நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
இவரது பெயர் Maurice Sinet. ஐந்து வருடங்களுக்கு முன்னர், சார்லி எப்டோ பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். 2009 ம் ஆண்டு, பத்திரிகை நிர்வாகம் இவரை வேலையே விட்டு நீக்கி விட்டது. இவர் செய்த குற்றம் என்ன? பத்திரிகையில் Sine என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை, "யூதர்களுக்கு எதிரானது" என்ற குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப் பட்டார். அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசியின் மகனின் திருமணம் பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை அது. சார்கோசியின் மகன் அப்போது தான் ஒரு யூத தொழிலதிபரின் மகளை திருமணம் முடித்திருந்தார். அவர் பணத்திற்காக யூதராகவும் மாறிவிடுவார் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் பட்டிருந்தது. French cartoonist Sine on trial on charges of anti-Semitism over Sarkozy j…
-
- 1 reply
- 460 views
-
-
-
நாலாவது ஈழப்போர் உக்கிரம் பெற்றதில் இருந்து இலங்கையில் மோசமடைந்திருந்த மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுவந்த மேற்குலகம் கடந்த வாரம் அழுத்தமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கடந்த 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்கு நிறுத்தியுள்ளது. இந்த ஆறு மாதங்களிலும் இலங்கையில் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றங்கள் காணப்பட்டால் வரிச்சலுகையின் நிறுத்தம் தொடர்பான முடிவுகள் மீளாய்வு செய்யப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகை நீடிப்புக்காக 2008 ஆம் ஆண்டு இலங்கை விண்ணப்பித்தபோது ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசு அதற்கு தகுதியுள்ளதா என்பது தொடர்பில் ஆ…
-
- 1 reply
- 894 views
-
-
உலகம் முழுவதும் அகதிகளை உற்பத்தி செய்து அனுப்பிவைக்கும் நாடான இலங்கையை நோக்கி அகதிகள் வருகின்றனர் என்பது புதிய செய்தி. பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டின் அரசால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் அகதிகள் பலர் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். பொதுவாகப் பாகிஸ்தானிய கிறீஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும், அகமதீயா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். வாரந்தோறும் நீர்கொழும்பிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்துல் நடைபெறும் வழிபாடு பாகிஸ்தானிய கத்தோலிக்கர்களால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு தடவையும் 1000 பாகிஸ்தானியக் கத்தோலிக்க அகதிகள் வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்காக நீர்கொழும்பு தேவாலயத்தில் ஏனைய அகதிகளுடன் வழிபாட்டிலிருக்கும் அகதி ஹன்னா வூட்(26) பாகிஸ்தானில்…
-
- 1 reply
- 636 views
-
-
-
- 1 reply
- 4k views
-
-
கிளிநொச்சியின் வீழ்ச்சி நிரந்தரமானதா? - வன்னியன் ஞாயிறு, 04 ஜனவரி 2009, 03:53 மணி தமிழீழம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது. விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பாதையை செப்பனிட்டு நேர்ப்ப…
-
- 1 reply
- 3.6k views
-
-
இலங்கையை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் சக்தி? June 5, 2021 — கருணாகரன் — இலங்கையில் அமைதிக்கும் சமாதானத்துக்கும் அரசியல் தீர்வுக்குமாக வேலை செய்வது மிக மிகக் கடினமானது. இனவாதத்தைத் தொடருவது இலகுவானது. இதை விளங்கிக் கொள்வதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவையில்லை. அதிகமாகப் படித்திருக்க வேண்டியதுமில்லை. மிகச் சாதாரணமாகக் கவனித்தாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். முதலில் நீங்கள் படிக்கின்ற பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றைக் கவனியுங்கள். இதில் 99 வீதமானவையும் சமாதானத்தைக் குறித்து – அதை வலியுறுத்திச் செய்திகளை வெளியிடுவது குறைவு என்பதைக் கண்டு பிடித்து விடலாம். அத்தனையும் இனவாத அடிப்படையிலேயே செய்திகளை எழுதுகின்றன – தய…
-
- 1 reply
- 367 views
-
-
பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்த பின்னர், எந்த அடிப்படையில் மகிந்த, பிரதமர் அலுவலகத்தில் இருந்து இயங்குகிறார் என்ற மனுவுடன் 122 எம்பிக்கள் வெள்ளியன்று மேல்முறையீட்டு நீதிமன்று சென்றனர். இந்த மனு அடுத்த வார முன்பகுதியில் விசாரணைக்கு வருகிறது. http://www.dailymirror.lk/article/-MPs-challenge-MR-in-court-158851.html தன்னை பிரதமர் என்று சொல்லிக் கொள்ளும் நபர் ஒருவர், பாராளுமன்றத்தில் நம்பகத்தன்மை இழந்த பின்னும், பலாத்காரமாக பிரதமர் அலுவலகத்தை சட்டபூர்வமான வகையில் அல்லாது கையகப்படுத்தி வைத்திருக்கிறார் என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த வெளிநாட்டு ராசதந்திரிகளிடம் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தர் தெரிவித்தார். http://d…
-
- 1 reply
- 420 views
-
-
தமிழ் அரசியலை செப்பனிடும் விக்னேஸ்வரனின் முன்னுதாரணம் கபிலன் இராசநாயகம் அரசியல் என்றாலே பணம் உழைப்பதற்காக என்று மக்கள் முகம் சுழிக்கும் இன்றைய நிலையில் தனது பாராளுமன்ற பிரவேசம் அத்தகைய ஒரு சாக்கடைக்குள் சிக்காது என்பதை உறுதிப்படுத்தவும் பொதுமக்கள் தன்னை கண்காணித்துக்கொள்வதற்கு ஏதுவாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தனது சொத்துவிபரங்களை தேர்தலுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். விக்னேஸ்வரனின் இந்த செயற்பாடு இலங்கை அரசியலில் மட்டுமன்றி தமிழக அரசியலிலும் எதிர்வரும் காலங்களில் பெரும் செல்வாக்கை செலுத்தப்போகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப…
-
- 1 reply
- 428 views
-
-
-
- 1 reply
- 601 views
-
-
ஒரு தமிழ் பெண் IS தற்கொலைதாரியாக மாறிய அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி கடந்த வருடம் IBC-தமிழ் வெளியிட்ட ஆவணம் இது. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் இந்த தமிழ் பெண்ணும் சம்பந்தப்பட்டிருந்தார். அந்தத் தமிழ் பெண் ஏன் ஐ.எஸ் தீவிரவாதியாக மாறினாள்? மாறினாளா மாற்றப்பட்டாளா? யார் அவளை தற்கொலைதாரியாக மாற்றியது? https://www.tamilwin.com/srilanka/01/244232?ref=rightsidebar
-
- 1 reply
- 476 views
-
-
போர்களை புதிய யுகத்துக்கு இட்டுச் செல்லும் ட்ரோன்கள்: ராணுவங்களுக்கு பயங்கர சவால் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆளில்லா ட்ரோன் விமானங்கள் ஒரு காலத்தில் வல்லரசுகளின் கைகளில் இருந்தன. ஆனால், அந்த நிலை தற்போது இல்லை. கிளர்ச்சியாளர்கள் மற்றும் சிறிய நாடுகளில் அதன் பயன்பாடு ஏற்கெனவே போரின் தன்மையை மாற்றுகிறது என எழுதுகிறார், ஜொனாதன் மார்கஸ். பெரும்பாலும் ராணுவ வரலாற்றில் ஒரு ஆயுத அமைப்பு ஒரு முழு யுத்த யுகத்தின் அடையாளமாக மாறும். மத்திய காலத்தில் அஜின்கோர்ட்டில் ஆங்கிலேய வில்லாளர்கள் பயன்படுத்திய நீளமான வில் அல்லது இரண்டாம் உலகப் போரின் தரைப் போரில் பயன்படுத்தப்பட்ட திறன்ம…
-
- 1 reply
- 352 views
- 1 follower
-
-
வை.கோ அவர்களின் தேசிய தலைவரின் பிறந்தநாள் செய்தி
-
- 1 reply
- 865 views
-
-
உலகில் அதிகளவு பயன்பாட்டு சமூக ஊடகமாக முகநூல் வளர்ந்து கோலோச்சுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். சமீபத்தேய எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 2.7 பில்லியன் பாவனையார்களை கொண்டிருக்கிறது. உலகின் மொத்த சனத்தொகையே 7.7 பில்லியன் தான். தனிநபர்கள் மட்டுமல்ல வர்த்தக நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் மட்டுமன்றி அரசாங்க நிறுவனங்கள் கூட முக நூல் பக்கங்களை வைத்திருக்கும் கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கின்றன. முகநூல் என்பது ஒரு அடையாளமாகவும், தகவல் பரப்பும்/பகிரும் தளமாகவும், பிரச்சார ஊடகமாகாவும், விளம்பர உத்திக்காகவும் இன்று அதிகம் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. …
-
- 1 reply
- 394 views
-
-
-------- மெட்ராஸ் கபேவில் மறைக்கப்பட்ட காட்சி------ இரவு10:20வரை தன்னுடைய கட்சித் தலைவருடன் அட்டை போல ஒட்டிக்கொண்டிருந்த மூப்பனார் 10:21க்கு தற்செயலாக சிகிரெட் பிடிக்க போய்ட்டார், 10:20 வரை தன்னுடைய தலைவருடனேயே வந்துக்கொண்டிருந்த ஜெயந்தி நடராஜன் 10:21க்கு தற்செயலாக வெளிநாட்டினவரை சந்திக்க ஒதுங்கிவிட்டார். 10:20 வரை தன்னுடைய தேசியத் தலைவருடன் காங்கிரஸ் தமிழக தலைவர் வாழப்பாடி வந்தார். 10:21க்கு 'தோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனவர் அரைமணி நேரம் கழிச்சிதான் வந்தார். எல்லாம் தற்செயலாக நடந்ததுதான். இதில் எந்த சதியம் இல்லை. # ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னாடி உள்ள .. காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்? சாமியார்கள் யார்?யார்? அதிகாரிகள் யார்?யார்? ம…
-
- 1 reply
- 737 views
-
-
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்?-கண்ணதாசன் சொன்ன உண்மைகள்! திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் இப்போதும் சுவாரஸ்யத்தை தருகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார். …
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்களும், பின்னடைவுகளும் ஒன்றும் புதியவையும் அல்ல. நிரந்தரமானவையும் அல்ல. களத்திலிருந்து ஆதிரையன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு அது பல்வேறுபட்ட நெருக்கடிகளையும், அழுத்தங்களையும், பின்னடைவுகளையும், சூழ்ச்சி வலைகளையும், துரோகங்களையும் சந்தித்திருக்கிறது. விடுதலைக்காக வீறுகொண்டெழுந்த போராட்ட இயக்கங்கள் "தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு' என்ற குறிக்கோளுடன் களத்தில் இறங்கினாலும் ஒவ்வொன்றினதும் செயற்பாடுகளும் வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளும், அவற்றின் செயற்திறனும் மாறுபட்டு, முரண்டுபட்டு இலட்சியத்தின் பால் வீறுநடை போடமுடியாமல் ஈழத்தமிழரிடையே ஒரு அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்தவிருந்த வேளை தமிழீழ…
-
- 1 reply
- 3.2k views
-
-
அண்மையில் நாலு நாடுகளுக்கு பிரயாணம் கொண்டு அங்கு நிற்கும் ஒபாமாவை அவரது உண்மையான நோக்கம் பற்றி ஒரு கட்டுரை நியூ யார்க் டைம்ஸில் வந்துள்ளது. ( எமக்கும் இது பிரயோசனமாக இருக்கும் என நம்புகின்றேன்) ========================================================= "Gone today are the artificial divisions of cold-war-era studies: now the “Middle East,” “South Asia,” “Southeast Asia” and “East Asia” are part of a single organic continuum. In geopolitical terms, the president’s visits in all four countries are about one challenge: the rise of China on land and sea." வளர்ந்து வரும் ஆசியாவின் பொருளாதாரமும் அதில் சீனாவின் வளர்ச்சியும் அந்த வளர்ச்சியை அது பொருளாதாரம் என்பதில…
-
- 1 reply
- 804 views
-
-
அறிவரசன்:- ஒரு முறை செய்திவாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா என்ற போராளியை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர்களிடத்தில் சொன்னேன், ‘எல்லோரும் தமிழ்ப் பெயர் வைக்கவேண்டும் என தலைவர் அறிவித்துள்ளார் என அறிகிறேன். ஆனால் உங்களது பெயர் தமிழில் இல்லையே, இசை என்பது மட்டும்தானே தமிழ், பிரியா என்பது தமிழ் இல்லையே’ என்று நான் கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள் ‘எனது பெயர் இசைஅருவி என்பதுதான்’ என. ‘இசைஅருவி ஒரு சிறந்த தமிழ்ப் பெயர் ஆச்சே. அப்படி ஒரு சிறந்த தமிழ்ப் பெயரை வைத்துக்கொண்டு, ஏன் உங்களை இசைப்பிரியா என்று அழைத்துக்கொள்கின்றீர்கள்?’ என்று சொன்னபோது, ‘தோழிகள் எல்லாம் அப்படி அழைத்தார்கள். அதனால் இசைப்பிரியாவாக என்னை மாற்றிக்கொண்டுள்ளேன்’ என்றார்கள். ‘இதனைத் தலைவரும் ஏ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசியல் விமர்சனம்: சிங்களத்திடம் புலிகள் முன்வைத்த கோரிக்கை..? இவ் விடயம் 02. 03. 2011, (புதன்),தமிழீழ நேரம் 11:15க்கு பதிவு செய்யப்பட்டது தமிழர்களைத் தொலைப்பதிலேயே கவனம் செலுத்துகின்ற மகிந்த அரசாங்கம் நெருக்கடியான தருணங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமது அரசின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதற்கு அவர் இத்தகைய உத்தியைக் கையாண்டு வருகிறார். அனைத்துலக நெருக்கடிகளும் உள்ளூர் நெருக்கடிகளும் அதிகரித்துள்ள கட்டத்தில் கடந்த வாரம் ஊடக ஆசிரியர்களுடனான ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார் ஜனாதிபதி. இதற்கு முன்னர் நடந்த கூட்டத்தில் அவர் தமிழ் ஊடகங்களை காட்டமாக விமர்சி…
-
- 1 reply
- 828 views
-
-
இலங்கையின் உள்விவகாரங்களின் நாம் தலை போடமாட்டோம் எண்டு இந்தியா அதிகமாக அறிக்கை விடுவார்கள் ஆனால் இந்தியா புத்தர் காலத்தில் இருந்தே தலையும்,காலையும் இலங்கையில் போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் இந்திரா அம்மையார் காலத்தில் தலை போட நினைத்த விடயம் ஒன்று தற்பொழுது ஒரளவுக்கு வெற்றி பெற்றுள்ளது.அதாவது இலங்கையின் ஆச்சியாளர்கள் இந்தியாவிடம் மண்டியிட வேண்டும் என்ற அந்த ஆசை தான் . தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் இந்தியாவின் இந்த ஆசைக்கு எண்ணங்களுக்கு ஏற்ற மாதிரி நடக்க மாட்டார் என்று தெரிந்த இந்தியா புலிகளுக்கு எதிராக ஒரு சக்தியை உண்டாக்க வேண்டும் என்று முடிவு பண்ணியது அதில் வெற்றியும் கண்டது.அது தான் "தமிழீழ மக்கள் விடுதலை புலிகள்" என்ற அமைப்பை உருவாக்கியமை இந்த அமைப்பினர்…
-
- 1 reply
- 976 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கைலா எப்ஸ்டீன் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை. அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும், அமெரிக்க வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டிய நிகழ்வுளில் ஒன்று. அதேபோல் மிகவும் ஆய்வுக்கு உள்ளான நிகழ்வுகளில் முக்கியமானதாக இந்தப் படுகொலை கருதப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னமும் ஜான் எஃப் கென்னடியின் படுகொலை குறித்த புதிய விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. பால் லாண்டிஸ், 88 வயதான இவர் ரகசிய புலனாய்வு முகமையின் முன்னாள் அதிகாரி. அதிபரின் மரணத்தை நெருக்கமாக அருகில் …
-
- 1 reply
- 389 views
- 1 follower
-
-
சீன மீனவர் ஒருவர் படகொன்றையும் மோட்டோர் சைக்கிளையும் பயன்படுத்தி நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடிய படகு ஒன்றை உருவாக்கியுள்ளார். புஜியான் மாகாணத்தில் ஸங் ஸொயு நகரைச் சேர்ந்த சென் குவோஹொங் (43) என்ற மீனவரே 4.5 மீற்றர் நீளமும் 1.6 மீற்றர் அகலமும் 750 கிலோகிராம் நிறையும் உடைய படகை உருவாக்கியுள்ளார். இந்தப் படகு வீதியில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேத்தில் பயணிக்கக் கூடியது. இதனை உருவாக்கிய நபர் 13 வயது முதல் மீன்பிடித் துறையில் ஈடுபட்டு வருகின்றார். http://www.virakesari.lk/article/interesting.php?vid=76
-
- 1 reply
- 516 views
-
-
மும்பை கடற்படைத் தளத்தில் விபத்துக்குள்ளான ஐஎன்எஸ் சிந்துரக்சக் (INS Sindhurakshak) நீர்மூழ்கிக் கப்பல் 1997ம் ஆண்டு ரஷ்யாவில் கட்டப்பட்டதாகும். டீசல் என்ஜினால் இயங்கும், 283 அடி நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை ரஷ்யாவின் மிகப் பிரபலமான போர் கப்பல்களை கட்டும் செவ்மாஸ்க் (Sevmask) தான் உருவாக்கியது . மணிக்கு 31 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கடியில் 300 மீட்டர் வரை மூழ்கும் திறன் கொண்டது. இந்த நீர்மூழ்கியில் 200 கி.மீ. வரை சென்று போர்க் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்ட கிளப் எஸ் (Klub-S) வகையிலான ஏவுகணைகளும், சாம் வகை ஏவுகணைகளும், நீரில் மூழ்கிச் செல்லும் டார்பிடோ ரக ஏவுகணைகளும் உண்டு இந்தியா உருவாக்கிய USHUS hydro-acoustic ரக சோனார் உதவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
இன அழித்தலை பயங்கரவாத போர்வையால் மறைக்க முடியாது -ஆக்கம்: கா. அய்யநாதன் இலங்கை அரசுக்கு எதிராக குற்ற விரல் நீட்டும் நாடுகள், ஒரு நீண்ட யுத்தத்திற்குப் பிறகு பயங்கரவாதத்தை முறியடித்தது தொடர்பான உண்மையையும், தாங்கள் தோற்கடித்த பயங்கரவாதிகளின் இயற்கையை அறியாதவர்கள் என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச மிகுந்த மன வருத்தத்துடன் பேசியுள்ளார். கொழும்புவில் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்த தெற்காசிய மேம்பாடு மற்றும் ஒத்துழைப்பு மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ள ராஜபக்ச, “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கையையும், பயங்கரவாதத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட துயரத்தையும் அறிந்தவர்களா? இந்த உண்மைகளைப் பற்றி எந்த வகையிலாவது இந்…
-
- 1 reply
- 783 views
-