Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேராசிரியர் கா.சிவதம்பி செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கிறார்‐ கருணாநிதி ‐அறிவிப்பு

Featured Replies

உடன்பிறப்பே என்று தனது ரத்தத்தின் ரத்தங்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில்,ஈழத்து மொழியறிஞர் பேராசிரியர் கா.சிவத்தம்பி செம்மொழி மாநாட்டிற்கு வருவது சந்தேகமே என்று ஒரு ஆங்கில நாளிதழும், வரவே மாட்டார் என்று இன்னொரு ஆங்கில நாளிதழும் சில நாளிதழ்களும் சிவதம்பி இந்த மாநாட்டிற்கு வந்து விடக்கூடாது என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்தி வெளியிடுகிறார்கள்.

திமுக தமிழுக்காக ஆண்டாண்டுகாலமாக அரும்பணியாற்றினாலும் இவர்கள் தங்களின் திருவிளையாடலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த சிறு நரிக் கும்பல் ஒன்றும். இந்த சிறு நரிக்கூட்டத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் விபீடணக் கூட்டமொன்றும். சில நெடுமறங்களும் ( நெடுமாறனைச் செல்கிறார்) நமக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

அதனால் உண்மையை மறைத்து ஜீரணிக்க முடியாத அளவுக்கு உண்மையை மறைத்து அன்றாடம் இவர்கள் வாந்தி எடுக்கிறார்கள். இவர்களுக்காக சில உதாரணங்களைச் சொல்கிறேன்.

உடன்பிறப்பே பேராசிரியர் சிவத்தம்பி எழுதிய முதல் கடிதத்தில் கால அவகாசம் போதாது என்றூ கால அவகாசம் கேட்டு கடிதம் எழுதினார்.

அவரது கோரிக்கையை ஏற்று கால அவகாசம் கொடுக்கப்பட்டது. பின்னர் அவரே மொழி தொடர்பான ஆய்வரங்கத்தில் ஐந்து தலைப்புகளில் கலந்துரையாட்லும், அறிக்கைகளையும். ஆய்வையும் செய்யலாம் என்று பரிந்துரைத்தார்.

இதை எல்லாம் மறைத்து விட்டு விபீடணக் கூடம் நம்முடன் விளையாடிப் பார்க்கிறது. பேரசிரியர் கா.சிவத்தம்பி ஆர்வத்தோடு முன் வந்து சொன்ன அறிவுரைகளின் படி அவரின் நேரடிப் பங்களிப்போடு மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெறும் என்கிற பொருள் தரும் படி கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இணைய இணைப்பு http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=16444&cat=1

  • தொடங்கியவர்

மேலதிக செய்திகள்

கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கைத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியும் பங்கேற்கிறார் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

வெளிநாட்டிலே உள்ள தமிழறிஞர்கள் கோவையில் 2010, ஜுன் திங்களில் நடைபெறவிருக்கின்ற, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வருவது சந்தேகமே என்று ஒரு பத்திரிகையிலும்; வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக இன்னொரு பத்திரிகையிலும்; வர இயலாதென மாநாட்டு நிர்வாகிகளுக்கு அந்த அறிஞர்கள் தெரிவித்துவிட்டார்கள் என்று மற்றொரு பத்திரிகையிலும்; தமிழ்-ஆங்கிலம் என்ற வேறுபாடின்றி ஒருமித்த உணர்வுடன், அவர்கள் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன்(!) நாள்தோறும் தமிழகத்தில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

தி.மு.க.வினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், மொழி-இன முன்னேற்றத்திற்காக, எந்தவொரு நற்செயலில் ஈடுபட்டாலும், அதனை நையாண்டி செய்கிற நச்சு நாக்கினர், தமிழகத்தில் ஆண்டாண்டுக் காலமாக தங்களின் திருவிளையாடல்களை நடத்தியே வந்திருக்கிறார்கள்! அந்த விளையாட்டுகள் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்களிடம் செல்லுபடியாகாமல் போய்விட்டக் கதைகளை காலம் காலமாகத் தமிழ் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்.

சீரிய செயல்கள் எதுவாயினும், அது நமது செம்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அதைப் பேசும் மக்களின் முன்னேற்றத்திற்கும் பயன்பட்டுவிடாமல், விழிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிற சிறுநரிக் கும்பலொன்றும், அந்தக் கும்பலின் காலடியில் கும்பிட்டுக் கிடக்கும் விபீடணக் கூட்டமொன்றும், நமது செயல்பாடுகளின் வெற்றிமுகடு சிகரங்களைத் தொட்டுவிடாமல் தடுத்து நிறுத்துவதை, தாங்கள் பிறவி எடுத்ததன் பயனாகக் கருதியிருக்கின்றார்கள்.

அந்தச் சந்ததியினர் முழுமையாகப் பட்டுப்போகவில்லை என்பதற்கு சான்றாக, இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தலைதூக்கித் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அடையாளம் தான், நமது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு ஈழத்துச் சிவத்தம்பி போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் வந்துவிடாமல் தடுக்க, இங்குள்ள `நெடுமரங்கள்' சில பெருமுயற்சி மேற்கொண்டு, தடுப்பணைகளாகச் செயல்படத் துடிக்கின்றார்கள்.

அவையெல்லாம், மழை பொழியும்போது, மழலையர் மணலைக் குவித்துக் கட்டும் அணைகளாகவே உடனடியாகக் கரைந்துவிடுகிற காட்சியைக் காணமுடியும்.

ஈழத்துத் தமிழறிஞர் சிவத்தம்பி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வரப்போவதில்லை என்பதுபோன்ற ஒரு சூசகச் செய்தியை வெளியிடுகின்ற அந்தத் தமிழ் - ஆங்கில ஏடுகள், எவ்வளவு ஜீரணிக்க முடியாதப் பொய்யை விழுங்கி விட்டு, அதனை மக்கள் மத்தியிலே வாந்தி எடுத்துள்ளன என்பதை, இதோ சில உதாரணங்கள் மூலமாகச் சுட்டிக் காட்டுகிறேன்!

எந்த தமிழறிஞர் சிவத்தம்பி மாநாட்டிற்கு வரமாட்டார் என்று கூறுகிறார்களோ, அந்த சிவத்தம்பி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கப் பணிகளுக்காக முன்னதாகவே வருவதாகத் தெரிவித்திருப்பதோடு; விவாதிக்கக் கூடிய கருத்துகள் என்ற தலைப்பில் ஐந்து பொருண்மைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் வழங்கியிருக்கிறார். அவையாவன:

1. செம்மொழிகள் பற்றிய கொள்கைகள் மற்றும் தமிழ் அல்லாத உலக செம்மொழிகள் பற்றிய கொள்கைகள் (சைனீஸ், கிரீக், சமஸ்கிருதம், லத்தீன் மற்றும் ஹீப்ரு)

2. இந்திய செம்மொழிகளின் சட்டப்பூர்வமான நிலைகள்.

3. இந்திய மொழி வம்சம் பற்றிய அறிமுகம்;

சமேரியன் மொழியும் தமிழும், தமிழும் ஜப்பானிய மொழியும்,

இந்தோ-ஆரியன், முண்டாரி, இந்தோ ஆரியனும் திராவிடமும்,

இந்திய பழங்குடியின மொழிகளுடன் தமிழுக்குள்ள தொடர்புகள்.

4. செம்மொழியாக தமிழ்;

இலக்கிய நடை, இலக்கியம் அல்லாத வகை - மருத்துவம், வான சாஸ்திரம் மற்றும் ஜோதிடம்

மேற்கத்திய ஆட்சிக்கு முன்பு நிர்வாகத்தில் தமிழ், கல்வெட்டு தமிழ்,

நிர்வாக மொழியாக தமிழ், 1. இந்தியாவில் 2. இலங்கையில் 3. சிங்கப்பூரில்

மலேசியாவில் தமிழின் பயன், தென்னாப்பிரிக்கா, மொரீஷியசில் தமிழின் பயன்.

மேற்கத்திய நாடுகளில் சமகால மொழியாக இருந்த தமிழ்

5. இங்கிலாந்து , அமெரிக்கா , ரஷியா மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய கண்டங்களில் தமிழ் கல்வி.

தொடக்கத்தில், அவர் எழுதிய கடிதத்தில், மாநாட்டிற்குக் கால அவகாசம் குறைவாக இருப்பதாகவும், தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்வதற்கு வசதியாக இடைக்காலம் ஒரு ஆறு மாதமாவது அவசியமாகும் என்றும் எழுதியிருந்ததை ஏற்றுக்கொண்டுதான்; முதலில் 2010 ஜனவரி 21 முதல் என்று குறிப்பிட்டிருந்த தேதியை, 2010 ஜுன் 24 முதல் 27 வரை என்று மாற்றியமைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கத்தைப் படிக்கும் விஷமிகள், வேண்டுமென்றே அவர்கள் இட்டுக்கட்டிச் சொன்ன பொய்க்கு வருந்தப் போகிறார்களா; இனியேனும் திருந்தப் போகிறார்களா; அல்லது அடடா, பொய் கூறி அவமானப்பட்டுவிட்டோமே என்று எதையேனும் அருந்தப் போகிறார்களா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி .

நன்றி தட்ஸ் தமிழ் http://thatstamil.oneindia.in/news/2009/10/27/tn-karthikesu-sivathambi-coming-to-coimbatore.html

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் திரு.சிவத்தம்பி அவர்கட்கு,

உலகச்செம்மொழி மாநாடு எனும் பெயரில் கருனாநிதி தனது அரசியல் கொள்கையின் கபடநாடகத்தின் ஒரு அங்கத்தினை நடாத்தி ஈழத்தில் தமிழின அழிப்பினை நியாயப்படுத்த முயல்கின்றான். இதில் நீங்கள் கலந்துகொள்வீர்களாகவிருந்தால், தமிழின அழிப்பினைத் திட்டமிட்டே நடாத்தி வெற்றிமமதையில் எக்காளமிட்டுச சிரிக்கும், மகிந்தவின் மாநாடு தொடர்பான வாழ்த்துச் செய்தியினை உங்கள்வாயாலேயே படிக்கவைத்து உங்களையும் துரோகியாக்குவான் அதற்குத் தயாரெனில் மாநாட்டில் பங்குபற்றவும். மேலும் ஈழத்தமிழினம் தங்களை தமக்குக்கிடைத்த பெரும்தமிழச்சொத்தாகக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றது. அவர்களது அநத எண்ணத்தில் இம்மியளவும் மாறுதல் ஏற்படாது காப்பது தங்கள்கடன். ஆகவே இம்மாநாட்டில் பங்கேற்காது விடுவீர்களாகவிருந்தால், அதுவே கருனாநிதியின் கபடத்தனத்தைத், தமிழறிந்தோர் மத்தியில் தோலுரித்துக் காட்டும் ஓர் சம்பவமாய் இருக்குமென்பது எனது தாழ்மையான கருத்து. ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்தின் அபிப்பிராயங்களுக்கு ஒத்திசைவாக கருனாநிதியினது முகத்தில் காறிஉமிழ்கின்ற இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள் என மன்றாட்டமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்விண்ணப்பத்தை தங்கள்முன் வைக்கும் தார்மீக உரிமை எனக்கிருக்கின்றது காரணம் எமது இனத்தின் விடுதலைக்கான போரினில் பலவேறு துன்பங்களைச் சுமந்து நடைபிணமாக வாழகின்ற எண்ணற்ற தாயகத்தமிழனில் நானுமொருவன்

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் சிவத்தம்பி அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்களை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.

அதாவது உலகத்தமிழ் மாநாடு நல்ல விடயம் என்றும் , ஆனால் அதனை நடத்துவதற்குரிய தருணம் இதுவல்ல என்றும் குறிப்பிட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

என்னைப் பொறுத்தவரையில் பேராசிரியர் சிவத்தம்பி இந்த மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்றே நினக்கின்றேன்.

அதனை விட இந்த மாநாட்டிற்கான இலச்சினையை ( லோகோ ) கருணாநிதி ..... உலகத்தமிழ் அமைப்பின் தலைவரிடம் தெரிவிக்காமல் வெளியிடப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகின்றது.

இதிலிருந்து ...... இந்த மாநாட்டை அவசரப்பட்டு நடத்துவதால் யார் லாபம் பார்க்க முனைகின்றார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

logcm.jpg

மேலதிக கருத்துக்களுக்கு தமிழ்நாடு ரோக்கில் வந்த தலைப்பை படித்துப் பாருங்கள்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/16879-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/page__pid__307358__st__0&#entry307358

கருனாநிதியின் செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் திரு. சிவத்தம்பி அவர்கள் பங்குபற்றுவதை தவிர்க்கவேண்டும் என தமிழர் அமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டு கருனாநிதிக்கு எமது எதிர்பபை பதிவு செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் இணைப்பு‐ உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை பேராசிரியர் கா.சிவதம்பி புறக்கணிக்க வேண்டும் ‐ சிவதம்பிக்கு ஒரு உலகத் தமிழனின் கடிதம். நிட்சயமாகக் கலந்து கொள்ள மாட்டேன் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உடன் பதிலளித்துள்ளார் பேராசிரியர்‐மகாநாட்டைப் புறக்கணிப்பது பேராசிரியருக்கு ஏற்புடையதல்ல ‐ கவிஞர் மு. மேத்தா ‐ பேராசிரயரின் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது

October 25, 2009

இலங்கைத் தமிழர் நிலை குறித்து கலைஞர் கருணாநிதி தனது உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்காமை குறித்து இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ப்தி தொடர்கிறது. இந்தக் கருத்தில் தனக்கும் உடன்பாடு இருப்பதனால் இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என பேராசிரியர் சிவத்தம்பி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த மகாநாட்டைப் புறக்கணிப்பது ஒரு தமிழ் அறிஞருக்கு அல்லது பேராசிரியருக்கு ஏற்புடையது அல்ல என கவிஞர் மு. மேத்தா தெரிவித்துள்ளார். எனினும் பேராசிரியரின் முடிவை ஆதரித்துள்ள கவிஞர் இன்குலாப் அவரது செய்தி மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய பேராசிரியர் கா.சிவத்தம்பிக்கு,

முதுமை காரணமாக ஏற்படும் உடல் சோர்வோடு இலங்கையில் நீங்கள் வசித்து வருவதாக அறிந்தேன். மகிழ்ச்சி எல்லாம் இல்லை. ஆனால் மனித வளத்தை இழந்து விட்ட ஈழத் தமிழினத்திற்கு ஆக்க பூர்வமான உங்கள் பணிகள் எமது எதிர்காலக் குழந்தைகளுக்குத் தேவை. ஆமாம் அறிவாயுத்தத்தை எமது அடுத்த சந்ததி ஏந்த வேண்டும் என்ற அலாதி ப்ரியத்தோடு எங்களுக்கான வழிகாட்டியாக திகழ வேண்டிய உங்களுக்கு இம்மடல் எழுத நேர்ந்த சூழல் துரதிருஷ்டவசமானது.

வருகிற ஜூன் மாதம் தமிழகத்தின் கோவையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத் தலைவராக நீங்கள் கலந்து கொள்ளப் போவதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் சூழலிலேயே இக்கடிதத்தை எழுத நேர்ந்தது.

எனது மனதுக்குப் பட்டத்தை ஒளிவு மறைவில்லாமல் சரி என்று பட்டால் பெரியவரான் நீங்கள் இக்கடிதத்தை பரிசீலிப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லை இதை ஒரு பொருட்டாக நீங்கள் நினைக்கவில்லை என்றால் தாரளமாக நீங்கள் ஈழ மக்களின் பிரநிதியாக உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குச் சென்று வரலாம். நான் உங்களுக்கு எழுத நினைத்ததை எழுதி விடுகிறேன்.

ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு. மூன்று லட்சம் வன்னி மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு போர்க் கைதிகளாக சித்திரவதை செய்யப்படுகிறார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக வன்னி மக்கள் மீது பேரினவாத இலங்கை அரசு ஈவிரக்கமற்ற முறையில் முன்னெடுத்த போரும் அதன் விளைவாக நடந்து முடிந்த மாபெரும் மனிதப் பேரவலமும், முகாம்களில் நடந்த எண்ணிலடங்கா கொலைகளும், பாலியல் வன்முறைகளும், காணாமல் போதலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் ம்ககளை பெரும் அச்சத்திலும், ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியிருக்கிறது.

கடந்த முப்பதாண்டுகாலமாக ஆயுதப் போராட்டத்தை ஏக போக உரிமையோடு தங்கள் கையில் எடுத்துக் கொண்ட விடுதலைப் புலிகளின் தீர்க்கதரிசனமற்ற அணுகுமுறையும் இந்தப் பேரவலங்களுக்கு ஒரு காரணம் என்பதில் நமக்கோ, ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகளுக்கோ மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் ஆயுதப் போராட்டமே எமது மக்களுக்கு விடிவு தரும் என்று நம்பி புலிகள் அமைபில் இணைந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குடும்பங்களோடு இறுதிப் போரின் போது ஈவிரக்கமற்ற முறையில் பேரினவாத பாசிச இலங்கை அரசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் புலிகளின் போராட்டம் மீதும், அவர்களின் ஜனநாயகப் படுகொலை மீதும் விமர்சனம் வைக்கும் பலரும், இலங்கை அரச பயங்கரவாதிகளோடு சேர்ந்தியங்கும் சூழல் இன்று புலம்பெயர் நாடுகளில் நடந்து வருகிற நிலையில், புலிகளை விமர்சிக்கும் பலரும் இலங்கை அரசு குறித்து மௌனம் சாதிக்கிறார்கள்.

இதை எல்லாம் நீங்கள் கவனிக்காமல் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். போருக்குப் பின்னர் இலங்கையில் தமிழர்களின் பாரம்பரீய தாயகப் பிரதேசங்களை பூகோள ரீதியாக மாற்றியமைக்கும் பணியினை இலங்கை அரசு முழு வீச்சுடன் செய்து வருகிறது.

வடக்கு, கிழக்கின் எல்லையோர கிராமங்கள் நகரங்களோடு இணைக்கப்பட்டு அங்கு பெருமளவிலான சிங்களக் குடியேற்றங்களை நிறுவி, அதனுள் இராணுவ முகாம்களை அமைத்து அதற்கு மத்தியில் தமிழ் மக்களை குடியேற்றவும்., ஒரு இடத்திலுள்ள மக்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு தொடர்பில்லாத இன்னொரு இடத்தில் குடியமர்த்துவதும், வேரோடு பிடுங்கி புதிய நிலங்களில் அவர்களை தள்ளுவதும் இலங்கையில் நடந்து வருவதாகத் தெரிகிறது.

முகாம்களில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் உண்மையான எண்ணிக்கையை இதுவரை வெளியிடாத இலங்கை அரசு மிக மோசமான படுகொலைகளை முகாம்களுக்குள் இன்று வரை நடத்திவருவதாகத் தெரிகிறது. கேட்க நாதியற்ற ஒரு கூட்டமாக ஈழத் தமிழர்கள் இன்று நிர்கதியாய் விடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் தமிழகத்தைச் சார்ந்த திமுக, காங்கிரஸ் ஆதரவு எம்பிக்கள் குழு ஒன்று முகாம்களை பார்வையிட்டு முகாம்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளதாக இலங்கை அரசே அறிவித்திருக்கிறது.

கொடூரமான போர் நடந்து கொண்டிருந்த மே மாதத்தில் உண்ணாவிரத நாடகம் ஒன்றை நடத்திய கருணாநிதி போர் முடிவுக்கு வந்து விட்டதாக உண்ணாவிரத்திலிருந்து மூன்று மணி நேரத்தில் எழுந்து சென்றதும் அதையொட்டி போர் நடப்பதாக எந்த ஒரு இடத்திலும் கருணாநிதியும் அவரது ஆதரவு ஊடகங்களும் பேசாமால் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டிருந்ததும். நாம் வரலாற்றில் காண்ட மாபெரும் துரோங்களாகும்.

போருக்குப் பின்னர் கூட மக்கள் படுகொலை குறித்தோ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனைகள் குறித்தோ, கருணாநிதி வாயே திறந்ததில்லை.

இனப்படுகொலை ஆவணம் ஒன்று வெளியானபோது கூட அது குறித்து சந்தேகத்தை வெளியிட்டவர் கருணாநிதி. ஈழத் தமிழர் மீதான போரின் வேதனை உலகத் தமிழர்களின் மனங்களில் ஆறாத ரணமாக வலித்துக் கொண்டிருந்த காலத்தில், புலிகளின் சகோதரப்படுகொலை குறித்து மீண்டும் மீண்டும் பேசிய கருணாநிதி இலங்கை அரசின் படுகொலைகள் குறித்து இன்றுவரை வாயே திறக்கவில்லை.

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கேள்விகளற்ற முறையில் கொல்லப்பட்ட மே மாதத்தில் டில்லிக்குச் சென்று இந்திய மத்திய அரசிடம் பதவி பெறுவதிலேயே குறியாக இருந்த கருணாநிதி ஒரு முறைகூட ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை நேரடியாக அணுகியதில்லை.

ஈழத் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக கிண்டலும் கேலியுமாக மத்திய அரசுக்கு கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார். இப்படி ஏராளமான மனவருத்தங்கள் கருணாநிதி மீது நமக்கு உண்டு.

சமீபத்தில் இலங்கைக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணமாக சென்ற எம்பிக்கள் குழு சென்று வந்த பின்பு முகாம்களுக்குள் உள்ள மக்களை இலங்கை அரசு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கையில் கொடுத்து அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வருவதாக முழுமையான பொய்யை சொல்லியிருக்கிறார்.

உலக நாடுகள் இலங்கை மீதான இனப்படுகொலைக்கு விசாரணை வேண்டும் என்று குரல் கொடுக்கத் துவங்கியிருக்கும் நிலையில் கருணாநிதியோ போரின் போதும் சரி, போர் முடிந்த பிறகும் சரி பேரினவாத இலங்கை அரசை பாதுகாக்கிறார்.

அதற்காக எத்தகைய பொய்களையும் கூசாமல் தனது ஆதரவு ஊடகங்கள் மூலம் பரப்பி வருகிறார். உலகத் தமிழர்களின் தலைவ்ர் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் கருணாநிதி மீது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கடும் வெறுப்புற்றனர்.

இந்த வெறுப்பை மறைக்கவும் உலகத் தமிழர்களின் நன் மதிப்பு தனக்கு மட்டுமே உண்டு என்பதை நிரூபிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் இன்று கருணாநிதி வந்து சேர்ந்திருக்கிறார். அதனுடைய வெளிப்பாடுதான் உலகத் தமிழ் மாநாடு.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இம்மாநாட்டிற்கு முறையான அனுமதி கூட வழங்காத நிலையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற ஒன்றை தனது விருப்பத்திற்கு அறிவித்திருக்கிறார். இவருடைய விருப்பத்தை அனைத்து தரப்பினரும் ஏற்று நடக்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கிறார்.

தமிழகத்தில், வைரமுத்து, குழந்தைசாமி, மு.மேத்தா, அப்துல்ரகுமான், தமிழண்ணல், நன்னன், பொற்கோ போன்ற தனது தமிழறிஞர் விசுவாசிகளைக் கொண்டு நடத்தப்படும் இம்மாநாடு தமிழகத்தில் உள்ள தமிழர்களாலும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களாலும் வெறுக்கப்படுகிறது. காரணம் ஈழப் படுகொலைகள். தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது தமிழை மட்டும் வாழவைக்கப் போவதாக கருணாநிதி சொல்வது மிகவும் அபத்தமானது.

தவிரவும் தமிழ் மொழி பேசும் மக்கள் இலங்கையில் படுகொலையான போது அதற்கு உதவாத கருணாநிதி, அவர்கள் பேசும் மொழிக்கு மட்டும் உதவுவது இழவு வீட்டில் கொளுத்தப்படும் வாண வேடிக்கை போன்றது.

இந்த மாநாடு இப்போது அவசியம் இல்லை. அரசியல் ரீதியாக தன்னை புனரமைப்பு செய்து சிவில் உரிமைகளை வென்றெடுத்து இயல்பாக தமிழ் மக்கள் வாழ முடியாத மன வேதனையில் ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இருக்கிறார்கள். போர்க்குற்றவாளிகளாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ, சரத்பொன்சேகா, பசில், கோத்தபய, போன்றோரை கூண்டிலேற்றும் வரை இந்த மன வேதனை தொடரும் என்னும் நிலையில், இது குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் உலகத் தமிழர்கள் சகஜமாக தன்னை வாழ்த்திக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இம்மாநட்டை கருணாநிதி நடத்துகிறார்.

இம்மாநாட்டில் ஆய்வரங்கக் குழுவுக்கு ஈழத்து அறிஞரும் உலகத் தமிழர்களின் நன் மதிப்பைப் பெற்றவருமான நீங்கள் நியமிக்கப்பட்டிருபப்தாகத் தெரிகிறது. உண்மையில் ஈழத் தமிழர் படுகொலையாலேயே இம்மாநாடு தொடர்பான அதிருப்தி உருவாகும் சூழலில் ஈழத் தமிழ் அறிஞர் ஒருவரையே இதில் தலைவராக நியமிப்பதன் மூலம் ஈழத் தமிழ் அறிஞர் சிவத்தம்பியே இந்த மாநாடில் கலந்து கொண்டார் இதை விட வேறு எவருடைய அங்கீகாரமும் எனக்குத் தேவையில்லை என்று கருணாநிதி நாளை கணக்குக் காட்டக் கூடும். இப்படியான ஒரு காலச் சூழலுக்குள் கருணாநிதியின் சூதாட்டத்திற்கு நீங்கள் துணை போகப்போகிறீர்களா?

தமிழறிஞர்கள் எனப்படுவோர் குறித்து,

பொதுவாக மன்னர் காலத்தில் மன்னர்களைப் புகழ்ந்து பாடி பொற்கிழிகளும், பரிசில்களும் வாங்கிச் செல்வதுதான் தமிழறிஞர்களின் பணியாக இருந்து வந்துள்ளது. இவர்கள் எக்காலத்திலும் மக்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. மன்னர்கள் உழைக்கும் மக்களின் நிலங்களை கோவில் பூசாரிகளுக்கும் பெரும் பண்ணைகளுக்கும் இம்மாதிரியான அறிஞர்களுக்குமே அள்ளிக் கொடுத்து வந்தனர்.

ஆனால் இன்று மன்னராட்சி இல்லை மக்களாட்சி என்று சொல்லப்படுகிறது. நவீன மன்னனாக உருவாகியிருக்கும் கருணாநிதியை புகழ்ந்து பேசி பரிசுகளும், அரசு சலுகைகளும். ஆட்சியாளர்களின் சன்மானங்களும் பெறுகிறவர்கள்தான் கவிஞர் வைரமுத்துவும், அப்துல்ரகுமானும், தமிழண்ணலும், சிலம்பொலி செல்லப்பனும், பொற்கோவும், இன்னபிற கவிஞர்களும். பெருந்தொகையான மக்கள் படுகொலையான போது இந்தக் கவிஞர்களின் பேனாக்கள் அம்மக்களுக்காக ஒரு வரியாவது எழுதியது உண்டா?

ஆனால் கருணாநிதியை புகழ வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் அதை தவறாமல் பயன்படுத்திக் கொண்ட இந்த தமிழ் கவிஞர்களுக்கு மத்தியில்தான் மக்கள் கவிஞர் இன்குலாப் மாதிரியான தமிழறிஞர்களும் இம்மாநாட்டை புறக்கணித்திருப்பதோடு தமிழறிஞர்கள் இதை புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறார்கள்.

தவிரவும் கருணாநிதியை துதிபாடும் இந்த தமிழறிஞர்களுக்கு இன்று என்னதான் மரியாதை? ஈழ மக்களின் மன அவலத்தை புரிந்து கொள்ளாமல் எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது என்கிற தொனியில் பேசும் கருணாநிதியும் சரி ஈழ மக்கள் படுகொலையை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்திய தமிழக அரசியல் வாதிகளும் சரி இன்று உலக அளவில் அவமானப்பட்டு அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

இம்மாதிரியான சூழலில், கடந்த காலங்களில் அரசதிகாரங்களுக்கு துதி பாடாமல் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவித்து வந்த நீங்கள் தமிழின் நவீன வடிவ நுண்மை வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பு காத்திரமானது என நம்புகிறோம்.

திராவிட இயக்க அரசியல் போக்கு, தமிழ் மொழி என ஏராளமான உபயோகமான அய்வுகளைச் செய்தவர் நீங்கள். அந்த மரியாதை உங்கள் மீது எமக்கு உண்டு. ஆனால் இந்த மாநாட்டில் நீங்கள் கலந்து கொள்ள இசைந்துள்ளது எமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

நீங்கள் ஈழத் தமிழர்களின் பெயரால் மாநாட்டிற்குச் செல்வீர்கள் என்றால் அது ஈழச் சமூகத்திற்கு பெரும் பாதகமாக அமைப்பும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மக்களைப் பற்றிக் கவலைப் படாத அரசனைப் புகழ்ந்து பாடும் தமிழறிஞராக நீங்கள் இருக்கப் போகிறாரா? அல்லது தமிழனைப் பற்றிக் கவலைப் படாது தமிழ் மொழியைப் பற்றி கவலைப்படும் தமிழறிஞராக இருக்கப் போகிறீர்களா? நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் இன்னப்படுகொலையினால் ஈழத் தமிழினம் துன்புற்றிருக்கும் நிலையில் இம்மாநாட்டை நீங்கள் மக்களுக்காக புறக்கணிக்க வேண்டும். நீங்கள் மட்டுமல்ல ஈழத்தின் கலை, இலக்கியம், நாடகம், என்னும் எத்துறை அறிஞர்கள் என்றாலும் அவர்களும் பொறுப்புணர்ந்து இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்பதே நமது ஆசை. மற்றபடி நீங்கள் இம்மாநாட்டிற்குச் செல்வீர்கள் என்றால் சிவதம்பியே செல்கிறார் நான் செல்லக் கூடாதா? என்று பலரும் இம்மாநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. உங்களின் பதிலை எதிர்பாத்து வேதனையுடன் காத்திருக்கும்.,

உங்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட,

ஒரு உலகத் தமிழன்.

உடல் நிலை காரணமாக கலந்து கொள்வது சந்தேகம் என்று பீ.பீ.சி க்கு பேட்டி அளித்துள்ளார்

உடல் நிலை காரணமாக கலந்து கொள்வது சந்தேகம் என்று பீ.பீ.சி க்கு பேட்டி அளித்துள்ளார்.

சிவத்தம்பி இரு தினங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழர்களின் நிலையையே காரணமாகக் கூறி, தான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேனென்பதை உறுதியாக மாநாட்டுப் பொறுப்பாளர்களுக்கு கூறிவிட்டதாக பிபிசி பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால் நேற்றைய தமிழக முதல்வரின் செய்தியின் பின், சிவத்தம்பி அப்படியே பல்டி அடித்து, தான் சொன்ன செய்தி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகவும், தான் கலந்து கொள்வது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லையென்றே கூறியதாகவும் பிதற்றியுள்ளார். இவரது குரலிலேயே ஒலிபரப்பிய செய்தியை இவரே தனது செய்தி தவறாக விளங்கிக் கொள்ளப்படுவதாக பிதற்றுவது வேடிக்கையிலும் வேடிக்கை (ஒரு தமிழ்ப்பேராசிரியராக இருந்து கொண்டு).

தனது உடல்நிலை பற்றிய எந்தத் தகவலையும் முன்னைய பேட்டிகளில் சொல்லாத சிவத்தம்பி, நேற்றைய பிபிசி பேட்டியில் மட்டும் தான் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமல் போனால் அதற்கு தனது உடல் நிலையே காரணம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் சிவத்தம்பி இலங்கைத் தமிழர்களின் நிலையினாலேயே மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டாரென, வந்த செய்திகள் அனைத்தையும் பொய்யாக்கி விட்டார்.

சிவத்தம்பி இப்படி பல்டி அடித்து அறிக்கைகள் விடுவதே, நிச்சயம் மாநாட்டில் இவர் கலந்து கொள்வாரென்பதை கட்டியம் கூறுகின்றது. அதை உறதிசெய்வது போலவே மாநாட்டில் என்னென்ன விடயங்களை ஆராயலாம் என்ற தனது கருத்துகளையும், இவர் அப்பப்போ மாநாட்டு குழுவிற்கு தெரிவித்தும் வருகின்றார். மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால், அன்றைய தினம் தான் ஏன் மாநாட்டில் கலந்து கொள்கின்றேனென்பதற்கும் சாதகமான ஒரு அறிக்கையை விட்டுவிட்டு ஓடிப்போய் கலந்து கொள்வார். ஏனெனில் மாநாட்டில் சிவத்தம்பி கலந்து கொள்ளாது விட்டால், மாநாட்டிற்கு எந்தவித இழப்புமில்லை, இழப்பு சிவத்தம்பிக்குத் தானென்பதை அவர் அறியாதவருமில்லை.

அதனை விட இந்த மாநாட்டிற்கான இலச்சினையை ( லோகோ ) கருணாநிதி ..... உலகத்தமிழ் அமைப்பின் தலைவரிடம் தெரிவிக்காமல் வெளியிடப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகின்றது.

இதிலிருந்து ...... இந்த மாநாட்டை அவசரப்பட்டு நடத்துவதால் யார் லாபம் பார்க்க முனைகின்றார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்.

logcm.jpg

தற்போது நடைபெறவுள்ள மாநாடு தமிழாராச்சி மாநாடல்ல, தமிழ் செம்மொழி மாநாடு. தமிராராச்சி மாநாடு நடத்த ஒரு வருட கால அவகாசம் வேண்டுமென தமிழாராச்சி மாநாடுகளை நடத்துவதற்கு பொறுப்பாகவுள்ள அமைப்பின் தலைவர் தெரிவித்ததால், மாநாட்டை தற்போது தமிழ் செம்மொழி மாநாடாக பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. (இந்த அமைப்பு தமிழாராச்சி மாநாடுகளை நடத்துவதற்கு பொறுப்பாகவுள்ள அமைப்பே தவிர, உலகத்தமிழ் அமைப்பல்ல. இதன் தலைவர் உலகத்தமிழர்களின் தலைவருமல்ல.) இதனால் தமிழாராச்சி மாநாட்டை நடத்துவதற்கு பொறுப்பாகவுள்ள அமைப்பு, இந்த மாநாட்டிற்கு பொறுப்பாக முடியாது. அதனால் இந்த மாநாட்டின் இலச்சினை சம்மந்தமாக அவர்களிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமுமில்லை. இதனைப் புரியாமல் மனம் போன போக்கில் கட்டுரை எழுதுகின்றன சில ஊடகங்கள்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

------

தற்போது நடைபெறவுள்ள மாநாடு தமிழாராச்சி மாநாடல்ல, தமிழ் செம்மொழி மாநாடு. தமிராராச்சி மாநாடு நடத்த ஒரு வருட கால அவகாசம் வேண்டுமென தமிழாராச்சி மாநாடுகளை நடத்துவதற்கு பொறுப்பாகவுள்ள அமைப்பின் தலைவர் தெரிவித்ததால், மாநாட்டை தற்போது தமிழ் செம்மொழி மாநாடாக பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. (இந்த அமைப்பு தமிழாராச்சி மாநாடுகளை நடத்துவதற்கு பொறுப்பாகவுள்ள அமைப்பே தவிர, உலகத்தமிழ் அமைப்பல்ல. இதன் தலைவர் உலகத்தமிழர்களின் தலைவருமல்ல.) இதனால் தமிழாராச்சி மாநாட்டை நடத்துவதற்கு பொறுப்பாகவுள்ள அமைப்பு, இந்த மாநாட்டிற்கு பொறுப்பாக முடியாது. அதனால் இந்த மாநாட்டின் இலச்சினை சம்மந்தமாக அவர்களிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமுமில்லை. இதனைப் புரியாமல் மனம் போன போக்கில் கட்டுரை எழுதுகின்றன சில ஊடகங்கள்.

என்ன மாநாடோ ..... தமிழின் பெயரால் அவசரமாக ஒரு மாநாட்டை நடத்த முத்தமிழ் காவலருக்கு உள்ள அவசரத்தை பார்க்க புல்லரிக்குது.

என்ன மாநாடோ ..... தமிழின் பெயரால் அவசரமாக ஒரு மாநாட்டை நடத்த முத்தமிழ் காவலருக்கு உள்ள அவசரத்தை பார்க்க புல்லரிக்குது.

முதலாவது தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கி வைக்கும் முத்தமிழ்காவலர் மு.க வுக்கு வாழ்த்துக்கள்

ஜக்கிய நாடுகள் சபையில் தமிழில் பேசிய மகிந்தாவுக்கு உலக செந்தமிழ்காவலர் என்ற பட்டத்தை மு.கருனா நிதி வழங்கி கெளரவிப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கி வைக்கும் முத்தமிழ்காவலர் மு.க வுக்கு வாழ்த்துக்கள்

ஜக்கிய நாடுகள் சபையில் தமிழில் பேசிய மகிந்தாவுக்கு உலக செந்தமிழ்காவலர் என்ற பட்டத்தை மு.கருனா நிதி வழங்கி கெளரவிப்பார்

கருணாநிதிக்கு நல்ல ஐடியா எடுத்துக் கொடுக்க என்றே .... ஒரு கூட்டம் யாழில் இருக்குது.

சும்மா இருங்கப்பா ..... அந்தாள் இதை செய்தாலும் செய்து போடும். :wub:

என்ன மாநாடோ ..... தமிழின் பெயரால் அவசரமாக ஒரு மாநாட்டை நடத்த முத்தமிழ் காவலருக்கு உள்ள அவசரத்தை பார்க்க புல்லரிக்குது.

தற்போது அவசர அவசரமாக மாநாடு நடத்தப்படவில்லையேய. 2010 ம் ஆண்டு ஆனி மாத இறுதியில் தான் மாநாடு நடைபெறவுள்ளது. 2011 இல் சட்டமன்ற தேர்தல் வருவதால் அப்போது நடத்த முடியாது. அத்தோடு அப்போது இப்படியான மாநாடுகளை நடாத்த தேர்தல் ஆணையமும் அனுமதிக்காது. இப்ப பலருக்குப் பிரைச்சினை இந்த மாநாடல்ல. அதை தமிழக முதல்வர் கருணாநிதி நடத்துவது தான் பிரைச்சினை.

முதலாவது தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கி வைக்கும் முத்தமிழ்காவலர் மு.க வுக்கு வாழ்த்துக்கள்

ஜக்கிய நாடுகள் சபையில் தமிழில் பேசிய மகிந்தாவுக்கு உலக செந்தமிழ்காவலர் என்ற பட்டத்தை மு.கருனா நிதி வழங்கி கெளரவிப்பார்

:wub:பிறகென்ன Jil இன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். :(

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது அவசர அவசரமாக மாநாடு நடத்தப்படவில்லையேய. 2010 ம் ஆண்டு ஆனி மாத இறுதியில் தான் மாநாடு நடைபெறவுள்ளது. 2011 இல் சட்டமன்ற தேர்தல் வருவதால் அப்போது நடத்த முடியாது. அத்தோடு அப்போது இப்படியான மாநாடுகளை நடாத்த தேர்தல் ஆணையமும் அனுமதிக்காது. இப்ப பலருக்குப் பிரைச்சினை இந்த மாநாடல்ல. அதை தமிழக முதல்வர் கருணாநிதி நடத்துவது தான் பிரைச்சினை.

-----

1966 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை தொடர்ந்து நடத்தாமல் ..... செம்மொழி மாநாடு என்று தனியே ஒரு மாநாடு அமைக்க வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு ஏன் ஏற்பட்டது.

2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதால் , உலகத்தமிழ் மாநாட்டை நடத்த தேர்தல் ஆணையம் எதிர்க்கும் என்பது உங்கள் ஊகமாக இருக்கலாம்.உலகத்தமிழ் மாநாடு என்பது , தி.மு.க. வின் கட்சி மாநாடு அல்ல‌.

‍இங்கு கருணாநிதி நடத்துவதை ஒருவரும் எதிர்க்கவில்லை .

அவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் எல்லாம் ..... அவநம்பிக்கையை ஏற்படுத்தியது அவ்வளவே.

உதாரணத்துக்கு ;

காலை சாப்பாட்டுக்கும் , மத்தியான சாப்பாட்டுக்கும் இடையில் மூன்று மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து இலங்கையில் போர்நிறுத்தத்தை கொண்டு வந்தது.

"இலங்கையில் சாந்தி தழைக்கிறது , சமாதானம் ஒங்குகிறது" போன்ற அறிக்கைகளே சாட்சி.

Edited by தமிழ் சிறி

அப்ப இவரும் துரோகியே :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவரும் துரோகியே :(

எவர் ? :wub:

  • தொடங்கியவர்

செம்மொழி மாநாடு: ஆய்வரங்க பணிக் குழு தலைவராக சிவத்தம்பி நியமனம்

கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேரறிஞர் முனைவர் கா.சிவத்தம்பியும், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. "இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை' என இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் சிவத்தம்பி கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.

இந்தச் செய்திகளுக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் கருணாநிதி, "செம்மொழி மாநாட்டில் தமிழ் பேரறிஞர்களின் வருகையைத் தடுக்க முயற்சி நடைபெறுகிறது' என்று குற்றம்சாட்டினார்.

ஆய்வரங்கக் குழுவில்... இந்த நிலையில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி, ஆய்வரங்கப் பணிகளை மேற்கொள்ள ஆய்வரங்க அமைப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து, செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் கா. அலாவுதீன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:

""ஆய்வரங்க அமைப்புக் குழுவின் தலைவராக பேராசிரியர் முனைவர் கா.சிவத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவர்களாக முனைவர்கள் ஒளவை.நடராஜன், பொன்.கோதண்டராமன் ஆகியோரும், செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராஜேந்திரன் ஆய்வரங்க அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரம் என்ன? ஆய்வரங்கப் பணிகளை திட்டமிடவும், செயல்படுத்தவும், துணைத் தலைவர்கள், துணைக் குழுக்களை அமைத்துக் கொள்ளவும் ஆய்வரங்க அமைப்புக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, அனைத்து ஆய்வரங்கப் பணிகளையும் இந்தக் குழு மேற்கொள்ளும்'' என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தினமணி

1966 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை தொடர்ந்து நடத்தாமல் ..... செம்மொழி மாநாடு என்று தனியே ஒரு மாநாடு அமைக்க வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு ஏன் ஏற்பட்டது.

2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதால் , உலகத்தமிழ் மாநாட்டை நடத்த தேர்தல் ஆணையம் எதிர்க்கும் என்பது உங்கள் ஊகமாக இருக்கலாம்.உலகத்தமிழ் மாநாடு என்பது , தி.மு.க. வின் கட்சி மாநாடு அல்ல‌.

‍இங்கு கருணாநிதி நடத்துவதை ஒருவரும் எதிர்க்கவில்லை .

அவரின் அண்மைக்கால நடவடிக்கைகள் எல்லாம் ..... அவநம்பிக்கையை ஏற்படுத்தியது அவ்வளவே.

உதாரணத்துக்கு ;

காலை சாப்பாட்டுக்கும் , மத்தியான சாப்பாட்டுக்கும் இடையில் மூன்று மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து இலங்கையில் போர்நிறுத்தத்தை கொண்டு வந்தது.

"இலங்கையில் சாந்தி தழைக்கிறது , சமாதானம் ஒங்குகிறது" போன்ற அறிக்கைகளே சாட்சி.

1966 இலிருந்து தமிழரராச்சி மாநாடு நடைபெறத் தொடங்கவில்லை. அதற்கு முதலிலேயே மலேசியாவில் முதலாவது உலகத் தமிழாராச்சி நடைபெற்றது. அண்ணா முதலமைச்சராகவும், கலைஞர் கருணாநிதி பொதுபணித்துறை அமைச்சராகவும் இருந்த போது தமிழகத்தில் இரண்டாவது உலகத் தமிழாராச்சி மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழாராச்சி மாநாடுகளை தொடர்ந்தும் தமிழகத்தில் நடாத்த முடியாது. ஒவ்வொரு முறையும் இம்மாநாடு எங்கு நடைபெற வேண்டுமென்பதை தீர்மானிப்பது, இதற்கென இருக்கும் குழுவே. கஞைர் தான் முதலமைச்சராக இருக்கும் போது தமிழாராச்சி மாநாட்டையும் நடாத்த விரும்பி, பொறுப்பாகவிருக்கும் குழுவிடம் அனுமதி கேட்டதில் தவறில்லை. அதுபோல் அந்தக்குழு கால அவகாசம் போதாதென கூறியதால், தற்போது தமிழாராச்சி மாநாடு செம்மொழியாராச்சி மாநாடென மாற்றப்பட்டு நடைபெறவுள்ளது. உண்மையில் மாநாடு நடாத்த கால அவகாசம் போதாதா என்பதை பங்குபற்றும் தமிழறிஞர்கள் தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் 2010 இல் தை மாதம் நடைபெறவிருப்பதாக அறிவித்தபோது, போதிய கால அவகாசமிருக்கவில்லைத் தான். ஆனால் பின்பு 2010 இல் ஆனி மாத இறுதியில் நடாத்தப்படுமென அறிவித்த போது, பல தமிழறிஞர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

2011இல் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவிருப்பதால் இந்த மாநாட்டை தமிழக அரசு தனது பிரச்சார நடவடிக்கையாகவும் மேற்கொள்ளலாமென்பதால், தேர்தல் ஆணையம் இம்மாநாட்டை நடாத்த தடை விதிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. சென்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக அரசு தமிழக மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த சுனாமி உதவிகளைக் கூட, தேர்தல் ஆணையம்; தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைத்ததை தாங்கள் அறியவில்லையா ?? சுனாமி உதவிகள் ஒன்றும் அதிமுகாவால் வழங்கப்பட்டவையல்லவே ?? அவை மத்திய அரசு வழங்கியவை தானே ?? நான் ஊகங்களில் எழுதவில்லை ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்களை வைத்தே எழுதினேன். அத்தோடு 2011 இல் முற்பகுதியில் சட்டமன்ற தேர்தலும் வருவதால் தேர்தல் பிரச்சாரம் உட்டபட மாநாட்டு வேலைகளையும் தமிழக அரசால் ஒருமித்துச் செய்ய முடியுமா என்பது கூட தங்களுக்குப் புரியவில்லையா ??

தறபோது தமிழக அரசியலில் கலைஞர் மட்டுமல்ல, தமிழீழ ஆதரவாளர்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் பலரும் கூட சந்தர்ப்பத்திற்கேற்றவாறே நடந்து கொள்ளுகின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் விடயத்தில், கலைஞர் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் சரியென நான் வாதாடவுமில்லை. அதுபோல் ஒரு மாநில முதல்வரால் அதிகபட்சம் எந்தளவில் எமது பிரைச்சினைகளை கையாளலாமென்பதைக் கூட சிந்திக்காமல், பலர் எழுதும் புலம்பல் கட்டுரைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடியன அல்ல.

கலைஞர் உண்ணாவிரதத்தை இடை நேரத்தில் நடத்தினார் என்று குற்றம் சொல்லும் நீங்கள், சாகும்வரை உண்ணாவிரதமென்று ஆரம்பித்த வை.கோவும், திருமாவளவனும் அதனை ஏன் குறுகியகாலத்தில் நிறுத்தினார்கள் என்பதை விளக்கியிருக்கலாமே ??

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முதன்முதலில் அரசியலாக்கியது யாழ்ப்பாணத்தமிழர்தான். 1974 இல் கொழும்பில் நடக்க இருந்த மாநாட்டை யாழ்ப்பாணத்திற்கு மாற்றி ஒரு ஆராய்ச்சி மாநாட்டை பெருவிழாவாகக் கொண்டாடியது யாழ்ப்பாணத்தில்தான். அதன் பின்னர் இது அரசியல் நிகழ்வாகிவிட்டது.

அதுசரி.. ஆராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்ட / விவாதிக்கப்பட்ட கட்டுரைகள், அதன் பலாபலன்களைப் பற்றி ஏதாவது உள்ளனவா?

அரிசி, பருப்பு விலையும் அரசியலில்தான் நிர்ணயிக்கப்படுகின்றது.

அரசியல் எங்கும் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

1966 இலிருந்து தமிழரராச்சி மாநாடு நடைபெறத் தொடங்கவில்லை. அதற்கு முதலிலேயே மலேசியாவில் முதலாவது உலகத் தமிழாராச்சி நடைபெற்றது. அண்ணா முதலமைச்சராகவும், கலைஞர் கருணாநிதி பொதுபணித்துறை அமைச்சராகவும் இருந்த போது தமிழகத்தில் இரண்டாவது உலகத் தமிழாராச்சி மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழாராச்சி மாநாடுகளை தொடர்ந்தும் தமிழகத்தில் நடாத்த முடியாது. ஒவ்வொரு முறையும் இம்மாநாடு எங்கு நடைபெற வேண்டுமென்பதை தீர்மானிப்பது, இதற்கென இருக்கும் குழுவே. கஞைர் தான் முதலமைச்சராக இருக்கும் போது தமிழாராச்சி மாநாட்டையும் நடாத்த விரும்பி, பொறுப்பாகவிருக்கும் குழுவிடம் அனுமதி கேட்டதில் தவறில்லை. அதுபோல் அந்தக்குழு கால அவகாசம் போதாதென கூறியதால், தற்போது தமிழாராச்சி மாநாடு செம்மொழியாராச்சி மாநாடென மாற்றப்பட்டு நடைபெறவுள்ளது. உண்மையில் மாநாடு நடாத்த கால அவகாசம் போதாதா என்பதை பங்குபற்றும் தமிழறிஞர்கள் தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் 2010 இல் தை மாதம் நடைபெறவிருப்பதாக அறிவித்தபோது, போதிய கால அவகாசமிருக்கவில்லைத் தான். ஆனால் பின்பு 2010 இல் ஆனி மாத இறுதியில் நடாத்தப்படுமென அறிவித்த போது, பல தமிழறிஞர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.

----

தறபோது தமிழக அரசியலில் கலைஞர் மட்டுமல்ல, தமிழீழ ஆதரவாளர்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் பலரும் கூட சந்தர்ப்பத்திற்கேற்றவாறே நடந்து கொள்ளுகின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் விடயத்தில், கலைஞர் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் சரியென நான் வாதாடவுமில்லை. அதுபோல் ஒரு மாநில முதல்வரால் அதிகபட்சம் எந்தளவில் எமது பிரைச்சினைகளை கையாளலாமென்பதைக் கூட சிந்திக்காமல், பலர் எழுதும் புலம்பல் கட்டுரைகளையும் ஏற்றுக் கொள்ளக் கூடியன அல்ல.

கலைஞர் உண்ணாவிரதத்தை இடை நேரத்தில் நடத்தினார் என்று குற்றம் சொல்லும் நீங்கள், சாகும்வரை உண்ணாவிரதமென்று ஆரம்பித்த வை.கோவும், திருமாவளவனும் அதனை ஏன் குறுகியகாலத்தில் நிறுத்தினார்கள் என்பதை விளக்கியிருக்கலாமே ??

அரை நூற்றாண்டுகள் முன்பு பல தமிழ் பற்றுள்ள அறிஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழாராய்ச்சி அமைப்பு ஒன்று கோமா நிலையில் இருக்கும் போது ..... அதற்கு புத்துயிர் கொடுப்பதே தமிழ்பற்றுள்ள நல்ல ஒரு முதலமைச்சரின் கடமையாக இருந்திருக்க வேண்டும் .அதை விடுத்து அதற்கு போட்டியாக செம்மொழி மாநாடு என்று ஆரம்பித்திருப்பது ரசிக்க கூடியதாக இல்லை.

நீங்கள் சொல்வது போல் சட்டமன்ற‌ தேர்தல் நடக்கும் ஆண்டில், மாநாடு நடத்துவதை தேர்தல் ஆணையம் அனுமதிக்குமா ? இல்லையா ? அதனால்வரும் சட்டச்சிக்கல் என்ன‌ என்பதை ஒரு முதலமைச்சரால் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவே தொடர்பு கொண்டு இலகுவாக‌ அறிந்திருக்கலாம். அவர் அப்படியான முயற்சிகளில் கூட இறங்கவில்லை .அவருக்கு உண்மையில் தமிழை வளர்க்கும் ஆசை இருந்திருந்தால் அதனை செய்திருப்பார். அவருக்கு இப்போ அவசரத் தேவை தன்னை முன் நிறுத்தி ஒரு கட் அவுட் களியாட்ட கொண்டாட்டமே தவிர வேறொன்றுமில்லை. அண்மையில் காஞ்சிபுரத்தில் நடை பெற்ற அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் இதனை அறிந்திருப்பீர்கள்.சிலருக்கு கலியாண வீட்டிற்கு போனால் மணமகனாய் தான் தான் இருக்க வேண்டும் என்றும் , செத்தவீட்டிற்கு போனால் பிணமாக தான் தான் இருக்க வேண்டும் என்னும் ஆசை எப்பவும் இருந்து கொண்டே இருக்கும் . அந்த ரகத்தை சேர்ந்தவர் தான் கருணாநிதி.

நீங்கள் சொல்வது போல் , ஈழத்தமிழர் விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள் எம்மை தமது சுய அரசியல் லாபத்திற்கு´, தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி தான் பயன் படுத்துகின்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். அதனால் மேலும் பாதிக்கப்படுவது ஈழத்தமிழனே தவிர இவர்கள் அல்ல.

ஒரு முதலமைச்சர் காலையில் காத்தோட்டமாய் இருக்க (வோக்கிங்?)வெளியே போகும் போது , தனது இரண்டு மனைவிமாரான‌ த‌யாளு அம்மாவிற்கும் , ராசாத்தி அம்மாவிற்கும் சொல்லாம‌ல் மெரீனா க‌ட‌ற்க‌ரையில போய் மூன்று ம‌ணித்தியால‌ம் உண்ணாவிர‌த‌ம் இருந்து ... இல‌ங்கையில் போர்நிறுத்த‌த்தை கொண்டு வ‌ந்து விட்டேன் என்று சொல்லி த‌மிழ‌கம் முழுவதும் உள்ள‌ அப்பாவி ம‌க்க‌ளை ஏமாற்றிய‌தை என்ன‌வென்று சொல்ல‌. ம‌ற்றும் படி வைக்கோ , திருமாவ‌ள‌வ‌ன் போன்றோர் சாகும் வ‌ரை உண்ணாவிர‌த‌ம் இருந்தால் ம‌த்திய‌ அரசே ஈழ‌த்த‌மிழ‌ர் விட‌ய‌த்தில் அடிக்க‌டி குர‌ல் கொடுக்காம‌ல் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ பாட்டில் சாக‌ட்டும் என்று விட்டிருக்கும். க‌ருணாநிதி விட‌ய‌த்தில் ம‌த்திய‌ அர‌சு அப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌ முடியாது . அவ‌ருக்கு பின் தி.மு.க‌. என்னும் ப‌ல‌ம் வாய்ந்த‌ தொண்ட‌ர்க‌ள் உள்ளார்க‌ள் . அத‌னை ச‌ரியான‌ முறையில் ப‌ய‌ன்ப‌டுத்தாம‌ல் ,ஒரு கோமாளிக் கூத்தை அவ‌ச‌ர‌ப் ப‌ட்டு அர‌ங்கேற்றியிருக்கிறார் க‌லைஞ‌ர்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.