Jump to content

யாழ் கள கவிஞர்களின் கவியரங்கம் 02: யாழ் கீதம்!


Recommended Posts

yarlcom9thyearcelebratizo9.gif

ஒன்பதாவது அகவையில் யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு!

***யாழ் கள கவிஞர்கள் வழங்கும் கவியரங்கு 02***

தலைப்பு: யாழ் கீதம்! - யாழ் இணையத்திற்கான ஒரு கீதம்!

கவியரங்கின் நடுவர்கள்

பண்டிதர்

தமிழ்தங்கை

குறிப்பு1: யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும். ஆனால், மற்றைய யாழ் கள உறவுகளை தாக்காத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கவிதைகளை பாடவும்!

குறிப்பு2: கவியரங்கின் நடுவர்களிற்கு கவியரங்கில் இருந்து ஏதாவது பொருத்தமற்ற கவிதைகளை அல்லது கருத்துக்களை அகற்றுவதற்கு அல்லது செல்லுபடியற்றதாக்குவதற்கு முழு உரிமையும் உண்டு!

குறிப்பு3: கவியரங்கம் நிறைவு: மார்ச் 30, 2007

மாண்புமிகு யாழ் கள கவிஞர் பெருமக்கள் கவியரங்கை ஆரம்பித்து வழிநடத்திச் செல்லுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்!

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீரான கவிகள் பலநாள் சொன்ன

சீனியர் கவிஞர் பலருமி ருக்க

சிறியனை நடுவராய் ஆக்கிய தேனோ?

சித்தம் குழம்பிப்பின் சிறிது தெளிந்தேன்

நாயகர்க் கெல்லாம் சோலிபல வாக்கும்

நடுவராய் நின்றிட நேரமிலை யாக்கும்

நம்மாப்பு கேட்டதன் மதிப்பை யறிந்து

நடுவனாய் வந்தேன் நானொன்று மறியேன்

எந்தன்சிற் றறிவுக் கெட்டிய வரையில்

உம்கவி படிப்பேன் தவறெனில் உரைப்பேன்

எளியவன் தானே என்றெண்ணிச் செல்லா(து)

எல்லோரும் வந்திங்கு கவிகள் படைப்பீர்

பாடும்யாழ் கீதம்எம் தளமதின் பாட்டு

பல்லவி சரணமென இருவகை யுண்டு

பல்லவி ஒன்று சரணங்கள் பலவே

பாடுவீர் பாட்டு தாளங்கள் போட்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழிக்கு கவி கொடுங்கள் -உங்கள்

பாவுக்கு உயிர் கொடுங்கள்-நான்

ஒன்றும் பெரியோன் அல்ல

ஆனாலும் நல் இரசனை உண்டு!

கவித் தமிழே ஆளவேண்டும்

கருத்தில் உயர் செறிவுவேண்டும்

நற்றமிழால் பண்பிசைத்து

பல பாடல் தான் கொடுங்கள்!

தேன் வடியும் கவி உண்டோ?

தமிழ் வீரத்தின் உரம் உண்டோ?

நாம் தமிழரென பறைசாற்றும்

யாழ் கீதம் இசையுங்கள்!

சொல்லின் வளம் கண்டு

இதயங்கள் அசைய வேண்டும்.

யாழின் கீதம் கண்டு நாம்

எல்லாம் மகிழ வேண்டும்!

படையுங்கள் பாவெடுத்து

இசையுங்கள் யாழ் எடுத்து

தமிழெனும் உயிர்கொடுத்து!

இசையுங்கள் யாழ் கீதம்!

நன்றி..

Link to comment
Share on other sites

கொக்கை பறித்த குளைகள் சுமந்து,

மெத்தெனச் செல்லும் வெறுமேனித் தாத்தா...

அவர் படலையைத் திறக்க வெள்ளாடு துள்ளும்.

யாழிற்குள் நுளைந்ததும் நம் மனங்களும் அதுபோல்!

சறத்தோடு, காற்றோடு, நெளித்து வளைத்துத் துவிச்சக்கரம் ஓட்டி,

ஊரோடு ஓழுங்கைகளில் கதைபேசும் நங்கையர்க்கு நக்கல்கள் பேசி,

குளத்தடியில் கோம்பை கட்டி நீச்சல்கள் பழகி,

கூட்டமாய் பெடியளாய்க் கருப்பணி குடித்து,

அந்தியில் மீள்கையில் அப்பருங் கடிய... புத்தகம் எடுத்தாலும் நினைவுகள் மனதில்.

யாழின் அனுபவம் இதுவும் அது போல்...

நெற்பயிர் அறுவடை முடிந்திட்ட கையோடு

சிறுபயிர் சுமக்கும் நம்மூர் வயல் போல்

விவாத முடிவில் விவாதம் பிறக்கும்

பண்பட்ட யாழ் களம், இங்கு சிந்தனை விளையும்!

கருதுகோள்கள், கொள்கைகள், கருத்துக்கள் நமக்குள் ஏராளம் .

குழப்பங்கள் கொஞ்சம் குளப்படி கொஞ்சம்,

சுய பரிசீலனை நாளாந்தம் மனதுக்குள் நடக்கும்.

படித்தவற்றைப் பரிசோதிக்கப் பயங்கள் தடுக்கும்,

பழிக்கு அஞ்சி வாய் பொத்தி நாட்கள் பேசாது மழுங்கி நகரும்.

முகமூடி மனிதராய் பரீட்சித்துப் பார்க்க யாழ் களம் கதவு திறக்கும்

வரப்பிரசாதம்... அச்சகம்... யாழ் ஒரு ஆய்வு கூடம்!

படிப்புக்கள் தவறில்லை ஆராய்ச்சி அபத்தமில்லை

வாதிடல் கேடில்லை தர்க்கங்கள் நோயில்லை

கருத்தாடல் இல்லாது பண்படுதல் நடவாது

தனியாகத் தர்க்கித்து முளுவதும் விளங்காது.

மூளைகள் களமாட, சிந்தனைகள் முளை அவிழ,

தவறுகள் திரையகல, மனங்கள் பண்பட...

இணையமாய்ப் பாராது அதிகமாய் நேசித்து,

யாழ் மீட்டும் இதயங்கள் யாழோடு வளர்ந்திடுக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

கையுளைய கீபோட் தட்டி

நல்ல கருத்தோட வாடா

அது உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

அங்க இங்க வெட்டி வந்தா

பெயர் சொல்லி ஒட்டிடடா

அது உன்னோட கடமை

எம்மோட பெருமை

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ்களம் வாடா..!

சண்டைக்கும் ஆள் வரும்

அரட்டைக்கும் ஆள் வரும்

பலதும் பத்தும் பறந்து வரும்

அதுதாண்டா யாழ் களம்

வாடா வாடா வாடா

உன் கருத்தோட துணிஞ்சு வாடா

பதுங்கி நில்லாம

உண்மை கொண்டு வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா.

திட்டும் பேச்சும்

நித்தம் வருண்டா

நில்லாமல் வாடா

கஸ்டப்பட்டு எழுத

கத்தரிக்கவும் ஆள் வருண்டா

நீ சளைக்காம எழுதனும்

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

பாடம் படிக்க வாடா

நம்ம தமிழர் வெட்டி வீரம்

பார்க்க வாடா...

உண்மை சொல்லி வாடா

நம்ம புலி வீரர் புகழ் சொல்ல வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

என்னோட உழைப்பு

என்னோட உயர்வு

அடுத்தவன் வாயைப் பார்க்காம

உன் கருத்தைச் சொல்லடா

காக்க பிடிக்க காவடி எடுக்க

ஆளும் வருவா

ஒதுக்கியே வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

கையுளைய கீபோட் தட்டி

நல்ல கருத்தோட வாடா

அது உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

அங்க இங்க வெட்டி வந்தா

பெயர் சொல்லி ஒட்டிடடா

அது உன்னோட கடமை

எம்மோட பெருமை

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ்களம் வாடா..!

சண்டைக்கும் ஆள் வரும்

அரட்டைக்கும் ஆள் வரும்

பலதும் பத்தும் பறந்து வரும்

அதுதாண்டா யாழ் களம்

வாடா வாடா வாடா

உன் கருத்தோட துணிஞ்சு வாடா

பதுங்கி நில்லாம

உண்மை கொண்டு வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா.

திட்டும் பேச்சும்

நித்தம் வருண்டா

நில்லாமல் வாடா

கஸ்டப்பட்டு எழுத

கத்தரிக்கவும் ஆள் வருண்டா

நீ சளைக்காம எழுதனும்

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

பாடம் படிக்க வாடா

நம்ம தமிழர் வெட்டி வீரம்

பார்க்க வாடா...

உண்மை சொல்லி வாடா

நம்ம புலி வீரர் புகழ் சொல்ல வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

என்னோட உழைப்பு

என்னோட உயர்வு

அடுத்தவன் வாயைப் பார்க்காம

உன் கருத்தைச் சொல்லடா

காக்க பிடிக்க காவடி எடுக்க

ஆளும் வருவா

ஒதுக்கியே வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

நீண்ட நாட்களின் பின் குருவியின் கவிதையை படித்த உணர்வைதந்தது நன்றீ அண்ணா. :lol::lol::lol:

Link to comment
Share on other sites

மன்னிக்கவும், இடம் மாறிப் பதிவு செய்யப்பட்ட எனது கவிதை மாற்றப்பட்டுள்ளது.

மீண்டும் இவ்விடம் வருவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொக்கை பறித்த குளைகள் சுமந்து,

மெத்தெனச் செல்லும் வெறுமேனித் தாத்தா...

அவர் படலையைத் திறக்க வெள்ளாடு துள்ளும்.

யாழிற்குள் நுளைந்ததும் நம் மனங்களும் அதுபோல்!<<<

நல்ல உவமானம் கொண்ட கவிதையின்

தொடக்கம்!! அதில் ழ,ள, ல 'விலே

என்ன தான் குழப்பம்?!!

சறத்தோடு, காற்றோடு, நெளித்து வளைத்துத் துவிச்சக்கரம் ஓட்டி,

ஊரோடு ஓழுங்கைகளில் கதைபேசும் நங்கையர்க்கு நக்கல்கள் பேசி,

குளத்தடியில் கோம்பை கட்டி நீச்சல்கள் பழகி,

கூட்டமாய் பெடியளாய்க் கருப்பணி குடித்து,

அந்தியில் மீள்கையில் அப்பருங் கடிய... புத்தகம் எடுத்தாலும் நினைவுகள் மனதில்.

யாழின் அனுபவம் இதுவும் அது போல்...<<<<

நெஞ்சைத் தொடுகின்ற நீண்ட நினைவுகள்

உணர்வின் வேருக்கு நீர் வார்க்கும்

நினைவலைகள்! தங்கள் கவி வண்ணம்

கண்டு மகிழ்ந்தேன்!. யாழிலே உங்கள்

இசை கண்டு நிறைந்தேன்..[

நெற்பயிர் அறுவடை முடிந்திட்ட கையோடு

சிறுபயிர் சுமக்கும் நம்மூர் வயல் போல்

விவாத முடிவில் விவாதம் பிறக்கும்

பண்பட்ட யாழ் களம், இங்கு சிந்தனை விளையும்!<<<<

கருத்திலே செறிவுண்டு

சொன்ன கருத்திலும் நிறைவுண்டு!..

விவாதத்தின் முடிவு இன்னொரு தொடக்கம்!

களத்தினில் விளையும்!!!....சுவையும் அதிகம்.!!

கருதுகோள்கள், கொள்கைகள், கருத்துக்கள் நமக்குள் ஏராளம் .

குழப்பங்கள் கொஞ்சம் குளப்படி கொஞ்சம்,

சுய பரிசீலனை நாளாந்தம் மனதுக்குள் நடக்கும்.

படித்தவற்றைப் பரிசோதிக்கப் பயங்கள் தடுக்கும்,

பழிக்கு அஞ்சி வாய் பொத்தி நாட்கள் பேசாது மழுங்கி நகரும்.

முகமூடி மனிதராய் பரீட்சித்துப் பார்க்க யாழ் களம் கதவு திறக்கும்

வரப்பிரசாதம்... அச்சகம்... யாழ் ஒரு ஆய்வு கூடம்!<<<

யாழிலே பெற்றதை யாழிலே மீட்டும்

இன்னும் ஒருவா!! கவிதையின் நடையிலே

எதுகை மோனை ஏராளம்!.

படிப்புக்கள் தவறில்லை ஆராய்ச்சி அபத்தமில்லை

வாதிடல் கேடில்லை தர்க்கங்கள் நோயில்லை

கருத்தாடல் இல்லாது பண்படுதல் நடவாது

தனியாகத் தர்க்கித்து முளுவதும் விளங்காது.

மூளைகள் களமாட, சிந்தனைகள் முளை அவிழ,

தவறுகள் திரையகல, மனங்கள் பண்பட...

இணையமாய்ப் பாராது அதிகமாய் நேசித்து,

யாழ் மீட்டும் இதயங்கள் யாழோடு வளர்ந்திடுக!

யாழோடு வளர்ந்திடுக!! முடிவிலே

ஓர் தொடக்கம்! முடித்திட்ட கவி

சுவைக்கும் நல்ல கவி தந்தீர்கள்!

களிப்புண்டோம்! யாழின் சுவை கண்டோம்

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்.

நல்ல கவிதை! அத்தனையையும் கொட்டிவிட வேண்டும் என்ற அவசரம் தெரிகின்றது வரிகளில்!. கவிதை நடையில் இருந்து மாறி கொஞ்ச ம் வசனக்கவிதையாகப்போனாலும் நடக்கும், தடுக்கும் என்று தப்பித்துவிட்டீர்கள்.

கருத்துக்கள் அருமை. வாழ்த்துக்கள் மீண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

கையுளைய கீபோட் தட்டி

நல்ல கருத்தோட வாடா

அது உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

அங்க இங்க வெட்டி வந்தா

பெயர் சொல்லி ஒட்டிடடா

அது உன்னோட கடமை

எம்மோட பெருமை

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ்களம் வாடா..!

<<

கீபோர்ட்- தட்டச்சுப்பலகை

சண்டைக்கும் ஆள் வரும்

அரட்டைக்கும் ஆள் வரும்

பலதும் பத்தும் பறந்து வரும்

அதுதாண்டா யாழ் களம்

வாடா வாடா வாடா

உன் கருத்தோட துணிஞ்சு வாடா

பதுங்கி நில்லாம

உண்மை கொண்டு வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா.

திட்டும் பேச்சும்

நித்தம் வருண்டா

நில்லாமல் வாடா

கஸ்டப்பட்டு எழுத

கத்தரிக்கவும் ஆள் வருண்டா

நீ சளைக்காம எழுதனும்

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

பாடம் படிக்க வாடா

நம்ம தமிழர் வெட்டி[/color] வீரம்

பார்க்க வாடா...

உண்மை சொல்லி வாடா

நம்ம புலி வீரர் புகழ் சொல்ல வாடா

வாடா வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!<<<

வெட்டி- என்பதை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 'வெட்டி" விட்டென்...அது வேண்டாம்!!...

உன்னோட உழைப்பு

உன்னோட உயர்வு

என்னோட உழைப்பு

என்னோட உயர்வு

அடுத்தவன் வாயைப் பார்க்காம

உன் கருத்தைச் சொல்லடா

காக்கா பிடிக்க காவடி எடுக்க

ஆளும் வருவா

ஒதுக்கியே வாடா வாடா

இது உன்னோட களம் வாடா..!

வாடா வாடா வாடா

இது நம்மோட யாழ் களம் வாடா..

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

இது கருத்துக்களம் தானேடா

வாடா வாடா வாடா

இது உன்னோட யாழ் களம் வாடா...!

டா!! டா! டா!! அடடா!! எதுக்கு இத்தனை 'டா"!. இது கவிதை அல்ல!! பாடல் வரிகள். மெட்டமைத்தால் நன்றாக இருக்கும்! 'உன்னோட உயர்வுக்கு உன்னோட உழைப்பு - இது ஒரு சினிமாப்பாடலை நினைவூட்டுகின்றது.

உங்கள் அனுபவங்களை அள்ளித் தெளித்திருக்கின்றீர்கள் போலும்!!...சிரித்து இரசித்து மகிழ்ந்தேன்...

Link to comment
Share on other sites

சில காலங்களுக்கு முன்பு எழுதிய கவிதை இதனை இங்கு போடலாம் என நினைக்கிறன் :lol:

யாழ் களம்!!

---------------

இது எங்கள் தாய் களம்...

தமிழால் நாமெல்லாம் உள்ளம்

நனைக்க குதிக்கும் குளம்!

ஒரு வகையில் புலம் பெயர்ந்த

நமகெல்லாம்..

தமிழை தமிழால் அர்ச்சிக்க

வாயில் திறந்த புண்ணிய தலம்!

இங்கே புதினங்கள் இருக்கிறது....

புதிர்களும் உயிர்கிறது....

வாழ்த்துக்களும் பொழிகிறது...

வசைபாடலும் தொடர்கிறது...

அறிவியலும் இருக்கிறது..

அந்நியன் திரை படம் பற்றிய

பேச்சும் இருக்கிறது...

தேசத்தின் குரல் எடுத்து பாடும்

தேசிய குயில்களும் வாழ்கிறது...

தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர்

தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!

நாவில் நீர் ஊற வழி செய்யும்

நள பாக முறையும் இருக்கிறது..

நான்கு இமையும் மூடி சிரிக்க

நல்ல நகைச்சுவையும் இருக்கிறது...

ஒரு பொழுது இங்கு உள் நுளைய

முடியாமல் போய்விட்டாலே

உள்ளம் தெருவோரம் மகவை

தொலைத்த தாயென பதறுகிறது!

இருந்தும்...எம்மை மறந்து...

இட்ட அடி பிரள விட்டு...

எம் முகத்தில் நாம் அறைந்து...

எமக்குள் மோதி ...

ஏதோ வெற்றி பெற்றதாய்..

எண்ணி இந்த சந்தன மேடையை சிலசமயம்

சாக்கடை ஆக்கி போகிறோம்...

சுகம் கொள்கிறோம்..

பிறர் மனசை கொல்கிறோம்!

தங்கத்தை காய்ச்சி முதுகில் வைத்தால்..

சருமம் தீய்ந்து போகாதென்று நினைப்போ?

தெரியவில்லை!

எது எப்படியோ....

அமெரிக்காவில் இருப்பவருடன்

ஒரு செல்ல சண்டை..

லண்டனில் இருப்பவருடன்

ஒரு வாதம்..

கனடாவில் வாழ்பவருடன்

ஒரு கருத்து பகிர்வு...

கொலண்டில் குடியேறியவருடன்

ஒரு கொள்கை விவாதம்..

ஜேர்மனியிலிருந்து வருபவரிடம்

ஒரு நெஞ்சம் மகிழும் பாசம்...

ஆகா..

யாழ் களமே..

உன் உடலில் பரந்திருப்பது...

வெறும் தந்தி நரம்புகளல்ல...

விதி என்று போனதால் தாய் நிலம்

பிரிந்து துயருறும்

ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்!

உலகம் முழூதும் விரிந்து வாழும் எங்களை..

ஒன்றாய் அணைப்பவளே...

உன் விரல்களை பிடித்து கொண்டு நடை பயிலும் - சுகம்

விஞ்ஞானம் அழியாதவரை எமக்கு வேண்டும்!

கரும்பு காட்டிடையே அலையும்

எறும்பு கூட்டத்தின் வாழ்வென இனிக்கிறது மனசு!

தந்தையின் மார்பு மிதித்தேறி..

தாயின் தோழில் தாவி...பின்..

அவள் மடியில் குதித்துருண்டு சென்று...

உடன் பிறந்தவர்களை அணைக்கும் சுகம்..

உன்னால் கொண்டோம்!

இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...

வரலாற்று ஆவணம்!

அவதானமாய் சேகரித்தால்..

அடுத்த சந்ததிக்கும் உதவாமல் போகுமா என்ன?

உரியவர்கள் கவனம் எடுத்தால் உள்ளத்தால் அவர்க்கு ..

நன்றி சொல்வேன்..உங்களுடன் சேர்ந்தே!!!

Link to comment
Share on other sites

நான் போன வருடம் எழுதிய உல்டா கவிதை??? (பாடல்)

யாழுக்கு வந்தால் ஆனந்தம்

அரட்டை அடித்தால் ஆனந்தம்

அப்பப்ப கருத்தெழுதினா

இன்னும் இன்னும்ஆனந்தம்

சண்டை பிடிச்சா சந்தோசம்

புடுங்குப்பட்டால் சந்தோசம்

தாமதமின்றி சமாதானமானால்

ரொம்ப ரொம்ப சந்தோசம்

கடி வாங்கினால் உல்லாசம்

கத்திரி பட்டால் உல்லாசம்

பட்டி மன்றம் வச்சால் உல்லாசம்

வாதாடினால் இன்னும் இன்னும உல்லாசம்

உல்லாசம் உல்லாசம் சம் சம் சம்

யாழே யாழே கவர்ந்தாயே எம்மைப்

பாச சிறையில் அடைத்தாயே

தனி உலகோ புது உறவோ ஹோய்

உறவே உறவே உன் சிரிப்பில் நம்

சோகம் முழுதும் கரைத்தாயே

வாழ்வின் ஓர் அங்கமும் ஆனாய்

ஓருநாள் பார்க்கின் துயர் தந்தாய்

நேர ஓழுங்கின் செல்லப் பகையானாய்

அடடா அடடா சின்னச் சுமையானாய்

இருந்தும் சாய்வோம் உன் தோழில்

சொந்தங்களே சொந்தங்களே

தோழிக்கு அகவை ஒன்பதாம்

கவிமாலை சூடியவளின் களிப்பில்

சேர்ந்திடுவோம் வாரீர் நீவிரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் வணக்கம்:

கவியரங்கம் சூடு பிடிக்கிறது. இந்த நேரத்தில் கவியரங்கத்தின் சில விதிகளினை நினைவு படுத்த விரும்புகிறேன்.

யாழ் கள கவியரங்கில் எவரும் எத்தனை முறையும் பங்குபற்றமுடியும்.

ஆகவே நீங்கள் உங்கள் கவிதயில் மாற்றம் செய்ய விரும்பினால், முடிவுத் திகதி வரை தாராளமாக மாற்றம் செய்ய முடியும்.

மேலும்,

இயற்றப்படும் யழ்கீதம் ஒரு பாடலாக இசையமைத்துப் பாடக்கூடியதாக இருக்க வேண்டும். எனவே புதுக் கவிதை வடிவில் எழுதாமல் மரபுக் கவிதையாக எழுதும்படி கவிஞர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதற்காக புதுக் கவிதை எழுதுபவர்களுக்கு வெற்றி வாய்ப்புக் குறைவு என எந்த விதத்திலும் கருத்தவேண்டாம். ஆனால், ஒரு புதுக் கவிதை வெல்லுமிடத்து அந்த கவிதையை எழுதிய கவிஞர் அந்தக் கவிதையை ஒரு மரபுக்கவிதையாகவும் மாற்றித் தருமாறு கேட்கப்படுவார். இவ்வாறு மாற்றுவதற்கு சகல உதவிகளும் வழங்க முடியும்.

வெற்றிபெறும் கவிதையைத் தெரிவு செய்ய பின்வரும் அம்சங்கள் கருத்தில் எடுக்கப்படும்.

  • கருத்து
  • கவிநயம்
  • சொல்நயம்

மரபுக்கவிதை எனும்போது ஒரு பல்லவியும் பல சரணங்களும் வருமாறு இயற்றுவது நல்லது. அல்லது பல்லவியில்லாமல் பல சரணங்கள் மட்டும் வந்தாலும் பரவாயில்லை.

உதாரணத்திற்கு பாரதியாரின் ஒரு பாடலை இங்கு தருகிறேன்.

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

ஆடுவோமே

பார்ப்பானை ஐயரென்ற காலமும்போச்சே - வெள்ளைப்

பரங்கியைத் துரையென்ற காலமும்போச்சே - பிச்சை

ஏற்ப்பாரைப் பணிகின்ற காலமும்போச்சே - நம்மை

ஏய்ப்போருக் கேவல்செய்யுங் காலமும்போச்சே (ஆடுவோமே)

எங்கும் சுதந்திரம் என்பதேபேச்சு - நாம்

எல்லோருஞ் சமமென்ப துறுதியாச்சு

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத்

தரணிக்கெல் லாமெடுத் தோது வோமே (ஆடுவோமே)

எல்லோரு மொன்றென்னுங்க் காலம்வந்ததே - பொய்யும்

ஏமாற்றுந் தொலைகின்ற காலம்வந்ததே - இனி

நல்லோர் பெரியரென்னும் காலம்வந்ததே - கெட்ட

நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே (ஆடுவோமே)

உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம் - வீணில்

உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்

விழலுக்கு நீர்ப்பாய்ச்சி மாயமாட்டோம் - வெறும்

வீணருக் குழைத்துடலம் ஓயமாட்டோம் (ஆடுவோமே)

நாமிருக்கு நாடுனம தென்பதறிந்தோம் - இது

நமக்கே யுரிமையா மென்பதறிந்தோம் - இந்தப்

பூமியி லெவர்க்குமினி அடிமைசெய்யோம் - பரி

பூரணனுக் கேயடிமை செய்துவாழ்வோம். (ஆடுவோமே)

மேலே, சிவப்பிலுள்ளது பல்லவி, நீலத்திலுள்ளது சரணங்கள்.

மேலும், எல்லா சரணங்களும் ஒத்த ஓசையுடையனவாக (சந்தம்) இருப்பதைக் கவனிக்க. இங்கு பல்லவியானது சரணங்களை விட வேறுவிதமான சந்தத்தில் வருகிறது. நீங்கள் விரும்பினால் பல்லவியையும் சரணத்தையும் ஒரெ மாதிரியான சந்தத்துடனும் எழுதலாம்.

யாழ்கீதம் படைத்து வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துக்கூறி தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

Link to comment
Share on other sites

அன்னைத் தமிழ் மறந்து

ஆங்கிலோ நாட்டிலே - சுய

அடையாளத்தை இழந்து

அகதியாய் வாழ்ந்த போது......

உன் அன்புக் கரத்தாலே

என்னை அரவணைத்து -

ஏற்றம் தந்துவிட்ட

இனிய யாழ்களமே! நான்

சிலபத்து வருடம்முன்

கொலைக் களமாம் -

குடா நாட்டில் -

தொலைத்த தமிழ் உறவுகளை

திரும்பவும் சேர்த்து வைத்தாய்!

கரும்பாய் இனிக்க வைத்தாய்!

கவிதைகள் பாடும்

சில பத்து விகடகவி...

கதைகள் சொல்லும்

சில பத்து சாத்திரிகள்...

தாயகத்து செய்திகளை

காவிவரும் ஈழவன்கள்....

கணணி பற்றி கற்றுதரும்

தேவகுரு, குழந்தை சுட்டி...

பகிடிகள் விடுகின்ற

கூ.சா, சின்னப்பு, ...

உதட்டை கடிப்பதற்கு

வானவில்லின் அரட்டைகள்....

சர்வமதம் வளர்க்கின்ற

சகோதரி சகானா...

இன்னும் பலர் இப்படியே

உன் குடும்பத்தில் இருக்கின்றார்...

குறுக்காலும் நெடுக்காலும்

நடந்துபோகும் வித்தகர்கள்....

குறும்பாகக் குறைக்கின்ற

உள்வீட்டு கடுவன்கள்....

குடிப்பதற்கு கூழ் ஊற்றும்

சமையற்கட்டு தூயா பபா..

ராசியாய் நீ பெற்ற

ரசிகை என்றொரு பெண்...

துடிப்பாக திரிகின்ற

தூயவன் என்றொரு ஆண்..

அடித்தாலும் அழுதிடாத

முரட்டுப் பையன் டங்கன்...

அப்பப்பா! நீ பெற்ற

பல நூறு பிள்ளைகளின்

வரலாற்றை முழுவதுமாய்

என்னால் விபரிக்க முடியாது!

உன்னைப் பாராட்ட..

உன்புகழை பறைசாற்ற....

எளியவன் என்னிடம்

வார்த்தைகளே இல்லை!

இதயத்தின் பேச்சுதனை

தமிழில் மொழி பெயர்க்க

உலகத்தில் இன்னும்

சாதனங்கள் பிறக்கவில்லை!

ஆதலினால் இப்போது...

அமைதியுடன் செல்கின்றேன்!

ஆனால் மீண்டும் திரும்பி வருவேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது முந்தைய பதிவின் தொடர்ச்சி,

பாரதியாரின் அழகான ஒரு பாடல் இருக்கிறது

கண்ணன் மாடு கன்றுமேய்த்து வேணுகானம் பாடுவான்

வெண்ணை திருடித் தின்பதற்கு வீடுவீடாய் ஓடுவான்

என அது செல்கிறது.

இதே சந்தத்தில் ஒரு பல்லவி:

வாழ்க வாழ்க யாழ்களம்நீ வாழ்கவென்றும் வாழ்கவே

வான முள்ள காலம்மட்டும் வையம்போற்ற வாழ்கவே

அதே சந்தத்தில் ஒரு சரணம்:

நாளும் பொழுதும் நண்பர்கூடி விடியவிடிய பேசுவோம்

நல்ல சேதி நக்கல்நளினம் என்று எல்லாம் பேசுவோம்

ஈற்றில் நாங்கள் இணையில்லாத குடும்பமென்று ஆயினோம்

ஈழம் வெல்ல என்னசெய்ய என்று கூடிப் பேசுவோம்

இப்படி ஒரு நாலு சரணம் எழுதினால் வருகிறது யாழ்கீதம். முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன கருத்தை எழுதுகிறோம் என்பதே.

பாரதியாரின் பாடல்கள் நல்ல அருமையான சந்தமும் சொல்வளமும் கொண்டவை. அவற்றில் சிலதை பின்பற்றி நல்ல சந்தத்துடன் பாடல் இயற்ற முடியும்.

வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிக் கருத்துக்கு வருவோம்:

  • யாழ்களம் என்றால் என்ன
  • யாழ்களத்தின் நோக்கம் என்ன
  • யாழ் களத்தின் செயற்பாடுகள் என்ன
  • யாழ் களம் ஏன் எவ்வாறு எல்லோராலும் நேசிக்கப்படுகிறது

போன்ற முக்கிய விடயங்கள் (இது மட்டும் தான் முக்கிய விடயம் என்று மேலே எழுத வில்லை, ஆனால் முக்கிய விடயங்கள் என்று கருதப்படக் கூடியவை அனைத்தும் உள்ளடக்கப் படவேண்டும்) கூறப்படவேண்டும்.

வேறு என்ன விடயங்கள் கீதத்தில் இடம்பெற வேண்டும் என யாராவது தங்கள் கருத்தை இங்கு வைத்தால் அது கவிஞர்களுக்கு உதவியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

கூழுக்குச் சக்கரை போல்

வாழ்வுக்கோர் நல்லிணையம்

யாழ்களத்தில் இல்லாதோர்

பாழ்கிணற்றில் நீர் போன்றோர்

விஞ்ஞானக் களமிதுவே

அஞ்ஞானம் களைவதற்கு

மெஞ்ஞானப் பேரறிவை

துஞ்சாமல் பெறுவோமே

செய்திபல கருத்தாடல்

போட்டியுடன் பண்பாடல்

நாச்சுவையும் நகைச்சுவையும்

சிந்தனைக்கு விருந்தளிக்க

அனுபவமாய் ஆய்வையுமே

பகிர்ந்திடு நீ வாதஞ்செய்

தொழில்நுட்பம் காண்பாய்-வா

போகாத பொழுதுக்கும்

இக்கரையின் பச்சை கண்டு

இச்சையுடன் வந்தவர் நாம்

திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே

அகிலத்தில் வாழ்தமிழர்

முகம் தெரியா உறவுகளே

அழைத்தால் தான் வருவாரோ

ஊட்டத் தான் உண்பாரோ

எட்டுத் திசையினிலும்

விட்டில் பூச்சிகளாய்

எட்டி நடைநடந்தோம்

குட்டத் தலைகுனிந்தோம்

நாடற்ற பரதேசி-பல

வீடுள்ள சுகபோகி

பொருள்தேடும் உபவாசி

இருள்மூட நீ யோசி

எடுத்தாலும் குறையாது

தடுத்தாலும் நில்லாது

பகிர்ந்து கொடுப்போர்க்கே

சுரந்திட்ட மெய்யறிவு

ஆணும் பெண்குமரர்

கிழவர் இளவட்டம்

கூடிப் பெருகி நின்றால்

காலடியில் உலகமடா

கற்றுக் கரை கண்ட

அறிஞர் பலருண்டு

முற்றத் தரை காணா

பாமரரும் இங்குண்டு

உற்று நோக்கிடில் நாம்

உடன்பிறவா சோதரர்கள்

சற்றும் சலிக்காத

ஈழத்தின் காவலர்கள்

யாழ் களத்தில் இதயத்தினை

இன்றே நீர் இணைத்திடுவீர்

அறியாமை இருள்போக்க

திரையதனை விலக்கிடுவீர்

தமிழர்க்கோர் யாழ்களமே

உறவுகளாய் நாம் பழக

ஒப்புவமை உனக்கில்லை

யாழ்களம் நீ வாழியவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உற்று நோக்கிடில் நாம்

உடன்பிறவா சோதரர்கள்

சற்றும் சலிக்காத

ஈழத்தின் காவலர்கள்

இது

வெற்று வரியுமில்லை

வெறும்வாயின் மெல்லலில்லை

முற்றும் உணர்ந்தவனின்

மூச்சிருந்து வந்தவையே

வாழ்த்துக்கள்!

மேற்சொன்ன வரிகளில் யாழ்களத்தில் பாமரர் முதற்கொண்டு பல்லறிஞர் வரை அனைவரும் சகோதராய் பழகுவதை எடுத்துக் கூறிய கவிஞர்

"திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே"

என்ற வரிகளின் மூலம் புலம்பெயர் மக்களின் தாயகம் தொடர்பான உணர்வுகளை அழகாக விளக்கியிருக்கிறார்.

மேலும்,

தமிழர் பலதிக்குகளில் வாழ்ந்தும் இன்றும் நாடற்றவராகவே வாழ்வதனை குறிப்பிட்ட கவிஞர் அனைவரும் ஒன்று சேர்வதன் மூலமே அந்த நாட்டை பெற்றெடுக்க முடியும் என குறிப்பிடுகிறார்.

"பகிர்ந்து கொடுப்போர்க்கே

சுரந்திட்ட மெய்யறிவு"

என யாழ்களத்தில் கருத்தை பகிர்ந்து கொள்வதனால் ஏற்படும் நன்மைகளையும் கவிஞர் விளக்குகிறார்.

"கூழுக்குச் சக்கரை போல்

வாழ்வுக்கோர் நல்லிணையம்"

"யாழ்களத்தில் இல்லாதோர்

பாழ்கிணற்றில் நீர் போன்றோர்"

"திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே"

போன்ற வரிகளில் நல்ல கவிநயமும்

"பொருள்தேடும் உபவாசி

இருள்மூட நீ யோசி"

போன்ற வரிகளில் நல்ல சொல்நயமும் மிளிர்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெற்பயிர் அறுவடை முடிந்திட்ட கையோடு

சிறுபயிர் சுமக்கும் நம்மூர் வயல் போல்

விவாத முடிவில் விவாதம் பிறக்கும்

பண்பட்ட யாழ் களம், இங்கு சிந்தனை விளையும்!

பண்பட்ட யாழ்களத்தில் சிந்தனையின் விளைச்சல்

பயிர்ச்செய்கை போல இந்த சிந்தனையின் செயல்கள்

பலன்தருமே அதனாலே புரிந்திடுவோம் செயல்கள்

பறைந்திடுவோம் பண்படுவோம் பயன்பெறுவோம் இங்கே

வாழ்த்துக்கள்!

"கொக்கை பறித்த குளைகள் சுமந்து,

மெத்தெனச் செல்லும் வெறுமேனித் தாத்தா...

அவர் படலையைத் திறக்க வெள்ளாடு துள்ளும்.

யாழிற்குள் நுளைந்ததும் நம் மனங்களும் அதுபோல்!"

குழையுடன் வரும் தன் எஜமானரைக் கண்டு உவகையுடன் துள்ளும் ஒரு வெள்ளாடு போல யாழ்களத்தில் நுழையும் மனமும் ஆவலும் பரபரப்புமாக இருப்பதாகக் கூறப்பட்ட உவமை அருமையிலும் அருமை.

"சறத்தோடு, காற்றோடு, நெளித்து வளைத்துத் துவிச்சக்கரம் ஓட்டி,

ஊரோடு ஓழுங்கைகளில் கதைபேசும் நங்கையர்க்கு நக்கல்கள் பேசி,

குளத்தடியில் கோம்பை கட்டி நீச்சல்கள் பழகி,

கூட்டமாய் பெடியளாய்க் கருப்பணி குடித்து,

அந்தியில் மீள்கையில் அப்பருங் கடிய... புத்தகம் எடுத்தாலும் நினைவுகள் மனதில்.

யாழின் அனுபவம் இதுவும் அது போல்..."

என யாழில் ஏற்படும் அனுபவத்தை தாயகத்தில் எம் ஒவ்வொருவருக்கும் உள்ள தென்றல் நினைவுகளோடு கவிஞர் ஒப்பிடுவது அழகிலும் அழகு.

"அந்தியில் மீள்கையில் அப்பருங் கடிய... புத்தகம் எடுத்தாலும் நினைவுகள் மனதில்."

என யாழில் போகும் நேரத்தையும் அதன் பெறுமதியையும் அழகாக கூறுகிறார்.

"நெற்பயிர் அறுவடை முடிந்திட்ட கையோடு

சிறுபயிர் சுமக்கும் நம்மூர் வயல் போல்

விவாத முடிவில் விவாதம் பிறக்கும்

பண்பட்ட யாழ் களம், இங்கு சிந்தனை விளையும்!"

என்ற வரிகளுக்கு யாழில் பல விவாதங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. விவாதம் என்று வந்து விட்டால் அதற்கு முடிவேது?

"பழிக்கு அஞ்சி வாய் பொத்தி நாட்கள் பேசாது மழுங்கி நகரும்.

முகமூடி மனிதராய் பரீட்சித்துப் பார்க்க யாழ் களம் கதவு திறக்கும்

வரப்பிரசாதம்... அச்சகம்... யாழ் ஒரு ஆய்வு கூடம்!"

என செயல்ரீதியாக யாழின் பிரயோசனம் என்ன என்பதை விளக்குகிறார்.

முதல் நான்கு பந்திகளும் கவிதை நயத்தில் மிகவும் மிளிர்கின்றன.

"கருத்தாடல் இல்லாது பண்படுதல் நடவாது

தனியாகத் தர்க்கித்து முளுவதும் விளங்காது."

போன்ற வரிகள் சொல்நயம் மிக்கவையாகும்.

இதயத்தின் பேச்சுதனை

தமிழில் மொழி பெயர்க்க

உலகத்தில் இன்னும்

சாதனங்கள் பிறக்கவில்லை!

ஆதலினால் இப்போது...

அமைதியுடன் செல்கின்றேன்!

இதயத்தின் பேச்சுக்களின்

பதிவு தானே யாழ்களம்

இதோ

நான் உமது இதயத்தைத் தானே வாசிக்கிறேன்?!

உமது வரிகளையல்ல

வாழ்த்துக்கள்!

தாய் நாட்டைப்பிரிந்து ஓடிவந்தவர்களை யாழ்களம் எவ்வாறு சேர்த்துவைக்கிறது என கவிஞர் உவகையுடன் விளக்குகிறார். மேலும் யாழ் எவ்வாறு ஒவ்வொரு குடும்ப அங்கத்தவர்களையும் ஒரு குடும்பத்திற்கு மேலாக இணைத்து பிணைத்து வைத்திருக்கிறது என்பதற்கு கவிஞரின் வரிகள் சான்று.

"இதயத்தின் பேச்சுதனை

தமிழில் மொழி பெயர்க்க

உலகத்தில் இன்னும்

சாதனங்கள் பிறக்கவில்லை!"

போன்ற வரிகள் கவிநயம் மிக்கவையாகவும்

"சிலபத்து வருடம்முன்

கொலைக் களமாம் -

குடா நாட்டில் -

தொலைத்த தமிழ் உறவுகளை

திரும்பவும் நீ சேர்த்து வைத்தாய்!"

போன்ற வரிகள் சொன்னயம் மிக்கவையாகவும் மிளிர்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்வின் ஓர் அங்கமும் ஆனாய்

ஓருநாள் பார்க்கின் துயர் தந்தாய்

நேர ஓழுங்கின் செல்லப் பகையானாய்

அடடா அடடா சின்னச் சுமையானாய்

இருந்தும் சாய்வோம் உன் தோழில்

நேர ஒழுங்கின் பகையெனினும்

நேசிக்கின்றோம் யாழ்வரவை

நேற்றோ இன்றோ நாளைக்கோ

யாழில்லாதொரு நாளில்லை

வழ்த்துக்கள்!

எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய யாழ் அனுபவங்களை கவித்துவத்துடன் கவிஞர் பாடியிருக்கிறார்.

"நேர ஓழுங்கின் செல்லப் பகையானாய்

அடடா அடடா சின்னச் சுமையானாய்

இருந்தும் சாய்வோம் உன் தோழில் "

போன்ற வரிகள் கவிதை நயத்திலும்

யாழே யாழே கவர்ந்தாயே எம்மைப்

பாச சிறையில் அடைத்தாயே

போன்ற வரிகள் சொல் நயத்திலும் மிளிர்கின்றன.

சில காலங்களுக்கு முன்பு எழுதிய கவிதை இதனை இங்கு போடலாம் என நினைக்கிறன் :lol:

யாழ் களம்!!

---------------

உலகம் முழூதும் விரிந்து வாழும் எங்களை..

ஒன்றாய் அணைப்பவளே...

உன் விரல்களை பிடித்து கொண்டு நடை பயிலும் - சுகம்

விஞ்ஞானம் அழியாதவரை எமக்கு வேண்டும்!

ஆனாலும்,

விஞ்ஞானம் அழிந்தாலும் எமக்கு யாழ்வேண்டும்!

வாழ்த்துக்கள்!

"தேசத்தின் குரல் எடுத்து பாடும்

தேசிய குயில்களும் வாழ்கிறது...

தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர்

தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!

நாவில் நீர் ஊற வழி செய்யும்

நள பாக முறையும் இருக்கிறது..

நான்கு இமையும் மூடி சிரிக்க

நல்ல நகைச்சுவையும் இருக்கிறது... "

போன்ற வரிகள் யாழின் கருத்துப் பகிர்வு எவ்வளவு பன்முகத்தன்மை வாய்ந்தது என கூறிநிற்கிறது.

இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...

வரலாற்று ஆவணம்!

என யாழின் கருத்துக்களின் பெறுமதியை கவிஞர் குறிப்பிடுகிறார்.

தமிழால் நாமெல்லாம் உள்ளம்

நனைக்க குதிக்கும் குளம்!

போன்ற வரிகளும்

ஒரு வகையில் புலம் பெயர்ந்த

நமகெல்லாம்..

தமிழை தமிழால் அர்ச்சிக்க

வாயில் திறந்த புண்ணிய தலம்!

போன்ற வரிகளும் இன்னும்

ஒரு பொழுது இங்கு உள் நுளைய

முடியாமல் போய்விட்டாலே

உள்ளம் தெருவோரம் மகவை

தொலைத்த தாயென பதறுகிறது!

போன்ற பல கவிநயம் மிக்க வரிகளை காணக்கூடியதாக இருக்கின்றது.

இங்கே புதினங்கள் இருக்கிறது....

புதிர்களும் உயிர்கிறது....

கரும்பு காட்டிடையே அலையும்

எறும்பு கூட்டத்தின் வாழ்வென இனிக்கிறது மனசு!

போன்ற வரிகள் நல்ல சொல்நயம் மிக்கவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னோட கருத்தோட நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா.

நம்மோட கருத்தை நாம் ஒன்று சேர்த்தா - இந்த

உலகத்தின் கருத்தைநாம் மாத்தலாண்டா

வாழ்த்துக்கள்!

அங்க இங்க வெட்டி வந்தா

பெயர் சொல்லி ஒட்டிடடா

என யாழின் கொள்கைகளையும் கவியோடு சேர்த்து கொடுக்கும் கவிஞர்

திட்டும் பேச்சும்

நித்தம் வருண்டா

நில்லாமல் வாடா

கஸ்டப்பட்டு எழுத

கத்தரிக்கவும் ஆள் வருண்டா

என எழுதுபவர்கள் பொறுப்ப்புணர்வோடு எழுதவேண்டிய அவசியத்தை விளக்குகின்றார்.

பாடம் படிக்க வாடா

நம்ம தமிழர் வெட்டி வீரம்

பார்க்க வாடா...

போன்ற வரிகளில் கவி நயம் மிளிர்கிறது.

உன்னோட கருத்தோட

நீ வந்தா

நான் என்னோட கருத்தோட வருவேண்டா...

போன்ற வரிகள் சொன்னயம் மிக்கவை.

சிவகாசி ஸ்டைலில் கவிஞர் பாடலாக எழுதியிருப்பது புரிகிறது.

சிவகாசி வரிகள் இவைதான்:

வாடா வாடா வாடா வாடா நண்பா - கொஞ்சம்

வாழ்ந்து பாப்போம் வாழ்ந்து பாப்போம் நண்பா

நீயும் நானும் நீயும் நானும் ஒண்ணா - இப்போ

சேர்ந்து நின்னா உலகம் கீழ கண்ணா

உன்னோட உயர்வுக்கு உன்னோட வேர்வை

என்னோட உயர்வுக்கு என்னோட வேர்வை

யாரோட உயர்வையும் யாராலயும்

தடுக்க முடியாதுடா தடுக்க முடியாதுடா

மேலே உள்ள வரிகளில் இருந்து கவிஞர் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே இன்ஸ்பிரேசன் எடுத்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. மேலுள்ள பாடலில் முதலாவது பத்தி அழகான ஒரு மரபுக்கவிதைக் குரிய இலட்சனங்களை கொண்டிருப்பதைக் காண்க. மேலும், மேலேயுள்ள பாடல் மெட்டிலேயே பாடவேண்டுமானால் கொஞ்சம் மாற்றங்கள் தேவைப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னைத் தமிழ் மறந்து

ஆங்கிலோ நாட்டிலே - சுய

அடையாளத்தை இழந்து

அகதியாய் வாழ்ந்த போது......

உன் அன்புக் கரத்தாலே

என்னை அரவணைத்து -

ஏற்றம் தந்துவிட்ட

இனிய யாழ்களமே! நான்

சிலபத்து வருடம்முன்

கொலைக் களமாம் -

குடா நாட்டில் -

தொலைத்த தமிழ் உறவுகளை

திரும்பவும் சேர்த்து வைத்தாய்!

கரும்பாய் இனிக்க வைத்தாய்!

ஆனால் மீண்டும் திரும்பி வருவேன்!

<<<

உறவுகளை ஒன்றிணைத்து உவப்பூறும்

கவி படைத்தீர்! தமிழினத்தின் பண்பு

சொல்லி எம் தலையை நிமிரவைத்தீர்!

மீண்டு வர வேண்டும் மீண்டும்

வரவேண்டும்! தமிழாலே பல

கவிதை யாழ்களத்திற்கு தரவேண்டும்!

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூழுக்குச் சக்கரை போல்

வாழ்வுக்கோர் நல்லிணையம்

யாழ்களத்தில் இல்லாதோர்

பாழ்கிணற்றில் நீர் போன்றோர்

விஞ்ஞானக் களமிதுவே

அஞ்ஞானம் களைவதற்கு

மெய்ஞானப் பேரறிவை

துஞ்சாமல் பெறுவோமே

செய்திபல கருத்தாடல்

போட்டியுடன் பண்பாடல்

நாச்சுவையும் நகைச்சுவையும்

சிந்தனைக்கு விருந்தளிக்க

அனுபவமாய் ஆய்வையுமே

பகிர்ந்திடு நீ வாதஞ்செய்

தொழில்நுட்பம் காண்பாய்-வா

போகாத பொழுதுக்கும்<<<<<

யாழ்களத்தில் எது உண்டு

கவித்தமிழிலிலே அதைத்தந்து

இனிய கவி படைத்தீர்கள்

விருந்து உண்டோம் கவியாலே!

இக்கரையின் பச்சை கண்டு

இச்சையுடன் வந்தவர் நாம்

திரைகடலைத் தாண்டி வந்தே

திரவியத்தைப் பிரிந்தோமே

அகிலத்தில் வாழ்தமிழர்

முகம் தெரியா உறவுகளே

அழைத்தால் தான் வருவாரோ

ஊட்டத் தான் உண்பாரோ

<<

உணர்வுள்ள தமிழரெல்லாம்

கூடுமிடம் யாழ்களமாம்

திரவியத் தமிழை இங்கு

தித்திக்கத் தந்தீர்கள்.

எட்டுத் திசையினிலும்

விட்டில் பூச்சிகளாய்

எட்டி நடைநடந்தோம்

குட்டத் தலைகுனிந்தோம்

நாடற்ற பரதேசி-பல

வீடுள்ள சுகபோகி

பொருள்தேடும் உபவாசி

இருள்மூட நீ யோசி

<<

கருத்தினிலே சிந்திக்க

வைத்த கவி வாழ்ந்திடுக!

மூடத் தனத்திற்கு உங்கள்

கவி தீ மூட்டும்! எழுந்திடுக!.

எடுத்தாலும் குறையாது

தடுத்தாலும் நில்லாது

பகிர்ந்து கொடுப்போர்க்கே

சுரந்திட்ட மெய்யறிவு

ஆணும் பெண்குமரர்

கிழவர் இளவட்டம்

கூடிப் பெருகி நின்றால்

காலடியில் உலகமடா

<<

ஒன்றிணைந்து யோசிப்போம்

ஈழ மூச்சையே சுவாசிப்போம்

எண்ணம் உயர்வு கொண்டால்

வாழ்வும் உயரும் அன்றோ!.

கற்றுக் கரை கண்ட

அறிஞர் பலருண்டு

முற்றத் தரை காணா

பாமரரும் இங்குண்டு

உற்று நோக்கிடில் நாம்

உடன்பிறவா சோதரர்கள்

சற்றும் சலிக்காத

ஈழத்தின் காவலர்கள்

<<<

கவிதையிலே பொய்யில்லை

மனம் நிறைக்கும் உண்மைஇது!

நாம் எல்லாம் சோதரர்கள்!

ஈழத்தின் காவலர்கள்!

யாழ் களத்தில் இதயத்தினை

இன்றே நீர் இணைத்திடுவீர்

அறியாமை இருள்போக்க

திரையதனை விலக்கிடுவீர்

தமிழர்க்கோர் யாழ்களமே

உறவுகளாய் நாம் பழக

ஒப்புவமை உனக்கில்லை

யாழ்களம் நீ வாழியவே

<<

அன்னைத் தமிழ் குழைத்து

அமுதக்கவி படைத்த

உங்கள் கவியாலே!யாழின்

சுவை கூடியதே!

நல்ல கவி கண்டோம்!. வாழ்த்துக்கள்! பல தந்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில காலங்களுக்கு முன்பு எழுதிய கவிதை இதனை இங்கு போடலாம் என நினைக்கிறன் :unsure:

யாழ் களம்!!

---------------

இது எங்கள் தாய் களம்...

தமிழால் நாமெல்லாம் உள்ளம்

நனைக்க குதிக்கும் குளம்!

ஒரு வகையில் புலம் பெயர்ந்த

நமகெல்லாம்..

தமிழை தமிழால் அர்ச்சிக்க

வாயில் திறந்த புண்ணிய தலம்! <<

மிக நயமான வரிகள் சோதரி.

இங்கே புதினங்கள் இருக்கிறது....

புதிர்களும் உயிர்கிறது....

வாழ்த்துக்களும் பொழிகிறது...

வசைபாடலும் தொடர்கிறது...

அறிவியலும் இருக்கிறது..

அந்நியன் திரை படம் பற்றிய

பேச்சும் இருக்கிறது... <<<

கவிதைக்கு உயிர் சேர்க்க வேண்டும்

உங்கள் ஓசை நயம் புரிகின்றது ஆனால் அந்நியன் திரைப்படம் பற்றிய!! அந்த வரிகள் கவிதையின் நயத்துக்காக திணிக்கப்பட்டது போல் இருக்கின்றது. அது வேண்டாமே.!

தேசத்தின் குரல் எடுத்து பாடும்

தேசிய குயில்களும் வாழ்கிறது...

தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர்

தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!

நாவில் நீர் ஊற வழி செய்யும்

நள பாக முறையும் இருக்கிறது..

நான்கு இமையும் மூடி சிரிக்க

நல்ல நகைச்சுவையும் இருக்கிறது... <<<

நல்ல வரிகள். நயம்படச் சொன்னீர்கள்.

ஒரு பொழுது இங்கு உள் நுளைய

முடியாமல் போய்விட்டாலே

உள்ளம் தெருவோரம் மகவை

தொலைத்த தாயென பதறுகிறது! <<

நல்ல உவமானம்.

எது எப்படியோ....

அமெரிக்காவில் இருப்பவருடன்

ஒரு செல்ல சண்டை..

லண்டனில் இருப்பவருடன்

ஒரு வாதம்..

கனடாவில் வாழ்பவருடன்

ஒரு கருத்து பகிர்வு...

கொலண்டில் குடியேறியவருடன்

ஒரு கொள்கை விவாதம்..

ஜேர்மனியிலிருந்து வருபவரிடம்

ஒரு நெஞ்சம் மகிழும் பாசம்...

ஆகா..

யாழ் களமே..

உன் உடலில் பரந்திருப்பது...

வெறும் தந்தி நரம்புகளல்ல...

விதி என்று போனதால் தாய் நிலம்

பிரிந்து துயருறும்

ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்! <<<

அருமையான நடை!

உலகம் முழூதும் விரிந்து வாழும் எங்களை..

ஒன்றாய் அணைப்பவளே...

உன் விரல்களை பிடித்து கொண்டு நடை பயிலும் - சுகம்

விஞ்ஞானம் அழியாதவரை எமக்கு வேண்டும்!

கரும்பு காட்டிடையே அலையும்

எறும்பு கூட்டத்தின் வாழ்வென இனிக்கிறது மனசு!

தந்தையின் மார்பு மிதித்தேறி..

தாயின் தோழில் தாவி...பின்..

அவள் மடியில் குதித்துருண்டு சென்று...

உடன் பிறந்தவர்களை அணைக்கும் சுகம்..

உன்னால் கொண்டோம்!

இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...

வரலாற்று ஆவணம்!

அவதானமாய் சேகரித்தால்..

அடுத்த சந்ததிக்கும் உதவாமல் போகுமா என்ன?

உரியவர்கள் கவனம் எடுத்தால் உள்ளத்தால் அவர்க்கு ..

நன்றி சொல்வேன்..உங்களுடன் சேர்ந்தே!!!

<<

வாழ்த்துக்கள்! இன்னும் கொஞ்சம் செதுக்க வேண்டும்!. நிறைவான பகுதி உரை நடையாய் இருக்கிறது.

கருத்துச் சிறப்பு!. வாழ்த்துக்கள்! இது முன்பு எழுதியதுதானே இதே கருத்துடன் வரிகள் செதுக்கி மீண்டும் படையுங்கள் ஓர் விருந்து. விமர்சனம் உங்களை செதுக்குவதற்காக! அன்றி!!..ஒதுக்குவதற்காக என்று நினைத்துவிடக் கூடாது!

நன்றி.

நான் போன வருடம் எழுதிய உல்டா கவிதை??? (பாடல்)

யாழுக்கு வந்தால் ஆனந்தம்

யாழே யாழே கவர்ந்தாயே எம்மைப்

பாச சிறையில் அடைத்தாயே

தனி உலகோ புது உறவோ ஹோய்

உறவே உறவே உன் சிரிப்பில் நம்

சோகம் முழுதும் கரைத்தாயே

வாழ்வின் ஓர் அங்கமும் ஆனாய்

ஓருநாள் பார்க்கின் துயர் தந்தாய்

நேர ஓழுங்கின் செல்லப் பகையானாய்

அடடா அடடா சின்னச் சுமையானாய்

இருந்தும் சாய்வோம் உன் தோழில் >>>>தோளில்!

சொந்தங்களே சொந்தங்களே

தோழிக்கு அகவை ஒன்பதாம்

கவிமாலை சூடியவளின் களிப்பில்

சேர்ந்திடுவோம் வாரீர் நீவிரும்.

<<<

ஆனந்தம்! ஆனந்தம்!! யாழ்கீதம்!! நல்ல மெட்டமைத்துப் பாடலாம் தங்கள் பாடல் வரிகளை.

Link to comment
Share on other sites

தந்தை மனம் நொந்ததடா

தாய் வயிறு எரிந்ததடா-உன்

உடன்பிறப்பே உனை வெறுக்குதடா..

உடன்பிறப்பே உனை வெறுக்குதடா..

நல்லவைகள் மறந்ததென்ன

நரபலிகள் கொல்வதென்ன-சின்ன

குழந்தை உன்னை என்ன செய்ததடா..

குழந்தை உன்னை என்ன செய்ததடா..

பிணங்களிடை படுத்திருப்பாய்

துர்நாற்றங்களை சேகரிப்பாய்-மனித

இரத்தத்திலே குளிப்பதென்னடா..

இரத்தத்திலே குளிப்பதென்னடா..

வசந்தங்கள் கண்டதுண்டா

அன்பு என்றால் அறிந்ததுண்டா-வெறும்

போதை மட்டும் வாழ்க்கை இல்லையடா..

போதை மட்டும் வாழ்க்கை இல்லையடா..

தன்மானந்தானிழந்த துரோகத்தை களையெடுப்பார்

கரிகாலன்தான் எங்கள் தெய்வமடா-மனிதத்தை

மண்ணெறிந்து தமிழ் மக்கள் மீது தீயெறிந்த

கொடியவரின் கொட்டம் அடங்குமடா..

கொடியவரின் கொட்டம் அடங்குமடா..

திங்கட்கிழமை அடி நடக்கும்

செவ்வாய் எல்லாம் பொறி பறக்கும்-அட

வெள்ளிக்கிழமை வெற்றி கிடைக்குமடா..

சனிக்கிழமை சாந்தி கிடைக்கும்

சந்தோசம் வாசல் திறக்கும் -சுக

சங்கீதம் நெஞ்சை நிறைக்குமடா

ஆ...ஆ..சங்கீதம் நெஞ்சை நிறைக்குமடா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுக்கான வாழ்த்து மரபைத் தேடாதீர்கள்.

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஏழ்கடல் மேவிநீ... ஐம்புவியாண்டு

பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

சூழ்கலி வெல்லும் சூட்சுமம் சொல்லும்

ஆழ் வழி கைகளை ஆழப்பற்றி

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஈழக்குயிலினம் தாளயதியுடன்

எண்திக்கிருந்தும் கையிணைக்க,

ஆளும் பலமிக்க ஆய்வுத்துறைகளும்

கால முழுவதும் கோலமிட,

நாளும் வளந்தரு நல்லன பலவும்

மேலும் மேலும் படை நூறுசெய்ய

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

வெள்ளை மனங்கொண்ட பிள்ளைக்கூட்டங்கள்

வேடிக்கைக் கதைகள் பேசப்பேச,

கள்ளச்சிரிப்புடன் கன்னித்தமிழும்

துள்ளும் குமரியாய் கொள்ளை கொள்ள,

வல்ல செயலாலே நல்ல உறவுகள்

பொல்லாத பொய்யதை வெல்ல வெல்ல

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

தகவலும், தொழிலும் தளராத நுட்பமும்

தாயக மீட்புக்கு வளமூட்ட,

அகவல் பலதோன்றும் ஆதிப்பொருளாகி

அணைத்து வழி சொல்லும் பெருந்தளமாய்,

முகங்கள் பலசூடும் மேன்மை மாந்தர்கள்

மீட்டும் விரல்கட்கு யாழ்நரம்பாய்

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

ஏழ்கடல் மேவிநீ... ஐம்புவியாண்டு

பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

சூழ்கலி வெல்லும் சூட்சுமம் சொல்லும்

ஆழ்வழி கைகளை ஆழப்பற்றி

வாழிய வாழிய வாழிய – யாழ்க்களம்

வாழிய வாழிய வாழியவே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.