Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்த மாலைப்பொழுதில்...........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாலைப்பொழுதில்...........

மாலைநேரம். பொழுது போகவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே யாழ்களம், திண்ணைபக்கம் வந்தும் பார்த்தேன். அங்கேயும் இருக்க பிடிக்காமல், வெளியே சென்று கொஞ்சம் ஓடிவிட்டு வரலாமோ என்று யோசித்துவிட்டு, அதற்கான கால்சட்டை, டிசோ்ட்,சப்பாத்து எல்லாம் டிப்டப்பாக போட்டு ஓடத்தொடங்கினேன்.

குறிப்பிட்ட தூரம் ஓடிவிட்டு திரும்ப வீட்டை நோக்கி ஒடிக்கொண்டிருந்தபோதுதான் கவனிச்சன் சோடி சோடியாய் வெள்ளைகள் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததை. பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது. என் ஒட்டத்தின் வேகமும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்தது. முத்தம் அதுதரும் சொர்க்கம். எனக்கும் ஒண்ணு மாட்டுப்படட்டும் இதையே மிஞ்சுடுறேனா இல்லையா என் பார்ப்போம் என மனசுக்குள் வைராக்கியம் கொண்டேன்.

மேலும் சிறிது தூரம் போனவுடன் சற்று நடுத்தர சோடி சுவாரசியாமாய் கதைத்தபடி இயற்கையை இரசித்தபடி கைகளை கோர்த்ததுக் நடந்து வந்த விதத்தைப் பார்த்தபோது மனசுக்கு ஏதோ ஆறுதலாய் இருந்தது. அந்த கைகோர்ப்பில் வாழ்ந்த வாழ்க்கையின் காதல், நட்பு முதிர்ந்து பரிணமித்திருந்த்தைப்போல் உணர்ந்து கொண்டேன்.

இன்னும் சிறிது தூரம் சென்றபோது எம்மவர் ஒரு பெரியவர் முன்னே செல்ல, அவரைப் பின் தொடர்ந்து ஒருபெண்மணி.

மெதுவாய் ஓடிக்கொண்டு வந்த நான் அந்த பெண் அருகே வந்து சற்று ஓடுவதை நிறுத்தி „ஆன்டி, அங்கிள் முன்னால போறார். நீங்கள் ஏன் பின்னாலே போறியள்.“ என்றேன்.

„ஓ அதுவா தம்பி சேர்ந்து போனால் கண்ணுபட்டுடும் அதுதான்“. சர்வ சாதாரணமாய் கூறினாள் அந்த பெண்மணி. பலபேரை பார்த்திருக்கிறேனே கணவன் முன்னே செல்ல மனைவி பின்னே செல்வதை. ஏனோ இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு சரியாகவும் படலை. எந்த வயசுலேயும் இருவரும் இணைந்தபடிதான் போகனும். அதில்ல நான் உறுதியாக இருக்கிறேன்.

முன்னே சென்றவர் கதைக்கும் சததம் கேட்டோ என்னவோ எங்களை நோக்கி வரத் தொடங்கினார். உனக்கேன் தம்பி உந்த தேவையில்லாத வேலை எல்லாம் என்று ஏடாகூடாமாய் எதையாவது கேட்டு எங்கே என் தலை உருளப்போகிறதோ என் நினைச்சபடியே அடியேன் ஒரு நொடிக்குள் எஸ்கேப்.

„ஓகே பாய் ஆன்டி“ என்றபடியே வீட்டை நோக்கி என் ஓட்டம் தொடர்ந்தது.

(உண்மைக்கதை)

ஓ ஓ கறுப்பி உங்களுக்கு இன்னமும் பெண் கிடைக்கவில்லையா>? விரைவில் உங்களுக்கு பெண் கிடைத்து கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள்.... :lol:

எம்மவர் ஏன் இப்படி மூட நம்பிக்கை எல்லாம் வைத்துக்கொண்டு இருக்கிறார்களோ?பழையவர்கள் இல்லையா அதனால் அப்படி இருக்கிறார்கள்... நீங்கள் நினைப்பது போல் இப்ப இருப்பவர்கள் எல்லாம் நினைப்பார்கள்.... இளைய தலை முறைதான் இதை மாற்ற வேண்டும்....

அந்த மாலைப்பொழுதில்...........

....சோடி சோடியாய் வெள்ளைகள் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததை. பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.

உதுகள் எல்லாம் நிரந்தரம் இல்லாததுகள்... ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று திரியிறதுகளாக இருக்கக் கூடும்...

.... சற்று நடுத்தர சோடி சுவாரசியாமாய் கதைத்தபடி இயற்கையை இரசித்தபடி கைகளை கோர்த்ததுக் நடந்து வந்த விதத்தைப் பார்த்தபோது மனசுக்கு ஏதோ ஆறுதலாய் இருந்தது. அந்த கைகோர்ப்பில் வாழ்ந்த வாழ்க்கையின் காதல், நட்பு முதிர்ந்து பரிணமித்திருந்த்தைப்போல் உணர்ந்து கொண்டேன்...

விட்டா சொச்சமும் மிச்ச சொச்சமுமாக இருக்கக் கூடும்....

இன்னும் சிறிது தூரம் சென்றபோது எம்மவர் ஒரு பெரியவர் முன்னே செல்ல, அவரைப் பின் தொடர்ந்து ஒருபெண்மணி...

மூட நம்பிக்கையாகவும் இருக்கலாம்... அல்லது நீண்ட நாட்கள் யாரோட கண்ணும் படாமல் வாழோணும் என்றும் நினைத்து இருக்கலாம்...

கலியாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று எல்லாம் சொல்வார்கள்... அதெல்லாம் எனக்குத் தெரியாது...

ஆனால், குறைஞ்சது அறுபது வருடங்களாவது நீங்கள் சந்தோசமாக வாழவேண்டாமா? நிச்சயம் நல்லதாக அமையும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுஜி, குட்டி இருவரினதும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கறுப்ஸ் எல்லாம் நடக்கிற நேரம் நல்லா நடக்கும். அவசரப்பட்டு விட்டு பிறகு தப்பு பண்ணிட்டனே நினைக்க தோன்றும்.

என்ன இப்பவே அடிவாங்க பிளான் பண்ணுறிங்களோ :D

அவனவன் கட்டிட்டு ஏண்டா கட்டினம் என்று இருகான் நீங்க என்னடா என்றா எப்படா கட்டுவம் என்று இருக்கிறிங்க :D

ஆமா யாழிலை பார்த்துட்டு(யாழில் இருக்கும் பெண்கள்) ஆவது வரலியா? இல்லை யாழிலை எல்லாம் கல்யாணம் செய்தவை தானோ?? கஸ்டம் தான் :lol::D

கறுப்ஸ் நிச்சயமா உங்களுக்கு ஒரு நல்ல துணை அமையும்.

நல் வாழ்த்துக்கள்.

வேணும் என்றால் உங்களுக்காக புறோக்கர்(கௌரவமா மாமா வேலை) வேலை செய்து தரலாம். :(:D:lol:

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

பல தடவைகள் நினைச்சனான் எங்கடா யாழின் அக்ஸ்ன் கிங் கறுப்பி அண்ணாவை உந்தப்பக்கம் வரக்காணம் எண்டு.இப்பதானே விளங்குது நீங்கள் ஓட்டப்போட்டி எல்லாம் நடத்திறயள் எண்டு.பரிசு எல்லாம் குடுக்கிறயளோ அண்ணா.....?பரிசு குடுத்தால் நானும் வரலாம் எண்டு யோசிக்கிறன்.ஒரு கொண்டிசன்.....அந்தப்பக்கமே ஆன்டி.......ஆங்கிள் எல்லாம் வரக்கூடாது....சரி மீண்டும் வாறன்........ :lol::(:D

யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கறுப்ஸ் எல்லாம் நடக்கிற நேரம் நல்லா நடக்கும். அவசரப்பட்டு விட்டு பிறகு தப்பு பண்ணிட்டனே நினைக்க தோன்றும்.

என்ன இப்பவே அடிவாங்க பிளான் பண்ணுறிங்களோ :D

அவனவன் கட்டிட்டு ஏண்டா கட்டினம் என்று இருகான் நீங்க என்னடா என்றா எப்படா கட்டுவம் என்று இருக்கிறிங்க :D

ஆமா யாழிலை பார்த்துட்டு(யாழில் இருக்கும் பெண்கள்) ஆவது வரலியா? இல்லை யாழிலை எல்லாம் கல்யாணம் செய்தவை தானோ?? கஸ்டம் தான் :lol::D

கறுப்ஸ் நிச்சயமா உங்களுக்கு ஒரு நல்ல துணை அமையும்.

நல் வாழ்த்துக்கள்.

வேணும் என்றால் உங்களுக்காக புறோக்கர்(கௌரவமா மாமா வேலை) வேலை செய்து தரலாம். :(:D:lol:

வாழ்த்துக்கு நன்றிங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல தடவைகள் நினைச்சனான் எங்கடா யாழின் அக்ஸ்ன் கிங் கறுப்பி அண்ணாவை உந்தப்பக்கம் வரக்காணம் எண்டு.இப்பதானே விளங்குது நீங்கள் ஓட்டப்போட்டி எல்லாம் நடத்திறயள் எண்டு.பரிசு எல்லாம் குடுக்கிறயளோ அண்ணா.....?பரிசு குடுத்தால் நானும் வரலாம் எண்டு யோசிக்கிறன்.ஒரு கொண்டிசன்.....அந்தப்பக்கமே ஆன்டி.......ஆங்கிள் எல்லாம் வரக்கூடாது....சரி மீண்டும் வாறன்........ :lol::(:D

யாயினி.

நீங்களும் வந்தால் சேர்ந்தே ஓடலாம் :D ஆனால் பரிசெல்லாம் கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அதுவா தம்பி சேர்ந்து போனால் கண்ணுபட்டுடும் அதுதான்“. சர்வ சாதாரணமாய் கூறினாள் அந்த பெண்மணி

கொஞ்சம் பழசுகள் கண்ணுபட்டும் என்று சொன்னதையாவது ஏற்று கொள்ளலாம் ,ஆனால் பாருங்கோ சில இளசுகள் எதுக்கு எடுத்தாலும் கண்ணுபட்டும் என்று புலம்பி கொன்டு திரியினமுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தா உங்கள் கருத்துக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி கண்டபடி ..........ஓடித்திரியாம.

பேசம யாழ்இணையத்தில் எங்களுக்கு நிங்கள் முன்பு தொடக்கிவிட் கவிதை தொகுப்பை மீண்டும் தொடக்கிவையுங்கள்.

நன்றி

பென்மன்

நீங்களும் வந்தால் சேர்ந்தே ஓடலாம் :icon_idea:

:icon_mrgreen::D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி கண்டபடி ..........ஓடித்திரியாம.

பேசம யாழ்இணையத்தில் எங்களுக்கு நிங்கள் முன்பு தொடக்கிவிட் கவிதை தொகுப்பை மீண்டும் தொடக்கிவையுங்கள்.

நன்றி

பென்மன்

உங்கள் கருத்துக்கு நன்றி. மீண்டும் அந்தக் கவிதைத் தொகுப்பு தொடரும்.

மறக்காமல் உங்கள் கவிதையையும் இணையுங்கள்.

நன்றி.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry523098

கறுப்பி, நீங்கள் ஆணா பெண்ணா? ஏன் குழப்புகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓடுறதில்ல நடக்கிறனான்.. என் கண்ணுக்கு என்னவோ.. உந்தக் கண்காட்சிகள் எம்பிடுறது குறைவு..! அப்படி எம்பிட்டாலும் எல்லாம் XXX ரேஞ்சில தான் எம்பிடும்..! அதில என்னத்த பார்த்து.. என்னத்தைச் சொல்லுறது. ஊரில மாரி காலத்தில நாய்கள் தெரு வழிய கட்டிப்பிடிக்கிறது.. தேறல..!

நீங்கள் பறுவாயில்லை கறுப்பன். கொஞ்சம் என்றாலும் ரசிக்கக் கூடிய காட்சிகளைக் காணுறீங்க..! நான் காணுறதெல்லாம்.. கண்ண மூட வேண்டிய காட்சிகளா எல்லோ கிடக்குது..! :):lol:

எம்மவர்களில் வயதானவர்களை நீங்கள் எடுகோளா எடுத்திருக்கிறீங்க.. ஊரில இருந்து வந்த இளசுகளில் ஒரு தொகுதி கட்டின மனிசியைக் கூட காரில முன்னுக்கு இருத்தாதுகள். பின் சீற்றிலதான் இருந்துங்கள்..! எனக்கு உதில என்ன இருக்கென்று புரியல்ல...! ஆனால் அப்படி நடக்கிற பல நிகழ்வுகளைக் கண்டிருக்கிறன்.

அதுக்காக உங்க உள்ள பொம்பிளையள் எல்லாம் அப்படி என்றில்ல. சொந்தமா கார் ஓடுறவை.. மழைத்தண்ணியை ஆக்கள் மேல அடிச்சுவிட்டுக் கொண்டும் ஓடினம். அது வேற..!

பாவங்கள்.. அந்த மனிசியான சில தமிழ் பொம்பிளையள். நான் சின்னனா இருக்கேக்க எங்க வீட்டுக்கு பக்கத்தில இருந்த தங்கச்சி ஒன்று என் கூட ஸ்கூல் வருவா. ஸ்கூல் பஸ்ஸில அவாவுக்கு முன் சீற்றில இருக்க விருப்பம். அடிபட்டு ஏறுவா. அவாவும் இப்ப கலியாணம் கட்டி இருந்தா.. இப்படி பின் சீற்றில உக்கார வைச்சா.. எப்படி இருக்கும் மனசுக்க..! பெரிசா வளர்ந்தாலும் ஆசைகளுக்கு ஆண் பெண் பால் இல்லை.. வயசில்லையே..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி, நீங்கள் ஆணா பெண்ணா?

எதுக்கும் நெடுக்கரை நைஸ்சாய் விசாரிச்சுப்பாருங்கோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி, நீங்கள் ஆணா பெண்ணா? ஏன் குழப்புகிறீர்கள்?

நீங்கள் ஆணாக நினைச்சு பாருங்க ஆண்தான்.

பெண்ணாக நினைச்சுப் பாருங்க பெண்தான். ஆஆஆஆஆ.............குழப்புறேனா ஸாரிங்க எனக்கே தெரியல நான் ஆணா பொண்ணா என்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓடுறதில்ல நடக்கிறனான்.. என் கண்ணுக்கு என்னவோ.. உந்தக் கண்காட்சிகள் எம்பிடுறது குறைவு..! அப்படி எம்பிட்டாலும் எல்லாம் XXX ரேஞ்சில தான் எம்பிடும்..! அதில என்னத்த பார்த்து.. என்னத்தைச் சொல்லுறது. ஊரில மாரி காலத்தில நாய்கள் தெரு வழிய கட்டிப்பிடிக்கிறது.. தேறல..!

நீங்கள் பறுவாயில்லை கறுப்பன். கொஞ்சம் என்றாலும் ரசிக்கக் கூடிய காட்சிகளைக் காணுறீங்க..! நான் காணுறதெல்லாம்.. கண்ண மூட வேண்டிய காட்சிகளா எல்லோ கிடக்குது..! biggrin.gif icon_idea.gif

அச்சோ ஊரில பாத்தா நாய்களின் லீலைகள். இங்குபார்த்தால் கண்ணை மூட வேண்டிய காட்சிகள்.

ஒருமுறை என்னோடு வந்து ஓடிப்பாருங்கள் இந்தக் காட்சி எல்லாம் காணவே மாட்டியள். :(

நீங்கள் ஆணாக நினைச்சு பாருங்க ஆண்தான்.

பெண்ணாக நினைச்சுப் பாருங்க பெண்தான். ஆஆஆஆஆ.............குழப்புறேனா ஸாரிங்க எனக்கே தெரியல நான் ஆணா பொண்ணா என்டு.

நீங்கள் எழுதும் விதத்தைப்பார்த்தால், பெண் போல தேன்றுகிறது. ஆனால் சிலர் உங்களை ஆண் என்று விளிக்கிறார்கள். புரியவில்லை.

நீங்களும் சரியாப்பதில் சொல்லவில்லை.

நெடுக்கு சார் - உங்களை கேட்கச்சொல்லி கு.சா சொல்கிறார்..

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாலைப்பொழுதில்...........

மேலும் சிறிது தூரம் போனவுடன் சற்று நடுத்தர சோடி சுவாரசியாமாய் கதைத்தபடி இயற்கையை இரசித்தபடி கைகளை கோர்த்ததுக் நடந்து வந்த விதத்தைப் பார்த்தபோது மனசுக்கு ஏதோ ஆறுதலாய் இருந்தது. அந்த கைகோர்ப்பில் வாழ்ந்த வாழ்க்கையின் காதல், நட்பு முதிர்ந்து பரிணமித்திருந்த்தைப்போல் உணர்ந்து கொண்டேன்.

(உண்மைக்கதை)

இப்படிப் போனால் தமிழ்மானத்தின் அர்த்தம் ஐரோப்பிய கலாசாரத்தில கவிழ்ந்தவையென்று தான் நமது மேன்மைமிகு மகாஜனங்கள் சொல்வார்கள். இதைப்பாத்து நமது பிள்ளைகள் கெட்டுப்போடுமாம். ஆனால் இத்தகைய கொள்ளைப்பிடிப்பாளர்கள் வீதியில் போகும் அல்லது பார்க்குகளில் இருக்கும் ஒவ்வொரு சோடியையும் கடைக்கண்ணால் முழுங்கியபடி வருவதை பார்க்க தமிழ்கலாசாரத்தின் கள்ளத்தனத்தை என்னவென்று சொல்வது போலிருக்கும்.

கறுப்பி அல்லது கறுப்பன் உடல் ஆரோக்கியம் பேண ஓடியபோது இத்தகையதொரு சோடியைக்கண்டது கறுப்புக்கு நடுத்தரவயதை ஞாபகப்படுத்தியிருக்கிறது :wub:

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் போனால் தமிழ்மானத்தின் அர்த்தம் ஐரோப்பிய கலாசாரத்தில கவிழ்ந்தவையென்று தான் நமது மேன்மைமிகு மகாஜனங்கள் சொல்வார்கள். இதைப்பாத்து நமது பிள்ளைகள் கெட்டுப்போடுமாம். ஆனால் இத்தகைய கொள்ளைப்பிடிப்பாளர்கள் வீதியில் போகும் அல்லது பார்க்குகளில் இருக்கும் ஒவ்வொரு சோடியையும் கடைக்கண்ணால் முழுங்கியபடி வருவதை பார்க்க தமிழ்கலாசாரத்தின் கள்ளத்தனத்தை என்னவென்று சொல்வது போலிருக்கும்.

கறுப்பி அல்லது கறுப்பன் உடல் ஆரோக்கியம் பேண ஓடியபோது இத்தகையதொரு சோடியைக்கண்டது கறுப்புக்கு நடுத்தரவயதை ஞாபகப்படுத்தியிருக்கிறது :wub:

அந்த இதம் தரும் மாலைப்பொழுதில் என்னோடு கொஞ்சமாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அம்மணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.