Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலி மில்லர்

Featured Replies

கரும்புலி மில்லர்

கரும்புலிகளில்

மூத்தவன்.

வசந்தனாய் பிறந்து

மில்லராய்

வாழ்பவன்!

மின்னல் எனத் தோன்றி

மில்லர் ஆனவன்!

கரும்புலிகளைப் படைத்து

பிரம்மா ஆனவன்!

உன் பின்னே

எத்தனை தோழர்கள் பார்!

அன்று

கொட்டியா வருகுதென்று

சுவை சுவையாய்

நகைச்சுவை சொன்னவனே நீ!

இன்று

இருதாசப்தங்கள் கடந்தும்

எங்கள் நெஞ்சு கனக்க

வைத்தவன் நீ!

பிறந்தவருக்கு மட்டுமில்லை!

இனி

மரணித்து மலர்ந்த

உன் போன்றவர்க்கு

பிறந்தநாளே கொண்டாடுவோம்!

கரும்புலிநாள்

என்றால்

பன்னீர்ப் பூக்களை

மட்டுமல்ல

கண்ணீர்ப் பூக்களையும்

காணிக்கை செய்கின்றோம்!

நெஞ்சு நிமிர்த்தி

நிற்கும்

பெருந்தலைவன்

பார்வையின் கீழ்

நிமிர்கின்றோம்!

ஊருக்கும் பேருக்கும்

வாழாத எங்கள்

வரலாற்றுச் சின்னம் நீ!

உலகத்தின் விழிதிறந்த

தமிழ்

உலகப் புதினம் நீ!

இருள் மேகம்

சூழ்ந்த இடமெல்லாம்

இடிகளை...

இறக்கி வைத்தவன் நீ!

பகையை விரட்டப்

புறப்பட்ட

பெரும் புகை நீ!

நெருப்பில்லாமல்

புகையாது என்றார்கள்

புகைந்து புகைந்து

நெருப்பானவன் நீ!

அன்று

தலைவன்

உன் மேல் வைத்த

தன்னம்பிக்கையால் தான்

இன்று

எங்களுக்கு

உயிராயுதம் கிடைத்தது!

இந்த

உயிராயுதத்தால் தானே

இன்று

உலகமே எங்களை

உற்றுப் பார்க்கிறது!

ஈழத்துக்காகவே

உன்னை

ஈகம் செய்தவன் நீ!

எங்கள் இருவிழிகளை

ஈரம் செய்தவன் நீ!

நெல்லியடியில்

நெத்தியடியாய்

எதிரி

நெஞ்சிலடித்தாய்!

அடியின் ஒலி

இன்னும்

கேட்கிறது கொழும்பில்!

என் இதயத்தில்

இருந்து உனக்காக

என் நினைவுப் பதிவுகள்

நோர்வே

-தமிழன்-

Edited by Tamizhvaanam

நல்லதொரு படைப்பு நன்றி இணைத்தமைக்கு..............

:)

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படைப்பு, இதயம் கனக்கிறது.

இன்றைய நாளில் இக்கவி படிக்க வைத்தை தமிழ்வானம் அவர்களுக்கு நன்றி. நல்லாக எழுதியிருக்கிறீங்க,.

  • தொடங்கியவர்

சுவி, வெண்ணிலா ஐமுனா

உங்கள் உற்சாகமூட்டலுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

இக்கவியை இங்கு இணைத்தவனும் நான் தான் படைத்தவனும் நான்தான்.:)

என் நெருங்கிய அண்ணன் நினைவாக வடித்த கவிதை இது. இன்றைய(வியாழன்) நாளில் தான் என்னை அவர் துவிச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று நகைச்சுவை சொல்லிச் சென்றவர். எங்கள் விட்டுக்கு முன் என்னை இறக்கி விட்டு அவர் நகைச்சுவையாக சொல்லிச் சென்ற வார்த்தை டேய் கொட்டியா வரும் கவனமாய்ப் போவென்று. அன்று எனக்குத்தெரியாது இவர்தான் முதல் கரும்புலியாக வரலாறு படைப்பார் என்று. வியாழன் வெள்ளி சனிக்கிழமை 05.07.1987 பெரிய வெடி கேட்டு அதிhந்து எழுந்தோம் நெல்லியடியில் ஆக்கிரமித்த அரக்கர்கள் சுக்கு நூறாய் போனார்கள். கண்கள் பனிக்கிறது.

அன்புடன்

தமிழ்வானம்.

என் நெருங்கிய அண்ணன் நினைவாக வடித்த கவிதை இது. இன்றைய(வியாழன்) நாளில் தான் என்னை அவர் துவிச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று நகைச்சுவை சொல்லிச் சென்றவர். எங்கள் விட்டுக்கு முன் என்னை இறக்கி விட்டு அவர் நகைச்சுவையாக சொல்லிச் சென்ற வார்த்தை டேய் கொட்டியா வரும் கவனமாய்ப் போவென்று. அன்று எனக்குத்தெரியாது இவர்தான் முதல் கரும்புலியாக வரலாறு படைப்பார் என்று. வியாழன் வெள்ளி சனிக்கிழமை 05.07.1987 பெரிய வெடி கேட்டு அதிhந்து எழுந்தோம் நெல்லியடியில் ஆக்கிரமித்த அரக்கர்கள் சுக்கு நூறாய் போனார்கள். கண்கள் பனிக்கிறது.

கேட்கும் எங்களுக்கே மனம் கேட்குதில்லை நேராக கண்ட உங்களுக்கு அந்த கவலை இருக்க தான் செய்யும் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்..........நீங்கள் இவ்வாறான சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளளாமே,உங்களை யாழில் அதிகமாக காணகிடைபதில்லை,நேரம் கிடைக்கும் போது இவ்வாறன சம்பவங்களை எங்களுக்கு தருவீர்கள் என்று நினைகிறேன்..........

:D

உங்கள் படைப்பு உணர்ச்சி நிரம்பியதாக உள்ளது. கனமாக உள்ளது. தொடர்ந்து உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

ஐமுனா, சுகன் உங்கள் அன்புக்கும் உற்சாகமூட்டும் இதயபூர்வமான கருத்துப் பகிர்வுகளுக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். என்னிடம் இரண்டு அழகான சிறுகதைகள் இருக்கின்றன. மிகவிரைவில் உங்கள பார்வைக்கு விருந்து வைக்கிறேன். இங்குள்ள அனைத்து நண்பர்களின் படைப்புகளுக்கும் கருத்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. ஆனால் என் படைப்புகளை வேலைப் பணிகளுக்கு மத்தியில் படைப்பதற்கே போதுமானதாக இருக்கிறது. ஆகையால் என் சார்பாகவும் அனைத்துக கள உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்துங்கள்.

எனது அடுத்த இசைத்தொகுப்பு பணிகள் ஒரு புறம். எங்கள் திரைப்பட வெளியீடு தொடர்பான பணிகள் மறுபுறம் என மணித்துளிகள் என் பொழுது போக்குகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது. எனது இணையத்தளத்தில் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கவும் பாடல்களை வழங்கிக் கொண்டிருக்கிறேன். நிறையக் கவிதைகளும் பூக்கவிருக்கின்றது. பார்த்து விட்டு கருத்துச் சொல்லுங்கள்.

நன்றிகள்

அன்புடன்

தமிழ்வானம்:)

நல்லதொரு படைப்பு..... கவிதை எழுதியருக்கு பாராட்டுக்கள்....!

தமிழ்வாணான் நீங்கள் எழுதிய சிறுகதைகளையும் இணையுங்கள்... வாசிக்க ஆவால்..! :o

வெடிக்கவைத்து

எம் இதயம் கனக்கவைத்தன்

நினைக்க நினைக்க

நெஞ்செல்லாம் சிலிர்க்கவைத்தவன்

அவன்

காட்டியபாதையில்

நீட்டிய உயிராயுதங்கள் ஏராளம்

பூட்டிய எதிரி கதவுகளோ

பல்லாயிரம்

  • தொடங்கியவர்

அனிதா, பரணீ உங்கள் இருவருக்கும் என் அன்புகலந்த நன்றிகள்.

இங்கு எத்தனையோ நல்ல படைப்பாளிகள் இருக்கின்றார்கள். கொஞ்சம் கவனமெடுத்து அவர்களின் படைப்புகளை தரமானதாக ஆவணப்படுத்த என் வாழ்த்துக்கள்

சிறுகதை மிகவிரைவில் வரும் தலைப்பு "தலைவிதி"....<_<

அன்புடன்

உங்கள் தமிழ்வானம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்வானம் உங்கள் கவிதை மனதை கனக்க வைக்கிறது <_<

தொடர்ந்து தாருங்கள் உங்கள் ஆக்கங்களை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.