Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. "இனவாதம்" என்ற வைரசை வைத்துக் கொண்டு... கொவிட்-19 வைரசுடன் நடக்கும் போராட்டம்?? பெருங் கடனுக்கும் பெருந்தொற்று நோய்க்குமிடையே தடுமாறுகிறது இலங்கை தீவு. யுத்தம் காரணமாக கடனாளியாக மாறிய இலங்கை தீவு 2009இற்குப் பின்னரும் அதன் கடன் சுமையிலிருந்து மீள முடியவில்லை. அதனால்தான், அது கடனை அடைக்க கடன்வாங்கும் ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் விளைவாகவே அது சீனாவிடம் நெருங்கிச் சென்றது. இப்போது சீனாவின் முதலீடுகளாகக் காணப்படும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் போன்ற பல விடயங்களை இந்தியா உட்பட ஏனைய நாடுகளுக்குத் தருவதற்கு சிறீலங்கா தயாராகக் காணப்பட்டது. ஆனால், அந்த முதலீடுகளைச் செய்வதற்கு இந்தியா போன்ற நாடுகள் தயாராக இல்லாத ஒரு பின்னணியில்தான் சீனா அங்கே முதலீடு செய்தது. எனவே,…

  2. ஜீ -7 நாடுகளின் மாநாட்டைச் சுற்றி நடக்கும் நகர்வுகள் – வேல் தர்மா 37 Views 2021 ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இங்கிலாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கோண்வோல் நகரில் ஜீ-7 எனப்படும் அமெரிக்கா, இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உச்சிமாநாடு நடக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பிலும் ஒரு பிரதிநிதி பங்கு கொள்கின்றார். கோவிட்-19 பெருந் தொற்று, அதற்கான தடுப்பூசி, சூழல் பாதுகாப்பு, திறந்த பொருளாதாரம், தொழில்நுட்ப மாற்றம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் ஆகியவை உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடம் வகிக்கின்றன. சென்ற ஆண்டு பெருந்தொற்று நோய் பரவலைத் தவிர்க்க மெய்நிகர் …

  3. திணறும் ஆளுங்கட்சி; திக்குத் தெரியாத எதிர்க்கட்சி என்.கே. அஷோக்பரன் எரிபொருள் விலை அதிகரிப்புத்தான் இந்த வாரத்தின் மிகப்பெரிய பரபரப்பு. இலங்கையின் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பற்றி அண்மையில் அறிவித்திருந்தார். விலை அதிகரப்பு எனும் போது, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் அதிகரிப்பு அல்ல. பெட்ரோல் விலை ஒரேயடியாக, 20 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, உதய கம்மன்பில தரப்பு சொல்லும் நியாயம் வினோதமானது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் எரிபொருள் விலையைவிட, இலங்கையில் எரிபொருள் விலை குறைவு என்பதாகும். இந்த அபத்தமான வாதம் ஒருபுறமிருக்க, மறுபுறத்தில், இந்த விலையேற்றத்துக்கான உண்மை…

  4. ரணிலின் மீள்வருகை இலங்கை அரசியலை மாற்றப் போகின்றதா? – அகிலன் 12 Views வேகமாகப் பரவும் கொரோனாவின் பீதியில் இலங்கை மூழ்கிக் கிடக்க, உள்நாட்டு அரசியலிலும் அதிரடியான சில நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது தான் ரணில் விக்கிரமசிங்கவின் மீள்வருகை. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொள்வார் என்ற செய்தி, கொழும்பு அரசியலைப் பரபரப்பாக்கியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ரணிலின் மீள் வருகையை தமக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புக்களை அரச தரப்பு பயன்படுத்த முற்பட்டுள்ளது. மறுபுறம் பிரதான எதிர்க் கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இதனால் பெரிதும் குழம்பிப் ப…

  5. கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா? Maatram Translation on June 13, 2021 AP Photo/Eranga Jayawardena via Yahoo News “வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல் தெரிகிறது; அல்லது உலக முடிவின் ஒரு கண நேர தோற்றப்பாடாக தென்படுகிறது. கழிவுகள் குவிந்து கிடக்கும் ஒரு கடற்கரை கால் தொடக்கம் தலை வரையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்து கொண்டவர்கள் சிறு பிளாஸ்ரிக் துகள்களை கோணிப் பைகளில அள்ளிப் போடுகின்றார்கள். சிசிபஸ் மீண்டும் மீண்டும் மலையை மேலே தள்ளிச் சென…

  6. கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்! நிலாந்தன்! June 13, 2021 கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.திரு நகரிலும் உதய நகரிலும் கொரோனாச் சந்தைகள் இயங்குவதாக.பிரதான சந்தைகள் மூடப்பட்ட காரணத்தால் தற்காலிக கள்ளச் சந்தைகளாக இவை இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.சிலசமயங்களில் உதயநகர் சந்தையில் படைத்தரப்பும் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள் வாங்குவதை தான் கண்டதாகவும் சொன்னார். இதைப்போலவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒர் ஊடகவியலாளர் சொன்னார் கொக்குவில் இந்து பள்ளிக்கூடத்தின் மைதான வீதியில் காலை வேளைகளில் ஒரு மீன் சந்தை இயங்குவதாகவும் அது மிகவும் நெரிசலான ஒரு சந்தை என்றும்.யாழ்ப்பாணம் பாசையூர் சந்தையும் இயங்குகிறது. இடையில் போலீசா…

  7. பயனற்றுப் போகும் அதிகார முயற்சிகள் இல. அதிரன் கொரோனா கோலோச்சும் இன்றைய கால கட்டம், வாழ்வா சாவா என்றுதான் இருந்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் பல முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருந்தாலும் கொரோனாவின் ஆதிக்கம் வலுத்தே வருகிறது. கொரோனாவை அரசாங்கம், அரசியலுக்காகவும் அதிகாரத்துக்காகவும் பயன்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தவண்ணம் காணப்படுகிறது. அதற்கு மாவட்டம், மாகாணம், தேசியம் போன்ற மட்ட வேறுபாடுகளும் இல்லை. இருந்தாலும், அதற்குள்ளும் அரசியல் செய்யத்தான் வேண்டும் என்ற நிலையில், பொருளாதார அரசியல், சமூக அரசியல், இன அரசியல் சார்ந்து நாடு நகர்கிறது. மட்டக்களப்பு மாவட்டமானது, கிழக்கின் முக்கிய அரசியல் அதிகாரங்கள், பலம்மிக்கதாக நகர்கின்…

  8. ‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார். அந்த மாணவி, நோர்வேயில் பிறந்து, வளர்ந்த இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் இளந்தலைமுறையினர், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை, எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஓர் அடிப்படையை, அந்த உரையும் அதைத்தொடர்ந்த கலந்துரையாடலில் அந்த மாணவி முன்வைத்த கருத்துகளும் தந்தன. குறித்த உரையைத் தொடர்…

  9. ராஜபக்‌ஷர்கள் மீதான அதிருப்தியும் எதிர்க்கட்சிகளும் புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, 18 மாதங்களுக்குள்ளேயே தென் இலங்கை மக்களிடம் பெரும் அதிருப்திகளைச் சந்தித்து நிற்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளையும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த வெற்றியையும் ராஜபக்‌ஷர்கள் பெற்றிருந்தார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில், அசைத்துப் பார்க்க முடியாத ஆட்சிக் கட்டமைப்பொன்றை, ராஜபக்‌ஷர்கள் நிலைப்படுத்துவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மனநிலை தென் இலங்கையில் எழுந்திருக்கின்றது. கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்து நெருக்கடிகள், மக்களைப் பாடாய்படுத்த…

  10. இலங்கை புலனாய்வுத் துறையின் அரசியற் பின்னணி மற்றும் நடவடிக்கைகள். June 11, 2021 சேனன் ஈழம் - இலங்கை, காணொளி, சேனன், தெரிவுகள் 132 . Views . 1 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது. பேராசிரியர் ரோகான் குணரத்ன இங்கிலாந்து நீதிமன்றத்துக்கு வழங்கிய சாட்சியின்போது இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இலங்கை அரசியலை அறிந்தவர்களுக்கு ரோகான் குணரத்ன நன்கு தெரிந்த பெயரே. பயங்கரவாதம் சார் நிபுணர் என்ற பெயரில் பயணி வருபவர். இலங்கைப் புலனாய்வுத் துறையுடன் ‘நெருங்கிய தொடர்பு’ உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் இல…

  11. சிங்கள இனவாதிகளின் நண்பன் - அவுஸ்த்திரேலியா சில தினங்களுக்கு முன்னர் வாட்ஸ் அப் ஊடாக எனக்குத் தெரிந்த தமிழ் ஆர்வலர் ஒருவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்திருந்தது. "இதனைப் பகிரவேண்டாம்" என்ற வேண்டுகோளுடன் அவர் ஒரு கடிதத்தினை சேர்த்து அனுப்பியிருந்தார். அதனால், எனது நண்பர் பற்றிய விபரங்களையும், அக்கடிதத்தினை இங்கே இணைப்பதனையும் தவிர்த்துவிட்டு, விபரங்களை மட்டும் விபரிக்கிறேன். இலங்கையில் இன்றைய இனவாத ஆட்சியில் தமிழர் பட்டுவரும் இன்னல்கள் குறித்தும், அண்மையில் நடந்துமுடிந்த மனிதவுரிமைகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்தும் அவுஸ்த்திரேலிய அரசாங்கம் இலங்கைக்குச் சார்பாக அல்லது நடுநிலை என்கிற பெயரில் எதுவுமே செய்யாது தவிர்த்துவருவது தொடர்பான தனது அதி…

  12. பழ.நெடுமாறன் ''பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!'' என்கிறார் பழ.நெடுமாறன். மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ''தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் 'தமிழகம்' என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன? அடுத்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளிலேயே ‘இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, ‘இந்திய ஒன்றியம்’ அல்லது ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதுதான் அரசிய…

  13. p2p போராட்டம் சர்வதேசத்தின் கதவுகளைப் பலமாகத் தட்டியுள்ளது – மட்டு.நகரான் 54 Views வடகிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மற்றும் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள வடுக்களின் வலிகளை வெளிக்காட்டுவதை தடுத்தல் என பல்வேறு வகையான மனித உரிமை நிலைக்கு எதிரான, ஜனநாயக வரம்புகள் மீறப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்கான போராட்டத்தினை இராஜதந்திரப் போராட்டமாக மாற்றியமைத்ததனர். இதனையடுத்து வடகிழக்கில் செயற்பட்ட பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். பலர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் நாட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போதைய காலத்தில…

  14. இலங்கையோடு ஜேர்மனி பேரம் பேசியதா? ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் சூழ்ச்சியா? —-பிரித்தானியா வெளியேறியதால் இலங்கை விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் கையாள ஆரம்பித்துள்ள ஜேர்மன் அரசு, தனியே இலங்கை அரசைப் பாதுகாப்பதற்கான அல்லது நியாயப்படுத்துவதற்கான தளபதியாக மாத்திரம் இயங்க முடியாது– -அ.நிக்ஸன்- இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கான ஜெனீவா மனித உரிமைச் சபையின் கருக்குழு நாடுகள் பட்டியலில் (Core Group on Sri Lanka) பிரதான அங்கம் வகிக்கும் ஜேர்மன் அரசு இலங்கைக்குச் சாதகமானதொரு போக்கையே பின்பற்றி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜேர்மனி அங்கம் வகிக்கின்றது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்ன…

  15. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாறிவரும் உலகமும், அதனை முறியடிக்கக் களமிறங்கும் சிறீலங்காவும் – சூ.யோ. பற்றிமாகரன் 48 Views புலம்பெயர் தமிழர், வடக்கு கிழக்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கும் தடை மனிதாய உதவிகள் கூட மறுக்கப்பட்ட, நலிவுற்ற மக்களாக ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவைத் தாயகமாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இறைமையுடனும், ஆட்புல ஒருமைப்பாட்டுடனும் கொண்டு விளங்கும் ஈழத் தமிழர்களின் அரசியல் எதார்த்தத்துக்கு ஆதரவு அளிக்கும் செயற்பாடுகள் படிப்படியாக உலகெங்கும் அதிகரித்து வருகிறன. இதற்கு உதாரணமாக அமெரிக்க காங்கிரசில் ஈழத் தமிழர்களின் வாழ்விடமாக வடக்கு கிழக்கை உறுதிப்படுத்தும் தீர்மானம் முன்வைக்கப்பட்டமை வி…

    • 1 reply
    • 732 views
  16. யாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம். திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன. ஒரு சமூகமாக நாம் வரலாற்றைப் பதிதலிலும் ஆவணப்படுத்தலிலும் முழுமையாகத் தோற்றிருக்கிறோம். நாம், சிலவற்றை வெளிப்படையாகவும் சுயவிமர்சன நோக்கிலும் பேசியாக வேண்டும். இப்போது, இதுபற்றிப் பேசுவதற்கான காலமா என்று கேட்காதீர்கள். இவ்வாறு கேட்டுக்கேட்டே, நான்கு தசாப்தங்களைக் கடந்துவிட்டோம். யாழ்ப்பா…

  17. சீனாவின் கடன் பொறியில் சிதைந்த ‘கொழும்பு’ புருஜோத்தமன் தங்கமயில் கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம், கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது. தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான, கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி, புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர், கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது, துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் ஊடாக, சீனாவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றது. நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு பற்றியெல்லாம், தென் இலங்கையில் கடந்த காலங்களில் பேசிக் கொண்டிருந்த தரப்புகள் எல்லாமும், துறைமுக நகர் விடயத்தில் கிட்டத்தட்ட பேச…

  18. அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ்த் தரப்பினர் சாதித்தது என்ன? கிழக்கில் பறிபோகும் நிலங்கள், வழிபாட்டு இடங்கள், தொல்பொருள் ஆராட்சி என்ற பெயரில் தொடரும் கையகப்படுத்தல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆதவன் வானொலியில் 30.05.21 ஞாயிறு இரவு லண்டன் நேரம் இரவு 7.00 மணிக்கு இலங்கை இந்திய நேரம் இரவு 11.30ற்கு ஒலிபரப்பாகிய நேருக்கு நேர் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் - பதில் அளிக்கிறார் https://soundcloud.com/user353945565/sets/nerukku-ner

    • 0 replies
    • 561 views
  19. மெய்யென்ன பொய்யென்ன?

    • 0 replies
    • 808 views
  20. வண் டே மாஸ்க்கும் சமூக விழிப்பும்! - நிலாந்தன். June 6, 2021 இந்தியாவில் வசிக்கும் ஓர் ஈழத்தமிழர் கூறினார் கொரோன வைரஸ் எனப்படுவது எங்களுடைய முதுகில் படிந்திருக்கும் அழுக்கை போன்றது. அது எங்களோடேயே இருக்கிறது என்று. நடப்பு நிலவரங்களை வைத்து பார்த்தால் அது சரி என்றே தோன்றுகிறது. சோதிக்கப்படாதவரை எல்லாருமே சுகதேகிகள்தான். சோதித்தால்தான் தெரியும் யாரெல்லாம் குணக்குறியற்ற நோய்க்காவிகள் என்று. கிளிநொச்சியில் அண்மையில் ஒரு பதினைந்து வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த பின்தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்படித்தான் இப்போது இயல்பாக இறக்கும் பலருக்கும் இறந்த பின்னர்தான் அவர்களுக்கு தொற்று இருப்பது தெரியவருகிறது. அப்படி எ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.