Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம் கே நாராயணனின் பதவி பறிக்கப்படுமா?

Featured Replies

எம் கே நாராயணனின் பதவி பறிக்கப்படுமா?

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்த,
அதன் முழுச்சூத்திரவாதியான எம்.கே.நாராயணனை நம்மவர்கள்
மறந்திருக்கமாட்டார்கள்.அப்போது அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு
ஆலோசகராக இருந்தார்.பின்பு சோனியா அரசு அவருக்கு மேற்கு வங்க‌
ஆளுநர் பதவியளித்து சிறப்புச்செய்தது.அண்மையில் ஏற்பட்ட ஆட்சி
மாற்றம் காரணமாக, பிரதமர் மோடி அரசு இந்த ஆளுநர்கள் பலரை
பதவி விலகுமாறு கேட்டுள்ளது.இந்த ஆளுநர்கள் காங்கிரசு கட்சியைச்
சேர்ந்தவர்கள் அல்லது அக்கட்சிக்கு மிகவேண்டிய நாராயணன் போன்ற‌
அதிகாரிகள்.எனவே இவர்கள் தாமாகவே பதவி விலகிச்செல்வதுதான்
கௌரவமானது.ஆனால் நாராயணன் போன்ற சிலர் அப்படிச்செய்ய‌
மறுப்பதாகத் தெரிகிறது.

இதனால் புதிய அரசு வேறொரு வழிமுறையைக் கையாள இருப்பதாகத்
தெரிகிறது.சோனியா ஆட்சியின்போது வரிசையாகப் பல ஊழல்கள் இடம்
பெற்றது எல்லோரும் அறிந்ததே.அதில் மிகமுக்கிய பிரமுகர்களுக்கான
உலங்குவானூர்திக் கொள்வனவு ஊழல் என்பதுவும் ஒன்று. இக்கொள்வனவு
பற்றிய முக்கிய தீர்மானங்கள் எடுப்பதில் அப்போது பாதுகாப்பு ஆலோசகராக
இருந்த நாராயணனும் பங்குகொண்டிருந்தார். எனவே அந்த ஊழல் விசாரணையை
முறைமையாக, முழுமையாக மேற்கொள்ள அவரையும் விசாரிக்கவேண்டுமென
 சிபிஐ [ CBI  ]  கூறியுள்ளது. ஆனால் அவரின் ஆளுநருக்கான பதவிவழிப்பாதுகாப்பு
அதற்குத் தடையாக உள்ளது. எனவே அந்த ஊழல் விசாரணையை மேற்கொள்ள
அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகவேண்டுமென அரசு கேட்கவுள்ளதாகத்
தகவல்கள் வெளியாகியுள்ளது.வெகுவிரைவில் அவர் பதவி பறிக்கப்படலாம்.

ஈழத்தமிழின அழிப்பின் இரத்தக்கறைபடிந்தவர்கள் இப்படியாக ஓரம்
கட்டப்படுகிறார்கள். அதில் மோசமானவர்கள் முன்பே தோல்வியையும்
அழிவையும் சந்தித்துள்ளர்கள்.சிவசங்கர்மேனன் என்பவர் முன்பே
பதவி விலகிச் சென்றுவிட்டார்.

      " அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் "


CBI to be used to force out UPA governors?Narayan
 http://www.firstpost.com/politics/havent-quit-yet-says-bengal-governor-mk-narayanan-1577165.html?utm_source=FP_STORY_MORECATNEWS


 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழின அழிப்பின் இரத்தக்கறைபடிந்தவர்கள் இப்படியாக ஓரம்
கட்டப்படுகிறார்கள். அதில் மோசமானவர்கள் முன்பே தோல்வியையும்
அழிவையும் சந்தித்துள்ளர்கள்.சிவசங்கர்மேனன் என்பவர் முன்பே
பதவி விலகிச் சென்றுவிட்டார்.

 

 

தர்மம் வெல்லும் ராசாக்கள்

அக்கிரமக்காரர்கள் வாழ்வு கனகாலமில்லை

எனது கண்ணால் தர்மம் வெல்வதையும்

அக்கிரமக்காரர்கள் அழிக்கப்படுவதையும் பார்ப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஊழல் வழக்கில் சாட்சிக்கு அழைக்கப்பட்டவர்கள்  நாளை
ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் சாத்தியங்கள் உள்ளது.
ஒரு நாள் இவர்கள் ஈழத்தில் செய்த படுகொலைகளுக்கும்
பதில் சொல்லவேண்டிவரும்

இன்று ஊழல் வழக்கில் சாட்சிக்கு அழைக்கப்பட்டவர்கள் நாளை

ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் சாத்தியங்கள் உள்ளது.

ஒரு நாள் இவர்கள் ஈழத்தில் செய்த படுகொலைகளுக்கும்

பதில் சொல்லவேண்டிவரும்

அதுக்கிடையில் கிழட்டு சாத்தான் நெஞ்சை பிடித்து கொண்டு போய் சேர்ந்திடும்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கவர்னர் பதவியை ராஜினாமா செய்த நாராயணன் சென்னை திரும்பினார்.. சிபிஐ விசாரிக்கவில்லையாம்!

 

சென்னை: மேற்கு வங்க மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த எம்.கே. நாராயணன் தனது மனைவி பத்மினியுடன் கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையை காலி செய்துவிட்டு சென்னை திரும்பினார். இனி அவர் சென்னையிலேயே வசிப்பார். கேரளத்தைச் சேர்ந்தவரான நாராயணன் சென்னையில் படித்து, வளர்ந்தவர். காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த இவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்தார். கவர்னர் பதவியை ராஜினாமா செய்த நாராயணன் சென்னை திரும்பினார்.. சிபிஐ விசாரிக்கவில்லையாம்! மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்ததையடுத்து முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந் நிலையில், கடந்த 30ம் தேதி நாராயணனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியது தொடர்பான ஊழல் குறித்து இவரிடம் சில நாட்களுக்கு முன் சிபிஐ விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. 80 வயதான நாராயணனின் ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை ஏற்று கொண்டதோடு பிகார் ஆளுனர் டி.ஓய். பாடீலிடம் மேற்கு வங்க ஆளுனர் பதவியை கூடுதல் பொறுப்பாக வழங்கினார். இதையடுத்து நாராயணன் நேற்று கவர்னர் மாளிகையை விட்டு கிளம்பினார். முன்னதாக அவருக்கு கொல்கத்தா போலீஸார் ஆளுனர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி மேற்கு வங்கத்தின் 24வது ஆளுநராக எம்.கே. நாராயணன் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த நாராயாணனிடம் நிருபர்கள், ஹெலிகாப்டர் பேர வழக்கில் சி.பி.ஐ என்னிடம் விசாரணை ஏதும் நடத்தவில்லை என்று கூறினீர்கள். தற்போது விசாரணை நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளதே என்று கேட்டனர். இதற்கு மிகக் கோபமாக பதிலளித்த நாராயணன், சி.பி.ஐ எது பற்றியும், எந்த விசாரணையும் என்னிடம் நடத்தவில்லை. நீங்கள் தான் தவறான செய்திகளை பரப்புகிறீர்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.

 http://tamil.oneindia.in/news/india/west-bengal-governor-m-k-narayanan-demits-office-leaves-chennai-205212.html

 http://tamil.oneindia.in/news/india/west-bengal-governor-mk-narayanan-resigns-204765.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப்போரில் முக்கிய பாத்திரம் வகித்த எம்.கே.நாராயணன்...! புதிய நெறிமுறையையும் புகுத்தினார் எனலாமா..?


நடந்து முடிந்த ஈழப்போரில் அப்பாவி தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் கொல்லப்பட்டனர்....என்பதை அனைவரும் அறிவோம்..!

இந்த இன அழிப்பிற்கு எந்த வித ஆதாரமும் இல்லாமல் பாரித்துக் கொண்டதே இந்த எம்.கே.நாராயணன் தான்...!
 
 
 
மேலும் இவருக்கு துணை நின்ற சிவசங்கர மேனன்...நிருபமா ராவ்...பிரணாப் முகர்ஜி...ப.சிதம்பரம்...குறிப்பாக கட்டுமரம் இவர்கள் எல்லோரையும் அந்த கண்டி கதிர்காமர் தான் காப்பாற்ற வேண்டும்..!
 
இந்தியா நடத்திய இந்த இலங்கைப் போர் அதாவது ஈழப் போர் அதாவது விடுதலைப் புலிகளை அழிக்கும் / அழிப்பதற்கு ஒரு புதிய வழிமுறையை பரிசோதனை முறையில் அல்ல...தீர்க்கமாகவே முன்வைத்தனர்....
 
அதுதான் போராளிகளுக்கு எந்தவித நீதியும் / விசாரணையும் / சட்ட உரிமையும் வழங்க முடியாது...என்று.
 
தீவிரவாதிகள் என்று பொதுவில் கூறிவிட்டால் போதுமானது என்ற கருத்தாக்கங்களை முன்வைத்தனர்...
 
அதன் விளைவு தான் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது முதல் பாலஸ்தீனிய குழந்தைகளை கொல்லுவதையும் சரி என்று முன்வைத்த  வழிமுறை என்று .
கருதலாம்...!
 
- சங்கிலிக்கருப்பு - 

 

கண்டி கதிர்காமர் . :icon_mrgreen:  

  • கருத்துக்கள உறவுகள்

'கர்ணன்' படத்தில் வந்த ஒரு காட்சி இன்னும் மனதில் நிற்கின்றது!

 

கர்ணனின் மகன், அர்ஜுனனால் கொல்லப்பட்டு, அவனது சடலத்தைக் 'கர்ணன்' தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வருகின்றான்!

 

அதைக்கண்டு குழறியழுகின்ற மனைவியிடம் கர்ணன் பின்வருமாறு கூறுகின்றான்!

 

நான் 'அர்ஜுனனை' அழித்து விடுகிறேன்....!

 

அதைக்கேட்ட அவனது மனைவி பின்வருமாறு கூறுகிறாள்.

 

எனது மகன் போன பிறகு,.... நீங்கள் அர்ஜுனனை அழித்தாலென்ன, விட்டாலென்ன....!

 

இதை வாசிக்கும் போது மேல்வரும் கதை தான் நினைவுக்கு வருகின்றது...! :o  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.