Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குத் தேர்தல் நடக்காது என அடித்துக் கூறுகிறது ஐ.தே.க.

Featured Replies

map_jaffna.jpg

 

வடக்குத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம், மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

 

தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் அரச தரப்பில் சிலர் நீதிமன்றம் சென்று தடையுத்தரவைப் பெறும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து அந்தக் கட்சி மேலும் கூறுகையில்,

 

http://tamilworldtoday.com/?p=12005

 

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத் தேர்தல் நடக்கும் எனப் பொதுநலவாய நாட்டுத்தலைவர்களை, ஏமாளிகளாக்கிய இந்தியாவுக்கும், கமலேஷ் சர்மாவுக்கும் , இந்தச் செய்தி சமர்ப்பணமாகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
பௌத்த இனவாதியான மகிந்த ஹெல உறுமையா பொதுபலசேன போன்ற இனவாதிகளீன் சொல்லை கேட்பார்.
மற்றொரு காரணம் தேர்த்தலில் தோற்க வேண்டும் என்பது.
 
காலத்தை கடத்தி சிங்களவர்களை குடியேற்றி வாக்கு வங்கியை அதிகரித்தல்.
 
பொதுநலவாய நாடுகளுக்கு இராணுவ முகாம்களை மூடுவதாக சாட்டு போக்கு சொல்வதற்கு சிங்களவர்களூக்கு சொல்லி கொடுக்க தேவை இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஹெல உறுமய.. பொதுபல சேன.. விமல் வீரவன்ச எல்லாம் மகிந்த சாவி கொடுக்க ஆடும் பொம்மைகள். சிங்கள மக்களிடம் இருந்து தனக்கு பெரிய எதிர்ப்பு உள்ளதாகக் காட்ட இன்னும் சில அமைப்புக்களை அவர் உருவாக்கி உலாவ விட்டாலும் ஆச்சரியமில்லை. யுத்தம் செய் என்று வலியுறுத்தவும் பிக்குகளை கொண்டு அமைப்புக்களை உருவாக்கி தூண்டிவிட்டனர் தானே.

 

அடிப்படையில் நாங்கள் செய்ய வேண்டியது இதுதான் இலங்கைத் தீவின் சுதந்திரத்திற்குப் பின்னான சிங்கள அரசியல் என்பதை உலகத்தின் கண்களில் அப்பட்டாம நிறுவி விடுதலைக்கான பாதையை அவர்களைக் கொண்டு போட்டுக் கொள்வதுதான்.

 

உண்மையில்.. இந்த எதிர்ப்புக்கள் மூலம் இனவாத அமைப்புக்கள் எமக்கு நன்மை தான் செய்கின்றன. ஆனால் நாம் அதனை எந்தளவுக்கு நன்மையாக எடுத்துக் கொண்டு பாவிக்கின்றோம் என்பது தான் இன்றுள்ள பிரச்சனை.

 

இந்தியாவில் காங்கிரஸ் இன்னும் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாண சபை உள்ளதாகவும் ராஜீவ் காந்தி ஈழம் பெற்றுக் கொடுத்துவிட்டதாகவும் கதையளந்து திரிகிறது. ஆனால்.. இங்கோ.. இந்திய - இலங்கை ஒப்பந்த அடிப்படையிலான வடக்குக் கிழக்கு இணைப்பு... சட்டரீதியானதல்ல.. என்று சொல்லி பிரிக்கப்பட்டு.. கிழக்கில்.. தமிழினம் சிறுபான்மையாக்கப்பட்டு தேர்தல்களும் நடத்தப்பட்டாயிற்று. 13 வது திருத்தச் சட்டம் கூட இன்று அந்தரத்தில் இழையில் தொங்கிக் கொண்டுள்ளது. காணி பொலிஸ் அதிகாரங்கள் எப்பவும் பறிக்கப்படலாம் என்ற நிலை. இந்தா ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கிறன் என்று சிங்களவர்களிடம் வாக்குப் பெற்ற சந்திரிக்காவும் சரி மகிந்தவும் சரி அதனை ஒழித்ததாகத் தெரியவில்லை. இருவரும் தமிழர்களுடன் யுத்தம் செய்து அதில் பெறும் வெற்றியில் அரசியல் செய்து வருகின்றனர். மகிந்த இன்றும் சிறீலங்காவின்.. நிறைவேற்று சர்வாதிகார ஜனாதிபதியாக உள்ளார். மக்களுக்கு அளித்த வாக்குறுதி என்னாச்சு என்று கேட்க உலகில் யாரும் இல்லை. இப்படியான ஒரு நாட்டில்.. பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்புக் கூட.. சலுகைக்கு குந்தி அமர்ந்து செல்லத் துணிந்துவிட்டது.

 

இவை தான் ராஜீவ் பெற்றுத் தந்த ஈழம்..! அண்ணன் சீமான் நிகழ்த்திய.. தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் காரர்களின் (அதுவும் ஈழத்துக்கு விஜயம் செய்து.. ஒட்டுக்குழு தேசவிரோதி.. டக்கிளஸை ஈழத்து எம் ஜி ஆர் என்று புகழ்ந்தவர் உட்பட சுதர்சன நாச்சியப்பன்..) பேச்சின் அறியாமை எப்படியெல்லாம் மக்களை தவறாக வழிநடத்துகின்றது என்று சிந்தித்துப் பார்க்கும் போது நம்ம அரசியல் தலைவர்கள்.. இந்தியாவிற்கு விஜயம் செய்து என்ன பேசிவிட்டு வருகிறார்கள் என்ற கேள்வியையும் உருவாக்கிறது. கூட்டமைப்பினர் இந்தியா போய் என்ன வியாபாரமா பேசிவிட்டு வருகின்றனர்..???!

 

அண்டையில் உள்ள இந்தியாவிலே காங்கிரஸால் உண்மைக்குப் புறம்பாக பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது என்றால்.. சர்வதேச மட்டத்தில் எம் நிலையை யார் சரியாக விளங்கிக் கொள்ளப் போகின்றனர்..??! யார் அதனை சரியாக சர்வதேசத்திடம் எடுத்துச் செல்லப் போகிறோம்.. (புலிகள் இருந்த போது அவர்கள் கொஞ்சம் என்றாலும் செய்தார்கள்.) நாம் அதற்கு என்ன செய்யப் போகிறோம்..???! :icon_idea::(:rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் போராட்டம் அழிக்கப்பட்டபின்பு அவர்களை அழிப்பதற்கு அடியெடுத்துக் கொடுத்தது நாங்கள்தான் என்று அன்று மார்தட்டிய அதே ஐக்கிய தேசியக் கட்சிதான் இன்று வடக்குத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம், மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளது. இந்தக் கட்சி உண்மையைக் கூறுகிறதா?, அல்லது தேர்தலை நடத்தாது எப்படி ஏமாற்றலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கிறதா?.

 

 

 

அவங்க ஒருத்தரையும் அடிக்கவும் இல்லை தேர்தல் நடக்காது என்று சொல்லவும் இல்லை. இது சிங்களங்களுக்கு சொன்ன செய்தி. இதையேன் தமிழ் பத்திரிகைகள் பெரிது படுத்துகிறார்கள்.

 

தேர்தல் நடக்கும்.  ஆனால் அதில் நடக்கத்தக்க தில்லு முல்லுகளை யாருக்கும் நிரல்ப்படுத்துவது எளிதல்ல.

 

மிகுதி தேர்தலின் பின் தான். மேலும் மாகாண சபையை ஒரு நாளில் கலைக்கவும் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=Ln9wnDysWsw

 

 

 

ஒரு திருடன் (வடிவேலு=ஐதேக) இன்னோ திருடன் (சிங்கமுத்து=சுதந்திர கட்சி) அவனை பார்த்து இவன் திருடன் என்கிறான்..

டிஸ்கி:

ஜன நாய்க லாஜிக்கு பிறகாரம் மக்கள் யாரையாவது நம்பி பொழைப்பை ஓட்ட வேண்டும்..  இங்க திமுக அதிமுக மாதிரி.. யாரும் எந்த ஆணியும் புடுங்க போவதில்லை என்றாலும் தேர்தல் என்று வரும் போது செவிக்கிணிய செய்திகளை தருவார்க்ள்..

"செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்"  என்பதை உணர்ந்து ஈரத்துணியை வயிற்றில் கட்டிகொண்டு படுத்தால் பசியெடுக்காது

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.