நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் அடைவதற்காக மௌலானா பொய்யான கதையை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று ஐரோப்பிய நாட்டில் புகலிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது எவ்வாறாயினும், சந்திப்பு நடந்ததாகக் கூறப்படும்காலப்பகுதியில் தான் இலங்கையில் இருக்கவில்லை என்பதை சுரேஷ் சா லே மறுத்துள்ளார் என்பதைசொல்வது நியாயமான முறையில் அவசியமாகும் . குண்டுவெடிப்புக்குப் பிறகு சிறையில் இருந்த பிள்ளையானைச் சந்தித்தபோது ரிஎம் வி பி . தலைவர், இதைப் பற்றி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது டி. பி . எஸ் . ஜெயரா ஜ் ஹன்சீர் அ சாத் மௌலானா சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கிய விசி…
-
- 0 replies
- 248 views
-
-
அசாத் மௌலானா! சாட்சியா சந்தேக நபரா? September 15, 2023 (மௌன உடைவுகள் – 44) — அழகு குணசீலன் — தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத்மௌலானா சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்ற குசுகுசுப்பு செய்தியை சனல் 4 உத்தியோகபூர்வமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சனல் 4 ஆவணப்படத்தில் குண்டுத்தாக்குதலில் தனது தொடர்பு எந்தளவுக்கு இருந்தது, யாரெல்லாம் தாக்குதலின் பின் புலத்தில் இருந்தார்கள் , தான் யாரால் நெறிப்படுத்தப்பட்டேன், தனக்கு தெரிந்தவை எல்லாம் எவை என்ற தகவல்களை அடுக்கியிருக்கிறார் அசாத். ஆக, மொத்தத்தில், “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில…
-
- 0 replies
- 208 views
-
-
https://www.youtube.com/watch?v=Hs9g0-s4bPg#t=89
-
- 0 replies
- 817 views
-
-
பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை மீட்டு விட்டதாக அரசாங்கம் அடிக்கடி மக்களுக்கு நினைவூட்டி வருகிறது. ஆனால், இப்போது யாழ்ப்பாணத்தில் நடந்தேறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது அது உண்மை தானா என்று கேள்வியை எழுப்ப வைக்கிறது. பயங்கரவாதம் என்கிற போது அரசாங்கம் வெறுமனே புலிகளைத் தான் சுட்டிக் காட்டியது. ஆனால் சட்டத்துக்குப் புறம்பாக, பொதுமக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கின்ற அவர்களை பீதியில் உறைய வைக்கின்ற செயல்கள் அனைத்தும் பயங்கரவாதமாகவே கருதப்பட வேண்டும். அந்தவகையில் பார்க்கின்ற போது யாழ்ப்பாணம் இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபடவில்லை என்று தான் கூற வேண்டும். கடந்த டிசெம்பர் மாதத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் நான்கு படுகொலைகள் இடம்பெற்றன. …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர். இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வெனிசுலா ஏதோ வறண்ட, பட்டினிப் பிணி பிடித்த தேசம் கூட அல்ல. உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 18% வெனிசுலாவில் உள்ளது. ஆனாலும் ஏன் அந்நாட்டு மக்கள் தங்கள் …
-
- 1 reply
- 117 views
-
-
அச்சமூட்டும் கட்டுக் கதைகள் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:10 மிகத் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, பேரினவாதத்தின் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பித்து விட்டது. ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எல்லாம், அத்தனை இலகுவில் மறந்துவிட முடியாது. அதன் தொடர்ச்சிகளே, இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் செயற்பாடுகளில், சிங்களப் பேரினவாதிகள் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் முஸ்லிம்களின் உணவு, உடை போன்ற விவகாரங்களில் மூக்கை நுழைக்கத் தொடங்கியவர்கள்…
-
- 0 replies
- 620 views
-
-
அச்சுறுத்தலுக்குள்ளான இலங்கையின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப துணையாக அமைந்த ஜேர்மன் கப்பலின் வருகை இலங்கையின் சுற்றுலாத்துறையை மீள்புதுப்பிக்கும் வகையில் எம்.எஸ். யுரோப்பா - 2 என்ற ஆடம்பரக் கப்பலின் வருகை அமைந்திருந்த்து. சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் உலகின் மிகவும் விசாலமான ஆடம்பர கப்பலான எம்.எஸ். யுரோப்பா -2 கடந்த புதன்கிழமை (05.06.2019) இலங்கைக்கு வருகை தந்திருந்தது. கடந்த புதன்கிழமை இலங்கைக்கு வருகைதந்த எம்.எஸ். யுரோப்பா - 2 கப்பலில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த சுமார் 900 பயணிகள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில் , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தரித்து நின்ற நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள முக்கிய இடங்களை …
-
- 4 replies
- 635 views
-
-
வவுணதீவில் கொல்லபட்ட பொலிசாருக்கு அஞ்சலி. TRIBUTE TO THE POLICE OFFICERS KILLED AT VAVUNATHIVU BATTICALOA Two Sri Lankan police constables Dinesh Algarathnam, a 28-year-old resident of the Kalmunai area and Niroshan Indika a 35-year-old resident of Udugama Galle officers were found shot dead at Vavunathivu in Batticaloa at a road checkpoint on 30th November. I am vehemently condemn this acct of his is an act of terrorism. . வவுணதீவில் கடமையின்போது கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தினேஸ் அழகத்தினம் மற்றும் நிரோசன் இந்திக்கா இருவருக்கும் எனது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறேன்.. வவுணதீவு பொலிசார் மாட்டுக் களவுக்கு எதிராக போராடி வந்தார்கள் என்பதையும் நினைவு கூருகி…
-
- 0 replies
- 608 views
-
-
அஞ்சலிக் குறிப்பு – ருஷ்யப் பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி ; மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் ! முருகபூபதி கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனோ என்ற பெயரிலும் கொவிட் 19 என்ற புனைபெயருடனும் வந்ததே வந்தது, உலகெங்கும் தனது கோரத்தாண்டவத்தை அலுப்பு சலிப்பின்றி ஆடிக்கொண்டிருக்கிறது. அது பலியெடுத்த அறிவுஜீவிகளின் வரிசையில் நேற்று நவம்பர் 18 ஆம் திகதி மற்றும் ஒருவரும் விடைபெற்றுவிட்டார். நேற்று முன்தினம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில், மற்றும் ஒரு சோவியத் அறிஞரை நேற்று நவம்பர் 18 ஆம் …
-
- 0 replies
- 250 views
-
-
அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள் : April 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள் குடியோறி இரண்டு வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பாராமுகமாக செயற்படுவதாகவும் ; விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் மக்கள் யுத்த காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக மலங்காடு எனும் பகுதியில் கட்டாயத்தின பெயரில் குடியமர்த்தப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்தின்…
-
- 0 replies
- 572 views
-
-
அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது Photo, AFP/ The Hindu உயர்ந்த விலைகளில் பொருட்களை வாங்கக்கூடியவர்கள் பெருமளவுக்கு அவதானிக்காவிட்டாலும், இலங்கையின் பொருளாதார நிலைவரம் பல முனைகளிலும் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களாக பெற்றோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் நிலையாக இடம்பெற்றுவருகிறது. நீண்ட வரிசைகளை இப்போது காணவில்லை. ஆட்டோ டீசலுக்கான பங்கீட்டு முறை அதற்கான கிராக்கியை பயனுடைய விதத்தில் கட்டுப்படுத்தி டொலர்களை சேமிக்க உதவுகிறது. சமையல் எரிவாயு தாராளமாக கிடைக்கிறது. இந்த அத்தியாவசிய பொருட்கள் சகலதினதும் விலைகள் மூன்று மடங்கு அதிகரித்து பணவீக்கத்தை உயர்த்தியிருக்கிறது. …
-
- 0 replies
- 171 views
-
-
அடிப்படைவாத பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் ‘நாம் பிரஜைகள்’ என். சரவணன் படம் | Dushiyanthini “நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து காணாமல்போனவர்களின் பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட கூட்டம் கோட்டபாயவின் காவி சீருடை பயங்கரவாதிகளால் குழப்பியடிக்கப்பட்ட செய்தி அறிந்ததே. தொடர்ச்சியாக சமீப காலமாக சிறுபான்மை மதங்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் எதிராக பேரினவாத அரச தலைமையால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சீருடை பயங்கரவாதிகள் பல்வேறு…
-
- 1 reply
- 529 views
-
-
பல றூற்றாண்டு காலமாக இரத்தம் சிந்தப்படுவதற்குக் காரணமாய் இருந்த மதப்போர்கள் அனைத்தும் நாங்கள் – அவர்கள்,நல்லது – கெட்டது,கறுப்பு – வெள்ளை என்கின்ற மாதிரியான அழுத்தமான உணர்வுகளினாலும் அர்த்தமற்ற எதிர்நிலைகளாலுமே ஏற்பட்டன. மேற்கத்திய கலாச்சாரமானது வளமானது எனக் காட்டப்படுகிறதென்றும் அதற்குக் காரணம், அது அறிவொளிக்காலத்துக்கும் முன்னரே தீமைதரத்தக்க எளிமைப்படுத்தல்களையெல்லாம் விசாரணை மூலமாகவும் விமர்சன மனப்பாங்காலும் கரைந்துவிட முயன்றமையாகும். நிச்சயமாக எல்லாக் காலத்திலும் அது இவ்வாறு செய்ததில்லை.புத்தகங்களை எல்லாம் எரித்த ஹிட்லர்’சீரழிந்த கலையைக்’ கண்டித்ததோடு கீழான இனத்தவர்களையும் கொன்றொழித்தார். நான் பாடசாலையில் படித்த காலங்களில் ‘ஆங்கிலேயர்களைக் கடவுள் சபிப்பாராக, ஏனெனில் அ…
-
- 0 replies
- 477 views
-
-
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து அவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தி அவர்களை ஒடுக்கும் ஒரு வழமையான ஸ்ரீலங்கா ஆட்சியே என தன்னை அம்பலப்படுத்தியுள்ளது மைத்திரிபால சிறிசேன - ரணில் ஆட்சி. இன அழிப்பின் நுண்மையான பின்னணிகளை கொண்டது திடீர் மரணங்கள், இனம் தெரியாத நோய் என்ற பெயரில் ஈழத்தமிழர்களின் சாவுகள் மறைக்கப்பட்டுகின்றன. 2009 இன அழிப்பிற்கு பிறகு குறிப்பாக வன்னி பெருநிலப் பரப்பை சேர்ந்த மக்கள் போராளிகள் நுற்றுக்கணக்கானவர்களின் மரணங்கள் பெரும் சந்தேகத்திற்குரிய முறையில் இவ்வாறு நிகழ்ந்துள்ளன. சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய். அத்துடன் இதயநோய் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள். அதை விட முக்கியமானது எமது மக்கள் சந்த…
-
- 0 replies
- 254 views
-
-
அடுத்த 25ஆண்டுகளில் வலுவான பொருளாதாரத்தினை உருவாக்குவேன்- ஜனாதிபதி ரணில் 11 Dec, 2022 | 02:14 PM இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தினை மாற்றவுள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்கவுடன் இளைஞர்கள் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ZOOM தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்கள் முன்வைத்த கேள்விகளும் அதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பதில்களும் வருமாறு : …
-
- 7 replies
- 863 views
-
-
அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா தன் நிலையை இந்த மூன்று தேசங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும்: அமெரிக்கா, சீனா, ஜப்பான். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, இந்த மூன்று தேசங்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) நான்காவதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மூவரில் யாரோடு இந்தியா நெருக்கமான உறவு கொள்ளமுடியும்? அதன்மூலம் பயன் பெறமுடியும்? அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில், இந்த நான்கு தேசங்களுள் இந்தியாவில்தான் ஏழைமை அதிகமாக இருக்கும். படிப்பறிவற்ற நிலை அதிகமாக இருக்கும். உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். ஊழல் அதிகமாக இருக்கும். ஆனால் முன்னேற்றத்துக்கும் புதுமைக்கும் வாய்ப்புகளும…
-
- 8 replies
- 1.3k views
-
-
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும்? கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்பார்கள். ஆனால் அந்த தங்கத்தமிழ் அடுத்த நூற்றாண்டில் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. மொரிஷியஸ் நாட்டில் வாழ்பவர்களில் பலர் தமிழர், தமிழ்ப் பெயர்களில்தான் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. அந்த நிலை தமிழ் நாட்டுக்கும் வந்து விடும் என்கிறார், தமிழ் இணையப் பல்கலைக் கழக இயக்குனர் மு. பொன்னவைக்கோ. தற்போது உலகம் முழுவதும் 6000 மொழிகள் உள்ளன. ஆனால் வருகிற 22-ம் நூற்றாண்டில் அதாவது அடுத்த நூற்றாண்டில் 80 சதவீத மொழிகள் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவலை யுனஸ்கோ அறிவித்துள்ளது. மற்றொரு ஆ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அடுத்த மின் செயலிழப்புக்கு வழிகோலப்படுகிறதா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்த ஆண்டில் மாத்திரம், இரண்டு தடவைகள் மின் செயலிழப்பு ஏற்பட்டு, முழு நாடுமே இருளில் மூழ்கியிருந்தது. இந்த நிலைமையால், நாடு முழுவதுமே - குறிப்பாக கொழும்பு போன்ற நகரப்பகுதிகள் - ஸ்தம்பிக்குமளவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்த இரண்டு மின் செயலிழப்புகளுமே, அரசாங்கத்தினுடையதோ அல்லது மின்சார சபையினுடையதோ நேரடியான தவறின் காரணமாக ஏற்பட்டவையன்று. மாறாக, பல்வேறுபட்ட இணைந்த காரணிகள் காரணமாகவே ஏற்பட்டிருந்தன. இறுதியாக ஏற்பட்ட மின் செயலிழப்பு, பியகம உப மின்நிலையத்தில் ஏற்பட்ட உபகரணப் பழுது காரணமாகவே ஏற்பட்டிருந்தது. அந்த உப மின்நிலையத்தில் காணப்பட்ட மின்மாற்றி, சும…
-
- 0 replies
- 216 views
-
-
பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு, சமோதி போதனா மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி அனுமதிக்கப்பட்டார் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையிலுள்ள மருத்துவமனைகள் சிலவற்றில் அனுமதிக்கப்பட்ட சிலர், உயிரிழந்த சம்பவம் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தரமற்ற மருந்து வகைகள் வழங்கப்பட்டமையே, இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில், சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதாக எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார். மருத்துவமனைகளில் பதிவாகிய திடீர் மரணங்கள் …
-
- 3 replies
- 303 views
- 1 follower
-
-
அடுத்தது என்ன? என்ன செய்வது? July 17, 2022 — கருணாகரன் — அரசியல் நிலைமாற்ற அதிரடிகளின் மத்தியில் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார். சரி, அடுத்து என்ன நடக்கப்போகிறது? நிலைமை சீரடையுமா? அல்லது மேலும் மோசமடையுமா? அவர் இந்தப் பதவியில் எவ்வளவு காலம் நீடிப்பார்? அதற்கு மக்களும் போராட்டக்கார்களும் அனுமதிப்பார்களா? அல்லது அரசியலமைப்பின் பிரகாரமே எல்லாமே நடக்கப்போகிறதா? சபாநாயகர் விடுத்த ஏராளம் அறிவிப்புகளில் எவையெல்லாம் நடக்கும்?எவையெல்லாம் நடக்காது? அடுத்த பிரதமர் யார்? அடுத்து எப்படி ஆட்சிக் கட்டமைப்பு இருக்கும்?நடக்கும்? புதிய அமைச்சரவை உருவாக்கப்படுமா?அல்லது உள்ள அமைச்சரவையில் திருத்தம் நிகழுமா? இப்படி ஏராளம் கேள்விகளோடுதான…
-
- 0 replies
- 379 views
-
-
சிறப்புக் கட்டுரை: அடுத்துக் கெடுக்கும் பாரதீய ஜனதா கட்சி மின்னம்பலம் ராஜன் குறை அடுத்து கெடுப்பது என்றால் ஒருவரிடம் நட்பாக இருந்து, அணுக்கமாக இருந்து அவருக்கு தீமை செய்வது. பாரதீய ஜனதா கட்சி மாநில கட்சிகளுடன் கொள்ளும் உறவினை இப்படித்தான் வர்ணிக்க முடியும். மஹாராஷ்டிராவில் சிவ சேனாவுடன் அதற்கு இருந்த உறவு விரோதமாக மாறியது முக்கியமான உதாரணம். பீகாரில் நிதீஷுடன் அதன் உறவு நிதீஷை எந்த நிலைக்கு தள்ளியுள்ளது என்பது நாளை தேர்தல் முடிவுகள் வரும்போது தெரியும். தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க அரசை அடிமை அரசாக பயன்படுத்தும் அதன் மன நிலையை நாம் புரிந்துகொள்ள இந்த உதாரணங்கள் உதவும். பாரதீய ஜனதா கட்சிக்கு மாநில கட்சிகளின் மீது எந்த மரியாதையும் கிடையாது. மாநி…
-
- 0 replies
- 343 views
-
-
அடையாள அழிப்பு: சிறு தெய்வ வழிபாட்டை அழிக்கும் ஐயர்கள் November 3, 2022 — கருணாகரன் — ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தெருவில் இருந்த முத்துமாரி, ஒரே நாளில் ராஜராஜேஸ்வரியாகிவிட்டார். ராஜராஜேஸ்வரியாகியதோடு சினிமாவில் நடப்பதைப்போல எல்லாமே மாறிவிட்டன. புனருத்தாரணம் அமர்க்களமாகியது. இருப்பிட வசதி கூடியது. பொங்கலும் படையலும் பொலியத் தொடங்கின. காலை, மதியம், மாலையும் என முக்காலப் பூசையும் பாராயணமும் நடக்கிறது. ஆட்கள் கூடுகிறார்கள். ஆடலும் பாடலுமென ஒரே கொண்டாட்டமாகியது சூழல். போதாக்குறைக்கு அந்த நாள், இந்த நாள் என்று விசேட பூசைகளும் ஆராதனைகளும். முத்துமாரியாக இருந்தபோது, ஐம்பது ஆண்டுகளாக ஒரு சின்னஞ்சிறிய கொட்டகையில்தான் இருக்க வேண்டியிருந்…
-
- 12 replies
- 1.2k views
-
-
பிரதமரின் அலுவலகத்தில், பிரதமர் மகிந்தவை பார்த்து சலூட் அடித்தார் IGP பூஜித ... நாட்டு பாதுகாப்பு நிலை குறித்து ஆய்ந்த பின்னர், எழுந்த சலூட் அடித்தார் அவர். கூடவே, தலையை குனிந்து... ஐயா, அந்த FCID என்ற ஒன்று இருக்கிறதே. அதை களைத்து, அதுக்கு பொறுப்பான DIG யை வேறு வேலைக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்திருக்கிறேன், என்றார். நீ ஒரு முடிவும் செய்ய வேண்டாம், (ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.) நாம் முடிவு எடுத்து, உனக்கு அறிவிப்போம் என்று சொல்லி விட்டார் மகிந்த. அவர் போனதும், இருக்கிற பிரச்சனைக்குள, இந்தாள் இப்படி செய்தால், கிழி , கிழி என்று கிழித்து துளைப்பார்கள், என்று பக்கத்தில் நின்ற தனது நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு சொன்னார் மகிந்த . MR on Police Chi…
-
- 0 replies
- 729 views
-
-
செந்தமிழன் சீமான் அவர்கள் 03-05-12 இடிந்தகரை வந்து போராட்ட பந்தலில் அணுஉலை மூடும் வரை ஓயமாட்டேன் என கூறினார் மற்றும் 04-05-12-அன்று 500 மேற்பட்ட பெண்கள் தொடங்கும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டதிலும் கலந்து கொள்வேன் என கூறினார். http://youtu.be/ZL3ebbPt7uk http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 0 replies
- 432 views
-
-
[size=4]உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) �டைனமோ�வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.[/size] [size=4]அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம்.[/size] [size=4](இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் …
-
- 9 replies
- 2.3k views
-