நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
மும்பை கடற்படைத் தளத்தில் விபத்துக்குள்ளான ஐஎன்எஸ் சிந்துரக்சக் (INS Sindhurakshak) நீர்மூழ்கிக் கப்பல் 1997ம் ஆண்டு ரஷ்யாவில் கட்டப்பட்டதாகும். டீசல் என்ஜினால் இயங்கும், 283 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவின் மிகப் பிரபலமான போர் கப்பல்களை கட்டும் செவ்மாஸ்க் (Sevmask) தான் உருவாக்கியது . மணிக்கு 31 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கடியில் 300 மீட்டர் வரை மூழ்கும் திறன் கொண்டது. இந்த நீர்மூழ்கியில் 200 கி.மீ. வரை சென்று போர்க் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்ட கிளப் எஸ் (Klub-S) வகையிலான ஏவுகணைகளும், சாம் வகை ஏவுகணைகளும், நீரில் மூழ்கிச் செல்லும் டார்பிடோ ரக ஏவுகணைகளும் உண்டு இந்தியா உருவாக்கிய USHUS hydro-acoustic ரக சோனார் உதவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா வளாகத்தில் காண்பிக்கப்பட்ட சனல் 4 தயாரித்த 90 நிமிடங்கள் கொண்ட கொலைக்களங்கள் ஆவணப்படம் சுவிஸ் நாட்டில் மீண்டும் திரையிடப்படவுள்ளது. சூரிச்: சனி, 02.11.2013, மதியம் 2 மணிக்கு, Kino Riffraff, பிரவேசம் இலவசம் லவுசான்: திங்கள், 04.11.2013, இரவு 6 மணிக்கு, Kino Casino de Montbenon, பிரவேசம் இலவசம் லுசேர்ன்: சனி, 07.12.2013, இரவு 6 மணிக்கு, Stattkino Luzern இருக்கைகளை info@amnesty.ch என்ற மின்னஞ்சலில் பதிவு செய்துகொள்ளலாம். பி.கு. இந்த ஆவணப்படம் பேர்ண் மாநிலத்தில் ஏற்கனவே திரையிடப்பட்டது. அதில் Cullum Mcrae கலந்து சிறப்பித்திருந்தார்.
-
- 0 replies
- 454 views
-
-
இந்தியாவின் இராணுவ உதவியும், ஆயுத உதவியும், லட்சக்கணக்கான மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கி யது. வீட்டை இழந்து, வயல்வெளிகளில், வெட்டவெளியில், உணவு இன்றி, உறக்கமின்றி தவித்த ஈழ மக்களின் கண்ணீர் சாபத்திற்கும்... கேட்பதற்கு நாதியில்லாமல் அன்றாடம் கொல்லப்பட்ட பல்லா யிரக்கணக்கான ஈழ மக்களின் கண்ணீர் சாபத்திற்கும்... ஒவ்வொரு நாளும் வீசப்பட்ட அபாயகரமான குண்டு வீச்சில் கால்களை இழந்து, கைகளை இழந்து, உடல் முழுவதும் ரத்த காயங் களால் ஊனமுற்று, மருத்துவ வசதி இல்லாமல் துடிதுடித்த பல்லா யிரக்கணக்கான ஈழத் தமிழ் உறவுகளின் கண்ணீர் சாபத்திற்கும்... எப்படியாவது ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்று பல ஆண்டு காலமாக அறவழியில் போராடி அவமதிக்கப்பட்ட பத்து கோடி தமிழர்களின் கண்ணீர் ச…
-
- 0 replies
- 1k views
-
-
சென்னை: 67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டிருப்பதால், இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோசியக்காரர்கள் ஆளாளுக்கு ஆரூடம் கூறிக் கிளம்பியுள்ளனராம்.புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டிக் கொண்டு கலகலப்பாக கிளம்பி விடுவது வழக்கம்தான்.அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகளை எடுத்து மூளையில் திணிக்கும் வேலைகள் மும்முரமாகியுள்ளன. 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு. 1947ம் ஆண்டைப் போலவே, 2014ம் ஆண…
-
- 8 replies
- 1.3k views
-
-
84887e2c37facd94b682c29be8a50203
-
- 0 replies
- 397 views
-
-
டொலர் வரக்கூடிய ஒரு வழி ச.சேகர் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல இன்னல்களுக்கும் முகங்கொடுத்த வண்ணமுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில், அவற்றைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. நாட்டினுள் அந்நியச…
-
- 56 replies
- 4.2k views
-
-
இன அழித்தலை பயங்கரவாத போர்வையால் மறைக்க முடியாது -ஆக்கம்: கா. அய்யநாதன் இலங்கை அரசுக்கு எதிராக குற்ற விரல் நீட்டும் நாடுகள், ஒரு நீண்ட யுத்தத்திற்குப் பிறகு பயங்கரவாதத்தை முறியடித்தது தொடர்பான உண்மையையும், தாங்கள் தோற்கடித்த பயங்கரவாதிகளின் இயற்கையை அறியாதவர்கள் என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மிகுந்த மன வருத்தத்துடன் பேசியுள்ளார். கொழும்புவில் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த தெற்காசிய மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ள ராஜபக்ச, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையையும், பயங்கரவாதத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட துயரத்தையும் அறிந்தவர்களா? இந்த உண்மைகளைப் பற்றி எந்த வகையிலாவது இந்…
-
- 1 reply
- 793 views
-
-
மர்மங்கள் சூழ்ந்த மட்டக்கிளப்பு ஷரியா கேம்பஸ் பொலன்னறுவைக்கும், மட்டக்கிளப்புக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது புனாணை கிராமம். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த பகுதியில் இரண்டு தளங்களுடன் அமைந்து வருகிறது ஷரியா பல்கலைக்கழகம். இது கிழக்கு, சர்சைக்குரிய அரசியல்வாதி ஹிஸ்புல்லாவின் கனவு முயற்சி. உயர்கல்வி அமைச்சு அனுமதி இன்றி நாம் எவ்வாறு ஷரியா சட்டம் கற்க்கை நெறிகளை பாடத்திட்டத்தில் சேர்க்கமுடியும் என்கிறார் ஹிஸ்புல்லா. ஆனாலும், அவ்வாறான அனுமதி கொடுக்கப்படவில்லை என்று சொல்கிறது உயர்கல்வி அமைச்சு. ஆயினும் அந்த அமைச்சுக்கு அனுப்பப் பட்ட விண்ணப்ப படிவத்தில் ஷரியா மற்றும் இஸ்லாமிய சட்டம் உள்ளடக்கிய 5 வகை கற்க்கை நெறிகளை கொண்டுள்ளதாக தெரிகிறது…
-
- 19 replies
- 2.1k views
-
-
சிங்களத்தின் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயங்களில் சூறையாடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல தடவைகள் இப் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். தொடர்ந்து ஆலயங்கள் மீதான சூறையாடல்கள் எதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அன்றில் தீர்வு ஏதேனும் எட்டப்பட்டதோ என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இன்றும் ஆலயங்கள் மீதான சூறையாடல்கள் மேலும் மேலும் உச்சம் பெறுகின்றமையையே காணமுடிகின்றது. இவை சிங்கள இனவாத பெரும்பான்மையினால் நன்கு திட்டமிட்டு நடாத்தப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதமுடிகின்றது. தமிழர் தாயகப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பலமாகவிருந்த காலத்தில் சிங்களம், தமிழ் மக்களின் பூர்வீகங்களில் கைவைப்பதற்கு அச்சமடைந்திருந்தனர். ஆனால், இன்று தமிழ்பேசும் முஸ்லிம் மக்களின் பூர்வீகத்திலு…
-
- 0 replies
- 619 views
-
-
பிரபாகரன் இறந்து விட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை ‘பொய்’களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன், ‘மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்’ என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகமாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்! பிரபாகரன் பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ.நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன். வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடுமையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி… தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப்…
-
- 0 replies
- 766 views
-
-
மனிதரில் இருந்து விலங்குகள் வரை, இலங்கையில் பெண்பால் இனங்களுக்கு பாதுகாப்பு இல்லை. சேயா, விந்தியா என நீளும் பட்டியலுடன் கம்பகா மாவட்டத்தில் ஓய்வு பெற்ற கடற்படை உத்தியோகத்தரின் பசுக் கன்றும் சேர்ந்து விட்டது. பேச முடியாத விலங்கு என்பதால் கொலையுறாமல் தப்பியிருக்கலாம். இரவு, பசுக்கன்று எழுப்பிய அவலக்குரவால் எழுந்து ரோச் லைட்டுடன் சென்ற போது, நிரவாணமாக பசுக் கன்றின் பக்கத்தில் நின்ற கொண்டையா என்பவரைக் கண்டார். இவரைக் கண்டதும் சாரம், உளளாடை, ரிசேட்டை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார் அவர். கொண்டையாவை பொலீஸ் தேடுகிறது. மாட்டும் வரை, உங்கள் பெண் / நாகு கன்றுகள் கவனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மறை கழன்றவர்களின் தேசமாகிறதோ?
-
- 9 replies
- 855 views
- 1 follower
-
-
‘தமிழீழம்’ இது தமிழ் மக்களின் உயிர் மூச்சு. உலகம் பூராகவும் பரந்து வாழ்கின்ற தமிழர்களின் தாயகம். சிங்களத் தீவில் தமிழ் மக்களை அடக்கி ஆள்வோரிடமிருந்து விடுதலை பெறத் துடித்த தமிழ் மக்கள் ஒன்று திரண்டு அமைத்துக்கொண்ட தனித் தமிழ்ப் பூமி. தமிழர்களின் தலைமகன் பிரபாகரனால் கட்டமைக்கப்பட்ட அழகிய பூங்கா. எந்தவித ஆசாபாசங்களும் இல்லாமல் போராடிய பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகத்தால் கட்டி யெழுப்பப்பட்ட தேசிய நாடு. விலை மதிக்க முடியாத தியாகங்களைப் புரிந்த புனிதர்கள் உறங்குகின்ற புண்ணிய பூமி. தமிழ் மக்களால் நேசிக்கப்படுகின்ற தனித் தமிழ் நாடு. மூன்று தசாப்த காலமாக தியாகங்களைப் புரிந்து கட்டியெழுப்பப்பட்ட இந்தப் புண்ணிய தேசத்தை உலகின் பல நாடுகளுடன் இணைந்து சிதைத்த சிறீலங்கா அர…
-
- 0 replies
- 847 views
-
-
அறிவியல் சாதனையினால் வெல்ல முடியாத சவால்! இதுவரை காலமும் உலகமயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த உலகம், இப்போதுதான் அதன் மறுபக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் உள்ள நாட்டில் தடிமன் ஏற்பட்டால், உலகமே தும்மத் தொடங்கும் அவலத்தை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் உருவான நோய்த் தொற்று இப்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பை எதிர்கொள்வதற்காகத் தனது வட்டி வீதத்தை அமெரிக்காவின் பெடரல் வங்கி குறைத்திருக்கிறது. ஏற்கனவே 0.5% வட்டி வீதக் குறைப்பை அவுஸ்திரேலியா அறிவித்து விட்டது. ஜி-7 என்று அழைக்க…
-
- 1 reply
- 949 views
-
-
இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள் உடல்கள் எரிப்பு: இனப்பாகுபாடு காட்டுகிறதா அரசு? சரேஜ் பத்திரானா பிபிசி சிங்கள சேவை Nikita Deshpande இஸ்லாமிய முறைப்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும். உடலுக்கு எரியூட்டுவது இஸ்லாமியர்களின் வழக்கத்தில் இல்லை. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி அதிகாரிகள் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்து தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனர் என இலங்கை முஸ்லிம்கள் கூறுகின்றனர். மே 4ம் தேதி, மூன்று குழந்தைகளுக்கு தாயான, 44 வயது ஃபாத்திமா ரினோசா, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்துடன் மருத்துவமனையில் அனுமதிக…
-
- 0 replies
- 436 views
-
-
http://epaper.thinakkural.com/TK/TK/2009/0...009_005_001.jpg
-
- 0 replies
- 3.2k views
-
-
இராணுவப் பிரசன்னத்தை குறைக்கவேண்டியதன் அவசியம் வடமாகாணத்தில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருவதாகவும் இதனால் இராணுவத்தினரை அங்கிருந்து குறைக்கவேண்டியதன் அவசியம் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இராணுவப் பிரசன்னம் தொடர்பில் தொடர்ச்சியாக விசனம் தெரிவித்து வருகின்றார். இந்த நிலையில் வடக்கில் இராணுவப் பிரசன்னமானது வடபகுதி மக்களை எந்தளவிற்கு பாதிப்படையச் செய்துள்ளது என்பது தொடர்பில் இலங்கை வந்திருந்த ஐ.நா.வின் சிறுபான்மை மக்கள் தொடர்பான விசேட அ…
-
- 0 replies
- 290 views
-
-
தமிழ்த்தேசியப் பேரவையும், கலைக்கப்படவேண்டிய ஈழப்போராட்ட இயக்கங்களும்..!! March 1, 20211 min read — இரா.வி.ராஜ் — தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறுவதற்காக ஜனநாயக ரீதியிலான போராட்டத்தினை அல்லது பிரச்சினைகளைத் தீர்பதற்கான வழிவகைகளை உருவாக்குவதற்காக கூட்டாக இணைந்து தமிழ்த் தேசியப் பேரவை அல்லது வேறு பெயருடனோ இனப்பிரச்சினையினைக் கையாள நினைப்பவர்கள் பல விடயங்களில் தன் நலம் சாரா விட்டுக்கொடுப்புகளுக்குத் தயாரான பின்னரே தம்மை தமிழர்களின் பிரதிநிதிகளாக பிரகடனப்படுத்தவேண்டியது கட்டாயமானது . இனப்பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் எமக்கு நடந்த அநீதிகளுக்கான நீதியினையும், அதற்கான தண்டனையினையும், நஷ்டஈட்டினையும் பெற போராடும் ஒரு மக்கள் அமைப்பாக அல்ல…
-
- 0 replies
- 555 views
-
-
'நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால், கிடைக்கு இரண்டு வெள்ளாடுகளை கேட்கத்தானே செய்யும்!' 'சிங்கள மகா ஜனதாவ' இதன் கருத்தியலை உணரும் காலம் பிறந்துவிட்டமைக்கான அறிகுறிகள் தெரிகின்றன. http://tamilworldtoday.com/?p=17590
-
- 1 reply
- 520 views
-
-
அன்று முதல் இன்று வரையுள்ள டக்ளஸ் பற்றிய ஒரு பதிவு........ இந்தியாவில் வசித்துவந்தபோது, ஓடிய சவாரிக்குப் பணம் கேட்டதற்காக ஆட்டோ சாரதியைச் சுட்டுக் காயப்படுத்திய ஒரு மாமனிதன் தான் இந்த டக்ளஸ் தேவானந்தா. ஆரம்பத்தில், மக்களைப் பயமுறுத்திப் பணம்சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவே, குறிக்கோள் ஏதுமற்ற இயக்கமான EPRLF இல் இணைந்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வந்தவர் இவர். பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும்போது கிறுக்குப் பிடித்தவர் போல் சிறைச்சுவர்களில் EPDP எனக் கிறுக்குவாராம். அதாவது; ஏதாவது ஒரு இயக்கத்தைத் தானும் ஆரம்பித்து; பொதுமக்களையும் புத்திஜீவிகளையும் பயமுறுத்தி, அதன்மூலம் தானும் ஒரு சமுதாய அந்தஸ்தைப் பெற்றுவிட இவர் ஆரம்பித்த ஒரு தறுதலை இயக்கம்தான் முகச்சவரம் செய்…
-
- 2 replies
- 931 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் - யாழ்.மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வன்னிப் பகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் - சிறீலங்கா அரசும் அதனோடு இணைந்துள்ள கைக்கூலிகளும் தமது கையாலாகாத் தனங்களை மேலும் முனைப்போடு அரங்கேற்றி வருகின்றதாக தாயகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கொல்லங்கலட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்களை இராணுவம் தடிகள், பொல்லுகளால் கண்மூடித்தனமாக அடித்து விரட்டியுள்ள கொடுமை சிறிலங்கா இனவாதத்தின் கோரமுகத்தை மீண்டும் பறைசாற்றியுள்…
-
- 0 replies
- 600 views
-
-
ஆழமான கடன்பொறி பற்றி அச்சத்தை வெளிப்படுத்தும் வாங் யின் விஜயம்! சீன வெளிவிவகார அமைச்சரின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான விஜயங்கள் ஆழமான கடன் பொறி பற்றிய அச்சத்தை உருவாக்குகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையின் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு மத்தியில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்தார். ஆனால் தேசியவாத இலங்கையர்களும் மாலைத்தீவர்களும் தங்கள் இறையாண்மையின் மீது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் கடன்பொறி இராஜதந்திரத்தினுள் சிக்கியிருப்பதையும் உணர்ந்துள்ளதாகவும் ஐரோப்பிய அடிப்படையிலான சிந்தனைக் குழு கூறியுள்ளது. நாட்டின் மோசமான ப…
-
- 0 replies
- 225 views
-
-
முல்லைத்தீவு "வலைஞர்மடம்" அருகே கூகிளாண்டவர் மூலம் உலவும்போது கண்ட செயற்கைக்கோள் படமிது.... பல்வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட இப்பகுதியின் படத்தில் வித்தாகிப் போனவர்களின் வரி வரியாய் தோன்றும் புதைகுழிகள்...மனதை பிசைந்தது... வட்டதிற்குள்ளான பகுதி கண்டது... இப்பகுதி 2005ல்.. இப்பகுதி 16-03-2009ல்.. இப்பகுதி 24-05-2009ல்.. இப்பகுதி 15-06-2009ல்.. Source: Google Earth. .
-
- 6 replies
- 1.8k views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images கடந்த 21ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட தினமான அன்று, இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை மையமாக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த முறையான விசாரணையை துவங்குவ…
-
- 0 replies
- 557 views
-
-
புத்த பிக்குவிடம், நூல் கட்டும் இஸ்லாமிய பெண்.
-
- 3 replies
- 1.1k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதுள்ளது தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம். அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது. இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின்…
-
-
- 2 replies
- 306 views
-