மிஷேலின் தொழிற்சாலை... சன நடமாட்டம் குறைவான,
ஊரின் ஒதுக்குப் புறத்தில் இருந்தது.
அந்த இடத்தில் சில தொழிற்சாலைகளைத் தவிர,
வீதி அமைதியாகவே இருக்கும்.
வேலை ஆட்கள் எல்லோரும், காலை 7´மணிக்கு வேலை தொடங்கிய பின்...
9´மணியளவில் தான்... முதலாளி வேலைக்கு வருவார் என்பதால்,
தொழிற்சாலையிலிருந்து சிறிது தூரத்தில்.... அவரின் காரை மறித்து,
வேலை கேட்கலாம் என முடிவெடுத்து....
8 மணிக்கே... குறிப்பிட்ட இடத்தில் நின்ற போதும்,
அவனுக்கு, தான் செய்த செயலுக்கு, முதலாளி என்ன சொல்லுவாரோ...
கை, கால் எல்லாம் உதறல் எடுத்தது. 🥶
வீட்டிற்கு... திரும்பிப் போய் விடலாமா என யோசித்தாலும், 🍛 "சோத்துக்கு... என்ன வழி❓" என மனதை திடப் படுத்திக் கொண்டு,
வருவது வரட்டும் என நின்றான்.
ஆஹா... தூரத்தே முதலாளியின் கார், வீதியில் தனியே...
வேறொரு வாகனமும் இல்லாமல், வந்து கொண்டிருப்பதை கண்டவுடன்,
கையை அசைத்து... அவரின் காரை மறித்தான்.
கார் நின்றது, யன்னல் கண்ணாடி இறங்கியது. 🚗
முதலாளியிடம்.... "வந்த வெள்ளம், நின்ற வெள்ளத்தை" கொண்டு போய் விட்டதென்று..
தனக்கு நடந்த சோகங்களை சொல்லி...
தன்னை மீண்டும் வேலையில் சேர்க்கும் படி... கேட்ட போது,
"நீ... திரும்பி வருவாய் என்று, எனக்குத் தெரியும்."
ஒரு கிழமை... கழித்து, வேலையில் வந்து சேர்.
என்று சொல்லி விட்டு... புறப்பட்டு விட்டார்.
மிஷேலுக்கு... இந்த வார்த்தை, ஆறுதலாக இருந்தது.
குறிப்பிட்ட நாளில்... வேலைக்கு சேர்ந்தான்.
மற்ற வேலை ஆட்கள், இவனது கடந்த காலத்தை பற்றி எதுகும் கேட்கமால்,
முன்பு போல்... சாதாரணமாக பழகியது, சந்தோசமாக இருந்தது.
ஆனாலும்... மனைவியும், பிள்ளைகளும் பிரிந்து போன சோகம்
அவனது மனதை... தினமும், வாட்டிக் கொண்டிருந்தது. 😢
//"விட்ட காசை, திருப்பி எடுப்பம்" என்று...
அவனது 🐵 "மங்கி" புத்தி 🐒 சொன்னதால்...//
சிறிய பணத்தில்... லொத்தர் போட்டுக் கொண்டிருந்தான். என்ன... ஆச்சரியம்!!!!!! அவனுக்கு... "7 மில்லியன் ஐரோ", விழுந்து விட்டது. 😮
➡️தொ➡️ட ➡️ரு➡️ம்.....➡️ 🤣