Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தனிக்காட்டு ராஜா

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    9976
    Posts
  2. Maruthankerny

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    10720
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87997
    Posts
  4. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    23926
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/15/21 in all areas

  1. துரோகத்தின் நாட்காட்டி : 15, மாசி 2012 மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்த பிக்குவும், கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கருணாவும் மட்டக்களப்பு விகாரையின் பெளத்த குருவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் 2010 ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பில் தமிழர்களுக்கெதிரான கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது உண்ணாவிரத நிகழ்வுகளில் ஈடுபட்டுவருவது தெரிந்ததே. அதன் தொடர்ச்சியாக இந்த பிக்கு தற்பொழுது மீண்டும் உண்ணாவிரதச் சம்பவமொன்றினை ஆரம்பித்துவைத்துள்ளார். மட்டக்களப்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, வாழிடங்களிலிருந்து துரத்தப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்றத் திட்டம் மூலம் மட்டக்களப்பில் அவர்களுக்கு உரிய காணிகளுக்கான உரிமைப் பத்திரங்களை அரச அதிகாரிகள் வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். இது தமிழர்களுக்கு சிங்களவர்களின் காணிகளை பலவந்தமாகக் கொடுக்கும் செயல் என்றும், தமிழ் அதிகாரிகளால் சிங்களவரின் காணிகள் பறிபோகின்றது என்றும், இதனால் மட்டக்களப்பில் அரச திணைக்களங்கள் அனைத்திற்கும் சிங்கள அதிகாரிகளை மட்டுமே நியமிக்கவேண்டும் என்று கோரி இந்தப் பிக்கு புதிய உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் குதித்திருக்கிறார். பிக்குவைச் சமாதானப்படுத்தும் முகமாக துணைராணுவக் குழுத்தலைவரும், மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான கருணாவை பிக்குவிடம் தூதராக அனுப்பினார் மகிந்த ராஜபக்ஷ. பிக்குவோடு சமரசத்தில் ஈடுபட்ட கருணா அவரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இதுபற்றி மகிந்தவிடம் பேசி அவற்றினை நிறைவேற்றுவதாகவும் கூறியபின்னர் பிக்குவும் தனது உண்ணாவிரத மிரட்டலை முடித்துக்கொண்டதாகத் தெரிகிறது. 2010ஆம் ஆண்டில் மங்கள ரஜ மகாவிகாரையின் விகாராதிபதியான இப்பிக்கு நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான அரச உயர் பதவிகளுக்கு சிங்களவர்களை அரசு நியமித்திருந்தது. நீதிமன்ற அலுவல்கள், மாவட்டச் செயலகம், பிரதேசச் செயலகங்கள் ஆகிய முக்கிய மக்கள் சேவைகளுக்கு சிங்கள அதிகாரிகளை மட்டுமே இம்மாவட்டத்தில் பணியில் அமர்த்தவேண்டும் என்று இந்த இனவாதப் பிக்கு 2010 ஆம் ஆண்டு மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தினையடுத்து, அவற்றை ஏற்றுக்கொள்வதாக அரசு சம்மதித்த கணமே அவரது போராட்டம் வாபஸ் பெறப்பட்டதென்பது கவனிக்கப்படவேண்டியதொன்று. கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான அதியுயர் பதவி மற்றும் இதர அரச நிர்வாகச் சேவைகளுக்கான உயர் பதவிகளை சிங்கள அதிகாரிகள் அலங்கரித்ததையடுத்து, நடுத்தர மற்றும் கீழ்மட்ட பதவிகளுக்கும் தற்போது சிங்களவர்களை இம்மாவட்டத்தில் அரசு நியமித்து வருகிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இந்த பிக்கு இவ்வாறான போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மயமாக்கலினை இந்தப் பிக்குவைக் கொண்டே அரசு நடத்திவருவதாகவும் மட்டக்களப்பு வாழ் தமிழர்கள் தெரிவித்துவருகின்றனர். மகிந்த சிந்தனய எனும் சிங்கள இனவாதச் சிந்தனையின் கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளரும், கொழும்பின் சிங்கள பெளத்த இனவாத அரசின் ஒரு முகம் என்றும் பரவலாகக் கருதப்படும் இப்பிக்கு, தமிழ் மக்களுக்கெதிரான அநீதியான கோரிக்களைகளை முன்வைத்துவருவதுடன், அரச ராணுவத் துணைப்படையினரின் உதவியோடும், அரச பின்புலத்தோடும் தனது கோரிக்கைகளைத் தடையின்றி நிறைவேற்றிவருவதாக பாதிக்கப்பட்டுவரும் தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
  2. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 27, மாசி 2015 போற்குற்ற விசாரணைகள் தொடர்பான ஐ நா வின் தீர்மானத்திற்கெதிராக மக்களை கட்டாயப்படுத்தி போராடவைத்த கருணா மற்றும் பிள்ளையான் இலங்கை ராணுவத்தால் வழிநடத்தப்படும் துணை ராணுவக் கொலைக்குழுக்களான கருணா மற்றும் பிள்ளையானின் அடியாட்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராம அபிவிருத்திச் சபை தலைவர்களைச் சந்தித்துவந்தனர். இச்சந்திப்பின்போது ஒவ்வொரு தலைவரும் குறைந்தது 150 மக்களை தாம் ஒழுங்குசெய்யும் பேரூந்துகளில் மட்டக்களப்பு நகருக்கு அழைத்துவரும்படி பணிக்கப்பட்டது. இவ்வாறு அழைத்துவரத் தவறும் கிராமசபைத் தலைவர்களின் பதவிகளைத் தாம் பறிக்கப்போவதாகவும் துணை ராணுவக்குழு உறுப்பினர்கள் இவர்களை மிரட்டியிருந்தனர். இவ்வாறு வற்புறுத்திக் கூட்டிவரப்பட்ட மக்கள் மட்டு இந்துக் கல்லூரியிலிருந்து மணிக்கூட்டுச் சந்தி நோக்கி பேரணியாக அழைத்துவரப்பட்டு நகர் மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதுடன், போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையின் அமர்வுகள் தொடர்பாகவும் கடுமையான கண்டனக் கோஷங்களை எழுப்புமாறு பணிக்கப்பட்டனர். இவ்வாறே அம்பாறை மாவட்டத்திலிருந்து பேரூந்துகளில் வந்திறங்கிய நூற்றுக்கணக்கான சிங்களவர்களுக்கு மட்டக்களப்பு மங்கள ராம விகாரையின் விகாராதிபதி சுமனரத்ன தேரர் தலைமை தாங்கிச் சென்றர். அதேவேளை அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் பிரதியமைச்சர்கள் காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தமது ஆதரவாளர்களை நகருக்குக் கூட்டிவந்ததுடன் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியினை எரித்தும், மனிதவுரிமைச் சபையின் போர்க்குற்ற விசாரணை தொடர்பான அமர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர். வாகரையில் மீன்பிடியில் ஈடுபடும் மக்கள் மற்றும் காட்டிற்கு விறகிற்காகச் செல்லும் மக்களை அச்சுருத்திய ராணுவத்தினர், ராணுவத் துணைக்குழுக்களால் ஒழுக்ன்குசெய்யப்படும் பேரணியில் கலந்துகொள்ளாதவிடத்து மீன்பிடியினை அனுமதிக்கப்போவதில்லையென்றும், காட்டிற்கு செல்ல அனுமதிக்கப்போவதில்லையென்றும் மக்களை அச்சுருத்தியிருக்கின்றனர். இத்தனைக்கும், ஐக்கிய நாடுகள் சபையில் இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென்பதும், இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான கொமிஷன் வழங்கிய அனுசரணையின்படி செயற்படுங்கள் என்கிற கோரிக்கையினை மட்டுமே ஐ நா தீர்மானம் கேட்டுக்கொள்கிறது என்பது தெரிந்தும்கூட, மகிந்த அரசினால் நாட்டில் செயற்கையாக உருவேற்றப்பட்ட சிங்களத் தேசியவாதம் நாட்டினைப் பிரிக்க ஐ நா முயல்வதாகவும், படையினரையும் அரசியல்த் தலைமையினையும் நீதியின்முன் நிறுத்தப்போகிறதென்றும் ஒரு மாயையினை உருவாக்கி பாதிக்கப்பட்ட தமிழருக்கெதிராக தமிழர்களையே போராட வற்புறுத்துகிறதென்று கிழாக்கு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட்ட கிழக்கு வாழ் கல்வியாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார், "கடந்த தசாப்த்தத்தில் இங்கே இடம்பெற்ற தேர்தல் மோசடிகளை அவதானித்த ஐரோப்பிய ஒன்றியக் கண்காணிப்பாளர்கள் இப்போது எங்கே போய்விட்டார்கள்? போர்க்காலத்தில் இங்கே பணியாற்றிய அரச சார்பில்லாத அமைப்பினர் இப்போது எங்கே இருக்கிறார்கள்? சுனாமியின்போதும், கருணாவின் துரோகத்தின்போதும் இங்கே நாட்கணக்கில் வலம்வந்து செய்திகளைச் சேகரித்த வெளிநாட்டு ஊடக அமைப்புக்கள் மக்கள்மீது மனிதவுரிமை மீறல்கள் அரசாங்கத்தினாலும், துணை ராணுவக் குழுக்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது ஏன் அதுபற்றி ச் செய்தி சேகரிக்க வரமுடியாமற்போனது? " என்று கேள்வியெழுப்பினார்.
  3. தொடருங்கள்...ரஞ்சித்...!
  4. துரோகத்தின் நாட்காட்டி : 29, மார்கழி 2011 பிள்ளையானின் சட்டவிரோத மண் அகழ்வை எதிர்த்தவர்கள் மீது முறக்கொட்டாஞ்சேனை ராணுவம் தாக்குதல் சந்தன மடு ஆற்றில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டுவரும் பிள்ளையானின் சமூகவிரோதச் செயலினைக் கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமது முகாமிற்குச் சமூகமளிக்குமாறு அழைத்த முறக்கோட்டாஞ்சேனை ராணுவம் பிள்ளையானுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டாம் என்று கடுமையாக அச்சுருத்தியிருக்கின்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கொல்லப்படுவீர்கள் என்று மிரட்டிய ராணுவம், இரு சமூகநலன் செயற்பாட்டாளர்களான 30 வயது நிரம்பிய முத்துப்பிள்ளை நடேசன் மற்றும் 28 வயது நிரம்பிய ரூபன் வேலாயுதம் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறது. நடேசனும் ரூபனுன் முன்னாள் புலிகள் இயக்கப்போராளிகள் என்பதும், ரூபன் மிக அண்மையிலேயே ராணுவத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் இருவருமே முன்னாள்ப் போராளிகள் என்பதால், சந்தன மடு ஆற்று மண் அகழ்விற்கெதிராக போராடினால் உங்களை மிக இலகுவாகக் கொன்றுவிடுவோம் என்றும் இவர்கள் ராணுவத்தால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். ராணுவத்தால் இவர்கள் இருவரும் தாக்கப்பட்டதை வெளியே கூறினால் கொல்லப்படுவீர்கள் என்கிற எச்சரிக்கையினையும் மீறி இவர்கள் சிவில் மனிதவுரிமை அமைப்பொன்றிடம் முறையிட்டபோதும், அவ்வமைப்பினால் இதுவரை இதுதொடர்பாக எதனையும் செய்யமுடியவில்லை. மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் கனிமப்பொருள் மத்திய நிலையம் ஆகியவற்றினல் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த மண் அகழ்வினால் சந்தன மடு ஆற்றங்கரைக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுவரும் அழிவுகள் பற்றிய அறிவுரைகளையும் மீறி, பிள்ளையானின் கொலைக்குழுவிற்கு இப்பகுதியில் மண் அகழும் அனுமதியை அரசு வழங்கியிருப்பதுடன், இந்த சமூகவிரோதச் செயளுக்கான ராணுவப் பாதுகாப்பினையும் தொடர்ச்சியாக வழங்கிவருகிறது. இவ்வாற்றிலிருந்து தொடர்ச்சியாக மண் அகழப்படும் இடத்து, இன்னும் ஒருவருடத்தினுள் ஆறு சுமார் ஒரு கிலோமீட்டர் ஊர்மனைகள் நோக்கி வரும் பாரிய ஆபத்து இருப்பதாக சூழலியல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். சந்தனமடு ஆற்றிலிருந்து மண் அகழ்ந்துவரும் பிள்ளையான் இதில் தலையிட வேண்டாம் என்று உள்ளூர் அதிகார அமைப்புக்களை எச்சரித்திருப்பதனால், இதுதொடர்பாக பேசுவதற்கோ அல்லது நடவடிக்கை எடுப்பதற்கோ எவரும் முன்வரவில்லையென்று மக்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. கடந்த 4 ஆம் திகதி மக்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை முறக்கொட்டாஞ்சேனை ராணுவமும், ஏறாவூர்ப் பொலீஸாரும் சேர்ந்து அடித்துக் கலைத்தது நினைவிலிருக்கலாம். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சித்தாண்டி முருகன் ஆலய வன்னியனார் தலைமையில் நடைபெற்றதென்பதோடு, அவர்கள் பிள்ளையான் கொலைக்குழுவினரின் இந்த சமூகவிரோத நடவடிக்கையினை உடனடியாக நிறுத்தம்படியும் கோரியிருந்தனர். இவ்வாறான சமூகநலன் போராட்டமொன்றில் ஈடுபட்ட சமூகவியலாளரான கேதீஸ்வரன் தேவராஜா எனும் இளைஞர் ஈ பி டி பி கொலைஞர்களால் யாழ்ப்பாணத்தின் குடத்தனைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். டக்கிளசின் சட்டவிரோத மண் அகழ்வினை ஆதாரங்களோடு சமூக வலைத்தளம் ஒன்றில் பகிர்ந்தமைக்காகவே அவர் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
  5. றொனால்டோ கடந்து வந்த பாதை ronaldo.mp4
  6. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  7. என்கூடவே_இரும் இயேசுவே எனக்கு என்று யார்ருமே இல்ல உன்னை நம்பியே நானும் வாழ்கிறேன் உன்னை தேடியே ஓடி வருகிறேன் பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு......... I கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன் யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு......... II உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் // நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு.....
  8. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  9. உனக்கொருவர் இருக்கிறார் உன்னை விசாரிக்கத் துடிக்கிறார் உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார் உன்னை உள்ளங்கையில் வரைந்திருக்கிறார் சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர் ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர் சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும் ஆபிரகாமின் தேவன் உன்னைத் தள்ளிடுவாரோ தஞ்சம் என்று வருபவரை தள்ளாத நேசரவர் அஞ்சிடாதே மகனே மகளே என்றுன்னை தேற்றிடவே வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள் வேண்டாத வார்த்தைகளை சொல்லிப் புண்படுத்துவார்கள் வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய் வாழத்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே கஷ்டப்படும் போது நமக்கு உதவுவாரில்லை கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம் கும்பிட்டுப் பார்த்தாச்சு நம்ம கஷ்டங்கள் தீர்க்க அவை முன் வரவில்லை உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று சொல்வதெல்லாம் சும்மாங்க இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க ஜனங்களின் பாவம் நீக்கி இரட்சிக்க வந்த தெய்வமுங்க மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம்
  10. 1954 குமுதம் முதல் பக்கம்.👍 சிங்க மார்க்கு பட்டாசு விளம்பரம் ( கடைசி பக்கம் ).👌
  11. உன்னுடன் நான் வாழ்ந்த நொடிகளே போதும்..... நா. முத்துக்குமார்.....! 🌹

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.