Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணிவெடியால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்தில்லை: கடலோர காவல்படை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை, தனது கடல் எல்லைக்குள் மிதக்க விட்டுள்ள கண்ணிவெடிகளால் இந்திய மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கடலோரக் காவல் படையின் மண்டபம் மைய அதிகாரி கே.ஜனார்த்தனன் கூறியுள்ளார்.

கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே இலங்கை அரசு கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளது. விடுதலைப் புலிகள் நடமாட்டத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கை என்று இலங்கை கூறியுள்ளபோதிலும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் உலவுவதைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த பயங்கர செயலை செய்துள்ளது இலங்கை அரசு.

இந்த நிலையில், இன்று மண்டபம் கடலோரக் காவல் படை மையத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்கள், ஹோவர்கிராப்ட் படகு மூலம், சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஐந்தாம் தீவுத் திட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு செய்தியாளர்களிடம், இலங்கையின் கண்ணிவெடிகள் குறித்து நிலைய அதிகாரி கே.ஜனார்த்தன் விளக்கினார். அவர் கூறுகையில், இலங்கையின் கடல் எல்லைக்குள்தான் கண்ணிவெடிகள் மிதக்க விடப்பட்டுள்ளன. எனவே நமக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

மேலும், சர்வதேச கடல் எல்லைப் பகுதியிலிருந்து கண்ணிவெடிகள் மிதக்க விடப்பட்டுள்ள பகுதி தொலைவில்தான் உள்ளது. நமது எல்லையிலிருந்து சர்வதேச கடல் பகுதி கிட்டத்தட்ட 12 கடல் மைல் தொலைவில் உள்ளது.

எனவே இந்த கண்ணிவெடிகளால் இந்திய மீனவர்களுக்கோ நமது கடற்படைக்கோ எந்த ஆபத்தும் இல்லை.

கடலில் கண்ணிவெடிகளை மிதக்க விட்டிருப்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாகும். இதில் நாம் தலையிட முடியாது.

சர்வதேச கடல் எல்லைப் பகுதியைத் தாண்டிச் செல்ல வேண்டாம் என நமது மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மீனவர் கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுகின்றன.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் புகுந்து விடாமல் கடலோரக் காவல் படை கண்காணித்து வருகிறது. கடல் ரோந்தையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளோம்.

கச்சத்தீவுக்கு இந்திய மீனவர்கள் செல்ல வேண்டாம். அங்கு கடல் புலிகள் பிரிவுக்கும், இலங்கை கடற்படைக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

அப்பகுதியில் மீன் பிடிக்கச் சென்றால் நமது மீனவர்கள் அவர்களுக்கிடையே சிக்கிக் கொள்ள நேரிடும். இந்திய மீனவர்கள், கச்சத்தீவில் மீன் வலைகளை உலர்த்திக் கொள்ள உரிமை இருந்தாலும் கூட, தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை.

இந்தியாவுக்குள் ஊடுறுவ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முயன்றால் அது அவருக்கு ஆபத்தாகத்தான் முடியும்.

கடந்த ஒரு ஆண்டில், சர்வதேச கடல் எல்லையில், உள்ள பல்வேறு தீவுகளில் சிக்கிக் கொண்டிருந்த 250க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளை கடலோக் காவல் படை மீட்டு கரை சேர்த்துள்ளது என்றார் அவர்.

காவல்துறை எச்சரிக்கை:

இதற்கிடையே, இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல வேண்டாம் என புதுக்கோட்டை மாவட்ட கடல் பாதுகாப்பு போலீஸார், மீனவர்களை எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விடுத்துள்ள எச்சரிக்கையில், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் மீன்வளத்துறை சார்பாக கொடுக்கப்பட்ட அடையாள அட்டைகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

கடல் பாதுகாப்பு போலீசாரோ, பாதுகாப்பு படையினரோ தங்களிடம் விசாரணை நடத்தினால் கண்டிப்பாக தங்களுடைய உரிமம் மற்றும் படகு குறித்த ஆவணங்கள் அனைத்தையும் கண்டிப்பாக காட்ட வேண்டும்.

மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கைக்குள் ஊடுருவிச் சென்றால் கண்டிப்பாக சிறை பிடிக்கப்படுவார்கள்.

சந்தேகப்படும்படியாக அந்நியர்கள் யாராவது நடமாடினால் மீனவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மீனவர்கள் தங்களுடைய படகுகளை மற்றவருக்கு விற்பனை செய்தால் உடனே மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், கடற்படை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

thatstamil.com

Edited by கறுப்பன்

ஏன் இந்திய மீனவர்களின் படகுகளை வாங்கியே கடற்புலிகள் இயங்கீனம்?...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கடலோரக் காவல்படை றோ வுடைய கட்டுப்பாட்டுக்குள்ள இருந்து செயலாற்றுறதால நேரத்திற்கு நேரம் தனக்குக் கிடைக்கிற அறிவுறுத்தல்களின் படி அறிக்கைகளை விடுகுது. சேது சமுத்திரத்திட்டத்தையும் அது தமிழ்நாட்டுத் தமிழண்ட பொருளாதார வளத்தை எக்கசக்கமாக அதிகரிச்சுப்போடும். அது முழு இந்தியாவுக்கும் நல்லதில்ல எண்ட மறைமுகக் காரணத்தால திட்டம் பயங்கரவாதியளுக்குச் சாதகமானது எண்டு சொல்லிக் கெடுக்கப் பார்க்குது. இப்ப கச்சதீவுல கண்ணிவெடி விதைக்கப்பட்டதும் றோவுட அனுசரணையோடதான். தமிழ்நாட்டு மீனவர்களுடைய தொடர்பு இலங்கைத்தமிழர்களோட ஏற்படக்; காரணமாயிருக்கிற இந்தக்கடற்பிரதேசத்தில கண்ணிவெடிகளைப் புதைச்சு அந்தத் தொடர்பை இல்லமலாக்கவேணுமெண்டு இரண்டு பக்கத்துப் புலனாய்வு அமைப்புகளும் முடிவெடுத்துத்தான் இந்த விசயம் நடைமுறைப்படுத்ப்படடிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கண்ணிவெடி சமாச்சாரம் வெறும் புஸ்வாணம். இந்திய மீனவர்களை ஏமாற்றும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை. கடற்பிராந்தியத்தில் இந்திய மீனவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவும் சிறிலங்காவும் சேர்ந்து உருவாக்கிய புரளி. இவர்களின் கடல் கண்ணிவெடி புலிகளுக்கு ஒரு பிரச்சினையே இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேது சமுத்திர திட்டம்: பாதுகாப்புக்கு பேராபத்து- ரூசி கான்ட்ராக்டர்

சேதுசமுத்திர திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்தாக முடியும் என்று கடலோரக் காவல்படை தலைமைத் தளபதி ரூசி கான்ட்ராக்டர் எச்சரித்தார்.

கடலோரக் காவல்படை ஏற்படுத்தப்பட்டதன் 31-வது ஆண்டு தினத்தை ஒட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். அப்போது நிருபர்களிடம் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்தார்.

கடலோரக் காவல்படை என்பது வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியக் கடல் பகுதிக்குள் ஊடுருவாமல் தடுக்கவும், கப்பல் கொள்ளைக்காரர்களைத் தடுத்து, கைது செய்யவும், கடலில் ஆபத்தில் சிக்கும் கப்பல்களையும் மீனவர்களையும் மீட்கவும், இந்தியாவின் கடல்சார் வளங்களையும், துறைமுகங்களையும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். கடற்படையின் துணைத் தலைமை தளபதிதான் இதன் தலைவராகச் செயல்படுகிறார்.

கடற்படை காவல்புரியாத பகுதிகளில் கடலோரக் காவல்படைதான் காவல், கண்காணிப்பு, மீட்பு ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் மோதல் வலுத்து வருவதால் தென்னிந்தியாவுக்குள் யாரும் ஊடுருவிவிடாமல் தடுக்க கடலோரக் காவல்படையின் காவல், கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடலோரக் காவல் படையின் தலைமைத் தளபதி ரூசி கான்ட்ராக்டரின் எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

ரூசி கான்ட்ராக்டர் கூறியதாவது:

"சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டு, அந்தக் கால்வாயைப் போக்குவரத்துக்கு திறந்துவிட்டால் பல்வேறு பிரச்னைகள் புதிதாக ஏற்படும். அந்த வழியைப் பயன்படுத்திக் கொண்டு கடல் கொள்ளைக்காரர்கள் எளிதாக இந்தியக் கடலோரப் பகுதிக்கு வருவார்கள்.

"மிகப் பெரிய கப்பல்கள் அந்தக் கால்வாய் வழியாக வருவதாக வைத்துக்கொண்டால்கூட, மிகவும் மெதுவாகத்தான் அந்த இடத்தைக் கடக்க முடியும். அப்படி மெதுவாக வரும் பெரிய கப்பல்களை கடல் கொள்ளைக்காரர்கள் மட்டும் அல்ல, யார் வேண்டுமானாலும் எளிதில் தாக்கி தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

"பெரிய கப்பல்கள் குறிப்பாக, கடற்படை கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாக வரவேண்டும் என்றால், உதவிக்கு பரிவாரக் கப்பல்களுடன்தான் வர வேண்டியிருக்கும். சேதுக்கால்வாய் அதற்கு ஏற்றதுதானா என்று பார்க்க வேண்டும்.

"இலங்கையில் இப்போது ராணுவரீதியான மோதல்கள் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட பகுதிக்கு அருகில், கடல்வழியை அமைப்பது நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை நாமே வரவழைப்பதற்கு ஒப்பானது' என்று ரூசி கான்ட்ராக்டர் குறிப்பிட்டார்.

"சேதுக் கால்வாய் திட்டத்தால் கப்பல் போக்குவரத்து அதிகரித்தால், சோதனைகளை முழு அளவில் மேற்கொள்வது கடினமாக இருக்கும்.

"சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நமது கடலோரப் பகுதிக்கு அருகில் பயங்கரவாதிகளும், கடல் கொள்ளைக்காரர்களும் எளிதாக ஊடுருவக்கூடிய வாய்ப்பு இருப்பதை கடற்படையும் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருக்கிறது' என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

"காரைநகர் கடற்படைத்தளத்திற்கு கண்ணிவெடிகளால் ஆபத்து. கடற்படையினர் கடற் சண்டையின்போது தப்பியோடாதிருக்க இலங்கையரசின் ஏற்பாடு."

இவ்வாறும் செய்திகள் தலைப்பிடப்படும். :huh::wub:

சேது சமுத்திரத் திட்டத்துக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் வரும் என்று கவலைப்படத் தேவையில்லை: இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் கருத்து

20080201161350admiralsushilkumar203odd.jpg

இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார்

சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதற்க்கு விடுதலைப் புலிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கவலைப்படுவது தேவையற்றது என்று இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில்குமார் பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

சேது சமுத்திரம் கால்வாய் திட்டம் தொடர்பாக, சமீப காலமாக, கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தாவும், கடலோரக் காவல் படையின் டைரக்டர் ஜெனரல் ஆர்.எப். கான்ட்ராக்டரும் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள். சேது கால்வாய் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்று கவலை வெளியிடப்பட்டிருந்தது.

இது குறித்து தமிழோசையில் கருத்து வெளியிட்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் சுஷில் குமார், "துரதிர்ஷ்டவசமாக, சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான விவாதம் சிறிது குழப்பமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. துறைமுகம், கால்வாய், முக்கிய மின் திட்டம், அணுசக்தித் திட்டம் என எந்த ஒரு பெரிய கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், அது பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளை ஏற்படுத்தும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தக் கால்வாய்த் திட்டம், கடல்வழி தொடர்பை மேம்படுத்தும் நிலையில், அதைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று பார்க்கத் துவங்கினால், உலகில் எந்த இடத்திலும் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்த முடியாது" என்றார்.

எந்தத் திட்டத்தையும் சாதமாகன முறையில் பார்க்க வேண்டுமே ஒழிய, எதிர்மறை கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. மக்களுக்கு ஒரு திட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடலோரக் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை போன்றவை எல்லாம் அதற்குத்தான் இருக்கின்றன என்று கருத்துத் தெரிவித்தார் அட்மிரல் சுஷில்குமார்.

BBC Tamil

உந்த கண்ணி வெடி விவகாரம் சும்மா பூச்சாண்டி. உதை யாராவது சீரியசாக எடுப்பினமா? :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.