Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87997
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19152
    Posts
  3. அன்புத்தம்பி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    5633
    Posts
  4. ராசவன்னியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7401
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/14/21 in all areas

  1. Movie : Idhu Sathiyam Singer's : T. M. Soundararajan & P. Susheela Lyric : Kannadasan Music : Viswanathan-Ramamoorthy
  2. புலிகளை அழிக்க கருணாவை முன்னிறுத்தும் கொழும்பு அரசாங்கம் : அமெரிக்க ஆய்வுக்குழு தகவல் காலம் : ஆடி 14, 2004 மூலம் : தமிழ்நெட் மற்றும் தமிழ்னேஷன் புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்தியத் தளபதியாகவிருந்த கருணாவின் பிரிந்து செல்லுதலை அரசாங்கத்தின் அதியுயர் மட்டத்திலிருப்பவர்கள் ஆதரித்துவருவதாகவும், இதற்கு அமெரிக்க அரசின் தந்திரோபாய ஆசியும் இருப்பதாகவும் அமெரிக்காவின் பூலோக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். "புலிகளை நிலைகுலைய வைத்து, கட்டாயப் போர் ஒன்றிற்குள் அவர்களை இழுத்து, இறுதியில் பலவீனப்பட்டுப்போன புலிகளின் ராணுவப் பலத்தை பாரிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் முற்றாக அழிப்பதே இலங்கை அரசின் திட்டமாகும்" என்று Strategic Forecasting (Stratfor) எனும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். கருணா தொடர்ச்சியாக புலிககளின் தலைமையை கடுமையாக விமர்சித்தும், அதற்கெதிராகச் செயற்பட்டு வருவாராகவிருந்தால் புலிகளுக்கும் அவரது குழுவிற்குமிடையிலான மோதல்கள் மீள தொடங்கும் அபாயம் இருக்கின்றது. இது கொழும்பிலிருக்கும் அரசால் மிக விருப்பத்தோடு எதிர்ப்பார்க்கப்படுவது மட்டுமல்லாமல், அவ்வாறானதொரு நிலையினை ஏற்படுத்த அது தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதும் திண்ணம்" என்றும் இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். "உள்வீட்டு மோதல்களால் புலிகள் இயக்கம் கடுமையாகப் பலவீனமடைவதை எதிர்பார்த்து நிற்கும் இலங்கையரசு, அதன்பின்னர் புலிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் ஏதுநிலைகளையும் அவதானிக்க விரும்புகிறது" என்றும் இவ்வமைப்பினர் கருதுகின்றனர். இதனாலேயே கருணாவுக்கான தந்திரோபாய உதவிகளை இலங்கை ராணுவம் அவரது பிரிவின்போது வழங்கியது என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், அவரது பிரிவு உயிர்ப்புடன் இருப்பதனை உறுதிப்படுத்த தொடர்ச்சியான உதவிகளை இலங்கை அரசு அவருக்கு வழங்கிவருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர். உள்வீட்டு பிளவுகளால் புலிகள் இயக்கத்திற்குள் மீண்டும் உருவாகாகக்கூடிய கரந்தடிப்படைப் போர் ஒன்றிற்குள் இயக்கம் இழுக்கப்பட்டு, பலவீனமடையும் என்று எதிர்பார்க்கும் அரசு இறுதியில் அவர்களை முற்றாக அழித்துவிடலாம் என்று கருதுவதாக இந்த ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். அரசிடமிருந்து தனக்கு உதவிகள் கிடைப்பதை கருணா தொடர்ச்சியாக மறுத்துவருகின்ற போதிலும்கூட, இலங்கை அரசாங்கத்தின் பல பிரிவுகள் கருணாவுக்கு உதவிவருவதனை வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டிருக்கின்றன. தனது 6 வார கிளர்ச்சி புலிகளால் மிக இலகுவாக முறியடிக்கப்பட்டதையடுத்து சுமார் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்த கருணா மீண்டும் கொழும்பில் தோன்றி இலங்கை அரச வானொலிக்கும், பி பி ஸி தமிழ்ச் சேவைக்கும் சில செவ்விகளை வழங்கியிருக்கிறார். "புலிகளால் தான் மிகவும் மோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டதையடுத்து மீண்டும் வெளியே வந்திருக்கும் கருணா, புலிகளை அழிக்கும் தனது நோக்கத்திற்கு இன்னும் வலுச் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும்" என்று இந்த ஆய்வாளர்கள் மேலும் கூறுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கருணாவுக்கான ஆதரவு மட்டக்களப்பில் இன்னும் இருப்பதாகவே தெரிகிறது என்றும் கூறுகின்றனர். பி பி ஸி தமிழ்ச்சேவையுடனான செவ்வியின்போது, தான் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாகக் கருணா தெரிவித்திருந்தார். இதுபற்றி இந்த ஆய்வாளர்கள் கூறுகையில், "அரசியலில் ஈடுபடும் தனது விருப்பத்தினைக் கருணா வெளிப்படையாகத் தெரிவித்திருப்பதன் மூலம், புலிகளினால் இலக்குவைக்கப்படக்கூடிய ஒரு நபராக தன்னை அவர் அடையாளப்படுத்தியிருக்கிறார்" என்று தெரிவிக்கின்றனர். "இவ்வாறு புலிகளின் இலக்காக மாறி, புலிகளுக்கும் தனக்குமான தொடர்ச்சியான பகையினை வளர்த்தெடுப்பதன் மூலம் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று அவரும், இலங்கை அரசும் நம்புவதாகத் தெரிகிறது" என்றும் இவ்வறிக்கை கூறுகிறது. "ஆனால், புலிகள் இலங்கை அரசுக்கெதிராக பல்லாண்டுகளாகப் போரிட்டு வருகின்றனர். ஆகவே, இருபக்கத்திலும் பாரிய இழப்புக்கள் இல்லாமல் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்று வருவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது" என்று அமெரிக்காவினைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு கூறுகிறது. இந்த ஆய்வாளர்களின் கணிப்பின்படி, போர் ஒன்று மீளத் தொடங்குமாக இருந்தால், புலிகள் மிகவும் பலவீனப்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் இதுவரை எதிர்பார்த்துப் போராடிவரும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தினை இதனால் இழப்பார்கள் என்றும் எதிர்வுகூறுகிறது. "அதேவேளை, காயப்பட்ட புலியை பொறிக்குள் சிக்கவைப்பதென்பதும் ஒரு அபாயகரமான விளையாட்டே" என்றும் இவ்வமைப்பு கூறுகிறது. "பேச்சுவார்த்தைகள் ஒரு தேக்க நிலையினை அடைந்திருக்கின்றன. புலிகள் தமது கோரிக்கைகளை விட்டுக்கொடுத்தாலோ அல்லது அரசு பலவீனப்பட்டாலோ அன்றி, இப்பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று கூறமுடியாது" என்றும் இவ்வமைப்பினர் கூறுகின்றனர்.
  3. தமிழீழத்திற்கான போராட்டமும் இந்தியாவும் இந்திய றோவின் உப தலைவரின் இலங்கை வருகையினையடுத்து திகைப்படைந்துள்ள அரசியல் மற்றும் ராணுவத் தலமைப்பீடங்கள் - இனவாத பத்திரிக்கையில் வெளியான கட்டுரை காலம் : 21, ஐப்பசி 2008 இனவாதிகளின் கட்டுரையினைப் படிக்குமுன், ஒரு சிறிய முன்னோட்டத்துடன் இதனை ஆரம்பிக்கலாம். "ஒரு விடயம் பற்றி என்னதான் சொல்லப்பட்டாலும், அதை எவர்தான் சொல்லியிருந்தாலும், அதனை சீர்தூக்கிப் பார்த்து உண்மைதனை அறிதலே சரியான அறிவுடமையாகும்" என்கிறது திருக்குறள். ஒரு முழுப் பொய்யைவிட, அரை உண்மைகளை உறுதிப்படுத்துவது கடிணமானது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் றோவின் உபதலைவர் தொடர்பாக இனவாதிகளின் ஊதுகுழல் பயப்படுவது அவருக்கும் புலிகளுக்கும் முன்னர் இருந்த தொடர்புகளுக்காக அல்லாமல், இன்று சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் அச்சு நோக்கி நகர்ந்துவரும் மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர் கொடுக்கவிருப்பதாகக் கருதப்படும் அழுத்தம் பற்றியே என்றால் அது மிகையில்லை. ஆகவேதான், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை விமர்சிப்பதனை விடுத்து, அதனைக் காவிவந்து தமக்கு நினைவூட்டக்கூடும் என்று சிங்களம் கருதும் சந்திரசேகரன் எனும் அந்த றோ அதிகாரிமீது ஐலண்ட் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. ஆனால், இதில் உள்ள உண்மையென்னவென்றால் சந்திரசேகரனும் இன்னும் ஒரு றோ அதிகாரியும் பூட்டான் , திம்புவில் 1985 இல் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட்டு வந்தவர்கள் என்பதும், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையினை பிசகின்றி முன்னெடுத்துச் செல்வதில் தீவிர உறுதிப்பாடு கொண்டவர்கள் என்பதும் சிங்கள இனவாதிகள் அறியாததல்ல. சரி, இதன் பின்னணியில் தி ஐலண்ட் எழுதியிருக்கும் கட்டுரையினைப் படிக்கலாம். "புலிகளின் அனுதாபியென்று கருதப்பட்டும் முன்னாள் றோ உயர் அதிகாரி, சந்திரன் எனப்படும் சந்திரசேகரனின் கொழும்பு விஜயம் கொழும்பில் அரசியல் வட்டாரங்களிலும், ராணுவ வட்டாரங்களிலும் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. பாராளுமன்ற மேலதிகச் செயலாளரான சந்திரன் 1980 களில் இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கான பயிற்சிமுகாம்களை நிறுவுவதில் முன்னின்று செயற்பட்டவர். பின்னர், புலிகளுடன் நெருங்கிச் செயற்பட்ட அவர் யாழ்தேவி புகையிரதம் மீதான தாக்குதல், 1985 ஆம் ஆண்டு அநுராதபுரம் மீதான தாக்குதல்களுக்கு புலிகளுக்கு உதவியவர். இவ்வாறான தாக்குதல்களின்பொழுது புலிகள் இவருடன் தொடர்ச்சியான தொடர்பிலிருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது. அதேவேளை ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் பத்மநாபாவுடனும் நெருங்கிச் செயற்பட்ட சந்திரன், பத்மநாபாவின் சென்னை விஜயம் குறித்து புலிகளுக்குத் தகவல் வழங்கி 1990 இல் அவர் கொல்லப்பட உதவிபுரிந்தவர் என்றும் கூறப்படுகிறது. பத்மநாபாவின் நெருங்கிய தோழர்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் அவரது சென்னை விஜயம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. பத்மநாபாவின் தோழர்களின் கூற்றுப்படி சந்திரனைத் தவிர பத்மநாபாவின் வருகையினை வேறு எவரும் அறிந்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. சந்திரனுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்ததாகக் கருதப்படும் தொடர்பினையடுத்து, 1991 ஆம் ஆண்டின் ராஜீவ் கொலைக்கும் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று றோவே அஞ்சும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் இருந்திருக்கின்றன. இதனால், சந்திரன் றோவிலிருந்து விலகி மேற்படிப்பிற்காக அமெரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டார். ஐலண்டிற்குக் கிடைத்த தகவல்களின்படி, சந்திரன் புலிகளுக்கு பயிற்சிகள், திட்டமிடல், பிரச்சார உத்திகள் தொடர்பாக பல உதவிகளைப் புரிந்திருக்கிறார் என்று தெரியவருகிறது. சென்னையில் அரசு சாரா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் சந்திரன் அதன்மூலம் புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாட்டில் நடத்திவருகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சந்திரன் இலங்கைக்கு முன்னரும் பலதடைவைகள் விஜயம் செய்திருந்தபோதும், தற்போதைய விஜயமானது சுற்றிவளைக்கப்பட்டு அழியவிருக்கும் புலிகளை மீட்பதற்காகவே என்று தெரியவருகிறது. இதுவரை அவர் பல தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்திருக்கிறார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கருணா மற்றும் ஈ பி டி பி யின் தலைவர் டக்கிளஸ் ஆகியோரைச் சந்தித்திருக்கும் சந்திரன் இவ்விடயம் தொடர்பாகப் பேசியதாகத் தெரிகிறது. குறிப்பாக கருணாவுடனான அவரது கலந்துரையாடல்களின்போது, புலிகளின் செயற்பாடுகளுக்கு கருணா குழு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாதென்று கேட்டுக்கொண்டதாக ஐலண்ட் பத்திரிக்கைக்கு வரும் தகவல்கள் கூறுகின்றன. கருணா இந்தியாவில் பயிற்சியெடுத்த காலத்தில் சந்திரனே அவருக்குப் பொறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சந்திரனின் கோரிக்கையினை முற்றாக மறுத்துவிட்ட கருணா, புலிகளுடன் சமரசம் என்கிற பேச்சிற்கே இடமில்லையென்றும், புலிகள் முற்றாக அழிக்கப்படவேண்டும் என்றும், அதன் பின்னரே தீர்வு தொடர்பான பேச்சுக்கள பற்றி சிந்திக்க முடியும் என்று கூறியதாகவும் தெரியவந்திருக்கிறது. 1989 இல் வடக்குக் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ராணுவமான தமிழ்த் தேசிய ராணுவத்திற்கான ஆயுதங்களை வழங்குவதில் சந்திரனே முன்னின்று செயற்பட்டிருந்தார். புலிகளுக்குக் கிடைக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் இந்திய ராணுவம் வெளியேறிக்கொண்டிருந்த நேரத்தில்க் கூட தமிழ்த் தேசிய ராணுவத்திற்கென்று கார்ல் குஸ்டவ் பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளை வரவழைத்துக் கொடுத்திருந்தார். எதிர்பார்க்கப்பட்டதுபோலவே தமிழ்த்தேசிய ராணுவத்தை எளிதில் வீழ்த்திய புலிகள் தமக்கான புத்தம் புதிய பின்னுதைப்பற்ற உந்துகணை செலுத்திகளையும் சந்திரன் விருப்பத்திற்கேற்ப பெற்றுக்கொண்டனர். பின்னர் அதே உந்துகணைகள் இலங்கை ராணுவத்தின்மேல் புலிகளால் பாவிக்கப்பட்டன. புலிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் ஆய்வாளர்கள், புலிகள் தென்னிலங்கையில் நாசகாரத் தாக்குதல்களை நடத்தலாம் என்கிற சூழல் நிலவும் இந்தத் தருணத்தில், புலிகளின் அனுதாபியான றோ அதிகாரியொருவரை இலங்கைக்கு வர அனுமதிப்பதும், சுதந்திரமாக உலாவுவதை அனுமதிப்பதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.
  4. ஆஹா அருமை கண்டுபிடிப்புகள்.....! 👍
  5. மனதை ஒருநிலைப்படுத்தி ஆட்டத்தை மட்டும் கவனிக்கவும்......அபாரம்.......! 🤨
  6. இருந்தாலும் தோழர் இந்தக் குசும்பு கூடாது.....அருமை பேரனைவிட எருமை ஆர்வமாய் படிக்கிறமாதிரி இருக்குது.......! 😂
  7. பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்
  8. வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என மரியா நிரூபித்துள்ளார்.
  9. என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..........! 😺 இவர் சரியான கில்லாடி.....இவர் பற்றி ஒரு கதையே இருக்கு, பின்பு எழுத வேண்டும்......!
  10. குந்து இல்லாமல் தனிச்சுளையோடை பிலாப்பழம் கிடைக்கிறது அரிது கண்டியளோ..😁 உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா.. மற்ற படத்தை பாருங்கோ கசவாரம் பிடிச்ச பிலாப்பழம்....ஒரே குந்து 🤣
  11. அண்ணை, இப்போதைக்கு அதுவெல்லாம் வேண்டாம் அண்ணை. நீங்கள் உதவி செய்ய விரும்பினால்.. ஒன்றே ஒன்று செய்யுங்கள். நான் இங்கே பதிவிடுபவற்றை(நிகழ்படம் & நிழற்படங்கள்) எடுத்து நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்... அது காணும் எனக்கு... இவையெல்லாம் நான் ஒரு காலத்தில் சேமித்தவை... நீங்கள் இன்று சேமித்து வைத்துக் கொண்டால் நாளை எனது கணக்கு இல்லாமல் போனாலும் நீங்கள் யாரேனும் இவற்றை வெளியுலகிற்கு கொண்டு செல்லலாம்... உலகில் எதுவும் நிரந்தரமல்ல... ஆதலால் இதுவே நான் உங்களிடம் வேண்டுவது, உறவே. இதை மட்டும் செய்து விடுங்கள்.
  12. இந்த தொடரை கூட்டமைத்த ரஞ்சித்துக்கு பாராட்டுகள். இந்த உழைப்பு மெச்சதக்கது. மட்டும் இல்லை ஒரு திரியில் வரலாறு திரிக்கப்படும் போது - அதை அங்கே மட்டும் எதிர்காமல் - அதை ஒரு தொடராக்கி - ஆவணப்படுத்துவது செயற்கரிய செயல். பலர் சுட்டியது போல இது ஒரு பக்க சார்பான செய்திகளை மட்டுமே தாங்கி நிற்கிறது. அதை ரஞ்சித்தும் ஏற்று கொண்டிருக்கிறார். ஆனால் 2002க்கு பின்னான ரஞ்சித் இணைத்த தரவுகளில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு படவில்லை. அதே போல் முறிந்த பனைகள் யாழில் வளராது என்பதும் உண்மைதான். பலவருடங்களுக்கு முன்பே எனது ஒரு நீண்ட பதிவை நீக்கி விட்டு நிழலி ஒரு விளக்கம் கொடுத்தார் - யாழ் பக்கம் சாரா ஊடகம் இல்லை என்று. ஆகவே இதை வாசிக்கும் எதிர்கால சந்ததி இந்த பக்க பார்வையை இங்கும், மறுபக்க பார்வையை வேறு எங்கோவும் தேடி கண்டு, உண்மை அறியும். ஆனால் வாழ்ந்த சாட்சியாக -உண்மை மிக அதிகமாக ரஞ்சித்திற்கு அருகேதான் இருக்கும் என்பதையும் அவர்கள் கண்டுகொள்வார்கள் என்பது என் துணிபு. ஆனால் ஒரு constructive feedback (அதானே குறை சொல்லாமல் கோஷனா🤣) - ரஞ்சித் எழுத தொடங்கிய பரப்பை விட்டு கொஞ்சம் mission creep பண்ணி, வேறு விடயங்களையும் தொட்டதால் கவனம் சிதறி விட்டது என நினைக்கிறேன். இதை “ஒரு” துரோகத்தின் நாட்குறிப்பு என்ற வரையறையில் 2002 க்கு பின்னான நிகழ்வுகளில் மட்டும் கவனத்தை செலுத்தி இருந்தால் - யாருக்கும் அவற்றில் முரண்பட ஏதும் இருக்காது என நினைக்கிறேன். அதை விடுத்து ரஞ்சித், எது துரோகம், துரோகத்தின் பல்வேறு வடிவங்கள், என்று போகும் போது பார்வைகள் மாறுபடுவது தவிர்கவியலாதது. ரஞ்சித் தனியே தரவுகளின் மீள் பிரசுரம் என்பதோடு நின்று, தன் வர்ணனையை தவிர்த்திருந்தால் அவர் நோக்கம் இன்னும் சிறப்பாக இலக்கை அடைந்திருக்கும். பலர் இதில் கருத்திட்டு, இந்த திரியை விவாததிரியாக மாற்றாமைக்கும் ரஞ்சித்தின் நோக்கத்தை புரிந்து வழி விட்டதே காரணம் எனவும் நான் நம்புகிறேன்.
  13. சென்னை அருகே சோகம் : "பெட்ரோல் விலையேற்றத்தால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட இரு சக்கர வாகனம்...!!!"
  14. சர்வதேசக் கடற்பரப்பில் எம்.ரி சொய்சின் எண்ணைக் கப்பலில் காவியமான வீரமறவர்கள்! 14.06.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எம்.ரி சொய்சின் (M.T. CHOSHIN) எண்ணைக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் வழிமறித்து தாக்கி மூழ்கடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிய கப்பல் கப்டன் நிர்மலன், சீவ் ஒவிசர் கதிர், 2ம் ஒவிசர் வீரமணி, 3ம் ஒவிசர் கன்னியநாடன், றேடியோ ஓவிசர் கஜேந்திரன், சீவ் எஞ்சினியர் அன்புக்குமரன், 2ம் எஞ்சினியர் கடற்கரும்புலி வள்ளுவன், 3ம் எஞ்சினியர் கடற்கரும்புலி நிமால், எலக்ரிக் எஞ்சினியர் வீரநாதன், போஸன் கடற்கரும்புலி மணியரசன், ஏபிள் சீமன் செழியன், நாட்டுப்பற்றாளர் மோகன் ஆகிய ஆழக் கடலோடிகளின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் .! எம்.ரி சொய்சின் கப்பலில் தரணிமுழுவதும் கடலில் மேவி தமிழீழ விடியலை எண்ணி விழிமூடிய மாவீரர்கள்.! https://www.thaarakam.com/news/8f44676e-ffa0-48a0-95c2-482b931bebe1

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.