அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
புதிய ஜெனிவா பிரேரணை ஊடாக மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா? ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்படவிருக்கிறது. ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதன் பிரகாரம் பிரேரணைக்கு அனுசரணை வழங்கும் பட்சத்தில் இலங்கை தொடர்பான 40/1 என்ற இந்தப் புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும். ஒருவேளை ஏதாவது ஒரு உறுப்புநாடு எதிர்ப்பு தெரிவித்தால் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய தேவை மனித உரிமை பேரவைக்கு ஏற்படும். அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்க…
-
- 0 replies
- 884 views
-
-
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தாயக - புலம்பெயர் உறவு புருஜோத்தமன் தங்கமயில் / 2019 மே 23 வியாழக்கிழமை, பி.ப. 01:04 Comments - 0 “நாங்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்துவிட்டதால் மாத்திரம், ஈழத்தமிழர் அரசியலைப் பேசுவதற்கான தகுதியை இழந்துவிட்டோமா, எமக்கான அங்கிகாரத்தையும் பேசுவதற்கான தகுதியையும் பெறுவதற்கு, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் தாயகத்துக்குத் திரும்ப வேண்டுமா” என்கிற ஆதங்கத்தை, இந்தப் பத்தியாளரிடம், அவரின் வயதையொத்த புலம்பெயர் ஊடகத்துறை நண்பரொருவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்தினார். கிட்டத்தட்ட அதேமாதிரியான ஆதங்கத்தை, சமூக ஊடகமொன்றில், கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும், அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார். …
-
- 0 replies
- 884 views
-
-
தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் : அப்போது நிலவிய உலகச் சூழல் தான். அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் நான்கு பயணிகள் விமானங்கள் உலக வரலாற்றை மாற்றிவிட்டன. அல்-குவெய்தா தீவிரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை அதிரடியாகக் கைப்பற்றி அதே விமானங்களைத் தாமே ஓட்டிச் சென்று விமானங்களைத் தாக்குதல் கருவியாகப் பயன்படுத்திப் பேரழிவை ஏற்படுத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயோர்க் நகரின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான இரட்டைக் கோபுரத்தில் மோதி 3000 வரையானோரைக் காவு கொண்டது. இன்னொரு விமானம் அமெரிக்க பாதுகாப்பு படையினரின் தலைமையகம் பென்ரகன் மீது…
-
- 1 reply
- 883 views
-
-
“கோவிட் கிளர்ச்சிக்கு” எதிரான போரில் படையினருக்கு அதிகம் பாதிப்பு ஏற்பட்ட வாரம் - நிலாந்தன் வைரஸ் தொற்று அதிகமாகி தனிமைப்படுத்தல் முகாம்களை இலங்கை அரசாங்கம் திறந்த பொழுது முதலில் கிழக்கில் திறக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையம் ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக வளாகத்தில் திறக்கப்பட்டது. அப் பல்கலைக்கழக வளாகம் கடந்த ஓராண்டுக்கு மேலாக படையினரின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்து வருகிறது. ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் அது ஒரு படை வளாகமாகத்தான் காணப்படுகிறது. ஒரு பல்கலைக்கழக வளாகத்தை அரசாங்கம் தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றியது என்பது முஸ்லிம்களுக்கு எதிரான மற்றொரு நகர்வு என்று பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல தனிமைப்படுத்தல் முகாம்கள் வடக்கு கிழக்கில் திறக்க…
-
- 0 replies
- 883 views
-
-
ஜெனிவாவை எதிர்கொள்ளல் - நிலாந்தன்- 16 பெப்ரவரி 2014 அண்மையில் லண்டனில் வசிக்கும் சமூகச் செயற்பாட்டாளரான ஒரு நண்பர் கேட்டார். தமிழ்நாட்டிலுள்ள தீவிர தமிழ்த்தேசிய இயக்கங்களும், கட்சிகளும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அதேசமயம், கூட்டமைப்புக்கு எதிராகவும் கருத்துக்களைக் கூறி வருகின்றன. தாய் தளத்தில் துலக்கமான மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் ஒரு கட்சியை கடுமையாக விமர்ச்சிப்பதற்குரிய உரிமையை இவர்கள் எப்படிப் பெற்றார்கள்? என்று.... ''அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு' என்று நான் சொன்னேன். ஒன்று கூட்டமைப்பின் கையாலாகாத் தனம் அல்லது அதன் அரை இணக்க அரசியல் தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தி. இரண்டாவது தமிழ் டயஸ்பொறாவிலுள்ள தீவிரமான தரப்புக்களுடனான உறவு. இவை இரண்டின் காரணமாகவு…
-
- 4 replies
- 883 views
-
-
வடகடலில் சீனர்கள்? நிலாந்தன். July 4, 2021 வடமராட்சி கிழக்கில் வீதித்திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த மங்கோலிய முகச்சாயலைக் கொண்ட ஒருவரைக் கண்ட சுமந்திரன் அவரைச் சீனர் என்று கருதி ருவிற்றரில் ஒரு குறிப்பைப் பதிவிட்டிருக்கிறார். உள்நாட்டில் வீதித் திருத்த பணிகளிலும் சீனர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாக அப்பதிவில் உள்ளது. ஆனால் அது சீனர் அல்ல கிழக்கை சேர்ந்த ஒரு முஸ்லிம் என்பது தெரிய வந்ததும் சுமந்திரன் தான் வெளியிட்ட தகவலுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். மேலும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் சுமந்திரனுக்கு ஒரு பதில் குறிப்பையும் பதிவிட்டிருந்தது. வழமையாகத் தான் என்ன கதைக்கிறேன் என்பதனை நன்கு சிந்தித்து பிடி கொடாமல் கதைக்கும் சுமந்திரன் இந்த வி…
-
- 9 replies
- 883 views
- 1 follower
-
-
மாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி... தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டமானது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு மேட்டுக்குடியினரின் கைகளிலும், சுதந்திரத்திற்கு பின்னர் மேட்டுக்குடியினர் மற்றும் மத்திய தர வகுப்பினர்களின் கைகளிலும், 1970 களுக்கு பின்னர் மத்திய தர இளைஞர்களின் கைகளிலும் குடிகொண்டது. முன்னையவர்கள் தங்களது கல்வி அறிவையும், செல்வத்தையும் கொண்டு பிரித்தானியரிடம் பேரம் பேசி தமது உரிமைகளை வென்றுவிடலாம் என்று நினைத்திருந்தனர். இருப்பினும், அவர்களது எண்ணங்கள் முழுவதும் காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதிலேயே குவிந்திருந்தது. ஆறு கடக்கும் வரை அண்ணன், தம்பி. ஆறு கடந்த பின…
-
- 2 replies
- 883 views
-
-
வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலயமும் தொல்பொருட் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பும் தமிழர்கள் தனித்துவமான கலை, கலாசார, பண்பாடு பாரம்பரியங்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எமது தேசத்தில் காணப்படும் பல்வேறு சான்றுகள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன. யுத்தம் மற்றும் அதன் தாக்கத்தில் இருந்தும் மீண்டும் தமது வாழ்வியலை மீட்டெடுக்க முனையும் தமிழ் சமூகம் தனது கலாசார பாரம்பரியங்களில் இருந்து என்றும் விலகாது அதனை போற்றிப் பாதுகாத்து வருகின்ற நிலையில், தென்னிலங்கை பேரினவாத சக்திகள் தமது அதிகார செயன்முறைகளின் ஊடாக தமிழர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையினை சிதைக்க முனைவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. அந்தவகையில் வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுங்குநாறி மலைப் பகுதிய…
-
- 0 replies
- 883 views
-
-
இந்தியா புலிகளை அழித்ததா? நோர்வே அறிக்கையை முன்னிறுத்தி ஒரு மதிப்பீடு : யதீந்திரா இனப்படுகொலையின் இரத்தச் சுவடுகளை மறைக்கும் காலச்சுவடும் குட்டிக் கேபியும்! சிறுபான்மைத் தேசிய இனம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவதற்குப் பின்னால், ராஜபக்ச குடும்ப ஆட்சியின் பாசிசம் நிலை பெறுவதற்குப் பின்னால், இனச்சுத்திகரிபின் பின்னணியில், நாள்தோறும் பட்டினியால் மரணித்துப் போகும் சிங்களத் தொழிலாளர்களின் பின்னணியில் ஒரு பிரச்சார வலைப் பின்னல் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாம் தலித்தியம் பேசுகிறோம், முஸ்லீம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம், பின்நவீனத்துவப் பையன்கள் என்று அழகிய “கதையாடல்கள்” உலக மக்களை ஒரு பிரச்சார வரம்புக்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றது. ஈழத்தின் இனப்படுகொலையை முன்வைத…
-
- 4 replies
- 883 views
-
-
ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா? - நிலாந்தன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள் வழமை போல் ஓர் அப்புக்காத்து விளக்கம் தருகிறார்கள். அதாவது அது கால அவகாசம் அல்ல. இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்கான ஒரு கால நீட்சியே என்று. அப்படியென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட கால அவகாசமானது ஐ.நா அரசாங்கத்தை கண்காணிப்பதற்கான அல்லது பின்தொடர்வதற்கான ஒரு கால அட்டவணையைக் கொண்டிருக்கவில்லையா? அல்லது கடந்த நான்கு ஆண்டுகால ஏமாற்றங்களின் விளைவாக இம் முறைதான் அவ்வாறு கண்காணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறதா? ஆனால் கடந்த முறை கால அவகாசம் வழங்கப்பட்ட போது அரசாங்கத்தைக…
-
- 0 replies
- 883 views
-
-
அரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்? நிலாந்தன்:- 08 நவம்பர் 2015 அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால் அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசாங்கம் முற்படுகின்றது.ஆயுத ப்போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக காட்டினார்களோ தமிழ்த்தேசியப் பிரச்சினையை எப்படி அதிகாரப் பரவலாக்கலுக்குரிய பிரச்சினையாகக் காட்டினார்களோ அப்படித்தான் கைதிகள் விவகாரத்தையும் ஒரு சட்ட விவகாரமாகக் காட்ட முற்பகிறார்கள். இவ்வாறு ஒரு விவகாரத்தின் மையத்தைச் சிதைத்து அதை வேறொன்றாகக் காட்டுவதன் மூலம் அதை ஒத்தி வைக்கலாம் அல்லது அதைத் தீர்க்காமலே விடலாம். அதற்குரிய மிக நீண்ட பாரம்பரியம் இலங்கைத் தீவின் அரசாட…
-
- 1 reply
- 882 views
-
-
கருணையும் கண்ணீரும் கூட அதிகாரம் அனுமதிக்கிவறைதான். கண்ணீருக்கும், கருணைக்கும், நீதிக்கும் தன் எல்லை எதுவரை என்பது தெரியும். எங்கே பாய வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதும் தெரியும். அது தெரியாமல் போனால் நீங்கள் ஆரியவதிக்காக மட்டுமல்ல வன்னி செல்வீச்சில் கருவோடு சேர்த்து கொல்லப்பட்டாளே ஒரு தாய் அவளுக்காகவும் போராட வேண்டும். இந்த கருணையும் நீதி கோரலும் நெருப்பு போன்ற ஒளியை அந்த மக்களுக்காக ஏற்றும் என்றால் அது மட்டுமே அறம். ஆரியவதிக்காகக் கோரும் நீதியின் மூலம் நாம் நிறுவ நினைக்கும் ஜனநாயகம் எல்லோருக்குமானதாக மாற வேண்டும். அந்த ஏழையின் உடம்பில் ஏற்றப்பட்ட ஆணிகளைப் போல பல நூறு துப்பாக்கிக் குண்டுகளை உடலில் சுமந்தபடி வன்னிப் பெண்கள், குழந்தைகள் அலைகிறார்கள். அவைகளை எப்போது நா…
-
- 1 reply
- 882 views
-
-
நாணயக் கயிற்றின் தேவை -க. அகரன் அதிகாரத்தரப்புடன் தேசிய இனமாகத் தன்னைப் பிரகடனப்படுத்தும் சிறுபான்மையினமொன்று, உரிமைகளைப் போராடிப் பெற வேண்டுமாக இருந்தால், அங்கு அடக்குமுறையொன்று பிரயோகிக்கப்படுவதாகவே கொள்ள வேண்டும். அந்தவகையில், தெற்காசிய நாடுகளில் மாத்திரமின்றி, பல்வேறு நாடுகளிலும், அடக்குமுறைக்கான கட்டமைப்புகள் காணப்படுகின்றமை, ஓங்கி ஒலிக்கும் சிறுபான்மையினரின் உரிமைக்கான குரல்களின் மூலம், அறிந்துகொள்ள முடிகின்றது. எனினும், இவ்வாறான உரிமைக் குரல்களுக்குச் சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் அதனுடைய ஆதரவுத்தளமும் அதிகளவாகக் காணப்பட்ட தருணங்கள் பதிவில் உள்ளன. இதன் காரணமாகவே, கொசோவா உட்பட, பல்வேறு நாடுகள், சுதந்திர தேசங்களாகத் தம்மை நிலைப்படுத்திக் கொண்டன. …
-
- 0 replies
- 881 views
-
-
அரசியல் அறம் மறந்த மாவை புருஜோத்தமன் தங்கமயில் / 2020 மார்ச் 18 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன், அவர் சார்ந்திருந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (டெலோ) விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தமிழரசுக் கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் இம்முறை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் கூட்டத்தின் போதே, இந்த விடயம் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒரு மாவட்டத்தின் தலைமை வேட்பாளர், அதுவும் கடந்த பொதுத் தேர்தலில் தன்னை முன்னிறுத்திய கட்சிக்கு இறுதிவரை அறிவிக்…
-
- 0 replies
- 881 views
-
-
இமாலயப் பிரகடனம் – பின்னணியும் வரலாறும் –கூட்டங்களில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பல தாயக அரசியற் தலைவர்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் இயங்குபவர்களும் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன், பிரித்தானியத் தமிழர் பேரவையின் தலைவர் ரவி குமார் (ரூட் ரவி) மற்றும் தாயக சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான கலாநிதி குமாரவேல் குருபரன் உள்ளிட்டோர் பங்குபற்றியிருக்கின்றனர்— அ.நிக்ஸன்- …
-
- 5 replies
- 881 views
-
-
-
- 2 replies
- 881 views
-
-
இன்று சும்மா facebook இல ஒரு உலா வந்துகொண்டிருந்தேன் .அப்போது ரொம்ப interesting ஆன ஒரு விடயம் கண்ணில் பட்டது .எனக்கு கொஞ்சம் சிங்கள வெறியர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்(பல்கலைக்கழக நண்பர்கள் ) facebook இல.அவர்கள் தங்களுக்கிடையில் இதனை share பண்ணியிருந்தார்கள். நமக்கு தான் கொஞ்சம் சிங்களம் வருமே பார்வையை ஓட விட்டதில் நடுமண்டையில் நச்சென்று இறங்கியது.நம்மள முழுசா ஒண்டுமில்லாம ஆக்கிட்டானுகள், இனிதான்டி இருக்கு கச்சேரி நம்ம தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு இது ஆரம்பம் தாண்டி .....இனித்தான் இருக்கு கிளைமாக்சே http://i48.tinypic.com/2rqowlx.jpg
-
- 0 replies
- 881 views
- 1 follower
-
-
-
காலம் கடந்த ஞானம் “புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டாலோ அல்லது திருத்தம் கொண்டு வந்தாலோ, அதில் சிறுபான்மை மக்களின் உரிமைகளும் அவர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கான தீர்வும் அழுத்தமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனினும், அரசியலமைப்பு விடயத்தில், அரசாங்கம் மிகவும் தாமதமாகச் செயற்பட்டு வருகின்றது” இவ்வாறு, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான செயலகத்தின் தலைவியும் நாட்டை இரு முறை ஆண்ட முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க, அண்மையில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அத்துடன், “சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுக்கப் பலர் உள்ளனர். ஆனால், தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எவரும்…
-
- 0 replies
- 880 views
-
-
பலாலியில் தமிழ் மக்கள் குடியிருக்க இராணுவம் உதவுமா? - துன்னாலைச் செல்வம் பலாலி விமானத் தளத்தை கைப்பற்றுவதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பில் எத்தனை பேர் தமது உயிரைக் கொடுத்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த நிலத்தை ஏன் இவ்வளவு உயிர்களைக் கொடுத்து கைப்பற்ற வேண்டும் என்று ஒருவரும் நினைக்கவில்லை இந்த நிலம் தமிழ் மக்களின் தாய் நிலம். இந்த நிலத்தைக் கைப்பற்றுவதற்காக விடுதலைப்புலிகள் தமது உயிர்களைக் கொடுக்க தயாராக இருந்தார்கள். தமிழ் அரசியல் தலைவர்களின் ஆரோக்கியமற்ற செயற்பாட்டினாலே இந்தப் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோகின்றன. இப்போது இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் எல்லோரும் சிங்கள அரசுடன் சேர்ந்து பலாலியில் பொங்கல் விழா கொ…
-
- 0 replies
- 880 views
-
-
விஜயகலாவின் பேச்சு 2009ற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியலில் வெள்ளி நாக்குகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறந்த பேச்சாளர்கள் ஒருவரும் இல்லையெனலாம். இருப்பவர்களில் பரவாயில்லாமல் பேசக்கூடியவர்கள் அல்லது பேச்சைத் தயாரித்துப் பேசுகிறவர்கள் என்று மிகச் சிலரைத்தான் கூறலாம். குறிப்பாகக் கூட்டமைப்புக்குள் தான் பேசுவதை மற்றவர்கள் உற்றுக் கேட்கிறார்கள். தனது பேச்சில் ஏதோ ஓர் அரசியல் செய்தி இருக்க வேண்டும் என்று சிந்தித்து பேச்சை முன் கூட்டியே தயாரித்து எழுதிக் கொண்டு வந்து வாசிப்பவர் விக்னேஸ்வரன். ஆனாலும் அவர் மேடையைத் தனது குரலால் கட்டிப்போடும் ஒரு பேச்சாளர் அல்ல. அவரோடு ஒப்பிடுகையில் சம்பந்தன் அழுத்தமான ஒரு பேச்சாளர் எனலாம். தான் கூற வரும் கருத்துக்கேற்ப குர…
-
- 3 replies
- 880 views
-
-
I think President Mr. Srisena has a clear road map. Is he creating a tunnel - unfit for China and India - for Western intervention?.ஜனாதிபதி தெளிவாக திட்டமிட்டுச் செயல்படுகிறதாகவே தோன்றுகிறது. மேற்குலகின் தலையீட்டுக்கான - சீனாவும் இந்தியாவும் நுளையமுடியாத - ஒரு சுரங்கப் பாதையை அவர் உருவாக்குகிறாரா?
-
- 5 replies
- 880 views
-
-
சமந் சுப்ரமணியம் [samanth Subramanian] 'இந்த பிளவுபட்ட தீவு' [This Divided Island] என்கின்ற தலைப்பில் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இந்நூலானது சிறிலங்காவின் மிகமோசமான கடந்த காலத்தையும் நிச்சயமற்ற நிகழ்காலத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. இந்நூலின் ஆசிரியருடன் Hindustan Times ஊடசகத்திற்காக Sudha G Tilak மேற்கொண்ட நேர்காணலின் விபரம் வருமாறு: கேள்வி: இந்த நூலைத் தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது? பதில்: போர் என்பதன் தாக்கம் என்பதை உணர்ந்ததன் ஒரு பகுதியாகவே இந்த நூலை நான் எழுதியுள்ளேன். நான் சிறிலங்காவை சேர்ந்தவன் அல்லன். ஆனால் நான் சென்னையில் வளர்ந்தவன் என்ற வகையிலும் நான் ஒரு தமிழன் என்ற வகையிலும் சிறிலங்காவில் எத்தகைய போர் இடம்பெற்றது என்பதை எழுதியுள்ளே…
-
- 0 replies
- 880 views
-
-
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன? பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடன் ஓட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது. மக்களும் கண்ணை மூடிக்கொண்டு வெறும் உணர்ச்சி பேச்சுக்களுக்கும் அல்லது வேலைவாய்ப்பு, நிவாரணம் தருகிறோம் என்ற வெற்று வார்த்தைகளுக்கு மயங்கி வாக்களிக்க தயாராவார்கள். இந்த வேளையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிட இருக்கும் தமிழ் வேட்பாளர்களை நோக்கி சில கேள்விகளை எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வடக்கு கிழக்கில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சி…
-
- 0 replies
- 880 views
-
-
தமிழ்த் தேசிய தரப்பு புதிய பாதை நோக்கி நகருமா? -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியலின் கடந்த 65 ஆண்டுகளில் சந்தித்த தேர்தல்களில் இருந்து, இம்முறை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் கடந்து வந்த பாதைகளை நோக்கும்போது, அவற்றின் எதிர்வினைகள் பற்றி நன்றாகப் புரியும். இலங்கைத் தமிழ்க் காங்கிரிஸில் ஆரம்பித்த சமஅந்தஸ்துப் பிரச்சினை, 50க்கு 50. அன்றைய ஆட்சியாளர்கள், 50க்கு 48 தான் தருவதாகச் சொல்ல, 50க்கு 50 தந்தால்தான் தீர்ப்பை ஏற்பேன்; இல்லையேல் அதைப் பெறும் முறையில் பெறுவோம் எனச் சவால் விட்டு, கிடைத்ததையும் இழந்தனர். அதன்பின், இலங்கைத் தமிழரசுக்கட்சி, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு, சமஷ்டி முறையிலான தீர்வை எமக்கு தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்…
-
- 6 replies
- 879 views
-