Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    20
    Points
    19152
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87997
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46808
    Posts
  4. Kadancha

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    2935
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/28/21 in all areas

  1. அண்ணை என்ன பஸ் ஓடுறியள்🤣
  2. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போல எல்லாத்தையும் சொல்லினம் தோழர் ; சிம்மத்தை தவிர.. ☺️..😊
  3. அப்பிடி.... என்னத்தை, இப்பிடி... பார்க்கிறான்.
  4. "2004 ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் வந்த செய்திகளின்படி கருணாவின் மனைவி பெருமளவு பணத்தோடு மலேசியாவுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கருணாவின் மனைவி பெருமளவு பணத்துடன் மலேசியாவுக்குச் சென்றதை பல சிங்களப் பத்திரிக்கைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன". "ஆனால், பின்னாட்களில் வந்த தகவல்களின்படி கருணாவும் அவரது குடும்பமும் இந்தியாவுக்கே சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. மலேசியாவுக்குச் செல்வதாகப் போக்குக் காட்டிவிட்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு அவர்களை இந்திய றோ அழைத்துச் சென்று தமது பாதுகாப்பில் வைத்திருப்பதாகவும், வரதராஜப்பெருமாளுடன் முன்னர் நெருங்கிச் செயற்பட்டுவந்த றோ அதிகாரிகளே கருணாவைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவந்ததாகவும் தெரியவருகிறது. மலேசியாவில் பாதுகாப்பு ஏதுமின்றி கருணாவோ அவருக்கு நெருக்கமானவர்களோ இருப்பது எங்கணம் என்று எவராவது சிந்தித்தால் , அவர் அங்கே இருக்கமுடியாது என்பது தெளிவாகும். அதுமட்டுமல்லாமல், மலேசியாவில் கருணா தங்கிவிடுமிடத்து, அவரைத் தமது நோக்கங்களுக்காகக்ப் பாவிப்பதென்பது றோவைப் பொறுத்தவரையில் கடிணமானதாக இருக்கும் என்பதும் தெரியாததல்ல. 1990 களில் வரதராஜப்பெருமாளைக் கட்டிக் காத்ததுபோல கருணாவையும் இன்று றோ காத்துவருகிறது. தமிழகத்திற்கு வெளியே வட மாநிலம் ஒன்றில் கருணா பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருக்கிறார் என்று மேலும் அறியமுடிகிறது".
  5. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று, நாம் பார்க்கப்போவது புலிகளால் அணியப்பட்ட படைத்துறை அணியங்கள் பற்றியே. இம் மடலத்தில் எவ்வெவ் அணியங்கள் பற்றி எழுதப் போகிறேன் என்றால், குப்பி - (cayanaide) capsule தகடு - dogs tag சண்டைச் சப்பாத்து - Combat shoe அடையாள அட்டைகள் கைமேசு - gloves கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker சுடுகலத்தோல் - Gunskin தலை வலை - Head nets சறம் - Lungi வெற்றிக்கொடி - Victory Flag நீர்க் கலன் - water can தலைமயிர் பாணி - Hair style தலைக்கவர் - Headcover காதுப்பஞ்சு - Earcotton முதலில் குப்பியில் இருந்து தொடங்குவோம். குப்பி - cyanide capsule 'விளக்கப்படப் புரவு: நன்னிச் சோழன்' 'போராளியின் நெஞ்சினில் குப்பி & தகடு' குப்பியானது ஆடியால்(Glass) ஆனது ஆகும். இதை கறுப்பு கறுப்பு அல்லது சிவப்பு நிறக் கயிற்றில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டிருப்பர். இதனுள் 'சயனைட்' என்னும் வேதியல் நஞ்சு (மேற்கண்ட படத்தில் உள்ள குப்பியினுட் வெள்ளை நிறத்தில் உள்ள பொடி) இருக்கும். இதைக் கடித்த 5 நொடிகளுக்குள் மரணம் வந்துவிடும். இதைச் சாதாரண புலிவீரர்கள் அணிந்திருப்பர். கரும்புலிகள், வேவுப்புலிகள் மற்றும் புலிகளின் புலனாய்வாளர்கள் போன்றவர்கள் 'இரட்டை குப்பிகள்' அணிந்திருப்பர். இதைக் கடித்த அடுத்த நொடியே இவர்களிற்கு சாவு. கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போராளிகளின் குப்பிகள் கடல்காற்றாலும் வேறு சில காரணிகளால் பாதிக்கப்படுவதாலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். இது புலிவீரர்களை சிங்கள, இந்தியப்(இந்திய அமைதிப் படைக் காலம்) படைகளின் பிடிபாட்டில் இருந்து காப்பாற்றிக் கொள்ள உதவியதோடு, சமர்க்களத்தில் பிடிபாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் சித்திரவதைகள் பற்றிய கவலையினை இல்லாது செய்தது. → இந்த குப்பியானது ஒரு புலிவீரனுக்கு பெருமை மிகுந்த அடையாளமாகவும், த.வி.பு இயக்கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்தது. 'இது இந்திய அமைதிப் படைக் காலத்தில் எடுக்கப்பட்ட படம். இப்படத்தில் உள்ள வீரர்களின் கழுத்தில் இரட்டைக் குப்பி தொங்குவதைக் காண்க.' | படிமப்புரவு: India Content Photos, Pictures, Photograph Online for Website வாய்க்குப்பி: இதன் பயிற்சி தனிவிதம். தண்டனை பெறாமல் பயிற்சி ௭டுப்பது மிகமிகக் கடினம். இதில் வேறு விதமானதும் உண்டு. அதற்கு இரும்பு வளையம் இருக்காது இதைவிட சிறியது, பரிசோதனைக்குழாய் மதிரி 5 அம்பியஸ் பியுஸ் அளவு வரும். ஒரு பக்கம் லாத்திரி மெளுகால் அடைக்கப்படும். 24 மணி நேரமும் பதுகாப்பற்ற பரப்புகளில் இருக்கும் போது வாய்க்குள் கன்னத்துக்கும் பல்லுக்குமிடையில் இருக்கவேண்டும். பிடிபடும் போது கொடுப்புப் பற்களால் கடிக்க 4 நொடிகளில் கதைமுடியும். முறையாக கடிக்கத்தவறின் பிடிபட நேரிடும். தகடு - Dog Tag இந்தத் தகடானது உலக படைத்துறைகளில் உள்ள ஒவ்வொரு வீரனும் அணிவது போன்று புலி இயக்கத்தின் ஒவ்வொரு வீரர்களும் (மக்கள்படை அணியுமா என்பது பற்றி எனக்குத் தெரியாது) அணியும் ஓர் படைத்துறை அணிகலனாகும். இதைக் கறுப்பு நிறக் கயிற்றில் கோர்த்துத் தொங்கவும் கட்டியிருக்கவும் செய்வர். இதில் உள்ள எண்ணானது ஒவ்வொரு புலி உறுப்பினரதும் எண்ணாகும். இது அந்த உறுப்பினர் எத்தனையாவது ஆளாக இயக்கத்தில் சேர்ந்தார் என்பதைக் குறிக்கும். சிறிய எண்ணென்றால் மூத்த உறுப்பினர்; பெரிய எண் என்றால் புதிய உறுப்பினர் என்பது பொருளாகும். முதலாவது எண்ணான '01' ஆனது அவ்வியக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட எண்ணாகும். இந்த எண்ணின் அடிப்படையில் அந்த உறுப்பினரின் முழுத் தகவல்களும் அவ்வியக்க குறிப்பேடுகளில் ஆவணப்படுத்தப்பட்டு தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்டிருக்கும். அதை உரிய அனுமதியிலாமல் எவராலும் பார்க்க முடியாது.. வீரச்சாவெய்திய ஓர் உறுப்பினரின் எண் மற்றோராளிற்கு வழங்கப்படாது. இத்தகடுகளானவை 1991, 1992 காலத்தில் இயக்கத்திற்குள் நடைமுறைக்கு வந்தது. அக்கால கட்டத்தில் இது ஒவ்வொரு மாவட்ட படைத்துறைப் பிரிவுக்குமென கொடுக்கப்பட்டிருந்தது. பின்னாளில் இது ஒவ்வொரு அடிபாட்டு உருவாக்கத்திற்குமென தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது. 1996 இற்குப் பின் புலிகளின் நிலக் கட்டுப்பாடு பெருமளவில் சுருங்கியதால் தகடுகள் யாவும் வட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டன. அதன் பின்னர் 2002 இற்குப் பின்னர் கட்டளைப் பணியகங்களை அடிப்படையாகக் கொண்டு சண்டையில் நிற்கும் போராளிகளுக்கும் துறைகளை அடிப்படையாகக் கொண்டு துறைசார் போராளிகளுக்கும் வழங்கப்பட்டன. மாவட்ட அடிப்படையில்(1991 - 1995): அ - மட்டு-அம்பாறை இ - வன்னி ஈ - மணலாறு உ - யாழ்ப்பாணம் (& அங்கு இயங்கிய துறைகளுக்கும்) ஊ - மன்னார் தலைமைச் செயலகம் - 0 (பின்னாளில் (எப்போதிலிருந்து என்று தெரியவில்லை) 'த' என்னும் குறியீடு வழங்கப்பட்டது) இந்த '0'-ஐ 'O' என்றும் அழைப்பர் - 1991 காலப்பகுதியில் இக்குறியீடுகள் எதுவும் நிரந்தரமானவை அன்று. வித்துடல்களில் இருந்து எதிரி கழற்றி எடுத்து ஆராய்ந்து கண்டுபிடித்துவிடுவான் என்பதால் இவை காலத்திற்கு காலம் மாற்றப்படும், பட்டது. பின்னாளைய படையணிகள், பிரிவுகள், துறைகள் மற்றும் ஏனையவற்றிற்கு வழங்கப்பட்ட குறியீடுகள்: இம்ரான்-பாண்டியன்: க படையப் புலனாய்வு: ஃ 'இரு வேறு புலிவீரர்களின் தகடுகள்' இது ஓர் புலி உறுப்பினரின் உடலில் கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு என மூவிடங்களில் கட்டப்பட்டிருக்கும். இதனால் ஒன்று தொலைந்தாலும் மற்றொன்றினை வைத்து அவர் இன்னாரென்று அடையாளப்படுத்த முடியும். இம்மூன்றினுள் ஒப்பீட்டளவில் மெல்லியதாக இருக்கும் தகடே மணிக்கட்டுத் தகடு ஆகும். இதில் மட்டும் த.வி.பு. என்று எழுதப்பட்டிருக்காது. பெரும்பாலான கழுத்துத் தகடுகளில் குருதி வகை குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு புலிவீரனின் உடலில் இருக்கும் இம்மூன்றிலும் ஒரே உறுப்பினர் எண்கள் & குறியீடுகளே குறிப்பிடப்பட்டிருக்கும். இம்மூன்றையும் அனைத்து தவிபு உறுப்பினர்களும் அணிந்திருப்பர் (மக்கள் படை பற்றி நானறியேன்). 'கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குருதி வகை பொறிக்கப்பட்ட கழுத்துத் தகடு.' ஒருவேளை வித்துடல் எதிரியிடம் சிக்குண்டால், எதிரியானவன் இந்தக் குப்பியையும் தகட்டையும் கழட்டியெடுத்து தனது ஆழஊடுருவும் அணி மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவும் சிங்கள உளவாளிகள் ஆகியோரிற்கு கொடுத்தனுப்புவதும் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு அரங்கேறிய நிகழ்வுகளாகும். (2006 ஆம் ஆண்டு இரத்தினபுரம் இரும்புப் பாலத்திற்கு அருகில் வைத்து இதை அணிந்து வந்த ஒரு சிங்கள உளவாளியைப் பிடிக்க முற்பட்ட போது, அருகில் இருந்த காட்டிற்குள் அவன் செருப்புக் கூட இல்லாமல் தப்பி ஓடிய நிகழ்வும் நடந்தது. நிகழ்வு நடந்த பின்னர் இவ்விடத்திற்கு நன்னிச்சோழன் ஆகிய நானும் சென்றிருந்தேன்.) 'லாமினேட் தகடுகள், வெற்றுக் குப்பிகள், இடுப்பு மற்றும் மணிக்கட்டுத் தகடுகள் ஆகியவை உள்ளதைக் காண்க' மேற்கண்ட படிமத்தில் 'Lamination' செய்யப்பட்ட காகிதம் உள்ளதல்லவா, அது விடுதலைப் புலிகளால் நான்காம் ஈழப்போரில் மட்டுமே அணியப்பட்ட ஓர் அணியமாகும். இதை கறுப்புக் கயிற்றில் கட்டி கழுத்தில் வெளியே தெரியும்படியாக தொங்கவிட்டிருப்பர். இதில் "த.வி.பு" என்ற சுருக்கமும் படையணிக் குறியீடும் புலி உறுப்பினர் எண்ணும் பொறிக்கப்பட்டிருக்கும், குருதி வகை குறிப்பிடப்பட்டிருக்காது. இவை 2008 ஆகக்கடைசியில் பாவனைக்கு வந்துவிட்டன. இவற்றை ஆகக்குறைந்தது காயக்காரரைக் காவும் பணியில் ஈடுபட்டிருந்த போராளிகள் தொங்கவிட்டிருந்தனர் என்பதை புலிகளின் நிகழ்படம் ஒன்றின் மூலம் அறியக்கூடியவாறு உள்ளது. அடையாள அட்டை: அடையாள அட்டையின் முன்புறத்தில் உரியவரின் வரிப்புலிப் படத்தின் மேல் புலிகளின் முத்திரையுடன் அடையாள அட்டையின் பாவனைக் கால அளவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பின்புறத்தில் (கிடமட்டமாக) அப்புலிவீரனின் இயக்கப்பெயர், பிறந்த திகதி, உயரம், குருதி வகை, உறுப்பினர் கையொப்பம், இன்னொருவரின் ஒப்பந்தம் மற்றும் அடையாள அட்டை எண் என்பன அடங்கியிருக்கும். விடுதலைப்புலிகளின் நிரந்தரப்படை: முன்பக்கம்:- 'மேற்கண்ட படத்தில் இருப்பவர் கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர் லெப் கேணல் விநாயகம் ஆவார்' பின்பக்கம்:- விடுதலைப்புலிகளின் மக்கள்படை: இவை உள்ளூர் (நடைமுறை அரசின் கட்டுப்பாட்டு ஆட்புலங்கள்) பாவனைக்கு மட்டுமே. ''முன்பக்கம்" கைமேசு - gloves இதை இவர்கள் சமர்க்களங்களில் அணியார். மாறாக பகைப்புலத்தில் நடைபெறும் சிறப்பு நடவடிக்கைகளின்போது மட்டுமே அணிவர். அடிபாட்டுச் சப்பாத்து - Combat shoe இவர்களின் சண்டைச் சப்பாத்து ஏனைய சப்பாத்துகளைப் போல இருந்தாலும் இதனில் ஒரு வேறுபாடு உண்டு. அதாவது இவர்களின் சப்பாத்துகளில் கால் உள்ளுடுத்தும் வாயின் கீழ்ப்பகுதியிலிருந்து மேனோக்கி வரித்துணி தைக்கப்பட்டிருக்கும். (கீழே படத்தில் காண்க). இது எப்பொழுதும் புலிவீரர்களால் அணிந்திருக்கப்படவில்லை. சமர்க்களங்களில் இதை அவர்கள் அணியார். ஆனால் குறிப்பாக அணிநடைகளின் போது பங்கேற்கும் அனைத்துப் புலிவீரர்களும் இதை அணிவர். அதே சமயம் பயிற்சிகளின் போதும் இதை சிலர் அணிவதுண்டு. இச்சப்பாத்தின் பக்கவாட்டு உருமறைப்பு தரைப்புலிகளுக்கு (தரைச் சிறுத்தைப்படை & காட்டுச் சிறுத்தைப்படை உம் கூட) பச்சை வரிப்புலியிலும், கடற்புலிகளில் தரைப்பணிச் சீருடைக்கு மட்டும் நீல வரிப்புலியிலும் இருந்தது. கடற்கலவர், கரும்புலிகள் மற்றும் வான்புலிகள் ஆகியோருக்கு எந்தவொரு வரித்துணியும் தைக்கப்படாமல் வெறுமனே கறுப்பு நிறத்தில் இருந்தது. தரைப்புலிகள்: கடற்புலிகள் & சிறுத்தைப்படை: கீழுள்ள படிமத்தில் வலது பக்கத்தில் கடற்புலி தரைப்பணிச் சீருடை அணிந்தபடி நிற்கும் பெண் போராளியின் சப்பாத்தை நோக்குக. '10-10-2002' கைப்பட்டை & புயத்துணி - Handband & Arm rag புலிவீரர்கள் சமர்க்களங்களில், புயத்தில் ஓர் வெள்ளைத் துணியும் மணிக்கட்டிலும் ஓர் வெள்ளை நிற பட்டையும் கட்டியிருப்பார்கள். இது இவர்களை தற்படை வேட்டில்(friendly fire) இருந்து விலக்குவதோடு சமர்க்களத்தில் மாறுவேடத்தில் கலக்கும் எதிரிகளிடம் இருந்து வேறுபடுத்த உதவியது. 'சமர்களத்தில் வெள்ளை நிற கைப்பட்டை கட்டி நகரகழியினுள் பதுங்கியிருக்கும் பெண் போராளி ' இதே போன்ற கைப்பட்டைகளை சிங்களப் படைகளும் அணிவார்கள்.. அவை வண்ணம் வண்ணமாக இருக்கும். ஆனால் அவ்வண்ணங்கள் குறிப்பிடும் செய்தி பற்றி நானறியேன். 'பிரிகேடியர் தீபனுடன் நிற்கும் வெள்ளை நிற புயத்துணி கட்டிய ஆண் போராளிகள். அருகில் தரித்து நிற்பது ஒரு நிலத் தோரணம்(Land Rover) ஆகும்.' சுடுகல ஒட்டுப்படம் - Gun sticker 'உந்துகணை(Rocket) செலுத்தியின் குழலில் ஒட்டுப்படம் ஒட்டப்பட்டுள்ளதை நோக்குக' 1990 ஆம் ஆண்டு வரை புலிகள் இவ்வாறான ஒட்டுப்படங்களைப் பயன்படுத்தியிருந்தனர். இதை ஏன் பயன்படுத்தினர் என்று நான் அறியேன். ஆனால் நான் நினைக்கிறேன், இதன் மூலம் பிற இயக்கங்களில் இருந்து தம்மியக்கத்தின் ஆய்தங்களை வேறுபடுத்தியோ அல்லது தம்மியக்கப் போராளிகளை வேறுபடுத்தியோ காட்டியிருக்கலாம். இது என்னுடைய துணிபு மட்டுமே! சுடுகலத்தோல் - Gunskin புலிகள் தங்களின் சுடுகலங்களிற்கு சுடுகலத்தோல் பூண்டிருந்தார்கள். ஆனால் இத்தோல்கள் சுடுகலனிற்கு முற்றுமுழுதாக பூணப்படவில்லை. மாறாக ஏ.கே. வகை துமுக்கிகளின்(Rifle) பிடங்கு மற்றும் உந்துகணை செலுத்தியின் சுடுகுழல்(barrel) ஆகியவற்றிற்கு மட்டுமே பூணப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பூணப்பட்ட தோல்கள் நெடு வரியும் கிடைமட்ட வரியுமாக இருந்தது. →பிலிறுந்தம் - சொல் வழங்கியவர் தமிழ்த்திரு இராமகி அவர்கள் ஆவார். 'ஆர்.பி.யீ சூட்டாளர் ஒருவரின் தோளில் உள்ள உந்துகணை பிலிற்றுந்திய கைக்குண்டு செலுத்தியின் சுடுகுழலிற்கு சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும். முதுகில் வெற்றிக்கொடியையும் சுருட்டி வைத்துள்ளார்.' 'ஆர்.பி.யீ உதவியாளர் ஒருவரின் வகை-56இன் பிடங்கிற்கு(butt) சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும்' 'ஆர்.பி.யீ உதவியாளர் ஒருவரின் வகை-56 இன் கைப்பற்றில்(hand grip) சுடுகலத்தோல் பூணப்பட்டுள்ளதைக் காணவும்' இவ்வாறு பூணப்பட்டுள்ள சுடுகலத்தோலானது வரி உருமறைப்பு(camouflage) கொண்ட துணியால் செய்யப்பட்டது ஆகும். கவனி: இவருடைய செலுத்தியின் வெந்(Breech)-இல் ஒரு தோல்(skin) போடப்பட்டுள்ளது. புலிகளின் படைக்கலங்களின் அணிய விரிவுகளை கண்டீர்களா? அற்புதம்! தலை வலை (Head nets): இதனை இவர்கள் பூச்சிகள் மற்றும் நச்சு உயிரிங்களிடம் இருந்து தம்மை காத்துக்கொள்வதற்காக அணிந்திருக்கிறார்கள். சறம் - Lungi இது இவர்களின் இருபால் தரைச் சமர்ப் போராளிகளால் மட்டும் உடலினில் யாத்தப்பட்டது. சிலர் இதனை சள்ளையில் கட்டியிருந்தனர்; சிலர் இதனை துப்பட்டி போல கழுத்தில் சுத்தியிருந்தனர்;சிலர் மாலை போன்று அணிந்திருந்தனர். இஃது, சமரில் காயமுற்றால் கிழித்துக் கட்டவும், கட்டிக் கொண்டு குளிக்கவும், இன்ன பிற தேவைகளிற்கும் பயன்பட்டது. இதன் நிறம் பெரும்பாலும் நீல நிறத்திலே காணப்பட்டது. பச்சை நிறம் உடைய சறத்தை யாத்தோரும் சமர்க் களத்தில் தென்பட்டனர். 'இப்படத்தில் உள்ள 3 பெண் பொராளிகளில் முன்னவரின் சள்ளையிலும் இரண்டாமவரின் கழுத்திலும் சறம் இருப்பதை நோக்குக' வெற்றிக்கொடி - Victory Flag இது புலிக் கொடி அன்று. ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடி. இதை முன்னேறித் தாக்கல் சமரின் போது போராளிகளில் ஒரு சிலர் கொண்டு செல்வர். 'இப் புலிவீரனின் நெஞ்சில் இருப்பதே மேற்கண்ட கொடியாகும்' நீர்க் கலன் - Watercan கீழக்கண்ட வடிவிலான கலன்கள் புலிகளிடம் இருந்த நீர்க் கலன்கள் ஆகும். ஆனால் இதை விட சோடா புட்டில்களையும் நீர்கொள் கலன்களாக பயன்படுத்தினர். 'மட்டு-அம்பாறையினைச் சேர்ந்த படையணியினர்' தலைமயிர் பாணி - Hair style பெண்களின் :- 'இப்படிமத்தில் தெரியும் பிடரிகளை நோக்குக. அதில் உள்ள தலைமயிர் பாணிதான் பெண்புலிகளின் தலை மயிர் பாணியாகும். இதில் உள்ள 6 பெண் போராளிகளும் மாலதி படையணி படையணிச் சீருடை அணிந்துள்ளனர். இது தவிர இயக்கத்தில் சேர்ந்த உடன், பெண்களின் தலைமயிர் கட்டையாக வெட்டப்படும். வளர்ந்தவுடன் இரட்டை பின்னலிட்டு உச்சந்தலையில் மேற்கண்டது போல கட்டுவர். ஆண்களின்:- இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்கும்போது மொட்டை அடித்துவிடுவர். பிறகு பயிற்சி முடிந்தவுடன், களத்தில் நிற்கும் போது, கட்டையாக வெட்டியிருப்பர். விதப்பாக சொல்லவேண்டுமெனில் 'police cut' என்று சென்னையில் வழங்கும் முடிவெட்டும் பாணிதான் இவர்களுடையது(அதற்காக இவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது அன்று) ஆனால் கன்னமீசையை மழித்திருப்பர். ஊடுருவிச் செல்லும் புலிகள் அணியும் 'மழைக்கவசம்' 'ஊடுருவி உள்ள புலிவீரர்கள் மழைக்கவசம் அணிந்துள்ளதை நோக்குக' தலைக்கவர் - Headcover இது மேற்குலகின் 'Helmet covering cloth' போன்றது. வரிப்புலி உருமறைப்பாலான தலையில் அணியும் ஒருவிதமான துணியாகும். இதன் தோற்றமானது இது இசுரேலியர்களின் தலைச்சீரா துணி போன்றல்லாமால் கொஞ்சம் நீளமானது. ஒரு நீளமான உருள்கலன் போன்ற வடிவிலான இதன் ஒரு முனையில் இருக்கும் திறவல் மூலம் தலையில் போடப்படுகிறது. பின்பக்கம் மடித்து விடப்படும் (படிமத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று) இது சோதியா படையணியினரால் மட்டுமே அணியப்பட்டதாகும். 'சோதியா படையணியினர் தலைக்கவர் அணிந்துள்ளதை நோக்குக' காதுப்பஞ்சு இது உந்துகணை சூட்டாளரும் அவரது துணைவனும் உந்துகணை வேட்டொலி தம் காதினை பாதித்துவிடாதவாறு காதினுள் வைத்துக்கொள்ளும் ஒரு சாதாரண பஞ்சாகும். இதை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உந்துகணை அடித்த பெரும்பாலானோர் அணிந்திருப்பர். கீழ்க்கண்ட படிமத்தில் உந்துகணை சூட்டாளரின் துணைவனின் காதில் இது தெரிவதை(வெள்ளை நிறத்தில்) நோக்குக: கொசுறு: புலிவீரர்கள் அணியும் சீருடைகளின் முழுக் காற்சட்டையிலும் மேற்சட்டையிலும் பெண்களின் உள்ளாடையிலும் தொடரிலக்கம் கறுப்பு நிற நூல் கொண்டு தைக்கப்பட்டிருந்தது. அத்தொடரிலக்கமானது நான்கு எண்கள் கொண்டது ஆகும். மேற்சட்டையில் வலது மார்பில் தைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு புலிகளின் அனைத்துக் கிளைகளினது சீருடை மற்றும் படையணிச் சீருடை ஆகியவற்றில் தைக்கப்பட்டிருந்தது. உசாத்துணை: சொந்தமாக எழுதியது (தகட்டுக் குறியீடு & வாய்குப்பி பற்றிய தகவல் மட்டும் ஒரு முன்னாள் போராளி வழங்கியவர்) செ.சொ.பே.மு. https://eelam.tv/watch/எம-ம-உலக-ல-உயர-த-த-ம-emmai-ulakil-uyarththum-originla-version-tamil-eelam-songs_V9fei3U2lk6u93j.html படிமப்புரவு LTTE Home page | Sankathi24 பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22249 விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn TamilNet (TamilNet) தேசக்காற்று http://veeraveengkaikaL.com (http://veeraveengkaikaL.com) Tamil Guardian அருச்சுனா புகைப்படக் கலையகம் YouTube India Content Photos, Pictures, Photograph Online for Website Log In or Sign Up Istock images ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  6. கீழேயுள்ள கோவில் இருக்கும் இடம் "சென்னை பெசன்ட் நகர் பீச்" என நான் அடித்துச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்..?🤭😜 நீங்களே ஊகித்து சொல்லுங்களேன்..! எந்த ஊர் என்றவரே..! இந்த ஊரைச் சொல்லவா..? இந்த ஊர் நீரும்கூட அறிந்த ஊர் அல்லவா..?
  7. உங்கட பஸ்ச பிடிச்செல்லே வந்தனான் 🤣.
  8. வாழ்த்துக்கு நன்றி....🙏🏽 இன்னும் படங்கள் போடுங்கோ பாப்பம்...💪🏽 நோர்மலாய் பாக்க போனால் நான் போட்ட றோட்டிலை வந்து தான் கோசான் வெண்டவர் 😎
  9. பரிசுக்கு உரியவர் @குமாரசாமி அண்ணைதான். அவர் நாகர்கோவில் எண்டு சொல்லி இராவிட்டால் நான் திருநெல்வேலியில் சுத்தி கொண்டு நிண்டிருப்பன்🤣. கட்டாயம் கேள்விபதிலை தொடருங்கள்.
  10. மிகச் சரியான பதில் கோசான், வாழ்த்துக்கள்..! 🙏🌹 உங்களுக்கும் வாழ்த்துக்கள் கு.சா..! 🙏🌹 ஈழத்தில் இன்னும் நிறைய நுணுக்கமான இடங்கள் உள்ளன.. சாவகாசமா நேரமிருக்கும்போது நீங்கள் விரும்பினால் கேள்வி போடுறேன்.. நீங்களும் தமிழ்நாட்டை பற்றி போடுங்கள்.. அனைவரும் அறிந்துகொள்ளலாம். என்ன சரியோ..? எனக்கும் இப்போ ஈழத்தமிழ் வரத் தொடங்கிட்டு..!
  11. ராஜ வன்னியன்... நீங்கள், பயங்கர கெட்டிக்காரர் ஐயா. 👍 தலைப்பு போட்ட, ஒரு மணித்தியாலத்தில்... # பலரின்... மண்டையை காய வைத்து, # தலைப்பு, யாழ். களத்தில் பிரபல்யமாகி, # 32 கருத்துக்களுடன், இரண்டாம் பக்கத்தையும் தாண்டி, ஓடிக் கொண்டிருக்கின்றது. வார விடுமுறைக்கு, வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள் வன்னியன். 💐
  12. இங்கு மணி அதிகாலை 12:30 மணி.. நான் தூங்கப் போவதற்குள் கண்டுபிடித்துவிடுங்கள்.. ஆஆஅவ்..வ்வ்வ்...!
  13. நாகர்கோவில்......
  14. இப்படி நாலு ஊர்களை பிடிச்சி போட்டால், அவற்றை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்தானே?
  15. உது அங்காலை தீவுப்பக்கம் போல கிடக்கு. சார் யூரியூப் வீடியோ ஸ்கிரீன் சொட் எடுத்து அசத்துறார்.😁
  16. அது ஒண்ணுமில்லைங்கோ உள்ள அந்த சத்தம் கேட்டிச்சு , அதுதான் அந்த பூனை எலி புடிக்குமே , அது விரட்டி விரட்டி துரத்திச்சாம் .......பூனை புடிச்சுதா இல்லையா ஏன்னு ...........😜
  17. புரிந்தவன்.... பிஸ்தா. #பொய்யான தகவல் ஏமாறாதீர்கள். ********************************* இங்குள்ள வேலை வாய்புக்கள் இப்படியான விளம்பரங்கள் மூலம் வெளிநாட்டு ஆள்களை கோருவதில்லை. #பெரிய நிறுவனங்கள் உள்ளூரில் வேலையாட்களை கோருவதாயின் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் தான் விண்ணப்பம் கோருவார்கள், தங்களது நிறுவனத்தின் சொந்த web side பகுதியில் Jobs என்ற பகுதியில் அதற்கான விளம்பரம் இருக்கும். #அவர்களுக்கான தொடர்பு கொள்ளக்கூடிய முகவரியுடன் தான்( email, Telephone number) என்பன பதிவிடபட்டிருக்கும். #இங்கு உள்ளூரில் ஓவ்வொரு பகுதிக்கும் Jobs center ஏஜென்சி அரசினால் இயக்கப்படுகிறது. வேலை தேடுகிறவர்கள் தங்களுடைய விபரங்களை பதிவு செய்திருந்தால் . தாபால் மூலம் or தொடர்பு இலக்கத்திற்கு (text meassage) குறுஞ்செய்தி அனுப்புவார்கள். #போலியான விளம்பரம் என்பதனை எப்படி அறிந்து கொள்வது நிறுவனத்தின் பெயரே or தொடர்பு முகவரி இல்லாது வருகின்ற விளம்பரங்கள் பொய்யானவை. விசா, பயணச்சீட்டு இலவசம் எந்த நிறுவனமும் வேலைக்கு ஆட்களை தேடுவதில்லை. #வேலைக்கு online ல் விண்ணப்பிக்கின்ற போது கேள்விகள் இருக்கும் அதில் முக்கியமான கேள்வியே இங்கு வசிக்கிறவரா அப்படியாயின் passport number, Driving Licence number என்பன பற்றிய தகவல்கள் முதலில் பதிவு செய்த பின்னர் தான் அடுத்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கும் . #அதன் பின்னர் online ல பரீட்சை(exam) இருக்கும் அதில் pass ஆனால் விண்ணப்ப முடிவில் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல் email க்கு வரும். பின்னர் நேர்முகத் தேர்வு இருக்கும் அதன் பின்னர் தான் தெரிய வரும் வேலை கிடைத்தற்கான உறுதி. #இப்படியான விளம்பரம் Fb page காரர் தங்களுடைய வருமானத்திற்கான நீங்கள் share பண்ணுகிறபோது அவர்களுடைய account க்கு காசு போகும்.. #இல்லை என்றல் உங்கள் mobile Data ல் உள்ள பணம் அறவிடப்படும். Logan Senthuran
  18. என்ன என்ன வார்த்தைகளோ...........
  19. பாலில் வறுத்த றால். சுவையே தனி....! 👍
  20. சரி, இனி எனது செய்தியாளர் சிவகுமார் அவர்கள் மட்டக்களப்பிலிருந்து வழங்கிய செய்தியைப் பார்க்கலாம். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் கடந்த ஆனி மாதத்திலிருந்து ஆடி வரை அங்கே தங்கியிருந்து செய்திகளைச் சேகரித்திருந்தார். இலங்கைக்கு வெளியேயும் செயற்படும் சிவகுமாரின் மட்டக்களப்பில் கருணாவின் இன்றைய நிலமைபற்றிய கட்டுரை கீழே, "நான் ஜெயாராஜின் பன்றிகள் பறப்பது தொடர்பான புனைவுகளை இதுவரை படிக்கவில்லை. அதுபற்றி இனிமேலும் படிப்பதில் பயனேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. கடந்த வருடம் கருணாவின் இரண்டாம் வருகையுடன் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை அவர் 2005 சித்திரை வருடப்பிறப்பிற்கு முன்னதாக புலிகளிடமிருந்து மீட்டெடுப்பார் என்று எதிர்வுகூறியிருந்தார். நீங்கள் அவரது பன்றிகள் பறக்கும் புனைவுகளை தவறென்று நிறுவியிருப்பது தெரிகிறது. சித்திரை வந்தும் போய்விட்டது, ஆனால் அவரது புனைவுகளில் கூறப்பட்டதற்கு மாறாக, கருணா இன்றுவரை முகமற்ற வெற்று நிழலாகவே இருக்கிறார்". "கருணாவின் பிரச்சினையினைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஓர் அணியிலேயே நிற்பதாகத் தெரிகிறது. கருணாவைக் கொழும்பிற்குக் கூட்டிவருவதில் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏறாவூர்த் தொகுதி உறுப்பினர் அலிசாகீர் மெள்லானா ஆடிய பங்கும், அவரது பங்கு வெளியே தெரிந்தவுடன், அவர் திடீரென்று காணாமல்ப் போனதையும் மறந்திருக்க மாட்டீர்கள். ரணிலையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் பொறுத்தவரை கருணாவின் பிரச்சினையிலிருந்து தம்மை தற்போதைக்காவது விலத்திக்கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள்". "இப்போது சந்திரிக்காவும் அவரது ராணுவமுமே கருணாவுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கி தமது நடவடிக்கைகளுக்காகப் பாவித்து வருவதாகத் தெரிகிறது. ரணிலாக இருந்தாலென்ன, சந்திரிக்காவாக இருந்தாலென்ன, ராணுவத்தைப்பொறுத்தவரையில் மாற்றம் ஏதுமே இருப்பதாகத் தெரியவில்லை". "மேலும், இந்த கைப்பாவை விளையாட்டுக்கள் இந்தியாவினாலும், சிங்களவர்கள் தரப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றாலும் தமிழர் தரப்பில் கருணா, ஆனந்தசங்கரி மற்றும் தமிழ் துணைராணுவக் குழுக்களாலும் நடத்தப்பட்டு வருகிறது என்பது தெளிவு. இலங்கையர்களைப் பொறுத்தவரை இது எல்லாராலும் அறியப்பட்ட ஒரு ரகசியம். ஆக, இன்று தமிழர் தாயகத்தில் நடக்கும் பலப் பரீட்சை நேரடியாகவே தமிழர்கள் சார்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் கொடூர கொடுக்குகளுக்கும் இடையே நடப்பதாகவே தெரிகிறது. தென்னிலங்கையில் நடந்துவரும் முன்னெடுப்புகளைப் பார்க்கும்போது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் எங்கிலும் இந்திய றோ தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அரச ராணுவ வளங்களைப் பாவிக்கவும், தேவையேற்படின் தனக்கான தளங்களை நிறுவவும் இலங்கை அரசு இடம் கொடுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது". "கருணா இலங்கையில் இருக்கவேண்டிய தேவையோ, கட்டாயமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரது முகமற்ற நிழலை இந்தியாவும், அவர்களின் எடுபிடிகளான இலங்கை அரச ராணுவமும் தமிழர் தாயகத்தில் தமிழரின் ஒற்றுமையினைச் சிதைக்கப் பாவித்துவருவது தெளிவாகத் தெரிகிறது".
  21. "இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ராணுவ புலநாய்வுத்துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவை குறுகிய கால நடவடிக்கை ஒன்றிற்காக வெளிநாடொன்றிற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. ராணுவ புலநாய்வுத்துறை அதிகாரி லெப்ட். கேணல் துவான் நிஸாம் முத்தலிப்பைக் கொல்வதற்கு முன்னர், கபில ஹெந்தவிதாரணவையே புலிகள் இலக்குவைத்திருந்தார்கள் என்று ராணுவத்திற்குத் தகவல் வந்ததாலேயே அவரை வெளிநாடொன்றிற்கு அவசர அவசரமாக அனுப்பிவைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கபில ஹெந்தவிதாரணவைத் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வந்த புலிகளின் புலநாய்வுத்துறை அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் அடிக்கடி வரும் சந்தைப்பகுதியொன்றில் வைத்துத் தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக ராணுவம் அறிந்துகொண்டது. சுதாரித்துக்கொண்ட அரசாங்கம், அவரைக் கொல்ல புலிகள் தருணம் பார்த்திருந்த வாரமே வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்திருப்பதாகத் தெரிகிறது. முன்னாள் ராணுவ புலநாய்வுத்துறை இயக்குநனரான கபில ஹெந்தவிதாரண கூட்டுப்படைத் தலைமையகத்திலேயே பணியாற்றிவந்தார். அவரது புதிய பதவியான ராணுவப் புலநாய்வுத்துறையின் நிர்வாக செயலாளர் எனும் பதவி அவர் மீண்டும் இலங்கை திரும்பும்வரை செயலற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இப்பதவிக்கான தற்காலிக அதிகாரியாக உள்நாட்டு புலநாய்வுத்துறை இயக்குநர் சூல செனிவிரட்ன நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரியவருகிறது. அதேவேளை, ஹெந்தவிதாரணவை ராணுவ தலைமைக் காரியாலயத்திற்கு மாற்றும் உத்தரவைப் பிறப்பித்த சந்திரிக்கா, அவரை பணியிறக்கம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக, கிழக்கில் செயற்பட்டுவரும் சாதாரண ராணுவப் புலநாய்வுத்துறையினர் மட்டுமல்லாமல், அதிகாரிகளையும் புலிகளின் புலநாய்வுத்துறை பிந்தொடரத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது". அத்தாஸ் மேலும் கூறுகையில், அரச ராணுவ புலநாய்வுத்துறையினருக்கெதிரான புலிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் அரச புலநாய்வுத்துறை பின்னடைவுகளைக் கண்டுவருவதாகத் தெரிகிறது. "திருகோணமலை மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ராணுவத்தின் 22 ஆவது டிவிசனில் இயங்கிவரும் ராணுவப் புல்நாய்வுத்துறை அதிகாரியை உடனடியாக கொழும்பு திரும்பும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறது. இவ்வாரம் ராணுவத்தின் 22 ஆவது டிவிஷன் தளபதியான மேஜர் ஜெனரல் சுமித் பாலசூரியவைச் சந்தித்த சந்திரிக்கா திருகோணமலைப் பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் பற்றி கேட்டு அறிந்துகொண்டார். முப்படைகளின் தளபதி எனும் அதிகாரத்தினைப் பாவித்து சந்திரிக்கா எடுத்துவரும் பல நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது". "சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்குக் கிடைத்த நம்பகமான செய்திகளின்படி, திருகோண்மலையில் கடற்புலித் தளபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் யாரென்பதுபற்றிய விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சந்திரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இக்கொலையின் பின்னால் மறைகரம் ஒன்று இருக்கலாம் என்றும், சமாதானப் பேச்சுவார்த்தைகளைக் குழப்பும் வகையில் கிழக்கில் இடம்பெற்றுவரும் புலிகளின் அரசியல்ப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் மீதான கிர்ணேட் தாக்குதல்களுக்கும் இக்குழுவே காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது". "பல உயர் ராணுவ அதிகாரிகள் தமக்குக் கீழான அதிகாரிகள் மற்றும் வீரர்களின் செயற்பாடுகள் குறித்து தாம் எதுவும் அறிந்திருக்கவில்லை என்று தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. தெற்கில் வெளிவரும் சில சிங்களப் பத்திரிக்கைகள் ராணுவத்தில் இருக்கும் முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களே கிழக்கில் சமாதானத்தைச் சீர்குலைக்கும் காரியங்களில் ஈடுபடுவதாக எழுதுகின்றன". முடிவாக, மட்டக்களப்பில் பன்றிகள் பறப்பதாகாச் சத்தியம் செய்யும் ஜெயராஜின் புனைவுகளை இக்பால் அத்தாஸ் தவறென்று நிரூபித்திருக்கிறார்.
  22. திருகோணமலையில் கடற்புலிகளின் தளபதி திக்கத்தை மறைந்திருந்து கொன்றது கருணாவே - ராணுவம் ஒளித்துப் பிடித்து விளையாடுவதில் கெயராஜ் ஒரு அதி திறமைசாலி. அவர் தனது பத்திரிகா தர்மத்தை சென்னையின் உருமறைப்புச் செய்து செய்திகாவும் "ஹிந்து" நாளிதழ் குழுமத்தினரிடமிருந்து கற்றதனால் தான் எழுதும் விடயங்கள் தொடர்பான ஆதாரங்களையோ அல்லது தகவல் தரும் நபர்களையோ ஒருபோது கூறுவதேயில்லை. அவரைப்பொறுத்தவரை தனக்குத் தகவல்களை ரகசியமாக வழங்கும் ஒருவர் இருவரையல்ல, பலரைக் காக்கவேண்டிய தேவையிருக்கிறது. மேலே அவர் எழுதிய பந்தியின் இறுதிப் பகுதியினை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள், புரியும். "கருணாவுக்கு குறைந்தது ஒரு நாட்டின் வெளியகப் புலநாய்வுத்துறையாவது உதவிசெய்துவருகிறது........." இதை ஏதோ பெரிய விடயம்போல ஜெயராஜ் எழுதுவது தெரிகிறது. ஆனால், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை என்று எங்கு சென்று தமிழ்ச் சிறுவர்களைக் கேட்டால்க் கூட கருணாவின் பின்னால் இருப்பது இந்தியாவின் வெளிய புலநாய்வுத்துறையான றோ என்று தயங்காமல் கூறிவிடுவார்கள். கருணா இலங்கைக்கும் தென்கிழக்காசிய நாடொன்றிற்கும் இடையே தனது குடும்பத்தைப் பார்ப்பதற்காக அடிக்கடி போய்வருகிறார் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். மட்டக்களப்பிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் கூறியதன்படி அவர் கடந்த ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் மட்டக்களப்பில் தங்கியிருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கில் நடந்துவரும் நிகழ்வுகள் குறித்த எனது நண்பரின் சில தகவல்களை இங்கே இணைக்கிறேன். பாதுகாப்புத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸின் கருத்து முதலில், கொழும்பிலிருந்து எழுதும் இக்பால் அத்தாஸின் ஆய்விலிருந்து ஆரம்பிக்கலாம். றோவின் தகவல்களைக்கொண்டு கட்டுரைகள் புனையும் ஜெயராஜின் பந்திகளிலிருந்து இது சற்று வித்தியாசமானது. அண்மையில் கொல்லப்பட்ட கடற்புலிகளின் தளபதி திக்கம் மற்றும் அவரது சகாக்கள் தொடர்பான செய்தியிலிருந்து ஆரம்பிக்கலாம். இக்பால் அத்தாஸின் கருத்துப்படி, "தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட ராணுவத்தின் முக்கிய அதிகாரியொருவர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குத் தகவல் தருகையில் திருகோணமலை செல்வனாயகபுரம் பகுதியில் கடற்புலிகள் தளபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தமது ராணுவமோ அல்லது புலநாய்வுத்துறையோ ஈடுபட்டிருக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறமுடியும் என்று கூறினார். அதேவேளை இத்தாக்குதல் கருணா குழுவினராலேயே நடத்தப்பட்டிருக்கலாம் என்பதை தாம் சந்தேகிப்பதாகக் கூறிய அவர் , கருணாவின் பல தோழர்கள் விலகிவிட்ட நிலையிலும், ஆயுதப் பற்றாகுறைக்கு மத்தியிலும் அவர் இத்தாக்குதலை நடத்தியிருப்பது சாத்தியமே என்றும் கூறினார். ஆனால், தமது தளபதியொருவர் மீதான கருணாவின் தாக்குதலை புலிகளும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிய அவர், அது கருணாவுக்கான விளம்பரத்தைத் தேடிக் கொடுத்துவிடும் என்றும் கூறுகிறார்". மேலும், ஜெயராஜின் பன்றிகள் பறக்கும் கதையுடன் மாறுபடும் இக்பால் அத்தாஸ், தமது தளபதி திக்கத்தின் இழப்பினை புலிகள் எவ்வாறு சரிசெய்தார்கள் என்பது தொடர்பான ராணுவத்தின் பார்வையினை எழுதுகிறார். இது நான் முன்னர் எழுதிய பிரபாகரன் எனும் நிகழ்வு எனும் கட்டுரையின்படி, புலிகளின் தலைவர் தனது தளபதி ஒருவரின் மறைவுக்குப் பின்னர் எடுத்த நடவடிக்கை பற்றி அத்தாஸின் கருத்தோடு ஒத்துப்போகிறது. "கிழக்கில் இயங்கிவரும் அனைத்து ராணுவப் புலநாய்வுச் செயற்பாட்டாளர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடுமாறு பிரபாகரன் கட்டளையிட்டிருக்கிறார். இதனால், கிழக்கில் செயற்பட்டுவரும் ராணுவப் புலநாய்வுத்துறையினரின் பல முக்கிய செயற்பாட்டாளர்களின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி, முகாம்களுக்குள் இருக்குமாறு அரசு பணித்திருக்கிறது. அத்துடன், தமக்குத் தகவல் வழங்கும் கருணா குழு உறுப்பினர்கள் அல்லது பணத்திற்காக தகவல் வழங்குவோரைச் சந்திக்க வெளியே செல்வதென்றால், புலநாய்வுத்தளபதிகளிடமிருந்து விசேட அனுமதி பெற்றபின்னரே அவர்கள் வெளியில் செல்லமுடியும் என்றும் அறிவுருத்தப்பட்டிருக்கிறார்கள்".

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.