Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பக்கச்சார்பான போர் அனைவரும் ஒல்லாந்து ஹேக் கொண்டு செல்லப்பட வேண்டியவர்களே.. நடைபெற்ற போர் வெறும் அப்பட்டமான பக்கச் சார்பான போராகும் என்று சனல் 4 தெரிவிக்கிறது. - சீனாவின் விமானம், இஸ்ரேலின் விமானங்கள் பறப்பதை அது காட்டுகிறது. இப்படியொரு சின்னஞ்சிறிய நிலப்பரப்பில் உள்ள மக்களை கொன்றொழிக்க வேண்டிய தேவை சீனர்களுக்கு ஏன் வந்தது என்ற கேள்வியை ஒளிநாடா எழுப்புகிறது. - இஸ்ரேலிய கொலைஞர்களுக்கு இங்குவர என்ன முகாந்திரம் இருக்கிறது என்ற கேள்வியையும் அத ஏற்படுத்துகிறது. - மேலும் இந்தியா என்ற வார்த்தையை அவர்கள் உச்சரிக்காமலே சீனாவை உச்சரிக்கிறார்கள். இது மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். சர்வதேச சமுதாயம் பக்கச் சார்பாக நடந்து சமநிலையற்ற ஒரு போரை …

  2. இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா? இனி என்ன நடக்கும்? சர்வதேச சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் பேட்டி யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HAKEEM படக்குறிப்பு, எம்.ஏ.எம். ஹக்கீம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நிராகரித்ததன் மூலம், இலங்கையின் ராஜதந்திரம் தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சர்வதேச சட்டத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். ஹக்கீம் தெரிவித்த…

  3. தாயக மண்ணில் புலிகளை அடிமைகளாக்கியது யார்? – கதிர் http://www.kaakam.com/?p=1071 முள்ளிவாய்க்காலில் சிங்கள மற்றும் பன்னாட்டு அரசுகள் தமிழினத்தின் மீதான இன அழிப்பை நடாத்தி முடித்த கையோடு புலம்பெயர் அமைப்புகள் தங்களுக்குள் முட்டி மோதி கட்டமைப்புகளை சிதைத்தது மட்டுமல்லாது சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் கைக்கூலிகளாகவும் மாறியிருக்கின்றனர் என்பதை பல தரப்பட்ட நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி புரிந்து கொள்ளலாம். விடுதலைப்போராட்டங்கள் எழுச்சிகரமாக ஆரம்பிக்கப்பட்டாலும் கருவியேந்திய மறப்போராட்டங்கள் பேசாநிலைக்கு வரும் போது அதன் பின்னரான காலப்பகுதியையும் மறப்போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகளின் எதிர்கால நலன் குறித்த நிலைப்பாடுகளும் மிக நேர்த்தியாக கையாளப்பட வேண…

  4. தன்னம்பிக்கை நிறைந்த அறியாமை -என்.கே. அஷோக்பரன் கொவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு எதிரான மனிதகுலத்தின் போரில், மிகப் பலமானதோர் ஆயுதமான நோய்த்தடுப்பு மருந்தை மனிதன் தயாரித்து, கொஞ்சம் கொஞ்சமாக உலகம் எங்கிலும் உள்ள மக்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள், இன்று நீண்டு நிற்பதை நாம் அவதானிக்கிறோம். பலமணிநேரம் வரிசையில் காத்திருந்து, தடுப்பூசியைப் பெற்றுச் செல்லும் மக்களின் முகங்களில், பலமணிநேரம் வரிசையில் நின்றிருந்த களைப்பையும் மீறி, பாதுகாப்பு உணர்வு தரும் ஒரு வகையான சாந்தமான மகிழ்ச்சியைக் காணக்கூடியதாக இருக்கிறது. விரைவில் அனைவரும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும். நிற்க! சில மாதங்களுக்…

    • 1 reply
    • 860 views
  5. மட்டக்களப்பில் வீழ்ச்சியை சந்திக்கப் போகும் தமிழரசுக் கட்சி? தீரன் நடைபெறவுள்ள தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கி மிக மோசமான சரிவைச் சந்திக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. தமிழரசுக் கட்சி தோல்வியை சந்திக்குமா? என்ற கேள்விக்கு அப்பால் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் பெற்ற வாக்கு எண்ணிக்கையில் இம்முறை பாரிய சரிவைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அதன் ஆதரவாளர்கள் மற்று பொது மக்கள் மத்தியில் மிகுந்த விமர்சனத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உட்கட்சி பூசல்! மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளை தீர்மானிக்கும்…

  6. நேற்று உணவு மேசையில், ஈழப்பிரச்சினை குறித்து பேச்சு வந்தது..அங்கே நடைபெறும் மனித அவலம் பற்றியும், மருத்துவமனைகளில் எறிகணைகளை வீசும் நாஜி இலங்கை அரசு பற்றியும் எதிரே அமர்ந்திருந்த பலநாட்டவர்களிடம் கவலையுடன் விவரித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இந்தி'யர் எதிரே வந்து அமர்ந்தார்.. வந்தமர்ந்தவர், படீரென ஒரு கருத்தை தெரிவித்தார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தேன்.. ஓ ஸ்ரீலங்கா இஷ்யூ ? அங்கே விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் தெரியுமா ? அதனால் தான் அப்பாவி மக்கள் சாகிறார்கள்...என்றார்.. மருத்துவமனையை நோக்கி பல்குழல் எறிகளைகள் மூலம் பாஸ்பரஸ் குண்டுகளையும், மீயொலி விமானங்களின் மூலம் கொத்து குண்டுகளையும் இலங்கை அரசாங்கம் வீசுவதை புதினத்தையும்…

  7. அரசியலில் தந்திரோபாயம் என்பது – விரும்பியது கிடைக்கும் வரையில் கிடைத்ததை விரும்புவதாகும் - யதீந்திரா தமிழில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. தமிழர்களின் அரசியலும் இன்று அப்படியானதொரு நிலையில்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் சமஸ்டி, அதிலிருந்து தனிநாடு, பின்னர் மீண்டும் சமஸ்டி. ஆனால் தமிழர் அரசியலின் உண்மையான நிலைமையோ, மாகாண சபையை முழுமையாக பயன்படுத்த முடிந்தாலே, போதுமானதென்னும் நிலையில்தான் இருக்கின்றது. அதாவது, பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானது. ஆனால் இந்த உண்மையை வெளிப்படையாக கூறும் துனிவு பலரிடம் இல்லை. வாக்குகள் பறிபோய்விடுமோ – என்று அச்சப்படும் அரசியல்வாதிகளால், சில விடயங்களை பகிரங்கமா…

    • 4 replies
    • 860 views
  8. இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது- சீன தூதரகம் கடும் குற்றச்சாட்டு Rajeevan Arasaratnam October 26, 2020 இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது- சீன தூதரகம் கடும் குற்றச்சாட்டு2020-10-26T21:38:52+05:30அரசியல் களம் FacebookTwitterMore இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் குறித்த செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர் டீன் தொம்சன் இலங்கை சீன உறவுகளில் வெளிப்படையாக தலையிட்டுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை தனது வெளிவிவகா…

  9. வன்முறையின் பின்னணி என்ன? நல்­லாட்சி அர­சாங்கம் மிக மோச­மான நெருக்­க­டிக்குள் சிக்­கி­யி­ருக்­கின்­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் அடைந்த பின்­ன­டைவு, நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்­மைக்கு ஆப்பு வைக்கும் வகையில் நிலை­மை­களை மோச­ம­டையச் செய்­தது. ஊழல், மோச­டி­களைக் காரணம் காட்டி, பிர­தமரைப் பதவி இழக்கச் செய்யும் வகையில் நம்­பிக்கை இல்லாப் பிரே­ர­ணையைக் கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. அத்­த­கைய அர­சியல் நிலை­மையை சரி­செய்து, ஸ்திரத்­தன்­மையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த சூழ­லி­லேயே அம்­பா­றை­யிலும். அதனைத் தொடர்ந்து கண்டி பிர­தே­சத்­திலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­ட­வி…

  10. இலங்கை இனப் படுகொலையும் இந்திய அரசியலும் பா. செயப்பிரகாசம் உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெற்றுவிட்டனவா என்னும் பொதுப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம். அரசியல், பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய உலக அரசியல் ஒழுங்கைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றன. உலகின் பொதுவான இயங்குதிசை வல்லரசுகளால் தலைமை தாங்கப்படும், அவற்றின் நலன்களை முன்னிறுத்தும் சக்திகளால் இயக்கப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை மக்கள் நலனை முன்னிறுத்தும், மக்களால் தலைமை தாங்கப்படும் சக்திகளால் இயக்கப்படுவதாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. 2011இல் தெற்கு சூடானின் விடு தலையை உள்ளடக்கிய அண்மைக் காலம்வரையிலான நிகழ்வுகள் உலக அரங்கில் தேசிய இன வி…

    • 3 replies
    • 859 views
  11. 2015ஐ விட மிகப்பெரிய புரட்சி Gopikrishna Kanagalingam / 2018 நவம்பர் 15 வியாழக்கிழமை, மு.ப. 12:57 இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி, இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை, “புரட்சி” என்று வர்ணிப்போர் மிக அதிகளவில் உள்ளோர். அவர்களின் எண்ணங்கள் தவறானவையல்ல. அந்த மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால், பல முக்கியமான மாற்றங்கள் ஏற்பட முடியாமல் போயிருக்கலாம். ஆனாலும் கூட, அந்த மாற்றங்கள் எல்லாம், அரசியலோடு சம்பந்தப்பட்டவை என்பதால், மக்களின் மாற்றங்களாக அவை கருதப்பட முடியாத நிலை காணப்பட்டது. குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடத்தைகள், ஊழலைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தயக்க…

  12. தமிழ்த்தேசியமும் தமிழ்த்தேசியத்தை பலவீனப்படுத்தும் காரணிகளும்! -சு. பிரஜீவன்ராம்- February 21, 2021 இன்று தமிழர்கள் மத்தியில் பெரும்பான்மையாக முனுமுனுக்கப்படும் ஒரு சொற்பிரயோகம் தமிழ்த்தேசியம். பெரும்பான்மையான மக்கள் இச்சொல்லின் பொருள் என்ன என்ற புரிதலற்று, தமது உரையாடல்களில் பயன்படுத்துகின்றனர் . சிலர் இதனை ஒரு குறித்த குழு என்ற ஓர் வரையறைக்குள் உட்படுத்த முயல்கின்றனர். வேறுசிலர் இது பிரிவினைவாத சிந்தனையின் வெளிப்பாடு எனக்கூறி தமிழ்த்தேசிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். உண்மையில் தமிழ்த்தேசிய சிந்தனையின் அர்த்தம் பொருள் என்ன என்பது பற்றி ஆராய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்த்தேசியம் பற்றிய பரிபூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ள தேசியம் பற்…

  13. உக்ரேனிய போரின் உள்முகம் : அமெரிக்கா நடாத்தும் நிழல் யுத்தம் ! ஜனாதிபதி ஜோ பைடன் மகனின் ஊழல் மூடி மறைப்பு ! – ஐங்கரன் விக்கினேஸ்வரா —————————————————— (அமெரிக்கா தனது வரலாற்று எதிரியான ரஷ்யாவை எதிர்க்கவே உக்ரேனுக்கு ஆயுத உதவிகள் என்று இலகுவாக எல்லேராலும் கூறி விட முடியும். ஆனாலும் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணியும் உண்டு. அதுவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகனின் உக்ரேனிய நிறுவனங்களூடான வணிக உடன்பாடும், ஊழல் மூடி மறைப்பும் ஆகும்.இந்த உக்ரேனிய வணிக உடன்பாடும் ஊழலும் பற்றியே இந்த ஆக்கம் அலசுகின்றது.) …

  14. இவரைப்பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.அரகலய போராட்டத்தில் முன்நின்றிருக்கிறார்.மிகமிக தெளிவாக பேசுகிறார். இவரின் கதையைக் கேட்டால் செந்தில் தொண்டமான் மேல் கெட்ட கோபம் வருகிறது.

  15. துருக்கி: அவலத்துக்கும் அராஜகத்துக்கும் இடையில் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டியிருந்த கோவணத்தையே களவுகொடுத்த கதைகள் பல. உலக அரசியல் சதுரங்கத்தில் ஒரு தரப்பு மட்டும் காய் நகர்த்துவதில்லை. எல்லாத் தரப்புகளும் காய் நகர்த்தும். பலர் இதைத் தம் இறுமாப்பால் மறக்கிறார்கள். அம் மறதியின் விலை ஆட்சியதிகாரத்தையே அசைக்க வல்லது. நீதி, நியாயம், நட்பு என எல்லாவற்றையும் தாண்டி நிலைப்பதற்கான போராட்டம் முக்கியம் பெறுவதால், 'நேற்று வரை அண்ணன் தம்பி, இன்று நீ யாரோ நான் யாரோ' என்பதே உலக அரசியல் அரங்கில் தாரக மந்திரமாயுள்ளது. அண்மையில் துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லின் பிரதான விமானநிலையமான அட்டாட்டுர்க் விமானநிலையத்தில் நடந்த ப…

  16. தற்கொலைப் போராளிகளும் சமயப் பின்னணியங்களும்: சில எண்ணங்கள் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சச்சிதானந்தன் சுகிர்தராஜா, இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பின்-காலனியத்துவம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். ஐந்து தனி நூல்களை எழுதியுள்ள சுகிர்தராஜா, சில தொகை நூல்களின் ஆசிரியருங்கூட. இவரது நூல்களை ஆக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களும் சில அமெரிக்கப் பதிப்பகங்களும் வெளியிட்டுள்ளன. கணையாழியில் தொடர்ச்சியாக எழுதிய சுகிர்தராஜா, இலங்கையிலிருந்து வெளிவரும் உயிர்நிழல், கூடம் ஆகிய இதழ்களிலும் சமீபத்தில் எழுதியுள்ளார். n லண்டனிஸ்தான் என்னும் பெயர் இதுவரை உலக விமானநிலையப் பட்டியலில் சேர…

    • 0 replies
    • 859 views
  17. தமிழ்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு? ஐந்து தமிழ்க்­கட்­சிகள் கூடிக்கூடிப் பேசி ஒரு­வா­றாக ஒரு தீர்­மா­னத்தை எட்­டி­விட்­டன. வடக்கு கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் முன்­மு­யற்­சியில் ஒன்று கூடிய ஆறு கட்­சி­களில் ஒரு கட்சி ஜனா­தி­பதி தேர்­தலைப் புறக்­க­ணிக்க வேண்டும் என்ற முடிவைத் தனித்து எடுத்து ஏற்­க­னவே அறி­வித்­து­விட்­டது. ஆறு கட்­சி­களும் கூடி நிலை­மை­களை ஆராய்ந்து என்ன செய்­வது என்ற தீர்­மா­னத்தை எட்­டு­வ­தற்கு முன்பே பொன்­னம்­பலம் கஜேந்­ தி­ர­குமார் தலை­மை­யி­லான தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி தேர்­தலைப் புறக்­க­ணிக்க வேண்டும் என்ற தன்­னிச்­சை­யான முடிவை மேற்­கொண்டு அதனை அறி­வித்­தி­ருந்­தது. அந்த அறி­வித்­தலை ஊட­கங்கள் வாயி­லாக வெள…

  18. ஈழத் தமிழ்ப் பேசும் மக்கள் தனித் தேசிய இனம்? சபா நாவலன் தேசம் தேசியம் அவற்றின் உட்கூறுகளெல்லாம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சமூக விஞ்ஞான விவாதக் கருப்பொருளாக அமைந்திருந்தது. 50 ஆயிரம் தமிழ் பேசும் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை, இந்திய அரசுகள் இணைந்து நிகழ்த்திய இனப்படுகொலைக்குப் பின்னதாக, முகாம்களில் நடத்தப்படுகின்ற இனச்சுத்திகரிபிற்கு எதிராக குறைந்த பட்ச இணைவிற்குக்கூட வரமுடியாத தமிழ் பேசும் மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து இப்பிரச்சனை குறித்த விவாதம் முன்னெடுக்கப்படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகினும் சமூக அக்கறை உள்ள சக்திகளின் மத்தியிலேனும் இது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க வேண்டிய தேவை உணரப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சனை தொடர்பான கருத்தா…

  19. அரசியல்வாதிகள் மீட்பர்கள் இல்லை எம்.எஸ்.எம் ஐயூப் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்திவைக்க, அரசாங்கம் இதுவரை எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. அம்முயற்சிகளை நாம், கடந்த வாரக் கட்டுரையில் பட்டியலிட்டோம். ஆனால், அதன் பின்னரும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும், தேர்தல்களின் போது செலவிடும் பணத்தின் தொகையை கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று, வியாழக்கிழமை (19) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் இம்முறை, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திப்போடப்படலாம் …

    • 0 replies
    • 858 views
  20. ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறிமுறை? – நிலாந்தன் நிலாந்தன் அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு நொதிப்புண்டாகும். ஆனால் இம்முறை சற்று முன்னதாகவே அது தொடங்கிவிட்டது. அதற்கு காரணங்களில் ஒன்று கடந்த மாதம் அமெரிக்க தமிழ் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மெய்நிகர் சந்திப்பில் சுமந்திரன் கூறிய “ரோல் ஓவர் பிரேரணை” என்ற சொற்பிரயோகம்தான். அச்சந்திப்பில் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டிக் கருத்துக் கூறும்போது அவர் அந்த வார்த்தையைப் பிரயோகித்தார். அதன்படி ஏற்கனவே உள்ள தீர்மானத்தை கூட்டமைப்பு மாற்ற…

  21. இரண்டும் கெட்டான் நிலை பி.மாணிக்­க­வா­சகம் மாற்­றங்­களினூடா­கவே பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும். நிலை­மை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அதனூடாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தே சிறந்த வழி­மு­றை­யாகும். எனவே, மாற்­றங்­க­ளின்றி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடி­யாது. மாற்­றங்­க­ளின்றி நல்­லி­ணக்கம் ஏற்­பட முடி­யாது. நல்­லு­றவும் இன ஐக்­கி­யமும் நிலை­யான சமா­தா­ன­மும்­கூட சாத்­தி­ய­மில்லை. இந்த வகை­யில்­தானோ என்­னவோ அர­சி­ய­ல­மைப்பை மாற்றியமைப்­பதினூடாக பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அணு­கு­மு­றையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. …

  22. பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர Posted on March 31, 2024 by தென்னவள் 124 0 தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென உருவான பதின்மூன்றாம் திருத்தத்தை வெட்டித் தள்ளும் வேலையில் ரணில் முனைப்பாக உள்ளார். வடக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டும் தமது எண்ணத்தை நிறைவேற்ற சஜித் ஆவலுடன் காத்திருக்கிறார். அனுர குமாரவின் மொழிக் கொள்கை என்ன என்பதற்கு கனடாக் கூட்டத்தில் கூறப்பட்ட ஷஎலியட்ட தாண்ட| பதில் போதும். இவைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஒரே தீர்வு தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவர் போட்டியிடுவதுதான் என்றால் தவறிருக்காது! இந்த வருடத்தில் நடைபெற்றேயாக வேண்டிய ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமா, இட…

  23. போர் மேகம் சூழ் உலகு Gopikrishna Kanagalingam / 2019 பெப்ரவரி 28 வியாழக்கிழமை, மு.ப. 02:32 இந்த உலகத்தைப் பல்வேறு வழிகளில் வர்ணிக்க முடியும். ஆனால், ‘போர் மேகம் சூழ் உலகு’ என்று சொல்வது, பொருத்தமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எங்கு பார்த்தாலும் பிரிவினைகளும் பதற்றங்களும் அதிகரித்திருக்கும் சூழல் தான் காணப்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைமை தான், இலங்கையின் புவியியலில் நெருக்கமான இரு நாடுகளுக்குமிடையிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும், புவியியல் ரீதியாக நெருக்கமானவை மாத்திரமன்றி, அரசியல் ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவை. இந்த நிலையில் தான், காஷ்மிரில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில், இந்தியாவும் பாகிஸ்…

  24. விடுதலைப் புலிகளுக்கு எதிரான வன்மம் - விடுதலைப் போராட்டத்திற்கு எதிராய் சூரியதீபன் “இனி ஈழவிடுதலை சாத்தியமா?” என்ற (ஆனந்த விகடன் 22-07-2009 ஷோபாசக்தி நேர்காணல்) கேள்விக்கு ‘இல்லை’ என வருகிறது ஷோபாசக்தியின் பதில். இறந்து போனவர்களுக்கு ‘குழிப்பால்’ விடுதல், இறுதிச் சடங்குகளில் ஒன்று. ‘நாளைக்குப் பால்’ ‘நாளைக்குப்பால்’ - என்று மயானத்தில் அறிவிப்பார் வெட்டியான். இருபதாயிரம் போராளிகளின் கல்லறையிலும் ஒரு லட்சம் மக்களின் புதைகுழிகளிலும், ‘இல்லை’ என்ற பதில் மூலம் குழிப்பால் விடுகிற வேலையை இந்த வெட்டியான் செய்கிறார். போராடுகிறவர்களுக்குத் தான் விடுதலை சாத்தியம். விடுதலையே மற்றவர்கள் உன்னிடம் நம்பிக்கை இழந்தாலும் என்றென்றைக்கும் நான் மட்டும் நம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.