதோல்வியடைந்திருக்கின்ற…
-
- 2 replies
- 693 views
-
-
ஜப்பான் அரசின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில்- நல்லிணக்கம் என்கிறது ஜப்பான் தூதரகம் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வசதியான அரசியல் நகர்வுகள் இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்துசெல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார். அதனையடுத்து ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவைக் கப்பல்கள் இலங்கை …
-
- 2 replies
- 505 views
-
-
உக்ரைன் விவகாரத்தில் மௌனம் அவமானம் ராமச்சந்திர குஹா உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவ டேங்குகள் நுழைந்து தாக்குதல் நடத்துவதும் உக்ரைனிய நகரங்கள் கிராமங்கள் மீது ரஷ்யப் போர் விமானங்கள் குண்டு வீசி அழிப்பதும் ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. இது மிகவும் கொடூரமான, ரத்த பலி கேட்கும் போர். இதுவரை சண்டையில் 20,000 ரஷ்யப் போர் வீரர்களும் அவர்களைப் போல இரண்டு மடங்கு உக்ரைன் வீரர்களும் இறந்துவிட்டனர். உக்ரைனைச் சேர்ந்த சிவிலியன்கள் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடம் தேடி தங்களுடைய நாட்டை விட்டே ஓடி பிற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துவிட்டனர். உக்ரைனின் பொருளாதாரம் நாசமாக்கப்படுகிறது. இந்த மோதல் முடிவுக்கு வந்தாலும்கூட, தன்னுடைய பழைய…
-
- 2 replies
- 404 views
-
-
-
- 2 replies
- 890 views
-
-
யார் அந்த JVP யினர் ? அவர்களது பிரதான கொள்கை என்ன ? கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் ஜே.வி.பி பற்றி எவரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் இந்த தேர்தலில் அனைத்து தரப்பினரும் விமர்சிக்கின்ற நிலைக்கு இவர்களின் வளர்ச்சி உள்ளதனை எவராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜே.வி.பி யினர் இந்த நாட்டை நாசமாக்கிய வன்முறையாளர்கள், கொலைகாரர்கள், குழப்பக்காரர்கள் என்றெல்லாம் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது. தேர்தல் காலம் என்பதனால் இது அரசியலுக்காக கூறப்பட்டாலும், இன்றை இளைய தலைமுறையினருக்கு உண்மையான வரலாறுகளை எத்திவைப்பது எமது கடமையாகும். அவ்வாறு உண்மைகளை கூறுகின்றபோது இந்த கட்டுரை எழுதுகின்றவரையும் ஜே.வி.பியை சேர்ந்தவர் என்று கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனெனில் கருத்த…
-
- 2 replies
- 594 views
-
-
அநுரகுமார அலை என்ன செய்யும்? October 13, 2024 — கருணாகரன் — அனுரகுமார திசநாயக்கவின் வெற்றி, புதிய அலையொன்றை அல்லது புதிய சூழலொன்றை உருவாக்கியுள்ளது. அது சிங்களம், முஸ்லிம், தமிழ், மலையகம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் நாடுமுழுவதிலும் உருவாகியிருக்கும் புதிய அலையாகும். இதனால் சிங்களத் தேசியம், தமிழ்த்தேசியம், முஸ்லிம்தேசியம், மலையகத் தேசியம் என்பவற்றைக் கடந்து பெருவாரியான மக்கள் NPP எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரளும் நிலை உருவாகியிருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால், அனுரவின் பக்கமாகத் திரள்கிறது என்பதே சரியாகும். ஏனெனில் இந்த அலையோ, இந்தத் திரட்சியோ JVP அல்லது NPP என்பவற்றின் சித்தாந்தத்தைப் புரிந்து…
-
- 2 replies
- 795 views
-
-
சீன - இந்திய - சிறிலங்கா உறவும் இந்திய மாக்கடலும்: தமிழ்நாட்டு தமிழரின் கைகளில்? [ புதன்கிழமை, 26 டிசெம்பர் 2012, 08:57 GMT ] [ நித்தியபாரதி ] சீன-இந்திய-சிறிலங்கா பூகோள மூலோபாய உறவுநிலையானது முக்கியமாக இந்தியாவில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கிலேயே தங்கியுள்ளது. இந்தியத் தமிழர்கள், சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டிய காரணியாக உள்ளனர். இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட Foreign Policy Research Institute - FPRI தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள Mark J. Gabrielson, Joan Johnson-Freese ஆகிய இருவரால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட…
-
- 2 replies
- 765 views
-
-
டெலோ என்ன செய்யப் போகிறது? யதீந்திரா கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்ல்தலுக்கான வேட்பாளர் தெரிவின் போது டெலோ கடுமையான அறிக்கைகளை வெளியிட்டிருந்தது. டெலோவின் அறிக்கைகளை உற்றுநோக்கியவர்கள் இதோ டெலோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறப்போகிறது என்று பேசிக் கொண்டனர். அந்தளவிற்கு காட்டமான அறிக்கைகள், காட்டமான பேச்சுக்கள், கடுமையான நிபந்தனைகள் ஆனால் இறுதியில் எல்லாமே புஸ்வானமாகியது. தமிழரசு கட்சி வழமைபோல் தாங்கள் நினைத்தவாறு விடயங்களை செய்து முடித்தது. முடிந்தவரை பேசிப்பார்த்த, ஏசிப்பார்த்த டெலோ இறுதியில் தமிழரசு கட்சியின் எதேச்சாதிகாரத்திற்குள் அடங்கி, ஒடுங்கிப் போனது. டெலோ ஒரு காலத்தின் முன்னணி விடுதலை இயக்கங்களில் ஒன்று. அதில் உள்ளவர்கள…
-
- 2 replies
- 884 views
-
-
ஸ்கொட்லாந்து பிரிவினையின் பின்புலம் – சில குறிப்புக்கள் : சபா நாவலன் அத்லாந்திக் சமுத்திரத்தின் உள்ளே தலையை நுளைத்து பிரித்தானியாவை உதைத்துக்கொண்டிருக்கும் அழகிய குடாநாடு தான் ஸ்கொட்லாந்து. ஏறக்குறைய 790 தீவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அழகான தேசம். பிரித்தானியாவின் இன்னொரு அங்கமான இங்கிலாந்திலிருந்து பயணித்தால் அழகிய நீண்ட மலைகளும் அருவிகளையும் அண்மித்த லேக் டிஸ்ரிக்கைத் தாண்டும் போதே ஸ்கொட்லாந்து எல்லைய அடைந்துவிட்டதாக உணரலாம். எடின்பரோ ஸ்கொட்லாந்தின் தலை நகரம். விசாலமான வீதிகளும், விண்ணைத் தொடத கட்டடங்களும் ஆர்ப்பாட்டமில்லாத தலை நகரம் ஒன்றை அறிமுகப்படுத்தும். கிளாஸ்கோ ஸ்கொட்லாந்தின் தொழில் நகரம். உலகில் அதிகம் பணப்பரிவர்த்தனை நடைபெறும் நகரங்களில் கிளாஸ்கோவைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
அசிங்க அரசியலின் உச்சம்? - யதீந்திரா படம் | TAMILNET சில வேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்ற போது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக் கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும் கேட்டால், அவர்களது கேள்வியிலேயே பதிலும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் மேலும் ஒரு படி நோக்கி முன்நகர்ந்தது. இதனை மேலும் நிரூபிக்கும் வகையில் இலங்கையின் மீதான அமெரிக்கப் பிரேரணையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு, அதனை அமுல்படுத்துவதற்கான வாக்குறுதியையும் வழங்கியிருந்தது. அந்த வாக்குறுதிகளுக்கு அமைவாகவே அரசாங்கம், தற்போது பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. ஆட்சி மாற…
-
- 2 replies
- 729 views
-
-
சிறிலங்கா மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வி – ஜெனிவா வாய்ப்பையும் தவறவிடுமா இந்தியா? 65வது சுதந்திர தினத்தில் உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை கிடையாது என அறிவித்திருந்தார். இதன் மூலம் இந்தியாவுடனான சிறிலங்காவின் வரலாற்று ரீதியான உடன்பாட்டை இது மீறுகின்றது. இந்தியாவை சிறிலங்கா ஏமாற்றிவருகிறது. இவ்வாறு Firstpost.com இணையத்தளத்தில் G Pramod Kumar எழுதியுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை பதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்தியாவானது சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக சமூகம் மேற்கொள்ளும் அழுத்தத்தை தடுத்தல் மற்றும் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் புறக்கணித்தல் …
-
- 2 replies
- 623 views
-
-
அமெரிக்கத் தீர்மானமும் ஈழத்தமிழர்களும்! பார்த்தீபன்- 06 ஏப்ரல் 2013 ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப்போர் முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவுரும் நிலையில் ஐய்க்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில், இந்த ஆண்டும் அமெரிக்கா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் போரில் மிகவும் கொடுமையான முறையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்கள்மீது திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தியது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் சர்வதேச ஊடகங்கள் பலவாற்றாலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் அமெரிக்கத் தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் வகையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மிகக்கொடிய போரினால் ஈழத் தமிழ…
-
- 2 replies
- 703 views
-
-
ஆடுகளமும் அரசியல் களமும்: சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் தடை எஸ். கோபாலகிருஷ்ணன் 2011இல் தமிழக முதல்வர் பதவியை ஏற்ற பின் தீவிர தமிழ் ஈழ ஆதரவு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் ஜெயலலிதா. அது இன்று இந்தியாவில் பல் முளைக்காத குழந்தை முதல் பல் விழுந்த முதியவர் வரை கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் கிரிக்கெட் விளையாட்டை அசைத்துப் பார்த்திருக்கிறது. இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு நடத்தப்படும் ஐ.பி.எல் 20-20 ஓவர் போட்டிகளில் இலங்கை அணி வீரர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தினர். விளைவாக ஐ.பி.எல் போட்டிகளை நடத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்க மாட்டா…
-
- 2 replies
- 969 views
-
-
கஜூவும் அவாவும் மொஹமட் பாதுஷா / இலங்கையின் தேசிய விமான சேவையான, ஸ்ரீ லங்கன் விமான சேவை விமானத்தில், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட தரம் குறைந்த மரமுந்திரிகைப் பருப்பு (கஜூ) பற்றி, ஜனாதிபதி விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதையடுத்து, அது தொடர்பில், தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் போல, முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படுவதையும் காண முடிகின்றது. ‘கஜூ’ விடயத்திலேயே, நாட்டின் ஜனாதிபதியும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் இவ்வளவு அக்கறை செலுத்துவது பாராட்டத்தக்கதும் மகிழ்ச்சிகரமானதும் என்பதில் மறுகருத்தில்லை. ஆனால், இதே அக்கறையை, நாட்டில் இடம்பெறுகின்ற முக்கியத்துவம் வாய்ந்…
-
- 2 replies
- 975 views
-
-
தமிழ் கட்சிகளுக்கு அரசியல் நீரிழிவு! வவுனியா கரும்பும் கசக்கிறது! July 5, 2023 – கருணகரன் – “கரும்பு இனிக்குமா? கசக்குமா?” என்ற விவாதம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சூடுபிடித்துள்ளது. அரசியல், ஊடகப் பரப்புடன் தொடர்ச்சியான அவதானிப்புக் குறைந்தவர்கள், “அதென்ன கரும்புக் கதை?” என்று ஆச்சரியமாகக் கேட்கக் கூடும். அந்தக் கதை இதுதான். வடக்கில் – வவுனியா மாவட்டத்தில் – கரும்பு ஆலையை நிறுவுவதற்கு அரசாங்கத்திடம் அனுமதியைக் கேட்டிருக்கிறது வெளிநாட்டு நிறுவனமொன்று. இது நடந்தது 2018 இல். அது நல்லாட்சி அரசாங்கக் காலம். 2018 ஜூலையில் தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்ஓசா, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்திருந்தார…
-
- 2 replies
- 486 views
- 1 follower
-