நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
புலி நீக்க அரசியல் பற்றிய உரையாடல்கள் தமிழ்த் தேசிய அரசியலும், அதன் விடுதலை முனைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை, கோட்பாடு மற்றும் ஆளுமை சார்ந்து வரையறுக்கப்பட்டு மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாகிவிட்டது. விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டக் களத்திலிருந்து அகற்றப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், அவர்களின் ஆளுமை தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலிருந்து நீக்கப்படவில்லை. அது, விமர்சனங்களை மீறிய விசுவாசமாகவும் பிணைப்பாகவும் நீடிக்கின்றது. தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து விடுதலைப் புலிகளின் ஆளுமை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தென்னிலங்கைக்கும், இந்தியாவுக்கும், தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்கும் இருக்கின்றன என்பது வெளிப்…
-
- 0 replies
- 302 views
-
-
முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட நிறைய நகைச்சுவை துணுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படையணிகள் குறித்த துணுக்குகளிருந்தன. பொதுமக்கள் குறித்தானவையும் இருந்தன. விடுதலைப்புலிகள் போல பாவனைகாட்டிக் கொண்டு திரியும் பொதுமக்கள் பற்றியவையும் இருக்கின்றன. இந்த வகையினர் குறித்தும் நகைச்சுவை துணுக்ககள் உருவாகியிருக்கின்றது என்பது எதனைக் குறிக்கின்றதென்றால், இந்த வகையானவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள் என்பதையே. ஊருக்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை தீர்க்க, கடன்காரணை வெருட்ட, கலர்ஸ்காட்ட என நிறைய இளைஞர்கள் இப்படித் திரிந்தார்கள். அதிகம் ஏன், சிலர் பெண்களை கவிழ்ப்பதற்கும் இப்படித் திரிந்தார்கள்…
-
- 6 replies
- 879 views
-
-
புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்" கலையரசன் "குழந்தைப் போராளிகள்" என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள் அந்த சொல்லை மிகவும் விருப்பத்துடன் உபயோகித்து வருகின்றனர். புலி ஆதரவாளர்களும் அதையே திருப்பிச் சொல்ல வைப்பதன் மூலம், அகராதியில் இடம்பெற வைக்க முயற்சிக்கின்றனர். உண்மையில், புலிகள் இருந்த காலத்தில், "Baby Brigade" என்ற சொல்லை, சில மேற்கத்திய ஊடகவியலாளர்கள் புலிகளை கிண்டலடிக்க பயன்படுத்தி வந்தனர். சிங்கள ஊடகவியலாளர்களும் அதை விரும்பி ஏற்றுக் கொள்ளவே, தமிழில் சிலர் குழந்தைப் போராளிகள் என்று மொழிபெயர்த்…
-
- 0 replies
- 848 views
-
-
புலிகளின் தலைமையின் கையெழுத்துடன் வெளியான புத்தகத்தால் ஆச்சரியம்??? மாமனிதர் குமார் பொன்னம்பலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியைத் தாங்கியதாக குமார் பொன்னம்பலத்தின் நினைவு மலர் வெளியிடப்பட்டுள்ளது. சிங்களக் காடையர்களால் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அமரர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்திலுள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. இங்கு அவரின் நினைவுகளைத் தாங்கிய நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலர், குமார் பொன்னம்பலத்தின் படுகொலைக்கு இரங்கல…
-
- 0 replies
- 584 views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரனின் கிராமத்திலிருந்து.......
-
- 0 replies
- 272 views
-
-
போலீஸ் மா அதிபர் தேவையில்லாமல் வாயை திறக்கப் போய், வாங்கிக் கட்டுகிறார். புலிகள் ஒழிக்கப்பட்டார்கள் என்று மகிந்தவில் இருந்து மைத்திரி ஈறாக, ரணில் வரை சொல்லியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் இதுவே சொல்லப் பட்டுக் கொண்டிருக்கிறது. உல்லாசப் பயணம் முதல், முதலீடுகள் வரை இந்த ஒரு விடயத்தில் தான் தங்கி உள்ளது. ஆங்கிலத்தில் travelling preacher என்று ஒரு பதம் உண்டு. போகிற வழியில், உபதேசம் என்று எதையாவது உளறி விட்டு போவதை அவ்வாறு சொல்லுவர். வித்தியா கொலை தொடர்பில் தேடப்படும், ஸ்ரீ கஜன் என்னும் போலீஸ் அதிகாரி பதவியில் இருந்து தான் நீக்கி விட்டதாக 'பெருமையுடன்' கூறிய அவரோ, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்கிறார். யாழ்ப்பாணத்தின் அதி உயர…
-
- 1 reply
- 673 views
-
-
புலிகளின் பின்னர் புதிய புலம் பெயர் கட்சிகள் : சபா நாவலன் தமிழ்மணம் பரிந்துரை : 0ஃ0 இலங்கையின் முன்நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலங்கைக்கான அமரிக்கத் தூதரும் மிகச் சிறந்த இராஜதந்திரியுமானஇ பற்றீசியா பட்டனிஸ் சந்தித்ததான தகவல்கள் இலங்கைப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. சரத் பொன்சேகா அமரிக்கா செல்கிறார். அவர் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கப்படப் போவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின்றன. ரொனால்ட் ரீகன்இ ரிச்சார்ட் நிக்சன்இ ஜோர்ஜ் புஷ் ஆகியோரின் சட்ட ஆலோசகரும் வெள்ளை மாளிகையின் முன்நாள் சட்ட ஆலோசகருமான பிரெட் பீல்டிங் பொன்சேகாவிற்குச் சட்ட ஆலோசனை வழங்க அமரிக்க அரசால் நியமிக்கப்படுகிறார். இந்திய அரச பாதுகாப்பு ஆலோசகரும்இ இலங்கை அரசு நிகழ்த்திய வன்னி…
-
- 0 replies
- 541 views
-
-
புலிகளின் போராட்டத்தை விடவும் பெரியதொரு போராட்டத்தை நடத்த யாரும் தயாரா? கரவெட்டி பிரதேச சபை பொது மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவுநிகழ்வில் சுமந்திரன் எம்.பி. ஆற்றிய உரை தியாக தீபம் திலீபனின் 31 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எமது இன விடுதலைப் பயணத்தில் பல விதமான தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் அதிக தியாகம் செய்தவர்களில் திலீபன் முக்கியமானவர். அகிம்சை வழியில் எமது கட்சி பல ஆண்டுகள் போராடியது. இடையில் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. அப் போராட்டத்தில் பலர் தமது உயிர்களை அர்ப்பணித்தனர். பலர் பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். ஆயுதப் போராட்டத்தி…
-
- 1 reply
- 663 views
-
-
புலிகளின் போராட்டம் போர் குற்றம் என ஐநா ஆவணங்களில் கையெழுத்திடும் எம்பிக்களை தமிழர்கள் மன்னிப்பார்களா? நமது ஆயுதப் போராட்டம் உலகிற்கு எங்களின் சிறந்த வெளிப்பாடு. சிங்கள இன ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புக்கு தமிழர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை அது காட்டியது. விடுதலைப் புலிகளின் போராட்டம் தமிழர்களுக்கு ஒரு துரும்பு. தமிழர்களுக்கு ஒரு சுதந்திர நாடு வேண்டும் என்பதை அது உலகிற்கு நினைவூட்டுகிறது. மேலும் எதிர்காலத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவால் நீதி கிடைக்காமல் போனால், விடுதலைப் புலிகள் எப்படி சிங்கள இனப்படுகொலையை கட்டுப்படுத்தினார்கள் என்பதை வருங்கால தமிழ் தலைமுறையினர் நினைவில் கொள்வார்கள். சிங்களச் சிறிலங்கா கொலை, …
-
- 1 reply
- 338 views
-
-
புலிகளின் முன்னாள் பேச்சாளர் – இந்நாள் ஜனாதிபதி சட்டத்தரணி இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி அருணாசலம் முத்துக்கிருஷ்ணன், ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த அருணாசலம் முத்துக்கிருஷ்ணன் 18.01.2019 (வெள்ளிக்கிழமை) அன்று பிரதம நீதியரசர் நளின் பெரேரா முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 1956 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கலைபீட பட்டதாரியான இவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் 1964 இல் சட்டமானிப் பட்டத்தினை பெற்றுக்கொண்டார். …
-
- 1 reply
- 722 views
-
-
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
எனக்கொரு சந்தேகம். புலிகள் முப்படை வச்சிருந்தாங்க. மிகப்பலமா இருந்தாங்க ஆனால் இந்த சுண்டங்காய் சிறீலங்கா சில நாடுகளோட சேர்ந்து புலியை அழிச்சுப்போட்டு. ஆனால் அல்கைடாவிட்ட அப்படி முப்படையில்ல . ஆனா இந்தப்பெரிய அமெரிக்கா மற்ற வல்லரசுகள் எல்லாம் சேர்ந்துஅவங்கள அழிக்லோமத்தானே இருக்கு. இது எப்பிடி?
-
- 17 replies
- 2k views
-
-
விடுதலைப் புலிகளை தான் எங்களின் அரசியல் சக்தியாகவும், தலைவர் பிரபாகரனைத் தான் தலைமைத்துவமாகவும் ஏற்றுக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அவ்வாறான நிலை மௌனிக்கப்பட்டுள்ளது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம்பெற்ற அக்கினிப் பரீட்சை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=98680&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 553 views
-
-
அமெரிக்காவுக்கு தாக்குதல் நடத்த தமிழீழ விடுதலைப் புலிகளால் அனுப்பப்பட்ட பெண் தற்கொலைப் போராளி என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்ட துஸியந்தினி கனகசபாபதிப்பிள்ளை உண்மையில் ஒரு ஊடகவியலாளர் ஆவார். இவர் பி.பி.சியின் ஊழியர். பி.பி.சியின் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான செய்தியாளராக இருந்த பிரான்சிஸ் ஹரிசனின் உதவியாளர். அமெரிக்க தூதரகம் தொடர் புலனாய்வு விசாரணைகளின் பின் இத்தகவல்களை கண்டு பிடித்துக் கொண்டது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த துஷியந்தினி கனகாபாபதிப்பிள்ளை புலிகளால் அனுப்பப்பட்டு இருக்கின்றார் என்று தூதரகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்த அன்ரன் மோசஸ் என்பவரை நேரில் சென்று தூதரக அதிகாரிகள் விசாரித்து இருக்கின்றனர். …
-
- 0 replies
- 899 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரை ஒருகட்டத்தில் தனியே இழுக்கத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எண்ணற்ற சவால்களையும் சோதனைகளையும் சந்தித்து வளர்ந்து வந்தது. மீளாது எனக் கருதிய சந்தர்ப்பங்களிலெல்லாம் மீண்டெழுந்ததோடல்லாமல் வளர்ச்சிப் பாதையில் ஒருபடி பாய்ந்துமிருந்தது. ஆனால் வீழாது எனக் கருதிய பொழுதில் அது களத்தில் வீழ்ந்தது. இராணுவ ரீதியில் மீண்டெழ முடியாத பேரழிவை அவ்வியக்கம் சந்தித்தது. தாயகத்திலே ஒரு கட்டமைப்பாகச் செயற்பட முடியாத நிலைக்கு அவ்வியக்கம் சென்றது. இருந்தும் அரசியல் வெளியில் புலிகள் அமைப்புக்கான வகிபாகம் முற்றாகத் துடைத்தழிக்கப்படாமல் இருந்தது உண்மையே. அந்தப் புள்ளியிலிருந்து மீண்டெழ நினைத்த இயக்கத்துக்கு தொடர்ந்தும் அடிமேல் அடி விழுந்துகொண்டிருக்கி…
-
- 1 reply
- 1.1k views
-
-
புலிகள் இல்லை என்றால் இலங்கையிலும் இந்தியாவிலும் அரசியலே கிடையாது ! ஆய்வு:த.எதிர்மனசங்கம். இலங்கையின் அரசியல் ஆரிய பௌத்த சிங்கள இன மேலாதிக்கச் சிந்தனை வயப்பட்ட தமிழ் இன எதிர்ப்பை, தமிழ் இனப் பரம்பலை அழிப்பதை 1850 முதல் அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. இவற்றின் வெளிப்பாடே 1905 முதல் சிங்கள அரசியல் வாதிகளான பாரோன் ஜயதிலகா, எப்.ஆர்.சேனநாயக்கா, டி.எஸ் சேனநாயகா,ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஆகியோரின் அரசியலாக இருந்துள்ளது. இவர்கள் எல்லாரும் எந்தச் சீமையில் என்ன படிப்பு படித்தாலும், என்ன சமைய நம்பிக்கை உள்ளவராயினும் தமிழனை அடிக்காமலும் புத்த சமையத்துக்கு மாறாமலும் ஆட்சிக் கட்டிலைப் பிடிக்க முடியாது என்ற நிலைக்கு இலங்கை அரசியலைக் கொண்டு வந்து விட்டனர். 1948ல் பல இலட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமே! ஏனெனில், இதுவரைகாலமும் இருந்ததைவிட இப்பொழுது இலங்கையில் கொலை வெறிபிடித்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெளிப்படையாகவும் பல இடங்க…
-
- 22 replies
- 5.5k views
-
-
http://www.dailyjaffna.com/2015/03/blog-post_2.html
-
- 10 replies
- 1.3k views
-
-
கமல்ஹாசன் முதல் ரஜினி வரை நூறு பிரபலங்கள் பங்களித்திருக்கும், `ஈழம்... மௌனத்தின் வலி' என்கிற கவிதை நூல் வெளிவந்திருக்கிறது. தமிழ் மையம் இயக்குனர் பாதிரியார் ஜெகத் கஸ்பருக்குச் சொந்தமான `நல்லேர் பதிப்பகம்' சார்பில், வெளி வந்திருக்கும் அந்தக் கவிதை நூல் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளால் வெறுக்கப்பட்ட ஜெகத் கஸ்பர், ஈழப் போராட்டத்தின் அழிவில் இந்தியாவின் பங்கை மூடி மறைக்க முயல்கிறார் என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கஸ்பரைச் சந்தித்துப் பேசினோம். தன் மீதான பல்வேறு விமர்சனங்களுக்கு நிதானமாகவும், சிலநேரங்களில் ஆவேசமாகவும் பதிலளித்தார். 2009 மே-17க்குப் பின், தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள்.…
-
- 7 replies
- 5.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் 1974ம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது சிறீலங்கா (முன்னாள் இலங்கை) எனும் தீவில் தமிழர்களின் இருப்பைக் கூட இந்த உலகம் சரியாக அறிந்திருக்கவில்லை. ஏன் உலகெங்கும் பரந்து வாழ்ந்த தமிழர்களுக்கே சிறீலங்காவில் அரசியல் உரிமையிழந்து, சொந்த நிலத்தில் அடிமைகளாக வாழ்ந்த தமிழர்கள் பற்றிச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. அதுமட்டுமன்றி 1974 இற்கு முன்னும் சரி அதன் பின்னரும் சரி ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி பயங்கரவாத அரசுகள் பல தடவைகள் இன வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தன. உலகுக்குத் தெரியத்தக்கதாக 1983 இல் ஒரு பெரிய இனக்கலவரமே நடந்து முடிந்திருந்தது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வீதியில் டயர் போட்டு எரிக்கப்பட்டனர். ஆனால் அந்த மனித உயிர்…
-
- 4 replies
- 995 views
-
-
புலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க, நீதிமன்றம் போகலாம்… October 7, 2018 1 Min Read அமைச்சர் மனோ கணேசன்.. விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி சிக்கலில் இருக்கிறார். ஆனால், நீதிமன்றத்துக்கு போய், புலிகளின் மீதான தடையை நீக்க சொல்லி எவரும் வழக்கு தொடரலாம். வாதங்களை முன் வைக்கலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. நீதிமன்றத்தில் போய், நீதியின் பாதுகாப்பில் இருந்தபடி, இன்று புலிகள் ஆயுத போரில் இல்லை எனவும், இலங்கையில் வாழும் சுமார் 12,000 முன்னாள் போரளிகளை முன்னிலைப்படுத்தி, அவர்கள் இன்று ஜேவீபியை போல் ஜனநாயக வழக்கு திரும்பி விட்டார்கள் எனவும் எவரும் வாதிட முடியும்.…
-
- 0 replies
- 651 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டால், இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கு அது ஓர் உந்துசக்தியாக மாறிவிடும் என்பது இந்திய அரசின் பயம். அதனால்தான் திட்டமிட்டு புலிகளின் போராட்டத்தை நசுக்கினார்கள்! இவ்வாறு தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வில் எழுப்பிய கேள்விகளுக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். மேலும் அவரிடம் விகடன் மேடையில் கேட்கப்பட்ட இலங்கை தொடர்பான கேள்விகளும் அவர் அளித்துள்ள பதில்களும் வருமாறு: கேள்வி: நம்மைவிட பிரபாகரனுக்கு அலெர்ட்னஸ் அதிகம்’ என்கிறார் எனது பொலிஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அத…
-
- 0 replies
- 348 views
-
-
இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது புலிக்காச்சல் புலிக்காச்சல் இதுவும் எலிக்காச்சல் பிளேக் கோழிகாச்சல் குனியா மாதிரி இதுவும் ஒரு காச்சல் தான் இதன் தோற்றம் இலங்கையில் புலிகள் ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலேயே இந்த காச்சலும் இலங்கையில் தேற்றம் பெற்று பின்னர் தமிழ்நாடு ஊடாக இந்தியா விரலும் பரவி இன்று அவுஸ்ரேலியா தொடக்கம் கனடாவரை பரவியிருக்கிறது.இது தானாகவும் தொற்றி கொள்ளும் மற்றது பரம்பரையாகவும் இது பரவும் ஆனால் மிக அபூர்வமாக இலட்சத்தில் ஒருவரே இந்த நோயால் பாதிக்கபடுகிறார்கள். சாதாரணமாக காச்சல் வருபவர்கள் எல்லோரும் வைத்தியரிடம்தான் போவார்கள் ஆனால் புலிகாச்சல் வந்தவர்கள் மட்டும் காவல்துறையினரிடம் போவார்கள். சரி இந்த காச்சலால் பாதிக்கபட்வர்கள் அல்லது…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 316 views
-
-
மத்திய - மாநில உறவுகள் இப்போது சீர்கேடடைந்திருப்பதைப்போல எப்போதும் அடையவில்லை. இந்தியா விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆனபிறகும் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறையவில்லை. வங்கக் கடலில் அமெரிக்க அணுசக்தி கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை நடத்தவிருக்கும் கூட்டுப் பயிற்சி தொடர்பாக தமிழக அரசுக்கு எதுவும் தெரிவிக்காமல் இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை கடலோர மக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா கண்டித்துள்ளார். அதுமட்டுமல்ல, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரோ அல்லது சென்னையில் உள்ள இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரிகளோ முதலமைச்சரைச் சந்தித்து இதுகுறித்து வி…
-
- 1 reply
- 914 views
-