Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருத்த சட்டமூலத்தை தெரிவுக்குழுவுக்கு அனுப்பவும்:ஈ.பி.டி.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருத்த சட்டமூலத்தை தெரிவுக்குழுவுக்கு அனுப்பவும்:ஈ.பி.டி.பி

 

13 ஆவது திருத்தத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

அவ்வாறு அனுப்பினால் இந்த சட்டமூலம் பற்றி அரசியல் கட்சி பிரதிநிதிகள் தமது கருத்துகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இதனைப்பற்றி ஆராய்வதற்கு குழுவொன்றை நியமித்தது.

இந்த சட்டமூலத்தை ஆராய்வதற்கு நீண்ட காலம் தேவையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அனுப்பாதுவிடின் அது பல சந்தேகங்களுக்கு இடமளிக்கும்; என்று அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இந்த சட்டமூலத்திற்கான எதிர்ப்பை ஸ்ரீலங்கா முஸ்லாம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தனது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஹசன் அலி தெரிவிக்கையில், இது பற்றி ஜனாதிபதிக்கு எழுதவுள்ளோம், இந்த சட்டமூலத்தை எதிர்க்கவிருக்கின்றோம் இது அதிகாரங்களை குவிக்க வழிசெய்யும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

- See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70465-2013-06-11-14-14-03.html#sthash.xKHKoeox.dpuf

முதலமைச்சர் கனவு கனவாகவே போய்விடுமோ என்ற வலியில் டக்லஸ்!

தமிழ் மக்கள் அனைவரையும் அழிக்கவேண்டும் என்று மகிந்த அமைச்சரவையில் தீர்மானம் வந்தாலும் டக்லசால் அதை எதிர்ப்பது பற்றி தீர்க்கமான முடிவுக்கு வர முடியாது என்பதே யதார்த்தம்.

ஆமா ஆமா இப்ப தேர்தல் வந்தாலும் வெல்ல மாட்டான்ர். தேர்தலை தள்ளி வைப்பதே நல்லம்.

Edited by நிழலி
ஒருமையில் எழுதியது திருத்தப்பட்டுள்ளது.

பொது நலவாய மகாநாடு வரைக்கும் அரசு தேர்தல் பற்றிக்கதைக்க விரும்பாது. அதன் பின்னர் 13ம் திருத்தத்தை திருத்தி தேர்தல் வைக்க முயலும்.  இல்லையேல் தந்திரமாக தேர்தலை வைத்துவிட்டு பொதுநல மகாநாடு முடிய 13ம் திருத்தத்தை ரத்து செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

டன் ரீவியில் ஒரு புலம்பெயர் விசுக்கோத்து தோன்றி நேற்றுப் பேசிச்சுது. சரியான பழசு. விரலுக்கு ஒரு மோதிரம் போட்டிருக்குது. ஊரைக் கொள்ளையடிச்ச காசு போல..!

 

அது சுவிஸில் இருந்து சிறீலங்கா போயிருக்காம். ஈபிடிபி வால். அது மகிந்தர் அச்சாவாம். அவரை தான் ரோமில 2009 க்கு முன் சந்திச்ச போது சொன்னவராம்.. புலிகளோட எனிப் பேசுவதில் பயனில்லை. அவர்கள் பாசையில் பேசி அழிப்பதைத் தவிர வழி இல்லை என்று.

 

அப்புறம் காணிப் பிரச்சனைகளைத் தீர்க்க பல வழி இருக்காம். அதில ஒன்று இராணுவத்திற்கு தேவையானத்தைக் கொடுத்திட்டு மிச்சத்தை வைச்சிருக்கிறதாம்.

 

அப்புறம்.. இந்தத் திருத்தங்கள் எல்லாம் 13 வது சட்ட அமைப்பை பலப்படுத்தும் திருத்தங்களாம். அதையிட்டு யாருமே அஞ்சத் தேவையில்லையாம்.

 

தமிழ் மக்களை த தே கூ தவறாக வழி நடத்துதாம். சுமந்திரன் ஒரு வழக்கிற்கு 3000 ரூபா படி.. 1500 வழக்குகளையும் கையாளக் காசு வாங்கிறாராம். இதன் மூலம் 3 கோடி ரூபா உழைச்சிட்டாராம். இப்படி.. அந்த விசுக்கோத்து அடிக்கிக் கிட்டே போச்சுது.

 

இப்படிப்பட்ட விசுக்கோத்துகள் தெரிவுக்குழு என்ன.. தெருவுக் குழுவில் நின்று தெருக்கூத்தும் ஆடச் சொல்லுங்கள்.

 

இதுகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு அமைச்சர். இதுகள் எல்லாம் தமிழ் மக்களின் அரசியல்வழிகாட்டிகள்.

 

இதுகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு கருத்துச் சொல்லுற நிலையை நினைக்க.. தமிழன்ர நிலைமை இப்படியாகிட்டே என்று இப்ப தலைவர் மேல தான் கோபம் கோபமா வருகுது. முள்ளிவாய்க்காலுக்க போன நேரத்திற்கு.. பேசாம அனுராதபுரத்துக்குள்ள நுழைஞ்சிருக்கலாம்..! ஏதாவது ஒரு முடிவு வந்திருக்கும். இந்த மேற்கு நாடுகளை நம்பி.. தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டி வந்தது தான் கொடுமை. அதைவிடக் கொடுமை ஈபிடிபி சொல்வதை எல்லாம் தமிழ் மக்கள் கேட்க வேண்டி இருப்பது..! :(:rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

கடந்த இருபது வருடங்களாக உதை விட கேவலமான விசு கோத்துக்களின் கதைகளை கேட்டுக்கொண்டு தானே இருந்தோம் .

  • கருத்துக்கள உறவுகள்

டன் ரீவியில் ஒரு புலம்பெயர் விசுக்கோத்து தோன்றி நேற்றுப் பேசிச்சுது. சரியான பழசு. விரலுக்கு ஒரு மோதிரம் போட்டிருக்குது. ஊரைக் கொள்ளையடிச்ச காசு போல..!

 

அது சுவிஸில் இருந்து சிறீலங்கா போயிருக்காம். ஈபிடிபி வால். அது மகிந்தர் அச்சாவாம். அவரை தான் ரோமில 2009 க்கு முன் சந்திச்ச போது சொன்னவராம்.. புலிகளோட எனிப் பேசுவதில் பயனில்லை. அவர்கள் பாசையில் பேசி அழிப்பதைத் தவிர வழி இல்லை என்று.

 

அப்புறம் காணிப் பிரச்சனைகளைத் தீர்க்க பல வழி இருக்காம். அதில ஒன்று இராணுவத்திற்கு தேவையானத்தைக் கொடுத்திட்டு மிச்சத்தை வைச்சிருக்கிறதாம்.

 

அப்புறம்.. இந்தத் திருத்தங்கள் எல்லாம் 13 வது சட்ட அமைப்பை பலப்படுத்தும் திருத்தங்களாம். அதையிட்டு யாருமே அஞ்சத் தேவையில்லையாம்.

 

தமிழ் மக்களை த தே கூ தவறாக வழி நடத்துதாம். சுமந்திரம் ஒரு வழக்கிற்கு 3000 ரூபா படி.. 1500 வழக்குகளையும் கையாளக் காசு வாங்கிறாராம். இதன் மூலம் 3 கோடி ரூபா உழைச்சிட்டாராம். இப்படி.. அந்த விசுக்கோத்து அடிக்கிக் கிட்டே போச்சுது.

 

இப்படிப்பட்ட விசுக்கோத்துகள் தெரிவுக்குழு என்ன.. தெருவுக் குழுவில் நின்று தெருக்கூத்தும் ஆடச் சொல்லுங்கள்.

 

இதுகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு அமைச்சர். இதுகள் எல்லாம் தமிழ் மக்களின் அரசியல்வழிகாட்டிகள்.

 

இதுகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு கருத்துச் சொல்லுற நிலையை நினைக்க.. தமிழன்ர நிலைமை இப்படியாகிட்டே என்று இப்ப தலைவர் மேல தான் கோபம் கோபமா வருகுது. முள்ளிவாய்க்காலுக்க போன நேரத்திற்கு.. பேசாம அனுராதபுரத்துக்குள்ள நுழைஞ்சிருக்கலாம்..! ஏதாவது ஒரு முடிவு வந்திருக்கும். இந்த மேற்கு நாடுகளை நம்பி.. தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டி வந்தது தான் கொடுமை. அதைவிடக் கொடுமை ஈபிடிபி சொல்வதை எல்லாம் தமிழ் மக்கள் கேட்க வேண்டி இருப்பது..! :(:rolleyes::icon_idea:

இதையெல்லாம் எப்பிடி பொறுமையா டிவியில  பாக்கிறியள்  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இருபது வருடங்களாக உதை விட கேவலமான விசு கோத்துக்களின் கதைகளை கேட்டுக்கொண்டு தானே இருந்தோம் .

 

 

நாலைந்து புலிகளின் ஆதரவு தளங்களுக்கு 40ற்கு மேற்பட்ட ஒட்டுக்குழுக்களின் இணையதளங்கள்.(இப்போதும் எழுதுகின்றன).அவர்களின் எழுத்துக்களை பார்த்தால் அனேகமாக எல்லோரும் பிஎச் டி எடுத்த ஆட்கள் போல தான் தெரிகிறது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் எப்பிடி பொறுமையா டிவியில  பாக்கிறியள்  :(

 

இப்படி எத்தினையை பார்த்திட்டம். இது எல்லாம்.. யு யு பி. இதுகளைப் பார்க்கிற படியால் தான்.. யார் உண்மையா மக்களோடு மக்களுக்காக நின்றார்கள். போராடினார்கள் என்ற விபரம் தெரிய வருகுது வடிவா..! அதுமட்டுமன்றி.. யார் யார் என்ன கோணத்தில காய் நகர்த்திட்டு இருக்கினம் என்றதும் புரிய வரும்..!

 

வெளவால் கிட்ட இருந்து கறக்கனுன்னா.. கவுந்து கிடந்து தான் ஆகனும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இருபது வருடங்களாக உதை விட கேவலமான விசு கோத்துக்களின் கதைகளை கேட்டுக்கொண்டு தானே இருந்தோம் .

20 வருடமாக உங்ககளை பார்க்க வைத்தவன்.... விசுகொத்தேன்றால்.

20 வருடம் பார்த்த நீங்கள் விசுகொத்துக்கே விசுகொத்தாக இருப்பீர்கள்.
 
இனியாவது விசுகோத்து தனங்களை தள்ளிவிட்டது 
இணையங்களின் உதவியுடன் என்றாலும் ஆறாவதை செயற்படுத்தி பார்க்கலாம்.

 

20 வருடமாக உங்ககளை பார்க்க வைத்தவன்.... விசுகொத்தேன்றால்.

20 வருடம் பார்த்த நீங்கள் விசுகொத்துக்கே விசுகொத்தாக இருப்பீர்கள்.
 
இனியாவது விசுகோத்து தனங்களை தள்ளிவிட்டது 
இணையங்களின் உதவியுடன் என்றாலும் ஆறாவதை செயற்படுத்தி பார்க்கலாம்.

 

 

சிலருக்கும் ஆறாவதுக்கும் எட்டாப்பொருத்தம்.  :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.