நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
தமிழ் தேசியத்திலிருந்து வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம்; துரைராஜசிங்கம் நேர்காணல் August 24, 2020 தமிழ் தேசியம் பேசப்பட வேண்டிய விடயம். மக்களுக்கு சில மாயைகள் ஊட்டப்பட்டிருக்கின்றன, தமிழ் தேசியம் மிகவும் முக்கியமானது. அந்த வகையிலே தமிழ் தேசியத்திலிருந்து மக்கள் வழிமாறிச் செல்லாத முறைமையில் மக்களை வழிநடத்துவோம் என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கி.துரைராஜசிங்கம்; தினக்குரலுக்கு அளித்த நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது நேர்காணல் வருமாறு; கேள்வி :- நடந்து முடிந்த 2020, பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட நிலைமையினை எவ்வாறு பா…
-
- 5 replies
- 821 views
-
-
தி இந்துவில் வெளிவந்த ஜெயமோகனின் கட்டுரையை வாசித்தீர்களா? இல்லையென்றால் ஐந்து நிமிடங்களை ஒதுக்கிஅதை வாசித்துவிடுங்கள். நேரமில்லையென்றால் விட்டுவிடுங்கள். கட்டுரையின் அடிப்படையான சாராம்சத்தைச் சொல்லிவிடுகிறேன். இனிமேல் தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்கிறார் ஜெமோ. அதாவது ‘Vanakkam, Nalla irukeengala?’ என்று எழுத வேண்டுமாம். தலைப்பை பார்த்தவுடன் காமெடிக் கட்டுரை போலிருக்கிறது எனத் தோன்றியது. ஆனால் ஜெமோ சீரியஸாகவேதான் எழுதியிருக்கிறார். அடுத்தவர்களை தயவு தாட்சண்யமே இல்லாமல் ‘அசடு, அசடு’ என்று விளித்துக் கொண்டே இப்படியான கட்டுரைகளை எழுதுவதற்கு அசட்டுத் தைரியம் வேண்டும். இப்படியெல்லாம் கட்டுரை எழுதுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் தனது வலைத்தளத்தில் இதை பரிசோதித்து பார்த்த…
-
- 2 replies
- 895 views
-
-
ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் ஒரு தெளிவற்ற காலசந்தியில் தான் நிற்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்து ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆன பின்பும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் எதிர்காலத்தைக் குறித்த தெளிவற்ற சித்திரங்களுடன் தடுமாறும் ஒரு ஜனக்கூட்டமாகவே காணப்படுகிறார்கள். முப்பத்து எட்டு ஆண்டுகால ஆயுதப்போராட்டம் தமிழர்களை அவர்களுடைய “எதிரிகளிடம்” கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊடக நண்பர் சொன்னார் “போராட்டம் தொடங்கியபோது கோட்டையிலும்,பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற ராணுவத்தை இப்பொழுது எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்” என்று. இனி ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றி கற்பனையே ச…
-
- 6 replies
- 707 views
-
-
இலங்கையின் பேரிடர்: 5 காரணிகள் April 16, 2022 — ஜஸ்ரின் — பேராசிரியர் ஜரட் டையமண்ட் (Jared Diamond) உயிரியலாளராகப் பயிற்சிபெற்றுப் பின்னர் தனது உயிரியல் விஞ்ஞான ஆய்வுமுறைகளையும் சிந்தனை முறைகளையும் சமூகவியலில் பிரயோகித்து அதன் பலனாகப் பல நூல்களை எழுதிய ஒரு அமெரிக்கப் பேராசிரியர். ஓயாமல் மாறிக்கொண்டிருக்கும் உலகநாடுகள், சமூகக் குழுக்களின் மாற்றங்களை, உன்னிப்பாகக் கவனித்து, வாசகர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் தரவுகளாக வடித்து இவர் எழுதிய நூல் ஒவ்வொன்றும் 500 பக்கங்கள் வரை ஓடும் -ஆனால், வாசகரைத் தூக்கத்திலாழ்த்தாத சுவாரசியத் தகவல்களோடிருக்கும். இறுதியாக இவர் எழுதிய நாடுகள் பேரிடர்களை எதிர்கொள்ளும் போது அவை காட்டும் துலங்கல்கள் …
-
- 0 replies
- 194 views
-
-
ரணிலிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கான பதிலில், டக்லஸ், கே பி போன்றவர்கள் இந்தியா கேட்டால் விசாரணைக்கு ஒப்படைக்கப் படுவார்கள் என கூறி உள்ளார். அப்பிடி விஷயம் எண்டால், டக்கியர் கள்ள வோட்டுப் போடப் போறார் எல்லோ ...
-
- 6 replies
- 970 views
-
-
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மென்மையான போக்குடையவர் என்பதை அவரின் செயற்பாடுகளில் இருந்து உணர முடிகின்றது. இரண்டாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி அறிவித்தமை ஒரு தலைவனுக்கு இருக்கக் கூடிய சிறப்பைக் காட்டுவதாகும். இரண்டாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மைத்திரி அறிவித்த நேரம், காலம் என்பன மிகவும் பொருத்தமானவை. இந்த அறிவிப்பு அவர் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது. அதேநேரம் கண்டி தலதா மாளிகையின் எண்கோண மண்டபத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் சாந்தமும், நிதானமும் தெரிகிறது. எனினும் அதீத நல்ல குணம் பலவீனமாகக் கருதப்படும் என்பதன் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதானமாகவும் தீர…
-
- 0 replies
- 506 views
-
-
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து அமெரிக்க முன்னாள் தூதுவர் தெரிவிப்பது என்ன? இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளையோ அல்லது எதிர்கால நெருக்கடிகளையோ தீர்ப்பதற்கான அமெரிக்காவினதும் அல்லது வேறு எந்த வெளிநாட்டினதும் திறன் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சோன் டொனெலி தெரிவித்துள்ளார் வோசிங்டன் டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர்இலங்கையின் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்கு முன்னணியில் நின்று டிரம்ப் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டால் அது எனக்கு ஆச்சரியமளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார் வோசிங்டன் டைம்ஸ் பேட்டியின் தமிழாக்கம் வீரகேசரி இணையம் கேள்வி- இலங்கை உள்நாட்டு யுத்தத்திலிருந்த…
-
- 0 replies
- 483 views
-
-
நாடாளுமன்ற கடந்த 19 ஆம் திகதி 7 நிமிடங்கள் மட்டும் கூடிக் கலைந்தது. அதற்கு முன்னரான மூன்று அமர்வுகளிலும் சண்டை பிடித்து, கட்டிப் புரண்டவர்கள், கத்தி, மிள்காய்த் தூள் வைத்திருந்ததாக ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியவர்கள் அனைவரும் 19 ஆம் திகதிய 7 நிமிட அமர்வின் பின்னர் அனைத்தையும் மறந்தவர்களாக, நகைச்சுவையாக ஒருவர் முதுகில் ஒருவர் தட்டிச் சிரித்து தமக்குள் ஒன்றுமே நடக்காதவர்கள் போன்றும் நடந்து கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்தும் நகைச்சுவையாகப் பேசியும் மகிழ்ந்த காட்சிகளை நான் கண்குளிர, கண் பனிக்கக் கண்டேன். ஒரு புறத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் மிக நெருக்கமாக, சிரித்து மு…
-
- 0 replies
- 897 views
-
-
கருத்துப்படம் 20.02.2008 எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 8 replies
- 6.7k views
-
-
பவளவிழா காணும் தமிழரசுக்கட்சியும்! பரிதாபமான தமிழ்த்தேசிய அரசியலும்! – பா.அரியநேத்திரன் December 17, 2024 இந்தவாரம் எதிர்வரும் 2024, டிசம்பர்,18,ல் தந்தை செல்வா உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பவள விழா காண்கிறது. 1944, ஆகஷ்ட் 29ல் ஜீ ஜீ பொன்னம்பலத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக விலகிய முக்கிய தலைவர்களான தந்தை செல்வா, வன்னிய சிங்கம், நாகநாதன் ஆகியோர் 1949 டிசம்பர் 18 ம் திகதி கொழும்பு மருதாணையில் கூடி பேசி “இலங்கத்தமிழ் அரசுக் கட்சியை” ஆரம்பித்தனர் அதன் ஸ்தாபக தலைவராக தந்தை செல்வா நியமிக் கப்பட்டார். அன்று உருவாக்கிய இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் 75வது பவளவிழாவில் கால் பதிக்கிறது. அகில இலங்கை தமி…
-
- 0 replies
- 130 views
-
-
Monday, October 28, 2019 - 6:00am மாணவரின் மனச்சுமையை நீக்க கல்விச் சமூகம் இனிமேலாவது தீர்மானமொன்றுக்கு வர வேண்டும் தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு பல பாதிப்புகளை உண்டாக்குகின்றது. எனவே அவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படுவதாக கல்வியமைச்சு முன்னர் கூறியிருந்தது. ஆனால் அதுபற்றி பின்னர் எதுவும் பேசப்படவில்லை. நாட்டிலுள்ள பிரபல மனோவியல் நிபுணர்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்ைகயை கல்வியமைச்சு கவனத்தில் எடுத்தது. பின்னர் அப்பரீட்சை கட்டாயமில்லை என்று அறிவித்தது. ஆனாலும் இந்த வருடம் உதவித்தொ…
-
- 0 replies
- 287 views
-
-
பிக்கர் ஞானசாரார் 2012ம் ஆண்டு தண்ணியில் கார் ஓடி பிடிபட்டு நீதிமன்றில் நிறுத்தப் பட்ட போது, தனது குற்றதிணை ஒத்துக்கொண்டார். இந்த நிலையில் கோத்தபயாவின் உதவி கிடைக்க, தண்டனையில் இருந்து தப்பி, கோத்தவின் வேலைகளைச் செய்யும் ஓரு அமைப்பினை உருவாக்கினார். இன்று அதே ராஜபக்சக்களின் ஏவுதலில், நீதி மன்றினுள் புகுந்து, எகலியகொட வழக்கில் அட்டகாசம் புரியப் போய், தானே வலியப் போய் நீண்ட நாட்களாக விரித்துக் காத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டார். ராஜபக்சே மகனே உள்ள போயுள்ள நிலையில், தேரர் கைது, இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப் பட்டு விட்டதால், தேரர் பாடு கஷ்டம் தான். இவரது கதைக் கண்டித்து, அதே நீதிமன்றின் முன்னால், கற்கள் எறிந்து, சிறை வண்டிகளின் குறுக்கே படுத…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரன்.? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய அரசியலமைப்புப் பற்றிய விவாதங்கள் பல இடங்களிலும் அமர்க்களமாக நடந்தன. ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு என்ற வார்த்தைப் பிரயோகங்களுக்குள்ளிருக்கும் அபாயத்தைப்பற்றிய கடுமையான – சர்ச்சைக்குரிய விவாதங்கள் அவை. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களே தடுமாறும் அளவுக்கு அந்த விவகாரம் அதிக சங்கடத்தைக் கொடுத்திருந்தது. ஏனென்றால் அந்த அரசியலமைப்பு விவகாரம் நிறைவேற்றப்படாத ஒரு சரக்கு என்பதை மறைப்பதற்கு இட்டுக்கட்டப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் உண்மைபோலாக்குவதற்காக ஒரு சீரியஸ் தன்மையைக் கூட்டமைப்பு உருவாக்கியிருந்தது. இதற்காக நடந்த விவாதங்களில் சும…
-
- 3 replies
- 613 views
- 1 follower
-
-
கொரோனா நெருக்கடி; பிரான்சில் தவிக்கும் தமிழர்கள் Bharati May 4, 2020 கொரோனா நெருக்கடி; பிரான்சில் தவிக்கும் தமிழர்கள்2020-05-04T07:44:26+00:00Breaking news, அரசியல் களம் பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம் உலகையே கதிகலங்கச் செய்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கொவிட் 19 அதாவது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இனம் மதம் மொழி கடந்து இதுவரையில் பல நூற்றுக்கணக்கான நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்களை அச்சுறுத்தி மரணத்தின் இறுதிப் பயணத்திற்கு கொண்டு சென்றிருக்கின்ற ஒரு கொடிய நோயாக இவ் வைரசின் தாக்கம் காணப்படுகின்றது குறிப்பாகச் சொல்லப்போனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா.கனடா நாடுகளைப் பொருத்தவரையில் அதி உச்ச அளவில் இந்த வைரசின் தாக்கம் ம…
-
- 1 reply
- 372 views
-
-
இரண்டாவது தடவையாக அமெரிக்க சனாதிபதியாகியுள்ள ஒபாமா தனக்கென்று சில முத்திரை பதிக்கும் திட்டங்களை முன்னெடுப்பார். அவரின் இராஜாங்க செயலாளர் தெரிவான ஜோன் கெரி உலக அரசியலில் எவ்வாறான செயற்பாட்டுக்களை எடுப்பார் என்பதில் இஸ்ரேலிய மற்றும் ஆசிய நிலவரங்கள் தங்கி உள்ளன. அமெரிக்க பெருளாதாரமே அமெரிக்கர்களின் பார்வையில் ஒபாமாவை பற்றிய விம்பத்தை உருவாக்கும்.
-
- 13 replies
- 911 views
-
-
விடுதலைப்புலிகள் ராங்கி மூலம் நடத்திய தாக்குதலின் நேரடி காச்சி காணொளி இல் இணைக்கப்பட்டுள்ளது http://www.eelaman.net/index.php?option=co...7&Itemid=46 நன்றி http://eelaman.net/
-
- 9 replies
- 2k views
-
-
விடுதலை அரசியலின் பாதை - இதயச்சந்திரன் இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது. ஆனால் இப்பாரிய இயந்திரத்தின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் தமிழ்த்தேசிய அரசியலிடம் என்ன இருக்கிறது?. இதுவே சமகால அரசியலில் பேசுபொருளாகும் விடயம். கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை நிறைவேற்ற, தொல்லியல் திணைக்களம் முதல் காணித்திணைக்களம் வரையான சகல அரச நிர்வாக இயந்திரங்களையும் சிங்கள தேசம் வைத்திருக்கிறது. எமது தமிழ்த்தேசத்திடம் தேர்தல் கட்சிகளைத்தவிர வேறு என்ன இருக்கிறது?. வெகுசன மக்கள் திரள் அரசியலிற்குரிய கட்டமைப்புகள் இருக்கின்றனவா?. ஒடுக்க…
-
- 0 replies
- 419 views
-
-
இலங்கை அரசுக்கு தேவையான பண உதவி செய்ய புலம் பெயர் தமிழ் மக்கள் இணக்கமா? இதன் ஒரு கட்டமாக புலம் பெயர் தமிழர்கள் இலங்கை சென்று இலங்கை புலனாய்வு கடத்தல் பிரிவினரிடம் கப்பம் செலுத்துகின்றனராம். அத்துடன் முகாம்களில் உள்ள மக்களை வெளியில் எடுக்க 1-2 லட்சம் கறக்கபடுகிறதாம் ஏதொ ஒருவகையில் புலம் பெயர் தமிழர்களின் பணம் இலங்கை அரசின் கல்லாப் பெட்டியை நிரப்பி விடுகிறது மொத்தத்தில் இலங்கை பயங்கரவாத அரசின் வெற்றிக்கு நாமே துணை தமிழனை வைத்து பிழைக்க தெரிந்த ஜென்மங்கள்
-
- 6 replies
- 1.1k views
-
-
செந்தமிழ் பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா... தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! 01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்க…
-
- 0 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 396 views
-
-
தமிழின எதிரிகள் எந்த வகைபட்டவர்கள்? அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகள்.. எதிராளிகளை இரண்டு வகைகளாக பிரிக்கிறார் கோகன் அதில் 1.கருத்து எதிராளிகள் 2.அடிக்குடல் எதிராளிகள் அதை சற்று விரிவாக பார்ப்போம்.. கருத்து எதிராளிகள் ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி உங்கள் கருத்திற்கு மாற்று கருத்து வைப்பவர் கருத்து எதிராளி.. நீங்கள் நான் இப்படி செய்ய நினைக்கிறேன் என்கிறீர்கள் ..அவரோ ஏன் இதை இப்படி செய்யகூடாது என்கிறார். கருத்து எதிராளிகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்..முதலில் கருத்துகள்.. தகவல்கள்..அனுபவம் ..விட்டு கொடுத்தல் தீர்வு காண பட வேண்டும் என்பதில் ஒற்றுமை ஆகிய காரணிகள் சரியான இறுதி தீர்வை நோக்கி நகர்த்தும்.. இறுதி தீர்வு சர…
-
- 1 reply
- 692 views
-
-
சத்தமின்றி அபகரிப்பு செய்யப்படும் தமிழர் பூர்வீகம். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்கும் இடப்பரப்பு கோரி அண்மையில் பாராளுமன்றத்தில் பெரும் வாக்குவாதங்கள் முஸ்லிம் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சட்ட அங்கீகார வர்த்தமானி பிரசுரம் மூலம் பிரகடனப்படுத்தப்படாத ஒரு பிரதேச செயலகமாகவுள்ள இந்த கோறளைப்பற்று மத்தி பிரிவிற்கு அடிப்படை நியாயமே அற்ற நிலையில் கோசமிட்டது உண்மையில் நகைப்பாகவுள்ளது என செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.சுரேந்தர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பரப்பு 80 சத…
-
- 0 replies
- 297 views
-
-
முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட நிறைய நகைச்சுவை துணுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படையணிகள் குறித்த துணுக்குகளிருந்தன. பொதுமக்கள் குறித்தானவையும் இருந்தன. விடுதலைப்புலிகள் போல பாவனைகாட்டிக் கொண்டு திரியும் பொதுமக்கள் பற்றியவையும் இருக்கின்றன. இந்த வகையினர் குறித்தும் நகைச்சுவை துணுக்ககள் உருவாகியிருக்கின்றது என்பது எதனைக் குறிக்கின்றதென்றால், இந்த வகையானவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள் என்பதையே. ஊருக்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை தீர்க்க, கடன்காரணை வெருட்ட, கலர்ஸ்காட்ட என நிறைய இளைஞர்கள் இப்படித் திரிந்தார்கள். அதிகம் ஏன், சிலர் பெண்களை கவிழ்ப்பதற்கும் இப்படித் திரிந்தார்கள்…
-
- 6 replies
- 875 views
-
-
யாரும் சுத்தம் இல்லை – 40 ஆண்டுகளுக்கு விடிவு இல்லை February 18, 2022 — கருணாகரன் — 1) 30 ஆண்டுகளுக்குள் இலங்கையில் மகிழ்ச்சிக்குரிய எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. தமிழரின் அரசியலில் 40 ஆண்டுகளுக்குள் எந்த நம்பிக்கையளிக்கக் கூடிய முன்னேற்றங்களும் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. இதொன்றும் ஆருடமல்ல. அவதானத்தின்பாற்பட்ட கணிப்பு. அனுப அறிவின் வெளிப்பாடு. இதை மறுத்துரைப்போர் தங்களுடைய தருக்க நியாயங்களை முன்வைக்க வேண்டும். நம்முடைய அவதானத்தின் வரைபடம் இங்கே முன்வைக்கப்படுகிறது. தற்போதிருக்கும் அரசியற் கட்சிகளும் சரி, அரசியற் தலைவர்களும் சரி இலங்கையில் நல்ல –முன்னேற்றகரமான – மாற்றங்களை உருவாக்கக் க…
-
- 2 replies
- 475 views
-
-
கீழே இருக்கும் இணைத்தளத்திற்கு சென்று வாக்களியுங்கள்...! http://www.ctr24.com/newctr/clients/Poll.aspx கேள்வி: தேசம் தேசியம் இறையாண்மை சுயநிர்ணய உரிமை எதனையும் கைவிடவில்லை என்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அறிக்கையினை ஏற்றுக்கொள்ளலாமா? ஆம் இல்லை இல்லை என்பது வேண்டுமென்று திட்டமிட்டு வாக்கிடப்பட்டுள்ளது போல இருக்கே
-
- 4 replies
- 794 views
-