Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    15755
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    38778
    Posts
  3. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8910
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/29/21 in all areas

  1. மருதர் பலர் கேள்விப்பட்டதே சிலரால் செய்திகளாகவும் கட்டுரையாகவும் எழுதப்பட்டது பிரிவின் பின்னர் ஊரில் திரிந்த வீடி குடிகள் , கஞ்சா குடிகள் , சாராய குடிகள் எல்லாம் காசுக்கும் , போதைக்கும் , பொண்ணுக்கும் அடிமையாகிய அனைத்து கழுசறைகளும் அந்த நேரத்தில் பல குழுக்களாக பிரிந்து சென்ற குழுக்களிடம் சென்று கட்டப்பஞ்சாயத்து , கடத்தல் என்பவற்றை நடத்தியது அதற்கு ரகுநாதான் எழுதிய குழந்தை கடத்தலும் ஒன்று இரு வருக்கு ஏற்பட்ட முறுகள்குழந்தை கடத்தல் கொலை வரைக்கும் சென்றது . அதுமட்டும் அல்லாமல் செட்டிபாளையம் ஒரு எஞ்சினியர் பெண் சுட்டுக்கொல்லப்பட்டார் காரணம் கான்ரக்ட் கொடுக்கவில்லையென தற்போது அந்த குடும்பம் லண்டனில் . தகப்பனார் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு விசுவாசியாவார் . அதுவும் கர்ணா குழுவென செய்திகள் வந்ததது . குழந்தை கடத்தலும் அதில் ஈடுபட்டவர்களுக்கும் பின்னாளில் என்ன நடந்தது என இங்குள்ளவர்களுக்கு தெரியும் அதை நான் சொல்ல விரும்பல அதாவது பிரிவின் பின்னர் பலர் கர்ணா பிள்ளையானின் பெயரை வைத்து விளையாடி விட்டார்கள் ஆனால் அவர்களுக்காக வக்காளத்து வாங்கவுமில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன். இன்னுமொரு உதாரணம் மட்டக்களப்பில் வவுணதீவில் இரு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஆனால் அரசும் முன்னாள் புலிகளை சொல்லி வடகிழக்கில் தேடியது அனால் சுட்டது ஏப்றல் 21 தாக்குதலில் ஈடுபட்ட சகறானின் சகாக்கள் என்பது அவர்கள் நடத்த தாக்குதலின் பின்னரே உலகத்துக்கு தெரியவந்தது . இது போன்ற சம்பவங்கள் இருக்கிறது சொல்லமுடியாதும் உள்ளது யாரும் ஊக்கிக்க முடியாத சக்திகளும் சல்லடை போட்டு தூர்வாரியது இரவு வேளைகளில்
  2. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது.......ஒரு தனி மனிதனின் சாதனை........! 🙏
  3. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! விடுதலைப்புலிகளின் வான்புலிகளிடம் இருந்த மொத்த வான்பொல்லங்களின் (airstrip) எண்ணிக்கை 9. அவற்றின் அமைவிடங்கள் ஆவன, 1) பனிக்கன்குளம் வான்பொல்லம் A9 சாலையின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) நீளம்: 500m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான மணலாலான 5-6 அடி உயர மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீரற்ற அகழி இருந்தது. இதற்கான நுழைவுவாயில் எங்கிருந்தது என்பதை என்னால் அறியமுடியவில்லை. இதன் முதன்மை கீல் கல்வீதிப்பாவானது 'கூட்டல் (+)' வடிவிலிருந்தது. ஆனால் குறுக்காக செல்லும் ஓடுபாதை மிகவும் நீளம் குறைந்ததாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். 'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம்' 'மணலாலான 5- 6 அடி உயரமுள்ள மண்ணரணை அம்புக்குறி சுட்டுகிறது' 'எதிரெதிர் திசையில் அமைந்திருந்த குறுக்காப் போகும் கீல் கல்வீதிப்பாவு. இது மிகவும் சிறியதாக உள்ளதைக் காண்க' 'ஓடுபாதை மணலால் உருமறைக்கப்பட்டுள்ளதை கவனிக்குக' 2) நிவில் பகுதி வான்பொல்லம் B-69 பூநகரி பரந்தன் சாலையில் உள்ள நிவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: 200m இந்த வான்பொல்லமானது நாற்சதுர வடிவிலான வெள்ளை மணலாலான மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அந்த மண்ணரணின் வெளிப்புறத்தில் நீருள்ள அகழி இருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். வெளிப்புறத்தில் ஆங்காங்கே பனங்கூடல்களும் வயல்வெளிகளும் இருந்தன. 'வான்பொல்லத்தைக் காட்டும் வரைபடம்' 'வெள்ளை மணலாலான மண்ணரண் கீல் கல்வீதிப்பாவு 3) அம்பகாமம் தென்கிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்திற்கு தென்கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: வடக்கில் இருந்து கிழக்காக 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 25m 4) கேப்பாப்புலவு வான்பொல்லம் முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. 1.5 கிமீ நீளத்திற்கு கல்வீதிபாவு போடப்பட்டிருந்தாலும் மேலும் 1கிமீ நீளம் அகட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டிருந்தது, கல்வீதிப்பாவு போடுவதற்கு. மொத்த நீளம்: 2.5km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.5km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m "2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்." "2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்." இவ்வான்பொல்லத்தில் வானூர்திகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கு 2 பறவாடி(Hangar) அமைக்கப்பட்டிருந்தன. பறவாடி: பறவாடி உட்புறம்: பறவாடியின் உறுப்புகளை விளக்கும் விளக்கப்படம்: படிமப்புரவு: dossier on ltte weapons. pdf மேலுள்ள 4 வான்பொல்லங்கள் நிலவரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. 5) அம்பகாமம் கிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்திற்கு கிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. மொத்த நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 1.2km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m கட்டப்பட்டது: 2002-2003 ஆம் ஆண்டு. ஆனால் தொடர் சிங்கள வான்படையின் குண்டுவீச்சால் இது புதுபிக்கப்பட்டுக்கொண்டே வரப்பட்டது. இது சிங்களவரை ஏமாற்றுவதற்காக கட்டப்பட்டதாகும். "2003-2004 ஆண்டு கால செய்மதிப் படம்" 6) அம்பகாமம் வடகிழக்கு வான்பொல்லம் இரணைமடுக் குளத்தின் வடகிழக்கில் அம்பகாமத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிப்பாவானது 'கூட்டல் (+)' வடிவிலிருந்தது. ஆனால் குறுக்காக செல்லும் ஓடுபாதை மிகவும் நீளம் குறைந்ததாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். கீல் கல்வீதிப்பாவு நீளம்: 300m 7) பிரபந்தனாறு வான்பொல்லம் மொத்த நீளம்: 2km கீல் கல்வீதிப்பாவு நீளம்: 350m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50m இது நாற்சதுர வடிவிலான மண்ணாலான மண்ணரணால் சூழப்பட்டிருந்தது. அம்மண்ணரணில் ஆங்காங்கே காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. தேவைப்படுபோது ஓடுபாதையின் மேல் உருமறைப்பிற்காக - வண்டுகளின் கண்ணில் மண்ணைத்தூவ - மணல் பரப்பப்படும். ஓடுபாதையிலிருந்து மண்ணரண் வரை புற்றரையும் அதற்கு வெளியே சூழ்ந்ததுவாக அடவியும் இருந்தது. மேலுள்ள எஞ்சிய 3 வான்பொல்லங்களும் நிலவரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. பிற்சேர்க்கை (08/12/2020): மேலும் இரண்டு வான் பொல்லங்கள்(air strips) புலிகளின் வான்புலிகளிடம் இருந்ததாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.. இவை எதையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றும் வரை கண்டு குண்டு வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அவையாவன.. 8 )புத்துவெட்டுவான் கிழக்கு வான்பொல்லம் இது வான்பயிற்சிக் கூடமாக இருந்தது. கீல் கலவீதிப்பாவு நீளம்: 800 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 50 m 9)மன்னகண்டல் மேற்கு வான்பொல்லம் இது புதுக்குடியிருப்பு முத்தையன்கட்டு வீதியில் மன்னகண்டல் மேற்குப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. கீல் கல்வீதிப்பாவு நீளம்: 650 m கீல் கல்வீதிப்பாவு அகலம்: 35 m இவற்றில் வான்புலிகளின் தளமாக இயங்கியது இரண்டுதான். மீதி அனைத்தும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சில வான் பயிற்சிகளை மேற்கொள்ளவும் எதிரிகளை ஏமாற்றவும் வடிவமைக்கப்பட்டவை. இதில் சிறப்பு என்னவென்றால் இறுதிவரை இலங்கை படைத்துறை உண்மையான வான்பொல்லத்தை அடையாளம் கண்டு தாக்குதல்தல் நடத்தவே இல்லை! அத்தனை சிறப்பாக உருமறைக்கப்பட்டிருந்தன. --> முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர் "வானூர்திகள்... ஓட்டி வந்த வீரர்களைப் பார்த்துப் பார்த்து... விசிலடித்து... ஆடுகிறோம்... மாலைகளைக் கழுத்தில் போட்டு" --குத்தாட்டம் போடுடா பாடலிலிருந்து. --------------------------------------------- உசாத்துணை: YouTube Sri Lanka troops seize rebel airstrip, refugees flee Troops capture LTTE's last airstrip in Mullaitivu Iranamadu Airport - Wikipedia https://idsa.in/TWIR/9_5_2008_SriLanka Strip ( படிமப்புரவு(Image courtesy) YouTube நிகழ்படம்(video) YouTube eelam.tv ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  4. uae ஏழு எமிரேட்டுகளின் சில தகவல்கள்.......! 😁
  5. விளம்பர கலாய்ப்புகள்..☺️..😊
  6. நீங்காத உறவில் நிறைவான உணர்வில்.......... நீயில்லாமல் நானில்லை நின்னருளின்றி கதியில்லை வாழ்விலும் தாழ்விலும் என்னுடன் இருந்தால் என் வாழ்க்கை பேரழகு இல்லையேல் என் வாழ்வில் ஏதழகு இறைவா கிளைகளோடிருந்தால் இலை அழகு அது உதிர்ந்துவிட்டால் இது வெறும் சருகு பறவையோடிருந்தால் சிறகழகு அது முறிந்துவிட்டால் இது வெறும் இறகு விளக்கினில் எரிந்தால் தீ அழகு ஒரு வீணையில் இருந்தால் நரம்பழகு மண்ணினில் விழுந்தால் மழையழகு நம் கண்ணினில் தெரிந்தால் துளியழகு இரு கரைகளில் நடுவே பாய்வது வரைதான் நதிகள் பேரழகு அந்த கடலின் மீது தவழ்வது வரை தான் அலைகள் பேரழகு இறைவன் நம்முடன் இருப்பது வரைதான் நமக்கு பேரழகு இல்லையேல் நமக்கு ஏதழகு பூவுடன் இருந்தால் முள்ளழகு ஒரு புன்னகை விரித்தால் சொல்லழகு கருவறை இருந்தால் சிறையழகு ஒரு கதிருடன் இருந்தால் நெல்லழகு கோபுரம் அசைந்தால் கொடியழகு ஒரு நீதியில் வளர்ந்தால் புவியழகு அமைதியில் வாழ்ந்தால் ஊரழகு ஒரு அன்புடன் இழுத்தால் தேரழகு ஒரு தண்டின் மீது இருப்பது வரைதான் தாரை பேரழகு நீல வானின் மடியில் நீந்திடும் வரை தான் தாரகை பேரழகு
  7. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏
  8. மட்டக்களப்பில் கருணாவைப் உளவியல் யுத்தத்திற்காகப் பாவிக்கும் ராணுவம் கருணாவுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே இருக்கும் மிக நெருங்கிய ஒத்துழைப்பினை அடிப்படையாகக் கொண்டு, மட்டக்களப்பிலிருந்து கருணாவை வெளியேற்றும் நடவடிக்கையினை புலிகள் மேற்கொண்டபோது ராணுவம் நடந்துகொண்ட விதத்தினைப் பார்த்தல் அவசியம். புலிகளுக்கும் கருணாவுக்குமிடையிலான பிணக்கில் தாம் நடுநிலைமை வகிப்பதாக வெளியே பாசாங்குக் காட்டிக்கொண்டிருந்த ராணுவம், உண்மையில் கருணாவுக்கு ஆதரவாக செயற்பட்டிருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சந்திரிக்கா நடத்திக்கொண்டிருந்த தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவினை வேண்டி நின்றதனால், கருணாவை வெளிப்படையாகவே ஆதரிப்பதென்பது ராணுவத்திற்கும், அரசாங்கத்திற்கும் தர்மசங்கடமான நிலையினை ஏற்படுத்தியிருக்கும்., அதுமட்டுமல்லாமல், புலிகள் வெறும் 3 நாட்களிலேயே கருணாவை அடித்துவிரட்டுவார்கள் என்பதை ராணுவம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதும் இந்த நடுநிலைமை நாடகத்தின்மூலம் வெளிச்சமாகிறது. கருணாவை வெளியேற்றும் முடிவினைப் புலிகள் தாமதப்படுத்தியிருந்தாலோ அல்லது, இத்தாக்குதல் முயற்சி நீண்டு சென்றிருந்தாலோ, ராணுவம் தனது உண்மையான முகத்தினைக் காட்டியிருக்கும் என்றே கருதமுடிகிறது. போர் என்பது தடுக்கமுடியாததாகவே இருந்திருக்கலாம், ஆனால் கருணா மீதான புலிகளின் இலகுவான வெற்றியென்பது ராணுவம் கருணாவின் பெயரில் புலிகள் மீதான வெளிப்படையான போர் ஒன்றிற்குள் இறங்கும் கனவினைத் தவிடுபொடியாக்கிவிட்டது. தனது அரசியல் ரீதியான செல்வாக்கிற்கும், அரசியல் இருப்பைப் பலப்படுத்திக்கொள்ளவும், கருணாவின் மூலம் புலிகள் மீதான ராணுவ வெற்றியொன்று பெருமளவில் உதவியிருக்கும் என்று சந்திரிக்கா நினைத்திருக்கலாம். ஆனால், அது நடைபெறாமல்ப் போயுள்ளதோடு, சமாதானப் பேச்சுவார்த்தையும் பல சங்கடங்கள் ஊடாக இன்னும் பயணித்துக்கொண்டே செல்கிறது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான பிரச்சினையை போரின்மூலம் தீர்க்கமுடியாதென்பதே உண்மை. உண்மையான சமாதானப் பேச்சுவார்த்தைகளினாலன்றி, கபடத்தனமான ராணுவ அழுத்தங்களின்மூலம் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாதென்பதை சந்திரிக்கா உணரவேண்டும். 1995 இல் அவர் இதனை ஏற்கனவே பரீசிலித்துப் பார்த்து அதில் தோல்வியும் கண்டிருக்கிறார். தமிழர்களுக்கெதிரான சமூகமயப்படுத்தப்பட்ட காழ்ப்புணர்வை சிங்களவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், தமிழர்களுக்கெதிரான வெளிப்படையான சமூகமயப்படுத்தப்பட்ட தாக்குதல்களைச் செய்ய அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், தமிழர்களை சகல வழிகளிலும் அடக்கியொடுக்கி, தோல்வியடைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் சந்திரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, தமிழர்கள் சிங்களவர்களின் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு, அமைதியாகவும், சுயகெளரவத்துடனும் வாழும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படுதல் அவசியமாகிறது. இருதுருவங்களக பிரிந்துநிற்கும் தமிழ் மற்றும் சிங்களச் சமூகங்களைப் பார்க்கும்போது இரு இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதானத் தீர்வொன்றிற்கான சாத்தியம் இல்லையென்றே தெரிகிறது. ஆகவே, நாம் நிச்சயமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட, வெற்றிகரமான பொறிமுறை ஒன்றிற்கே வரவேண்டியிருக்கிறது. உள்ளக சுயநிர்ணய உரிமையுடனான பரீட்சார்த்த முயற்சிகள் உலகின் பலநாடுகளில் வெற்றியளித்திருக்கின்றன. புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் 2 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு, பல சிக்கல்களை எதிர்கொண்டு, தற்பொழுது புலிகள் தமது சார்பாக திட்டம் ஒன்றினை முன்வைத்திருக்கிறார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் உண்மையாகவே புதிய அரசாங்கம் அக்கறைகொண்டிருந்தால், உறுதியளிக்கப்பட்ட வெளிநாட்டு உதவிகளை மனதிற்கொண்டு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் உண்மையாக ஈடுபடுதல் அவசியம். புலிகளின் உத்தேச தீர்வினை ஏற்றுக்கொண்டு, அரசு பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து, சர்வதேச உதவியுடன் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதோடு, நீண்டகால அரசியத் தீர்வுதொடர்பாகவும் தொடர்ந்து செயற்படுதல் அவசியமானது.
  9. மட்டக்களப்பில் கருணாவைப் உளவியல் யுத்தத்திற்காகப் பாவிக்கும் ராணுவம் தமது எதிர்கால நடவடிக்கைகளுக்காக மட்டுமன்றி கருணவைப் பாதுகாத்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு இன்னும் பல காரணங்கள் இலங்கை ராணுவத்திற்கு இருக்கிறது. தமிழினத்திற்கெதிராகவும், சிங்களவர்களுக்குச் சார்பாகவும் கருணா செய்த காரியம் நிச்சயமாக இலங்கை அரசையும் ராணுவத்தையும் வெகுவாகக் கவர்ந்திருந்தது. புலிகளுக்கெதிரான நாசகார நடவடிக்கைகளுக்காக பல ராணுவத் தளபதிகளோடும் கருணா மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்திருந்தார் என்பது தெளிவாகிறது. சிங்கள பெளத்த இனவாதிகளிடமிருந்து கருணாவுக்குக் கிடைத்துவரும் ஆதரவினையும், பாராட்டுதல்களையும் பார்க்கும்போது சிங்கள தேசத்தின் எதிர்கால நலன்களுக்கு கருணா தேவைப்படுவார் என்பதைக் காட்டிலும் வேறு இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன என்பதே உண்மை. சாதாரண மக்களுக்குத் தெரிந்திருக்கும் கருணாவின் சிங்களவர்களுக்கான சேவைகள் என்பதைக் காட்டிலும், கருணா பாரிய வெற்றியொன்றினைச் சிங்களவர்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை இந்த சிங்கள புத்திஜீவிகளும், இனவாதிகளும் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றனர். இந்தப் புத்திஜீவிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கத்தின்மூலம், தமிழர்களுக்குக் கருணா இழைத்த துரோகம் சிங்களவர்களைப் பொறுத்தவரை எத்துணை பெறுமதிவாய்ந்தது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. பி பி ஸி தமிழ்ச்சேவைக்கு செவ்வியளித்த இன்னொரு ஆயுததாரியான டக்கிளஸ் தேவானந்தா பேசுகையில், கருணாவை பிற்காலத்தில் தமிழர்களுக்கெதிரான துரோகச் செயல்களுக்காக அரசு பாவிக்க முயலலாம் என்று தொனிப்படக் கூறியிருந்தார். இப்போதைக்கு, கருணா ராணுவத்தினரின் கடுமையான பாதுகாப்பின்கீழ் கடந்த 3 மாதங்களாக வாழ்ந்துவருகிறார் என்பது மட்டும் உறுதியாகிறது. ஆகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் காடுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், வெளியேயும் தமிழர்களும், போராளிகளும் கொல்லப்படுதலின் பின்னால் கருணாவின் பெயரைப் பாவித்து ராணுவமே ஈடுபட்டு வருகிறது என்பதை நாம் ஊகிக்கலாம். மட்டக்களப்பில் புலிகளின் அரசியல்த்துறைப் போராளிகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் படுகொலைகளின்பொழுது, கொலையாளிகள் வெள்ளைவான்களில், ராணுவ முகாம்களுக்குள் அடைக்கலமாகியதை மக்கள் பார்த்திருக்கிறார்கள். இவ்வாறான செய்திகளை இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியாது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருக்கும் ராணுவ முகாம்களிலிருந்து புறப்பட்டுச் செல்லும் ஆயுததாரிகளே இக்கொலைகளில் ஈடுபட்டுவருவதால், நிச்சயமாக அவர்கள் ராணுவத்தினராகவோ அல்லது அவர்களுக்கு மிக நெருக்கமானவர்களாகவோதான் இருக்கவேண்டும். இத்தாக்குதல்களை ராணுவமோ அல்லது ராணுவத்தின் தூண்டுதலால் வேறு சிலரோ செய்வதென்பது புரிந்துணர்வு உடன்பாட்டினை வேண்டுமென்றே மீறும் ஒரு செயலாகப் பார்க்கப்படவேண்டும். கருணா இன்னமும் கொழும்பில் தங்கியிருக்கும் நிலையில், மட்டக்களப்பில் புலிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் ராணுவமே ஈடுபடுவதான பாரிய சந்தேகம் நிலவுகிறது. புலிகள் மீதான ராணுவத்தினரின் தாக்குதல்கள் விபரீதத்தில் முடியவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. புலிகளுக்கெதிரான ராணுவத்தின் இந்த உளவியல்ரீதியிலான தாக்குதல்களை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. வெற்று அறிக்கைகளுடன் மட்டுமே இவர்கள் நின்றுவிடாது, இந்த சினமூட்டும் தாக்குதல் நிறுத்தப்படுவதையும் உறுதிப்படுத்துவது அவசியமானது. யுனிசெப் அமைப்பினைப் போன்று தமிழரின் விடுதலைப் போராட்டத்தினைகொச்சைப்படுத்த அரசால் பாவிக்கப்படாமல் சுயாதீனமாக இயங்கி தமிழரின் அவலங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
  10. மட்டக்களப்பில் கருணாவைப் உளவியல் யுத்தத்திற்காகப் பாவிக்கும் ராணுவம் புலிகளிடமிருந்து துரோகி கருணா பிரிந்துசென்ற நாட்களில் ர. ஷான் என்பவரால் இலங்கைத் தமிழ்ச் சங்கம் எனும் இணையத்தளத்தில் வந்த கட்டுரை கடந்தச் ஞாயிற்றுக்கிழமை , 20/06/2004 அன்று பி பி ஸி தமிழ்ச் சேவைக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் பின்வருமாறு கூறினார், " ஆரம்பத்தில் நாங்கள் அனைவரும் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பிலேயே கொழும்பில் தங்கியிருந்தோம். பின்னர் கருணா வேறொரு இடத்திற்குப் போய்விட்டார்". நிலாவினியும் இன்னும் வேறு நான்கு பெண்போராளிகளும் கடந்த 18/06/2004 அன்று கொழும்பில், கருணா மற்றும் இலங்கை ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பி, புலிகளுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். சோலையகத்தில் இடம்பெற்ற இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிலாவினியுடன் மேலும் மூன்று பெண் போராளிகளும் பிரசன்னமாகியிருந்தனர். கருணாவின் பின்னால் நின்று அவரை இயக்குவிப்பது அரசுதான் என்பதற்கான பலமான சான்றுகளைப் புலிகள் இப்போது வைத்திருக்கிறார்கள் என்பதை அரசு இப்போதாவது உணர்ந்துகொள்ளவேண்டும். நிலாவினி தொடர்ந்தும் பேசுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மெளலானாவே தனது சொந்த வாகனத்தில் கருணாவையும், அவரோடு இருந்தவர்களையும் ஏற்றிக்கொண்டுவந்து கொழும்பில் நட்சத்திர விடுதியான ஹில்ட்டன் விடுதியில் 3 நாட்கள் தங்கவைத்ததாகக் கூறினார். அதன் பின்னர் கருணா, அவரது ஆலோசகர் வரதன் உட்பட தாம் அனைவரும் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புமிக்க வீடொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர், கருணாவைச் சந்திக்க ராணுவ புலநாய்வுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் தாம் அங்கு தங்கியிருந்த 7 அல்லது 8 நாட்களில் பலமுறை வந்துசென்றதாகவும் கூறினார். பின்னர் அவர்கள் இலங்கை ராணுவத்தின் முகாம்கள் அமைந்திருந்த நாரஹேன்பிட பகுதியில் , அப்பொல்லோ மருத்துவமனைக்கு அருகில் அமைந்திருந்த ராணுவப் பாதுகாப்பு வீடொன்றில் தங்கவைப்பட்டதாகத் தெரிகிறது. ஆனி 13 ஆம் திகதி, மட்டக்களப்பிலிருந்து கருணாவும் அவரது தோழர்களும் தப்பியோடி ஏறத்தாள 3 மாதங்களுக்குப் பிறகு தம்மைச் சந்திக்க வந்த கருணா, தானும் தனது குடும்பமும் வெளிநாடொன்றிற்குப் போகப் போவதாகக் கூறிவிட்டு ராணுவ வாகனம் ஒன்றில் ஏறிச்சென்றதைத் தாம் கண்ணுற்றதாக அவர் மேலும் கூறினார். கருணா அங்கிருந்து சென்றதையடுத்து, மட்டக்களப்பிலிருந்த தனது உறவினர் ஒருவருடன் தொடர்புகொண்ட நிலாவினியும் வேறு 4 பெண்போராளிகளும், அவரின் உதவியோடு அங்கிருந்து தப்பிவந்ததாக கூறப்பட்டது. நிலாவினியும் கூற்றுப்படி, கருணா தமது வீட்டிலிருந்து சென்றபின்னர், அவ்வீட்டிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பினை ராணுவம் வெகுவாகத் தளர்த்தி விட்டிருந்ததாகவும், இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து தாம் தப்பிவந்துவிட்டதாகவும் அவரால் கூறப்பட்டது. நிலாவினியின் இந்தப் பகிரங்கமான கூற்று இலங்கை ராணுவமே கருணாவை வழிநடத்துகிறதென்பது உறுதிப்படுத்தப்படுவதோடு, செய்தியாளர்களிடம் கூறிய விடயங்களைக் காட்டிலும் நிலாவினி புலிகளிடம் இன்னும் பல விடயங்களைப் போட்டு உடைத்திருப்பர் என்பதை நாம் ஊகிக்கமுடியும். மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட விசேட தளபதியான ரமேஷ் இச்செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, கருணாவைப் பாவித்து புலிகளை அழிக்க ராணுவம் முயல்வது தெளிவாகத் தெரிகிறது என்று கூறினார். கருணா கொழும்பிற்குத் தப்பிச் செல்வதற்கு அலிசாகீர் மெளலான செய்த உதவியென்பது வெறுமனே தனிப்பட்ட ரீதியில் செய்யப்பட்ட உதவியென்று கடந்து சென்றுவிடமுடியாது. இவ்வாறான மிகவும் ஆபத்தான உதவியொன்றைச் செய்வதென்பது அரசியல் ரீதியிலும், அவரின் சொந்தப் பாதுகாப்பு ரீதியிலும் மிகக் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியது. கருணாவுடனான சிநேகம் மட்டுமே அலிசாகீர் மெளலானாவுக்கு இந்தச் செயலைச் செய்யும் தைரியத்தை நிச்சயம் கொடுத்திருக்காது. இலங்கை ராணுவத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலும், மெளலானாவின் பாதுகாப்பிற்கான அரசின் உத்தரவாதமும் இல்லாமல் நிச்சயமாக அவர் இந்த முயற்சியில் இறங்கியிருக்கமாட்டார் என்பது திண்ணம். இலங்கை ராணுவத்தினருடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் அலிசாகீர், பாதுகாப்புச் செயலாளராகவிருந்த லயனல் பலகல்லவின் நெருங்கிய நண்பர் என்பதும், அவர்மூலமாக ஜனாதிபதி சந்திரிக்காவின் நட்பைப் பெற்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இலங்கை ராணுவம் கருணாவைப் பாதுகாப்பாக கொழும்பிற்குக் கொண்டுவந்ததுடன் தனது பணியை நிறுத்திக்கொள்ளவில்லை, மாறாக அவரைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, இயக்கியும் வருகிறது.
  11. Album Name: Then Mazhai Song: Ennadi sellakanne…. Singers: Sarala Music: T. K. Ramamoorthy என்னடி செல்லக்கண்ணு எண்ணம் எங்கே போகுதே பள்ளியறை மோகமா பருவத்தேன் வேகமா
  12. இவர் கருணாவின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் . பிரிவின் முன்னர் இருந்தவரா என்று தெரியவில்லை. கருணாவை விட்டு வெளியேறி புலிகளுடன் மீண்டும் இணைந்துகொண்ட நான்கு பெண் போராளித் தலைவர்களின் வாக்குமூலத்தின்படி கருணா கொழும்பில் இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது வெளிப்படையாகியிருக்கிறது. இதுவரை காலமும் கருணாவுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், அவருக்குக் கீழிருந்த போராளிகளே அவரதும் ராணுவத்தினதும் சிநேகம்பற்றிக் கூறியிருப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் சமாதானம் இல்லையென்பது தெளிவாவதாக கொழும்பில் அரசியல் அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர். மட்டக்களப்பு பெண்கள் பிரிவின் தளபதி நிலவினி, மட்டக்களப்பு பெண்போராளிகளின் அரசியல்த்துறைப்பொறுப்பாளர் ப்ரேமினி, ஆட்டிலெறிப் படையணியின் மூத்த தளபதி லாவண்யா மற்றும் தீந்தமிழ் ஆகியோர் கருணாவுக்கெதிரான புலிகளின் நடவடிக்கையின்போது அவருடன் கொழும்பிற்குத் தப்பிச் சென்று, பின்னர் அவரைவிட்டு விலகி புலிகளுடன் இணைந்திருக்கிறார்கள். ஆனால், தாம் கருணாவிடமிருந்து எப்படித் தப்பிவந்தார்கள் என்பதுபற்றி அவர்கள் பேசவில்லை. பி பி சி தமிழ்ச்சேவைக்குப் பேட்டியளித்த நிலவினி, "ஆரம்பத்தில் நாம் எல்லோரும் ராணுவத்தின் பாதுகாப்பில்தான் இருந்தோம். பின்னர், கருணா தனியாக இன்னொரு இடத்திற்கு போய்விட்டார். கருணாவின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற நாங்கள், எங்களை எமது பொற்றோருடன் இணைய அனுமதிக்குமாறு அவரைத் தொடர்ச்சியாகக் கேட்டு வந்தோம். அதற்கு அவர் எம்மை எமது பெற்றோருடன் சேர்க்கும் வேலைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இதுபற்றி எம்மிடம் கூறுவதாகவும் சொல்லிவந்தார். ஆனால், அவர் உடனடியாக பதில் ஏதும் தராததால், நாம் கொழும்பிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை வந்தடைந்து மீண்டும் புலிகளுடன் இணைந்துகொண்டோம்" என்று கூறினார். அரசாங்கம் தொடர்ச்சியாக கருணாவுக்கும் தமக்கு தொடர்பில்லை என்று கூறுவதுபற்றிக் கேட்டபோது, " அவர்களால் அதனை இனிமேல் மறுக்கமுடியாது, ஏனென்றால் எங்களை கொழும்பில் மறைவிடத்தில் வைத்திருந்தது இலங்கையின் ராணுவம்தான், இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
  13. எனக்கு கருணா பிரிவில் கருணாவிற்காக கூத்தாடியோரில் ஒரு சந்தேகம். இவர்கள் பற்றியும் இத்தொடரில் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். (இன்று தான் அறிந்தேன். அதான் கொண்டுவந்து போட்டனான்) கருணாவோடு அன்ரன் என்னும் கட்டளையாளர் ஒருவன் இருந்தான். இவனிற்கு என்ன நடந்தது? கருணாவோடு சயந்தினி என்னும் ஒரு கட்டளையாளர் இருந்தவர், இவரின் முடிவு என்ன?
  14. பெரியமாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
  15. நிலா அக்கா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.