Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தமிழக அரசோடு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்': சு.ப.தமிழ்ச்செல்வன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழக அரசோடு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்': சு.ப.தமிழ்ச்செல்வன்

"எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்பளித்து விடக்கூடாது."

தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் வருமாறு:

"குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை புலிகளுக்குச் சொந்தமான 'மரியா' என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள் விடுதலப் புலிகள் என்று ஆதாரத்துடன் தமிழக காவல்துறை இயக்குநர் முகர்ஜி கூறியிருக்கிறார். அதற்கு உங்கள் பதில் என்ன?"

"இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். ஐந்து மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும், 12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் இலங்கை கடற்படைதான் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதுதான் எங்கள் விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல். புலிகள் மீது திட்டமிட்டு பழி சுமத்துவதற்காகவே இலங்கை கடற்படை இப்படியொரு காரியத்தை செய்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது, நடக்கிறது என்பதெல்லாம் விரைவில் அப்பட்டமாக வெளிஉலகுக்கு வரும்போது, புலிகள் மீது பொய்யை வாரி இறைத்திருப்பதை உலகம் உணரும். இலங்கைக் கடற்படையின் மோசமான எண்ணத்துக்கு ஈடுகொடுப்பது போல தமிழகக் காவல்துறையும் ஏன் இப்படியெல்லாம் அவதூறு சொல்கிறது என்பதுதான் எங்களுக்குப் புரியவில்லை. தமிழக மக்கள் மீதும் மீனவர்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர்கள்தான் எமது போராளிகள். இதில் எள்ளளவும் சந்தேகம் தேவையில்லை. இலங்கைக் கடற்படையினர் மீனவர்களுக்கு எதிராக நடத்தும் பல்வேறு கொடுமைகளில் இருந்து மீனவர்களை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அப்படி இருக்கும்போது, காவல்துறைத் தலைவர் முகர்ஜி சொல்லியிருக்கும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது!"

"கடத்தப்பட்டு உங்கள் முகாமில் இருப்பதாகச் சொல்லப்படும் மீனவர்களை மீட்க தமிழக அரசு தரப்பிலிருந்து, உங்கள் தரப்பிடம் மூன்று நாட்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும் இறுதிவரையில் நீங்கள் அவர்களை விடுவிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஒரு தகவல். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ஐந்து கடற்புலிகள் ஈழத்தில் அடைத்து வைத்திருப்பதாகச் சொல்லப்படும் மீனவர்களுக்காக அங்கிருக்கும் புலி தளபதி ஒருவரிடம் தமிழகத்தில் இருந்து வாக்கி-டாக்கி மூலமாக பேசியதாக வரும் தகவல் குறித்தெல்லாம் என்ன சொல்கிறீர்கள்?"

"இதுவும்கூட தவறான தகவல்தான். இலங்கைக் கடற்படையாலும் அதனோடு சேர்ந்து இயங்கும் கூலிப்படையாலும் மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்படுகின்ற நாடகமாகவேத்தான் நாங்கள் இதனைப் பார்க்கிறோம். இதில் எங்களுக்கு இன்னொரு பெருத்த சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. தமிழக காவல்துறையோடும் உளவுத்துறையோடும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அவர்கள், புலிகளின் பெயரால் இப்படியான உரையாடல்கள நடத்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. ஏனென்றால், இதுநாள் வரையில் அதிகாரப்பூர்வமாக தமிழகக் காவல்துறையோடு எமது அமைப்பின் உறுப்பினர்களோ தளபதிகளோ நேரடித் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதில்லை. அப்படி இருக்கும்போது, அவர்கள் எங்களோடு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றால் எப்படி? குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், மீனவர்களை நாங்கள் கடத்தி வைத்திருக்கவில்லை என்கிறபோது, அவர்கள் ஏன் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? அப்படிப் பேசினால் அது அபத்தமாக இருக்காதா? தமிழக மக்களுக்கும் புலிகள் இயக்கத்துக்குமான அன்பை, பாசத்தை, உறவை கெடுக்கும் விதமாகவே இதெல்லாம் நடக்கிறது என்ற எங்கள் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது."

"எல்லாவற்றையும் நீங்கள் தெளிவாக மறுக்கிறீர்கள். ஆனால், உங்கள் 'மரியா' படகில் வந்த கடற்புலிகளோ மீனவர்களை சுட்டுக் கொன்றது புலிகள்தான் என்று தெளிவுபடச் சொல்கிறார்களே...?"

"ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதுநாள் வரையில் 'மரியா' படகில் பிடிபட்டது கடற்புலிகள் என்று எங்கள் தரப்பிலிருந்து யாராவது ஒப்புக் கொண்டிருக்கிறார்களா? அப்படி இருக்கும்போது, அவர்கள் வாக்குமூலம் கொடுத்தார்கள் என்று சொல்லி, எதையாவது தமிழகக் காவல்துறை சொல்லிக் கொண்டிருக்குமானால், அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? அப்படியே அவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகச் சொன்னாலும், அந்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை யார் சோதித்தறிவது? எமது அமைப்புக்கு எதிரானவர்கள் மூலமாக திட்டமிட்டு ஏன் இப்படியொரு நாடகம் நடத்தப்படக் கூடாது? கொஞ்சம் பொறுங்கள்... எல்லா உண்மைகளும் விரைவில் வெளியே வந்துவிடும்!"

"தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக புலிகள் தரப்பில் அறிக்கை ஒன்று விடப்பட்டிருக்கிறது. அதில், 'காணாமல் போன மீனவர்கள் பற்றி அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள் என்றும் மீனவர்கள் பற்றி தகவல்கள் கிடத்தால் அவர்களை மீட்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம்...' என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே?"

"ஆமாம், பாதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள். அவர்களுக்காக நாங்கள் உதவுவோம். இந்த விஷயத்தில் எமது தலைமை கரிசனத்தோடும் அக்கறையோடும் இருக்கிறது. மீனவர்கள் கடத்தல் நாடகத்திலும் மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் என்ன நடந்தது என்பதை உலகுக்குச் சொல்ல நாங்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்."

"ஒருவேளை மீனவர்களை மீட்கும் முயற்சிக்கு உங்கள் ஒத்துழைப்பு தேவைப்பட்டு, நீங்கள் தமிழக அரசோடு பேச வேண்டியிருந்தால் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?"

"மீனவர்களை மீட்பதற்கும் அவர்களின் பாதுகாப்பு நிலைமைகளை உறுதிப்படுத்வதற்கும் தமிழக அரசு எடுத்து வருகிற அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் உறுதுணயாக இருப்போம். சிங்கள கடற்படையாலோ கூலிப்படையாலோ நிகழ்த்தப்பட்ட இந்தச் செயலை முடிவுக்குக் கொண்டு வந்து, தமிழக மீனவர்கள் சிறுபாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். இது தொடர்பாக எத்தனைமுறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்ப்பளித்து விடக்கூடாது."

"அண்டை நாட்டுப் பிரச்சினைதான் என்றாலும், ஈழப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வந்திருக்கிறார்கள். சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணருகிறீர்களா?"

"நடப்பது என்னவென்று தமிழக மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கும் சூழ்நிலையில் அவர்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் பரிவும் பாசமும் எப்படிக் குறையும்? அதற்கு வாய்ப்பே இல்லை! இப்படி தமிழக மக்கள் மனங்களில் இருந்து எங்களை பிரித்தெடுக்க சிங்கள அரசு போடும் நரித் திட்டங்கள் பலிக்காது. எங்களுக்கு எதிராக இந்திய அரசையும் திருப்பிவிடும் முயற்சிகளையும் சிங்கள அரசு செய்து வருகிறது. எங்களைப் பொறுத்த வரையில் பொய்கள் வேகமாகத்தான் பரவும். ஆனால், இறுதியில் அதை பரப்புகிறவர்கள் மீதே அசிங்கத்தைப் பூசும். உண்மைக்கு சோதனை வந்தால், அதனை பொறுமையாக எதிர்கொள்வதுதான் சரியான அணுகுமுறை. அதைத்தான் புலிகள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்."

"சமீபத்தில் மூன்றாவது முறையாக நீங்கள் கொழும்பில் வான்வழித் தாக்குதல் நடத்தினீர்கள். அதில் இந்தியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்குகள் பலவும் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகிறதே..."

"சமாதான காலத்தில் நாங்கள் யுத்த தர்மப்படி எவ்வித தாக்குதலிலும் ஈடுபடாமல் இருந்தபோது, தொடர்ந்து தமிழ் மக்கள் மீது விமானத்தாக்குதல நடத்தியது சிங்கள விமானப்படை! பலமுறை எச்சரித்தோம்... உரியவர்களிடம் முறையிட்டோம். ஆனால், சிங்கள ராணுவம் வான்வழித் தாக்குதலை நிறுத்தவில்லை. அதன்பிறகுதான் புலிகள் தரப்பில் வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தமானோம். சிங்கள ராணுவத்துகுத் தேவையான எரிபொருளைக் கொடுக்கும் கட்டுமானங்களை அழிப்பதுதான் எங்கள் விமானப்படையின் நோக்கம். வான் வழியாக நாங்கள் வீசுகிற ஒவ்வொரு குண்டும் இலங்கை ராணுவத்தின் விமானக் கட்டுமானங்களுக்கு எதிரானதுதானே தவிர, சிங்கள அப்பாவி மக்கள் மீது அல்ல. அப்படி இருக்கும் போது, நாங்கள் நல்லுறவைப் பேண விரும்பும் இந்திய அரசுக்கு எதிராக எங்களின் விமானப்படையை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம்!"

"கிட்டத்தட்ட சிங்கள அரசு-புலிகள் என இரண்டு தரப்பும் முழுமையான போரில் குதித்துவிட்ட இந்த சூழ்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கிறதா?"

"இலங்கை அரசைப் பொறுத்தவரையில் இன அழிப்புப் போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பல லட்சம் மக்களை அகதிகளாக்கி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறார்கள். நாங்கள் நடத்துவது எமது மக்களை காக்கும் தற்காப்புப் போர்தான். மீண்டும் ஒரு சமாதானச் சூழலைக் கொண்டு வர நார்வே, பிரிட்டன் போன்ற நாடுகள் முயன்று வருகின்றன. என்றாலும், சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்பு போர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமைதி பேச்சுக்காக நார்வே மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த அமைதித் தூதுவர்கள் எம்மைச் சந்திக்க எடுத்த முயற்சிகளையும் இலங்கை அரசுதான் தடுத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையெல்லாம் நடக்குமா என்பது தெரியவில்லை. அப்படி இருக்கும்போது எங்கள் மக்களை காக்க நாங்களும் ஆயுதப்போர் நடத்தத்தானே வேண்டும்?"

-புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையானகருத்து. மிகத்தெளிவாக அமைப்பின் கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார் எமது அரசியல் பொறுப்பாளர். அபாரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சமீபத்தில் மூன்றாவது முறையாக நீங்கள் கொழும்பில் வான்வழித் தாக்குதல் நடத்தினீர்கள். அதில் இந்தியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்குகள் பலவும் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகிறதே..."

ஆமாம், ஏன் நீங்கள் ஒரு யுத்தம் நடக்கும் தேசத்தில் முதலீடு செய்கிறீர்கள்! அதிலும் தமிழரைக் கொன்று குவிக்கும் வானூர்திகளுக்கு சேவை செய்கிறீர்களா? குண்டுபோட்டு தமிழரைக் கொன்று குவித்தால் பறவாயில்லை ஆனால் எண்ணெய் குதங்களுக்கு சேதமாகவே கூடாது! இல்லையா? என்ன கேள்வியப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் கொடுத்த ஆயுதங்களாலும் குண்டுகளாலும் அப்பாவித்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்களே! இதற்கு என்ன பதிலை விகடன் சொல்லப்போகிறது? அது மத்திய அரசின் கொள்கையென்றா?

Edited by karu

தன் நாட்டு நலனில் எந்த நாடும் அக்கறையாக இருப்பது வழமை அதை விடுங்கள் தமிழ்செல்வன் அண்ணா நல்ல நம்பிக்கை தரும் வகையில் செய்தியை தமிழக உறவுகளுக்கு வெளிப்படுத்தி இருகிரார் இதனை பிரசுரித்த விகடனுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் தலைமை ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அள்ளி விட்டது கிடையாது. தமிழ்ச்செல்வன் அண்ணா அதை மீண்டும் உறுதிப்படுத்திவிட்டார்.!

மகிழ்ச்சி!.

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சொன்ன இந்த செய்தியில் அர்த்தம் இருக்கனும் காலம் பதில் சொல்லும்.

கொஞ்சம் பொறுங்கள்... எல்லா உண்மைகளும் விரைவில் வெளியே வந்துவிடும்!"

உண்மை உறங்குவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

"ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதுநாள் வரையில் 'மரியா' படகில் பிடிபட்டது கடற்புலிகள் என்று எங்கள் தரப்பிலிருந்து யாராவது ஒப்புக் கொண்டிருக்கிறார்களா? அப்படி இருக்கும்போது, அவர்கள் வாக்குமூலம் கொடுத்தார்கள் என்று சொல்லி, எதையாவது தமிழகக் காவல்துறை சொல்லிக் கொண்டிருக்குமானால், அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? அப்படியே அவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகச் சொன்னாலும், அந்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை யார் சோதித்தறிவது? எமது அமைப்புக்கு எதிரானவர்கள் மூலமாக திட்டமிட்டு ஏன் இப்படியொரு நாடகம் நடத்தப்படக் கூடாது?

பிடிபட்டது கடற்புலிகளல்ல என்று தமிழ்ச்செல்வன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லவில்லை. அவர்களைப் புலிகள் என்று ஒப்புக்கொள்ளவில்லையென்றே சொல்கிறார். அவர்களின் வாக்குமூலத்திலும் உண்மைத்தன்மை இல்லாதிருக்கலாம் என்கிறார். இதிலிருந்து பிடிபட்டது கடற்புலிகள் போல் தெரிகிறது. ஆனால் அவர்களிடம் போலி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. <_<

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் Danguvaar அவர்களே!

நீங்களே தேவையில்லாத சந்தேகத்தைக் கிளப்பி, தயவுசெய்து பிரச்சினையை உருவாக்காதீர்கள்.

சு.ப.தமிழ்ச்செல்வனின் நேர்கானல் பிரமாதமாகவுள்ளது. தெட்டத்தெளிவாக ததும்பல் இல்லாமல் பதில் கொடுத்திருக்கின்றார்.

பாராட்டுக்கள்.

Edited by Valvai Mainthan

தமிழக மீனவர்களை படுகொலை செய்தது சிறிலங்கா கடற்படைதான்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி குற்றச்சாட்டு

[புதன்கிழமை, 9 மே 2007, 18:30 ஈழம்] [ப.தயாளினி]

தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை தொடர்ந்து படுகொலை செய்கிறது என்றும் 1991 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதி வரை 77 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் உறுப்பினர் சி.பெருமாள் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ஏ.கே. அந்தோணி அளித்துள்ள பதில்:

அண்மைக்காலமாக சிறிலங்கா கடற்படையால் பெருந்தொகையாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு வருவதனை மத்திய அரசாங்கம் அவதானித்து வருகிறது. பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் அண்மைக்காலமாக இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்திய மீனவர்களைப் பாதுகாக்க இந்திய கடற்பரப்பான பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் இந்திய கற்படை தொடர்ச்சியான சுற்றுக்காவல் மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வானிலிருந்தும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

இந்திய மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரையிலான காலப் பகுதியில் 77 தமிழ்நாடு மீனவர்கள் இத்தகைய சம்பவங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களின் குடும்பங்களுக்கான நிதி உதவியை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கி வருகிறது. மீனளத்துறை அமைப்புகளின் உதவியும் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது என்றார் அந்தோணி

அந்தோனிக்கு சொன்ன பொய்யை காப்பாற்ற தெரியாது போல

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் செல்வன் அவர்கள் மிகதெளிவாகக்குறிப்பட்ட ஒரு விடயம்

நாங்கள் முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம் என்பது

நீங்களும் முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருந்தால் தான் அது பயன் தரும் என்பது அவர் சொல்லாமல் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரன் Danguvaar அவர்களே!

நீங்களே தேவையில்லாத சந்தேகத்தைக் கிளப்பி, தயவுசெய்து பிரச்சினையை உருவாக்காதீர்கள்.

சு.ப.தமிழ்ச்செல்வனின் நேர்கானல் பிரமாதமாகவுள்ளது. தெட்டத்தெளிவாக ததும்பல் இல்லாமல் பதில் கொடுத்திருக்கின்றார்.

பாராட்டுக்கள்.

வல்வை மைந்தனே! சந்தேகத்தைக் கிளப்புவதல்ல என் நோக்கம். பிடிபட்ட இளைஞர்களைத் தொலைக்காட்சியில் கண்டேன். யார் அவர்கள் என்று கேள்வி வருவது இயற்கை. தமிழ்ச்செல்வன் அவர்களின் பேட்டியுடன் ஒப்பிட்டுப் பார்த்ததால் அப்படி ஒரு கருத்தை எழுதினேன். உள் நோக்கம் எதுவும் இல்லை.

<_<

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை மைந்தனே! சந்தேகத்தைக் கிளப்புவதல்ல என் நோக்கம். பிடிபட்ட இளைஞர்களைத் தொலைக்காட்சியில் கண்டேன். யார் அவர்கள் என்று கேள்வி வருவது இயற்கை. தமிழ்ச்செல்வன் அவர்களின் பேட்டியுடன் ஒப்பிட்டுப் பார்த்ததால் அப்படி ஒரு கருத்தை எழுதினேன். உள் நோக்கம் எதுவும் இல்லை.

:lol:

**************************************

மன்னிக்கவும் சகோதரா நீங்கள் தப்பான நோக்கத்தில் அந்த கருத்தை வைத்ததாக நான் சொல்ல வில்லை.

ஆனால் இந்த சந்தேகமே சில தப்பான விடயங்களை உறுதிப்படுத்திவிடும் என்ற எனது ஊடக அனுபவத்தில் தான் அப்படிக்கூறினேன்.

இதைவிட உங்களைத்தொடர்ந்து வரும் உறப்பினர்களும் எதிர்மாறான கருத்துக்களை முன்வைக்கலாம் அல்லவா? இதனால் வரும் விளைவுகள் பாரதூரமானவை என்பதை சகோதர முறையில் தெரிவிக்க விரும்புகின்றேன்

தன் நாட்டு நலனில் எந்த நாடும் அக்கறையாக இருப்பது வழமை அதை விடுங்கள் தமிழ்செல்வன் அண்ணா நல்ல நம்பிக்கை தரும் வகையில் செய்தியை தமிழக உறவுகளுக்கு வெளிப்படுத்தி இருகிரார் இதனை பிரசுரித்த விகடனுக்கு நன்றிகள்

செல்வி ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்கட்கும் இடையில் நடக்கும் அரசியல் போராட்டத்தில் விடுதலைப்புலிகளை தேவையில்லாமல் இழுத்து வைத்து விடுதலைப்புலிகள் பற்றி பொய்யான கருத்துக்களை தெரிவிகிறார்கள்.அத்தோடு தமது சொந்த ஊடகங்கள் மூலம் இந்த பொய்களை பிரச்சாரப்படுத்தி தமிழ்நாட்டு மக்களை குழப்புகிறார்கள்.

அண்மையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டது மற்றும் கடத்தப்பட்டது பற்றி கடந்தவாரம் பெரும்பலான தமிழ்நாட்டு ஊடகங்கள் விடுதலைப்புலிகள் மீது தமது ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டை சுமத்தின.அப்போது எனக்கு ஒரு ஆதங்கம் ஏற்பட்டது விடுதலைப்புலிகள் இந்த குற்றச்சாட்டுக்கான பதிலை எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாக தெரிவிக்கப்போகிறார்கள் என்று.அதற்கான களத்தை விகடன் ஏற்படுத்தி கொடுத்ததற்காக நாம் விகடனுக்கு நன்றி சொல்ல கடைமைப்பட்டிருக்கிறோம்.

இப்படி நியாயமான செயலை யார் செய்தாலும் அவர்களுக்கு எமது நன்றியை நேரடியாக அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துவோம்.அதே மாதிரி யார் பிழையான செய்திகளை தந்தாலும் அவர்களிற்கு அதன் உண்மைத்தன்மை பற்றி சரியான விளக்கங்களை நேரடியாக தெரியப்படுத்துவோம்.

அதற்காக இந்து பத்திரிகை மற்றும் எமது ட(த)மிழோசை போன்ற ஊடகங்களூக்கு பிழையான செய்திகள் பற்றி சுட்டிக்காட்டி என்ன பயன் என்று மட்டும் என்னைக்கேளாதையுங்கோ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.