Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46808
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88007
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    8910
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/18/21 in all areas

  1. 10 points
    பரிசு. விழியில் விழுந்து இதயம் கலந்த உறவு. அன்று எனது பிறந்தநாள் நிறைய நண்பர்கள், நண்பிகள் ஏராளம் ! வாழ்த்துக்கள்,பரிசுகள் தங்க ஆபரணங்கள் தங்கி விட்டன தந்தப் பேழையில் வெள்ளிப் பாத்திரங்கள் படுத்திருக்கின்றன பரண்மேல் எதுவும் என் இதயத்தில் தங்கவில்லை ! தங்கியது பாவையவள் பரிசளித்தாள் வாசமுள்ள ரோஜா மலர் மலரின் மணம் நாசிகளில் மங்கை முகம் மனக்கண்ணில் இதயம் சுமந்து கொண்டிருக்கின்றது விலை மதிப்பற்ற அம் மலரை மட்டும் இன்று --- அவள் சங்கு கழுத்தில் முகம் புதைக்க மூச்சின் சுவாசம் சீராகியது செவ்விதழில் முத்தமிட செவ்வாயில் அமிலம் சுரந்தது பிடியிடை தழுவிட மூலாதாரம் முழுதும் துடிக்குதடி கண்ணை விட்டு தூரம் நீ மறைந்தாய் கண்களுக்குள் நிறைந்து நின்றாய் கண்களுக்குள் உன்னைப் பார்த்து யானை பார்த்த குருடனானேன்......! யாழ் அகவை 23 க்காக ஆக்கம் சுவி.......!
  2. லொக்டவுண் வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொண்டனர். வதனியும் வீட்டில் வேலை செய்தாலும் இப்பவெல்லாம் விதவிதமாகச் சமையல் செய்வதும் பழைய நண்பிகளையெல்லாம் தேடிப்பிடித்து கதைப்பதுமாக ஒன்லைன் வட்ஸ்அப் என்று ஒருமாதிரி பொழுதைப் போக்கிக் கொண்டாள். இந்த வருடம் நந்தனின் 50வது பிறந்த நாளை பெரிய மண்டபம் எடுத்து விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற அவளது கற்பனைகளெல்லாம் கனவாகிப் போகுமென்று யார் நினைத்தார்கள். இத்தனை வருடமாக அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்தபோதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடிக்கும்வரை தம் பொறுப்புக்களை உணர்ந்து தம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவர்களது இத்தனை ஆண்டுகளும் கழிந்து விட்டன. நேற்று நந்தனுக்கு 50வது பிறந்தநாள். நாள் முழுவதும் தொலைபேசியிலும் வட்ஸ்சப்புக்களிலுமாக வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன. வதனியும் தன் பங்கிற்கு கேக் இனிப்புவகைகள் பிரியாணி என்று செய்து அசத்தியிருந்தாள். இருந்தாலும் வதனி நந்தனுக்குத் தெரியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து நந்தனின் பிறந்தநாளை வீட்டிலாவது பெரிதாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டாள்;. அந்த திட்டத்திற்கு ஆப்பு வைப்பதுபோல் “வீட்டிற்குள் இருங்கள் வெளியே திரியாதீர்கள்” என்று மேஜர் முதல் பிரதமமந்திரி வரை தொலைக் காட்சிகளில் அறிவித்து மக்களின் நலனைப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமன்றி வீட்டிலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வதனிக்கோ எப்படியாவது சேப்பிரைஸ் பாட்டி வைத்து நந்தனை பிரமிக்க வைக்க வேண்டுமென மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. புது வீடு வாங்கியபின் வீட்டில் எந்த கொண்டாட்டமும் வைக்க அவளுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உறவுகளைச் சந்தித்தும் பல மாதங்களாகி விட்டன. எனவே நெருங்கிய உறவுகளை நந்தனுக்குத் தெரியாமல் ரகசியமாக சனிக்கிழமை வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள். அத்துடன் நந்தனை மகிழ்விப்பதற்காக அவனது நண்பர்கள் தனது நெருங்கிய நண்பிகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி 20-25 பேர் ஆகி விட்டது. சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் எந்த மாறுதலும் தெரியாதபடி ரகசியமாகவே அனைத்து ஆயத்தங்களும் நடந்தன. வீடும் என்றும் போல் அமைதியாக இருந்தது. மத்தியானத்துக்கு மேல் ஒரு நண்பன் மூலம் நந்தனை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தபடி அனைத்து திட்டங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கவும் வதனி பூரண திருப்தியுடன் மளமளவென்று காரியங்களை மேற்கொண்டாள். அவசர அவசரமாக வீட்டை அலங்கரித்து ஓடர் பண்ணியிருந்த கேக்கை மேசையில் வைத்து அலங்கரித்து மற்றைய ஒழுங்குகளையெல்லாம் சரிவர செய்து முடித்தாள். திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. மத்தியானத்துக்குமேல் ஒரு நண்பனின் மூலம் நந்தனை வெளியே வெளியே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தாள்; நீண்ட நாட்களின் பின் சந்தித்த நெருங்கிய நண்பனுடன் தத்தமது 50 வயது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சுற்றியதில் நேரம் போனது தெரியவில்லை. மாலை மங்கத் தொடங்கியதும் வீட்டிற்கு போகலாம் என நந்தன் கேட்கவும் சரி என்ற நண்பனும் வதனிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு நந்தனுடன் வீட்டிற்கு வந்தான். வீடு அமைதியாகத்தான் இருந்தது. தன்னுடன் வந்த நண்பனை வீட்டிற்குள் அழைப்பதா விடுவதா என நந்தன் சிந்தித்த மறுகணம் நந்தன் தன்னை பின் தொடர்வதைக் கவனித்து “ வா வா வந்து ரீ குடிச்சிற்றுப் போகலாம்” என அழைத்தான். வீட்டின் கதவைத் திறக்கவும் “சேப்பிரைஸ்” என்று அனைவரும் கூக்குரலுடன் கைதட்டி நந்தனை வரவேற்கவும் நந்தன் திகைப்பில் திக்குமுக்காடிப் போனான். என்ன இது? லொக்டவுண் காலத்தில் இப்படிச் செய்கிறார்களே என மனம் அங்கலாய்த்தாலும் நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பர்களையும் உறவுகளையும் சந்தித்த சந்தோசத்தில் மனம் குதூகலமாகி மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். வீட்டிற்குள் கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. எங்கட ஆக்களின்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? ஏல்லோரும் வண்ண வண்ண உடைகளுடனும் விதவிதமான அலஙகாரங்களுடனும் வந்து இறங்கி வீட்டிற்குள் செல்வதையும் வீட்டிற்குள் நடந்த குதூகலத்தையும் அவதானித்த யாரோ காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டார்களோ அல்லது தற்செயலாக அந்த வீதியில் பயணித்த காவல் துறையினருக்கு மூக்கில் வியர்த்து விட்டதோ யாரறிவார்? மக்களின் நலனுக்காகத்தானே சட்டங்களும் ஒழுங்குகளும் என்று சிந்திக்காமல் மனம் போல திட்டமிட்ட வதனி கதவைத் தட்டிய காவல் துறையினரைக் கண்டதும் திகைத்து விட்டாள். வீதியில் நிறைய வாகனங்களைக் கண்ட காவல் துறையினர் சந்தேகத்தில் ஒவ்வொரு வீடாக தட்டி சோதித்ததில் இவர்கள் வீட்டில் அதிகம் பேர் நின்றது கையும் மெய்யுமாக பிடிபட்டு விட்டது. என்ன செய்வது என்ற தெரியாமல் சிலர் மேல் அறைகளுக்குள்ளும், சிலர் நிலக்கீழ் அறைகளுக்குள்ளும் ஓடி ஒழிந்தனர். இருந்தும் யாராலும் காவல் துறையினரை ஏமாற்ற முடியவில்லை. அனைவருக்கும் குற்றப் பணமாக ஆளுக்கு ஆயிரம் டொலர் ரிக்கற் எழுதி கொடுக்கப்பட்டது. உறவுகள் நட்புக்கள் அனைவரும் திகைத்து என்ன செய்வது என்று அறியாது வருத்தத்துடனும் ஏமாற்றத்தடனும் நிற்க வதனியோ பலமுறை காவல் துறையினரிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை. தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான். காவல் துறையினர் தமது கடமையை முடித்து விட்டு வெளியே போய் நின்று அனைவரையும் வெளியேறும்படி பணித்து விட்டு தம் வாகனத்தினுள் காத்திருந்தனர். நந்தன் வதனியை திரும்பிப் பார்த்த பார்வையில் வதனி எரிந்து போகாத குறை. வந்திருந்த அனைவரும் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேற வதனியோ கையைப் பிசைந்தபடி கண்கலங்க பார்த்துக்கொண்டு நின்றாள். உறவுகள் சிலர் “அவள் வதனிதான் கூப்பிட்டாள் என்றால் எங்களுக்கு எங்கே அறிவு போனது” என்று தம்மை நோவது போல வதனியை திட்டியபடி வெளியேறினர். ஆசைஆசையாக பார்த்துப் பார்த்து செய்த அலங்காரங்கள் கேக் இனிப்பு பலகாரங்கள் உணவுகள் அனைத்தும் தேடுவாரற்று கிடந்தது. இத்தனை ஆண்டு வாழ்வில் இதுவரை நந்தனின் இந்தமாதிரியான கோபத்தைப் பார்த்தறியாத வதனிகூட ஒருகணம் திண்டாடிப் போனாள். மெதுவாக பக்கத்தில் போய்” என்ன நந்தன் நான் உங்கட பிறந்தநாளை வடிவாகக் கொண்டாட வேணுமெண்டுதானே இப்படிச் செய்தனான்” என்ற ஆரம்பிக்கவும் நந்தன் கட்டுக்கடங்காத கோபத்துடன் “உன்னை நான் கேட்டனானா பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி அறிவு கெட்ட ஜென்மம்”என்று ஆவேசத்துடன் அவளைப் பிடித்து தள்ளி விட்டான். இந்த தாக்குதலை எதிர் பார்க்காத வதனி நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மேசையைப் பிடிக்க முயற்சித்தும் பிடி நழுவிப் போக அவளுக்கிருந்த மனக் குழப்பமும் சோர்வும் அவளை பெலவீனப்படுத்த தட்டுத் தடுமாறி அருகிலிருந்த சுவரில் மோதி கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். நந்தனும் ஒருகணம் திகைத்தாலும் ஆத்திரம் அடங்காமல் விறைப்புடன் நின்றான். வதனியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதை கண்ட பின்தான் நந்தனுக்கு நிலமையின் தீவிரம் மனதை உறுத்தியது. உடனடியாக அவளைத் தூக்கி செற்றியில் படுக்கவைத்துவிட்டு அம்புலன்சுக்கு அழைத்தனர். இந்த கொரோனா காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அதிக வேலைப் பழுவுடன் இருப்பதால் சிறிது தாமதித்தே உதவி கிடைத்தது. வதனியை அம்புலன்சில் ஏற்ற, நந்தனை கைது செய்து பொலிஸ் விசாரணைக்காக கொண்டு சென்றனர். நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை. நந்தன் திட்டமிட்டு எதுவும் செய்யா விட்டாலும் குற்றவாளியாகத்தான் பார்க்கப்பட்டான். நந்தன் பயத்திலும் திகைப்பிலும் உறைந்து போனான். தன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு வதனிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேதனையில் துவண்டு போனான். நிறைய இரத்தம் இழந்து விட்டதால் வதனியும் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். நந்தனையும் விசாரணை முடியும்வரை பொலிஸ் காவலில் வைத்து விட்டார்கள். பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் . இதில் யாரை நோவது? கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா? ஆத்திரப்பட்ட நந்தனையா? அல்லது அவனது 50வது பிறந்த நாளையா? லோக்டவுணையா? எதை?
  3. ஒற்றுமையே பலம். காணொளியை பாருங்கள்.
  4. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 26, ஆடி 2012 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வக்களித்தால் இந்த மாவட்டத்திலிருந்து துரத்தப்படுவீர்கள் - வாகரை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவர் பிள்ளையான். முன்னாள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனும் அவரது ஆயுதக் குழுவும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரைப் பகுதியில் உள்ள மக்களை மகிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாகப் போட்டியிடும் பிள்ளையானுக்கு வக்களிக்கும்படியும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவீர்கள் என்றும் மிரட்டிவருகிறார்கள். ஜெயம் என்று அழைக்கப்படும் திவ்வியநாதன் எனும் பிள்ளையான் குழுவின் முக்கிய ஆயுததாரியும் இந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதோடு, இவர் தலைமையில் வாகரையில் ரோந்தில் சுற்றித்திரியும் கொலைக்குழுவினரே மக்களை இவ்வாறு எச்சரித்திருப்பதாகத் தெரிகிறது. வாகரையில் சுமார் 7,500 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் திணைக்களத்தினால் கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர்கள் தொலைவில், கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைப்பகுதியில் இப்பிரதேசம் அமைந்திருக்கிறது. ஜெயம் எனும் பிள்ளையான் கொலைக்குழு ஆயுததாரியினாலும், அவரது சகாக்களினாலும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டுவரும் வாகரை மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2008 மாகாணசபைத் தேர்தல்களிலும் ஜெயமும் அவரது சகாக்களும் மக்களை அச்சுருத்திப் பணியவைத்தே வாக்குகளை பெற்றதாகப் பரவலான குற்றச்சாட்டுக்கள் வந்திருந்தன. இம்முறையும் இக்குழுவினர் அதேவகையான அச்சமூட்டும் வன்முறைகளிலும், மிரட்டல்களிலும் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை ராணுவத்தின் துணையுடன் ஜெயமும் அவரது குழுவினருமே வாழைச்சேனையின் கல்குடா மற்றும் பேத்தாழை பகுதிகளில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களின் சூத்திரதாரிகள் என்று மக்கள் தெரிவிக்கின்றனர். ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையான பிள்ளையானின் முக்கிய சகாவான ஜெயமும் அவரது குழுவும் செய்துவரும் சமூகவிரோதச் செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் செய்யப்பட்டபோது, பொலீஸாரோ ராணுவமோ அதுபற்றி நடவடிக்கை எடுப்பதனை மறுத்துவருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
  5. அதிகம் கலந்துகொள்ள வாய்க்கவில்லை! கிளப் ஒன்றில் 50வது பிறந்தநாள் கொண்டாட்டம். ரெஸ்ரோறன்ற்றில் ஒரு சர்ப்ரைஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்! அவ்வளவுதான்!!
  6. மலர்களை தூக்கி செல்லும் போட்டி ........(தெரியாத்தனமா வீடுகளில் முயற்சி செய்ய வேண்டாம்)......! 🤣
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, தை 2013 படுவான்கரையில் சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதன் மூலம் சிங்களத் தேர்தல் தொகுதியொன்றினை அமைக்கும் மகிந்த - தமக்குள் போட்டிபோட்டுக்கொண்டு உதவும் கருணாவும் பிள்ளையானும் மகிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் ஆசீருடன் படுவான்கரையில் துரித கதியில் சிங்களக் குடியேற்றம் ஒன்று நிகழ்ந்துவருவதாக அப்பகுதிவாழ் தமிழ்மக்கள் தெரிவித்திருக்கின்றனர். மிகச் செழிப்பான மேய்ச்சல் நிலங்களைக் கொண்ட இப்பகுதியில் அண்மையில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்களால் இதுவரையில் சுமார் 25,000 ஏக்கர் நிலம் சிங்களமயமாக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தச் சிங்களக் குடியேற்றம் பூர்த்தியாக்கப்படும் நிலையில், இப்பிரதேசத்திலிருந்து சிங்களப் பாராளுமன்றப் பிரதிநிதியொருவர் தெரிவாகும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக இப்பகுதி மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். இப்பகுதியில் பணிபுரிந்துவரும் தமிழ் உத்தியோகத்தர்கள் இந்த குடியேற்றம்பற்றியோ நில ஆக்கிரமிப்புப் பற்றியோ பேசக்கூடாதென்று துணையமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழு தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனால் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. படுவான்கரையில் அரச அழுத்தத்திற்கும் மத்தியில் இக்குடியேற்றம் தொடர்பான செய்திகளை வெளிக்கொண்ர முயன்ற பல தமிழ் அதிகாரிகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதோடு, கருணாவினாலும் கொலை மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். மகிந்த ராஜபக்ஷவின் கிழக்கு மாகாண ஆலோசகர்களாகவும், ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயற்பட்டுவரும் கருணாவும் பிள்ளையானும் தமிழ் அதிகாரிகளை மிரட்டி, அவர்களின் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், இவர்கள் இருவருக்குமிடையிலான போட்டியினால், மகிந்தவுக்கு அதிகம் நெருக்காமானவர் யார் என்பதை நிரூபிக்க இந்தக் குடியேற்றங்களுக்கு ஆதரவாக இவர்கள் இருவரும் செயற்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அத்துமீறிய நில அபகரிப்பிற்கும், சிங்களக் குடியேற்றத்திற்கு இதுவரை காலமும் ஓரளவிற்காவது தடையாக இருந்துவந்த சில தமிழ் அதிகாரிகள் பலவந்தமாக சிங்களப் பகுதிகளுக்கு கருணாவினால் இடமாற்றப்பட்டதையடுத்து, இப்பகுத்யில் குடியேற்றங்கள் தங்குதடையின்றி நடைபெறத் தொடங்கியிருப்பதாக தமிழ் மக்கள் தெரிவிக்கிண்ரனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் ஊடறுத்துக்கொண்டு நிகழ்ந்துவர, வடக்கிலிருந்து முஸ்லீம்களும் தம் பங்கிற்கு தமிழ் நில ஆபகரிப்பில் இறங்கியிருப்பதாக தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
  8. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 11, கார்த்திகை 2012 கருணாவினதும் பிள்ளையானினதும் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியேறும் 25,000 சிங்களக் குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா மற்றும் பிள்ளையான் அகியோரின் உதவியுடன் சுமார் 25,000 சிங்களக் குடும்பங்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியிருப்பதாக மட்டக்களப்பிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இதன் முதற்கட்டமாக குறைந்தது 5,000 சிங்களக் குடும்பங்கள் 16 கிலோமீட்டர்கள் நீளமான கடற்கரைப் பகுதியான பாசிக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்று பகுதியான சவுக்கடி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர். முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழு தலைவருமான பிள்ளையான் மற்றும் அரச துணையமைச்சரும் இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுத் தலைவருமான கருணா ஆகியோரின் உதவியுடன் இப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் விரட்டப்பட்டு, சிங்களவர்கள் மட்டக்களப்பின் மேற்கிலும் கிழக்கிலும் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதேவேளை கோரளைப்பற்று தெற்குப் பகுதியில் அமைந்திருக்கின்ற பெரியமாதவணை பகுதியில் அத்துமீறி நுழைந்து தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களைக் கையகபடுத்தியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது 450 இலிருந்து 500 வரை இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கணிப்பிட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் தெகியத்தைக்கண்டிய எனும் பகுதியிலிருந்து தற்காலிக விவசாய செய்கைக்கு வருகிறோம் என்கிற பெயரில் இதுவரை இப்பகுதிக்கு வந்த சிங்களக் குடும்பங்கள் ராணுவத்தினரின் உதவியுடன் இப்பகுதிகளில் நிலையான வீடுகளையும், களஞ்சியங்களையும் கட்டிவருவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்கள் கூறுகின்றனர். இதுபற்றி மட்டக்களப்பு அரச அதிபர் ஊடாக மக்கள் ராணுவ அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தபோது இவ்வாறான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்று மறுத்த பிரிகேடியர் ஒருவர், தமது ராணுவம் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கான உதவிகளையே வழங்குவதாக கூறினாலும், தமிழர்களின் நிலங்கள் தொடர்ச்சியாக சிங்கள விவசாயிகளாலும் ராணுவத்தினராலும் நாளாந்த ரீதியில் கையகப்படுத்தப்பட்டுவருவதை பார்த்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாத கைய்யறு நிலையிலேயே தமிழர்கள் இருக்கின்றனர். இதுபற்றி சமூக ஆர்வல்களும், கிழக்கின் கல்விமான்களும் ராணுவ அதிகாரியிடம் பேசியபோது, "தமிழர்களின் காணிகளில் சிங்களவர்கள் குடியேறுவது உண்மைதான். இதனை நீங்கள் அரசாங்கத்திடம் தான் கேட்கவேண்டும். எங்களுக்கு இடப்பட்ட கட்டளையைத்தான் நாம் பின்பற்றமுடியும், முடிந்தால் உங்களின் அரச அதிபரை அரசுடன் பேசச் சொல்லுங்கள்" என்று ஏளனமாகக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஏறாவூர்ப்பற்று - செங்கலடிப் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றக் கிராமமான மங்களகம எனும் பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்கள் தமிழர்களின் கால்நடைகளைக் கொன்றுவருவதாகவும், புதிதாக ஈணும் கன்றுக்குட்டிகளை களவாடிச் செல்வதாகவும் முறையிடும் தமிழர்கள், தமது முறைப்பாடுகளை பொலீஸார் ஏற்கமறுப்பதோடு, தம்மை விரட்டியடிப்பதாகவும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார்கள். இதேவேளை கோரளைப்பற்று தெற்கு, வெள்ளாவெளி, பட்டிப்பழை, ஏறாவூர்ப் பற்று ஆகிய எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள தமிழக் கிராமங்களில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்களவர்கள், இப்பகுதி அம்பாறை மாவட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதால், தமிழர்களை இங்கிருந்து அடித்துவிரட்டுவோம் என்று மிரட்டிவருவதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 31, ஆவணி 2012 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பிள்ளையான் கொலைக்குழு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆசீருடன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் பிள்ளையான் தலைமையிலான துணைராணுவக் கொலைக்குழுவினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்களை நடத்த ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இத்தேர்தல்களில் 35 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருக்கிறார்கள். கொலைக்குழு ஆயுததாரியும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான புஷ்பராசா என்னும் நபரும் அவரது கொலைக்குழுவினருமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்கிவரும் இவரது குழுவினருக்கெதிராக கடந்த 2008 மாகாணசபைத் தேர்தல்களிலும் வன் முறைகளில் ஈடுபட்டார்கள் என்று பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதேவேளை இம்மாவட்டத்தில் சமுர்தி உத்தியோகத்தர்களை கூட்டமொன்றிற்கு அழைத்த பிள்ளையானும் அவரது கொலைக்குழுவினரும், தமக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும்படி அவர்களை மிரட்டியுள்ளதுடன், தமது கூட்டங்களுக்கு வரமறுக்கும் சமுர்தி உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பணவு நீக்கப்படும் என்றும், அவர்களின் நியமனம் இரத்துச் செய்யப்படும் என்றும் மிரட்டப்பட்டிருக்கிறது.
  10. லொக்டௌன் காலத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நல்ல ஒரு கதையாக்கம் அக்கா. தண்டப்பணத்துடன் முடிந்திருந்தாலாவது ஆறுதல் கொள்ளலாம். அதற்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் தான் வேதனை. விதியோ, சதியோ அன்றைய நாளில் அந்தக் குடும்பத்தில் நிகழ்ந்த எதிர்பாராத இந்த துரதிஷ்டமான நிகழ்வுகள் அவர்கள் வாழ்வையே புரட்டிப்போட்டிருக்கும். நாட்டுச் சூழல் தெரிந்தும் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்த வதனியைக் குற்றம் சொல்ல நினைத்தால், அவள் தன் கணவன் மேல் வைத்த அளவுகடந்த அன்பு நாட்டின் சட்டதிட்டங்களை மறக்கச் செய்துவிட்டது என்பது தான் உண்மை. எனவே அவளை நொந்து பயனில்லை. எனினும் பலருக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கும். மறுபுறம், எதிர்பாராத கொண்டாட்டம், பின்னர் வந்த பொலீஸார், தண்டப்பணம், ஊராரின் அவச்சொல் இவற்றால் ஏற்பட்ட திடீர் மன அழுத்தம் வதனியின் கணவனைப் பாதித்திருக்கும். அதன் விளைவே பின்னர் நடந்த துரதிஷ்டமான நிகழ்வுகள். அதற்காகக் குடும்ப வன்முறை தான் தீர்வு என்றில்லை. கொஞ்சம் நிதானத்தைக் கடைப்பிடித்திருந்தால் கணநேரத்தில் வந்த கோபத்தால் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளைத் தவிர்த்திருக்க முடியும். கணநேரக் கோபம் என்றாலும் பலகாலம் சேகரிக்கப்பட்ட மன அழுத்தத்தின் ஒட்டுமொத்த விளைவாகவும் அவனுக்கு வந்த அடக்கமுடியாக் கோபத்தைப் பார்க்கலாம். எனவே இது கணவன்மார்களுக்கான wake up call. இவை பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அவசியம். கோவிட் லொக்டௌன் காலத்தில் குடும்ப வன்முறை கணிசமான அளவு அதிகரித்ததாக இங்குள்ள பத்திரிகைகளில் படித்தேன். இது பல நாடுகளிலும் நிகழ்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். உங்கள் கதை இதற்கு ஒரு உதாரணம். காலத்துக்கேற்ற கதைக்கு நன்றி அக்கா.
  11. எங்கட சனத்திலை இருக்கிற இந்தப் படங் காட்டிற குணம் ஒரு நாளும் போகாது என்பதை உங்கள் கதை தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளது! இடம், பொருள், ஏவல் என்பவற்றை அவர்கள் ஒரு நாளும் கணக்கெடுப்பதேயில்லை! இப்ப சிட்னி முருகனும் நல்லாத் தனிச்சுப் போனார்! ஆனால் கவலைப் படவேயில்லை! சனம் தான் வாங்கின சாறிகளையும், நகைகளையும், புதுக் கார்களையும் ஊருக்குக் காட்ட ஏலாமல் தலையைச் சொறிஞ்ச படி இருக்கினம்! காவலூர் கண்மணியின் கதையோட்டம் பற்றி விமர்சிக்க எனக்கு அருகதையில்லை! தொடர்ந்தும் எழுதுங்கள்...!
  12. அனுபவம் கனக்க உண்டு.. 👌 நாள்பட நாள்பட... கொஞ்சம் விபரம் ஆகிட்டோம் தோழர்..☺️..😊
  13. காலத்திற்கேற்ற கதை கண்மணி அக்கா! முதலில் நந்தனின் நண்பனுக்கு இரண்டு சாத்து. மற்றது வதனி அழைப்பு விடுத்தவுடனை ஒரு புத்திமதியும் சொல்லாமல் தாங்கள் சோடிச்சு மினுக்கிக்கொண்டு கொண்டாட்டத்துக்கு வந்த 25 பேருக்கும் என்னத்தை சொல்ல....இஞ்சையும் துருக்கி சனங்கள் உந்த விளையாட்டைத்தான் செய்யினம். பாவம் நந்தன்...இனி தண்ட காசுக்கு வேறை உழைக்க வேணும்.
  14. தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க..... ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்... அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்... வட்டியும் கட்ட மாட்டான்... பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்... கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்... இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல... இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல... சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல... பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்... இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா... இவனுக்கு சுகர் வராது... இதய நோய் வராது... குண்டாகவும் மாட்டான்... ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை... உலக பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்... அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்... 10 இதய டாக்டர்... 10 பல் டாக்டர்... 10 டயட்டீசியன்... இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்... உடனே முடிவெடுங்க சைக்கிளா? காரா? இந்திய பொருளாதாரமா??? உங்க உடல் நலமா??? நன்றிகளும் பிரியங்களும். FB
  15. இந்த அனுபவம் யாருக்கும் உண்டா?
  16. 7 ஆம் நாள், மார்ச் மாதம், 2004 - தொடரும் துரோகம் ..... துரோகி கருணாவின் ஆதரவாளர்கள் வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம் கருணா எனும் துரோகிக்கெதிரான ராணுவ நடவடிக்கையொன்றினை அவனுக்குக் கீழிருந்த தளபதிகளும் போராளிகளும் திட்டமிட்டு வருகையில், கருணாவின் ஆதரவாளர்கள் மட்டக்களப்பு நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருக்கிறார்கள். மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் புதிய நிலை தொடர்பாக விளக்குவதற்கு அம்மாவட்டங்களின் முக்கிய தளபதி ஒருவர் வன்னியை வந்தடைந்தார். ரமணன் மற்றும் ராம் கருணாவின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி வருவதான முடிவினை அவரின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமணன் எடுத்ததனால், கிழக்கினை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கமுடியும் என்ற கருணாவின் கனவில் பாரிய இடிவிழுந்திருப்பதாக வன்னியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கருணாவின் ஆதரவாளர்கள் வாழைச்சேனையில் தேசியத் தலைவரின் கொடும்பாவியினை எரித்ததுடன், கருணாவை விட்டு விலகிச் சென்ற ஏனைய தளபதிகளினது கொடும்பாவிகளை எரித்தனர். இவ்வாறான தமிழ்த் தேசியத் தலைமைக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்று திருக்கோவில் பிரதேசத்திலும் கருணாவின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது. கிழக்குப் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் அங்குள்ள நிலைமைபற்றிக் கருத்துக்கூறுகையில் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த கருணா ஆதரவாளர்கள் அங்கிருந்த வடமாகாணத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்கு அச்சுருத்தல் விடுத்ததாகவும், பதட்டமான சூழ்நிலை ஒன்று உருவாகிவருவதாகவும், உயிருக்குப் பயந்து பெருமளவு வடமாகாண மாணவர்கள் பல்கலைக் கழகத்தினைவிட்டு தற்போது வெளியேறிவருவதாகவும் தெரிவித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.