நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
ஈழத்தான் கிருபா லைக்கா சுபாஸ்கரனை அடுத்து 10 டாலருக்கு இணையம் நடத்தும் இணைய போராளிகளின் அடுத்த இலக்கு தமிழ் தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் மேல் பாய்கிறது. ஆனந்த கிருஷ்ணன் ஈழத்தின் யாழ் மாவட்டம் வட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவரும் மலேசியாவில் குடியேறியவரும் ஆவார். இவர் உலகின் 82 வது செல்வந்தரும் மலேசியா நாட்டின் 2 வது செல்வந்தராகவும் உள்ளார். உலகின் முதல் 100 செல்வந்தர்களுள் உள்ள ஒரே தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும். இவர் மலேசிய நாட்டின் Maxis மற்றும் இந்திய Aircel நிறுவனங்களின் முதன்மை பங்குதாரர் என்பதுடன் மேலும் இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் தமிழீழ போராட்டத்திற்கும் என்ன தொடர்பு? எதற்காக…
-
- 0 replies
- 598 views
-
-
இது சரித்திரத்தில் ஒரு வியப்பு மிக்க தருணம். பிரித்தானியாவின் அரச குடும்பத்திலிருந்து வில்லியமும் கேம்பிரிட்ஜின் சீமாட்டியும் வில்லியமின் மனைவியுமான கேட், நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்சி மண்டேலா மற்றும் பல அரசியல், திரைத்துரைப் பிரபலங்கள் செங்கம்பள வரவேற்பில் வரவேற்கப்பட்டு, இரண்டு வாரங்களிற்கு முன்னர் தென்னாபிரிக்காவில் வெளியாகிய பிரித்தானிய ஆபிரிக்கத் தாயாரிப்பான ‘LONG WALK TO FREEDOM’ எனும் திரைப்படத்தின் சிறப்பு முதற்காட்சியைக் காண்பதற்காகத் தயாராகவும் ஆவலுடனும் காத்திருக்கின்றார்கள். தந்தை உடல் நலத்துடன் உள்ளதாக ஜிண்ட்சி மண்டேலா விருந்தினர்களிற்குத் தெரிவிக்கின்றார். அங்கு இத்திரைப்படத்தில் நெல்சன் மண்டேலாவாக நடித்த பிரபல நடிகர் Idris Elba மற்றும் அவரது மனைவியான …
-
- 0 replies
- 598 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் சிங்களப் பேரினவாத அரசின் கோரப் பற்களைப் பிடுங்குவதற்காக சர்வதேச சமூகம் தீவிரமாகச் செயற்பட்டுவருகின்ற நிலையில் அதன் தீவிரத் தன்மையையும் கடந்து அவுஸ்திரேலியா சிட்னியில் ஒரு குழுவினர் மிகத் தீவிரமாக தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பணியினை செய்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவில் இருக்கின்ற தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்துகின்ற மிக முக்கிய குழுவாக தம்மை அறிவித்துக்கொள்கின்ற அமைப்பு ஒன்று இந்த நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருகின்றது. அந்தக் குழு தீவிரமாக ஈடுபட்டிருப்பது எதற்காக என்று ஆராய்ந்தால் அது “பண்ணையாரும் பத்மினியும்” என்ற தென்னிந்திய சினிமாப் படத்தினை திரையிடுவதற்கு மக்களைத் திரட்டுவதற்காக என்ற பதிலே கிடைத்திருக்கிறது. குறித்த அமைப்பி…
-
- 0 replies
- 598 views
-
-
போராட்டம் செல்லும் வழியில் எங்கள் பாதையையும் செப்பனிடுவோம். காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவை பாதை நீண்டதாக இருக்கலாம். காலத்திற்கு ஏற்ற மாற்றம் இல்லாததால் இடையில் வெட்டப்பட்டுள்ளோம். 1ம் படலம்: சிங்களவன் தமிழனை குத்தி, அடித்து, கொள்ளை அடித்து கொண்டிருந்தான். (1950 -1968) 2ம் படலம்: பின்னர் இந்தியா தமிழனுடன் கைகோர்த்து தமிழன் சிங்களவன் அடிப்பதை நிறுத்தினான். (1970 - 1986) 3ம் படலம்: தமிழன் விஞ்சுகின்றான் என்றதும். இந்தியனும், சிங்;களவனும் சேர்ந்து தமிழனை அடித்தான். (1987- 1990) 4ம் படலம்: இந்தியன் ஆக்கிரமிப்புக்குப் பயந்த சிங்களமும் தமிழும் சேர்ந்து இந்தியனுக்கு அடித்தது. (1990 - 2000) 5ம் படலம்: பின்னர் இந்தியனும் சிங்களவனும் சர்வதேசமும் சேர்ந்த…
-
- 0 replies
- 598 views
-
-
புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் !: A.P.G சரத்சந்திர (சிங்கள மொழியிலிருந்து..) அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் க…
-
- 1 reply
- 597 views
-
-
இன்றைய பார்வையில் 1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கை -கேணல்.ஆர்.ஹரிகரன்- இலங்கையில் புதிய அரசொன்றை வரைவதற்கான செயன்முறைகளில் ராஜபக்ச அரசாங்கம் இறங்கியிருக்கிறது. முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கு முன்னதாக முன்னைய நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டில் கொண்டுவந்த 19ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கு வகைசெய்யக்கூடிய 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் முன்வைத்திருக்கிறது. அது பற்றிய அரசியல் வாதப்பிரதிவாதங்கள் இலங்கையில் தீவிரமாக மூண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்நிலையில், இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வழிவகுத்த அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தில் பெ…
-
- 0 replies
- 597 views
-
-
"எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' 09 பெப்ரவரி 2013 அப்சல் குரு "எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து... சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன். சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும்…
-
- 2 replies
- 597 views
-
-
தொற்றுநோய்க்கால விலை உயர்வும் மக்கள் துயரும் September 11, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட்— கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தை ஒரு போர்க்கால நெருக்கடியாக மாற்றியுள்ளது வணிகச் சூழல். குறிப்பாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் வர்த்தகச்சூழல். நெருக்கடி உணர்வைச் சமூக மட்டத்தில் உண்டாக்கினால் பொருட்தட்டுப்பாட்டுப் பதற்றம் மக்களிடத்திலே தானாகவே உருவாகும். அப்பொழுது பொருட்தட்டுப்பாட்டைப் பற்றியும் அவற்றின் விலையேற்றத்தைப் பற்றியும் கேள்விகளை எழுப்பவோ விசாரணையைச் செய்யவோ முடியாது. அதற்குரிய நிர்வாக நடவடிக்கைகள் இல்லாத நிலை இதற்கு வாய்ப்பளிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் பிழைத்துக் கொ…
-
- 0 replies
- 597 views
-
-
போர் நடந்தபோது உலகத்தில் இடம்பெர் தமிழர்கள் எல்லாம் கூக்குரலிட்டபோது வேடிக்கை பார்த்த ஜனநாயகம் பேசும் அரசுக்கள் எல்லாம் இன்று புலிகளின் கதை முடிந்துவிட்டது. இனி ஸ்ரீலங்கா அரசுமீது குற்றப்பத்திரிகை தயாரித்து எப்படி இவர்களைத்தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம். என்ற ரீதியில் தான் இக்குற்றப்பத்திரிகைகள் அமைகின்றன என்பதைத் தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் சீனாவைவிட்டுவிட்டு இவர்கள் பக்கம் சாய்ந்தால் குற்றப்பத்திரிகை கிடப்பில் இருக்கும். சீனாவுடன் கைகோர்த்து அந்தரங்கமாக இருந்தால் குற்றப்பத்திரிகை மூலம் ஸ்ரீலங்காவுக்கு; (ஈராக்குக்கு பிரவேசித்ததுபோல் ) செல்வார்கள். மொத்தத்தில் மேற்குலகமும், இந்தியாவும் சிங்களரிலோ, தமிழரிலோ ஏது அக்கறை. தமிழரின் போரிடும் சக்தியை, சி…
-
- 0 replies
- 596 views
-
-
மீண்டும் ஒரு சிறிலங்கா-இந்தியா கூட்டுத்தயாரிப்பில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட உள்ளது. போரிற்கு பின்னரான தமிழர்களது வாழ்வைப் பற்றி ஆய்வு செய்யவென இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு வரும் 16ம் திகதி சிறிலங்கா புறப்பட்டுச் செல்ல உள்ளது. இந்தியா பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவியான பா.ஜ.க. தலைவர் சுசுமா சுவராச் தலைமையில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்கின்றனர். தமிழர்களது நலனில் அதிதீவிர அக்கறையும் பாசமும் கொண்ட தி.மு.க. காங்கிரசு மார்சிட் கம்யுனிட்டு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாடகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கூண்டோடு கொன்று புதைக்கப்பட்டு மூன்று வருடங்கள் மு…
-
- 0 replies
- 596 views
-
-
10 cm அசாதாரணமான வால் வளர்ச்சி கொண்ட சிறு குழந்தையின், தாயிடம் இலகுவாக அதனை நீக்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முள்ளம்தண்டில், அடிப்படை பிரச்னையினை தீர்க்காமல் இதனை அகற்றினாலும் மீண்டும், மீண்டும் வளரும் என தெரிவிக்கிறார்கள் சீன டாக்டர்கள். 800 பிள்ளைகளுக்கு 1 பிள்ளை இந்த வகையில் பாதிப்புறுகின்றது எனினும் இந்த குழந்தை அதிகமாக பாதிப்டைந்துதுள்ளதாக படத்தினை பார்க்கையில் தெரிகிறது. குழந்தை நலம் பெற வாழ்த்துவோம். http://news.uk.msn.com/trending-blog/mum%E2%80%99s-appeal-for-help-over-child%E2%80%99s-%E2%80%98tail%E2%80%99 Mum’s appeal for help over child’s ‘tail’
-
- 0 replies
- 596 views
-
-
வடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்! நாட்டில் அன்றாடம் அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் தொடர்பாக தொடர்ச்சியாக கவனஞ்செலுத்தி வருகின்றோம். கவனயீனங்களால் அதிகரிக்கும் விபத்துக்கள் ஒருபுறம் இருக்க பல பிரதேசங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் பல்வேறு விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இதுகுறித்து இன்றைய ஆதவனின் அவதானம் (13.03.2019) கவனஞ்செலுத்துகிறது. வடக்கிற்கான ரயில் மார்க்கம் அமைக்கப்பட்டு 6 ஆண்டுகளிற்கு மேல் கடந்துள்ள போதிலும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதிகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டி முதல் பளை வரை மக்கள் பயன்படுத்தும் முக்கிய வீதிகளில் இவ்வாறான பாதுகாப்பற்ற கட…
-
- 0 replies
- 596 views
-
-
April 14, 2023 உழைக்கும்போதே செலுத்தும் செலுத்தும் வரி (Pay As You Earn - PAYE) முறையின் கீழ் அரசாங்கம் வேறுபட்ட வருமான வரைமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறது. 100,000 ரூபாவுக்கும் 141,667 ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளத்தை பெறும் ஒருவர் 100,000 ரூபாவுக்கு மேலாக பெறுகின்ற சம்பளத்துக்கு 6 சதவீத வரியைச் செலுத்தவேண்டும். அதேபோன்றே 141,667 ரூபாவுக்கும் 183,333 ரூபாவுக்கும் இடைப்பட்ட மாதாந்த சம்பளத்தை பெறுபவர் 12 சதவீத செலுத்தவேண்டும். 183,333 ரூபாவுக்கும் 225,000 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 18 சதவீதத்தையும் 225,000 ரூபாவுக்கும் 226,267 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்பளத்தை பெறுபவர் 24 சதவீதத்தையும் 226,267 ரூபாவுக்கும் 308,333 ரூபாவுக்கும் இடைப்பட்ட சம்…
-
- 0 replies
- 596 views
- 1 follower
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் - யாழ்.மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வன்னிப் பகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சார நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் - சிறீலங்கா அரசும் அதனோடு இணைந்துள்ள கைக்கூலிகளும் தமது கையாலாகாத் தனங்களை மேலும் முனைப்போடு அரங்கேற்றி வருகின்றதாக தாயகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கொல்லங்கலட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சென்ற பொதுமக்களை இராணுவம் தடிகள், பொல்லுகளால் கண்மூடித்தனமாக அடித்து விரட்டியுள்ள கொடுமை சிறிலங்கா இனவாதத்தின் கோரமுகத்தை மீண்டும் பறைசாற்றியுள்…
-
- 0 replies
- 596 views
-
-
தென் கிழக்காசியாவில் கல்வியறிவு மிகவும் கூட உள்ள ஒரு நாடு, கல்வி அறிவு இல்லாதவர்களால் ஆள படும் போது வரும் பிரச்சனை..
-
- 5 replies
- 595 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கை ஒரு போர்க்குற்ற நாடு, மகிந்த ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலையாளி என டெசோ மாநாடு சொல்லுமா என சீமான் கேட்டுள்ளார். நாம் தமிழர் இயக்க தலைவர் செந்தமிழ் செல்வன் சீமான் அவர்கள் NDTV Hindu தொலைக்காட்சி நடாத்தும் ''கேள்விக்கு என்ன பதில்'' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.[/size] [size=4]இது மட்டுமனறி இன்னும் பல கருத்துக்களோடு கேள்விகளையும் கேட்டுள்ளார்.[/size] http://youtu.be/S-6GLyvfDM8 [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 1 reply
- 595 views
-
-
மோடியின் அதிரடி முடிவுகளால் திணறும் தமிழகம்? மத்தியில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு கொடுக்கும் எண்ணத்தில்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள், டெல்லியில் நாடாளுமன்றத்திலும் ராஜ்ய சபையிலும் பேசி வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பிரதமர் மோடியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படவில்லை. மாறாக மத்திய அரசின் ரயில்வே வரவு- செலவுத்திட்டத்தை வரவேற்று அறிக்கை விடுத்தார். அடுத்து வந்த பொது வரவு- செலவுத்திட்டத்தையும் வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறார். முன்பிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதும் அந்த ஆட்சியை வழிநடத்திய பிரதமர் மன்மோகன்சிங் மீதும் தொடுத்த ஏவுகணைகளை பா.ஜ.க. தலைமைய…
-
- 0 replies
- 594 views
-
-
பங்காளிக் கட்சியின் மத்தியில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்கிறார். வராவிட்டால் தீர்வு இல்லை என்கிற விடயத்தையும் அழுத்தமாகக் கூறியுள்ளார். சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு சுஸ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்றக்குழுவினர் இலங்கை வந்தாலும் அரசின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் கூட்டமைப்பு வருவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணனும் அரசின் சார்பில் பேசுகின்றார். அதேவேளை, அதிகார பகிர்வின் நீட்சி, மலையக …
-
- 0 replies
- 594 views
-
-
போதையால் மாறும் பாதை! ஜூன் 26, 2022 -த. சத்தியசீலன் ஜூன் 26: சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம். உலகில் சுமார் 3.6 கோடிக்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று ஐ.நா. சபையின் போதைப்பொருள் மற்றும் குற்ற ஆவண அலுவலகம் 2021-ஆம் ஆண்டு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனையாளர்கள் 27.5 கோடிக்கு மேல். ஆண்டுக்கு 2.50 இலட்சம் போ் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனா். கடந்த 10 ஆண்டுகளில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அது தொடா்பான கோளாறுகள் காரணமாக இறந்தவா்களின் எண்ணிக்கை 71சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது ஐ.நா. வின் அறிக்கை. இந்தியாவில் மட்டும் 1.4 கோடி போ் போத…
-
- 0 replies
- 594 views
-
-
தந்தை செல்வா, பிரபாகரனை போன்றே எனது அரசியலும் -- எம்.ஏ.சுமந்திரன் நான் இல்லை என்றல் பி2பி ஆரம்பித்து இருக்காது.
-
- 1 reply
- 594 views
-
-
கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டு , டெல்லியில் வளர்த்தவர் ஊடகவியலாளர் திரு ராஜேஷ் சுந்தரம் அவர்கள். ஜி டிவி, அல் ஜசீரா, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற பிரபல ஊடகங்களில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர். இலங்கையில் நடந்ததுபோர்க் குற்றம் என ஊடகங்கள் கூறி வந்த வேளையில், அங்கே நடப்பது ´இன அழிப்பு´ (genocide) என்கிற வார்த்தையை முதன்முதலாகப் பிரயோகப் படுத்திய நபர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவரது தலைமையின் கீழ் தான் ப்ரியம்வதா என்கிற பெண்மணி இலங்கைக்குள் துணிகரமாகச் சென்று, ரகசியமாகப் படப்பிடிப்பு நடத்தி அங்கே நிலவிய மனிதஉரிமை மீறல்களை ஹெட் லைன்ஸ் டுடே யில் ஆவணப் படமாக வெளியிட்டார். ஈழத்தமிழர் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க லண்டன் வந்த திரு ராஜேஷ் அவர்கள், இந்த வார இறுதி…
-
- 5 replies
- 594 views
-
-
நம்மிடம் நிலைத்த, வலிமையான, சர்வதேச சமூகத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தமிழ் ஈழம் அமைவதற்கான வாய்ப்பு கடந்த பத்தாண்டுகளாக கேட்பாரின்றி கிடந்தது. 'எமது துறைமுகங்களில்/நிலத்தில் உனக்கு எது/எவ்வளவு தேவையோ அதை நீ எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள். என் எதிரியை அழிக்க ஆயுதமும், பணமும் கொடுத்து , மற்ற நாடுகள் மனித உரிமை,ஜனநாயகம் என்று ஏதாவது சொன்னாலும் என்னை ஆதரி' என்பதே அது. நாம் அதை பயன்படுத்த தவறினோம். எதிரி பயன்படுத்திக்கொண்டான். அம்மாந்தோட்டையை சீனாவுக்கு தாரை வார்த்துகொடுத்தான். இந்தியாவுக்கு சுருக்கு கயிறு போடும் தன் திட்டம் நிறைவேறும் மகிழ்ச்சியில் சிங்களனே எதிர்பாராத அளவில் உதவிகளையும் ,ஆதரவையும் அள்ளி அள்ளி வழங்கினா…
-
- 1 reply
- 594 views
-
-
Seelan Ithayachandran வாழ்வதற்காய் போராடிய வரதன் - இதயச்சந்திரன் ...................................................................... தாய் மண்ணை நேசிப்பவர்கள் மரணிப்பதில்லை. மரணங்கள் நினைவுகளை அழிப்பதில்லை. காலம் கடந்து வாழும் வல்லமைகொண்ட நினைவுகள், மரணக்களத்தில் பதிவாவது வரலாற்றில் புதிதானதொன்றல்ல. அந்நினைவுகள் சுமந்த ஒடுக்கப்படும் இனம், தொடர்ந்து போராடும் ஆற்றலை, இழப்பின் வலிகளில் இருந்து உள்வாங்கிக் கொள்கிறது. அந்தவகையில், உயிர்ப்பூவை முன்னிறுத்தி, தேசத்தின் விடியலிற்காய் போராடிய ஆயிரமாயிரம் மாவீரர்கள் வரிசையில், தோழர் வரதனும் இணைந்து கொள்கிறார். உறுதிதளரா விடுதலை வேட்கையும், நேர்த்தியான செயல்வடிவமும், சக தோழர்களை மதிக்கும் மாண்பும், 'IPT வரதன்…
-
- 1 reply
- 594 views
-
-
தமிழரசின் எதிர்காலமும் சிறீதரன், சுமந்திரனின் பொறுப்பும் November 17, 2024 வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் தனியொரு கட்சியைச் சேர்ந்த கூடுதல் எண்ணிக்கையானவர்கள் என்றால் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே. தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னரும் இரு மாகாணங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்கள். ஆனால், இந்த தடவை நடந்திருப்பதைப் போன்று ஒரு தேசிய கட்சி அதுவும் ஓர் இடதுசாரிக்கட்சி தமிழ்பேசும் மக்களை பாரம்பரியமாக பிரதிநிதித்துவம் செய்துவந…
-
- 6 replies
- 593 views
-
-
டாக்டர் நெவில் பெர்னான்டோ கொரோனவால் பாதிப்பு. வைத்தியசாலையில் அனுமதிப்பு. இலங்கைத்தமிழர் அவலத்தில், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்கள கிறித்தவர்கள் கூட கைவரிசை காட்டி உள்ளனர். இன்று, பௌத்தம் இரு சாராரையுமே தனது சுஜரூபத்தினை காட்டி அடங்க வைத்துள்ளது. ஜேஆர் ஜயவர்தன காலத்தில், இந்த நெவில் பெர்னான்டோவுடன், சேர்ந்து பே-ராட்டம் நடத்திய இன்னொரு கிறிஸ்தவர் சிறில் மத்தியூ. இவர்கள் பௌத்தர்களும் பார்க்க, பெரும் இனவாதிகளாக, தம்மை காட்டிக் கொண்டது மட்டுமல்ல, நடந்தும் கொண்டனர். 1983 ஆண்டு தமிழர் மீதான வன்முறையில், (கலவரம் என்பது தவறு, அது ஒரு இனப்படுகொலை) இந்த சிறில் மத்தியூ பண்ணிய கொடுமைகள் சொல்லி மாளாது. சிறில் மத்தியூ, அரசியல் அனாதையாக இறக்க, அவர் மகன் நந்தா மத…
-
- 1 reply
- 593 views
-