Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: ஜனாதிபதி இணைப்பாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

456(2).jpg
தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்னர் தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடமும் பகிரங்க பொது மன்னிப்பை அனந்தி எழிலன் கோரவேண்டும் என்று தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர்.சிவராஜா தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் பேசவுள்ளதாக அனந்தி எழிலன் தெரிவித்திருப்பது பற்றி  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

புலிகளின் திருமலை அரசியல் பொறுப்பாளராக எழிலன் இருந்த போது தான் மாவிலாறு அணையை இழுத்து மூடி இறுதிப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார். நீரை வைத்து நிபந்தனை இட்டு போராடக்கூடாதென பல தரப்பில் கோரப்பட்டாலும் மாவிலாறு அணை விடயத்தில் எழிலன் எடுத்த மோசமான முடிவுகள் இறுதிப் போருக்கு வித்திட்டன.

போரில் பெருமளவு மக்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டர் என கூறும் அனந்தி எழிலன் தனது கணவரும் இவற்றுக்கான மூலகர்த்தாக்களில் ஒருவர் என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும்.மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து இப்போது மீண்டும் இவர்கள் உணர்ச்சி வசனங்களை பேசுவதன் நோக்கம் என்ன?

மாவிலாறு அணயை எழிலன் மூடியது சரி என்பதனை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட ஏற்க  மாட்டார்.இறுதிபோரை ஆரம்பிக்க அடித்தளம் இட்டபோது எழிலனின் மனைவி உண்மையில் தமிழர்கள் மீது அக்கறை கொன்டிருந்தால் அணையை  மூடும்போது அப்படியான பாரதூரமான செயலை செய்ய வேண்டாமென கணவரை தடுத்திருக்க வேண்டும்.அப்போது அமைதியாக இருந்து பேரழிவுக்கு துணை போன அனந்தி இப்பொது தமிழர்களை பற்றி நீலிக்கண்ணீர் வடிப்பது அர்த்தமற்ற விடயமாகும்.

அணையை  மூடியதன் பின்னர் புலிகள் இணக்கப் பேச்சு நடத்தும் சூழலில் இருந்து வெளியேற வேண்டி வந்தது.போர் மட்டும் தான் தீர்வு என மக்களை துன்பத்தில் தள்ளி விட்டு இப்போது எந்த முகத்தை வைத்து அனந்தி அரசியலுக்கு வந்துள்ளார் என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவரின் பெயரை வைத்து அரசியல் நடத்தும் அனந்தி தனது கணவரின் தவறுகளுக்காக தமிழ் மக்களிடம் பொது மனிப்பைக் கோர வேண்டும்.அது மட்டும் பிராயச்சித்தமாக இருக்காது.வீரவசனங்ளை கூறி எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை வீணடிக்காதிருக்கவும் அவர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிதரனுக்குப் பிறகு வடக்கில் ஆனந்தியைப் பார்த்து சிங்கள அரச கொலைகாரர்கள் பயப்படுவது தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குலைக்க வேண்டிய தேவை ஊடகவியலாளருக்கு ! :o

 

நிலைக்க வேண்டிய தேவை, ஆனந்திக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறு அணையை புலிகள் போருக்காக மூடவில்லை. அப்பகுதியில் வாழும் எல்லா இன மக்களினதும்.. நீர்ப் பங்கீட்டை அடிப்படையாகக் கொண்டிராமல்.. சிங்களக் குடியேற்ற வாசிகளின் நீர்ப்பிரச்சனைக்கு முக்கியம் கொடுத்து.. சிங்கள பெளத்த பிக்குகள் அரசின் ஏவலில் செய்த நடவடிக்கையால் அது மூடப்பட்டது.

 

அதேபோன்ற ஒரு நீர்ப்பிரச்சனையில் தான்... துப்பாக்கிச் சூடு நடத்தி சிங்கள இராணுவம் சொந்த மக்களையும் அண்மையில் வேட்டையாடி இருந்தது. அப்படி ஒரு வேட்டையை புலிகள் அன்று தடுத்திருந்தார்கள். அதனால்  பொங்கிய ஆத்திரமே போராக பரினமித்தது. ஆனால்.. பிரச்சனை இப்போதும் உள்ளது. அது ஒரு நாள் சிங்களத்துக்கு ஆப்பாக மாறும். தமிழர்கள் அதனை செய்ய வேண்டும். செய்வார்கள்.

 

மாவிலாறு உட்பட பல பிரச்சனைகளை தீர்க்க சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு தயாராக இருந்தது. ஆனால் புத்த பிக்குகளும்.. விமல் வீரவன்ச போன்றவர்களும்.. அதனைச் சாட்டி போரை கோரினார்கள். அதன் பின்னணியில்.. ஒட்டுமொத்த சிங்கள அரசும்.. சில சர்வதேச சக்திகளும் இருந்து கொண்டார்கள்.

 

போர் ஆயுத வியாபாரிகளின் இலாப நட்டக் கணக்கிற்கு ஏற்ப.... முடிஞ்சிட்டுது. போரில் வென்ற அமெரிக்கா வியட்நாமில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை மக்களின் மனங்களை வெல்லத்தவறியதை சிங்களம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. அதன் போர் வெற்றி மாயை அதற்கு தடையாக உள்ளது. மாவிலாற்றில் இருந்த பிரச்சனை உட்பட எல்லாப் பிரச்சனைகளும் அப்படியே இருக்குது. அதனை ஆனந்தி போன்றவர்கள் ஜனநாயக வழியில்.. வெளிப்படையாகச் சொன்னால் தமக்குப் பிரச்சனை என்று தான் சிங்களம் இவ்வாறு உளறித் தள்ளுகிறது.

 

தலைவர்களை காலம் உருவாக்கிறது. தலைவர்கள் பிரச்சனைகளோடு பிறப்பெடுப்பதில்லை..! ஆனந்தி போன்றவர்கள் தலைவர்களாக உருவாகவும் சிங்களமே காரணம் என்பதை உணராமல்.. சிங்களம் உளறித் தள்ளிக் கொண்டிருக்கிறது. :icon_idea:

Edited by nedukkalapoovan

போர் மாவிலாறில் அல்ல ஏற்பட்டது. அரசு செய்த பல மீற்ல்கள் SLMM மால் கூட பதிவாக்கப்படவில்லை. அனந்திக்கு எதியாரக இறக்கும் சரளாவின் கண்வரான புலனாய்வு அதிகாரியை ஜெயரட்ணத்தை கூட அரசு என்ன செய்தது என்பது தெரியாது.  தயாராக இருந்த அரசு பலவற்றை செய்தது. மூதூரில்  சண்டையை அரசுதான் ஆரம்பித்தது. 


இதில் என்ன ஆச்சரியம் என்றால் அனந்தியை புகழ்ந்து அவரை கூட்டமைப்பிலிருந்து பிரிக்க முயல்வோர் அவரை ஆதாரித்து இப்படித் திரிகளில் எழுதுவதில்லை.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127697&p=927132

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணம் தேர்தல்களமாக மாறியுள்ள இன்றைய நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் அத்தனையும் மேற்கொண்டு ஆலாய்ப் பறக்கின்றனர். இந்தநிலையில் ஒரு வேட்பாளரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதைத்தவிர அதற்கான அவரது முயற்சிகள் என்ன என்பதுபற்றி எங்கும், எந்த ஊடகங்களிலும் வெளிவந்ததை இதுவரை காணவில்லை. ஆனால் தற்சமயம் ஆனந்திக்கு எதிராக அரச ஆதரவாளர்களால் மேற்கொண்ட செயற்பாடுகள், அவர்பற்றிய பெரும் பரப்புரைகளை அனைத்து ஊடகங்களும் மேற்கொள்ள வைத்துள்ளதோடு, மக்களின் அமோக ஆதரவையும் அவருக்குப் பெற்றுக்கொடுத்துள்ளதைக் காணமுடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணம் தேர்தல்களமாக மாறியுள்ள இன்றைய நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகள் அத்தனையும் மேற்கொண்டு ஆலாய்ப் பறக்கின்றனர். இந்தநிலையில் ஒரு வேட்பாளரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதைத்தவிர அதற்கான அவரது முயற்சிகள் என்ன என்பதுபற்றி எங்கும், எந்த ஊடகங்களிலும் வெளிவந்ததை இதுவரை காணவில்லை. ஆனால் தற்சமயம் ஆனந்திக்கு எதிராக அரச ஆதரவாளர்களால் மேற்கொண்ட செயற்பாடுகள், அவர்பற்றிய பெரும் பரப்புரைகளை அனைத்து ஊடகங்களும் மேற்கொள்ள வைத்துள்ளதோடு, மக்களின் அமோக ஆதரவையும் அவருக்குப் பெற்றுக்கொடுத்துள்ளதைக் காணமுடிகிறது.

 

 

ஆம். சிலவேளைகளில் விளம்பரங்கள்(பரப்புரை) இலவசமாக கிடைத்து விடுகின்றது. கூட்டமைப்பு அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர்

 

ஸ்ப்பா முடியல...ஒரெ சிப்பு சிப்பாக வருது .. எடுப்பு சோறுகளுக்கு டிசைன் டிசைனாக போஸ்டிங்கு.. பேரே  புதுசா இருக்கப்பூ.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ!.... மேலும் சில போஸ்டிங்குகளை அல்லகைகளுக்காக நான் ராஜ பக்சேவிடம் சிபாரிசு செய்கிறன் :icon_mrgreen: :icon_mrgreen:


ஜனாதிபதியின் துடைப்பாளர்
ஜானதிபதியின் துவைப்பாளர்
ஜனாதிபதியின் அரைப்பாளர்

.......

சவராசா எலும்புத்துண்டுக்காய் அறிக்கைவிடுறார் 
இதை பெரிசாய் எடுக்காதையுங்கோ   
அனந்தி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்: ஜனாதிபதி இணைப்பாளர்

 

1013290_640603559297927_2063655386_n.png

/ஏய் ஆண்ட்ராய்ட் மண்டையா....இதுக்கு பேர் உங்க ஊர்ல நீலிக் கண்நீராடா பிச்சுப் போடுவன் பிச்சு ---

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.